Tag Archives: கேள்வி

மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?

மைத்ரேயனின் கருத்துகள்…

பராக்கின் ரசிகன் அல்ல நான்.

ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர்.

ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் 20 ஆண்டு அரசியல் முதலீட்டில் அவர்கள் சேமித்து வைத்த பெரும் நிதிக் குவியல் அது கொணரும் ஏராளமான ஊடக பலம் எல்லாவற்றையும் தன் பேச்சு வன்மையாலும், மக்களை அது சென்று சேரும் தன்மையைப் புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்ததாலும் வென்று வந்தவர்.

மகெய்னுக்கு இதே செயலைச் செய்ய கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ஆயிருக்கின்றன.

பராக் கிட்டத்தட்ட தாம் எந்தக் கொள்கைகளை முதலில் முன்வைத்தாரோ அவற்றில் இருந்து பெரிதும் பின் வாங்காமல் இந்த உள்கட்சித் தேர்தலை வென்றிருக்கிறார்.

மகெய்ன் கடந்த 30 வருடங்களில் அடித்துள்ள அந்தர்பல்டிகள் நிறைய நிறைய. பெரும் பண முதலைகளின் பின்னணியும், கிருஸ்தவ சர்ச்சுகளின் பலமும், அமெரிக்க ஊடகங்களின் இயல்பான வலது சாரிச் சாயப் பார்வையும் அவருக்கு ஒரு வலு உள்ளதான பிம்பத்தைக் கொணர்கின்றன.

உண்மையில் மகெய்னுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி ஏதும் உருப்படியாகத் தெரிந்திருக்காது என்பது என் கணிப்பு. பராக்கிடம் நிறைய சிறந்த நடுவயது executive talent அதுவும் குறிப்பாக financial sector இல் இருந்து சேர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

ஒரு ஜனாதிபதி அமெரிக்காவில் அவரே எல்லாவற்றையும் சிந்தித்துத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை என்பதை புஷ் 8 ஆண்டுகளில் திறம்பட நிரூபித்திருக்கிறார். ஒரு நாளைக்கு பல பிலியன் டாலர்கள் வாண வேடிக்கை விட்டுக் கொண்டு 8 வருடம் அமெரிக்கப் பொருளாதாரம் ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கிறது.

இது ஒன்றே போதும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கதிகலங்க அடிக்க.

பல ட்ரிலியன் டாலர் போர ஒன்றை அமெரிக்கா தொடர்ந்து நடத்தினால் அதன் பொருளாதாரம் க்ஷீணித்துப் போவதில் அதிசயம் இல்லை.

போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களிடம் இருந்து பெறும் லாபம் எல்லாம் அமெரிக்காவில் தானே முதலீடு செய்யப்படும் என்று யாராவது கோணலாக ஒரு வாதம் செய்யாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்னும் 8 ஆண்டுகள் ரிபப்ளிகன் கட்சி பதவியில் இருந்தால் அமெரிக்கப் பொருளாதாரம் காலாவதி ஆகி விடும். அதற்காக டெமக்ராடிக் கட்சி ஏதோ உன்னத புருடர்களால் ஆனது என்று நான் வாதிடவில்லை.

இருக்கும் பிசாசுகளில் எது நல்ல குழந்தை என்று கேட்டதற்கு, அப்பன் சொன்னானாம், அதோ கூரை மேல் ஏறி நின்று தீப்பந்ததால் வீட்டுக்கு நெருப்பு வைக்க முயல்கிறதே அவன் தான் இருப்பதற்குள் நல்லவன் என்று.

அந்த நிலைதான் அமெரிக்கப் பிரஜைகளுக்கு. ஆனால் வினையை எத்தனை நாடுகளில் விதைத்தார்கள். அதெல்லாம் திரும்பி வருகிறது.

என்ன பிரச்சினை என்றால் தனி மனித அமெரிக்கர்கள் நிறைய நன்மை செய்ய முயன்றிருக்கிறார்கள் அதெல்லாம் எப்படித் திரும்பி வந்து உதவும் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை என்று நீங்களே சொல்லி மெக்கென் இடம் இருக்கும் மைனஸ்களை நீங்களே இல்லாமல் செய்துவிட்டீர்கள்.

புஷ் பொருளாதாரத்தில் ஈராக் யுத்தத்தினால் அமெரிக்காவுக்கு பொருளாதார லாபம் ஏதுமில்லாதது போல் நீங்கள் போட்ட கணக்கு ஒப்புக்கொள்ள முடியாதது. புஷ் ஏதோ வெறி பிடித்து சண்டை ஆரம்பித்து நடத்தியது போன்ற பிம்பம் சரியானதில்லை. யுத்தம் ஒன்றும் நஷ்டகணக்கு அல்ல.

உங்கள் இரண்டு வாதங்களையும் நான் முன்னமே எதிர்பார்த்து அந்த இரு வரிகளையும் எழுதினேன்.

அமெரிக்க அதிபர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டாம் என்பது ரானால்ட் ரேகன் காலத்தில் உறுதிப்பட்டுப் போயிற்று.

எல்லாம் தெரிந்த கிளிண்டனால் வலது சாரி செனட், காங்கிரஸ் ஆதிக்கத்தில் ஏதும் உருப்படியாக மக்களுக்குச் செய்ய முடியாமல் பொருளாதாரத்தை ஓரளவு பெரும் பண முதலைகளின் கைப்பிடியில் இருந்து மீட்டு மத்திய தர மக்களுக்கு ஓரளவு நன்மை தரும் நடவடிக்கைகளை எடுத்து விட்டுப் போனதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இவற்றை நான் அவ்வளவு நம்புவதில்லை.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் புகையும், ஆடிகளும் அதிகம். அமெரிக்கச் சட்டங்களுக்கு அப்பால்பட்ட சானல் தீவுகள் போன்ற இடங்களில் அமெரிக்கப் பண முதலைகள் சேர்த்து வைத்திருக்கும் நிதியின் அளவு ஒரு வேளை அமெரிக்காவின் வருட மொத்த வருமானம் அளவு கூட இருக்கும் என்று ஊகம் .

