Tag Archives: karnatic

Classical Carnatic Ragas in Tamil Film Music

யூ டியுப் தளத்தின் சிறப்பம்சமே, “உனக்கு இது பிடிக்கலாம்!” என்று தெரியாத எவரோ ஒருவர் – எனக்குத் தெரிந்த தலைப்பில் உரையாடுவதை –> உங்களின் ஓடையில் காண்பிப்பது.

அப்படி தென்பட்டவர் தமிழ்ச்செல்வன் பாரதி.

குரங்கிற்கு எப்படி வாழைப்பழம் விருப்பமோ இளையராஜாவின் பாடல்கள் அப்படி எனக்குப் பிடிக்கும். தமிழ்செல்வன் பாரதி.மாதிரி கர்னாடக சங்கீதம் அறிந்தவர்கள் அதை வேறொரு விதத்தில் ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அதாவது ஓவியங்களை எண்ணெய் ஓவியம், வண்ணக்கோல், செயற்கை வண்ணக் கூழ்மங்கள், நீர்வர்ணம், மை ஓவியம், பூச்சு ஓவியம் என்றெல்லாம் வகைப்படுத்துவது போல், இசையையும் ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருந்தால் இதை இந்த முறையில் தொகுத்திருக்கிறார்கள் என்று அறியலாம். ஏன் அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? எப்படி அந்தப் பூச்சு இந்தத் தருணத்திற்கு பொருந்துகிறது? இதுவரை எவரும் செய்யாத புதுமையை எவ்வாறு புகுத்தியிருக்கிறார்? ஏன் வெறுமனே சாஸ்திரீய முறைப்படி பாடுவது அலுப்பையும் ; அதையே ராஜாவின் எண்ணத்தில் உருவாகும் பாடல் — பிரவாகத்தையும் கொடுக்கிறது?

ஃபாரம் ஹப் (The Forum Hub) என்னும் தளத்தில் பேசியது… தமிழ் ஃபிலிம் மியூசிக், டி.எஃப்.எம் பேஜ் (இப்பொழுது newtfmpage) என்றெல்லாம் கதைத்தது… அங்கே நாற்பது பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் நூறு பதில்களும், பதிவுகளும் இருக்கும். இடையிடையே சில வைரங்கள் ஜ்வலிக்கும். தேடுவது கடினம். சட்டென்று புரியாத சதுஸ்ருதி தைவதம், அந்தர காந்தாரம், பிரமாண ஏகஸ்ருதி என்றெல்லாம் மிரட்டும். சல்லடை போட்டு சலித்து, அந்தப் பகிர்வுகளைக் கோர்வையாகத் தொகுத்து, ஒரேயொரு சினிமாப் பாடலையோ, ஒரு ராகத்தையோ, ஒரு விஷயத்தையோ பற்றி முழுமையாகக் கதை போல் சொல்ல எவராவது கிடைப்பாரா என்று ஏங்க வைத்தாலும் சோளப்பொரி கிடைத்தது.

திரள் சந்தைக்கான புகழ் பெற்ற முயற்சியாக சிக்கில் குருச்சரண் அதை பரவலாகப் பதிவாக்கி எல்லோருக்கும் கொண்டு சென்றார். அவரைப் போல் பலரும் ஏற்கனவே இது மாதிரி நிறைய முயற்சிகளும் எழுத்துகளும் பகிர்வுகளும் தந்திருந்தாலும், எல்லோரும் அறிந்த நபர் – எல்லோருக்குமான பதிவாக ஆக்கியதில் சிக்கில் குருச்சரணுக்கு முக்கிய இடம் உண்டு. ஜனரஞ்சகமாக இருக்கும். சுவாரசியமாக இருக்கும். நன்றாக எடிட் செய்து தொகுக்கப்பட்டிருக்கும். ரொம்ப தொழில்நுட்ப சங்கதிகள் சொல்லி அலுப்பு தட்டாமல், அதே சமயம் டெக்னிகலாக வேண்டும் என்பவர்களுக்கு நிறைய இடம் இருக்கும்.

