Jaya joins issue with Stalin on desalination project

Jaya joins issue with Stalin on desalination project

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை எனது அரசு நிறைவேற்ற முடியாததற்கு முதல்வர் கருணாநிதியும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாவும் தான் காரணம் என்றும் இந்த விஷயத்தில் எனது அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் எனது அரசு ஏற்கனவே செய்து முடித்து விட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜா அந்தக் கோப்பில் கையெழுத்திட வேண்டியதுதான் பாக்கி. அதைச் செய்ய அவருக்கு கருணாநிதி உத்தரவிட வேண்டும்.

பழத்தை உரித்துக் கொடுத்து விட்டேன். எடுத்து சாப்பிட வேண்டியதுதான் பாக்கி என்று ஜெயலலிதா சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்து அறிக்கை விட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், பழத்தை உரித்து வைத்து விட்டு அதை 3 ஆண்டுகளாக ஏன் சாப்பிடவில்லை ஜெயலலிதா என்று கிண்டலடித்து பதில் தெரிவித்திருந்தார்.

மீண்டும் அறிக்கை போர்:
ஸ்டாலினின் பதிலுக்கு தற்போது ஜெயலலிதா விரிவான விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை நகர மக்களின் தாகம் தீர்க்க உதவும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 1,000 கோடி நிதியுதவி அளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். ஆனால் சொன்னபடி தமிழக அரசுக்கு நிதி வந்து சேரவில்லை.

காத்திருந்து காத்திருந்து ஏமாந்த எனது தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசின் உதவி இல்லாமலேயே இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தது. அந்த முடிவின்படி, திட்டத்தை வடிவமைத்து, நிர்மாணித்து, இயக்கி, ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் செயல்படுத்த சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டது.

2003ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் டெண்டர்கள் வந்து சேர வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டிருந்தது. 26 ஒப்பந்தகாரர்கள் டெண்டர் விண்ணப்பம் வாங்கியிருந்தும் 2 பேர் மட்டுமே டெண்டரை, கடைசி நாளன்று சமர்ப்பித்தனர்.

ஆனால் இரு ஒப்பந்தகாரர்களுமே உரிய டேவணித்தொகையை செலுத்தத் தவறியதால் 2 டெண்டர்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின்னர் 2003ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியை கடைசி நாளாக கொண்டு 2வது முறையாக டெண்டர் அறிவிக்கப்பட்டது.

இப்போது 3 நிறுவனங்கள் டெண்டர் சமர்ப்பித்தன. இதில் உரிய டேவணித் தொகையை செலுத்திய ஒரு நிறுவனத்தின் டெண்டர் மட்டும் பிரிக்கப்பட்டது. ஆனால், டெண்டர் தள்ளுபடி செய்யப்பட்ட இரு நிறுவனங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் அரசுக்கு சாதகமாக இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது.

இருப்பினும் பிரிக்கப்பட்ட டெண்டருக்குரிய நிறுவனத்தினர் சமர்ப்பித்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லாத காரணத்தால் அந்த டெண்டரை அரசு நிராகரித்து விட்டது.

பின்னர் 3வது முறையாக 2005ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதியை கடைசி நாளாகக் கொண்டு டெண்டர் விடப்பட்டது. இப்போது 7 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் குøந்த தொகைக்கு டெண்டர் கேட்ட ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

டெண்டர்கள் பணிகள் முடிந்த நிலையில், 2005ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை நான் தொடங்கி வைத்தேன். தினசரி 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை உற்பத்தி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

ஆனால் திட்டமிட்டபடி இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இதற்குக் காரணம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜாதான். திட்டத்திற்கு அனுமதி கொடுப்பதை விட்டு விட்டு தேவையில்லாத பல கேள்விகள், சந்தேகங்களைக் கேட்டு திட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுத்தார் ராஜா.

திமுக தலைவர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் இத்திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து நிறுத்தி முட்டுக் கட்டை போட்டார் ராஜா. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 1000 கோடி ரூபாய் உதவி தருகிறது மத்திய அரசு என்று சொல்லிச் சொல்லி வந்தாரே தவிர ஒரு பைசா கூட தமிழக அரசுக்கு இன்று வரை வரவில்லை என்பதே உண்மை.

