Thanga Vettai

சுடுசோறு – இதன் இலக்கணக் குறிப்பு என்ன?

. பெயரெச்சம்
. வினைத்தொகை
. வினையெச்சம்
. வினைச்சொல்

தங்கவேட்டையில் நேற்று பாடலாசிரியர்களும், பின்னணிப் பாடகர்களும் கலந்துகொண்ட ரம்யா நிகழ்ச்சி. முதன்முதலில் தமிழ் அகராதி வெளியிட்டவர், ஒப்பிலக்கணம் கொடுத்தவர் போன்ற எம்.ஏ.த்தனமான கேள்விகளுக்கு நான் எளிதாக விடையளித்து, என்னுடைய இலக்கிய புலத்தை மனைவிக்கு ஃபிலிம் காட்டிக் கொண்டிருக்கையில், என்னை சறுக்கிவிட மேற்காணும் கேள்வி உதவியது.

உங்களுக்காவது சரியான பதில் தெரியுமா?

நிகழ்ச்சியில் இருதயா இந்தக் கேள்விக்கு நொடி கூட யோசிக்காமல் சரியான விடையை சொன்னார். திருமுருகாற்றுப்படையை எழுதியவர் திருவிளையாடியது போல் அரங்கினுள், எவராவது முன்கூட்டியே சொல்லி வைத்திருப்பார்களோ என்று பொறாமைப்படவைக்கும் அளவு instantaneous வேக பதில் கொடுத்தார்.

  • போன பிறப்பில் கேபி சுந்தராம்பாளாக இருந்திருப்பாரோ என்று எண்ண வைக்கிறார் ‘மன்மத ராசா’ மாலதி.
  • பிஜிஎம் இல்லாமலே ஹரீஷ் ராகவேந்திராவின் குரல் திரையிசைக்கு ஒப்பாக மிளிர்கிறது.
  • ‘நான் எழுதினதிலே எனக்குப் பிடிக்காத பாடல் என்று எந்தப் பாடலுமே கிடையாது’ என்று அசல் கலைஞனுக்குரிய பெருமிதத்துடன் ‘கொக்கோ கோலா ப்ரௌவுன் கலருடா (போடாங்கோ)’ போன்ற பாடல்களை எழுத்தாணிய கலைக்குமார் பகிர்ந்தார்.
  • ஸ்ரீலேகா பார்த்தசாரதி ஏன் இன்னும் ஹீரோயின் ஆகவில்லை? குறைந்தபட்சம் ‘த்ரிஷா’ போன்ற அக்கா நடிகைகளுக்குத் தங்கச்சியாகவாவது வேடம் கட்டலாமே…
  • விஜய் யேசுதாஸ் ஏன் இன்னும் ஹீரோ ஆகவில்லை? (கு.ப. சிம்பு போன்ற தம்பி நடிகர்களுக்கு அண்ணன் ஆ.வே.க.?)
  • மேட்ச் ஃபிக்ஸிங் நடத்தினால், தமிழ்மணத்தில் போலி நட்சத்திர வாக்களித்தால், தப்பிக்கிற மாதிரி தப்பு செய்யவேண்டும். தங்கவேட்டையை சுவாரசியமாக்க, இந்த மாதிரி celebrity போட்டிகளில் இரு அணிகளுக்கும் சம அளவில் வென்று வருவதை இன்னும் கொஞ்சம் இலை மறை கனியாக நடத்தலாம்.
  • தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் தங்கங்கள் மட்டுமாவது நேரத்தோடு உரியவர்களை சென்றடையுமா?

    | |

  • Dalit Writer Ravikumar Interview – Dinamani.com

    எழுத்திலிருந்து முழு நேர அரசியலுக்கு – பொன். தனசேகரன்

    மக்கள் சிவில் உரிமைக் கழகம் மூலமும் தலித் இயக்கம் மூலமும் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ் கருத்துலகில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகக் கருதப்பட்ட ரவிக்குமார் (45) விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    “திருமாவளவன்தான் என்னை வற்புறுத்தி போட்டியிடச் செய்துள்ளார். அவர் போட்டியிட இருந்த தொகுதியை எனக்கு அளித்துப் போட்டியிடச் செய்ததை எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறேன்” என்கிறார் ரவிக்குமார்.