அவர் வழியில் தமிழ்ச்செல்வன் பாரதி முக்கியமானவர். சிக்கிலார் போல் மேளகர்த்தா ராகம் என்று வகைப்பாடுகளைச் சொன்னாலும், மெட்டுக்கு ஏற்ற வார்த்தைகள், அந்தப் பாடலின் கூட்டிசையில் வீணையும் வயலினும் எவ்வாறு முக்கியமாகிறது என்பதில் மேற்கத்திய சங்கீத நுட்பங்கள், என்று உணர்த்துகிறார். நிரோஷா தாங்க எனக்குத் தெரியும் என்பவருக்கு சரிகமபதநி என்பதில் கடைசியில் வரும் நி என்னும் நிஷாதம் எவ்வாறு இசைஞானியின் பாடல்களில் கையாளப்பட்டிருக்கிறது என்கிறார். எல்லாவற்றையும் காலை நடை, பக்கத்தில் உறங்கும் செல்லப்பிராணிகள் என வித்தியாசமான, நேரடியான, பாசங்கற்ற விதத்தில் தயார் செய்து பரிமாறுகிறார்.

இந்த மாதிரி விஷயமெல்லாம் கேட்க குருகுலத்தில் காலந்தோறும் பணிவிடை செய்யவேண்டும். குருவிற்கு எப்போது உத்வேகம் வருகிறது என்று காத்திருக்க வேண்டும். ஒட்டுக் கேட்க வேண்டும். கேட்டதை இன்னொருவரிடம் சொன்னால், அந்த சீடன் நம்மை விட பிராபல்யம் ஆகி விடுவான் என்று விரித்துரைத்து, சந்தேக நிவர்த்தி செய்து, தெளிவாக்கிக் கொள்ளக் கூட முடியாத சூழலில் இருந்து சுதந்திரமாக எல்லோருக்கும் எல்லாவற்றையும் அள்ளித் தரும் அளவில்லா தகவல் கிடைக்கும் காலத்தில் வாழும் நாம் – கொடுத்து வைத்தவர்கள்.

அதற்கு முன்பே இவற்றையெல்லாம் தமிழிசையில் பாமரனுக்கும் கொண்டு சென்ற பாவலர் ராஜா ஆளுமையைப் புரிந்தவர்கள் பாக்கியசாலிகள்.

Carnatic Music Appreciation for Classical lovers

பாரம்பரிய கர்நாடக இசையைப் புரிந்து கொண்டு மகிழ்வது எப்படி?

Bharathiya-vidya-bhawan-karthik-fine-arts-classical-music-Singers-Carnatic-Classicalகர்நாடக இசையில் ஈர்ப்புத் தன்மை, தாளகதி, ஆன்மிக மற்றும் வாழ்வியல் பற்றிச் சொல்லும் சுவாரசியங்கள், இசை ரசிகர்களை ஒரு உன்னத உலகத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால், அந்த கருநாடக இசையில் நுணுக்கங்கள், அழகுகள், மற்றும் அதன் ஆழங்கள் பற்றி தெரிந்து கொண்டால் அது மேலும் ஒரு உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

இந்தப் பயிற்சி முகாம் கர்னாடக இசையைக் கற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அதை நீங்கள் அழகாக ரசிக்கலாம் என்று சொல்லித்தரப் போகிறது. கருனாடக இசை உலகப் பயணத்தை மேலும் பயன் உள்ளதாக ஆக்கும்.

கர்நாடக இசையின் அடிப்படை, கச்சேரியின் வழிமுறைகள், வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியங்கள் பற்றிய குறிப்புகள், வயலின், Bharathiya-vidya-bhawan-karthik-fine-arts-classical-musicமிருதங்கம் போன்ற பக்கவாத்தியங்கள் பற்றிய அறிமுகம், பல்வேறு இசை வடிவங்கள் பற்றிய விளக்கங்கள், ராகம், தாளம், பற்றிய அடிப்படை விஷயங்கள் மற்றும் பல்வேறு இராகங்களை அடையாளம் காண பயன்படும் வழிமுறைகள் ஆகியவை அறிமுகம் செய்கிறார்கள்.

துவக்க கருத்தரங்கு, ஒலிநாடாக்கள் மூலம் இசையின் நிதர்சன உண்மைகளை அறிமுகப்படுத்துதல், விளக்க உரையோடு கூடிய செயல்முறை விளக்கங்கள், நேர்முக உரையாடல்கள், Bharathiya-vidya-bhawan-karthik-fine-arts-classical-music-Singers-Carnatic-Classical-Veenaகலந்துரையாடல்கள், கேள்வி – பதில், பவர்பாயின்ட் கோப்புகள், இப்படி எத்தனையோ வழிமுறைகளில் அதிரடியாகக் கற்றுக் கொள்ளலாம்.

இசை பயிலும் இளம் தலைமுறையும் இசை ரசிகர்களும் கற்றுக்கொள்ள மயிலாப்பூரில் பயிற்சி முகாம் நடத்துகிறார் டாக்டர் ராதா பாஸ்கர் (எம்.ஏ., பிஎச்.டி (இசை), ஜர்னலிசம் டிப்ளொமா.

