Karunanidhi vs Jayalalitha – War of Press Releases

Dinamani.com – TamilNadu Page

அதிமுக ஆட்சிக் காலத்தில் கோப்புகள் தேங்கியிருந்ததை நிரூபிக்கத் தயார்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

சென்னை, செப். 9: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் அதிக கோப்புகள் தேங்கியிருந்தன என்பதை நிரூபிக்கத் தயார் என முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில்தான் கோப்புகள் தேங்கியிருந்ததாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை விவரம்:

எனது ஆட்சிக்காலத்தில் கோப்புகள் தேங்கியிருப்பதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டு உண்மையல்லை என்பதை பத்திரிகையாளர்கள், படித்தவர்கள், அதிகாரிகள் ஆகியோரடங்கிய பிரதிநிதிகள் குழு முன்னர் நிரூபிக்கத் தயார். எனது குற்றச்சாட்டு பொய் என்றால், அந்தக் குழு கூறுகிற தண்டனையை ஏற்கவும் தயார்.

ஓய்வுபெற்ற அதிகாரிகளைப் பணியில் அமர்த்தியிருப்பதாக அவர் அநாகரிகமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். என்னிடம் பணியாற்றும் 5 செயலாளர்களில் ஒருவர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நான்கு ஆண்டுக்காலம் வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியில் நியமிக்கப்பட்டிருந்தவர். மற்றொருவர் என்னிடம் 35 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றுபவர். அதிமுக ஆட்சிக் காலத்தில் 9 ஆண்டுக்காலம் பணி நீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டவர்.

ஜெயலலிதாவும், தனது ஆட்சிக் காலத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகளான ஜானகி ராமன், தேவாரம் ஆகியோரை பணியில் அமர்த்தியிருந்தார்.

மேலும் யாருடைய ஆட்சிக் காலத்தில் டிஜிபி-யும், உள்துறைச் செயலாளரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும்.

பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதற்காக டிஜிபி ரவீந்திரநாத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மையிலேயே அவர் தவறு செய்திருந்தால் பணி நீக்கம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளாக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கான காரணம் ஏன் என்பது தெரியவில்லை.

உள்துறைச் செயலாளராக இருந்த முனீர் ஹோதாவை தாற்காலிகப் பணி நீக்கம் செய்த உத்தரவை மத்திய அரசே மேற்கொள்ள மறுத்துவிட்டது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முனீர் ஹோதா துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டது குறித்து மசூரியிலுள்ள ஐஏஎஸ் பயிற்சிக் கழகத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

இதேபோல சிறுபான்மையோர் உரிமை நாள் கொண்டாட வேண்டுமென்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. சிறுபான்மையோர் உரிமை நாளைக் கொண்டாட ரூ. 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யும்படி ஜனவரி 4, 2005-ல் கோப்பு ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டது. ஓராண்டுக்காலம் அந்த கோப்பு முதல்வர் அலுவலகத்திலேயே கையெழுத்தாகாமல் இருந்தது. தற்போது செப்டம்பர் 6-ம் தேதி அந்த கோப்பில் நான் கையெழுத்திட்டேன்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்றது முதலமைச்சர் மாநாடு அல்ல. 11-வது ஐந்தாண்டு திட்டத்திற்கான வரைவு அணுகுமுறை ஆவணத்தை பரிசீலிப்பதற்கான வட்டாரக் கலந்தாய்வுக் கூட்டம்தான். இம்மாநாடு ஜூலை 22-ம் தேதி நடைபெற்றது. அதே நாளன்று தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் காரணமாக, எனக்குப் பதில் இக்கூட்டத்தில் தமிழக திட்டக் குழு துணைத் தலைவரான நாகநாதன் பங்கேற்றார்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற கூட்டங்களில் முதலமைச்சரான அவரோ அல்லது நிதி அமைச்சரோ ஒரு முறை கூட பங்கேற்றது கிடையாது.

இம்மாதம் 5-ம் தேதி தில்லியில் நடைபெற்ற முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து ஜெயலலிதா கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த 4-ம் தேதி குடியரசுத் தலைவர் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இரண்டில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. இதனால் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஆனால் 2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தில்லியில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநாட்டில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.


எனது ஆட்சியில் கோப்புகள் தேக்கமடையவில்லை: நிரூபிக்கத் தயார்- ஜெ. அறிவிப்பு

சென்னை, செப். 9: எனது ஆட்சியில் கோப்புகள் தேக்கமடையவில்லை. இதை பத்திரிகையாளர் முன்னிலையில் தெளிவுபடுத்தத் தயார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதல்வருக்கு உதவி செய்ய சில ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வர் அலுவலகத்தில் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்குப் பல துறைகளிலிருந்து கோப்புகள் அனுப்பப்படும். அந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணி நிமித்தமாக பல துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கும். சம்பந்தப்பட்ட கோப்புகளை அந்தந்த துறை பொறுப்புள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுதான் நடைமுறை.

