தமிழ் திரைப்பட உலகம்:
வலைப்பதிவுகளைக் குறிக்கவில்லை!

நன்றி: FoxTrot by Bill Amend
கிளம்பிட்டாங்கய்யா…கிளம்பிட்டாங்கய்யா…
தமிழ்மணத்தைக் குறிக்கவில்லை!

நன்றி: Heart of the City
தமிழ் திரைப்பட உலகம்:
வலைப்பதிவுகளைக் குறிக்கவில்லை!

நன்றி: FoxTrot by Bill Amend
கிளம்பிட்டாங்கய்யா…கிளம்பிட்டாங்கய்யா…
தமிழ்மணத்தைக் குறிக்கவில்லை!

நன்றி: Heart of the City
Posted in Uncategorized
கருத்து ஃபிலிம்: இன்றைக்கு காமிக்ஸ் பக்கங்களைப் புரட்டும்போது ‘மதர் கூஸ் & க்ரிம்மை‘ப் பார்த்தவுடன் தற்போதைய தமிழ்மண சூழல்தான் நினைவுக்கு வந்தது.
ஓ மோஸஸ்…. ப்ளீஸ் ஃபர்கிவ் மீ!
படம் கொடுத்தவர்: Mother Goose & Grimm Comics Page
Posted in Uncategorized
தமிழகத்தில் தேர்தல் வர இருப்பதால் முக்கிய கட்சிகள் ஒவ்வொன்றை பற்றியும் என் பார்வையில் அலசலாம் என்று இருக்கிறேன். முதலில் கம்யூனிஸ்ட் கட்சிகளை எடுத்துக்கொள்ளலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இப்போது தி.மு.க கூட்டணியில் உள்ளன.எப்போதும் பி.ஜே.பிக்கு எதிர் அணியில் இருப்பது தான் அவர்கள் தற்காலத்திய கொள்கை என்பதால் அவர்கள் தி.மு.க கூட்டணியில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஒரு வேளை அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி இடம்பெறாமல் போனால் அதே சமயம் தி.மு.க வும் கணிசமாக தொகுதிகளை இவர்களுக்கு தராமல் போனால் இவர்கள் கூட்டணி மாற்றிக்கொள்ளகூடும்.
1989 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருந்து கணிசமாக தொகுதிகளில் மார்க்ஸிஸ்ட் போட்டியிட்டு வென்றது எனக்கு நினைவிருக்கிறது(சுமார் 17 என்று நினைக்கிறேன்).இதில் மார்க்ஸிஸ்ட் தான் பிக் பிரதர். இந்திய கம்யூனிஸ்ட் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்.இரு கட்சிகளுக்கும் கொள்கை ரீதியாக என்ன வித்தியாசம் என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் கொடுக்கலாம்.
தேர்தல் களத்தை பொறுத்தவரை மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் அவர்களுக்கு பி.ஜே.பி எதிர்ப்பு என்பதை தவிர மற்ற எந்த கொள்கையும் இல்லை என்றே நினைக்கிறேன்.
இவ்விரு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் கொள்கையை பரப்புவது, கட்சியை வளர்ப்பது என்பதை பற்றியெல்லாம் இவர்கள் அக்கறை கொள்வதில்லை. நண்பர் சந்திப்பு தன்னுடைய ஒரு அலசலில் தி.மு.க அ.தி.மு.க போன்ற கட்சிகளில் இளைஞர்கள் சேருவதில்லை என்பது போல கூறினார். அவர் கம்யூனிஸ்ட் அனுதாபியாக இருக்கலாம்.ஆனால் இக்கால இளைஞர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தான் சேருகிறார்கள் என்றால் அது பகல் கனவுதான்.