இப்படிப்பட்ட நிலையில்தான் நாங்களாகவே அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தோம். எங்களுக்காக ஓட்டுப் போட்ட மக்களுக்கு நல்லது செய் வேண்டுமே என்ற எண்ணத்தில்தான் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முயற்சித்தோம். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியும், அவரது கட்சி அமைச்சர் ராஜாவும் சேர்ந்து இத்திட்டத்தை தடுத்து நிறுத்தி விட்டனர்.

உண்மை இப்படி இருக்க நான் வேண்டும் என்றேதான் இத்திட்டத்தை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தினேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அபாண்டமான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஜெ. பச்சை பொய்ஸ்டாலின்:
இந் நிலையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியது ஏன் என ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் சரி, ஆட்சியிலிருந்து இறங்கி விட்ட நிலையிலும் சரி, பச்சை பொய்களை அறிக்கைகளாக வெளியிட்டு பொதுமக்களை ஏமாற்றி திசை திருப்புவதையே தனது வாடிக்கையாகக் கடைபிடித்து வருகிறார்.

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரி பரிசீலனை செய்வதற்கு 2003 முதல் 2005 வரை ஏற்பட்ட 3 ஆண்டு கால தாமதத்துக்கு தற்போது ஜெயலலிதா தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.

நீதிமன்றத்துக்கு பிரச்சனை சென்றதால் தான் தாமதம் என்று சொல்வது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. ஏனென்றால் அந்தப் பிரச்சனை நீதிமன்றத்துக்குச் செல்லக் காரணமே ஜெயலலிதா தான்.

கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி ஜெயலலிதா கையெழுத்திட்டது நன்னீர் கொள்முதலுக்கான ஒப்பந்தம் தான். ஆனால் அனுபவம் மிக்க ஜெயலலிதா வெறும் ஒப்பந்தம் கையெழுத்தானயே திட்டச் செயலாக்க நடவடிக்கை என்று சொல்லிக் கொள்வதை நிர்வாக நடைமுறை தெரிந்த எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இது வரை எந்த அரசும் செய்ய முன்வராத சலுகைகளை ஜவிஆர்சிஎல் என்ற ஒப்பந்த நிறுவனத்துக்கு ஜெயலலிதா செய்திருப்பது பற்றி எனது அறிக்கையில் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் சாதிப்பதன் மர்மம் என்ன?

இந்த பின்னணியை விளக்கி விட்டு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைப் பற்றி மேலும் பேசுவது அனுபவம் வாய்ந்தவருக்கு அழகாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Karunanidhi writes letter to Jayalalitha

Karunanidhi writes letter to Jayalalitha

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் கூடவுள்ள நிலையில், பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இருக்கிறார் கருணாநிதி.

அவரது செயலாளர்களான முனீர் ஹோதாõ, டிஆர் ராமசாமி, ராஜமாணிக்கம் ஆகியோர் திமுகவின் தேர்தல் அறிக்கையை பட்ஜெட்டாக மாற்றுவதில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் நாகநாதனுடன் இரவு பகலாக டிஸ்கஷனில் இறங்கியுள்ளனர். மேலும் இந்த டீம் மற்ற துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது.

இந் நிலையில் பட்ஜெட்டிலேயே இலவச கலர் டிவிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிடவும், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே கலர் டிவிக்களை வழங்கிவிடவும் முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து கலர் டிவிக்கள் வாங்குவது தொடர்பாகவும், டெண்டர்கள் முடிவு செய்வது தொடர்பாகவும் அனைத்து கட்சிக் குழுவை அமைக்க கருணாநிதி முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு தானே கைப்பட கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், கலர் டிவி வாங்க சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு அமைப்பேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னேன். அதன்படி குழு அமைக்க விரும்புகிறேன். உங்கள் கட்சியின் சார்பில் குழுவில் இடம்பெறும் சட்டமன்ற உறுப்பினரின் பெயரைப் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

தனது கையெழுத்துடன் கூடிய இந்தக் கடிதங்களை எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

கடிதத்தைத் பெற்றுக் கொண்டதற்கான அக்னாலட்ஜ்மெண்டையும் இந்தத் தலைவர்களிடம் இருந்து பெற்றுவிட்டதாம் அரசுத் தரப்பு.

இந்தக் கடிதத்துக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரிடம் இருந்தும் பதில் வந்துவிட்ட நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பதில் வரவில்லை. அதே போல வைகோ, திருமாவும் பதில் அனுப்பவில்லை என்று தெரிகிறது.

