Velli Thirai – Movie Posters

வெள்ளித்திரை – பிரகாஷ்ராஜ்

Velli Thirai Tamil Cinema Duet Movies

Host unlimited photos at slide.com for FREE!

Tamil Film Songs – Best of 2007 Movie Music

உதவிய பதிவு: றேடியோஸ்பதி: : “உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?”

அரிதாக கேட்க கிடைத்த பத்து

1. நன்னாரே :: குரு
பாடியவர்: ஷ்ரேயா கோஸல், உதய் மஜும்தார்
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: ஐஷ்வர்யாவுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நடனம். ரெஹ்மானுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; ஹிட் பாடல் கொடுப்பது. மணி ரத்னத்துக்கு இவற்றை கறக்கவும் இணைக்கவும் தெரியும்.

2. சின்னஞ்சிறு சீனா கற்கண்டே :: முருகா
பாடியவர்: சங்கீதா, வினீத் ஸ்ரீனிவாசன்
இசை: கார்த்திக் ராஜா

நினைவில் நின்றது: அபஸ்வர ரீ-மிக்ஸ்களின் நடுவே நெருடாத மறு பதிப்பு

3. டென்ஷன் மச்சான் :: வம்புச்சண்ட
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
இசை: டி இமான்

நினைவில் நின்றது: ஜாலி (படம் வந்துவிட்டதா?)

4. போனா வருவீரோ :: வீராப்பு
பாடியவர்: ஜே
இசை: டி இமான்

நினைவில் நின்றது: சுந்தர் சி.க்கு என்று பொருத்தமான ஜோடிகளும் ஆடாமலே அசத்தும் பாடல்களும் அமைந்து விடுகின்றன.

5. பேச பேராசை :: நாளைய பொழுதும் உன்னோடு
பாடியவர்: பவதாரிணி, கார்த்திக்
இசை: ஸ்ரீகாந்த் தேவா

நினைவில் நின்றது: இந்த ஆண்டின் நம்பிக்கை நட்சத்திரம், நாயகியாக நடித்திருக்கும் படம்

6. கந்தா கடம்பா :: மலைக்கோட்டை
பாடியவர்: நவீன்
இசை: மணிஷர்மா

நினைவில் நின்றது: ‘ரன்’ படத்தின் ‘தேரடி வீதியில் தேவதை வந்தா’ ரகத்தில் இன்னொரு பாடல்

7. சின்னச் சின்ன மழைத்துளி :: ஆக்ரா
பாடியவர்: சுருதி வந்தனா
இசை: சி எஸ் பாலு

நினைவில் நின்றது: எங்கேயோ கெட்ட மெட்டு

8. பாதை தெரிகிறது :: திருத்தம்
பாடியவர்: டிப்பு
இசை: பிரவீன் மணி

நினைவில் நின்றது: ஏற்கனவே கேட்டது போல் இருந்தாலும் இனிமையான மெட்டு + எளிமையான பொருத்தமான கவிதை வரிகள்

9. பொறந்தது பசும்பொன்னு :: திருமகன்
பாடியவர்: தேவா & டிப்பு
இசை: தேவா

நினைவில் நின்றது: 2011 முதல் மந்திரி என்று பிரஸ்தாபிக்காத தமிழ் நடிகரின் ஹீரோயிஸப் பாடல்

10. நூத்துக்கு நூறு :: தொலைபேசி
பாடியவர்: எஸ்.பி.பி.
இசை: சாந்தகுமார்

நினைவில் நின்றது: வைரமுத்துவை நினைவூட்டும் பிரயோகங்கள்.


அதிகம் கேட்கவைக்கப்பட்ட பத்து

1. பறவையின் கூட்டில் :: கற்றது தமிழ் (தமிழ் எம்.ஏ)
பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜாநினைவில் நின்றது: திரையில் இயல்பான பயணம் + என்றும் இளையராஜா

2. டோல் டோல்தான் அடிக்கிறான்
பாடியவர்: சுசித்ரா, ரஞ்சித்
இசை: மணி ஷர்மா

நினைவில் நின்றது: நடனம் & இசை – Made for each other

3. மதுரைக்குப் போகாதடி :: அழகிய தமிழ்மகன்
பாடியவர்: அர்ச்சித், பென்னி, தர்சனா
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: ஆரம்ப துக்கடா; பா விஜய்; தாவணி அசின் ஷ்ரேயா; விஜய் ஆட்டம்… எதை விடுப்பது!