இதைப் பற்றி மதர் ஜோன்ஸ் என்ற ஒரு சிறப்பான அரை இடது, தொழிலாளர் சார்பு ஆனால் நல்ல ஆய்வு சார்ந்த பத்திரிகை மரபைக் கடைப்பிடிக்கும் பத்திரிகை ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு வருடம் முன்பு பிரசுரித்தது என்று நினைவு. அதை அந்தப் பத்திரிகையின் வலைப் பக்கத்தில் போய் ஆவணங்களில் தேடினால் கிடைக்க வாய்ப்பு அதிகம். நான் இந்தப் பத்திரிகையின் நாணயத்தையும், நா நயத்தையும் நம்புபவன்.

இப்படித் தனிநபர் ஜனாதிபதி ஒன்றும் பொருளாதாரத்தில் பிரமாதமாகக் கிழித்து விட முடியாது என்ற கருத்தை கருத்தியலில் (ideology) அமைப்பியல் பார்வை என்று சொல்வார்கள். நான் அமைப்பியலுக்கும், தனிநபர் வாதத்துக்கும் இடையில் இருப்பவன்.

தனிநபர் ஏதோ உலகத்தையே புரட்டி விட முடியும் என்ற கருத்து ஓரளவு இளம்பிள்ளைக் கருத்து. அந்த வயதில் தாம் அசாதாரண சக்தி உள்ளவர்கள் என்ற நம்பிக்கை இல்லாவிடில் என்ன பிரயோசனம்? இளைஞர் வளர அந்த நம்பிக்கை அவசியம்.

நடுவயது வரும்போது அமைப்புகளின் இயல்பு புரிந்து தனிநபர் சாகச விழைவுக்கும், அமைப்பின் எளிதில் நகராத் தன்மைக்கும் இடையில் எப்படி ஊடாடி காரியங்களைச் சாதிப்பது என்பது ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

இதில் ஓரளவு ஹிலரி வெற்றி பெற்றிருந்தார் சமீபத்து ஏழு எட்டு ஆண்டுகளில். அவரது இந்த அனுபவ முதிர்ச்சி இப்போது வீணாகப் போகிறது என்பதில் எனக்கு வருத்தமே.

ஆனால் மகெய்ன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செனட்டில் இருந்து சாதித்தவை மிகக் குறைவு. அவர் தன் வியத்நாம் போர்க்கைதி பிம்பத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாள் காலம் ஓட்டி இருக்கிறார். ரிபப்ளிகன் நிர்வாகங்கள் அவருடைய காலத்தில் கிட்டத்தட்ட 2/3 பகுதி இருந்ததால் அவருடைய தொகுதிக்கு செலவழிக்க நிறைய பணம் நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதி பெரும்தனக்காரர்களிடம் இருந்து அவருக்கு நிதி வசதி கிட்டி இருக்கவும்
வாய்ப்புண்டு.

ஆனால் நிர்வாகத் திறமை என்று பார்த்தால் ஓபாமாவுக்கும் இவருக்கும் எந்த பெருத்த வேறுபாடும் இல்லை. இருவரும் அமெரிக்க அரசியலில் மிகவும் பெருமையாகக் கருதப்படும் executive experience அதாவது மேலாட்சியாளராக இருந்து நிர்வாகம் செய்து வெற்றி பெறுவது என்ற அம்சத்தில் முழு சூனியம். இருவருக்கும் அது கிடையாது.

[ இந்த அனுபவம் என்பதே ஒரு விதமான மாயை என்பதை நாம் இப்போது கருத வேண்டாம். அதற்குள் நுழைந்தால் நான் மிகவும் cynical ஆக இதை அணுகுகிறேன் என்று எல்லாரும் திட்டுவார்கள் என்று ஊகம் உண்டு.]

ஒபாமாவுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டாம், ஏனெனில் புஷ்ஷே – அவர் நிர்வாகியாக இருந்து எதையும் பிரமாதமாகச் சாதித்ததில்லை. டெக்சாசில் தான் ஏதோ பெருத்த முன்னேற்றங்கள் கொண்டு வந்ததாக அவர் தம்பட்டமடித்தது எல்லாம் ஊடகங்களின் ஒத்துழைப்போடு அவர் நடத்திய மாயை என்று விமர்சகர்கள் புள்ளி விவரங்களை வைத்து பின்னால் நிரூபித்த கட்டுரைகள் பல பார்த்திருக்கிறேன்.

அவருக்குப் பின்னே ஊடகங்களும், கிருஸ்தவப் பேரியக்கங்களும், க்ளிண்டனின் உருப்படா பாலுறவுக் கேளிக்கைகளால் அன்னியப்பட்ட ஒரு பெரும் நடு அமெரிக்க மக்கள் திரளும் இருந்தன. அப்போதும் கூட தில்லு முல்லு செய்யாமல் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

இப்படிக் கத்தி முனையில் இருந்த ஒரு நாட்டை அனேகமாக ரிபப்ளிகன் கட்சியின் மீது வெறுப்பே வருமளவுக்குத் தள்ளி இருக்கும் பெருமை புஷ் அண்ட் மூத்த ‘தலைவர்களின்’ ஊழல் ராஜ்யம்.

ஊழல் மக்களுக்கு உதவாது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு infrastructural investment இல் ஏராளமாகப் பின் தங்கி இருக்கிறது என்பது எத்தனை ஆயிரம் பாலங்கள் இடியும் அபாயத்தில் இருக்கின்றன, அவற்றைப் பற்றிப் புஷ் அரசு கவலையே படவில்லை என்று மத்திய அரசின் ஹைவேஸ் டிபார்ட்மெண்டின் உள்ளாய்வு அறிக்கையே சமீபத்தில் குறை சொன்னதாக ஒரு அறிக்கை படித்தேன்.

மேலும் புஷ் அண்ட் கோ கொள்ளை அடித்தது மக்களுக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களானால் அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

  • சாதாரண தொழிலுற்பத்தியால் ஏராளமான தொழிலாளருக்கு வேலை கிட்டும்,
  • உள்நாட்டில் நுகர்பொருட்கள் நிறைய மக்களுக்குக் கிட்டும்,
  • சுழற்சியில் பணமும், லாபமும், முதலீடும் நாட்டுக்குள்ளேயே தங்கும்.
  • மக்களிடம் வேலைத் திறன்,
  • தொழில் நுட்ப அறிவு,
  • ஊக்கம், வாழ்வில் பிடிப்பு,
  • பண்பாட்டில் நம்பிக்கை, மேலெழுந்து வர உழைக்கும் ஆர்வம், தவிர
  • நல்ல வாழ்க்கை வாழ்வதில் கிட்டும் ஒருவித விகாசம் எல்லாம் இருக்கும்.