இது தொடர்பாக அவர்கள் மேல் எனக்கு கணிசமான விமர்சனங்கள் இருக்கின்றன.மக்கள் பிரச்சனைக்காக வீதியில் இறங்கி போராடுகிறவர்கள் அவர்கள் தான்.ஆனால் தேர்தல் என்று வந்தால் ஏதோ ஒரு கூட்டணியில் சேர்ந்து (லல்லு பிரசாத் யாதவுடன் கூட்டணி சேரக்கூட தயங்குவதில்லை இவர்கள்) ஒன்றோ இரண்டோ எம்.எல்.ஏ சீட் வாங்கினால் மட்டும் பொதுவுடைமை சமுதாயம் மலர்ந்துவிடுமா?
அவ்வளவு எளிமையானவர்கள்,கொள்கை பிடிப்பாளர்கள் தோழர்கள் என்றால் எந்த கூட்டணியிலும் சேராமல் கட்சியை வளர்க்க முயற்சி செய்யலாமே?பதவிதான்(ஒரு சீட்,இரண்டு சீட்தான்) முக்கியம் என்று இருப்பது ஏன்?
தலைவர்களும் அதே பழைய ஆட்கள்தான். எண்பது தொண்ணூறு வயதில் அவர்களாக ரிட்டயர் ஆகும்வரை அதே ஆட்கள்தான்.புதுமுகங்களும் இளைஞர்களும் இங்கெல்லாம் பதவிக்கு வருவது என்பது அரிது.
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்கள் என்பது ஒரு பாஸிடிவ் விஷயம்.தமிழகத்தில் சில குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக விளங்குகிறார்கள்.
(கன்னியாகுமரி,நாகப்பட்டினம்,கோயமுத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில்). நல்லக்கண்ணு போன்ற கக்கன், காமராஜர் ஆகியோருடன் ஒப்பிடக்கூடிய தலைவர்களை கொண்ட கட்சிகள் இவை.
Posted in Uncategorized
பிசாசு (பின்னூட்ட சாதனையாளர்களின் சுபாவம்)
மின்மடல் அனுப்புவது ஒரு கலை. இரண்டு வரி எழுதினவுடன், பலுக்கப் பிழைகளுக்கு கவலைப்படாமல், தங்கிலீஷில் தட்டச்சி, எலிக்குட்டியை ‘Send’ மேல் வைத்து அழுத்த வேண்டியதுதான்.
ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்காத இணைய உலகத்தில், முகந்தெரியாத ஒருவரின் கவன ஈர்ப்பைக் கோருவது, வேறு விதிகளை ஆட்டத்திற்கு அழைக்கிறது.
நான் பின்னூட்ட சாதனையாளன் என்று எல்லாரும் அறிவார்கள். மன்ற மைய காலத்தில் ஆரம்பித்து வலைப்பதிவு காலம் வரை மறுமொழிந்தே இலக்கியவாதி ஆகியிருக்கிறேன்.
தன்முனைப்பை விட, எழுத்தார்வத்தை விட, இலக்கிய சேவையை விட, வேலையில்லா அலுவலை விட, இதற்கு பல சுபாவங்கள் தேவை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.
1. முடிந்தவரை கடுமையான மொழியைப் பயன்படுத்தவும். அடைமொழிகளில் விளித்தல் நலம். ஆங்கிலத்தில் நான்கெழுத்து சுடுசொற்களை ஆங்காங்கே தெளிக்கவும். (மறந்தும் தமிழில் திட்டக் கூடாது).
2. வன்கருத்தை முன்வைக்கும்போது அந்த நிலைப்பாட்டை நீங்கள் கடைபிடிப்பதற்கான அவசியம் கிடையாது. தமிழ்ப் புத்தாண்டுக்கு வரப்போகும் படங்களையும் ஜெயமோகன் எழுதும் காவியங்களையும் அனைவரும் பார்க்கவும் படிக்கவுமா போகிறோம்? எனினும் விமர்சிக்கலாம்.
3. ஒரு விஷயத்தை ஒருவர் வரவேற்பது பிடிக்கவில்லையென்றால் ‘ரசிகர் மன்றக் கூட்டம்’ என்று கூப்பிடவும். பாராட்டி எழுதுபவர்கள் பணம் வாங்கிக் கொண்டுதான் எழுதுகிறார்கள் என்று அனுமானித்துக் கொள்ளுங்கள்.