4. எல்லோரையும் ஏத்திப்போக :: இராமேஸ்வரம்
பாடியவர்: ரேஷ்மி, சூரியா, ஹரிசரண், மாணிக்க விநாயகம்
இசை: நிரு

நினைவில் நின்றது: காட்சியாக்கம்

5. கடி கடி கொசுக்கடி :: வியாபாரி
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம், மனோ
இசை: தேவா

நினைவில் நின்றது: எஸ்.பி.பி. போன்ற மனோ; எஸ் ஜே சூர்யா மசாலாவுடன் அனுராதா ஸ்ரீராம்; Explicit ஆக இல்லாத இரட்டை அர்த்த வரிகள்.

6. யார் யாரோ :: ஒன்பது ரூபாய் நோட்டு
பாடியவர்: பரத்வாஜ்
இசை: பரத்வாஜ்

நினைவில் நின்றது: வைரமுத்து; தொட்டுக்க தங்கர் பச்சன் & சத்யராஜ்.

7. அழகான பாதகத்தி :: கருப்பசாமி குத்தகைதாரர்
பாடியவர்: சங்கீதா, கார்த்திக்
இசை: தினா

நினைவில் நின்றது: கரணுக்கு ஹிட் பாட்டு தருவது பெரிய விஷயம்!

8. அதிரடீ – சிவாஜி
பாடியவர்: ஏ. ஆர். ரெஹ்மான், சயனோரா
இசை: ஏ. ஆர். ரெஹ்மான்

நினைவில் நின்றது: கேட்டால் எட்டடி; பார்த்தால் பதினாறடி; ரஜினி என்றால் முப்பத்திரண்டடி! ஷங்கரும் என்பதால் 70 எம் எம் அடி!!!

9. ஜல்ஸா பண்ணுங்கடா :: சென்னை 600028
பாடியவர்: ஹரிசரண், கார்த்திக், ரஞ்சித், டிப்பு, கானா பழனி, கானா உலகநாதன், கருணாஸ், ப்ரேம்ஜி அமரன், சபேஷ்
இசை: ப்ரேம்ஜி அமரன்

நினைவில் நின்றது: கங்கை அமரன் இது போல் சமகால இலக்கியம் நிறைய படைக்கவேண்டும்.

10. அய்யய்யோ… என் உசுருக்குள்ள :: பருத்தி வீரன்
பாடியவர்: ஷ்ரேயா கோஸால், கிருஷ்ணராஜ், மாணிக்க வினாயகம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: ஆரம்ப துக்கடா முதலே அமர்க்களம்தான்.


தொடர்ந்து அதிகம் கேட்கவிரும்பும் பத்து

1. காற்றின் மொழியே :: மொழி
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர்நினைவில் நின்றது: பாடல் அருமை; காட்சியாக்கம் அழகு.

2. எல்லாப்புகழும் (முன்னால் முன்னால் வாடா) :: அழகிய தமிழ்மகன்
பாடியவர்: ஏ ஆர் ரெஹ்மான்
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: முக்காபலாவில் இருந்து ‘ம’ வரிசையில் துவங்கும் வெற்றிப்பாடல் ஜோடியான வாலி + ஏ ஆர் ஆர்; திரை வடிவமைப்பு மெகா சொதப்பல் 😦

3. மின்னல்கள் கூத்தாடும் :: பொல்லாதவன்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்

நினைவில் நின்றது: பாடலாசிரியர் யார் என்று பார்க்க வைத்த நா முத்துக்குமார்

4. யாரோ யாருக்குள் இங்கு யாரோ:: சென்னை 600028
பாடியவர்: எஸ்.பி.பி., கே எஸ் சித்ரா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: ஏனோதானோ வாலியை கண்டுகொள்ளாத திரைக்காதலர்களின் மெய்ப்பாடு.

5. அறியாத வயசு :: பருத்தி வீரன்
பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: எவ்வளவோ இளையராஜா கேட்டிருக்கோம்… இதுவும் ஃபேவரிட் ஆக்கிட மாட்டோமா!

6. டிங்கி டிங்கி டோரிடோ :: நினைத்தாலே
பாடியவர்: பவித்ரா, வினயா
இசை: விஜய் ஆண்டனி

நினைவில் நின்றது: ஹீரோயின் தனிப்பாடல் & துள்ளல்

7. முதல் நாள் இன்று எதுவோ ஒன்று & உன்னாலே உன்னாலே :: உன்னாலே உன்னாலே
பாடியவர்: மஹாலஷ்மி, கேகே, ஷாலினி & கார்த்திக், கிருஷ், ஹரிணி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

நினைவில் நின்றது: அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரி இருக்கும் படத்தில் கொஞ்சம் வித்தியாசப்படும் பாடல்

