Monthly Archives: மே 2006

2004 Loksabha Eelction Memoirs

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ::

கோயில்களில் ஆடு, கோழி, பன்றி போன்றவற்றைப் பலிகொடுக்கக்கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்ததே! அது, பாரம்பரியமாக குலவழிபாடு முறையில் எம்மக்கள் செய்துவந்த சடங்குகளில் கைவைத்து விட்ட இந்துத்வா திணிப்புதான்.

“பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் துணை ராணுவம் வரவேண்டும் என பேசியுள்ளீர்களே.. தமிழகம் பீகாராகிவிட்டதா என்ன?”

“தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தவிடாமல் பா.ம.க-வினர் தடுத்துவிடுவார்கள் என்பதைத்தான் கடந்த கால தேர்தல்கள் காட்டின. தமிழகக் காவல்துறையினரால் இவர்களின் மோசடிகளைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதால்தான் அப்படி ஒரு கோரிக்கை வைத்தேன்.”


தாமரைக்கனி ::

“தமிழ்நாட்டுல இப்போ இன்பத் தமிழன் அதாவது இன்பமான தமிழன் யாரு?”

“‘இன்பத் தமிழனா?’ அது யாரு? ஓ… அப்பிடி வர்றீங்களா! தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் போராடி நம்மளைச் சந்தோசப்படுத்தி அதுல இன்பம் காண்ற கலைஞர்தான் எனக்கு உண்மையான இன்பத்தமிழன். மத்தபடி அப்பிடிப் பேர் வெச்சிட்டுத் திரியறதெல்லாம் சும்மா வெத்துவேட்டு!”


வைகோ ராமேஸ்வரத்தை வந்தடைந்தபோது இரவு மணி ஒன்பதரை.

“வைகோ ராமேஸ்வரத்தில் பேசுகிறானே.. கடல்கடந்து யாராவது வந்திருக்கிறார்களா என்று க்யூ பிராஞ்ச் போலீஸாரின் கண்கள் அலைமோதுவதையும் நான் பார்க்கிறேன்”

என டைமிங்காக ஜோக்கடிக்கிறார்.

வைகோ சஸ்பென்ஸ்!

டெல்லிக்குப் போற வாய்ப்பை உதறிட்டு, சிவகாசியைத் தூக்கி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன்கிட்ட குடுத்துட்டு, தேர்தல் பிரசாரத்துல பிஸியா இருக்காரு வைகோ. ‘அடுத்து என்ன பண்ணப் போகிறேன் என்பது சஸ்பென்ஸ்’னு அடிக்கடி பத்திரிகைக்காரங்ககிட்ட சொல்றாரு.

2006 சட்டமன்றத் தேர்தல்தான் அவரோட லட்சியமாம். ‘அதுக்குள்ள புத்தம்புது பலம் திரட்டிப் பெரிய சக்தியா தேர்தலை அவர் சந்திப்பாரு’னு வைகோவோட இருக்கிறவங்க சொல்றாங்க.. அப்படி என்ன திட்டம் வெச்சிருக்காருனுதான் புரியலை!


விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார்..?
“அரசியலைப் பத்தி நான் எந்த முடிவும் இப்ப எடுக்கல. இந்தத் தேர்தல்ல யாருக்கும் ஆதரவு கொடுக்கறதாகவும் முடிவு பண்ணவேயில்லை. அரசியல்வாதிங்க என் மன்றத்து தோழர்களை சந்திச்சு ஆதரவு கேட்டிருக்கலாம். அதுல தப்பு இல்ல.. என்னை சந்திக்க வந்தாலும் நானும் அவங்கள சந்திக்க முடியாதுனு சொல்லப்போறதில்ல. ஆனா நாங்க யாரையும் ஆதரிக்க போறதில்லங்கிறதுதான் உண்மை. ஜனநாயகக் கடமையைச் செய்யற வகையில என் மன்றத்தினர் தவறாம வோட்டு மட்டும் போடுவாங்க.