ஜூன் 22 முதல் ஜூன் 26, 2009 வரை
இடம்: பாரதிய வித்யா பவன்
நேரம்: மாலை 6:15 மணி முதல் 8:15 மணி வரை
கட்டணம்: ரூ. 500/-
முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஜூன் 10
பணம் / காசோலை அனுப்ப வேண்டிய முகவரி:
சமுத்ரா,
புதிய எண் 26, இராம தெரு
நுங்கம்பாக்கம், சென்னை – 34

நான் சென்ற கருத்தரங்கில் சொல்லிக் கொடுக்கப்பட்டவை:

  1. கீர்த்தனாவுக்கும், கிருதிக்கும் என்ன வித்தியாசம்? (பெண்கள் பெயர் அல்ல) எதை பஜனையாகப் பாடலாம்; எதுப் பாடுவது சுலபமானது; மும்மூர்த்திகள் எதை இயற்றினார்கள்?
  2. பல்லவி, அனுபல்லவி, சரணம்: எத்தனை சரணம் வரும்? (அந்தக் கால எமெஸ்விக்கு மூன்று, இளையராஜா கலத்தில் ரெண்டு என்று சொல்லக்கூடாது)
  3. சம்ஷ்டி சரணம் என்றால் என்ன?
  4. தியாகராஜர், சாமா சாஸ்திரி, ஊத்துக்காடு, ஸ்வாதித் திருநாள் போன்றவர்களின் முத்திரை என்ன? (முத்திரை இப்போது குத்திடு தப்பாது’ பாட ஆரம்பிக்க வேண்டாம்; அந்தக் காலத்திலேயே பாடலைத் திருடி பெயர் மாற்றி சொந்தப் பதிவாக்கும் வழக்கம் இருந்திருக்கும்!?)
  5. கானங்களை கிரமமாகப் பாட வேண்டிய சாஸ்திரம்.
  6. சிட்டேஸ்வரம்: Interview with Kousalya Sivakumar :: சமஸ்கிருதத்தில் முதுநிலை பட்டதாரியான கெளசல்யா சிவகுமார் – ஆன்மீக இசைபேரூரை: “‘கமலாம்பாள் நவாவர்ண கீர்த்திகள்’ என்பதில் வேதாந்த தத்துவங்கள் நிறைய கொண்டவை. பல ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கியது. சாதாரணமாக எல்லோராலும் எடுத்து அதை சொல்ல முடியாது. சமஸ்கிருதத்தில் ‘புஷ்யம்’ என்று சொல்வார்கள். அதாவது மறைமுக அர்த்தங்கள் எல்லாம் நிறைய அதில் உள்ளது. இப்படிப்பட்டவையை என்னை பிரித்து விளக்கமாக சொல்ல சொன்னார்.”
  7. ஸ்வர சாகித்ய உருப்படி: இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்-Ilayaraja’s Musical Confusions-Rajalakshmi « meetchi quarterly: “How to Name It இல் உள்ள ஒன்பது சாஹித்யங்களும் (Compositions) சாஸ்திரீய கர்நாடக ராகங்களை சாஸ்திரீய மேற்கத்திய இசை வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன.”
  8. மத்தியமகலா சாஹித்யம்: Lyrics or sahitya has always been the effective means to communicate man
  9. சொல்கட்டு சுவரம்: 6IndianMusic : Solkattu
  10. சொற்கட்டு சாகித்யம்: Amazon.com: Solkattu Manual: An Introduction to the Rhythmic Language of South Indian Music: David P. Nelson: Books
  11. ஸ்வர அக்ஷரம்: ‘ஏபிசி நீ வாசி’ இல்லையாம்.
  12. யதி: கவிதைக்குயில் ராகினியின் இசைப்பயணம் :: தாளத்தின் 10 உயிர் நிலைகள். | யதி
  13. யமகம்: கிருதியை அலங்கரிக்கும் அணிகள் (யமகம் – ஒரு சொல்லோ சொற்றொடரோ நான்கு அடிகளிலும் எதுகையாக வெவ்வேறு பொருளில் வருவது)
  14. மணிப்பிரவாள க்ருதி: Muthuswamy Dikshitar
  15. சங்கதி: இசையும் இறைவனும் – பறவையின் தடங்கள் :: நாகூர் ரூமி
  16. ஆவர்த்தனம் தனி