8. தமிழ்ச்செல்வி தமிழ் செல்வி :: கூடல் நகர்
பாடியவர்: சாதனா சர்கம், ஹரிஹரன்
இசை: சபேஷ் – முரளி

நினைவில் நின்றது: சாதனா சர்கமின் ஓரளவு சுத்த உச்சரிப்பு

9. உலக அழகி நான் தான் :: பிறப்பு
பாடியவர்: ஜனனி பரத்வாஜ்
இசை: பரத்வாஜ்

நினைவில் நின்றது: கார்த்திகாவின் எண்ணெய் தேய்த்த தனியாவர்த்தனங்கள் (தொடர்பான பதிவு: வினையூக்கி: ரசித்த ஆறு + ஆறு விசயங்கள்)

10. தோரணம் ஆயிரம்:: அம்முவாகிய நான்
பாடியவர்: தீபிகா, கீதா, ஸ்ரீவித்யா
இசை: சபேஷ்-முரளி

நினைவில் நின்றது: காதலியுடனான சில்மிஷங்களைத் தவிர வேறு எதையாவதையும் நினைக்கிற மாதிரி படத்தில் ஏதாவது படமாக்கியிருக்கலாம்.


சென்ற வருடம்:
Tamil Cinema – 2006 Top Movies List « Snap Judgment
Tamil Film Songs – 2006 Best « Snap Judgment

தெரிந்தே விட்டது: பில்லா; தெரியாமல் விட்டது எவ்வளவோ!

Parzival myth – The Holy Grail story

Host unlimited photos at slide.com for FREE!
நவீன புராணங்களில் முதன்முதலில் தோன்றியதாக பார்சிவல் கதையை சொல்லலாம். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நடந்ததாக நம்புகிறார்கள்.

தேடலில் உள்ள பலரும் தங்கள் தேடல் எது, விசாரணையின் எந்த கட்டத்தில் எப்படி இருக்கிறோம் என்று அறியாமல் தேடலை மட்டும் படு சிரத்தையாக தொடர்பவர்கள்.

பார்சிவல் வாழ்க்கையை விவரிக்கிறார்கள். அந்தக் கால அரசர்களுக்கேயுரிய எதிர்பார்க்கக் கூடிய திடீர் திருப்பங்களும் சுவாரசியங்களும் நிறைந்த கர்ணபரம்பரைக் கதை. இளைய தளபதி படம் போல் சண்டை, காதல், குடும்பம், மீண்டும் மோதல், காமம் என்று வாழ்க்கை ஓடுகிறது. வில்லன் யார், எந்த குறிக்கோளுக்காக வில்லனை துவம்சம் செய்ய நினைக்கிறான் என்று மசாலாப் பட நாயகன் மறந்து போவது போல் புறப்பட்டபோது இருந்த இலட்சியம் மறந்தே போச்சு.

தமிழ்ப்படங்களில் சேர வேண்டிய தாயும் சேயும் என்று நமக்குத் தெரிந்தவர், கதாபாத்திரங்களுக்கு புலப்படமாட்டார்கள். அப்பொழுதே உணர்ந்து கொண்டு விட்டால், எல்லாம் சுபமாக அப்பொழுதே முடிந்துபோகும். பார்சிவல் நிலையும் இப்படித்தான்.

குருட்டாம்போக்கில் சென்றாலும் ராஜாதி ராஜாவை சந்திக்க நேரிடும் முக்கிய தருணத்தில் கூட ‘கேட்கவேண்டிய கேள்வி’யை கேட்கவில்லை. கேட்டிருந்தால் மன்னனுக்கு மோட்சமும், மக்களுக்கு சுதந்திரமும், பார்சிவலுக்கு இராஜாங்கமும் உடனடியாக வாய்த்திருக்கும்.

அதை விட்டு விட்டு, இடைவெளிக்குப் பின் சுழன்று திரியும் திரைக்கதை போல் எங்கெங்கோ போகிறான். விக்கிரமாதித்தன் கதை மாதிரி வேதாளமாய் பல சுவையான நிகழ்ச்சிகள். இத்தனை அனுபவங்களுக்கும் மனித அறிமுகங்களுக்கும் முத்தாய்ப்பாக கட்டாங்கடைசியில் அந்த சக்தி வந்து சேர்கிறது. அடுத்தவர் மனதில் என்ன உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் நெஞ்சம் வாய்க்கப் பெறுகிறான்.

மீண்டும் கோட்டைக்கு வந்து, ‘தங்களை வாட்டுவது யாதோ’ என்று இராஜாவை வினவ, இராச்சியம் அவனை சேர்ந்தடைகிறது.