    கொள்ளிடம் அருகே மாங்கணம்பட்டு என்ற ஊரில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற அக்குடும்பத்தின் முதல் பட்டதாரி.

  • கண்காணிப்பின் அரசியல்,
  • கட்டிலில் கிடக்கும் மரணம்,
  • மால்கம் எக்ஸ்,
  • கடக்க முடியாத நிழல்,
  • கொதிப்பு உயர்ந்து வரும்,
  • வன்முறை ஜனநாயகம்,
  • தலித் என்ற தனித்துவம்,
  • பணிய மறுக்கும் பண்பாடு…
    என்று இவரது நூல்களின் பட்டியல் தொடரும். கதை, கவிதை, மொழிபெயர்ப்பு, இலக்கியம், பத்திரிகைகள் என இவரது எழுத்துலகம் விரிந்தது. தமிழ்நாட்டில் 10-வது நிதிக் குழுவின் துணைக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

    விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே அவர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டவர் அவர். “முழுநேர அரசியலில் இறங்க முடிவெடுத்தது சரியான முடிவு. தேர்தலில் போட்டியிடுவதற்காக எனது சிண்டிகேட் வங்கிப் பணியை விடவில்லை” என்கிறார் ரவிக்குமார்.

    “எழுத்தாளராக இருந்து சுதந்திரமாகச் செயல்பட முடிந்த அளவுக்கு கட்சி அமைப்பில் உங்களால் செயல்பட முடியுமா” என்று கேட்டதற்கு,”எந்த ஒரு சுதந்திரமும் ஒரு வரையறைக்கு உட்பட்டே இருக்கிறது. எழுத்தாளரின் படைப்பாக்கமும் கற்பனையும் அரசியலில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்த முடியும், எழுத்துச் சுதந்திரத்துக்கும் அரசியல் இயக்கத்தில் செயல்படுவதற்கும் முரண்பாடு இருப்பதாகக் கருதவில்லை” என்கிறார் அவர்.

    “தேர்தல் அரசியலின் வரையறைகளை உணர்ந்தே இருக்கிறோம். ஜாதி ஒழிப்பு என்பது எங்களது இறுதி இலக்கு. தனித் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் கட்சி வேட்பாளர்கள், சட்டமன்றத்தில் தலித் மக்களின் உரிமைக் குரலை பிரதிபலிப்பதில்லை. தலித் இயக்கங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், அம்மக்களுக்கான உயிர்நாடிப் பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்ப முடியும். எனவேதான் சமூக இயக்க தளத்திலிருந்து அரசியல் தளத்தை நோக்கி நகர்ந்துள்ளோம்” என்பது ரவிக்குமாரின் கருத்து.

    காட்டுமன்னார் கோவில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அத்தொகுதியை மாதிரி தொகுதியாக்கிக்காட்டுவேன் என்று கூறுவதுடன் அதற்காக வைத்திருக்கும் பல்வேறு திட்டங்களையும் விளக்குகிறார் ரவிக்குமார். எழுத்துக் களத்தில் தனது தனி முத்திரையைப் பதித்த ரவிக்குமார், தேர்தல் அரசியலில் எப்படி இயங்கப் போகிறார் என்பதை இனிமேல் பார்க்க வேண்டும்.

  • Subramaniam Swamy’s Election Manifesto – Dinamani

    தைரியமான தேர்தல் அறிக்கைதினமணி

    பெரும்பாலான மக்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கு மாற்று கருத்து கூறும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. ஆனால் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கட்சித் தேர்தல் அறிக்கையில் தைரியமாக சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

    ரேஷன் கடைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லி உள்ளார். அதற்கு மாற்றாக அவர் முன்வைத்துள்ள திட்டம் சிறப்பான திட்டம்தான் என்றாலும் அது நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

    தமிழகத்தில் ஹிந்தி கற்பிக்கப்படும். மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்ற நெஞ்சை நிமிர்த்தி கூறியுள்ளார்.

    கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்தான் நாடாளுமன்ற தோல்விக்கு காரணம் என்று கருதி முதல்வர் ஜெயலலிதா அதை கைவிட்டதோடு பாஜக ஜனதாகூட அதற்கு பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை. ஆனால் கட்டாய மதமாற்ற தடை சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

    ஓட்டுக்காக ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு சிறுபான்மையினரை தாஜா செய்ய முயற்சியில் ஈடுபட்டிருக்க இவரோ சிறுபான்மையினர் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு தேவையற்ற அளவுக்கு சலுகைகள் கொடுக்கப்படுவதாக குறை கூறியுள்ளார்.

    எல்லாவற்றுக்கும் மேலாக ஜயேந்திரர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு. அந்த வழக்கை ஜோடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். ஜயேந்திரர் கைது விவகாரம் குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரே கட்சி ஜனதா கட்சி மட்டுமே.

    அவர் கூட்டணி சேர்ந்துள்ள பாரதீய ஜனதா கட்சி கூட தேர்தல் அறிக்கையில் ஜயேந்திரர் கைது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று அடித்துச் சொல்லியுள்ளார்.

    தமிழகத்தில் எல்லா கட்சிகளிலும் இருந்து வித்தியாசமான கருத்துகளை முன்வைத்துள்ளார் சுப்பிரமணியசுவாமி.

    Karunanidhi Interview in Anandha Vikadan

    ஆனந்த விகடன்கலைஞரின் பேட்டி :

    ‘‘ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சிம்ரன் தேர்தல் பிரசாரத்தில் குதிக்கிறார். பாக்யராஜ் திடீரென தி.மு.க&வில் இணைகிறார். சினிமா கவர்ச்சி இல்லாமல் தமிழக அரசியல் இயங்க முடியாதா?’’

    ‘‘சிம்ரன் எங்கு பிறந்தார், வளர்ந்தார் என்பது பிரச்னை இல்லை. ஆனால், அவருக்குத் தமிழ் நாட்டைப் பற்றி என்ன தெரியும்? அவர் வந்து திடீரென்று ஒரு கட்சிக்கு ஆதரவு திரட்டினால், அதற்குப் பெயர்தான் சினிமா கவர்ச்சி!

    ஆனால், பாக்யராஜ் சினிமாக் காரர் மட்டுமல்ல. நல்ல சிந்தனை யாளர். பத்திரிகையாளர். அவரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியல் கட்சிகளை நன்கு அறிந்தவர்.

    சினிமாக்காரர்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு கவர்ச்சி இருப்பது உண்மைதான். வழக் கறிஞர், மருத்துவர், பொறியாளர் என எல்லாத் துறைகளைச் சேர்ந்தவர்களும் அரசியலுக்கு வரும்போது சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல முடியாது. அதற்காக, பாக்யராஜும் சிம்ரனும் ஒன்றா என்ன?’’

    ‘‘வாய்ப்பு வழங்கப்பட்டவர்களிலும் தி.மு.க-வின் பழைய முகங்களே அதிகம் தெரிகிறார்கள். உதாரணமாக, சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் என ஒரே குடும்பத்தில் இருவருக்கும் சீட் வழங்கி இருக்கிறீர்களே?’’

    ‘‘தி.மு.க. போட்டியிடும் மொத்த இடங்களில் 88 இடங்களுக்கு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறோம். இதற்கு மேல் புதியவர்களை எப்படி வரவேற்பது? வீரபாண்டி ஆறுமுகத்துக்கும் அவருடைய மகன் ராஜாவுக்கும் சீட் வழங்கியிருப்பது விதிவிலக்கு. அவர்கள் அப்பா, மகன் என்பதால் அல்ல; வெற்றி வாய்ப்புள்ள கழக வேட்பாளர்கள் என்பதை மனதில்கொண்டே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.’’

    முழுவதும் விகடன்.காமில் கிடைக்கிறது.

    Election Songs – Nakkeeran

    நக்கீரன்பட்டையை கிளப்பும் பாடல்கள்!

    தேர்தல் களம் ஹீட்டாகிக்கொண்டிருக்கிறது. அதே நேரம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பாடல்களும் ஹிட் அகி வருகின்றன. சோடாத் தண்ணியை குடிச்சிட்டு தொண்டைத் தண்ணி வத்த பேசுவது ஒரு பக்கம் ஆருந்தாலும்… தங்கள் எதிரிகளைக் குறிவைத்து பிரத்யேகமாக எழுதப்பட்ட பாடல்களைத்தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர் தேர்தல் களத்தில்.