ராணுவத் தளவாடத் துறையின் பொருட்கள் மக்களால் நுகரப்பட முடியாதவை. அவை சுழற்சி இல்லாதவை. வெறுமே பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு துருவேறிக் கொண்டிருக்கும். இவற்றில் பயன்பாட்டுப் பயிற்சியும் பெறும் மனிதர்கள் சாதாரண வாழ்வுக்கு அந்தத் திறமைகளை மாற்றித் தர சில பத்தாண்டுகள் பிடிக்கும். ராணுவ வீரர்கள் பெருமளவு பாசறைகளில் வாழ்வதால் இந்தத் திறன் எளிதில் மக்களிடம் கை மாற்றித் தரப்படுவதில்லை.

தவிர ராணுவத் தளவாடங்கள் சாதாரண நுகர் பொருட்களைப்போல மலிவு விலைக்குக் கொடுப்பதற்காகத் தயாரிக்கப் படுவதில்லை. அவை நுகர்வாரிடம் விற்கப் படுவது உயர் விலைகளுக்கு, அந்த உயர் விலையை அரசிடம் பெறுவதற்காக நிறைய லஞ்சமும் ஊழல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அது அரசை மேலும் மேலும் உளுத்துப் போகச் செய்கிறது, மக்களின் வரிப்பணம் நல்ல ஆக்க பூர்வமான வேலைகளுக்குப் பயன்படாமல் கோடவுனில் தூங்கப்போகும் பொருட்களுக்குச் செலவிடப்பட்டு மக்களின் தேவைகள் பின்னே ஒத்திப் போடப்ப்டுகின்றன.

இதுவும் சுழற்சியில் மக்களின் முதலீட்டு வளர்ச்சியை முடக்குவதே.

இதைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தீர்களானால் ஏன் ராணுவச் செலவு அதிகமாக உள்ள நாடுகள் உருப்படாமல் போகின்றன என்பது புரிய வரும்.

ஆக ஒபாமா இளைஞர் ஆனாலும் அறிவு தீர்க்கம் உள்ளவர் என்பதை மனதில் வைத்து, எப்படி ஹிலரியைப் போன்ற் ஒரு வலுவான் எதிராளியை அவர் தோற்கடித்தார் என்பதையும் கருதுங்கள்.

அந்தத் தேர்தல் ஏதோ வெறும் பிரச்சாரத்தால் வெல்லப் படக் கூடியதல்ல. சில ஆயிரம் குழுக்களை நாடு முழுதும் அமைத்து அவற்றை நடத்தி கோணல் ஏதும் இல்லாமல் சமாளித்து இரண்டு வருடம் போல இந்தப் போட்டி நடக்கிறது. கடுமையான உழைப்பு தேவை இதற்கு. அதுவும் அடிமட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து வர இந்த உழைப்பு ஏராளமாகத் தேவை.

ஹிலரிக்கு எல்லாம் அனேகமாக ஏற்கனவே வேண்டுகிற இடத்தில் இருந்தன.

மகெய்னுக்கும் பல வருடங்களாக அதிபர் தேர்தலில் போட்டி இட்டுத் தோற்றுத் தோற்று கற்ற பாடங்கள் நிறைய, அமைப்பும் இடத்தில் இருந்தது. எதிர்க்க வலுவான ஆட்கள் யாரும் இல்லாததாலும் அவர் ஓரளவு சுலபமாகவே இந்தப் போட்டியில் வென்றிருக்கிறார். அவரும் பல பத்து வருட நிதி சேமிப்பில் மேலே மிதந்து வந்து வென்றிருக்கிறார்.

மகெய்னுடைய தத்துவமோ, பொருளாதாரக் கொள்கைகளோ புஷ்ஷின் கொள்கைகள், தத்துவம் ஆகியவற்றில் இருந்து அதிகம் மாறக் கூடியவை அல்ல, ஏனெனில் அவருக்குப் பின் நிற்கும் பண பலம் அப்படி ஒரு பெரும் விலகலை அனுமதிக்காது.

ஒபாமாவுக்கு இந்த வகை கட்டுப்பாடுகள் குறைவு. அதுவும் 8 வருடமாக அதிகாரத்தில் இல்லாத ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளி வருவதால் பணமுதலைகளின் influence அவர் மேல் குறைவு. இல்லை என்று சொல்லவில்லை. குறைவு என்றுதான் சொல்கிறேன்.

மேலும் அவருடைய rhetoric, policy declaration எல்லாம்

  • நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யும் பொருளாதாரம்,
  • தொழில் உற்பத்தியை நாட்டில் வளர்க்க முயற்சி செய்தல்,
  • ராணுவச் செலவை மட்டுமல்ல, அன்னிய மண்ணில் போய் அட்டகாசம் செய்யும் கருத்தையே ஓரம் கட்டுதல்

என்று பெரிதும் வியர்த்தமான அரசுச் செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளோடு ஆக்க பூர்வமான செலவுகளை முயலப் போவதாகவும் சுட்டுகின்றன.

இவை ஏதும் பொருளாதாரத்தில் தற்குறியாக இருந்தால் புரியாமல் செய்யவோ அல்லது பேசவோ முடிந்திருக்காது.

என் வாதம் உள்ளீட்டு வலுவோடுதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. ஒரு பத்துபக்கம் எழுத விருப்பம் இல்லாமல் கோடி மட்டும் காட்டி விட்டேன். அதை நீங்கள் உள் நுழைந்து உள் தர்க்கம் எப்படி ஓடும் என்று பார்த்துப் புரிந்து கொண்டால் நல்லது.

இதற்கு என்ன பெயர்?

What is this?

கொத்தனாருக்கு சமர்ப்பணம்.

Kamal’s Dasavatharam – Reviews: Audio Release, Music, Songs

கூகிள் முழுக்க தசாவதாரத் தேடல். அதற்கு தீனி போடும் விதமாக, வருகையாளரைப் பெருக்கித்தள்ளி வெற்றிடத்துக்கு தள்ளும் நோக்கிலான பதிவு.