நீதி என்ன? எப்படி இது சாத்தியமாகிறது என்கிறது கதை? உறவுகளினால் சாத்தியக்கூறுகள் தென்படுகிறது. மற்றவர்களின் பரிச்சயங்களால் பாலம் அமைக்கிறான்.

அனுபவம் + திரைகடலோடும் உழைப்பு + ஏதில் தாவடி பயணங்கள்.

மேல் விவரங்களுக்கு:

1. Parzival – Wikipedia | 2. Wolfram von Eschenbach: Parzival

Food for Thought

இது நத்தார் விழாக்காலம். வாரந்தோறும் விருந்து. அளவளாவும்போது வழக்கமான குசலங்கள் முடிந்தவுடன் பேசுவதற்கு அவல் வேண்டுமா? உணர்ச்சிகரமான பேச்சைத் துவக்கி வைக்க உணவைக் குறித்தே உரையாட ஆரம்பிக்கலாம்.

உலகத்திற்கு எது உகந்தது?

பிரேசில் இருந்து வரும் அங்கக (ஆர்கானிக்) தக்காளி உட்கொள்வதா அல்லது பக்கத்து தெருமுக்கில் செயற்கை உரம் போட்டு வளர்த்ததா?

சுதந்திரமாக புல்வெளியில் உணவருந்தி கன்றுகளுக்கும் வயிறு முட்ட கொடுத்தபின் தரும் கறவைமாட்டுப்பாலா அல்லது பார்த்து பார்த்து உணவூட்டப்பட்ட, தானியத்தைத் தவிர்த்து பிறிதொன்றும் தவிர்க்கப்பட்ட அங்கக பசும்பாலா?

கோடி கணக்கில் ஏக்கரா வைத்திருக்கும் அங்கக நிலச்சுவாந்தாரிடம் தயாரான காய்கறிகளை வாங்குவதா அல்லது உள்ளூரில் சிரம் ஜீவனம் நடத்தும் ஏழை விவாசாயிடம் சென்று ‘உரம் போட்டியா; அங்கக வழிமுறை பின்பற்றினாயா’ என்று தொணதொணக்காமல் வாங்குவது மேலான விஷயமா?

நிறுவனங்களுக்கும் கூட்டுறவு சங்ககளுக்கும் நடுவில் – உடல்நலம், உணவு, சமூகப் பொருளாதாரம், சுற்றுச்சூழல் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வாடிக்கையாளர்களுக்குண்டான கேள்விகள் இது.

இன்னொரு கேள்வி. ஏன் அரிசி விலை ஏறுகிறது? இந்தியா போன்ற நாடுகளில் அது எப்படி நிலச்சுவாந்தார்களிடம் மட்டுமே லாபமாகிப் போகிறது?

பெட்ரோல் போட்டு குடா நாட்டு சண்டைகளை வளர்ப்பதை விட எத்தனால் போட்டு சுற்றுச்சூழல் ஆர்வலராகக் காட்டிக் கொள்வது மேலா?

According to the World Bank, the grain needed to fill up an SUV would feed a person for a year.

முழு அலசல் இங்கே: Food prices | Cheap no more | Economist.com

தொடர்புடைய கருத்துப் பதிவு: Dedicated to all Organic Nutheads « Snap Judgment

விழியிழந்தோருக்கு பார்வை

According to ScienCentral.com (March 15, 2007), the device uses an ocular implant to essentially bypass damaged retinas, which can no longer translate light into the electrical impulses the brain interprets as visual images. Here’s how it works: The camera sends images to a microprocessor (also on the glasses) that converts them into electrical impulses and wirelessly beams the impulses to the implant, which in turn sends them to the optic nerve–the highway to the brain.

An earlier version of the device, tested in 2002, helped patients perceive light and motion.

It will help patients see the outlines of obstacles like curbs and doorways. But it probably won’t restore a person’s ability to recognize faces or to read.

முழுவதும் படிக்க (& நன்றி): Mindful Living Short Takes: September/October 2007

Define: Annoyance

முன்னுமொரு காலத்தில் பாப் – அப் நுட்பம் இருந்தது. ரீடிஃப், சிஃபி சென்றால், ‘என்னைப் பாரேன்; எங்கள் உரலை இடியுங்களேன்’ என்று குறைந்தபட்சம் இரண்டு முதல், பலான பக்கங்களில் பதினெட்டு வரை பாப் அப் உதிக்கும்.

அப்புறம் சம்மட்டி அடிப்பது போல் சில நிரலிகள் வந்து அவற்றை கவனிக்க, சாவு மணியாக கூகிள் எல்லாவற்றையும் துரத்தி அஸ்து பாடியது.