    யார், யாருக்கு எத்தனை சீட்? உளவுத்துறை சர்வே முடிவு!

    ஏப்ரல் 5ந் தேதியிருருந்து 10ந் தேதிவரை மாநில உளவுத்துறை எடுத்த சர்வேயில்
    தி.மு.க.வுக்கு 100,
    காங்கிரசுக்கு 33,
    பா.ம.க.வுக்கு 24,
    சி.பி.எம். 9,
    சி.பி.ஐ. 8,
    மு.லீக். 2
    176 தொகுதிகளும்

    அ.தி.மு.க.வுக்கு 50,
    ம.தி.மு.க.வுக்கு 5,
    சிறுத்தைகளுக்கு 3
    58 தொகுதிகளும் கிடைக்கும்

    Meera Jasmine Campaigns for ADMK?

    Ms J Jayalalitha is my rolemodel both in films and outside the industry.- Meera jasmin

    சி.மு. பாலசுப்ரமணியன், எஸ். ப்ரேம்நாத், ஆர். முத்துக்குமரன் கைவண்ணத்தில் அதிமுக தொண்டர்களினால் உருவாகிய தளத்தில் ‘மேற்கோள்’ காட்டியிருக்கிறார்கள். (வழி: தினமணி – இணையதளத்திலும் தேர்தல் பிரசாரம் : வி. கிருஷ்ணமூர்த்தி)

    Ambedkar Brithday – Dinamani

    போற்றுதல் பொருட்டு… :: ஆதவன் தீட்சண்யா

    வழக்கம்போலவே தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் மட்டுமே சில விழாக்கள் நடைபெறும். மற்றபடி பொதுவாக சில தலைவர்கள் தாங்களாகவே நேரடியாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பர். சிலர் தம் சார்பாக யாரையாவது அனுப்பி வைப்பர். ஒருவேளை இது தேர்தல் காலமாக இருப்பதால் மாலைகளின் தடிமன் மற்றும் எண்ணிக்கைகள் கூடும் வாய்ப்புள்ளது.

    எப்படியாயினும், அம்பேத்கர் என்கிற உருவம் இன்று அரசியல் களத்தில் ஒதுக்கி வைக்கப்படுவதாயில்லை. அது பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கட்சிகளின் பதாகைகளில் மிகுந்த பெருந்தன்மையோடும் சகஜ மனோபாவத்தோடும் அவர் படம் இடம் பெற்றுள்ளது. அதாவது தன்னை சாதிய உணர்விலிருந்து விடுபட்டவராகக் காட்டிக்கொள்ள விரும்பும் தலித் அல்லாத தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் அம்பேத்கர் என்கிற உருவம் அப்படியானதொரு அங்கீகார முத்திரையாக மாறியிருக்கிறது.

    உண்மையில் அம்பேத்கர் தனக்கான அங்கீகாரத்திற்காக வாழ்நாளில் எதுவொன்றையும் செய்தாரில்லை. தனது உழைப்பையும் அறிவையும் தனக்குக் கிடைத்த அதிகாரங்களையும் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வையும் ஒடுக்குமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் மனிதஜீவிகளுக்குள் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்குமே பயன்படுத்தினார். ஆனால் இன்று அவரைக் கொண்டாடுபவர்கள், அவர் பெயரால் இயங்கும் அமைப்புகள் பெரும்பாலானவற்றுக்கும் அவரது உருவம்தான் தேவைப்படுகிறதேயன்றி அவரது சிந்தனைகளல்ல.

    பன்முகப்பட்ட ஆளுமையும் செயல்திறமும் கொண்டு விளங்கியவர். இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடையாய் இருக்கின்ற சாதியத்திற்கு எதிராக அறிவாயுதம் ஏந்தி வாழ்நாள் முழுவதும் போராடியவர்.

