தேவதர்ஷினி & Erinn Hayes
முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு
தென்னக பிலிம்பேர் விருதில் ஜெயப்ரதா காட்சியளித்தார். இந்த வருட ஆரம்பத்தில் புருஷன் போனி கபூர் சமேத ஸ்ரீதேவி தனி ஆவர்த்தனமே ஆடியிருந்தார். அது ஹிந்தி ஃப்லிம்ஃபேர்.
ஆபிதின், சாரு நிவேதிதா, நாகூர் ரூமி எல்லோரும் கலைப்பயணத்தை ஒருங்கேத் துவக்கியவர்கள்.
கஜோலும் ஷில்பா ஷெட்டியும் ஒரே படத்தில் ‘பாசிகர்’ ஆனார்கள்.
இந்த மாதிரி ஒன்றாகத் தோன்றி திசை மாறியவர்களை Knolஇல் துட்டாக ஆக்க எண்ணம்.
பிள்ளையார் சுழித்தேன்.
சரிப்படாமல் போக, ‘உன்னைத்தானே தஞ்சமென்று’ ராதிகா, ‘சங்கீத ஸ்வரங்கள்’ பானுப்ரியா, ‘அதிசய ராகம்’ ஸ்ரீவித்யா, ‘கீழ்வானம் சிவக்கும்’ மேனகா, ‘விழிகள் மேடையாம்’ பூர்ணிமா ஜெயராம், ‘கண்ணின் மணியே’ சுகாசினி, ‘சேலை கட்டும்’ அமலா, ‘தென்றல் வந்து’ ஜெயஸ்ரீ என்று மனங்கவர்ந்த நாயகிகளைக் கொண்டு தொடராக மாற்றப் பார்த்தேன். அதிலும் ட்விட்டர் போல் சுருக்கெழுத்து கவனச்சிதறல்.
எழுதாமல் விட்டதை தூக்கிப் போடாமல் இருக்க Obsessive blogging disorder போய் Blogging Attention Disorder BAD ஆக வந்துவிட்டது.
இன்றும் கஜோல் சூப்பர் ஹீரோயின். ஷில்பா ஷெட்டி அனைத்து உலகத் தொலைக்காட்சிகளிலும் பேட்டியளிப்பவர். ரிச்சர்ட் ஜெருக்கு முத்தம் கொடுத்தால் சர்ச்சை வரவழைப்பவர். Celebrity பிக் பிரதரில் வாகை சூடியவர்.
ஷாரூக் இன்னும் ஹீரோவாகவே தேய்கிறார்.
நடனத்தில் எத்தனைவகைப்படும்? ட்விஸ்ட், வால்ட்ஸ், சல்ஸா, பாங்ரா பலவகைப்படும். இராயர் காபி க்ளபில் இலக்கியம் பயிற்றுவித்தால் கல்லூரி டான்ஸ் க்ளபில் கூடப்படிப்பவரின் இடையைப் பிடிப்பதை பயிற்றுவித்தார்கள். ஷாரூக் மாதிரி கண்ணாடி; ஷில்பா ஷெட்டி மாதிரி சகா. இந்தப் பாட்டில் வரும் ட்விஸ்ட் மட்டும் வரவேயில்லை.
மூதாட்டி ஜெயபிரதாவை பார்த்தவுடன் ‘சலங்கை ஒலி’ தோன்ற; அது ‘வறுமையின் நிறம் சிவப்பு’க்கு இட்டுச்செல்ல; அங்கிருந்து நடிப்பு வராத கேஸ் என்று மார்க் போட்ட கஜோல் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ ஆக தங்கிப் போனதில் தாவி; ஷில்பா ஷெட்டிக்கு கணவன் கிடைப்பானா ஆணாதிக்கமாக; ரோஜா நாயுடு கட்சியில் சேர்ந்து தோற்ற காட்சியை கூகிள் புகைப்படத் தேடலில் துழாவி Knolஇல் நின்றது.
ஒரே சமயத்தில் கமலுடன் ஜோடி கட்டியவர்கள். விகல்பமில்லாமல் ஹிந்திக்கு சென்று தொடை தெரிய கச்சை கட்டியவர்கள். சமகாலத்தினர்.
எல்லோராலும் ஜெயலலிதாவாக முடிவதில்லை.
கான்ஸ்பிரசி தியரி என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன?
உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
இனி செய்தியைத் தேர்ந்தெடுக்கும் நேரம்.
‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலமாக தமிழ் திரைஉலகில் அறிமுகமாகி, ரஜினி உடன் ‘சிவாஜி’ படத்தில் நடித்ததால் புகழ் உச்சிக்கு சென்றவர் நடிகை ஸ்ரேயா. புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் திருமலைக்கு ஸ்ரேயா சென்றிருந்தார்.
அதிகாலையில் சாமி கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியே வந்தபோது சிலர் அவரை அடையாளம் கண்டனர். உடனே ஸ்ரேயாவை நெருங்கி `ஆட்டோகிராப்’ கேட்டனர். கையை பிடித்து குலுக்கவும் முயற்சித்தனர். அப்போது ஒரு ரசிகரை ஸ்ரேயா ஓங்கி அறைந்தார். அவருடைய உதவியாளர்களும் அந்த ரசிகரை அடித்து உதைத்தனர்.