நிரலர்களும் பாப் அப் பழசு என்று விளம்பரங்களை காதோடு பேசுவது முதல் வரிகளுக்கு நடுவில் நுழைப்பது வரை எல்லாம் செய்து வருகிறார்கள்.

இந்த நவீன வெப் 2.0 முடிந்து புதிய யுகமான 3.0- விலும் விடாமல் பாப் அப் போடுவது ‘அன்னாயன்ஸ்’.

உங்களுக்கும் கடுப்பு அதிகமாகணுமா? பச்சை கலர் சிங்குச்சா துரத்தி துரத்தி அடிக்க வேண்டுமா?? மின்னஞ்சல் கொடு என்று போகுமிடமெல்லாம் வரும் தொல்லை தேவையா?

நிலாச்சாரல் செல்லுங்கள். வரும்.

nila_charal_pop_ups_annoyance_ad_emails_web_design.jpg

மூடி விடுங்கள்.

வேறு எங்காவது செல்லுங்கள். வரும். கீழே போனால் எகிறி குதிக்கும். மேலே போனால் வாலாட்டும்.

வலையகத்தின் வேகத்தை அதிகப்படுத்துங்கப்பா… இப்படி பாப் அப் போட்டு படுத்தாதீங்க…

பின்குறிப்பு: மிகுந்த ஆதுரத்துடன் விற்கிறார்களே என்று விசால மனதுடன் மடல் முகவரியிட்டாலும் போய் தொலைவதில்லை. எனினும், உடனடியாக ‘போனஸ்’ போட்டு மடலனுப்பினார்கள். பிடிஎஃப்பை இறக்கிப் பார்த்தால், ஆங்கிலத்தில் சிவசங்கர் பாபா வடிவேலுவின் கால்களை பிடித்து டான்ஸ் ஆடிய கதாகாலட்சேபம் கிடைக்கிறது.

படித்து பார்த்தாலும் சாந்தி கிடைக்கவில்லை.

நான் வாங்கல… நீங்க வாங்கிட்டீங்களா?

hillary_nut_cracker_product_promo.jpg

வாங்க: the Hillary Nutcracker. . . with stainless steel thighs!

Dedicated to Bloggers

எல்லோரின் சிந்தனையும் சங்கமிக்கும் அதிசயப் பொழுது:

optimists_pessimists_mister_boffo_think_alike.jpg

நன்றி: Mr. Boffo Archives


எப்பொழுது நிறுத்துவது என்ற்றறியா மடந்தைநிலை:

stop_being_fun_comics_hagar_the_horrible.gif

நன்றி: Arts & Living: Comics (washingtonpost.com)


வலைப்பதிவு: சிறுகுறிப்பு வரைக:

pearls_before_swine_blog_definition_comics_cartoons.gif

நன்றி: Arts & Living: Comics (washingtonpost.com)

Dedicated to ‘Metti Oli’ Actress Cauvery

Taking Marriage Private – New York Times

For 16 centuries, Christianity also defined the validity of a marriage on the basis of a couple’s wishes. If two people claimed they had exchanged marital vows — even out alone by the haystack — the Catholic Church accepted that they were validly married.

In 1215, the church decreed that a “licit” marriage must take place in church. But people who married illictly had the same rights and obligations as a couple married in church: their children were legitimate; the wife had the same inheritance rights; the couple was subject to the same prohibitions against divorce.

But governments began relying on marriage licenses for a new purpose: as a way of distributing resources to dependents. The Social Security Act provided survivors’ benefits with proof of marriage. Employers used marital status to determine whether they would provide health insurance or pension benefits to employees’ dependents. Courts and hospitals required a marriage license before granting couples the privilege of inheriting from each other or receiving medical information.

உங்களுக்கு வாழ்க்கையில் திருப்தியில்லையா

மொழிபெயர்க்க விரும்பும் கட்டுரை:

Perfectionism – Psychology – Mental Health and Behavior – New York Times: “Unhappy? Self-Critical? Maybe You’re Just a Perfectionist”

Some researchers divide perfectionists into three types:

  1. Self-oriented strivers who struggle to live up to their high standards and appear to be at risk of self-critical depression;
  2. outwardly focused zealots who expect perfection from others, often ruining relationships;
  3. those desperate to live up to an ideal they’re convinced others expect of them, a risk factor for suicidal thinking and eating disorders.

நான் பார்த்த நடுத்தர வர்க்க இந்தியர்களில் பலர் obsessive-compulsive disorder உடன் கூடிய உத்தம/உதாரண/இலட்சிய புருஷராக திளைப்பவர்கள்.