ஓய்வு பெற்ற அதிகாரிகளைப் பல காரண காரியங்களையும் ரகசிய சவுகரியங்களையும் முன்னிட்டு முதல்வர் கருணாநிதி தற்போது நியமித்து இருப்பது போல் நான் செய்யவில்லை. அம்மாதியான தேவைகள் எனக்கு இல்லை. எனவே ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேவையில்லை என்று முடிவு செய்து இன்றைக்கும் பணியில் இருக்கின்ற 5 ஐஏஎஸ் அதிகாரிகளை என் அலுவலகத்தில் பல்வேறு துறை சம்பந்தப்பட்ட நிர்வாக விஷயமாக எனக்கு உதவி செய்ய நியமித்து இருந்தேன். நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கோப்புகள் தேங்கியதாகவோ கோப்புகள் மீது நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றோ எந்த பேச்சும் கிடையாது.

என்னிடம் பணியாற்றிய அதிகாரிகள் தங்கள் துறை சம்பந்தபட்ட கோப்புகளை அதற்கு உரிய நாள்களில் அதனுடைய அவசியம் கருதி, தன்மை கருதி என் கவனத்துக்குக் கொண்டு வந்து என் உத்தரவினை அவ்வப்போது பெற்றிருக்கின்றனர். கருணாநிதி சொல்வது போல் கோப்புகள் தேங்கி இருக்க வேண்டிய அவசியம் என் நிர்வாகத்தில் இல்லை.

இன்றைய சூழ்நிலையில் என்னிடம் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகளையும் வைத்துக் கொண்டு அந்தக் கோப்புகளை என்னிடம் காட்டினால் பத்திரிகையாளர் முன்னிலையில் அது எந்தக் கோப்பு, என்ன காரணம் காட்டி பைசல் செய்யப்பட்டது என்ற விவரங்களை என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். இதையெல்லாம் விடுத்து வீண்பழி போடுவதும் அவதூறு செய்து கொண்டிருப்பதும் எந்த விதத்திலும் உண்மையாகிவிடாது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


தில்லி முதல்வர்கள் மாநாட்டில் கருணாநிதி கலந்து கொள்ளாதது ஏன்? ஜெ.

சென்னை, செப். 9: உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரம் இருக்கும்போது பிரதமர் கூட்டிய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் கருணாநிதிக்கு நேரமில்லையா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதி முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு இரண்டு முதலமைச்சர்கள் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரண்டிலும் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் தமது சொந்தக்காரர் நாகநாதனை, எந்தவித ரகசிய காப்புப் பிரமாணமோ அல்லது பதவி ஏற்பு உறுதிமொழியோ எதுவும் எடுத்துக் கொள்ளாத, எந்த விதத்திலும் அரசின் அன்றாட நிர்வாகத்துக்குச் சம்பந்தம் இல்லாத நாகநாதனை, உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக கருணாநிதி அனுப்பி வைத்தார்.

கடந்த செப்டம்பர் 5-ம் தேதி தில்லியில் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடந்தது. உள்நாட்டு பாதுகாப்பு பற்றி கலந்தாலோசனை செய்ய இந்த மாநாடு நடைபெற்றது. இதிலும் முதல்வர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பாக எந்த அமைச்சரும் கலந்துகொள்ளவில்லை. தலைமைச் செயலாளர் மட்டும் கலந்துகொண்டார்.

உறவினரின் முடிவெட்டும் நிலையத்தைத் திறந்து வைப்பதற்கு நேரம் இருந்த கருணாநிதிக்கு, உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய விஷயத்தில், பிரதமர் கூட்டிய முதல்வர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நேரமில்லை. என்னே தமிழர்கள் பாக்கியம். இவருடைய அமைச்சரவையில் ஆட்டுக்கு ஒரு மந்திரி, ஆட்டு தாடிக்கொரு மந்திரி, மாட்டுக்கு ஒரு மந்திரி, மாட்டு கொம்புக்கு ஒரு மந்திரி என 30 அமைச்சர்கள் உள்ளனர். இந்த 30 பேரில் ஒருவர் கூட உள் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இரண்டு நாள் மாநாட்டில், அதுவும் பிரதமர் கூட்டிய கூட்டத்தில் கலந்துகொள்ள நேரம் இல்லை.

இவ்வகை மாநாடுகளை எப்போதுமே நான் புறக்கணித்ததில்லை. ஏறக்குறைய அனைத்து உயர்மட்டக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன்.

ஆனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்த இந்த 100 நாள்களில் இரண்டு முறை நடந்த முதல்வர்கள் மாநாடுகளுக்கு இரண்டு முறையும் இவர் போகவில்லை. நிர்வாகத்தைப் பற்றி இவருக்குத் துளியும் கவலை இல்லை. தமிழகத்தில் பயங்கரவாதம் வலுவாக கால் பதித்துவிட்டது என்பதை இந்த 100 நாள்களில் நாம் பார்த்து விட்டோம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Seevaga Sinthamani – Final Part

சீவக சிந்தாமணி

  1. Part 14 - this is an audio post - click to play
  2. Part 15 - this is an audio post - click to play
  3. Part 16 - this is an audio post - click to play
  4. Part 17 - this is an audio post - click to play
  5. Part 18 - this is an audio post - click to play
  6. Part 19 - this is an audio post - click to play
  7. Part 20 - this is an audio post - click to play
  8. Part 21 - this is an audio post - click to play
  9. Part 22 - this is an audio post - click to play
  10. Part 23 - this is an audio post - click to play

இன்னொரு முறை முழுவதாக மீண்டும் கேட்க வேண்டும். மாந்திரீக எதார்த்தவாதத்தின் அம்சங்களோடு அமைந்திருப்பதை அலச வேண்டும். ஹாரி பாட்டரின் மாயாஜாலங்களும் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மாயாவாதங்களையும் மிஞ்சும் மசாலாவோடு எழுதியிருக்கிறார்.