4. எதிர்மறையான் விமர்சனம் என்றால், எழுதியவரை உளவியல் நோய் உள்ளவராக சொல்லுங்கள். நுணுக்கி நுணுக்கி குறை கண்டுபிடித்து பெயர் வாங்கிக் கொள்ளும் கூட்டம் என்று அழையுங்கள்.
5. ஆங்காங்கே பாராட்டுக்களும், சிற்சில இடங்களில் பிழைசுட்டுதலுமாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால், உங்களின் தேவைக்கேற்ப நல்லதையோ கெட்டதையோ மறைத்துக் கொண்டு, செலக்டிவ் அம்னீஷியாவாக மறந்துவிட்டு, #3 அல்லது #4-ஐக் கொண்டு பின்னூட்டமிடுங்கள்.
6. முழு கட்டுரையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. தொடக்கத்தில் ஒரு வரி ஆட்சேபகரமாக இருந்தாலோ அல்லது மறுமொழிந்தவர்களில் உங்கள் நண்பரின் பதிலை அடியொற்றியோ உங்கள் பின்னூட்டம் அமையலாம். அரைகுறையாக அலசியவுடன் எழும் உணர்ச்சியை உடனடியாக எழுதவேண்டும். யோசித்து எழுதினால் மறந்து போகும் அபாயம் இருக்கிறது.
7. உங்களின் வாதம் எடுபடாத மாதிரி தோன்றினால் ‘எனக்கு தற்போது வேலை அதிகம்’ என்று கூறிவிடுங்கள். கண்ணில் சிக்காமல் பதில் போடாமல் தப்பித்து விடுங்கள். ரொம்பவே தர்மசங்கடமாக இருந்தால் புதுப்பெயரில் உலாவரத் தொடங்குங்கள்.
8. புகழ் பெற்றவரை shadenfraude-ஆக குரலெழுப்புங்கள். மதம், மொழி, இனம், கட்சி, நாடு போன்றவை எடுபடும். திரியைக் கொளுத்திய பிறகு இருபக்கமும் அடித்துக் கொள்வதை ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கவேண்டும். மறந்துபோய் கூட வாதத்தில் பங்கு கொள்ளக் கூடாது.
9. எளிமைப்படுத்தலை சகித்துக் கொள்ளாதீர்கள். எடுத்துக்காட்டாக ‘வோர்ட்ப்ரெஸ்.காம் இலவசமாக செயல்படுகிறது’ என்றால் அதற்கு முன்னரே நியூக்ளியஸ் இலவசமாகக் கொடுத்தார்களே என்று நுட்பமான ஆதாரங்களுடன் தவிடு பொடியாக்குங்கள்.
வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன்.
இந்தப் பதிவிற்கு உதவியவர்: Pills of the American Internet Neighborhood Society (PAINS)
பிசாசு முறைகள் வெற்றியடையாவிட்டால்: Rules for Making Oneself a Disagreeable Companion
Posted in Uncategorized
எந்த நாய் இந்தியாவைக் குறிக்கிறது என்று சொல்பவருக்கு அல்லது எந்த நாய்க்கு மட்டுமே பூனை சொந்தம் என்று தீர்ப்பளிப்பவருக்கு ‘பூனை’ மின்மடலிடப்படும்
Posted in Uncategorized
எனக்கு ஈகோ கிடையாது என்றால் பலரும் நம்புவதே இல்லை. யாரென்று குறிப்பிட்டு சொன்னால் மானநஷ்ட வழக்கு விழும் அபாயம் வேறு இருக்கிறது 😉
மூன்றாம் பிறையை நாலாம் நாள் பார்த்ததாலோ என்னவோ ‘பட்ட பழி படாத பழி‘யாக இருக்கிறதே என்னும் தீராக் கவலையுடன் சலித்திருந்தபோதுதான் ஈகோ மேய்ச்சல் கண்ணில் பட்டது.