இதனால் அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை கமிட்டியில் இடம் பெறுவார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது.

இவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் விரைவிலேயே கலர் டிவி டெண்டரை பரிசீலிக்க சட்டமன்றக் கட்சி தலைவர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்படும் என்று தெரிகிறது.


சென்னை வரும் விவசாயிகள்: :: குதிரைப் பந்தயத்தை ஒழித்ததற்காக சென்னையில் குதிரை வீரன் சிலை நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டதைப் போல, விவசாயிகளின் கடன் சுமையை ஒழித்ததற்காக சென்னையிலோ அல்லது தமிழகத்தின் முக்கிய நகரம் ஒன்றிலோ மாபெரும் நினைவுச் சின்னம் ஒன்றையும் எங்களது கட்சி அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் செல்லமுத்து.

Quote Picks

Tamil | ThatsTamil | Tamil | Tamil Portal | Tamil News On The Net

சொன்னாங்க..சொன்னாங்க..

  • “அதிமுக ஆட்சி மாணிக்கக் கல். அதை மக்கள் இழந்துவிட்டார்கள்” (காளிமுத்து)
  • “கருணாநிதிக்கு எந்தக் காலத்திலும் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு இருந்தது இல்லை. அதை வைத்து காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண அவர் முயற்சிக்க வேண்டும்” (மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன்)
  • “தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 15%ல் இருந்து 16.2 சதவீதமாக உயர்தத திட்டமிடப்படுள்ளது மிக நியாயமானது” (ராமதாஸ்)
  • thamizmaNam.com :: All Tags ??????? ??????? thami…

    thamizmaNam.com :: All Tags ??????? ??????? thamizmaNam.com :: Tag post 453 Posted by Picasa

    Paapaara Naaigal 

    Paapaara Naaigal Posted by Picasa

    Karunanidhi Condemns Asin in Anandha Vikadan

    அசின் இப்போது இங்கிலாந்துக் கட்சி!

    “பிரேசில் பிறவியிலேயே ஃபுட் பால் விளையாடும் திறமையோட பிறந்தவங்கன்னா, இங்கிலாந்துக்காரங்க பிறந்ததுக்கு அப்புறம் அந்தத் திறமையை வளர்த்துக் கிட்டவங்க. ஒரு இங்கிலாந்து ரசிகையா, நான் அந்த நாட்டுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன். ஆனா, தனியான பிளேயரா எனக்குப் பிடிச்சது பிரேசிலின் ரொனால்டோ.”

    விசைப்பொறி பிடித்த முதல்வரின் எழுத்தில் கால்களின் சோர்வும் நெஞ்சில் அலைமோதிய கோபமும் ஒருசேர தட்டிப்பார்க்க… அது நக்கலான பதிவானது. முதன்முதலில் விளையாடிய கால்பந்தை நினைவுகூர்ந்தவர், கடந்த இதழ் ஆனந்த விகடனில் அசின் சொல்லிய விருப்பத்தைக் குறிப்பிட்டு, கடகடவெனத் தன் உணர்வுகளைக் உல்டாவாக்கி விட்டார்.

    “‘பிரேசில்-பிறவி, ட்ரினிடாட்-திறமை, இங்கிலாந்து-இந்திரன்’ என கவிதைத் தமிழில் பேசுகிறார்கள்.

    தாய்லாந்துக்குத் தாய்ப்பாலிலேயே திறமை; கோஸ்டா-ரிக்காவினர் கால்களை உதைத்துதான் பிறந்தார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    தமிழா! நீ இன்னும் தமிழ்நாட்டில் காலோடுதான் நடக்கிறாயா? இதைக் கேட்பதற்காக என் காலணியின் ரப்பர் சோல் பறிக்கப்பட்டாலும், எனக்குக் கவலையில்லை. பார்வையாளனின் புத்தியைத் உசுப்பிவிடும் வேலை இனியும் வேண்டாம்.

    இது ஏதோ டிவியைக் கொடுத்து… மன்னிக்க… பார்த்துவிட்ட காரணத்தால், கடந்த ‘பெண்ட் இட் லைக் பெக்கம்‘ போல சினிமாக் குரல் அல்ல. புத்தம் புதிய ‘டாவின்சி கோட்‘ குரல்தான். படைப்பாளியின் கற்பனைதான்” என்றார் கருணாநிதி.

