Tag Archives: Dasavatharam

தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா?

எட்டுக்குடி முருகன் தலம். இது பத்து எட்டாக்குடியர்களைப் பற்றிப் பேசும் பதிவு. முதலில் செய்தி:

Ramadoss whines against wine this time – Politics/Nation – News – The Economic Times: “After rapping Shah Rukh Khan and Saif Ali Khan for smoking on screen and endorsing junk food, respectively, Union health minister Anbumani Ramadoss has spoken out against the Indian Premier League (IPL) for allegedly promoting liquor through surrogate advertising. Asked about surrogate advertising in IPL (liquor baron Vijay Mallya’s team is called ‘Royal Challengers’ named after a whiskey brand owned by his UB Group) the minister said he would take the issue up with the Information and Broadcasting (I&B) ministry.”

இதைத் தொடர்ந்து ரீடிஃப் ஹிந்தி சினிமாவில் நினைவில் நின்ற பத்து குடிக்காட்சிகளைக் கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நினைவுக்கு வந்தவை:

1. ‘உயர்ந்த உள்ளம்‘ – குடிகார கமலை, வீட்டு சிப்பந்தி அம்பிகா சீர்திருத்துவார். (அல்லது ‘நானும் ஒரு தொழிலாளி‘யா?)

2. ‘பாட்சா‘ – ‘எட்டு எட்டா மனுசன் வாழ்வப் பிரிச்சுக்கோ பாடலின் முன் காக்டெயில் அடிக்கும் ரஜினி

3. ‘மறுபடியும்‘ – ரேவதி செல்லும் விருந்தில் முன்னாள் கணவனைப் பார்த்து கோபமுற்று மதுவருந்துவது

4. ‘சிந்து பைரவி‘ – சிந்து மீண்டும் ஜேகேபி வீட்டிற்கு வந்து அவருக்கு ஊற்றிக் கொடுக்கும் காட்சி.

5. ‘நவராத்திரி‘ – சிவாஜி: ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்’

6. ‘ஒளிவிளக்கு‘ – ம.கோ.ரா.: ‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா; இல்லை நீதான் ஒரு மிருகம்’

7. ‘மாமன் மகள்‘ – கவுண்டமணி & சத்யராஜ் மணிவண்ணனுடன் இளநீரில் கலந்தடிக்கும் க்ளாசிக்

8. ‘ஜெய்ஹிந்த்‘ – ‘போதையேறிப் போச்சு; புத்தி மாறிப் போச்சு’

9. ‘திருடா திருடா‘ – பணம் கடத்தப்பட்டு அறிந்தவுடன் சந்தோஷத்தின் உச்சத்தில் மேஜையில் உள்ள உயர்ரக பானங்களை உடைத்தெறியும் விக்ரம் (சலீம் கௌஸ்)

  • கார்த்திக் நண்பர்களுடன் தண்ணியடிப்பது,
  • ஏற்றிக்கொண்ட விஜயகாந்த் நாயகி வீட்டுக்கு சென்று வீராப்பு பேசுவது,
  • நவீன சுந்தர் சி,
  • நிரந்தர கோப்பையுடன் மேஜர் சுந்தர்ராஜன்,
  • சென்னை சல்பேட்டாவுடன் சுருளிராஜன்,
  • டிக்.. டிக்… டிக் என்று காலையில் பார் அருளும் தேங்காய் ஸ்ரீனிவாசன்,
  • குடிகார வில்லன்களாக மிளிர்ந்த ரகுவரன்,
  • ஹீரோவான பிறகும் புட்டிக்கு அந்தஸ்து வழங்கிய சத்யராஜ்,
  • தெரியாமல் குடித்துவிட்டு சேஷ்டை செய்யும் க்யூட் கதாநாயகியின் இலக்கணமான குஷ்பு
  • விக்கிக் கொண்டே ‘உன்னைக் கண் தேடுதே’ வரும் கணாளனே கண்கண்ட தெய்வம்
  • குடிகாரர் என்றாலே லுங்கி, மீசையுடன் மனைவியை இம்சிப்பவர் என்று பதிய வைத்த வண்ணக்கிளியின் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’
  • அயல்நாட்டுக்கு சென்றவர்கள் குடித்து சீரழிந்தவர்கள் என்று சித்தரித்த சிரஞ்சீவியின் ’47 நாட்கள்’