    கல்வியும் தகுதியும் திறமையும் உள்ள யாரையும் இச்சமூகம் கொண்டாடும் என்னும் பசப்பலான வாதங்களின் பின்னே பதுங்கியிருக்கும் போலித்தனங்களையும் சாதி உளவியலையும் அவரது வாழ்க்கையே அம்பலப்படுத்துகிறது. அவரளவுக்கு படித்தவர்கள் நம் நாட்டில் இன்றளவும்கூட வேறெவரும் இல்லை. இருந்தும் அம்பேத்கரை ஒரு தேசியத் தலைவராக, பெருமைமிக்க நமது முன்னோடிகளில் ஒருவராக, மாபெரும் கல்வியாளராக, வரலாற்றாய்வாளராக, சட்ட வல்லுநராக, ஒடுக்குமுறைக்கு எதிரான போராளியாகக் கொண்டாடுவதைத் தடுப்பது எது?

    நகரமயமாக்கமும் கல்வியும் நவீனத் தொழில்நுட்பமும் சாதியத்தைப் பொருள்படுத்துவதில்லை என்றும் எனவே அம்பேத்கரின் குற்றச்சாட்டுகளும் வாதங்களும் இன்று பொருந்தாது என்றும்கூட வாதிக்கப்படுகிறது. ஒரு தலித் சத்துணவு ஊழியர் சமைத்த உணவைச் சாப்பிடுவதற்குத் தமது குழந்தைகளை அனுமதிக்காத கிராமத்தாருக்கும், வால்மீகி சாதிப் பெண்களை வீட்டு வேலைக்குச் சேர்த்துக்கொள்ள மறுக்கிற தில்லிக்காரருக்கும் வாய்த்திருப்பது ஒரே மனநிலைதான். அது தீட்டு குறித்த அச்சமும் தலித்துகள் குறித்த இழிவான பார்வையும்தான்.

    உண்மையில் நகரத்திற்கென்று ஒரு சொந்த முகம் கிடையாது. சாதியத்தால் ஊரென்றும் சேரியென்றும் பிளவுண்டு, ஏற்றத்தாழ்வு என்பதை இயல்பானதொரு மதிப்பீடாகப் பயின்று வாழும் கிராமங்களிலிருந்து தனது சொந்த சாதி சார்ந்த பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், மொழி, பெருமிதங்களோடு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டவர்களின் தொகுப்பாகத்தான் நமது நகரங்கள் உள்ளன.

    தற்காலத்தில் ஒரு பஸ்ஸில் பயணிப்பது அல்லது திரையரங்கில் படம் பார்ப்பதைப் போலவே குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக ஒரு தொழிலகத்திலோ அலுவலகத்திலோ கூடுவதற்கும் சாதி ஒரு முன்நிபந்தனையாக வைக்கப்படுவதில்லை. ஆனால் அவ்விடத்திலும் அவர் தன் சாதியைத் துறக்க வேண்டியவராயில்லை. அவ்விடத்தில் அவர் வெளிப்படுத்தும் அதிகபட்ச சமத்துவ குணம் என்னவென்றால் தனது சக ஊழியர்கள் இன்னின்ன சாதியராகத்தான் இருக்க வேண்டும் என்று கோராமல் இருப்பதுதான். அந்த அலுவல் நடக்கும் போதும் முடிந்தபின்னும் வீடு திரும்பிய நிலையிலும்கூட அவர் தனது சுயசாதி சார்ந்த எதுவொன்றையும் இழப்பதில்லை. வெளியிடத்தில் அவர் தீண்டாமையைக் கடைப்பிடிக்காதவராகத்தான் இருக்கிறாரேயொழிய சாதியைக் கைவிட்டவராக அல்ல. தவிரவும் சமூகம் என்பது குடும்பம் என்கிற சிற்றலகுகளின் தொகுப்புதானே? அந்தக் குடும்பங்கள் சாதியின் அடிப்படையில்தானே கட்டமைக்கப்படுகிறது… குடும்பத்திற்குள் – தனிமனித வாழ்வில் சாதியத்தின் இருப்பு நீடிக்கிறவரை சமூகத்திலும் சாதி நீடிக்கவே செய்யும்.

    அரசியல் விருப்புறுதி கொண்ட ஓர் ஆட்சியோ ஒரு தலைவனோ வாய்க்கும்போது வலுவான சட்டங்களின் மூலமாகக்கூட சிலவகையான ஒடுக்குமுறைகளை ஒழித்துவிட முடியும்.

