Monthly Archives: ஜூன் 2006

The Book of Questions

இந்த ஏழு நாளும் உங்களிடம் கேள்வி கேட்க விருப்பம். நானாகக் கேட்கவில்லை. க்ரெகரி ஸ்டாக்கிடம் கடன் வாங்கித்தான் கேட்கப் போகிறேன்.

‘ஆம்’/’இல்லை’ என்று சொல்லிவிட்டுப் போய் விட வேண்டாம். யோசித்து, உங்கள் சொந்த வலைப்பதிவில் எண்ணங்கள் அடங்கிய மறுமொழிகளை இட்டு, இங்கும் ஒரு வார்த்தை பின்னூட்டமாக இட்டால், வசதியாக இருக்கும்.

முன்கூட்டிய நன்றி 🙂

1. இன்று மாலையே உங்களின் முடிவு நேரும். அதன் முன் எவருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. எவரிடம் பேச முடியாததற்கு வருத்தமடைவீர்கள்? இறுதி நிமிடங்களில் சொல்லி விட முடியவில்லையே என்னும் ஏக்கம் ஏன் எழும்? இன்றளவும் எப்படி சொல்லாமல் தள்ளிப் போட்டீர்கள்?

2. தமிழ் சினிமாவில் பார்த்திருப்பீர்கள். மருத்துவமனையில் குழந்தை மாறாட்டம். உங்களின் சூட்டிகையான ஒரு வயதுக் குழந்தை உங்களுடையது அல்ல! அசல் குழந்தைக்கு பரிமாற்றம் ஏற்பட முயற்சிகளை மேற்கொள்வீர்களா? வளர்த்த மகவா அல்லது வயிற்று மகவா?


| |

True Stars

சனிக்கிழமை இரவுகளிலும் இன்ன பிற நாட்களில் மறு-ஒளிபரப்பாக வரும் Saturday Night Live-இல் முன்னுமொரு காலத்தில் பமீலா ஆண்டர்சன் தோன்றினார்.

அன்று உதிர்த்த இந்த புகழ்பெற்ற வசனம் மனதில் தங்கிப் போனது:

You know, if you’re nervous on stage, you actually should BE naked!

சத்தியமாய் உதிர்த்த வார்த்தைகள்தான்; உதிர்ந்த வேறெதிலும் லயிக்கவில்லை. ‘எனக்கு என்ன தெரியுமோ அதைத்தானே நான் செய்ய முடியும்!‘ என்கிற ரீதியில் பமீலாவின் செய்கை அதிர்ச்சியை வரவழைக்காமல் புன்னகையைக் கொடுத்தது.

என்னுடைய நெஞ்சுக்கினிய ஏழு நாயகிகளை இந்த வாரம் உலவவிட உத்தேசம்.

இது முதல் போணி!

Swades - Hindi Movie Heroine & Model turned Actress - Gayathri Joshi


| |

Rhetorics, Cliches & Dejavu

Water

தண்ணீர் என்றவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?

சமீபத்தில் தீபா மேத்தாவின் ‘வாட்டர்’ பார்க்க கிடைத்தது. மனதை வெகுவாக பாதித்த படம். சில விமர்சனங்களுக்கு…

  • வெளிகண்ட நாதர்
  • ஸ்ரீகாந்த் மீனாட்சி
  • சுமதி ரூபன்
  • அருண்

    ஜான் ஆபிரஹாம் மாதிரி விதவைப் பெண் வாழ்வு கொடுப்போம் என்று யோசித்தது ஒரு காலம். லிஸா ரே போன்று அழகிகள் யாரும் கண்ணில்படவில்லை.

    தாமரையிலைத் தண்ணீர் போல் ‘ஒட்டி ஒட்டாமல் இரு‘ என்று ரஜினி பாடியது நினைவுக்கு வருகிறது.

    தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்‘ என்று சிந்து பைரவியின் சிறந்த பாடல் முணுமுணுக்கலாம்.

    தந்தையர் தினத்தை முன்னிட்டு இன்று அப்பாக்களுக்கு நுழைவுக் கட்டணம் வாங்க மாட்டோம் என்று பல தீம் பார்க்-கள் அறிவித்திருந்தது. 92 டிகிரி ஃபாரென்ஹீட்டை சமாளிக்க ‘தண்ணீர் தொட்டி’யில் ஜலக்கிரீடையின் நடுவே நள்ளிரவில் நட்சத்திரம் ஆகப் போவது நிழலாடியது.