தேர்தலில்தான் டெபாஸிட் இழந்தோம்.
அகங்காரம், தன்முனைப்பு, தற்புகழ்ச்சி, தற்பெருமை என்று ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் ‘உனக்கு அந்த மாதிரி தன்னலமே கிடையாதே கண்ணா‘ என்று பெரிய முட்டை காண்பித்தார்கள்:
சில முக்கிய வலையகங்களின் கணக்கெடுப்புகள்:
யார் இனிமேல் ஈகோ ட்ரிப் என்று கதைக்க ஆரம்பித்தாலும் இவர்களை சுட்டி என்னுடைய பொதுப்பணியை முன்வைத்து கதைக்கலாம்
Posted in Uncategorized
“மார்ச் மாதம் திருச்சியில் நடக்கவிருக்கும் தி.மு.க. மாநாட்டுக்குள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட கருணாநிதி தீர்மானித்து இருக்கிறார். எந்தெந்த தொகுதிகள் யார்யாருக்கு என்பது முடிவாகாவிட்டாலும், குறைந்தபட்சம் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவுசெய்வது அவருடைய திட்டம். இதற்காக சோனியாவின் உதவியை நாடியிருக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.
கருணாநிதி, இப்போது ஜெயலலிதாவைவிட கூட்டணிக் கட்சிகளை நினைத்துதான் அதிகம் கவலைப்படுகிறார். அதிக தொகுதிகள்… கூட்டணி ஆட்சி என கலர் கனவுகளில் இருக்கும் கூட்டணித் தலைவர்கள், அவரது திட்டத்துக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.
மர்மப் பேச்சோடு வளையவரும் வைகோ… கூப்பிட்டாலும் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்துக்கு வராத ராமதாஸ்… ஏகப்பட்ட கோஷ்டி கானங்களோடு குழப்பத்தில் தவிக்கும் காங்கிரஸ்…தனி ரூட்டில் ஆவர்த்தனம் செய்து வரும் கம்யூனிஸ்ட்கள்… என இவர்கள் எல்லோரையும் சமாளிப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், இவர்களில் யாராவது ஓரிருவர் வெளியில்போய் எதிரணியில் சேர்ந்தாலும் வெற்றிக்குப் பங்கமாகி விடும் என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.”
Posted in Uncategorized
சென்னை லயோலா கல்லூரியின் காட்சி தகவலியல் துறை சார்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடுத்த கருத்துக் கணிப்பில், பல ஆச்சரியத் தகவல்கள். அதில் முக்கியமானது 2004_ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இருந்த மக்கள் மனநிலை, இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது என்பது. இந்தக் கருத்துக்கணிப்புகள் பற்றி அத்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ராஜநாயகத்திடம் பேசினோம்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
பா.ஏகலைவன்
‘‘கடந்த ஐந்தாண்டுகளாக, ஆறு மாதத்திற்கு ஒருமுறை, ‘தமிழக அரசியல் பண்பாட்டு அமைப்பு’ பற்றிய கருத்துக்கணிப்பை, தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். அந்த வகையில் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி முதல் பதினாறாம் தேதி வரையில் ஒரு கட்டமாகவும், ஜனவரி எட்டிலிருந்து பதினாறாம் தேதி ஒரு கட்டமாகவும் சர்வே செய்தோம்.