ஸ்ரேயாவின் இடுப்பை அந்த ரசிகர் கிள்ளியதால் அவர் கோபமடைந்து அடித்ததாக கூறப்பட்டது. ஸ்ரேயாவிடம் அடி வாங்கியவர் பெயர் ஹரி என்பது, பின்னர் தெரிய வந்தது. திருமலையில் உள்ள ஒரு மடத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
ஸ்ரேயா கூறியதாவது:-
கோவிலில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்த நான், பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒருவன் எனது இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்தான். புனிதமான இடத்தில் இப்படி நடந்து கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
முதலில் கண்ணில் படுவது ‘புத்தாண்டை முன்னிட்டு’.
தற்போது ஒகெனக்கல் தமிழ்நாட்டில் இருக்கிறதா/சத்யராஜ் தேர்தலில் நிற்பாரா என்னும் சூழல் நிலவுவதை கணக்கில் எடுக்கவும். கன்னட வருடம் பிறந்ததைக் கொண்டாட ‘முன்னாள் தமிழ்நாடு’ (சென்னை மாகாணத்தில்) இருந்து துண்டாடப்பட்ட தெலுங்கு தேசத்தில் உள்ள கோவிலுக்கு ஷ்ரேயா சென்றிருப்பதன் அவசியம் என்ன? அன்று திருப்பதி தாரை வார்க்கப்பட்டது; இன்று ஹொகேனக்கல் சென்று விடக் கூடுமா?
இவ்வாறு சிந்திப்பது ‘ சுற்றிக்கட்டு’ காட்டினாலும், ஷ்ரேயாவை முடிச்சுப் போடாமல் பாதியில் அனாதரவாகத் தொங்கி நிற்கிறது. இந்த மாதிரி எழுதுவது ‘தொலைநோக்கு பார்வை‘ எனப்படும்.
அடுத்ததாக ஹரி ‘இந்து சமயம்’ சார்ந்த மடத்தில் வேலை பார்க்கும் சமாச்சாரம் கிடைக்கும். இது முற்போக்கு பார்வைக்கு மட்டுமே உதவும். பார்ப்பனியம், ஆரியம், மடத்தலைவன் என்று முடிந்த அளவு தட்டையாக சித்தாந்தப் பார்வை ஆக்கி விடலாம்.
மதம் எல்லாம் ‘கதம் கதம்’ என்று பாபா ரஜினி வழியா உங்களுக்கு? பரவாயில்லை! அடிபட்டவர் துப்புரவு பணியாளர் என்பதால், கவிஞர் வாலியைப் போல் ‘சாக்கடைக்குள் போய் சுத்தம் செய்யும் பேரு; நாலு நாளைக்கு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு’ என்று இலக்கியப் பார்வை வடிக்கலாம்.
‘ஷ்ரேயாவுக்கு நேர்ந்தது எனக்கும் அன்றாடம் நேர்கிறதே’ என்று பாலாஜி பக்தையின் கதியை எடுத்துவைத்தால் பெண்ணியப் பார்வை என்று முடக்கப்படலாம்.
கரிசல் » பொதுவுடைமை என்பது போல் “சாமானியர்களும் ஏழைகளும் தொடக்கூடாதா என்ன?” என்று ஆணியப் பார்வைக்கு தாவலாம்.
இதெல்லாம் ‘குற்றச்சாட்டு கோட்பாட்டை’ நெருங்கவில்லை.
தடம் மாறக் கூடாது. மீண்டும் சதியாலோசனைக்குத் திரும்பவும்.
சொர்ணமால்யா குறித்த கிசுகிசு வந்தால் எவராவது சீந்துகிறார்களா? இல்லையே! புகழுக்கும் புதருக்கும் மோனை மட்டும் ஒற்றுமை அல்ல. இன்று புகழோடு இருப்பவர் நாளை கோப்புகளாக்கி மூலையில் புதைக்கப்படுகின்றனர்.
கொண்டாட்ட மேடையில் நடிகர்களின் பேச்சு மட்டுமே முன்னிறுத்தப்பட்டது. நடிகைகளுக்கு கனவுப்பாடல் தரப்படவில்லை. பின்னணிக்குரல் நாயகி சவீதாவும் வரவில்லை. இப்படிபட்ட சமயத்தில் செய்தியில் எப்படி இடம்பிடிப்பது?
பிடித்தார் துணை நடிகரை; கொடுத்தார் ரியாலிடி டிவியை!
‘நடிக்கிற மாதிரி நடி; அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்’ என்று சொல்லி வைத்ததை அரங்கேற்ற, அகில லோக செய்திகளிலும் தலைப்புகளில் அடிபடல் ஆனார்.
மெரீனாவில் பெருமாளின் திருக்கல்யாண சேவை பார்த்த மக்களிடம் தன் கடவுள் பக்தியை பறைசாற்றினார். புலியை முறத்தால் விரட்டிய தமிழ்க் கலாச்சாரத்தில் ஊறி விளைந்த வீர பரம்பரை சங்கச் சித்திரத்தை செயலில் காட்டி இலக்கிய தமிழர்களை மெய்சிலிர்க்க வைத்தார் என்று அடுக்கினால் கான்ஸ்பிரசி கொள்கை எனப்படும் என்றறிக!