    இந்த வாரம் அமைதியான வாரம்.

    ‘அப்பாக்கள் சில பேரு செய்கின்றத் தப்பைத்தான்
    அடியேனும் அந்நாளில் செய்தேனம்மா!’

    என்று பாடியதற்கேற்ப ‘பாரிஜாதம்’ படத்தில் பாக்யராஜ் சொதப்பியிருப்பார் என்று எண்ணினேன். Sun TV திரை விமர்சனத்தில் பல காட்சிகள் ‘என்னடா இழுவை… மேட்டருக்கு வாடா‘ என்று போரடித்தது. இல்லை என்கிறார் இகாரசு.

    ‘பாலத்திற்கு அடியில் நிறைய தண்ணீர் போயிடுச்சுங்க’ என்று Cliche சொல்வது போல் மீண்டும் மீண்டும் சிரிப்பாக மீண்டும் பாலாஜி… பாஸ்டனில் இருந்து.

    தமிழ்மணத்திற்கு இது போதாத காலம்.

    http://www.thamizmanam.com is for sale. The package includes the domain and the software. Those interested may write to எகாசி@gmail.com with their proposal.

    பஸ்மாசுரசன் வரம் பெற்றவுடன், சோதிக்க சிவனைத் துரத்தின கதையாய், தமிழ்மணத்தை ஒரு கை பார்க்கலாம்; படுத்தலாம் என்று ஓடோடி வந்தால் செண்ட்டி போட்டு பிஸினஸ் டீல் கேட்கிறார்கள். பஸ்மாசுரனால் மோகினி வந்தாள்; என்னாலும் யாராவது வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

    அம்மா செண்டிமெண்ட், புரட்சி வீரன் சண்டைக் காட்சி, குத்துப் பாட்டு, திரைக்கதை லாஜிக் என்று செல்லும் தமிழ்மண * வாரங்களில், இப்பொழுது மசாலா நேரம்.

    ஆதரவும் அன்பும் ஆலோசனைகளும் கோரும்,
    பாலாஜி
    பாஸ்டன்


    | |

  • Poet Suradha admitted in Ramachandra Hospital!

    Webulagam : Poet Suradha admitted in Ramachandra Hospital!

    உவமைக் கவிஞர் சுரதா கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சிறிது காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை மோசமானதையடுத்து ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுரதாவின் சிகிச்சைக்காக முதலமைச்சர் கருணாநிதி தனிப்பட்ட முறையில் ரூ.50,000 நிதியுதவி செய்திருந்தார்.

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மீது பற்று கொண்டு அவருடைய இயற்பெயரோடு தாசன் என்கின்ற அடைமொழியையும் சேர்த்து (சுப்பு ரத்தினதாசன்) தனது பெயரை சுரதா என்று மாற்றிக்கொண்ட கவிஞர் சுரதா அவர்கள், தனி கவிதைப் பாரம்பரியத்தையே உருவாக்கியவர்.

    பல்லாயிரக்கணக்கான கவிதைகளை யாத்த சுரதா உருவாக்கிய கவிஞர்களின் எண்ணிக்கையும் பல நூறைத் தாண்டும்.

    “கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்” எனும் இனிய திரைப்படப் பாடலை எழுதிய சுரதா, பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Jaya joins issue with Stalin on desalination project

    Jaya joins issue with Stalin on desalination project

    கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை எனது அரசு நிறைவேற்ற முடியாததற்கு முதல்வர் கருணாநிதியும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாவும் தான் காரணம் என்றும் இந்த விஷயத்தில் எனது அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் எனது அரசு ஏற்கனவே செய்து முடித்து விட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜா அந்தக் கோப்பில் கையெழுத்திட வேண்டியதுதான் பாக்கி. அதைச் செய்ய அவருக்கு கருணாநிதி உத்தரவிட வேண்டும்.

    பழத்தை உரித்துக் கொடுத்து விட்டேன். எடுத்து சாப்பிட வேண்டியதுதான் பாக்கி என்று ஜெயலலிதா சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

    இதற்குப் பதிலளித்து அறிக்கை விட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், பழத்தை உரித்து வைத்து விட்டு அதை 3 ஆண்டுகளாக ஏன் சாப்பிடவில்லை ஜெயலலிதா என்று கிண்டலடித்து பதில் தெரிவித்திருந்தார்.