1.உலகநாயகன்… (கம் டான்ஸ் வித்மி)
பாடல்: வைரமுத்து, பாடியவர்: வினித்

Ulagha Nayagan- Dasavatharam Lyrics « ?.i.ili.i….Dimsy’s Lyrics Database i.ili.i.?

2. கல்லை மட்டும் கண்டால்
பாடல்: வாலி, பாடியவர்: ஹரிஹரன் மற்றும் குழு

3. முகுந்தா… முகுந்தா…
பாடல்: வாலி, பாடியவர்: கமல்ஹாசன், சாதனா சர்க்கம்

Mukhundha Mukhundha- Dasavatharam Lyrics « ?.i.ili.i….Dimsy’s Lyrics Database i.ili.i.?

4. ஓ..ஓ… சனம்…
பாடல்: வைரமுத்து, பாடியவர்கள்: கமல்ஹாசன், மகாலட்சுமி ஐயர்

5. கா… கருப்பனுக்கும்….
பாடல்: வைரமுத்து, பாடியவர்: ஷாலினி சிங்

6. ஓ…ஓ… சனம் (ரீமிக்ஸ்)


பாடல் வெளியீட்டு விழா
1. தசாவதாரம் ஒலித்தகடு வெளியீடு – Welcome To Your Senses – Keerthivasan Rajamani

2. “சாத்தான்”குளத்து வேதம்: “தசாவதாரம் – இசை வெளியீடு – என் பார்வையில்”

3. IdlyVadai – இட்லிவடை: `தசாவதாரம்’ விழா பேச்சுக்கள்

4. கடற்புறத்தான் கருத்துக்கள்: : “பண்பால் கவர்ந்த ஜாக்கிசான்!”

Download:

1. தமிழ் மசாலா: “தசாவதாரம் பாடல்கள் MP3 வடிவில் தரவிறக்க… தமிழ் மசாலா சிறப்பு பதிவு”

2. தமிழ் மசாலா: “தசாவதாரம் பாடல்கள்- வீடியோ துணுக்குகள்”

Reviews, Audio Critiques:

1. Yours Musically: Dasavathaaram Soundtrack

2. kirukkal .com: dasavathaaram_songs: “தசாவதாரம் – பாடல்கள்”

3. மனசாட்சி: “ஏமாற்றமளிக்கும் தசாவதாரம் பாடல்கள் – விமர்சனம்”

4. மின்மினி: தசாவதாரம் பாடல் எப்படியிருக்கு?

5. Dhoda!: தசாவதாரம் – Music Review

6. DesiReviews: DASHAVTAR [DASAVATHARAM ] (2008) MUSIC REVIEW

7. The stupid’s Prism » Dasavatharam Music – First Impressions

வலைப்பதிவு:

1. கமலஹாசனின் தசாவதாரம்

2. ப்ளாக்ஸ்பாட் அவதாரம்


செய்தி:

1. நையாண்டி தர்பார்: தசாவதாரம் ‘புக்கிங்’ ஆரம்பம்

2. கமல் | Tag | News | Articles


பேச்சு, அரட்டை, விவாதம்: மன்ற மையம்

முன்னோட்டம்:

இசை, பாடல்கள், எம்பி3

1. தசாவதாரம் ஆடியோ சிடி பாடல்கள்

2. IdlyVadai – இட்லிவடை: தசாவதாரம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்


பேட்டி:

1. lazygeek.net | For 25th, I pray !!

2. தமிழ் மசாலா: தசாவதாரம் பற்றி கமல் ,குழுவினர் பேட்டி மற்றும் படப்பிடிப்பு காட்சிகள்

3. நான் அவனில்லை!: “தசாவதாரம் – சில பேட்டிகள்”

விநியோகஸ்தர் : பிரமிட் சாய்மீரா


புகைப்படம்: lazygeek.net | Kamalavatharam

உல்டா பு(ரு)ல்டா: கற்பனை என்றாலும்!

அலசல்: கோகுல்: தசாவதாரம் – இன்னொரு ஆளவந்தான்


கேள்வி நேரம்:

1. ‘சிவாஜி‘யை விட வியாபாரத்தில் மிஞ்சி விட்டால், தமிழ் சினிமா அடுத்த மைல்கல்/கட்டத்தை தொட்டதாகக் கொள்ளலாமா? (இவர் தொட்டிருக்கிறார்: உருப்படாதது: [திரைப்படம்] மீண்டும் மருதநாயகம் [தசாவதாரம் அல்ல])

2. வைணவத்தில் பரிணாம வளர்ச்சியின் திருவிளையாடல்களான பெருமாளின் பத்து அவதாரங்களும் ஓரங்கட்டப்படுகிறதா? (இவர் தொட்டிருக்கிறார்: கடற்புறத்தான் கருத்துக்கள்: நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி’ யும் – திசைகள் அ.வெற்றிவேல்)

3. அஜீத் சிட்டிசனில் எத்தனை வேடம் தரித்தார்?

4. தசாவதாரத்தைப் பார்த்து சுசி கணேசனின் கந்தசாமியில் இன்னொரு முகப்பூச்சு கூட்டப்படுமா?

5. துணை நடிகர்கள் எல்லாரும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ பாடல் காட்சியில் பற்பல பிரபு தேவாக்கள் விதவிதமாக நடனமாடுவார்கள். அது போல் தொலைக்காட்சித் தொடரில் இளவரசு, பாஸ்கர் போன்றோர் தொலைந்து போனதால், தற்செயலாக தசாவதாரம் எடுக்கிறாரா கமல்?

6. இதெல்லாம் என்ன பெரிய விஷயம்! அந்தக் கால பாடல் காட்சிகளில் ஒரே ஃப்ரேமில் இருபது தடவை கமல் முகம் வந்திருக்கிறதே… அதுவும் சாதனைதானே?

