Tag Archives: Isai

Classical Carnatic Ragas in Tamil Film Music

யூ டியுப் தளத்தின் சிறப்பம்சமே, “உனக்கு இது பிடிக்கலாம்!” என்று தெரியாத எவரோ ஒருவர் – எனக்குத் தெரிந்த தலைப்பில் உரையாடுவதை –> உங்களின் ஓடையில் காண்பிப்பது.

அப்படி தென்பட்டவர் தமிழ்ச்செல்வன் பாரதி.

குரங்கிற்கு எப்படி வாழைப்பழம் விருப்பமோ இளையராஜாவின் பாடல்கள் அப்படி எனக்குப் பிடிக்கும். தமிழ்செல்வன் பாரதி.மாதிரி கர்னாடக சங்கீதம் அறிந்தவர்கள் அதை வேறொரு விதத்தில் ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அதாவது ஓவியங்களை எண்ணெய் ஓவியம், வண்ணக்கோல், செயற்கை வண்ணக் கூழ்மங்கள், நீர்வர்ணம், மை ஓவியம், பூச்சு ஓவியம் என்றெல்லாம் வகைப்படுத்துவது போல், இசையையும் ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருந்தால் இதை இந்த முறையில் தொகுத்திருக்கிறார்கள் என்று அறியலாம். ஏன் அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? எப்படி அந்தப் பூச்சு இந்தத் தருணத்திற்கு பொருந்துகிறது? இதுவரை எவரும் செய்யாத புதுமையை எவ்வாறு புகுத்தியிருக்கிறார்? ஏன் வெறுமனே சாஸ்திரீய முறைப்படி பாடுவது அலுப்பையும் ; அதையே ராஜாவின் எண்ணத்தில் உருவாகும் பாடல் — பிரவாகத்தையும் கொடுக்கிறது?

ஃபாரம் ஹப் (The Forum Hub) என்னும் தளத்தில் பேசியது… தமிழ் ஃபிலிம் மியூசிக், டி.எஃப்.எம் பேஜ் (இப்பொழுது newtfmpage) என்றெல்லாம் கதைத்தது… அங்கே நாற்பது பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் நூறு பதில்களும், பதிவுகளும் இருக்கும். இடையிடையே சில வைரங்கள் ஜ்வலிக்கும். தேடுவது கடினம். சட்டென்று புரியாத சதுஸ்ருதி தைவதம், அந்தர காந்தாரம், பிரமாண ஏகஸ்ருதி என்றெல்லாம் மிரட்டும். சல்லடை போட்டு சலித்து, அந்தப் பகிர்வுகளைக் கோர்வையாகத் தொகுத்து, ஒரேயொரு சினிமாப் பாடலையோ, ஒரு ராகத்தையோ, ஒரு விஷயத்தையோ பற்றி முழுமையாகக் கதை போல் சொல்ல எவராவது கிடைப்பாரா என்று ஏங்க வைத்தாலும் சோளப்பொரி கிடைத்தது.

திரள் சந்தைக்கான புகழ் பெற்ற முயற்சியாக சிக்கில் குருச்சரண் அதை பரவலாகப் பதிவாக்கி எல்லோருக்கும் கொண்டு சென்றார். அவரைப் போல் பலரும் ஏற்கனவே இது மாதிரி நிறைய முயற்சிகளும் எழுத்துகளும் பகிர்வுகளும் தந்திருந்தாலும், எல்லோரும் அறிந்த நபர் – எல்லோருக்குமான பதிவாக ஆக்கியதில் சிக்கில் குருச்சரணுக்கு முக்கிய இடம் உண்டு. ஜனரஞ்சகமாக இருக்கும். சுவாரசியமாக இருக்கும். நன்றாக எடிட் செய்து தொகுக்கப்பட்டிருக்கும். ரொம்ப தொழில்நுட்ப சங்கதிகள் சொல்லி அலுப்பு தட்டாமல், அதே சமயம் டெக்னிகலாக வேண்டும் என்பவர்களுக்கு நிறைய இடம் இருக்கும்.