வசூல்ராஜா தாதா ஆக குடியை விட்டிருக்கிறார்; சிங்காரி சரக்கு நல்ல சரக்கு என்று குத்து போட்டிருக்கிறார்; சாகர சங்கமம் கிணற்று மேல் ஆட்டம் கண்டிருக்கிறார்; ‘இந்துருடு சந்துருடு‘ என்று ஹை கிளாஸ் ஏந்தியிருக்கிறார்; ‘விருமாண்டி’ என்று சி கிளாசும் அடித்திருக்கிறார்; சோகம் என்றால் குடிக்க வேண்டும் என்று ‘வாழ்வே மாயம்‘ ஆக்கியிருக்கிறார்; ‘உன்னால் முடியும் தம்பி‘ என்று சீர்திருத்தி இருக்கிறார்!

அந்த மாதிரி தசாவதாரக் கலைஞனைத் தடுக்கும் முயற்சியா (இது) இந்த வார கமல் கோட்டா பதிவு.

உதவிய பதிவு: இட்லி-வடை :: குடி குடியை கெடுக்கும்

பாஸ்டனில் தசாவதாரம்

ஜூன் ரெண்டாந்தேதி வருதாம்.

அதுவரை, வாலியின் இந்தப் பாடலை உல்டா செஞ்சுண்டிருங்க… நமச்சிவாய வாழ்க!

ஓம் நமோ நாராயணாய

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் அறியாது

அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது

ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது

இராஜலஷ்மி ராஜ நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேர் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா?

கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?

சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

Kamal’s Dasavatharam – Reviews: Audio Release, Music, Songs

கூகிள் முழுக்க தசாவதாரத் தேடல். அதற்கு தீனி போடும் விதமாக, வருகையாளரைப் பெருக்கித்தள்ளி வெற்றிடத்துக்கு தள்ளும் நோக்கிலான பதிவு.

1.உலகநாயகன்… (கம் டான்ஸ் வித்மி)
பாடல்: வைரமுத்து, பாடியவர்: வினித்

Ulagha Nayagan- Dasavatharam Lyrics « ?.i.ili.i….Dimsy’s Lyrics Database i.ili.i.?

2. கல்லை மட்டும் கண்டால்
பாடல்: வாலி, பாடியவர்: ஹரிஹரன் மற்றும் குழு

3. முகுந்தா… முகுந்தா…
பாடல்: வாலி, பாடியவர்: கமல்ஹாசன், சாதனா சர்க்கம்

Mukhundha Mukhundha- Dasavatharam Lyrics « ?.i.ili.i….Dimsy’s Lyrics Database i.ili.i.?

4. ஓ..ஓ… சனம்…
பாடல்: வைரமுத்து, பாடியவர்கள்: கமல்ஹாசன், மகாலட்சுமி ஐயர்

5. கா… கருப்பனுக்கும்….
பாடல்: வைரமுத்து, பாடியவர்: ஷாலினி சிங்

6. ஓ…ஓ… சனம் (ரீமிக்ஸ்)


பாடல் வெளியீட்டு விழா
1. தசாவதாரம் ஒலித்தகடு வெளியீடு – Welcome To Your Senses – Keerthivasan Rajamani

2. “சாத்தான்”குளத்து வேதம்: “தசாவதாரம் – இசை வெளியீடு – என் பார்வையில்”

3. IdlyVadai – இட்லிவடை: `தசாவதாரம்’ விழா பேச்சுக்கள்

4. கடற்புறத்தான் கருத்துக்கள்: : “பண்பால் கவர்ந்த ஜாக்கிசான்!”