தசாவதாரத்துக்கு பத்து நாயகி கொண்டு வருவது கூட சீவகன் செய்திருக்கிறான். கமல் மாதிரியே வித வித வேடம் தரிக்கிறான். கிழவனாய், மீன் இனமாய், கூடு விட்டு கூடு பாய்கிறான். டூயட் பாடுகிறான். டிஷ்யூம் போடுகிறான். அம்மா செண்டிமெண்ட் உண்டு. நகைச்சுவைக்கு நண்பர் குழாமும் இருக்கிறது.

அற்புதத் தீவு‘, இம்சை அரசன் தொடர்ந்து சீவகனும் வெள்ளித்திரையில் வந்தால் உலக மகா மசாலா கிடைக்கும்.

Seevaga Chinthamani – Audio Post :: சீவக சிந்தாமணி காப்பியத்தின் முதல் பகுதி

| |

BJP might Politicize? Sonia Gandhi Absent in the Vnade Matharam Anniversary Celebrations

Dinamani.com – Headlines Page

வந்தே மாதரம் நிகழ்ச்சியில் சோனியா பங்கேற்காததை பாஜக பிரச்சினை ஆக்கும்?

டேராடூன், செப். 8: வந்தே மாதரம் பாடல் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்காததை, பிரச்சினை ஆக்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த வந்தே மாதரம் பாடல் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சோனியா கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் ஏனோ அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

சோனியாவின் இந்த நடவடிக்கை பாஜகவுக்கு நிச்சயம் ஆதாயம் அளிக்கும் என டேராடூனில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்துக்கு வந்துள்ள அக் கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.

காங்கிரûஸ தாக்குவதற்கு இது ஓர் ஆயுதமாகப் பயன்படும் என்றார் அவர். செயற்குழுவுக்கு முன்னதாக நடைபெற்ற கட்சி தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், வந்தே மாதரம் பாடல் பிரசார இயக்கத்துக்கு என தனியாக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அருண் ஜேட்லி, வெங்கைய நாயுடு, சஞ்சய் ஜோஷி, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் இக் குழுவில் உள்ளனர்.

New York Upstate Lakes Tour

மண்ணும் மந்திரியும் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

இதுதான் ப்ளாசிட் ஏரி. இந்த ஏரியின் பெயரில் ஆங்கிலப் படம் வெளி வந்திருக்கிறது. கொடைக்கானல் போல் மலை வாசஸ்தலம். கோடை காலம் கூடிய சீக்கிரமே பூப்பெய்தி இலைகளைத் துறப்பதால், காடுகள் மலைகள் பிரதேசத்திற்கு ஒரு சுற்றுலா.

உள்ளோட்டம் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

ப்ளாசிட் ஏரியில் இரு முறை குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடந்துள்ளது. 1980-இல் நடந்த பனி விளையாட்டு மைதானத்தை இங்கே காணலாம். உயர்நிலைப்பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் இருவர் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

கனவு :: ஞானக்கூத்தன் கவிதைகள்

மலைமுகடுகளின் பிரதிபலிப்பு ஏரியில் விழுகிறது. துடுப்பு படகு, சைக்கிள் படகு, பெடல் படகு என்று விருப்பமானதை வாடகை எடுத்து ‘அமைதியான நதியினிலே ஓடம்’ என்றோ, ‘வசந்த கால நதிகளிலே’ என்றோ பாடி தேனிலவை அசை போட வைக்கிறது.

எனக்குக் கொஞ்சம் சோற்றைப் போடேன் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

அடிராண்டாக் மலைப்பகுதியில் இந்த வகை ஈஸி-சேர் மிகவும் பிரபலம். அடிராண்டாக் இருக்கை என்றே அழைக்கிறார்கள். காலை முழுவதும் மலையேறி சிகரங்களைத் தொட்ட களைப்பு நீங்க மாலையில் ஏரிக்கரையோரமாக ஆற அமரச் சொல்கிறது.

யாரோ ஒருத்தர் தலையிலே :: ஞானக்கூத்தன் கவிதைகள்

அடுக்கடுக்கான குழாய்களை வைத்து நீர்வீழ்ச்சியை சித்தரிக்கும் அமைப்பு. அருகில் உடைந்து போன சக்கரம். மறுசுழற்சியாகும் தண்ணீர். இயற்கையில் மேகம் என்னும் நீர்தொட்டி. பக்கத்திலேயே 700 அடி படிக்கட்டு அருவி. குளித்து நனைந்து மகிழ முடியாத சக்கரமாக என்னை நினைத்துப் பார்க்க வைத்தது.

உங்களுக்கு ஏதாவது கவித்துவமாக (aka அச்சுபிச்சுத்தனமாக) நினைக்க வைக்கிறதா?

மருதம் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

இந்தப் பகுதி எப்படி உருவானது? எத்தனை வருடமாக இங்குள்ள பாறைகள் பழமையானது? ஆங்காங்கே காணப்படும் விநோத குழிகளின் காரணம் என்ன? போன்ற தகவல்களை அவ்வப்போது விளக்கும் பலகைகளையும் படித்துப் பயனடைந்தேன்.