அதே போல, இந்த தேர்தல்ல என் மன்றத்தினர் போட்டியிடப் போறதில்ல. அரசியல்ங்கிறதுல நான் ரொம்ப தெளிவாத்தான் இருக்கேன். என் ரசிகர்களும் அப்படித்தான். என் பேச்சை மீறி ஒரு துரும்பைக்கூட அவங்க அசைக்க மாட்டாங்க.

அரசியல்ங்கிறது தவிர்க்க வேண்டிய விஷயம் கிடையாது.. நான் சொன்னா சொன்னபடி அரசியல் களத்துல குதிப்பேன்” என்று விடைகொடுத்தார் கேப்டன்!


வேட்பாளர்களில் அதிக பசை உள்ளவர்?
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றதுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் காட்டியிருக்கும் சொத்துக் கணக்குப்படி… மிகபெரிய பணக்காரராக இருப்பது, ப.சிதம்பரம்தான்! இவர் தன் குடும்பத்துக்கு சுமார் 15 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள் நிலவரம்.

பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனின் சொத்துமதிப்பு, நான்கு கோடி ரூபாய்தான்! ஆனால், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அது தொடர்பாக வழக்கும் நடைபெற்று வருகிறது!

தி.மு.க.வைச் சேர்ந்த கரூர் தொகுதி வேட்பாளரான கே.சி.பழனிசாமி, கொடுத்திருக்கும் கணக்குப்படி அவரின் சொத்து மதிப்பு ஐம்பத்திரண்டு கோடி!

நன்றி: ஆனந்த விகடன் & ஜூனியர் விகடன்

This Election… That Poll

2001 Election Dejavu

1. Opinion poll predicts ‘edge’ for DMK front: திமுக 123-130 வரை வெல்லும்.

2. All eyes on voter turnout: வாக்கு சதவிகிதம் அதிகரித்தால் ஆளுங்கட்சி தோற்கும்.

3. Opinion polls are a Karunanidhi ploy: Vaiko: மதிமுகவை அழிக்கக் கருத்துக் கணிப்புகளை கலைஞர் பயன்படுத்துகிறார் என்று வைகோ குற்றச்சாட்டு.

4. It is difficult to work with AIADMK: Naidu: ‘அதிமுகவுடன் எந்த கட்சியும் ஒத்துப் போவது ரொம்ப கஷ்டம்’ – வெங்கையா நாயுடு.

5. Online poll fever: குமுதம் முதல் அம்பலம் வரை.

இதுவெல்லாம் போகட்டும்… வைகோ-வின் ‘இரண்டாவது மனைவி’யைக் குறித்து விசாரித்தபோது சொன்ன முதல் மரியாதை டயலாக், யாருக்காவது நினைவிருக்கிறதா? செய்தியின் சுட்டி கைவசம் உண்டா???

நன்றி: தி ஹிந்து – Copyrights © 2001 The Hindu

Product Positioning

(c) Purina Dog Food

சன் டிவியில் திமுகவும் உதயசூரியனும்

1. ‘நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சிக்கு பதிலாக திமுக தலைவர்களுடன் பேட்டி ஒளிபரப்பபாகிறது. முக ஸ்டாலின் பேட்டியில் சொன்ன குட்டிக் கதை:

‘வீட்டைத் திருட வந்தவன் காவல் நாய்க்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட் போடுகிறான். நாய் யோசிக்க ஆரம்பித்தது. நாலரை வருஷமா இந்த வழியாகத்தான் தினசரி போய் வருகிறான். என்றுமில்லாமல், திடீரென்று ஏன் இந்த பாசம்? எதற்கு பிஸ்கெட் போடுகிறான்? பொதுமக்கள் யோசிப்பாங்க… கடந்த நாலரை வருஷம் இல்லாமல் எப்படி இன்று மட்டும் இலவசத் தீனி கொடுக்கிறான்? என்று சிந்திக்கணும்’

குயுக்தி: நாலரை வருஷம் முன்னாடி இருந்தவன் திடீரென்று இந்த வழியா வந்திருக்கான்… தடாலடியா இலவச ஃப்யூரினாவை எதற்காக ஆசை காட்டுகிறான்?