அவர் வழியில் தமிழ்ச்செல்வன் பாரதி முக்கியமானவர். சிக்கிலார் போல் மேளகர்த்தா ராகம் என்று வகைப்பாடுகளைச் சொன்னாலும், மெட்டுக்கு ஏற்ற வார்த்தைகள், அந்தப் பாடலின் கூட்டிசையில் வீணையும் வயலினும் எவ்வாறு முக்கியமாகிறது என்பதில் மேற்கத்திய சங்கீத நுட்பங்கள், என்று உணர்த்துகிறார். நிரோஷா தாங்க எனக்குத் தெரியும் என்பவருக்கு சரிகமபதநி என்பதில் கடைசியில் வரும் நி என்னும் நிஷாதம் எவ்வாறு இசைஞானியின் பாடல்களில் கையாளப்பட்டிருக்கிறது என்கிறார். எல்லாவற்றையும் காலை நடை, பக்கத்தில் உறங்கும் செல்லப்பிராணிகள் என வித்தியாசமான, நேரடியான, பாசங்கற்ற விதத்தில் தயார் செய்து பரிமாறுகிறார்.

இந்த மாதிரி விஷயமெல்லாம் கேட்க குருகுலத்தில் காலந்தோறும் பணிவிடை செய்யவேண்டும். குருவிற்கு எப்போது உத்வேகம் வருகிறது என்று காத்திருக்க வேண்டும். ஒட்டுக் கேட்க வேண்டும். கேட்டதை இன்னொருவரிடம் சொன்னால், அந்த சீடன் நம்மை விட பிராபல்யம் ஆகி விடுவான் என்று விரித்துரைத்து, சந்தேக நிவர்த்தி செய்து, தெளிவாக்கிக் கொள்ளக் கூட முடியாத சூழலில் இருந்து சுதந்திரமாக எல்லோருக்கும் எல்லாவற்றையும் அள்ளித் தரும் அளவில்லா தகவல் கிடைக்கும் காலத்தில் வாழும் நாம் – கொடுத்து வைத்தவர்கள்.

அதற்கு முன்பே இவற்றையெல்லாம் தமிழிசையில் பாமரனுக்கும் கொண்டு சென்ற பாவலர் ராஜா ஆளுமையைப் புரிந்தவர்கள் பாக்கியசாலிகள்.

ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோணப்பாலை

நாதஸ்வரம் வாசிக்கக்கூடாதா?

புதுமைப்பித்தன் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் வீட்டில் ஒரு சமயம் தவில் நாதஸ்வரம் முதலானவை இருந்தன. அதைப் பார்த்துவிட்டு இவை என்ன என்று கேட்டபோது நாதஸ்வரம் வாசிக்கக் பழகிக் கொள்கிறேன் என்று கூறி, ராஜரத்தினம் பிள்ளை கட்டுரை எழுதும் போது நான் ஏன் நாதஸ்வரம் வாசிக்கக்கூடாது என்று கேட்டு விட்டுச் சிரித்தார்.

முல்லை பி எல் முத்தையா எழுதிய புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள் நூலில் இருந்து

லலிதா ராம் எழுதிய கட்டுரை எந்த விதம் என்பதை வாசித்து (?!) விட்டு வாருங்கள்

கருத்தில் முதல் பின்னூட்டமாக சுட்டியை அடையலாம்

திமிரி, பாரி என நாகசுரத்தில் இருவகை உண்டு. பாரி என்னும் கருவியே இன்று பெரு வழக்கத்தில் உள்ளது. இது ஆச்சா மரத்தினால் கடைந்து செய்யப்படும். இதில் செருகப்படும் சீவாளி வழி காற்று ஊதப்படும். கருவியிலுள்ள ஏழு துளைகளில் விரல்களால் இசை பெருக்கப்படும். நாகசுர இசைக்கு ஆதார சுருதி வழங்கும் கருவி ‘ஒத்து’ எனப்படும்.

Achamundu Achamundu: 10 Questions

ஜெயமோகன் வந்துபோன களேபரத்தில் இட்லி-வடை கேள்வி + குறுவட்டு வாய்ப்பு நழுவிவிட்டது.