மழைநாள் பாதை :: ஞானக்கூத்தன் கவிதைகள்

‘எங்கே செல்லும் இந்தப் பாதை?’ அல்லது ‘அங்கும் இங்கும் பாதையுண்டு; இன்று நீ எந்தப் பக்கம்?’

சூரியனுக்குப் பின்பக்கம் :: ஞானக்கூத்தன் கவிதைகள்

ஜார்ஜ் ஏரி நகரத்தின் நீதிமன்றம். அந்தந்த ஊருக்கு சென்றவுடன் நுழையக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள தலங்களை கண்டுபிடிப்பது பிடிக்கும்.

எழுதக் குவிந்த :: ஞானக்கூத்தன் கவிதைகள்

வெள்ளைமுக (வைட் ஃபேஸ்) மலையுச்சியில் இருந்து ப்ளாசிட் ஏரியின் இன்னொரு தோற்றம். பனிச்சறுக்கு காலங்களில் புகழ் பெற்ற மையம். மலையில் இருந்து சைக்கிள் ஓட்டி கீழே இறங்குவதை பலரும் தேர்ச்சியுடன் விரைவாக சாகஸமாக செய்தார்கள்.

மேலும் சில நிழற்படங்கள் (எட்டு ்ஞானக்கூத்தன் கவிதைகள்)


| | | |

Left parties to meet to review Two years of the Govt.

Dinamani.com – Headlines Page

மத்திய அரசின் 2 ஆண்டு செயல்பாடு: இடதுசாரி கட்சிகள் பரிசீலிக்க முடிவு

புதுதில்லி, செப். 7: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாண்டு செயல்பாடு குறித்து பரிசீலிக்க இடதுசாரிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

இத்தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ஏ.பி.பரதன், வியாழக்கிழமை புதுதில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்த இதர விவரம்:

இடதுசாரிக் கட்சிகள்-ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் செப்டம்பர் மாத மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாண்டு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

உயர்கல்வி நிறுவனங்களில் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு விவகாரம், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் ஆகியவை குறித்தும் மத்திய அரசின் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

  • சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
  • நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.
  • வனப்பகுதி நிலங்களின் உரிமைகளை விவசாயத் தொழிலாளர்களுக்கே உரிமையாக்க சட்டம் இயற்ற வேண்டும் எனவும் இடதுசாரிகள் கோரிவருகின்றனர்.

    குறைந்தபட்ச பொது செயல்திட்டத்திலிருந்து காங்கிரஸ் கூட்டணி அரசு விலகிச் செல்வதை அனுமதிக்க இயலாது. எனவே அரசை சரியான பாதையில் இட்டுச்செல்வதற்கான யோசனைகளை இடதுசாரிகள் தெரிவிப்பார்கள் என்றார் பரதன்.

  • Abu Salem wishes to contest for MLA from Mubharakpur

    Dinamani.com – Headlines Page

    உ.பி. தேர்தலில் போட்டியிட அபு சலீம் விருப்பம்

    மும்பை, செப். 7: மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா அபு சலீம் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அவர் முபாரக்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும் முழு விருப்பத்துடனும் தெளிவான மனநிலையோடும் தான் இம்முடிவை எடுத்துள்ளார் என அபுசலீமின் வழக்கறிஞர் அசோக் சார்கி தெரிவித்திருந்தார்.

    அபுசலிம் பாரதிய சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கிடையில் அபு சலீம் மற்றும் தாவூத் இப்ராஹிமுற்கு அப்னா தளம் என்ற கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க தயாராக உள்ளதாக அக்கட்சின் தலைவர் சோனிலால் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    கேள்வியும் நானே… பதிலும் நானே

    பாலாஜி,
    தமிழ் வலைப்பதிவுகளில்‘ என்ற பதத்தை பலரும் பிரயோகிப்பதில்லையே? ‘தமிழ்மணத்தில் நேற்று‘, ‘தமிழ்மணத்தில் சூடு‘ போன்ற உபயோகங்களையே கண்ணுறுகிறேன். ஏன் இந்த நிலை?

    பாலாஜி…
    இதற்கான விடையை நான் முன்பே Daedalus & Kamalhasan என்னும் பதிவில் கோடிட்டுள்ளேன்.

    அதாகப்பட்டது, வேலை தேடி பாரதத்தின் தலைநகரங்களில் அலைந்தபோது ஜெராக்ஸ் செய்திருப்பாயே; ஹௌ டு கோட் இன் சி++ போன்ற புத்தகங்களை 18 பைசாவிற்கு அடையார் ஜெராக்ஸில் கொடுத்தது போலத்தான் இந்தத் தமிழ்மண பயன்பாடும் இருக்கிறது. நிறுவனத்தின் பெயரை பொதுப்பெயராக மாற்றும் அளவு – நகல் எடுத்தலும் செராக்ஸ் நிறுவனமும் நாயகிகளுடன் பின்னிப் பிணைந்து கமல் கொடுக்கும் முத்தம் போல் ஒன்றையேக் குறிக்கிறது.