Download:

1. தமிழ் மசாலா: “தசாவதாரம் பாடல்கள் MP3 வடிவில் தரவிறக்க… தமிழ் மசாலா சிறப்பு பதிவு”

2. தமிழ் மசாலா: “தசாவதாரம் பாடல்கள்- வீடியோ துணுக்குகள்”

Reviews, Audio Critiques:

1. Yours Musically: Dasavathaaram Soundtrack

2. kirukkal .com: dasavathaaram_songs: “தசாவதாரம் – பாடல்கள்”

3. மனசாட்சி: “ஏமாற்றமளிக்கும் தசாவதாரம் பாடல்கள் – விமர்சனம்”

4. மின்மினி: தசாவதாரம் பாடல் எப்படியிருக்கு?

5. Dhoda!: தசாவதாரம் – Music Review

6. DesiReviews: DASHAVTAR [DASAVATHARAM ] (2008) MUSIC REVIEW

7. The stupid’s Prism » Dasavatharam Music – First Impressions

வலைப்பதிவு:

1. கமலஹாசனின் தசாவதாரம்

2. ப்ளாக்ஸ்பாட் அவதாரம்


செய்தி:

1. நையாண்டி தர்பார்: தசாவதாரம் ‘புக்கிங்’ ஆரம்பம்

2. கமல் | Tag | News | Articles


பேச்சு, அரட்டை, விவாதம்: மன்ற மையம்

முன்னோட்டம்:

இசை, பாடல்கள், எம்பி3

1. தசாவதாரம் ஆடியோ சிடி பாடல்கள்

2. IdlyVadai – இட்லிவடை: தசாவதாரம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்


பேட்டி:

1. lazygeek.net | For 25th, I pray !!

2. தமிழ் மசாலா: தசாவதாரம் பற்றி கமல் ,குழுவினர் பேட்டி மற்றும் படப்பிடிப்பு காட்சிகள்

3. நான் அவனில்லை!: “தசாவதாரம் – சில பேட்டிகள்”

விநியோகஸ்தர் : பிரமிட் சாய்மீரா


புகைப்படம்: lazygeek.net | Kamalavatharam

உல்டா பு(ரு)ல்டா: கற்பனை என்றாலும்!

அலசல்: கோகுல்: தசாவதாரம் – இன்னொரு ஆளவந்தான்


கேள்வி நேரம்:

1. ‘சிவாஜி‘யை விட வியாபாரத்தில் மிஞ்சி விட்டால், தமிழ் சினிமா அடுத்த மைல்கல்/கட்டத்தை தொட்டதாகக் கொள்ளலாமா? (இவர் தொட்டிருக்கிறார்: உருப்படாதது: [திரைப்படம்] மீண்டும் மருதநாயகம் [தசாவதாரம் அல்ல])

2. வைணவத்தில் பரிணாம வளர்ச்சியின் திருவிளையாடல்களான பெருமாளின் பத்து அவதாரங்களும் ஓரங்கட்டப்படுகிறதா? (இவர் தொட்டிருக்கிறார்: கடற்புறத்தான் கருத்துக்கள்: நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி’ யும் – திசைகள் அ.வெற்றிவேல்)

3. அஜீத் சிட்டிசனில் எத்தனை வேடம் தரித்தார்?

4. தசாவதாரத்தைப் பார்த்து சுசி கணேசனின் கந்தசாமியில் இன்னொரு முகப்பூச்சு கூட்டப்படுமா?

5. துணை நடிகர்கள் எல்லாரும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ பாடல் காட்சியில் பற்பல பிரபு தேவாக்கள் விதவிதமாக நடனமாடுவார்கள். அது போல் தொலைக்காட்சித் தொடரில் இளவரசு, பாஸ்கர் போன்றோர் தொலைந்து போனதால், தற்செயலாக தசாவதாரம் எடுக்கிறாரா கமல்?

6. இதெல்லாம் என்ன பெரிய விஷயம்! அந்தக் கால பாடல் காட்சிகளில் ஒரே ஃப்ரேமில் இருபது தடவை கமல் முகம் வந்திருக்கிறதே… அதுவும் சாதனைதானே?