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து, இந்தக் கருத்துக்கணிப்பு முடிவை தயார் செய்திருக்கிறோம். இதில் தொகுதி வாரியாக மேற்கொள்ளவில்லை. எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி, யார் வேட்பாளர் என்ற பங்கீடு தெரியாத நிலையில், மாவட்டவாரியாக சர்வேயை மேற்கொள்வதுதான் சிறந்தது என செயல்பட்டோம். இதிலும் நீலகிரி மாவட்டத்தை நடைமுறை காரணங்களுக்காகத் தவிர்த்தோம். அதேபோன்று புதுவை மாநிலமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கருத்துக்கணிப்பில், கேள்விகள் அடங்கிய குறிப்பேடுகளைப் பயன்படுத்தியது ஓர் உதவிக்காகத்தான். மற்றபடி அவர்களின் போக்கிலேயே சகஜமாகப் பேசி, கலந்துரையாடல் அடிப்படையில், அவர்களின் ஆழமான கருத்துப்பதிவு என்ன என்பதையும் கணக்கிலெடுத்தோம். சமூக உளவு ஆய்வியல் முறையில் இது ஒரு முக்கிய அம்சம்.
கடந்த இரண்டாயிரத்து நான்கு, மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் ஓர் ஆய்வை தமிழகம் முழுவதும் நடத்தினோம். அப்போது அ.தி.மு.க.விற்குப் பத்தொன்பது சதவிகிதம் மக்கள் ஆதரவு. தி.மு.க.விற்கு ஐம்பத்தேழு சதவிகிதம் ஆதரவு என்று இருந்தது. அதன் பிறகு, தொடர்ச்சியாக நான்கு முறை சர்வேக்கள் நடத்தினோம்.
தற்போது எடுத்த சர்வே முடிவுப்படி, அ.தி.மு.க. படிப்படியாக 33.7 சதவிகிதத்திற்கு உயர்ந்து வலுவாக வளர்ச்சி கண்டிருக்கிறது. தி.மு.க.வோ பழைய செல்வாக்கு நிலையிலிருந்து படிப்படியாகக் குறைந்து, 38.4 சதவிகிதத்தில் இறங்கிவிட்டிருக்கிறது. நான்கு சதவிகிதம்தான் வித்தியாசம். இது வெறும் சதவிகித கண்ணோட்டம் மட்டுமல்ல; அரசியல் போக்கைக் காட்டுவதாகக் கொள்ள வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கிறது. இதற்குள் அ.தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இதுவரை பயன்படுத்தி வரும் ‘அணுகு முறையையே பயன்படுத்துமேயானால், மிக எளிதாக தற்போதிருக்கும் நான்கு சதவிகித இடைவெளியைத் தாண்டிவிடும் என்றே சொல்லலாம்.
அ.தி.மு.க. ஆதரவு உயர்வுக்குக் காரணம், இந்த ஆட்சியில் மக்கள் கண்களால் பார்க்கும், நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் பல நடவடிக்கைகளை எடுத்து வந்ததுதான்.
சுனாமி நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ப்ளஸ்டூ படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சைக்கிள், விவசாயிகளுக்கு மோட்டார் பம்ப் லோன், வீரப்பன் உள்ளிட்ட சில சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட பலவும், நம்பகத்தன்மை உணர்வை கொடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதே சமயத்தில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் அதிருப்தியும் உள்ளது. பாதிக்கப்பட்ட பலருக்கும் அது சென்றடையவில்லை. கட்சி சாராத மக்கள் என நாற்பது சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இதில் பாதிப்பேருக்கு உதவி கிட்டவில்லை. அ.தி.மு.க. தி.மு.க. என அரசியல் பார்க்காமல், பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் உதவி என அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டால், வரும் தேர்தலுக்குள் நான்கு சதவிகித வித்தியாசம் என்பது பெரிய விஷயமேயில்லை.
இதில் மற்றொரு அம்சத்தையும் கணக்கெடுத்தோம். தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் துணை இன்றி தன்னந்தனியாக அ.தி.மு.க.வை எதிர்த்து நின்றால் ஜெயிப்பது கடினமே.
எனவே, தி.மு.க. கூட்டணியிலிருந்து ஒரே ஒரு கட்சி விலகி வந்தாலும் கூட, அ.தி.மு.க.விற்குச் சாதகமான வாய்ப்பாகப் போய்விடும் வாய்ப்பு உள்ளது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க., தனது கூட்டணிக் கட்சிகளில் ஒன்றைக்கூட உதாசீனப்படுத்த முடியாது.