    காலில் ஒரு முள்ளு பட்டா ‘பாண்ட்-எயிட்‘ போடு; கண்ணில் ஒரு தூசி விழுந்தா ‘க்ளீனெக்ஸ்‘ எடுத்துக் கொடு என்பார்கள். அதுபோல் வலைப்பதிவுக்கு ஒரு நோவு; தமிழ்மணத்திற்கு இன்னொரு வலி என்பது இனி தமிழ் தட்டச்சும் நல்லுலகில் கிடையாது.


    பாலாஜி,
    நேற்று நான் வேலைக் களைப்பில் சோர்வுற்றிருந்தபோது டிசே தமிழனின் கட்டுரை படிக்க கிடைத்தது.

    DISPASSIONATED DJ: வாசிப்பு இடைமறிப்பு :: ராஜ் கெளதமனின் ‘தலித்திய விமர்சனக்கட்டுரைகளை’ முன்வைத்து….

    ராஜ்கெளதமன் இன்றையபொழுதுகளில் நகர்ந்துகொண்டிருக்கும் அரசியல்/குழு புள்ளிகளும் முக்கியமான்வையே. இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள பதினைந்து கட்டுரைகளில் மூன்று கட்டுரைகள் புதுமைப்பிததனுக்கும், இரண்டு கட்டுரைகள் சுந்தர ராமசாமிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதையும் எழுந்தமானது என்று ஒதுக்கி நாம் அவ்வளவு இலகுவில் கடந்து சென்றுவிட முடியாது. புதுமைப்பித்தனிலும், சுந்தர ராமசாமியிலும் ராஜ்கெளதமனுக்கு இருக்கும் அளவற்ற பற்றைப்போல, இன்று காலச்சுவட்டுடன் எந்த விமர்சனமும் இன்றி ஒட்டி உறவாடும் நிலை குறித்தும், ‘சிலுவைராஜ் சரித்திரம்’ ‘காலச்சுமை’ போன்ற நூல்கள் ஆர்.எஸ்.எஸ் தொடர்புள்ளதாகக் குறிப்பிடப்படும் தமிழினி மூலம் வெளிவரும் அரசியற்புள்ளிகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

    ராஜ்கெளதமன் புத்தகங்களின் வெளியீட்டாளர் மேல் ஆதாரமற்ற அவதூறு போல் அள்ளிவீசப்பட்ட குற்றச்சாட்டுக்களை படித்தவுடன் இது புத்தகத்தைப் பற்றியக் குறிப்பா, புத்தகப் பதிப்பாளர் பற்றிய மேலோட்டமான கிசுகிசுக்களா, வருங்காலத்தில் என்ன நடக்கும் என்னும் பயமுறுத்தல் ஆருடங்களா என்று குழம்பினேன். தட்டச்சுப் பலகை ‘வா வா’ என்று தூண்டி, அலுவல் ‘போ போ’ என்று துரத்தி என்னை பின்னூட்ட ஆலோசனை வழங்கத் தூண்டியது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?

    பாலாஜி…
    உனக்கு பின்னூட்ட பெட்டியைக் கண்டால் கை பரபரக்கும் என்று அறியப் பெறுகிறேன்.

    ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்; அவன் மாம்பழம் வேண்டுமென்றான்… ஒன்று கொடுத்தாலும் நகரவில்லை; இந்தக் கன்னி வேண்டுமென்றான்’ என்று ம.கோ.ரா. பாடல் காதில் ரீங்காரமிடுகிறது.

    புத்தகக் குறிப்பில் எதற்கு ராஜ்கௌதமனுக்கு ‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா… வஞ்சகன் கண்ணனடா!’ போன்ற இடைச்செருகல்கள் என்று கேள்வி எழுப்ப எத்தனிக்கிறாய். எனக்கும் இவ்வாறு துடிதுடித்து நிறைய தேவையற்ற அடைமொழிகளையும் பொறுத்தமற்ற விளிப்புகளைகளையும், சுட்டிக் காட்டி வாங்கிக் கட்டியிருக்கிறேன்.

    அதன் பிறகு அங்கு நிலவும் மறுமொழி நிலவரத்தை உன்னால் கையாள இயலுமா என்பதை சிந்தித்துப் பார்க்கவும். தமிழினி மூலம் உன்னுடைய புத்தகம் வரப்போவதாக சொன்னால் வலைவாசகர்கள் முட்டாள்கள் இல்லாத காரணத்தால் நம்ப மாட்டார்கள் என்றாலும் உன் மீதும் அவர்கள் வருத்தம் கலந்த கோபம் பாயக்கூடும்.

    ஆனால், போகிற போக்கில் சேறு தெளிக்கப்பட்டவர்கள் மேல் பரிதாபப்படுவதில் தவறில்லை. இந்த சமயத்தில் எனக்கு நேர்ந்த சமீபத்திய நிகழ்வை நினைவு கூறுகிறேன்.