7. Our Thoughts: தசாவதாரம் – இன்னொரு ஆளவந்தான்் – ஒரு அலசல்

கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்துகொண்டே இருக்கிறது. காதில்விழும் சொல்லாக இருந்த நிலை மாறிக் கண்ணில்படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்துகொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகரப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடுகூடிய முகத்தையும் கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி பத்துத் தடவையாவது பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

என்று அர்ச்சிக்கும் அ ராமசாமி தொடங்கி தமிப்பதிவர்கள் வரை ‘மிகை நாடும் கலை’ப் பார்வை தர இன்னொரு வாய்ப்பு தந்திடுகிறாரா?

8. கமல், தசாவதாரம், ஹிந்தி ஆஸ்கர் (ரவிச்சந்திரன் அல்ல) விருது – கேள்வி தொடுக்கவும்

9. முத்தம், பாமரர், சி சென்டர், வெற்றி – வழக்கமான சர்ச்சை வரவைக்கவும்

10. ஜெமினி கணேசன் & கே ஆர் விஜயா நடித்து கேயெஸ் கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய தசாவதாரம் – சிறுகுறிப்பு வரைக.


முந்தைய பதிவுகள்:
1. ‘Dasavatharam’ – Kamal’s plea & Other trivia

2. ‘தசாவதாரம்’ அசின் புத்தம்புதிய உலக சாதனை!!!


முந்தைய செய்திகள்:

1. Did Kamal & Murali cheat Assistant Director Senthilkumar: Dasavatharam: “நடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு”

2. ‘Dasavatharam movie story is stolen from me’ – Su Senthilkumar gets stay order: “கமல்ஹாசன் நடிக்கும் ‘தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு”


படத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை. ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே ‘தசாவதாரம்.’ இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கமலின் அடி மனதில் தேங்கியிருந்த கதை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் துணிச்சலால் இன்று திரைவடிவம் பெற்று வருகிறது. படத்தின் ஏகதேச பட்ஜெட் முப்பத்தைந்து கோடிகள்!

படத்தின் பாதி பட்ஜெட்டை பிரமாண்ட அரங்குகள் எடுத்துக் கொள்கின்றன. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மண்டலத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். முக்கியமாக பொன் கூரைவேய்ந்த சிதம்பரம் கோவில் மற்றும் கோவில் வளாகம். நூற்றுக்கணக்கில் சோழ குடிமக்கள், குதிரைகள், குலோத்துங்க சோழனின் பட்டத்து யானை என ஆயிரக்கணக்கில் துணை நடிகர்களை வைத்து சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இதில் குலோத்துங்க சோழனாக நெப்போலியன் நடித்திருக்கிறார்.

சைவ சமயத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் சயன நிலையில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசுவதும், அந்தச் சிலையை அணைத்தபடி ரங்கராஜ நம்பி கடலுக்குள் மூழ்குவதும் படமாக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சிலையும், நம்பியும் மூழ்கும் காட்சியை ஸ்பெஷல் கேமராக்கள் உதவியுடன் கேமராமேன் ரவி வர்மன் படமாக்கினார். இந்தக் காட்சியில் ரங்கராஜ நம்பியாக உடலில் திருமண் அணிந்து நடித்தார் கமல்ஹாசன். படத்தில் வரும் பத்து கெட்டப்புகளில் ஒன்று இந்த ரங்கராஜ நம்பி.

முன்னதாக, ரங்கராஜ நம்பியின் முதுகில் இரும்பு கொக்கிகளை சதையை துளைத்தபடி பிணைத்து பறவை காவடி போல் இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. ரங்கராஜன் நம்பியாக நடித்த கமல் சொந்தக் குரலில்,

‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

சைவம் என்று பார்த்தால தெய்வம் கிடையாது

தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது’

என கொக்கியில் தொங்கியபடி பாடிச் சென்றார். வாலி எழுதிய இந்தப் பாடல் மற்றும் காட்சி வரலாற்று முக்கியத்துவமுடையது.

இன்று சைவர்களும், வைணவர்களும் இந்து என்ற அடைப்புக்குறிக்குள் ஒற்றுமையாக கழிந்தாலும் 12-ம் நூற்றாண்டில் சைவர்களும் வைணவர்களும் சிண்டை பிடித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சிவன் பெரிதா பெருமாள் வலிதா என்பது அன்று ஒரு தீராச் சண்டை. பெரும் பகை. சுடுகாட்டில் திரிபவனுக்கு கோவில் எதற்கு என சிவனை வைணவர்களும் கடலில் கண்ணயர்ந்து கிடப்பவனுக்கு பூஜையும் வைவேதிகமும் எதற்கு என விஷ்ணுவை சைவர்களும நடுவீதியில் நாறடித்துக் கொண்டிருந்தனர். அதன் ஒரு சிறு துணுக்கே கமல், நெப்போலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.

இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு வரும்போது காட்சிகளிலும் கமலின் கெட்டப்பிலும் 180 டிகிரி மாற்றம். இப்போது கமல் ஒரு விஞ்ஞானி. ஏறக்குறைய வெளிநாட்டு மனிதனின் சாயல். இந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கியிருக்கிறார்கள். எளிதில் அனுமதி கிடைக்காத அமெரிக்காவின் மிகப் பெரிய ஆராய்ச்சி கூடத்தை இதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி கூடத்தின் நடுவில் கம்ப்யூட்டர்கள் மிகப்பெரிய எந்திரங்களை இயக்குவது போன்று செயற்கையான அரங்கு ஒன்றை அமைத்து, அது விபத்தில் அழிவது போன்று எடுத்துள்ளார்கள். இந்த அரங்கை வடிவமைத்தவர் கலை இயக்குனர் பிரபாகரன். இவரைத் தவிர சமீர்சந்தாவும் இப்படத்திற்காக பல பிரமாண்ட அரங்குகளை அமைத்துள்ளார்.

கமலின் இன்னோரு முக்கியமான வேடம், தற்காப்புக் கலை நிபுணர். மலேசிய பாரம்பரிய தற்காப்புக் கலைஞர் வேடத்தில் கமல் எதிரிகளுடன் மோதும் காட்சியை மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புகழ் பெற்ற இரவு விடுதி ஒன்றில் பாடல்காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. மல்லிகா ஷெராவத் இருபது அமெரிக்க அழகிகளுடன் ஆடுவதை கமல் பார்ப்பதாக காட்சி. பிருந்தா இந்த நடனத்தை அமைத்தார்.