அதனால் என்ன 🙂

1. Achamundu Achamundu சென்சார் ஆகிவிட்டதா? அடல்ட்ஸ் ஒன்லியா? அல்லது குழந்தைகளுடன் பார்க்கும் ‘ஏ’ படமா? (வேட்டையாடு… விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற தமிழ் சினிமாக்கள், யு/ஏ, யு என்று வந்தாலும், போதை, வன்முறை, பதின்மருக்கான கதைக்களம் கொண்டிருக்கும். அந்த மாதிரி பெற்றோர் நெளியும் காட்சிகள் இருந்தால் குழந்தையை வீட்டில் விடுவதற்காக கேட்டு வச்சுக்கலாமேன்னு…)

2. பாஸ்டனில் கூட இத்துப் போன (நாடக சபா) தியேட்டரில்தான் பெரும்பாலும் ரிலீஸ் செய்கிறார்கள். இந்த லட்சணத்தில் சென்னை தவிர்த்த தமிழக/ஆந்திர கிராமங்களுக்கு ரெட், 4கே துல்லியம் எல்லாம் எவ்வளவு ரீச் ஆகும்? தேவையா? ஆய பயன் என்ன?

3. வில்லன் என்பவர் தமிழ் சினிமாவின் தாத்பர்யமான கெட்ட கதாபாத்திரத்தின் குறியீடு மட்டுமா? அல்லது எவ்வாறு அப்படி ஆனார், அவருக்குள்ள நியாயங்கள் என்று பன்முகப் பரிணாமம் உண்டா?

4. இந்தப் படத்திற்கு exotic factor தவிர்த்து அமெரிக்கா எதற்கு? இந்தியாவிலேயே கதைக்களன் + பின்புலம் சரிப்படுமா? தேசிக்களின் அகச்சிக்கல்களின் மீது படம் வெளிச்சம் பாய்ச்சுகிறதா?

5. உங்களின் உதவி இயக்குநர்கள் குறித்து? எவ்வாறு திரைக்கதையில் உதவினார்கள்? எப்படி டீம் உருவானது?

6. வசனம் எழுத, கதை தோன்ற யார் inspiration? எந்த நொடியில், எதைப் பார்த்தவுடன் கரு உதித்தது? ஏதாவது புத்தகம்… சமகால ஹாலிவுட்/உலக சினிமா போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டதா?

7. நியு யார்க்கில் சினிமா கற்றுக் கொண்டதற்கும், தமிழ் சினிமாவிற்கும் என்ன வேறுபாடு? எங்கே ஒற்றுமை? ஆறு வித்தியாசம் ப்ளீஸ்…

8. படத்தின் பட்ஜெட், எத்தனை ப்ரின்ட், எங்கெல்லாம் வெளியீடு போன்ற தகவல்கள் தூவ முடியுமா?

9. இதுவோ புதுமுகங்களின் காலம்; கல்லூரி, சுப்ரமணியபுரம்… ஃப்ரெஷ் முகம் போட்டால் இந்த கேரக்டருக்கு பாந்தம் கூடியிருக்கும் என்று எண்ணியதுண்டா?

10. கேபி, பாரதிராஜா போல் எல்லா இயக்குநருமே மிகச் சிறந்த நடிகர்கள்.நீங்க எப்போ ஹீரோ ஆகப் போறீங்க? தருண் கோபி, பேரரசு, சேரன், சுந்தர் சி வரிசையில் அடுத்த கதாநயகனாக ஆவீர்களா?

11. Finally, can you share some ஜிலு ஜிலு photos of அச்சமுண்டு… அச்சமுண்டு!, Prasanna-Sneha together, making of AA & Sneha alone?

Achamundu Achamundu: Knowns & Unknowns

Achamundu-Arun-Prasanna-Sneha-Movies-Films-Pictures-Reviews-Images-clips-018
1. Filmed in NJ and post-production in LA. Red one camera + Live Sound are some notable technical details.

2. Prasanna & Sneha doing father & mother of 6 year old daughter for first time.

3. Movie is about Child molestation, villain (John Shea) abducting their daughter.

4. Villain John Shea dialogues are only in English throughout the movie. (no dubbing)

5. All songs are in background. No duets.

6. Hollywood style romance scenes (but no lip to lip 😦

7. Being a serious movie, no separate comedy.

8. Movie highlights lifestyle of an average Indian in America.

9. Movie has bagged “Garden State Home Grown” award for filming it entirely in NJ.

10. Will be the first Tamil movie to have subtitles in 18+ languages.