7. Our Thoughts: தசாவதாரம் – இன்னொரு ஆளவந்தான்் – ஒரு அலசல்

கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்துகொண்டே இருக்கிறது. காதில்விழும் சொல்லாக இருந்த நிலை மாறிக் கண்ணில்படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்துகொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகரப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடுகூடிய முகத்தையும் கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி பத்துத் தடவையாவது பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

என்று அர்ச்சிக்கும் அ ராமசாமி தொடங்கி தமிப்பதிவர்கள் வரை ‘மிகை நாடும் கலை’ப் பார்வை தர இன்னொரு வாய்ப்பு தந்திடுகிறாரா?

8. கமல், தசாவதாரம், ஹிந்தி ஆஸ்கர் (ரவிச்சந்திரன் அல்ல) விருது – கேள்வி தொடுக்கவும்

9. முத்தம், பாமரர், சி சென்டர், வெற்றி – வழக்கமான சர்ச்சை வரவைக்கவும்

10. ஜெமினி கணேசன் & கே ஆர் விஜயா நடித்து கேயெஸ் கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய தசாவதாரம் – சிறுகுறிப்பு வரைக.


முந்தைய பதிவுகள்:
1. ‘Dasavatharam’ – Kamal’s plea & Other trivia

2. ‘தசாவதாரம்’ அசின் புத்தம்புதிய உலக சாதனை!!!


முந்தைய செய்திகள்:

1. Did Kamal & Murali cheat Assistant Director Senthilkumar: Dasavatharam: “நடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு”

2. ‘Dasavatharam movie story is stolen from me’ – Su Senthilkumar gets stay order: “கமல்ஹாசன் நடிக்கும் ‘தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு”


படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை. ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே ‘தசாவதாரம்.’ இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கமலின் அடி மனதில் தேங்கியிருந்த கதை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் துணிச்சலால் இன்று திரைவடிவம் பெற்று வருகிறது. படத்தின் ஏகதேச பட்ஜெட் முப்பத்தைந்து கோடிகள்!

படத்தின் பாதி பட்ஜெட்டை பிரமாண்ட அரங்குகள் எடுத்துக் கொள்கின்றன. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மண்டலத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். முக்கியமாக பொன் கூரைவேய்ந்த சிதம்பரம் கோவில் மற்றும் கோவில் வளாகம். நூற்றுக்கணக்கில் சோழ குடிமக்கள், குதிரைகள், குலோத்துங்க சோழனின் பட்டத்து யானை என ஆயிரக்கணக்கில் துணை நடிகர்களை வைத்து சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இதில் குலோத்துங்க சோழனாக நெப்போலியன் நடித்திருக்கிறார்.

சைவ சமயத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் சயன நிலையில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசுவதும், அந்தச் சிலையை அணைத்தபடி ரங்கராஜ நம்பி கடலுக்குள் மூழ்குவதும் படமாக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சிலையும், நம்பியும் மூழ்கும் காட்சியை ஸ்பெஷல் கேமராக்கள் உதவியுடன் கேமராமேன் ரவி வர்மன் படமாக்கினார். இந்தக் காட்சியில் ரங்கராஜ நம்பியாக உடலில் திருமண் அணிந்து நடித்தார் கமல்ஹாசன். படத்தில் வரும் பத்து கெட்டப்புகளில் ஒன்று இந்த ரங்கராஜ நம்பி.

முன்னதாக, ரங்கராஜ நம்பியின் முதுகில் இரும்பு கொக்கிகளை சதையை துளைத்தபடி பிணைத்து பறவை காவடி போல் இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. ரங்கராஜன் நம்பியாக நடித்த கமல் சொந்தக் குரலில்,

‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

சைவம் என்று பார்த்தால தெய்வம் கிடையாது

தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது’

என கொக்கியில் தொங்கியபடி பாடிச் சென்றார். வாலி எழுதிய இந்தப் பாடல் மற்றும் காட்சி வரலாற்று முக்கியத்துவமுடையது.