படத்தின் முக்கியமான அம்சம் சண்டைக்காட்சிகள். கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா மரணமடைந்ததால் அவர் இடத்தை பிடித்திருக்கிறார்கள் தியாகராஜனும், கனல் கண்ணனும். இவர்கள் இருவரும் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு சண்டை அமைத்தவர்கள். அமெரிக்காவில் எடுத்த சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளை எடுத்தவர்கள் Joop Katana மற்றும் Matos. இருவரும் ஹாலிவுட் சண்டைக் கலைஞர்கள். மலேசியாவில் எடுக்கப்பட்ட பாரம்பரிய Akido சண்டைக்காட்சியை எடுத்தவர் Sonnylake.

படத்தில் ஜிம்மி ஜிப், ஸ்டெடிகேம், பான்தர் கிரேன் என அதிநவீன கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். 747 ஜெட் விமானத்திற்குள் கமல் ஊடுருவும் காட்சியை இதுவரை இந்திய சினிமா காணாத வகையில் எடுத்துள்ளனர்.

கமலுடன் நெப்போலியன், அசின், மல்லிகா ஷெராவத், சந்தான பாரதி, ஜெயப்ரதா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசன். இயக்கம் கே.எஸ். ரவிக்குமார்.

படத்தில் பணிபுரியும் அனைவரும் இதனை மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகின்றனர். “எனக்கு இந்தப்படம் தனியா ஒரு இன்டிட்யூட்ல படிக்கிற அனுபவத்தை தருது. ஒவ்வோரு காட்சியை எடுக்கும்போதும், ஒத்திகை, டேக், லேப்ல டெவலப் பண்றப்புறம் டெலிசினி எடிட்டிங்கில் இப்படி பத்து முறை பார்த்தாலும் பதினோராவது முறை பார்க்கும் போதும் சுவாரஸியமாகவும் பிரமாதமாகவும் இருக்கு” என சிலாகிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.

“எனது சினிமா வாழ்க்கையை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் படம்” என பெருமிதப்படுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் கணிப்பு வேறு மாதிரி. “கண்டிப்பா தமிழ் சினிமா சரித்திரத்தில் இந்தப் படத்துக்கு தனி இடம் உண்டு. படத்தோட கலெக்ஷ்னும் அப்பிடி இருக்கும்னு நம்பறேன்.” நாம் மேலே பார்த்தது கமலின் மூன்று வேடங்களை.

கெட்டப்புகள் என வரும்போது கமலின் உழைப்பை சொல்லாமல் இருக்க முடியாது. சிங்கிள் கெட்டப்புக்கே அலும்பல் செய்பவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக பத்து விதவிதமான மனிதர்களாக மாறியிருக்கிறார் கமல். ஒவ்வொரு கெட்டப்பிற்கும் மேக்கப்போட ஆறுமணி நேரமாகிறது. அதிகாலை மூன்று மணிக்கே மேக்கப்பிற்கு முகத்தை கொடுக்க வேண்டும். ஆறுமணி நேரம் பொறுமையாக இருந்தால் படப்பிடிப்புக்கு தயாராகலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். மூன்று நான்கு மணி நேரமே மேக்கப் தாக்குப்பிடிக்கும் என்பதால் அதற்குள் அந்தநாள் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். மேக்கப் போடும் நேரம், மேக்கப்புடன் நடிக்கும் நேரம், மேக்கப்பை கலைக்கும் நேரம் என ஏறக்குறைய ஒரு நாளின் பதினைந்து மணி நேரம் தாடை அசைய எதையும் சாப்பிட முடியாது. வெறும் திரவ உணவுகள் மட்டுமே சாப்பாடு. இப்படி பத்து கெட்டப்புகள் போடவேண்டும்.

கமலின் கெட்டப்புகள் எதையும் பிறரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இதற்கு மோஷர், அனில் பெம்ரிகர் இருவருக்கும்தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள். மோஷர் ஒப்பனை கலைஞர். பெம்ரிகர் சிகை அலங்கார நிபுணர்.


“கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’’


_ ஹரிஹரனின் கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறது தெறித்து விழும் வாலியின் தத்துவார்த்தமான வரிகள்.

இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா. இந்தப் பாடல் காட்சியை படுபிரமாண்டமாக அமைத்திருகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள். அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது. ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!) கதற… கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது.

உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக் கடலில் தூக்கி வீசப்படுகிறார். உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால், சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட… அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்.

‘முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா ‘வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா’

பாடலை நம்மூர் ஸ்டைலில் ரொம்ப சாஸ்திரியமாக முயற்சி செய்திருக்கிறார் வட இந்திய ஹிமேஷ். காப்பி ராக சாயலில் அமைந்துள்ள ‘முகுந்தாவில்’ அனாவசிய வாத்திய இரைச்சல் இல்லை. வீணை, மிருதங்கம், கடம் ஆனந்தமாய் ஒலிக்கிறது. சாதனா சர்கத்தின் தொண்டையில் நிரந்தரமாக தேன் தடவியிருக்கிறதோ என்னமோ, அப்படியரு குழைவு, இளமை!

சொல்லப்போனால் தசாவதாரத்தின் ஐந்து பாடல்களில் இதில் மட்டுமே கர்நாடக சங்கீதத்தை கேட்க முடிகிறது.

மல்லிகா ஷெராவத்தின் துள்ளலான ஆட்டத்திற்கு ராப் ஸ்டைலில் விளையாடியிருப்பவர் கமலின் மகள் ஸ்ருதி. பல்லவியை ஆங்கிலத்தில் ஆரம்பித்து அனுபல்லவியின் போது தமிழுக்கு வருகிறார். வாத்திய இரைச்சல் சற்று அதிகம் என்றாலும் மேற்கத்திய இசை ரசிகர்களை தோளைக் குலுக்கி, குதிகாலைத் தூக்கி ஆடவைக்கலாம். முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட அட்டகாசம்!

வழக்கமாக கமல் பாடும் போது வாயில் எதையோ அடக்கிக் கொண்டு பாடுவது போல தெரியும். தசாவதாரத்தில் அவர் பாடும் டூயட் ‘ஓ.. ஓ சனம்’ பெட்டர். முழுவதும் மேடையில் பாடுவது போன்ற காட்சி. இடை யிடையே ‘உஸ் உஸ்’ என்று சீறும் அலை ஓசை வித்தியாசமானது. பாட்டின் பல இடங்களில் கிதார் ரகளை செய்கிறது!

