தேவதச்சனைக் குறித்து புத்தக அலமாரியில் மேயப் போனால் ‘குளத்துக்கரையேறாத கோபியர்கள்’ தேவதேவன் வந்து நின்றார். அவரைக் குறித்த நகுலனின் கட்டுரை:
‘நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்‘ தேவதேவனின் ஐந்தாவது கவிதைத் தொகுதி. பொருத்தமாக ‘பிரமிளுக்கு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 15 கவிதைகள். மீண்டும் தேவதேவன் குறிப்பிட்டிருக்கிறபடி கவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும். இந்த வகையில் இத்தொகுதி ஒரு சாதனை.
கவிதைகள் முழுவதும் ஓடும் சரடு பல்வேறு வகைகளில் இயந்திர நாகரீகம் இயற்கையை – சூழ்நிலையை எவ்வாறு எவ்வெவ்வகைகளில் சூறையாடுகிறது என்பதைத் திறமையாகக் காட்டுகிறது.
சரளமான மென்மையான நடை, பகட்டு ஜ்வலிப்பு இல்லாத வார்த்தைத் தேர்வு. படிமங்கள் அவை செல்லும் பாதைகளுக்கேற்ப பொருள் வேறுபாடுகள் கொள்ளும் நேர்த்தி. தேவதேவன் சில வார்த்தைகளை மிகத் திறமையுடன் படைத்திருக்கிறார். அவற்றுள் ஒரு சில:
இத்தொகுதியில் என்னை மிகக் கவர்ந்த அம்சம் அதனூடு மிளிரும் கிண்டல் த்வனி. இது சூழ்நிலையில் பலருக்கும் ஏற்படும் அனுபவச் சூழ்நிலைகள் ஒரு மையத்தினால் ஏற்படுபவை. மேலும் இங்கு சொல்லப்படாமலேயே எழுதப்படாமலேயே சில அனுபவங்கள் பெறப்படுகின்றன.
சில எடுத்துக்காட்டுகள்:
1. வெற்றியும் தோல்வியும்
‘வீரர்க்கழகானாலும்
வெற்றிதானே குறி’
(பக்கம் 16)
2. ஒரு குழுவினுக்குள்ளேயும் உள்ள உறவு
அது கூட்டுழைப்பு
அன்பு இல்லை
3. காகங்களுக்கு காடு எதற்கு?
(பக்கம் 12)
4. சரி, முதலில் குளித்துவிட்டுப் பேசுவோம் என்கிறேன்
(பக்கம் 36)
தலைப்பிலேயே ஒரு கிண்டல் த்வனி இருக்கிறது. இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.
வெளியான இதழ்: விருட்சம், செப்டம்பர் 1993
நன்றி: நகுலன் கட்டுரைகள் – காவ்யா :: ரூ. 150/-
Hi Balasubra
It is nice to C these kind of postings from you
I have read mostly all the poetries of Devadevan and Nakulan katturaikaL too ..
I will try to write more later
Thanks
pls do keep posting these kind of stuff
பிங்குபாக்: Tamil Kavinjar Devadevan wins Vilakku award for 2008 - Thamil Literature faces « Tamil News