Tag Archives: Kamal

தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா?

எட்டுக்குடி முருகன் தலம். இது பத்து எட்டாக்குடியர்களைப் பற்றிப் பேசும் பதிவு. முதலில் செய்தி:

Ramadoss whines against wine this time – Politics/Nation – News – The Economic Times: “After rapping Shah Rukh Khan and Saif Ali Khan for smoking on screen and endorsing junk food, respectively, Union health minister Anbumani Ramadoss has spoken out against the Indian Premier League (IPL) for allegedly promoting liquor through surrogate advertising. Asked about surrogate advertising in IPL (liquor baron Vijay Mallya’s team is called ‘Royal Challengers’ named after a whiskey brand owned by his UB Group) the minister said he would take the issue up with the Information and Broadcasting (I&B) ministry.”

இதைத் தொடர்ந்து ரீடிஃப் ஹிந்தி சினிமாவில் நினைவில் நின்ற பத்து குடிக்காட்சிகளைக் கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நினைவுக்கு வந்தவை:

1. ‘உயர்ந்த உள்ளம்‘ – குடிகார கமலை, வீட்டு சிப்பந்தி அம்பிகா சீர்திருத்துவார். (அல்லது ‘நானும் ஒரு தொழிலாளி‘யா?)

2. ‘பாட்சா‘ – ‘எட்டு எட்டா மனுசன் வாழ்வப் பிரிச்சுக்கோ பாடலின் முன் காக்டெயில் அடிக்கும் ரஜினி

3. ‘மறுபடியும்‘ – ரேவதி செல்லும் விருந்தில் முன்னாள் கணவனைப் பார்த்து கோபமுற்று மதுவருந்துவது

4. ‘சிந்து பைரவி‘ – சிந்து மீண்டும் ஜேகேபி வீட்டிற்கு வந்து அவருக்கு ஊற்றிக் கொடுக்கும் காட்சி.

5. ‘நவராத்திரி‘ – சிவாஜி: ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்’

6. ‘ஒளிவிளக்கு‘ – ம.கோ.ரா.: ‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா; இல்லை நீதான் ஒரு மிருகம்’

7. ‘மாமன் மகள்‘ – கவுண்டமணி & சத்யராஜ் மணிவண்ணனுடன் இளநீரில் கலந்தடிக்கும் க்ளாசிக்

8. ‘ஜெய்ஹிந்த்‘ – ‘போதையேறிப் போச்சு; புத்தி மாறிப் போச்சு’

9. ‘திருடா திருடா‘ – பணம் கடத்தப்பட்டு அறிந்தவுடன் சந்தோஷத்தின் உச்சத்தில் மேஜையில் உள்ள உயர்ரக பானங்களை உடைத்தெறியும் விக்ரம் (சலீம் கௌஸ்)

  • கார்த்திக் நண்பர்களுடன் தண்ணியடிப்பது,
  • ஏற்றிக்கொண்ட விஜயகாந்த் நாயகி வீட்டுக்கு சென்று வீராப்பு பேசுவது,
  • நவீன சுந்தர் சி,
  • நிரந்தர கோப்பையுடன் மேஜர் சுந்தர்ராஜன்,
  • சென்னை சல்பேட்டாவுடன் சுருளிராஜன்,
  • டிக்.. டிக்… டிக் என்று காலையில் பார் அருளும் தேங்காய் ஸ்ரீனிவாசன்,
  • குடிகார வில்லன்களாக மிளிர்ந்த ரகுவரன்,
  • ஹீரோவான பிறகும் புட்டிக்கு அந்தஸ்து வழங்கிய சத்யராஜ்,
  • தெரியாமல் குடித்துவிட்டு சேஷ்டை செய்யும் க்யூட் கதாநாயகியின் இலக்கணமான குஷ்பு
  • விக்கிக் கொண்டே ‘உன்னைக் கண் தேடுதே’ வரும் கணாளனே கண்கண்ட தெய்வம்
  • குடிகாரர் என்றாலே லுங்கி, மீசையுடன் மனைவியை இம்சிப்பவர் என்று பதிய வைத்த வண்ணக்கிளியின் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’
  • அயல்நாட்டுக்கு சென்றவர்கள் குடித்து சீரழிந்தவர்கள் என்று சித்தரித்த சிரஞ்சீவியின் ’47 நாட்கள்’

வசூல்ராஜா தாதா ஆக குடியை விட்டிருக்கிறார்; சிங்காரி சரக்கு நல்ல சரக்கு என்று குத்து போட்டிருக்கிறார்; சாகர சங்கமம் கிணற்று மேல் ஆட்டம் கண்டிருக்கிறார்; ‘இந்துருடு சந்துருடு‘ என்று ஹை கிளாஸ் ஏந்தியிருக்கிறார்; ‘விருமாண்டி’ என்று சி கிளாசும் அடித்திருக்கிறார்; சோகம் என்றால் குடிக்க வேண்டும் என்று ‘வாழ்வே மாயம்‘ ஆக்கியிருக்கிறார்; ‘உன்னால் முடியும் தம்பி‘ என்று சீர்திருத்தி இருக்கிறார்!

அந்த மாதிரி தசாவதாரக் கலைஞனைத் தடுக்கும் முயற்சியா (இது) இந்த வார கமல் கோட்டா பதிவு.

உதவிய பதிவு: இட்லி-வடை :: குடி குடியை கெடுக்கும்

பாஸ்டனில் தசாவதாரம்

ஜூன் ரெண்டாந்தேதி வருதாம்.

அதுவரை, வாலியின் இந்தப் பாடலை உல்டா செஞ்சுண்டிருங்க… நமச்சிவாய வாழ்க!

ஓம் நமோ நாராயணாய

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் அறியாது

அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது

ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது

இராஜலஷ்மி ராஜ நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேர் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா?

கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?

சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

‘Dasavatharam’ – Kamal’s plea & Other trivia

தொடர்பான செய்திகள், தகவல்கள்:

1. ‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’

2. சர்ச்சை சமாச்சாரப் பதிவு: கமலின் தசாவதாரம்: பிரச்சினை வளர்க்க யோசனைகள்: “கேள்வி நேரம்”

3. கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்

4. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தடியடி: கமலும் ஆஸ்கார் ரவியும் பதிலடி

5. டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு

6. தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா?

7. கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்

8. பாஸ்டனில் தசாவதாரம்

Dasavatharam Kamal kizhavi old lady kungumam Makeup

India Glitz handwritten copyrights lawsuit Dasavatharam Kamal

English IndiaGlitz handwriting copyright Violations legal Dhasavatharam Kamalahasan

  • Kamal has done the story, screenplay and dialogues. Kamal had written the dialogues for Mumbai Xpress and Virumandi in recent times.
  • The story does not straddle between centuries, but between millennia.
  • Kamal starts off as Rangaraja Nambi who gets under sea along with a Perumal idol. Immediately, the story jumps off 1000 years later, with Kamal being shown as a scientist in America.
  • One of the 10 roles the actor doing in Dasavatharam is based on popular pop singer Daler Mehendi.
  • Jayapradha is playing a prominent role in Kamal Haasan’s Dasavatharam.
  • Kamal had played ‘Nepoleon’ in a pivotal role in his Virumandi. Now in his Dasavatharam, he has cast him in the role of a king.
  • திரைப்படத்தில் சுனாமியும் இடம்பெறுகிறது.

நன்றி: இந்தியா க்ளிட்ஸ்