2. தேர்தல் கூட்ட சன் செய்தி ஒளிபரப்பில் கருணாநிதியின் உரை:

‘நான் என்பது திமுக ஆட்சியில் இருக்காது. நாம் என்பது மட்டுமே ஒலிக்கும்! நமக்கு எது நன்மை தரும், நாம் எப்படி உயர்வோம் என்று பொதுநலனை முன்வைப்பது திமுக கூட்டணியின் கொள்கை’

குயுக்தி: நாம் என்றால் தயாநிதியும் ஸ்டாலினும்தானே?

3. மிடாஸ் நிறுவனத்தின் சரக்குகளை மட்டுமே டாஸ்மாக் (Tamil Nadu State Marketing Corporation) விற்பதன் மூலம் தமிழக அரசுக்குக் கோடிக்கணக்கான நஷ்டம்.

குயுக்தி: மிடாஸ் போன்ற புதிய நிறுவனங்களை அதிமுக அரசு கை கொடுத்து வளர்த்து விடுவதை திமுக வெறுக்கிறது.

4. கே டியில் ஒளிபரப்பான ‘மௌனம் சம்மதம்‘ படத்தில் ஓரளவு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமாரின் காட்சிகள் முழுவதுமாக வெட்டப்பட்டது.

குயுக்தி: நல்லவேளை! ‘நட்புக்காக‘ திரையிடவில்லை. விஜயகுமார், சரத்குமார், சிம்ரன் எல்லோர் நடித்த காட்சிகளும் நீக்கியிருப்பார்களே…

5. முன்பெல்லாம் கால் கடுக்க நின்று கொண்டோ, தரையில் அமர்ந்தோ தேர்தல் பேச்சுக்களை கேட்க வேண்டும். மக்களை மதித்து இருக்கைகள் போட ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

குயுக்தி: வீட்டில் உட்கார்ந்துகொண்டே கச்சிதமாக படத்தொகுப்புடன் முக்கியமான கருத்துக்களை மட்டும் ‘தங்க வேட்டை‘ நடுவே தடங்கலுக்கு வருந்தாமல், தடாலடியாக பிரச்சார ஒளிபரப்பும்போது, எதற்கு வேகாத வெயிலில் தேர்தல் கூட்டத்துக்குப் போக வேண்டும்?


| |

Rumour News

செய்தியாக கிடைத்த வதந்தி

1. ‘தேர்தலில் ஜெயலலிதா தோல்வி என்பது உறுதியாகி விட்டதாக உளவுத்துறை கணித்துள்ளது. திமுக கூட்டணியின் வெற்றியை ஒப்புக் கொள்ள முடியாத ஜெயலலிதா, ஜாதிக் கலவரத்தைத் தூண்டி விடத் திட்டமிட்டிருக்கிறார். தேர்தலுக்கு முன் ஜாதிக் கலவரம் அரங்கேறும் என்று தெரிகிறது’
– சன் செய்திகளில் பா.ம.க.வின் ராமதாஸ்

2. ‘கலைஞர் கைது மக்களிடையே அனுதாபத்தை உண்டாக்கியது. அதே போல் இன்னொரு நிகழ்வு நடந்தால் திமுகவின் வெற்றி உறுதியாகும். தேர்தலுக்கு ஓரிரண்டு நாளே இருக்கும்போது, கலைஞருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக சொல்வோம். தொடர்ந்து சன் டிவியில் கலைஞரின் வாழ்நாள் சாதனைகளை செய்தித் தொகுப்பாக காட்ட முடியும்; அதே சமயம் கைதுகளையும் மறு ஒளிபரப்ப வாய்ப்பு அமையும். தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் பிரச்சாரமாகக் கருதமாட்டார்கள்.’
– திண்டிவனம் நண்பரின் கணிப்பு

அவசியமான டிஸ்க்ளெய்மர்: வெற்று கிசுகிசுக்களைக் கண்டிக்கிறோம்.


| |