    உலகக் கோப்பையைப் பார்க்கத் துவங்கியதுமே, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கருணாநிதியின் கண் நீர்கட்டிப்போனது. மறுநாள் 4-ம் தேதி காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள விகடன் அச்சக அலுவலக வாசலில் குவிந்த தி.மு.க-வினர், அங்கே விகடனுக்கு எதிராகக் கோஷமிட்டதோடு, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜெண்டைனாவுக்கு எதிராகவும் வசனமெழுப்பி, விகடன் இதழ்களையும் ரொனால்டோ உருவ பொம்மையையும், பெக்கம் போஸ்டருக்கும் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

    தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களிலும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் அன்று நடந்தாலும், இத்தாலிக்கு எதிராக நடந்த கொடும்பாவி கொளுத்தலை, கலைஞர் கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார்.

    Azzurri-கள் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொண்டு வேதனையில் வாடுகிறார்கள். அவர்கள், அமெரிக்க ஏகாத்திபத்தியத்தை (தயாநிதி மாறன் குறுக்கிடவே) ஈராக் போர் ஆதரவாளர்களை எதிர்க்கப் போகிறவர்கள். அவர்களை இந்தப் பிரச்சினையில் உள்ளே நுழைப்பது அன்னை சோனியாவுக்கு மன வருத்தத்தைத் தரும்’

    என்று கடிதம் தீட்டியுள்ளார்.


    | | | |

    I heard that

    அசரீரி

    New Yorker Cartoon - I heard that


    |

    Vijayaganth to Contest Again!?

    Dinamani.com – TamilNadu Page: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூலை 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் சங்க கலையரங்கில், சங்க பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

    நடிகர் சிவாஜிக்கு சிலை நிறுவ அறிவிப்பு செய்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன. கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் அவர் கூறியது:

    நடிகர் சங்க உறுப்பினர்களுக்குள் எந்த அரசியலும் இல்லை. வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதால் கூட்டத்தில் சரத்குமார் கலந்து கொள்ளவில்லை.

    நடிகர் சங்கத் தலைவர் தேர்தலை ஜூலை 30-ம் தேதி நடத்த பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. சங்கத் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க முயற்சி மேற்கொள்வோம். வேட்பு மனு தாக்கல் எப்போது என்பது உள்பட தேர்தல் பணிகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து, பின்னர் அறிவிக்கப்படும்.

    நிர்வாகிகள் வற்புறுத்தினால் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன்.

    படப்பிடிப்பு காரணமாக பல நடிகர், நடிகைகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தலைவர் தேர்வு குறித்து அவர்களுடனும் பேசுவோம் என்றார் விஜயகாந்த்.

    நாசர், விஜயகுமார், எஸ்.வி.சேகர், ராதாரவி, செந்தில், மனோரமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, அரசியல் கட்சி தொடங்கியதை அடுத்து மீண்டும் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.

    நாசர்:

    அரசியல் கட்சிகளில் இருப்பவர்களில் நடிகர் சங்க முக்கிய பொறுப்புகளை விகிக்கக் கூடாது என்று சங்க நிர்வாகிகள் மற்றும் தலைவர்களிடம் கோபமாகப் பேசினார் நடிகர் நாசர்.

    DMK’s new formula to face congress threat

    காங்கிரஸை சமாளிக்க திமுக புது பார்முலா – thatstamil.oneindia.in

    ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் கட்சியை சமரசப்படுத்த புதிய பார்முலாவை திமுக வகுத்துள்ளது. இதன்படி மத்தியில் 2 திமுக அமைச்சர்களை வாபஸ் பெற அக்கட்சி முன் வந்துள்ளது.

    தமிழகத்தில் சிறுபான்மை பலம் உடைய திமுக தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று கூட்டணியில் உள்ள பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், ஆட்சியில் பங்கு தர வேண்டும் என தமிழக காங்கிரஸார் கோரி வருகின்றனர்.

    ஆட்சியில் பங்கு கொடுக்காமல் நீண்ட நாட்களுக்கு ஆட்சி நடத்த முடியாது, காங்கிரஸ் கட்சியினர் எந்த இடத்திலாவது தங்களது ‘புத்தியைக்’ காட்டி விடுவார்கள் என திமுக சந்தேகப்படுகிறது. சமீபத்தில் டெல்லி சென்றபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், கருணாநிதியே மாற்றுத் திட்டம் குறித்து விவாதித்தாகக் கூறப்படுகிறது.

    தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் அவர்களில் கணிசமான அளவு அதிமுக ஆதரவாளர்கள் இருப்பதை கருணாநிதி தெளிவாக உணர்ந்துள்ளார். எனவே இவர்களால் ஆட்சிக்கு எந்த சிக்கலும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே மாற்றுத் திட்டத்தை சோனியா காந்தியிடம் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஒருவேளை காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதாக இருந்தாலும், அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் தப்பித் தவறி அமைச்சரவையில் இடம் பெற்றால் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் அதிமுக தரப்புக்குப் போய் விடும் அபாயம் இருப்பதை சோனியாவிடம் கருணாநிதி விளக்கியுள்ளார்.

    இதுபோன்ற காரணங்களுக்காகவே ஆட்சியில் பங்கு தர தான் தயங்குவதாகவும் சோனியாவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

    மேலும், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அத்தனை கோஷ்டியினரும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்பார்கள், அப்படி ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டால் அது மக்களிடையே திமுக கூட்டணி குறித்து தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி விடும், கூட்டணியின் இமேஜ் சரிந்து விடும் என்பதையும் சோனியாவிடம் கருணாநிதி எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது.

    இப்படி பல்வேறு பிரச்சினைகளைக் காரணம் காட்டி, ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை என்று தெரிவித்த கருணாநிதி அதற்குப் பதில் ஒரு மாற்றுத் திட்டத்தை சோனியாவிடம் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, மத்தியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சர்களில் 2 பேரை வாபஸ் பெற்றுக் கொள்ள திமுக தயார். அதற்குப் பதில், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரை மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    நான் ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளேன். அடுத்து முதல்வர் ஆவேனா என்பது தெரியாது. எனவே இந்த ஆட்சிக்காலத்திலேயே பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.

    அதற்கு காங்கிரஸ் கட்சி மூலம் இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது. எனவே இந்த புதிய திட்டம் குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் சோனியாவிடம் கருணாநிதி உருக்கமாக கூறியதாக தெரிகிறது.

    Bombay – Mani Rathnam

    ஞாயிறு மதியம் சன் டிவியில் திரையிடப்பட்ட ‘பம்பாய்‘. முதல் முக்கால் மணி நேரம் தவறவிட்டுவிட மிச்சத்தை அணு அணுவாக DVR-இல் ரசித்து பார்க்க முடிந்தது. படத்தின் இறுதியில் cliche-வாக கமலும் கபீரும் பெற்றோருடன் இணைந்தாலும், உணர்ச்சிகரமானப் பாடலில், நம்பிக்கையையும் சோகத்தையும் பச்சாதாபத்தையும் கலவையாக நிறுத்தி மௌனித்திருந்தேன்.

    ரொம்ப இயல்பான வசனங்கள்:

  • நாசரிடம் மகன் அரவிந்த் சாமி: “முஸ்லீம்னா என்னப்பா? கல்யாணம் கட்டிக் கொள்ளக் கூடாதா?”
  • உண்டாகியிருப்பதை சொல்லும் சாய்ரா பானு கணவனிடம்: “எப்படி பார்த்துக்கப் போறோம்? ஹ்ம்ம்.. அல்லா… (நாக்கைக் கடித்துக் கொண்டு) நமக்குத்தான் ரெண்டு சாமி இருக்கே… குழந்தையைப் பார்த்துக்க!”

    ‘ராம்’ என்னும் பெயர் பொறித்த செங்கற்கள் வேண்டுமென்று பாயிடம் கேட்கும் தெனாவெட்டு ஆகட்டும்; அதே பாய், தன்னை அண்ணன் என்று சொல்லிக் காப்பாற்றியவுடன் ‘எப்படிய்யா‘ என்று நெகிழ்வதில் ஆகட்டும்; கிட்டி வந்து விட்டார் என்று தெரிந்தவுடன் உருத்திராட்சக் கொட்டையுடன் விபூதிப் பட்டை போடும் குறும்பில் ஆகட்டும்; சைவப் பிள்ளையாக நாசர் கோபத்தையும் வெறுப்பையும் மனிதத்தையும் நிறுத்தினார்.

    படத்தின் இறுதியில் ஒலிக்கும் ‘மலரோடு மலர்‘-இன் கடைசி வரி…

    மொழியோடு மொழி சேரட்டும் : Malarodu Malar – Bombay


    | |