காஷ்மீர்


குடியரசு தின வாழ்த்துக்கள்
Happy Republic Day

எந்த நாய் இந்தியாவைக் குறிக்கிறது என்று சொல்பவருக்கு அல்லது எந்த நாய்க்கு மட்டுமே பூனை சொந்தம் என்று தீர்ப்பளிப்பவருக்கு ‘பூனை’ மின்மடலிடப்படும்


|

8 responses to “காஷ்மீர்

  1. உண்மையில் பூனை எந்த “நாய்”க்கும் சொந்தம் இல்லை என்பது தான் உண்மை.

    எல்லைக்கோடு அளவைப் பார்க்கும் போது சாலையில் சண்டையிடும் “நாய்” தான் இந்தியாவாக இருக்குமோ?

  2. குடியரசு தினத்தன்று பாரதத்தாயை நாயுடன் ஒப்பிடலாமா பாலா?இன்று அன்னைபாரதத்தின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க உறுதிமொழி எடுக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையில்லையா?

    Indian

  3. சரியான விடைய கணித்த பொட்டீ கடைக்கு நன்றி.

    —குடியரசு தினத்தன்று பாரதத்தாயை நாயுடன் ஒப்பிடலாமா —

    வேறு நாள்களிலும் ஓப்பிட வேண்டாம்தான். பெருமிதங்களைப் பகிர்ந்து கொள்ளும் வேளையில் சியாசென்னில் அனுதினமும் பல கோடிகள் (வீண்) செலவாகிறதே என்னும் வருத்தமும் இந்தப் பதிவுக்குக் காரணம்.

    கூகிள் நுழைவதற்கு சீனா போல் கட்டுப்பாடு விதிக்காமல், சவூதி போல் மன்னராட்சி இல்லாமல், மன்னர் ஆளாவிட்டாலும் அரசனை கேள்வி கேட்க முடியாத அமெரிக்க ஜனநாயகமாக இல்லாமல் இந்தியா இருப்பது வெள்ளிடை மலை.

  4. Disappointing to read this one Bala…

    Dont compare India with Dog (for whatsover reason) please

    😦

  5. Unknown's avatar Chameleon - பச்சோந்தி

    ஒரு கருத்தை விளக்க இப்படம் பயன்படுகிறது என்றாலும், இப்படம் எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது.
    கருத்து அல்ல.

  6. அந்நியன் : நாயை ஏன் கேவலமாக நினைக்க வேண்டும். அதுவும் பாரத தாயின் மடியில்தானே பிறந்தது. முதலில் நாயென்றால் கேவலம் என்று எண்ணுவதை நிறுத்துங்கள்.

    ரெமோ : அமெரிக்க அதிபர் தன் பூனைக்கு இந்தியா என்று பெயரிட்ட போது ஆஹா ஓஹோ என்று புகழ தெரிந்த நமக்கு இது மட்டும் கசக்கிறது. [மதன் பதில்கள்]

    அம்பி : அச்சோ, உங்க அம்மாவை இப்படி நாய்ன்னு சொன்னா சும்மா இருப்பேளா அப்படிதானே பாரத தாயும்.. எனக்கு அழுகை அழுகையா வருது.. ஆண்டவா

  7. Unknown's avatar சுந்தர்

    ஆக பூனை “தனியான” ஒன்று; மற்ற இரண்டும்தான் சொந்தம் கொண்டாடி அடித்துக்கொள்கின்றன என்று முடிவே கட்டிவிட்டீர்களா? :((

    நான் இவ்வளவு நாள், இன்னும் கூட, ஒன்றின் அங்கத்தை இன்னொன்று பிய்த்து எடுக்கச் சண்டை போடுகிறது என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

    கருத்துக்குப் பொருந்தாத படம். படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது ஈராக் பூனையை மற்ற நா*கள் இழுத்துப் பிய்த்துக்கொண்டிருப்பதுதான். அல்லது அந்தப் பூனையைத் திருவாளர் பொதுஜனமாகக் கற்பனை செய்துகொண்டு நாய்களாகக் கட்சிகளை உருவகித்தாலும் பொருந்துகிறது. காஷ்மீர்?? sorry… indigestible!

  8. —Disappointing to read this one—
    —அதிர்ச்சியைத் தருகிறது—

    புகைப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு காஷ்மீர்தான் தோன்றியது. தங்களின் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தவில்லையா… ஹ்ம்ம் :-!

    அந்நியன்/ரெமோ/அம்பி அனானிக்கு… நன்றிகள்.

    —ஈராக் பூனையை மற்ற நா*கள் —
    ஈராக்கில் இருப்பது ஒரு நா*தானே!? ஈராக் பூனை தன்னந்தனியாகத் தானே தப்பிக்க பார்க்கிறது. நாயைத் துரத்துவதற்கு குள்ள நரிகள் சூழ்ந்திருப்பது போல் நிழற்படம் கிடைத்தால் பொருத்தமாக இருக்கும்.

    —indigestible!—

    மகாநதி படத்தில் நேப்பியர் பாலத்தின் வீச்சு தாங்காமல் பூர்ணம் விஸ்வநாதன் தள்ளிப் போகும்போது கமல் சொல்வாரே… (டயலாக் மறந்து போச்சு; ஆனால், நிஜத்தை பிரதிபலிக்கும். ‘இந்த நாற்றத்தில்தானே குடியிருக்கோம்’ அல்லது ‘நம்மால் வந்ததுதானே’ என்பது போல்?)

    பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.