இன்று சைவர்களும், வைணவர்களும் இந்து என்ற அடைப்புக்குறிக்குள் ஒற்றுமையாக கழிந்தாலும் 12-ம் நூற்றாண்டில் சைவர்களும் வைணவர்களும் சிண்டை பிடித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சிவன் பெரிதா பெருமாள் வலிதா என்பது அன்று ஒரு தீராச் சண்டை. பெரும் பகை. சுடுகாட்டில் திரிபவனுக்கு கோவில் எதற்கு என சிவனை வைணவர்களும் கடலில் கண்ணயர்ந்து கிடப்பவனுக்கு பூஜையும் வைவேதிகமும் எதற்கு என விஷ்ணுவை சைவர்களும நடுவீதியில் நாறடித்துக் கொண்டிருந்தனர். அதன் ஒரு சிறு துணுக்கே கமல், நெப்போலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.

இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு வரும்போது காட்சிகளிலும் கமலின் கெட்டப்பிலும் 180 டிகிரி மாற்றம். இப்போது கமல் ஒரு விஞ்ஞானி. ஏறக்குறைய வெளிநாட்டு மனிதனின் சாயல். இந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கியிருக்கிறார்கள். எளிதில் அனுமதி கிடைக்காத அமெரிக்காவின் மிகப் பெரிய ஆராய்ச்சி கூடத்தை இதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி கூடத்தின் நடுவில் கம்ப்யூட்டர்கள் மிகப்பெரிய எந்திரங்களை இயக்குவது போன்று செயற்கையான அரங்கு ஒன்றை அமைத்து, அது விபத்தில் அழிவது போன்று எடுத்துள்ளார்கள். இந்த அரங்கை வடிவமைத்தவர் கலை இயக்குனர் பிரபாகரன். இவரைத் தவிர சமீர்சந்தாவும் இப்படத்திற்காக பல பிரமாண்ட அரங்குகளை அமைத்துள்ளார்.

கமலின் இன்னோரு முக்கியமான வேடம், தற்காப்புக் கலை நிபுணர். மலேசிய பாரம்பரிய தற்காப்புக் கலைஞர் வேடத்தில் கமல் எதிரிகளுடன் மோதும் காட்சியை மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புகழ் பெற்ற இரவு விடுதி ஒன்றில் பாடல்காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. மல்லிகா ஷெராவத் இருபது அமெரிக்க அழகிகளுடன் ஆடுவதை கமல் பார்ப்பதாக காட்சி. பிருந்தா இந்த நடனத்தை அமைத்தார்.

படத்தின் முக்கியமான அம்சம் சண்டைக்காட்சிகள். கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா மரணமடைந்ததால் அவர் இடத்தை பிடித்திருக்கிறார்கள் தியாகராஜனும், கனல் கண்ணனும். இவர்கள் இருவரும் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு சண்டை அமைத்தவர்கள். அமெரிக்காவில் எடுத்த சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளை எடுத்தவர்கள் Joop Katana மற்றும் Matos. இருவரும் ஹாலிவுட் சண்டைக் கலைஞர்கள். மலேசியாவில் எடுக்கப்பட்ட பாரம்பரிய Akido சண்டைக்காட்சியை எடுத்தவர் Sonnylake.

படத்தில் ஜிம்மி ஜிப், ஸ்டெடிகேம், பான்தர் கிரேன் என அதிநவீன கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். 747 ஜெட் விமானத்திற்குள் கமல் ஊடுருவும் காட்சியை இதுவரை இந்திய சினிமா காணாத வகையில் எடுத்துள்ளனர்.

கமலுடன் நெப்போலியன், அசின், மல்லிகா ஷெராவத், சந்தான பாரதி, ஜெயப்ரதா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசன். இயக்கம் கே.எஸ். ரவிக்குமார்.

படத்தில் பணிபுரியும் அனைவரும் இதனை மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகின்றனர். “எனக்கு இந்தப்படம் தனியா ஒரு இன்டிட்யூட்ல படிக்கிற அனுபவத்தை தருது. ஒவ்வோரு காட்சியை எடுக்கும்போதும், ஒத்திகை, டேக், லேப்ல டெவலப் பண்றப்புறம் டெலிசினி எடிட்டிங்கில் இப்படி பத்து முறை பார்த்தாலும் பதினோராவது முறை பார்க்கும் போதும் சுவாரஸியமாகவும் பிரமாதமாகவும் இருக்கு” என சிலாகிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.