    சாதிரீதியான ஒடுக்குமுறைக்கும் மீறியதாய் பாலின ஒடுக்குமுறை நிலவுகிறது. சாதியைத் தவிர இழப்பதற்கு ஏதுமற்ற தலித்துக்கும் கூட இங்கே இழப்பதற்கு அவரது ஆணாதிக்க மனோபாவம் மிச்சமிருக்கிறது. சமத்துவமின்மையின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துக் களம் கண்ட மகத்தான போராளியான அம்பேத்கரின் சிந்தனை வெளிச்சத்தில் சாதி கடந்த, ஆண் பெண் பேதம் கடந்த மனிதநிலைக்கு மேலெழும்புவதற்கு நாம் யோசிக்கலாம். ஒருவேளை அதுதான் அவர் பிறந்ததற்கும் வாழ்ந்ததற்குமான அர்த்தம் பொதிந்த நமது போற்றுதலாயிருக்கக்கூடும்.

    (அம்பேத்கரின் பிறந்தநாள்)


    | |

    Thirumavalan Interview : Dinakaran

    நன்றி: தினகரன்

    Attention Grabbed News

    சமீபத்தில் என் சிந்தனையை உசுப்பேற்றிய அல்லது அடர்த்தியான விஷயகனம் நிரம்பிய அல்லது ‘டக்கரா யோசிக்கறியே கண்ணு’ என்று ‘அட’ போடவைத்த சில ஆங்கில செய்திக் கோர்வைகள்:

  • நியு யார்க் டைம்ஸ்: இந்தியாவில் நடைபெறும் மாவோப் போராட்டங்கள் குறித்த பதிவு.
  • நியு யார்க் டைம்ஸ்: www.zunafish.com பண்டமாற்றுக்கு குக்கூரல் இடுகிறது.
  • ஹெரால்ட் ட்ரிப்யூன்: வலைப்பதிவு மூலமாக நாலு காசு சம்பாதிக்க வழி காட்டுறாங்க.
  • கார்டியன் புத்தக அறிமுகம்: Are Women Human? எழுதிய Catharine MacKinnon உடன் பேட்டி.
  • வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: அக்னி நட்சத்திரத்துக்கும் சுற்றுச்சூழல் வெப்பமாவதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் என்று சொன்னால் அறிவியலாளர்களுக்கு ஆப்படிக்கப்படுகிறது.
  • அராபிய செய்திகள்: சவூதியில் உள்ளாடைகளை விற்பதற்கு இனி பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்கிறார்கள்.
  • நியு யார்க் டைம்ஸ்: நான் விரும்பிப் பார்க்கும் ‘வெஸ்ட் விங்’ முடிவுக்கு வருகிறது.
  • சூழலியல் தூய்மை: மகிழுந்தில் இருந்தும் நச்சுப்பொருட்கள் என்னவென்று தெரியுமா?
  • ஆன்லைன் வாய்ஸ்: எழுத்தாளர் சுஜாதாவுடன் செவ்வி.
  • எம்.ஐ.டி. vs கலிஃபோர்னியா பல்கலை: திருட்டு படவா என்று சொல்லலாமா? (கல்லூரிகள் பெண்களைக் கவர்வதில்தான் சண்டை வரும்; இவர்கள் கவர்ச்சியில்லாத பீரங்கியை அல்லவா கடத்துகிறார்கள்.)

    | |

  • Pudupettai Banner Causes Traffic Woes

    முன்னுமொரு காலத்தில் லேஸி கீக் இப்படியெல்லாம் அருமையான புகைப்படங்களை தன் வலைப்பதிவில் இடுவார். சென்னையில் வசித்தாலும், எப்படி இவரால் மட்டும் பல்லவன் விரையும் சென்னை சாலைகளில் படம் எடுக்க முடிகிறது என்று ஆச்சரியப்படுவேன்.

    இப்பொழுதுதானே புரிகிறது…

    இப்படி டிராஃபிக்கில் நின்று கொண்டிருந்தால், வண்டியை நடு ரோட்டில் நிறுத்தி விட்டுக் கூட நிழற்பட ஓவியராகலாம்!

    Traffic Congestion in Madras with Pudupettai movie banner as Backdrop

    வெளியான தினசரி: தினமலர்


    | |