இன்னொரு ஆச்சரியமான விஷயம், கட்சிகளில் மூன்றாவது இடம் என்றிருப்பது நடிகர் விஜயகாந்துக்குத்தான் 8.9 சதவிகிதம். இதற்கடுத்துதான் காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், பா.ஜ.க. என்று சதவிகித அடிப்படையில் வரிசையாக வருகிறது. நடிகர் விஜயகாந்திற்கு இருப்பது ‘பாசிட்டிவ்’ ஓட்டு அல்ல. அவரது ஆளுமை, வசீகரிப்பு, கொள்கை என்பவற்றிற்கானதல்ல.
‘இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டுப் போட்டும், அடுத்த பிரதான கட்சியான காங்கிரஸ§ம் இந்த இரண்டுக் கட்சிகளில் யாராவது ஒருவருடன்தான் இருக்கிறது. மூன்றாவதாக, புதிதாக ஒருவர் வரட்டுமே’ என்ற எதிர்ப்பார்ப்பில்தான் இந்த ஆதரவு உள்ளது. இந்த நிலையும் நடிகர் விஜயகாந்த் ஏதாவது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி என முடிவெடுத்தால் மாறிவிடும்.
அதேபோன்று விஜயகாந்திற்கு மட்டுமே இந்த 8.9 சதவிகிதம் ஆதரவு. அவரது கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளருக்கு, அந்த சதவிகிதம் இல்லை. எந்த வேட்பாளரை நிறுத்தப் போகிறார்? அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் நிற்கும் மாற்றுக் கட்சி வேட்பாளர் யார்? தேர்தலை ஒட்டிய மற்ற பரிவர்த்தனை என்பதையெல்லாம் பொறுத்து, விஜயகாந்த் கட்சி வேட்பாளரின் செல்வாக்கு மேலும் கூடும் குறையும். அவ்வளவுதான்.
சமீபத்தில் அவர் தேனியில் கலந்துகொண்ட கூட்டத்தில் நாங்கள் நேரில் பங்கெடுத்தோம் நல்ல கூட்டம் இருந்தது.
அந்தக் கூட்டத்தில் எண்பது சதவிகிதம் பேர் வேடிக்கை பார்க்க வந்தவர்கள். பத்து சதவிகிதம் பேர் ஆதரவாளர்கள். மீதமுள்ள பத்து சதவிகிதம் பேர் ‘பார்ப்போம்’ என்ற நிலையிலிருப்பவர்களாகத்தான் இருந்தார்கள். விஜயகாந்த் தவிர, வேறு எந்த நடிகர் கட்சி தொடங்கி வந்தாலும் இந்தளவில் அல்லது கூடுதலாகவே கூட்டம் இருக்கும். ஆனால், இந்த அளவு ஆதரவு இருக்குமா என்பது தெரியாது.
இவரால் தனித்து நின்று எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. ஆனால், தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளின் ஓட்டுக்களை சிறு அளவில் பிரிக்க முடியும்.
அதேபோன்று விஜயகாந்த் வருகையால் சாதி அடிப்படையில் வைகோவின் செல்வாக்கு பாதிக்கப்பட்டதாக சர்வேயில் தெரியவில்லை. சாதி அடிப்படையில் பார்த்தால் முதலிடம் வன்னியர்கள். அடுத்து ஆதி திராவிடர் மற்றும் முக்குலத்தோர் என நீண்டு, கடைசியாகத்தான் நாயுடு சமூக ஆதரவு விஜயகாந்திற்கு வருகிறது.
தி.மு.க.வின் படிப்படியான சரிவுக்குக் காரணம் என்பது, யதார்த்தத்தில் இயற்கையாக நடக்கக் கூடியதுதான். எதிராக இருக்கக் கூடிய அ.தி.மு.க. அரசு, படிப்படியாகச் சில திட்டங்களை அறிவித்து ஆதரவு நிலையைப் பெருக்கிவரும்போது, தி.மு.க. மக்கள் ஆதரவு என்பது, குறையத்தான் செய்யும்.