“எனது சினிமா வாழ்க்கையை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் படம்” என பெருமிதப்படுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் கணிப்பு வேறு மாதிரி. “கண்டிப்பா தமிழ் சினிமா சரித்திரத்தில் இந்தப் படத்துக்கு தனி இடம் உண்டு. படத்தோட கலெக்ஷ்னும் அப்பிடி இருக்கும்னு நம்பறேன்.” நாம் மேலே பார்த்தது கமலின் மூன்று வேடங்களை.

கெட்டப்புகள் என வரும்போது கமலின் உழைப்பை சொல்லாமல் இருக்க முடியாது. சிங்கிள் கெட்டப்புக்கே அலும்பல் செய்பவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக பத்து விதவிதமான மனிதர்களாக மாறியிருக்கிறார் கமல். ஒவ்வொரு கெட்டப்பிற்கும் மேக்கப்போட ஆறுமணி நேரமாகிறது. அதிகாலை மூன்று மணிக்கே மேக்கப்பிற்கு முகத்தை கொடுக்க வேண்டும். ஆறுமணி நேரம் பொறுமையாக இருந்தால் படப்பிடிப்புக்கு தயாராகலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். மூன்று நான்கு மணி நேரமே மேக்கப் தாக்குப்பிடிக்கும் என்பதால் அதற்குள் அந்தநாள் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். மேக்கப் போடும் நேரம், மேக்கப்புடன் நடிக்கும் நேரம், மேக்கப்பை கலைக்கும் நேரம் என ஏறக்குறைய ஒரு நாளின் பதினைந்து மணி நேரம் தாடை அசைய எதையும் சாப்பிட முடியாது. வெறும் திரவ உணவுகள் மட்டுமே சாப்பாடு. இப்படி பத்து கெட்டப்புகள் போடவேண்டும்.

கமலின் கெட்டப்புகள் எதையும் பிறரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இதற்கு மோஷர், அனில் பெம்ரிகர் இருவருக்கும்தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள். மோஷர் ஒப்பனை கலைஞர். பெம்ரிகர் சிகை அலங்கார நிபுணர்.


“கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’’


_ ஹரிஹரனின் கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறது தெறித்து விழும் வாலியின் தத்துவார்த்தமான வரிகள்.

இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா. இந்தப் பாடல் காட்சியை படுபிரமாண்டமாக அமைத்திருகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள். அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது. ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!) கதற… கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது.

உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக் கடலில் தூக்கி வீசப்படுகிறார். உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால், சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட… அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்.

‘முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா ‘வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா’

பாடலை நம்மூர் ஸ்டைலில் ரொம்ப சாஸ்திரியமாக முயற்சி செய்திருக்கிறார் வட இந்திய ஹிமேஷ். காப்பி ராக சாயலில் அமைந்துள்ள ‘முகுந்தாவில்’ அனாவசிய வாத்திய இரைச்சல் இல்லை. வீணை, மிருதங்கம், கடம் ஆனந்தமாய் ஒலிக்கிறது. சாதனா சர்கத்தின் தொண்டையில் நிரந்தரமாக தேன் தடவியிருக்கிறதோ என்னமோ, அப்படியரு குழைவு, இளமை!

சொல்லப்போனால் தசாவதாரத்தின் ஐந்து பாடல்களில் இதில் மட்டுமே கர்நாடக சங்கீதத்தை கேட்க முடிகிறது.

மல்லிகா ஷெராவத்தின் துள்ளலான ஆட்டத்திற்கு ராப் ஸ்டைலில் விளையாடியிருப்பவர் கமலின் மகள் ஸ்ருதி. பல்லவியை ஆங்கிலத்தில் ஆரம்பித்து அனுபல்லவியின் போது தமிழுக்கு வருகிறார். வாத்திய இரைச்சல் சற்று அதிகம் என்றாலும் மேற்கத்திய இசை ரசிகர்களை தோளைக் குலுக்கி, குதிகாலைத் தூக்கி ஆடவைக்கலாம். முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட அட்டகாசம்!