    மீண்டும் அறிக்கை போர்:
    ஸ்டாலினின் பதிலுக்கு தற்போது ஜெயலலிதா விரிவான விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க உதவும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 1,000 கோடி நிதியுதவி அளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். ஆனால் சொன்னபடி தமிழக அரசுக்கு நிதி வந்து சேரவில்லை.

    காத்திருந்து காத்திருந்து ஏமாந்த எனது தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசின் உதவி இல்லாமலேயே இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தது. அந்த முடிவின்படி, திட்டத்தை வடிவமைத்து, நிர்மாணித்து, இயக்கி, ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் செயல்படுத்த சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டது.

    2003ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் டெண்டர்கள் வந்து சேர வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது. 26 ஒப்பந்தகாரர்கள் டெண்டர் விண்ணப்பம் வாங்கியிருந்தும் 2 பேர் மட்டுமே டெண்டரை, கடைசி நாளன்று சமர்ப்பித்தனர்.

    ஆனால் இரு ஒப்பந்தகாரர்களுமே உரிய டேவணித்தொகையை செலுத்தத் தவறியதால் 2 டெண்டர்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின்னர் 2003ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியை கடைசி நாளாக கொண்டு 2வது முறையாக டெண்டர் அறிவிக்கப்பட்டது.

    இப்போது 3 நிறுவனங்கள் டெண்டர் சமர்ப்பித்தன. இதில் உரிய டேவணித் தொகையை செலுத்திய ஒரு நிறுவனத்தின் டெண்டர் மட்டும் பிரிக்கப்பட்டது. ஆனால், டெண்டர் தள்ளுபடி செய்யப்பட்ட இரு நிறுவனங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    ஆனால் அரசுக்கு சாதகமாக இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது.

    இருப்பினும் பிரிக்கப்பட்ட டெண்டருக்குரிய நிறுவனத்தினர் சமர்ப்பித்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லாத காரணத்தால் அந்த டெண்டரை அரசு நிராகரித்து விட்டது.

    பின்னர் 3வது முறையாக 2005ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதியை கடைசி நாளாகக் கொண்டு டெண்டர் விடப்பட்டது. இப்போது 7 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் குøந்த தொகைக்கு டெண்டர் கேட்ட ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    டெண்டர்கள் பணிகள் முடிந்த நிலையில், 2005ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை நான் தொடங்கி வைத்தேன். தினசரி 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

    ஆனால் திட்டமிட்டபடி இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இதற்குக் காரணம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாதான். திட்டத்திற்கு அனுமதி கொடுப்பதை விட்டு விட்டு தேவையில்லாத பல கேள்விகள், சந்தேகங்களைக் கேட்டு திட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுத்தார் ராஜா.

    திமுக தலைவர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் இத்திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தி முட்டுக் கட்டை போட்டார் ராஜா. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 1000 கோடி ரூபாய் உதவி தருகிறது மத்திய அரசு என்று சொல்லிச் சொல்லி வந்தாரே தவிர ஒரு பைசா கூட தமிழக அரசுக்கு இன்று வரை வரவில்லை என்பதே உண்மை.

    இப்படிப்பட்ட நிலையில்தான் நாங்களாகவே அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தோம். எங்களுக்காக ஓட்டுப் போட்ட மக்களுக்கு நல்லது செய் வேண்டுமே என்ற எண்ணத்தில்தான் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முயற்சித்தோம். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியும், அவரது கட்சி அமைச்சர் ராஜாவும் சேர்ந்து இத்திட்டத்தை தடுத்து நிறுத்தி விட்டனர்.

    உண்மை இப்படி இருக்க நான் வேண்டும் என்றேதான் இத்திட்டத்தை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தினேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அபாண்டமான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

    ஜெ. பச்சை பொய்ஸ்டாலின்:
    இந் நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியது ஏன் என ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

    ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் சரி, ஆட்சியிலிருந்து இறங்கி விட்ட நிலையிலும் சரி, பச்சை பொய்களை அறிக்கைகளாக வெளியிட்டு பொதுமக்களை ஏமாற்றி திசை திருப்புவதையே தனது வாடிக்கையாகக் கடைபிடித்து வருகிறார்.

    கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரி பரிசீலனை செய்வதற்கு 2003 முதல் 2005 வரை ஏற்பட்ட 3 ஆண்டு கால தாமதத்துக்கு தற்போது ஜெயலலிதா தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.

    நீதிமன்றத்துக்கு பிரச்சனை சென்றதால் தான் தாமதம் என்று சொல்வது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. ஏனென்றால் அந்தப் பிரச்சனை நீதிமன்றத்துக்குச் செல்லக் காரணமே ஜெயலலிதா தான்.

    கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி ஜெயலலிதா கையெழுத்திட்டது நன்னீர் கொள்முதலுக்கான ஒப்பந்தம் தான். ஆனால் அனுபவம் மிக்க ஜெயலலிதா வெறும் ஒப்பந்தம் கையெழுத்தானயே திட்டச் செயலாக்க நடவடிக்கை என்று சொல்லிக் கொள்வதை நிர்வாக நடைமுறை தெரிந்த எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    இது வரை எந்த அரசும் செய்ய முன்வராத சலுகைகளை ஜவிஆர்சிஎல் என்ற ஒப்பந்த நிறுவனத்துக்கு ஜெயலலிதா செய்திருப்பது பற்றி எனது அறிக்கையில் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் சாதிப்பதன் மர்மம் என்ன?

    இந்த பின்னணியை விளக்கி விட்டு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைப் பற்றி மேலும் பேசுவது அனுபவம் வாய்ந்தவருக்கு அழகாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    Karunanidhi writes letter to Jayalalitha

    Karunanidhi writes letter to Jayalalitha

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

    பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் கூடவுள்ள நிலையில், பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறார் கருணாநிதி.

    அவரது செயலாளர்களான முனீர் ஹோதாõ, டிஆர் ராமசாமி, ராஜமாணிக்கம் ஆகியோர் திமுகவின் தேர்தல் அறிக்கையை பட்ஜெட்டாக மாற்றுவதில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் நாகநாதனுடன் இரவு பகலாக டிஸ்கஷனில் இறங்கியுள்ளனர். மேலும் இந்த டீம் மற்ற துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது.

    இந் நிலையில் பட்ஜெட்டிலேயே இலவச கலர் டிவிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிடவும், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே கலர் டிவிக்களை வழங்கிவிடவும் முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து கலர் டிவிக்கள் வாங்குவது தொடர்பாகவும், டெண்டர்கள் முடிவு செய்வது தொடர்பாகவும் அனைத்து கட்சிக் குழுவை அமைக்க கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

    இது தொடர்பாக சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு தானே கைப்பட கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார்.

    அதில், கலர் டிவி வாங்க சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு அமைப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னேன். அதன்படி குழு அமைக்க விரும்புகிறேன். உங்கள் கட்சியின் சார்பில் குழுவில் இடம்பெறும் சட்டமன்ற உறுப்பினரின் பெயரைப் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

    தனது கையெழுத்துடன் கூடிய இந்தக் கடிதங்களை எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    கடிதத்தைத் பெற்றுக் கொண்டதற்கான அக்னாலட்ஜ்மெண்டையும் இந்தத் தலைவர்களிடம் இருந்து பெற்றுவிட்டதாம் அரசுத் தரப்பு.

    இந்தக் கடிதத்துக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரிடம் இருந்தும் பதில் வந்துவிட்ட நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பதில் வரவில்லை. அதே போல வைகோ, திருமாவும் பதில் அனுப்பவில்லை என்று தெரிகிறது.

    இதனால் அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை கமிட்டியில் இடம் பெறுவார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது.

    இவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் விரைவிலேயே கலர் டிவி டெண்டரை பரிசீலிக்க சட்டமன்றக் கட்சி தலைவர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்படும் என்று தெரிகிறது.


    சென்னை வரும் விவசாயிகள்: :: குதிரைப் பந்தயத்தை ஒழித்ததற்காக சென்னையில் குதிரை வீரன் சிலை நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதைப் போல, விவசாயிகளின் கடன் சுமையை ஒழித்ததற்காக சென்னையிலோ அல்லது தமிழகத்தின் முக்கிய நகரம் ஒன்றிலோ மாபெரும் நினைவுச் சின்னம் ஒன்றையும் எங்களது கட்சி அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் செல்லமுத்து.

    Quote Picks

    Tamil | ThatsTamil | Tamil | Tamil Portal | Tamil News On The Net

    சொன்னாங்க..சொன்னாங்க..