அடுத்த குறை, தி.மு.க. சார்பாக இப்போது மக்களிடம் நேரடியாகச் சென்றடையும் நலன் பலன் என்று ஏதும் இல்லாததுதான். தொலை தொடர்பு சாதனை செல்போன் சலுகை வசதி என தினந்தோறும் டி.வி.யில் செய்தி வருவதைப் பற்றி மக்களிடம் கேட்டோம்.
மெஜாரிட்டி ஓட்டு வங்கி என்பது கீழ்த்தட்டு, மக்கள்தான். அவர்கள் ‘எல்லாமும் சரி வயிற்றுப் பாட்டுக்கு, சோற்றுக்கு வழி உள்ளதா?’ என்கிறார்கள். வரவேற்கக்கூடிய திட்டங்கள் என்பதற்கு மறுப்பில்லை. அதனால் வாக்காளருக்கு நேரடிப் பயன் என்ன என்ற கேள்வி உள்ளது.
‘‘தமிழ் செம்மொழியாகிவிட்டது. அதனால் எனக்கென்ன பயன்?’ என்கிறார்கள். சேதுசமுத்திரத் திட்டமும் அப்படித்தான். அதனால் நாட்டிற்கு நல்லது. வருவாய் பெருகும். வர்த்தகத்தைக் கூட்டும் என்பதெல்லாம் சரி. அது எப்போது? யாருக்கு? ஓட்டுப் போடும் எங்களுக்கு இப்போது என்ன? என்ற நிலையில் உள்ளார்கள். இப்படி மக்களுக்கு நேரடியான பலன் இல்லாதபடிக்கு தி.மு.க.வின் அணுகுமுறை இருந்துள்ளதைத் தெரிவிக்கிறார்கள்.
அடுத்து, தி.மு.க. கூட்டணி பற்றியது. இப்போது இருக்கும் கூட்டணிக்கு ஆதரவு என்பது மிகமிக குறைவுதான். அது நீடிக்குமா நீடிக்காதா, யார் பிரிந்து செல்வார்கள், யார் விலகுவார்கள், தேர்தலின் போதுதான் கூறமுடியும் என்ற குழப்ப நிலையையே பலரும் தெரிவித்துள்ளார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் எடுத்த ‘கூட்டணி ஒற்றுமை’ பற்றிய கருத்துக் கணிப்பில், அபாரமான ஆதரவு இருந்தது. இப்போது சுத்தமாக குறைந்து, சுமார் இருபது சதவிகிதம் பேர்தான் இந்தக் கூட்டணியே நீடிக்கும் என்கிறார்கள்.
தி.மு.க. ஆதரவு சரிவுக்கு இதுவும் ஒரு காரணம். அவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்று மக்கள் மத்தியில் பரவிக் கிடக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. மேல் அதிருப்தியை விட, திருப்தி அதிகம் இருக்கிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி, மத்திய ஆட்சியில் உள்ள கூட்டணிக் கட்சி என இருக்கும் தி.மு.க.வைப் பார்க்கும்போது, அதிருப்தி என்று எதுவும் இல்லை. சிக்கலான நிலைதான். ஆளும் கட்சிக்கு எதிர்ப்பலை என இருக்க வேண்டும். அல்லது அந்தவித எதிர்ப்பலைக்கான சாத்தியமும் தெரிய வேண்டும். ஆனால், அ.தி.மு.க.விற்கு அப்படி ஏதும் இல்லை. அதேபோல தி.மு.க. ஆதரவு அலையும் இல்லை. இன்றைய தேர்தல் களத்தின் விநோத சூழ்நிலை இதுதான். அடுத்து வரும் இரண்டு, மூன்று மாதத்தில் பெரிய டிரெண்ட் ஏதும் நிகழாதபட்சத்தில், இப்போதைய மக்கள் போக்கில் மாற்றமிருக்காது. அ.தி.மு.க.விற்கு அதிகரித்து வரும் செல்வாக்கு என்ற போக்கு, தி.மு.க.விற்குச் சரிவு ஏற்படலாம், என்ற போக்கு. அதுதான் நீடிக்கும்.