வழக்கமாக கமல் பாடும் போது வாயில் எதையோ அடக்கிக் கொண்டு பாடுவது போல தெரியும். தசாவதாரத்தில் அவர் பாடும் டூயட் ‘ஓ.. ஓ சனம்’ பெட்டர். முழுவதும் மேடையில் பாடுவது போன்ற காட்சி. இடை யிடையே ‘உஸ் உஸ்’ என்று சீறும் அலை ஓசை வித்தியாசமானது. பாட்டின் பல இடங்களில் கிதார் ரகளை செய்கிறது!

‘‘உடல் பூமிக்கு போகட்டும்

இசை பூமியை ஆளட்டும்’’

‘‘கடவுளும் கந்த சாமியும்

பேசிக் கொள்ளும் மொழி இசை’’

‘‘வீழ்வது யாராயினும்

வாழ்வது நாடாகட்டும்’’

போன்ற வைரமுத்தின் நயமான வரிகள் பாட்டு நெடுகிலும் உண்டு.

படத்தின் க்ளைமாக்ஸில் எல்லா கமல்களும் அணிவகுக்கும் போது ஆர்ப்பாட்டமாக வருவது:

‘‘உலக நாயகனே… கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே!’’

ராப், ஹிந்துஸ்தானி எல்லாவற்றையும் அழகாக கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். கமல் ரசிகர்கள் திரைக்கு முன்பு ஓடிவந்து நாக்கை மடக்கி வெறியாட்டம் போட வைக்கிற அதிரும் பீட்! அந்த ‘கிடதங் கிடதங்’ பின்னணி அருமை! கமல் ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே ‘நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன்’ என்று வைரமுத்துவின் கெத்தான வரிகள் வேறு! கேட்கவா வேண்டும்?

ஹிமேஷ் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிறபோது சற்று ரஹ்மானை நினைவுபடுத்தினாலும் தமிழுக்கு அந்த பீட்களும், அலறும் வயலின்களும், வேகமும் புதியது! மேற்கத்திய வாடை சற்று தூக்கல்! நம்மூர் கர்நாடிக் மியூஸிக்கை ஊறுகாயைப் போல தொட்டுக் கொண்டு விட்டு விட்டாரே என்ற ஏக்கமும் வராமல் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கல்லாவைப் பார்ப்பாரா, கர்நாடிக்கைப் பார்ப்பாரா?.

_ வி. சந்திரசேகரன்

நன்றி : குமுதம்

‘Dasavatharam’ – Kamal’s plea & Other trivia

தொடர்பான செய்திகள், தகவல்கள்:

1. ‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’

2. சர்ச்சை சமாச்சாரப் பதிவு: கமலின் தசாவதாரம்: பிரச்சினை வளர்க்க யோசனைகள்: “கேள்வி நேரம்”

3. கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்

4. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தடியடி: கமலும் ஆஸ்கார் ரவியும் பதிலடி

5. டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு

6. தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா?

7. கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்

8. பாஸ்டனில் தசாவதாரம்

Dasavatharam Kamal kizhavi old lady kungumam Makeup

India Glitz handwritten copyrights lawsuit Dasavatharam Kamal

English IndiaGlitz handwriting copyright Violations legal Dhasavatharam Kamalahasan

  • Kamal has done the story, screenplay and dialogues. Kamal had written the dialogues for Mumbai Xpress and Virumandi in recent times.
  • The story does not straddle between centuries, but between millennia.
  • Kamal starts off as Rangaraja Nambi who gets under sea along with a Perumal idol. Immediately, the story jumps off 1000 years later, with Kamal being shown as a scientist in America.
  • One of the 10 roles the actor doing in Dasavatharam is based on popular pop singer Daler Mehendi.
  • Jayapradha is playing a prominent role in Kamal Haasan’s Dasavatharam.
  • Kamal had played ‘Nepoleon’ in a pivotal role in his Virumandi. Now in his Dasavatharam, he has cast him in the role of a king.
  • திரைப்படத்தில் சுனாமியும் இடம்பெறுகிறது.

நன்றி: இந்தியா க்ளிட்ஸ்