‘‘உடல் பூமிக்கு போகட்டும்

இசை பூமியை ஆளட்டும்’’

‘‘கடவுளும் கந்த சாமியும்

பேசிக் கொள்ளும் மொழி இசை’’

‘‘வீழ்வது யாராயினும்

வாழ்வது நாடாகட்டும்’’

போன்ற வைரமுத்தின் நயமான வரிகள் பாட்டு நெடுகிலும் உண்டு.

படத்தின் க்ளைமாக்ஸில் எல்லா கமல்களும் அணிவகுக்கும் போது ஆர்ப்பாட்டமாக வருவது:

‘‘உலக நாயகனே… கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே!’’

ராப், ஹிந்துஸ்தானி எல்லாவற்றையும் அழகாக கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். கமல் ரசிகர்கள் திரைக்கு முன்பு ஓடிவந்து நாக்கை மடக்கி வெறியாட்டம் போட வைக்கிற அதிரும் பீட்! அந்த ‘கிடதங் கிடதங்’ பின்னணி அருமை! கமல் ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே ‘நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன்’ என்று வைரமுத்துவின் கெத்தான வரிகள் வேறு! கேட்கவா வேண்டும்?

ஹிமேஷ் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிறபோது சற்று ரஹ்மானை நினைவுபடுத்தினாலும் தமிழுக்கு அந்த பீட்களும், அலறும் வயலின்களும், வேகமும் புதியது! மேற்கத்திய வாடை சற்று தூக்கல்! நம்மூர் கர்நாடிக் மியூஸிக்கை ஊறுகாயைப் போல தொட்டுக் கொண்டு விட்டு விட்டாரே என்ற ஏக்கமும் வராமல் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கல்லாவைப் பார்ப்பாரா, கர்நாடிக்கைப் பார்ப்பாரா?.

_ வி. சந்திரசேகரன்

நன்றி : குமுதம்

நல்ல கேள்வியைக் கேட்பது எப்படி?

நிறைய கேள்வி பதில்கள் பதிவகங்களில் கிடைக்கின்றன. இந்தப் பதிவின் இறுதியில் தற்காலத் தொகுப்பை பார்க்கலாம்.

கேள்வி எப்படி கேட்க வேண்டும் என்பதற்காக இந்தக் வலைக்குறிப்பு…

Mortgage crisis; sub prime loan பிரச்சினைகள் என்று ஏழு கடல், ஆறு மலைகளைத் தாண்டி அமெரிக்க கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் புதுமணத் தம்பதியினர். வீடு வாங்கினார்கள். கொஞ்சம் சல்லிசாக கிடைக்கிறது என்பதற்காக மஞ்சக்கடிதாசு கொடுத்தவரின் பழைய வீட்டை அமுக்கிப் போடுகிறார்கள்.

ஹாலில் கோவிந்தா பிங்க் பல்லை இளிக்கிறது. அவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் விஸ்டாவின் இனிமையான வண்ணங்கள் மட்டுமே மனதுக்கு லகுவாக இருக்கும். மாற்ற முடிவெடுக்கிறார்கள்.

பக்கத்துவீட்டுக்காரன் ஆன என்னை அழைத்து, “உங்களுக்கும் இதே சைஸ் ஹால்தானே? இப்பத்தான் வெள்ளையடிச்சேன்னு சொல்றீங்க… எத்தனை டப்பா பெயிண்ட் வாங்கினீங்க?”

“ஏழு” என்றேன்.

சூலா அமுது கூட விருந்தோம்பாமால், துரத்திவிட்டு விடுகிறார்கள்.

ஹோம் டிப்போ சென்று ஏழு டப்பாவை வாங்கி, வேலையை ஜரூராக ஆரம்பிக்கிறார்கள். நான்காம் டப்பா முடிவதற்குள் ஹால் பளிச்சென்று தயார்.

கோபம் கலந்த குழப்பத்துடன் மாம்பழ மார்ட்டினி பருகும் ராத்திரியில் கதவு தட்டப்படுகிறது. “நீங்க சொன்ன பேச்சக் கேட்டதால், மூணு டப்பா வேஸ்டு!!” என்கிறார்கள்.

“ஓ… உங்களுக்கும் பாக்கி ஆயிடுச்சா!” என்று வழியனுப்பினேன்.

கேள்வி வடிவமைப்பது ரொம்ப முக்கியமான விஷயம்.

இனி பதிவுகள்…

  1. தனித்திரு விழித்திரு பசித்திரு – செந்தழல் ரவி: “முடியல முடியல் – கேள்வி பதில் பதிவு”
  2. Vasantham Ravi வசந்தம் ரவி: “வசந்தம் ரவி ரிடன்ஸ் – கேள்வி பதில் பதிவு”
  3. முதுவை ஹிதாயத்: இஸ்லாம் கேள்வி-பதில்
  4. ரவிபிரகாஷ் – ஏடாகூடம்: கற்பனைக் கேள்வி பதில்! (கல்கி – 30.3.80)
  5. :-): தானே கேள்வி தானே பதில் – அதிரடிப் பதிப்பு!!
  6. பரஸ்பர நிதி: பரஸ்பர நிதி – கேள்வி பதில் 2 (Mutual Funds. Q&A part 2)
  7. நாகரீக கோமாளி: பதில்களற்ற கேள்விகள்
  8. தமிழ் பைபிள் பாருங்க: கிறிஸ்த்தவம் கேள்வி பதில்
  9. Dondus dos and donts: டோண்டு பதில்கள் – 21.03.2008
  10. ஆச்சார்ய ஹ்ருதயம்: குருவிடம் சில கேள்விகள் – 2
  11. கலைஞருக்கு சில கேள்விகள்… « கடுகு.காம் – Kadugu.Com
  12. IdlyVadai – இட்லிவடை: இட்லி வடை பதில்கள் 31-3-2008

தோல்வியடைய முயன்று வெற்றி பெற்றால், தோல்வியா? வெற்றியா??

