Dharmapuri, Krishnagiri, Salem, Namakkal, Erode, Kovai, Nilgiri, Dindugul

தமிழ் முரசு:

Theni, Madurai, Karur, Trichy, Perambalur, Nagai, Tanjore, Thiruvaarur & Pudukottai

தமிழ் முரசு:
Theni, Madurai, Karur, Trichy, Perambalur, Nagai, Tanjore, Thiruvaarur & Pudukottai

Tamil Proof Reading – Raghu

சிவாஜியே ஆனாலும்…மின்னஞ்சலில் நண்பர் ரகு

சூப்பர் ஸ்டார் நடித்து, ஷங்கர் இயக்கினாலும் சரியான எடிட்டிங் இல்லையென்றால் படம் பப்படம்தான். அதே போல் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும், எழுதியது அழியா காவியமாக இருந்தாலும் சரியான ப்ரூஃ ரீடங் இல்லையெனில்….

இந்த பிரச்சனை தமிழுக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் உண்டு. ஆங்கிலத்தில் மின் புத்தகங்கள் வளரும் வேகத்தில் இணையத்திலேயே ப்ரூஃ ரீடிங் கற்றுக் கொடுக்கிறார்கள்.

Proof Reading Course

இது போல் ஒரு சேவையை/வியாபார உக்தியை தமிழில் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அச்சில் உள்ளது போல் இணையத்திலும் தமிழ் சிறப்பாய் வளர இது உதவும். வெளிநாட்டில் வளரும் அடுத்த தலைமுறையினருக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

இணையத்தில் தமிழ் கற்றுக் கொள்ள ஒரு தளம் பார்த்த ஞாபகம்.. யாருக்காவது பல்ப் எரிகிறதா?


|

Classified

வரி 1:
இந்த மாத கில்லியில் வெளியான விருந்தினர் பார்வை: ப்லோகாயதம். (ஸ்ரீகாந்த் மீனாக்ஷிக்கு நன்றி.)

விளம்பரம் 2:
சென்ற வார திண்ணையில் வெளியான என்னுடைய சிறுகதை: வரி விளம்பரம். (திண்ணைக்கு நன்றி.)

#3:
ஏப்ரல் மாத ‘தேர்தல் சிறப்பிதழ்’ திசைகளில்: தமிழகத் தேர்தல் குறித்த அலசல் – கூட்டாஞ்சோறு ஆட்சி. (திசைகளுக்கு நன்றி. என்னுடைய தட்டச்சுப் பிழை ஒன்று கருத்தையே மாற்றியிருக்கிறது. சரி செய்து, வலைப்பதிவில் மீள்பதிவு செய்கிறேன்.)


|

ADMK vs DMK: District Wise Pairings

DMK Alliance Contestants vs ADMK Partner Candidates

நன்றி: தமிழ் முரசு

Tamil Murasu: DMK’s Women Contestants’ Profiles

Lady Contestants from DMK

நன்றி: தமிழ் முரசு

Dalit Panther vs Paraiyar Peravai : Dinakaran

Paraiyar Peravai Contest Against DPI

நன்றி: தினகரன் இ-தினசரி

அன்புத் தோழி – திருமா

சினிமா சுவரொட்டி (நன்றி: தினமணி)

Anbu Thozhi Poster

Salma Interview – Dinamani

கவிதையில் இருந்து அரசியலுக்கு வந்த சல்மா : “திமுக தலைவர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழியின் நண்பர் என்பதால் எனக்கு சீட் கிடைத்துவிடவில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என தலைவர் விரும்புவதால் எனக்குரிய தகுதிகளை ஆராய்ந்து பார்த்து சீட் தரப்பட்டிருக்கிறது” என்கிறார் மருங்காபுரி திமுக வேட்பாளர் ஏ. ரொக்கையா மாலிக் என்ற சல்மா.

கவிஞர் சல்மா என்பது நவீன இலக்கிய வட்டாரத்தில் அறிந்த பெயர்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சொந்த ஊர். வயது 37. அப்பா சம்சுதீன் ஸ்டீல் வியாபாரம். அம்மா சர்புன்னிசா இல்லத்தரசி. சல்மா 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். அதற்கு மேல் பள்ளி செல்லவில்லை.

கணவர் அப்துல் மாலிக் வர்த்தகர். 2 மகன்கள்.

பள்ளிப் படிப்பை நிறுத்திய பிறகு வீட்டில் நிறைய புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இருந்தது. அப்போது இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. கவிதைகள் எழுதத் தொடங்கினார். முதலில் சிறு பத்திரிகைகளில் வெளியாகத் தொடங்கியது. அப்போது வயது 15.

2 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். “ஒரு மாலையும் இன்னொரு மாலையும்” என்ற தொகுப்பு 3 பதிப்புகள் பிரசுரம் ஆகியுள்ளது. “பச்சை தேவதை” என்பது இன்னொரு தொகுப்பு. “இரண்டாம் ஜாமங்களின் கதை” என்ற நாவலும் எழுதியிருக்கிறார்.

இலக்கிய நிகழ்ச்சிகளில் கனிமொழியை சந்தித்தது உண்டு. மற்ற இலக்கிய நண்பர்களைப் போல கனிமொழியும் ஒரு நண்பர். மற்றபடி அவரால் தான் சீட் கிடைத்தது என்று கருதக் கூடாது என்கிறார் சல்மா.

பொன்னம்பட்டி சிறப்பு ஊராட்சித் தலைவராக இருக்கும் சல்மா, சிறந்த ஊராட்சி என்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் பரிசு பெற்றிருக்கிறார். இலக்கிய ஆர்வத்துக்காக சில பரிசுகள் பெற்றிருக்கிறார்.

எந்தக் கட்சியுமே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தரவில்லையே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, “யாருமே 33 சதவீதம் தரவில்லை என்பது உண்மைதான். அதற்கான முயற்சியை எங்கள் தலைவர் தொடங்கி வைத்திருக்கிறார். விரைவில் பெண்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கும்” என்று சொன்னார் நம்பிக்கையுடன்.

பேட்டி: கே.எம். சந்திரசேகரன்

Vaiko’s poser to Karunanidhi

தி ஹிந்துவின் செய்தி: The Hindu : Tamil Nadu News : Vaiko’s poser to Karunanidhi

எந்த ஆட்சி? வாக்காளர் சிந்திக்க வைகோ வேண்டுகோள்தினமணி

தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை குவித்துக் கொண்டிருக்கிறது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம், ஒரு குடும்பத்திற்காக நடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். (டபுள் மீனிங் பேச்சு பேசுறாரே!)

கருணாநிதிக்கு குடும்பம் இருப்பதை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால், அந்தக் குடும்பத்திற்காக கட்சியையும், ஆட்சியையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம். (கருணாநிதியை மட்டும் க்வாலிஃபை செய்து பேசுறாரே; இராமதாஸையும் சேர்த்துக் கொண்டிருக்கலாம்?)

இதுவரை பதில் இல்லை: மதிமுக எம்.பி.க்களையும் சேர்த்து மத்தியில் திமுக அமைச்சர் பதவியைப் பெற்றது என, மார்ச் 19-ல் புகார் தெரிவித்தேன். இதுவரை பதில் இல்லை. (போன வருடம் அமைத்த அமைச்சரவைக்கு இப்பத்தானே கேள்வி கேட்கிறார்; அடுத்த வருடம் வாக்கில் கருணாநிதியும் பதில் சொல்லிடுவார்!)