tamil cinema :: திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய 12 புத்தகங்களை தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டதுடன் விஜய்க்கு வித்தக கவிஞர் விஜய் என்று பட்டமும் கொடுத்தார். இந்த விழா நடந்து சில நாட்களுக்குள்ளாகவே மத்திய அரசு விஜய்க்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்க, எங்கிருந்தோ கிளம்பிய வதந்திகள் இந்த விருதுக்கு பின்னணியில் மத்திய அரசில் ஸ்ட்ராங்காக அங்கம் வகிக்கும் கலைஞரின் பங்கும் இருக்கிறது என்று கூவ ஆரம்பித்தன.
cine south :: இளம் பாடலாசிரியருக்கு விருது கிடைத்ததற்குப் பின்னால் பத்து லட்சம் ரூபாய் கைமாறியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தப் பாடலாசிரியரும் முக்கிய எதிர்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். பாடலாசிரியரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு பணத்தைக் கொட்டிய தென்னக கல்லூரியின் நிறுவனரும் இதே சாதியை சேர்ந்தவர்தான். இந்த சாதி அபிமானத்தின் அடிப்படையில் பாடலாசிரியருக்கு மற்ற இருவரும் செய்த பலமான ரெகமண்டேஷன்தான் தேசிய விருது என்கிறார்கள்.