  • “அதிமுக ஆட்சி மாணிக்கக் கல். அதை மக்கள் இழந்துவிட்டார்கள்” (காளிமுத்து)
  • “கருணாநிதிக்கு எந்தக் காலத்திலும் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு இருந்தது இல்லை. அதை வைத்து காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண அவர் முயற்சிக்க வேண்டும்” (மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன்)
  • “தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 15%ல் இருந்து 16.2 சதவீதமாக உயர்தத திட்டமிடப்படுள்ளது மிக நியாயமானது” (ராமதாஸ்)
  • thamizmaNam.com :: All Tags ??????? ??????? thami…

    thamizmaNam.com :: All Tags ??????? ??????? thamizmaNam.com :: Tag post 453 Posted by Picasa

    Paapaara Naaigal 

    Paapaara Naaigal Posted by Picasa

    Karunanidhi Condemns Asin in Anandha Vikadan

    அசின் இப்போது இங்கிலாந்துக் கட்சி!

    “பிரேசில் பிறவியிலேயே ஃபுட் பால் விளையாடும் திறமையோட பிறந்தவங்கன்னா, இங்கிலாந்துக்காரங்க பிறந்ததுக்கு அப்புறம் அந்தத் திறமையை வளர்த்துக் கிட்டவங்க. ஒரு இங்கிலாந்து ரசிகையா, நான் அந்த நாட்டுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா, தனியான பிளேயரா எனக்குப் பிடிச்சது பிரேசிலின் ரொனால்டோ.”

    விசைப்பொறி பிடித்த முதல்வரின் எழுத்தில் கால்களின் சோர்வும் நெஞ்சில் அலைமோதிய கோபமும் ஒருசேர தட்டிப்பார்க்க… அது நக்கலான பதிவானது. முதன்முதலில் விளையாடிய கால்பந்தை நினைவுகூர்ந்தவர், கடந்த இதழ் ஆனந்த விகடனில் அசின் சொல்லிய விருப்பத்தைக் குறிப்பிட்டு, கடகடவெனத் தன் உணர்வுகளைக் உல்டாவாக்கி விட்டார்.

    “‘பிரேசில்-பிறவி, ட்ரினிடாட்-திறமை, இங்கிலாந்து-இந்திரன்’ என கவிதைத் தமிழில் பேசுகிறார்கள்.

    தாய்லாந்துக்குத் தாய்ப்பாலிலேயே திறமை; கோஸ்டா-ரிக்காவினர் கால்களை உதைத்துதான் பிறந்தார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    தமிழா! நீ இன்னும் தமிழ்நாட்டில் காலோடுதான் நடக்கிறாயா? இதைக் கேட்பதற்காக என் காலணியின் ரப்பர் சோல் பறிக்கப்பட்டாலும், எனக்குக் கவலையில்லை. பார்வையாளனின் புத்தியைத் உசுப்பிவிடும் வேலை இனியும் வேண்டாம்.

    இது ஏதோ டிவியைக் கொடுத்து… மன்னிக்க… பார்த்துவிட்ட காரணத்தால், கடந்த ‘பெண்ட் இட் லைக் பெக்கம்‘ போல சினிமாக் குரல் அல்ல. புத்தம் புதிய ‘டாவின்சி கோட்‘ குரல்தான். படைப்பாளியின் கற்பனைதான்” என்றார் கருணாநிதி.

    உலகக் கோப்பையைப் பார்க்கத் துவங்கியதுமே, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கருணாநிதியின் கண் நீர்கட்டிப்போனது. மறுநாள் 4-ம் தேதி காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள விகடன் அச்சக அலுவலக வாசலில் குவிந்த தி.மு.க-வினர், அங்கே விகடனுக்கு எதிராகக் கோஷமிட்டதோடு, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜெண்டைனாவுக்கு எதிராகவும் வசனமெழுப்பி, விகடன் இதழ்களையும் ரொனால்டோ உருவ பொம்மையையும், பெக்கம் போஸ்டருக்கும் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

    தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களிலும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் அன்று நடந்தாலும், இத்தாலிக்கு எதிராக நடந்த கொடும்பாவி கொளுத்தலை, கலைஞர் கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார்.

    Azzurri-கள் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொண்டு வேதனையில் வாடுகிறார்கள். அவர்கள், அமெரிக்க ஏகாத்திபத்தியத்தை (தயாநிதி மாறன் குறுக்கிடவே) ஈராக் போர் ஆதரவாளர்களை எதிர்க்கப் போகிறவர்கள். அவர்களை இந்தப் பிரச்சினையில் உள்ளே நுழைப்பது அன்னை சோனியாவுக்கு மன வருத்தத்தைத் தரும்’

    என்று கடிதம் தீட்டியுள்ளார்.


    | | | |