பொன்ஸ், பத்ரி, பாரா, சுப்புடு, ஜெமோ போன்ற வலைப்பதிவுகள், பல முன்னணி திரட்டிகளில் காணக் கிடைப்பதில்லை. திரட்டிகளில் இருக்கும் பதிவுகள் என்பது ஒரு அணித்தொகுப்பு என்று வைத்துக் கொண்டால், இந்த மாதிரி இணைக்காத பதிவுகள் மற்றொரு அணிக்கோர்ப்பா?

பெர்ட்ரண்ட் ரஸல் கேட்டிருக்கிறார்.

ஒரு ஊரில் ஒரு நாவிதன் இருக்கிறார். அனவருக்கும் இவர் மட்டும்தான் சவரம் செய்கிறார். சொந்தமாக மழிக்காத எல்லாருக்கும் சேர்த்து, இவர் ஒருவர்தான் இருக்கிறார். அப்படியானால் நாவிதன் தனக்குத்தானே சவரம் செய்வாரா?

ஆம், என்றால் நாவிதன்தானே இவருக்கு சவரம் பார்க்க வேண்டும்? இல்லை என்றால், சொந்தமாகத்தானே சவரம் செய்து கொள்கிறார்.

இது அம்பட்டமுரண்படு மெய்மை.

இதன் மேற்சென்று க்ரெலிங்கும் நெல்சனும் விரிவான முரணுரையை சொல்கிறார்கள்.

வார்த்தைகள் இருவகைப்படும். Autological & Heterological – முறையே, காரணப்பெயர் & இடுகுறிப்பெயர் போல் வைத்துக் கொள்ளலாம்.

முதலில் autological – வார்த்தையின் பொருளுக்கு ஏற்றபடு அமைந்திருக்கும். ஆங்கில உதாரணமாக”seventeen-lettered” (மொத்தம் பதினேழு எழுத்துகள் இருக்கிறது); சில பொருத்தமான தமிழ் எடுத்துக்காட்டுகள்:

  • குட்டி (சிக் + நச்)
  • இடக்கு மடக்கு (சொல்வதற்குள் பொருட்குற்றம் ஏற்படலாம்)

இந்த மாதிரி பொருளுக்கும் வார்த்தை ஒலிக்கும் சம்பந்தமில்லாதவை Heterological. ஆங்கிலத்தில் monosyllabic (எத்தனை உயிரெழுத்து சப்தங்கள் நிறைந்த வார்த்தை… அதைப் போய்…)
தமிழில்…

  • நீண்ட
  • தானியம் (ஆட்டோவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்)
  • முழுமையற்றது

இப்பொழுது செந்தில், கவுண்டமணியிடம் கேள்வி கேட்கும் சமயம்:

இடுகுறி பெயர் என்பது காரணப்பெயரா அல்லது இடுகுறிப் பெயரா?

மாபெரும் விலைக்குறைப்பு – நகைக்கடையும் லாலுவின் இரயில்வேயும்

இந்திய வரலாற்றிலேயே, எந்த துறையாக இருந்தாலும் சரி. “கட்டணம் குறைப்பு” என்ற தலைப்பை செய்தித்தாள்களில் முதன்முறையாக இன்றுதான் இந்தியன் பார்க்கிறான்.
லக்கிலுக்

தினத்தந்தி செய்தியின் படி:

தூரம் (கி.மீ.) – தற்போதைய கட்டணம் – புதிய கட்டணம் – கட்டண குறைப்பு
100 – ரூ.33 – ரூ.32 – ரூ.1
200 – ரூ.55 – ரூ.53 – ரூ.2
300 – ரூ.76 – ரூ.73 – ரூ.3
400 – ரூ.95 – ரூ.91 – ரூ.4
500 – ரூ.114 – ரூ.109 – ரூ.5
700 – ரூ.146 – ரூ.139 – ரூ.7
900 – ரூ.173 – ரூ.165 – ரூ.8

அமெரிக்காவின் ஆம்ட்ராக் இருவுள் நிறுவனம், விமானசேவைக்கு பலியாகிக் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசின் தாராளமான மானியங்களினால் ஓரளவு தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அது மாதிரி ஆகாமல், பணவீக்கத்துக்கு ஏற்ப கட்டணங்களை உயர்த்தாமல் இருப்பதற்கு லாலுவை பாராட்டவேண்டும்.

அதே சமயம், ஒத்தை ரூபாயை பேரம் பேசுவது போல் இறக்கிவிட்டு, ‘இமாலய விலைக்குறைப்பு’ என்று சந்தைப்படுத்துவது, லல்லுவின் மானகைத் திறனை பறைசாற்றுகிறது.

தகவலறியும் சட்டத்தின் மூலம் அல்லது விஷயமறிந்தவர்கள் மூலம் அறிய விரும்புபவை:

  • Safety: கடந்த ஆணடில் எத்தனை விபத்துகள் நடந்தன? இவற்றில் எப்பொழுது எல்லாம் இந்திய இருவுள் அலுவலரின் கவனக்குறைவினால் நிகழ்ந்தது?
  • Danger/Prevention: காரோட்டி வந்து மோதியவர்கள், கடக்கும்போது தவறிப் போனவர்கள் ஆகியவற்றின் கணக்கு என்ன? இவற்றைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது
  • Security: சம்ஜவுதா குண்டுவெடிப்பு போன்றவை தடுக்க, அண்டை நாடுகளுடனான போக்குவரத்தில் உள்நுழைபவர்களுக்கான சோதனை, விமான பாதுகாப்பு பரிசோதனை போல் உள்ளதா?
  • Disabled Friendly: கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு வசதியாக இருவுள் நிலையங்களும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் அமைந்திருக்கின்றனவா? எத்தனை? மற்றவை எப்பொழுது மாற்றப்படும்
  • Privacy Protection: பெயர்களை வெளியில் ஒட்டும் முறை இன்னும் தொடர்கிறதா? ஏன்? தனி மனிதரின் பெயர்/வயது/பால்/இனம்/மொழி போன்றவை இவ்வாறு வெளிப்படுத்துவது தடுக்கப் பட முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா?
  • On time Performance: எத்தனை இரயில்கள் நேரத்துக்கு சென்றடைகின்றன? அரை மணி நேரத்துக்கு மேல் தாமதமாக செல்லும் சதவிகிதன் என்ன?