அதேபோன்று வரும் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகி களம் குதித்தால், அதுவும் அ.தி.மு.க.விற்குத்தான் சாதகமாக முடியும். வெற்றி என்பது ஒரே ஒரு ஓட்டு வித்தியாசம். என்றாலும், நிச்சயிக்கக்கூடியதுதான். தி.மு.க.வின் தற்போதைய பலம், அதன் கூட்டணியின் பலமே. இதில் மூன்றாவது அணி என்றால், தி.மு.க. கூட்டணியிலிருந்து ஏதாவது ஒரு பிரதான கட்சி அதிலிருந்து வெளியேறும். இது நடந்தால் வாக்கு சதவிகிதம் குறையும். வெற்றி, அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும்.’’ என்று முடித்தார் ராஜநாயகம்.
அடுத்த முதல்வர் யார்? என்ற 2005 மே மாத கருத்துக் கணிப்பில், பதினைந்து புள்ளிகள் வித்தியாசத்தில் கருணாநிதி முன்னணியில் இருந்தார். இதே கணிப்பில் அந்த இடைவெளி வெகுவாகக் குறைந்துள்ளது. கருணாநிதிக்கு 87.46 புள்ளிகள். ஜெயலலிதாவிற்கு 82.09 புள்ளிகள். இது ‘திறமை.’ அடிப்படைக்கு எடுத்தது. ‘வாய்ப்பு’ என எடுத்ததில் கருணாநிதிக்கு 81.98 புள்ளிகள். ஜெயலலிதாவிற்கு 78.07 புள்ளிகள். சுமாராக நான்கு புள்ளிகள்தான் வித்தியாசம்.
இதில் மூன்றாவது இடம் நடிகர் விஜயகாந்த் கட்சிக்கு. ‘திறமை ’அடிப்படையில் 32.27 புள்ளிகளும் ‘வாய்ப்பு’ ரீதியில் 30.19 புள்ளிகளும் எடுத்திருக்கிறார். அதாவது, மாற்றுக் கட்சி இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதபவர்கள்தான் இவர்கள்.
மக்கள் இன்றைக்கு ஓட்டுப்போட்டால், தி.மு.க.விற்கு 38.4 சதவிகிதம் அ.தி.மு.க.விற்கு 33.7 சதவிகிதம் (வித்தியாசம் 4 சதவிகிதம்) விஜயகாந்திற்கு 8.9 சதவிகிதம், காங்கிரஸ§க்கு 4.7, அடுத்து பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்டும், பா.ஜ.க.வும் உள்ளன.
சிறுசிறு கட்சிகளுக்கு .2 சதவிகிதம். வாக்களிக்க விரும்பாதவர்கள் 10 சதவிகிதம்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் கிராமங்கள் தோறும் ‘தன்னம்பிக்கை’க் களமாக வளர்ந்துள்ளன. இவர்களின் ஆதரவு என்பதும் அ.தி.மு.க.விற்குத்தான் அதிகம். பெண்கள் ஓட்டுக்கள் அதிகப்படியாக அ.தி.மு.க.விற்குத்தான்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
http://www.kumudam.com/reporter/260106/pg1.php
பா.ஏகலைவன்
Posted in Uncategorized
அடுத்த தேர்தல்தான்; வேறு என்ன!
ஜனவரி மாதத்தில் தமிழ் பதிவர் வட்டத்தில் பெரிதும் அல(விளா)சப்பட்ட கருத்து எது?
விடுபட்டவைகளையும் மறந்து போனவைகளையும் பின்னூட்டமிடவும். நன்றிகள்.
Posted in Uncategorized