    முந்தாநாள் நியு யார்க்கின் ஜார்ஜ் ஏரியில் பின்மதியம் நான்கரை மணிக்கு குளம்பி வாங்குவதற்காக ஸ்டார்பக்ஸ் சென்றிருந்தேன். எனக்கு முன்னால் இருந்தவன் ‘கால் ஸ்பூன் சர்க்கரை; 1/2 & 1/2 பாதி; மீதத்திற்கு 2% பால்; அதி சூடு டிகாசன்’ என்று அனுபவித்து தனக்கு வேண்டிய காபியின் பாகங்களை விரிவாக சொல்லி முடித்தான். சொல்லி முடித்த அடுத்த நொடியே படு கோபமாக ‘எனக்கு ஏற்கனவே உங்க ஊரில் பார்க்கிங் டிக்கெட் ஒரு தடவை கொடுத்துட்டாங்க… சீக்கிரம் கலந்து கொடுங்க… உங்க தயவில் இன்னொன்றை உங்க குக்கிராமத்துக்குக் கொடுக்க தயாராக இல்லை’ என்று கடுமையாக சுடுசொல் உதிர்த்தான். அவனை கண்டிக்க மனசு முயன்றாலும், ஜிம்முக்கு போய் வளர்த்த ஆஜானுபாகத் தோற்றத்தைப் பார்த்த மூளைத் தடுத்து நிறுத்தியது.

    அவனுக்கு கொட்டை வடிநீர் வழங்கிய பிறகு, தேவையில்லாத சாடலுக்கு உள்ளான காபி தயாரித்து வழங்குபவர்களைப் பார்த்து ‘That was rude’ என்று பகிர்ந்தவுடன் மனசு லேசானது.

    அதே போல் முடிந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘ஏன் இப்படி சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம், எகத்தாளமாய் சேறு அள்ளித் தெளித்து மகிழ்கிறார்களோ’ என்று சொல்லவும். Fame invites scrutiny போன்ற பொன்மொழிகளைப் போட்டு சொல்வதும் சமயத்திற்கேற்ப பொருந்தலாம்.

    சில சமயம் காபி வாங்கிக் கொண்டு கதவருகே செல்பவர்களின் காதிலும் உன்னுடைய மறுமொழிகள் விழலாம். அதனால், தங்களின் இடைச்செருகல்களையும் ஜாதகக் கணிப்புகளையும் செவிவழி வம்புகளையும் அடுத்த முறை குறைத்தும் கொள்ளலாம்.


    | |

    Too busy; too filmy

    வலைப்பதிவுகளில் நேரமே கிடைக்க மாட்டேங்குது. ஆத்துல (அதாவது நட்டாற்றில்) ஒரு கால்; சேத்துல (அதாவது வேலையில்) ஒரு கால் என்று புலம்ப எண்ணம். இளையராஜா அடியொற்றி புலம்பல்.

    உள்ளொன்று வைக்கிறேன். வலைத்தோல் களைகிறேன்.

    நாசூக்கு உணவு உண்டு எழுத்துச்சுவை கூறு அறுக்கிறேன்.

    நாற்றமெடுக்கிறது. பற்பசை ஈஷிக்கொள்கிறேன்.

    விளையாட்டுத்தனமாக வளைந்தாலும் வீடியோ ஆட்டமாக வெல்ல நினைக்கிறேன்


    | |

    Satellite City Plan Dropped – Editorial & VaiKo Comments

    Dinamani.com – Editorial Page

    துணை நகரம்

    நாட்டின் நடப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற அதேநேரத்தில் தீர்க்க நோக்குடன் எதிர்காலத்திற்கான திட்டத்தைத் தீட்டுவது என்பது ஆட்சித் தலைமையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. அத்தகைய எதிர்காலத் திட்டம், இப்போதுள்ள பிரச்சினைகள் கடுமையாக முற்றாமல் தடுப்பதுடன் எதிர்காலத்தில் இவைபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதாகவும் அமையும். சென்னை அருகே துணைநகரை அமைப்பது என்ற திட்டம் அவ்வகையிலானது.

    உள்ளபடியே சென்னை நகரின் மக்கள்தொகை பெருகி வருகிறது. நகரின் போக்குவரத்துப் பிரச்சினை, குடியிருப்புப் பிரச்சினை போன்ற பல பிரச்சினைகளும் மேலும் மேலும் கடுமையாகி வருகின்றன. என்னதான் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும் வருகிற ஆண்டுகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்ற நிலை ஏற்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது. சென்னை நகரின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க பல நடவடிக்கைகளை எடுத்தாலும் அது தற்போதுள்ள பிரச்சினைகளைத் திருப்திகரமான அளவுக்குத் தீர்க்கும் என்று தோன்றவில்லை. இந்த நிலையில் சென்னைக்கு அருகே ஒரு துணைநகரை அமைப்பது என்பது வரவேற்க வேண்டிய திட்டமாகும். நாம் இப்போதே நடவடிக்கை எடுத்தால்தான் அத் துணைநகரம் சில ஆண்டுகளில் உருப்பெறும்.

    எந்த ஓர் அபிவிருத்தித் திட்டமானாலும் அது மக்களில் ஏதோ ஒரு பிரிவினருக்கு ஓரளவில் பாதிப்பை விளைவிப்பதாகத்தான் இருக்கும். யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டாக வேண்டும் என்ற அளவுகோல் பின்பற்றப்படுவதானால் மேட்டூர் அணையில் தொடங்கி சென்னை சென்ட்ரல் நிலைய விரிவாக்கம் வரை எந்த ஒரு திட்டத்தையும் நம்மால் நிறைவேற்றி இருக்க முடியாது. ஆகவே ஏற்படுகின்ற பாதிப்புகளைவிட ஒரு திட்டத்தால் பெருவாரியான மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைதான் பிரதானமாகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். உலகெங்கிலும் இந்த நோக்குத்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. நீண்டநோக்கில் மேற்கொள்ளப்படுகிற திட்டங்களைச் சீர்தூக்கிப் பார்த்து ஆராய வேண்டுமே தவிர அரசியல் நோக்கில் பார்க்கக் கூடாது.

    இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கடந்த 50 அல்லது 60 ஆண்டுகளில் சென்னை நகரம் விரிவடையாமல் அப்படியே இருந்து வந்துள்ளதாகக் கூற முடியாது. நகரம் தானாக விரிவடைய ஆரம்பித்து மீனம்பாக்கம் கிராமம், பல்லவபுரம் கிராமம் என மேலும் மேலும் பல இடங்களை விழுங்கி விரிவடைந்துள்ளது. இப்படி ஏற்பட்ட விரிவாக்கம் திட்டமிட்ட முறையில் நடந்துள்ளதாகக் கூற முடியாது. திட்டமிடாமல் தாறுமாறாக ஏற்பட்ட வளர்ச்சி காரணமாகத்தான் சென்னையின் பல புறநகர்களில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் காணப்படுகின்றன.

    சென்னைக்கு அருகே துணைநகரை அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் மட்டுமன்றி சென்னைக்கு மேற்கிலும் வடக்கிலும் உள்ள இடங்களும் அங்குள்ள நஞ்சை, புஞ்சை தரிசு நிலங்களும் வருகிற ஆண்டுகளில் சென்னை நகரால் விழுங்கப்பட்டுவிடும். சென்னை இவ்விதம் விரிவடைவதை யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. துணை நகரத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும் சென்னை அருகே துணை நகரம் என்ற பெயரில் இல்லாமல் பல புறநகர்கள் தாமாகத் தோன்றத்தான் போகின்றன. ஆனால் அத்தகைய வளர்ச்சி தாறுமாறாகத்தான் இருக்கும். அவ்விதமின்றி அந்த வளர்ச்சி நன்கு திட்டமிட்ட வகையில் இருக்கும்படி நாம் பார்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். திட்டமிட்ட முன்னேற்றம் என்பது எப்போதுமே நல்லது. மாநில அரசு உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். துணை நகரம் அமைய வேண்டிய இடம் குறித்து பொதுக்கருத்து ஒன்றை எட்டுவதற்கு ஒன்றுபட வேண்டும்.

    சென்னை நகரின் வளர்ச்சி குறித்து அக்கறை கொண்ட தனியார் அமைப்புகள் பல உள்ளன. அவையும் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும், பிரமுகர்களும் அரசின் இத்தகைய திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்க வேண்டும்.


    Dinamani.com – TamilNadu Page :: துணை நகர விவகாரம்: வைகோ கருத்து

    சென்னை, செப். 5: சென்னை மாநகருக்கு துணை நகரம் என்ற அறிவிப்பும் அதிரடி வாபஸýம் கருணாநிதி அரசின் துக்ளக் தர்பாருக்கு சரியான எடுத்துக் காட்டு என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

    இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    30 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநதி அறிவித்தார்.

    துணைநகரம் அமைப்பதால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள், தங்கள் வீட்டையும் நிலங்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஆகும் அவதியும் அவலமும் ஏற்படும். பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசித்து வரும் மக்கள் சொல்லொணாத துன்பத்துக்கு ஆளாக நேரிடும். இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல் மக்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது துணை நகரம் அமைத்தே தீருவேன் என்று அறிவித்தார் முதல்வர்.

    இந்த நிலையில் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியதோடு, துணை நகரத் திட்டத்தால் அல்லல்படப் போகும் மக்களின் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் சுட்டிக்காட்டி துணைநகரத் திட்டத்தை அதிமுக கடுமையாக எதிர்க்கும் என்று அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டார். அதற்குப் பின்னரும் சட்டப்பேரவையில் எவர் எதிர்த்தாலும் துணை நகரம் அமைத்தே தீருவேன் என்று முழங்கினார். முடிவு எடுத்துவிட்டுப் பின்னர் பல்டி அடித்ததன் மூலம் கருணாநிதி அரசின் துக்ளக் தர்பார் முரண்பாடுகளுக்கும் தடுமாற்றத்துக்கும் ஆளாகி இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.

    Notable News Stories

    செய்தித் தொகுப்பு

  • மேயரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சென்னையில் 4 மேம்பாலங்கள்: மாநகராட்சியில் தீர்மானம் (ஸ்டாலின் இல்லாவிட்டாலும் மேம்பாலம் கட்டப்படுகிறதே!)

  • 10 ஆண்டுகள் முடிந்த ஆயுள் கைதிகள் விடுதலை: வழக்கறிஞர் சங்கம் நன்றி (இனிமேல் வழக்குகளுக்கு பஞ்சம் இருக்காது!)

  • போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் அறிக்கை தவறு மற்றும் ஆதாரமற்றது – இலங்கை அரசு:

    இலங்கை திருகோணமலை மாவட்டம் மூதூரில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டு ஆக்சன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற தன்னார்வத்தொண்டர் அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அரச ஆயுதப்படையினரே காரணம் என யுத்த நிறுத்தக்கண்காணிப்புக் குழு நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையினை அடுத்து, இலங்கையில் ஐ.நா அமைப்பு தனது பணிகளை இடைநிறுத்தக்கூடும் என அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக் குறித்து உடனடியாகக் கருதுக்கள் எதனையும் வெளியிட மறுத்துள்ள இலங்கை அரசு, கண்காணிப்புக் குழுவினது அறிக்கையினை தவறு என்றும் ஆதாரமற்றது என்றும் சாடியிருக்கிறது.

  • மெக்கா செல்ல அரசு நிதியுதவி கொடுக்க கூடாது – இந்தியாவின் அலஹாபாத் நீதிமன்றம்
    1. பத்ரியின் வலைப்பதிவுகள் – ஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு் (டிசம்பர் 23, 2003)
    2. அரவிந்த் லவாகரே, ரீடிஃப், 13 மார்ச் 2001
    3. சையத் சஹாபுத்தீன், தி மில்லி கெஸட், 15 செப்டம்பர் 2002
  • தமிழ்ப் பாடல்களுக்கு தனி இணையதளம் முதல்வர் தொடங்குகிறார்: www.tamil-songs.co.in

  • அமெரிக்கா செல்ல 2 காங். எம்.எல்.ஏ.க்களுக்கு விசா மறுப்பு
  • குப்பையோ குப்பை… மின்னணுக் குப்பை :: வைகைச் செல்வி:

    பல்வேறு மின்னணு மற்றும் மின் கருவிகள் அவற்றின் உடைமையாளர்களுக்குப் பயன்படாமல் போகும் பட்சத்தில் அவை மின்னணு குப்பையாக உரு மாறுகின்றன. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டத் துறை 2005-ல் நடத்திய ஆய்வானது, உலகில் ஒவ்வோர் ஆண்டும் 20 முதல் 50 மில்லியன் டன்கள் மின் குப்பை உருவாகிறது எனத் தெரிவிக்கிறது. மின்னணுக் கருவிகளின் ஆயுள்காலம் அவ்வளவு அதிகமில்லை. உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டரின் ஆயுள் 5 முதல் 6 ஆண்டுகள்.

    இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மின்னணுக் கருவிகள் கம்ப்யூட்டர், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் ஆகும். இவற்றிலிருந்து உருவாகும் கழிவுகள் 2004-2005ல் 1,46,180 டன்கள் எனக் கணக்கிடப்பட்டு, 2012ஆம் ஆண்டில் இது 16,00,000 டன்களாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தில்லி, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து உருவாகிறது.

    நகரங்கள் என்று பார்க்கையில் மும்பை, தில்லி, பெங்களூர், சென்னை, கோல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், புனே, சூரத் மற்றும் நாக்பூராகும். சமீபகாலமாக அதிகரித்து வருவது செல்பேசிக் குப்பையாகும். ஓர் ஆய்வின்படி 2005ல் மட்டும் உலகில் 130 மில்லியின் செல்பேசிகள் கழித்துப் போடப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் கழிவுகள், அதாவது பாட்டரிகள் மற்றும் சார்ஜர்களையும் சேர்த்து, ஆண்டொன்றிற்கு 65,000 டன்கள் ஆகும்.

  • கிருஷ்ணர் வேடத்தில் ரஜினிகாந்த்

  • இராஜஸ்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் 150 க்கும் அதிகமானோர் பலி

  • ஐரோப்பாவின் மிகப் பெரிய இந்துக் கோயிலின் குடமுழுக்கு விழா

  • பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறும் நாடுகளுக்கு அமெரிக்கா அதீத உதவி

  • உலக வணிகம் எட்டாக் கனியா? :: மு. இராமனாதன்:

    கட்டற்ற வணிகம் எனும் இலக்கை அடைய பெருந்தடையே அமெரிக்காதான் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. ஜூலை கடைசி வாரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த WTO-வின் பிரதான அமைச்சர்களின் பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. தமது விவசாயிகளுக்கு வழங்கி வரும் அபரிமிதமான சலுகைகளையும் மானியங்களையும் பின்வாங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. சலுகைகள் மற்றும் மானியங்களால் செயற்கையாக விலை குறைக்கப்பட்ட செல்வந்த நாடுகளின் விவசாய விளைபொருள்களோடு தங்களால் போட்டியிட முடியவில்லை; இந்த வணிகம் சமனாக்கப்பட வேண்டும் என்று வளரும் நாடுகளின் பிரதிநிதிகளான இந்தியாவும் பிரேசிலும் வலியுறுத்தியபோது கட்டற்ற வணிகம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் கசந்தது. பேச்சுவார்த்தைகள் முறிந்தன. இப்போது வேளாண் மானியங்களை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்பதிலிருந்து, WTO எனும் அமைப்பே நீடிக்குமா என்பது வரையிலான ஐயங்கள் உறுப்பு நாடுகளிடையே தோன்றியிருக்கின்றன.

  • “உயிரோவியம்’போல் உயர்ந்த மனிதர் :: உதயை மு. வீரையன் – நாரண. துரைக்கண்ணன் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு சில வாழ்க்கை குறிப்புகள்.

    சென்ற வார செய்தித் தொகுப்பு


    | |