-
-
அண்மைய பதிவுகள்
- முருகனும் முகவரும் சுகரும்
- ஜூலை 19 – ஆடி மாதத் தமிழ் இலக்கியம்
- அறுபது ஆண்டுகள் பாடிய நதி – என்றும் ஒலிக்கும் தாய்மொழி
- சொல்வனம் – இ.பா. சிறப்பிதழ்
- பூமணி அஞ்சலி
- கனகதாசரின் வேண்டுதல் – சரணாகதியின் ஆத்மா
- சனாதனம் என்றால் என்ன? இந்த கேள்வியே தவறானதா?
- குண்டியில் ஓக்கப் பார்க்கும் உலகில் ஒரு ரூபாய் அவமானம்
- பிளேட்டோவின் குகை: தற்கணத்தின் நிழல்கள்
- இது அரசியல் பதிவல்ல
- 🎤 இதயம் இந்தியன் தான்! 🎤
- ஆழியின் ஆட்டம்: மீன்காடு கிராமத்தின் கடைசி வேட்டை
- Dinamalar Essay – TN Politics 2026: Rural Voters Analysis
- ஆரவிந்தன்
- StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்
காப்பகம்
- ஓகஸ்ட் 2026
- ஜூலை 2026
- ஜூன் 2026
- மே 2026
- ஏப்ரல் 2026
- மார்ச் 2026
- பிப்ரவரி 2026
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Category Archives: Uncategorized
Dominos Pizza and some useless Research
பாரிஸ் ஹில்டனை அறியாத அமெரிக்கர்கள் அரிது.
ஹில்டன் ஹோட்டல் என்னும் பெயர் கேள்விபட்டதாக இருந்தாலும்,
சுய அடையாளத்துக்காக ‘முப்பதே நாட்களில் முன்னூறு
மில்லியன் செலவழிப்பது எப்படி’ என்று செய்து காட்டி
புகழ் பெறுபவர். பணக்காரர்கள் மத்தியில் மட்டுமே தன்னுடைய
பெயரை நிலை நாட்டியவர், இணையத்தின் உபயத்தால்
இப்போது சன் டிவி, ரேடியோ மிர்ச்சி வரை அடிபட
ஆரம்பித்துள்ளார்.
போதையில் மயக்கமுற்ற நிலையில், பாய் ·ப்ரெண்ட் காம லீலா வினோதங்களைப் படம் பிடித்து ‘யாம் பெற்ற இன்பம் …’ என இணையத்தில் ஒரு இரண்டு நண்பர்களுக்கு அனுப்ப, அவர்கள் ஒரு நாலு பேருக்கு அனுப்ப, இன்று பட்டி தொட்டி எங்கும் ‘ஹில்டன் வீடியோ பார்த்தாச்சா’ என்று புள்ளி ராஜா
அளவுக்கு செல்வாக்குடன், ·பாக்ஸ் டிவியிலும் ‘கதையல்ல…
நிஜம்’ மாதிரி ஒரு நிஜ நாடகம் நடத்துகிறார்.
டாமினோஸ் பீட்ஸா வரவழைப்பவர்கள் அதிகம் சொல்லும்
போலி பெயர் ‘பாரிஸ் ஹில்டன்’. அண்களுக்கு அமெரிக்காவின் அட்டர்னி
ஜெனரல் ஜான் ஆஷ்க்ரா·ப்ட் பெயர் பயன்பட்டிருக்கிறது. ஜனநாயக கட்சி
சார்பாக நிற்க போகும் ஹோவார்ட் டீனின் ஆதரவாளர்கள், ஜார்ஜ் புஷின்
கட்சிகாரர்களை விட அதிகம் அன்பளிப்பு வழங்குகிறார்கள். அம்மணமாகக் கதவை
திறப்ப்வர்களும் இருக்கிறார்கள். காது, மூக்கு, வாய் என வளையம் இன்ன
பிற சொருகிக் கொண்டவ்ர்களை விட அரைகுறை ஆடையாளர்கள்
அதிகம் வழங்குகிறார்கள்.
சதாமை கைப்பிடித்த அன்றும், மடோனாவும் ப்ரிட்னியும் பின்னிப்
பிணைந்து கிஸ் அடித்த எம்டிவி விழா அன்றும் தாராளமாகக்
கொடுத்திருக்கிறார்கள்.
நம்ம ஊரு டாமினோஸ் மக்களிடம் tip வருகிறதா,
என்று அதிக அளவு விற்பனையாகிறது, என்ன
பெயர் சொல்லி அழைக்கிறார்கள் (எவ்வளவு சிம்ரன்),
எப்படி எதிர்கொண்டு அழைக்கிறார்கள் போன்ற
விவரங்களை கேட்டு சொல்லுங்களேன்!
Posted in Uncategorized
குழந்தை எழுத்தாளர் சங்கம் – ஆர். பொன்னம்மாள் (4)
தாய்மாமன் வீட்டிலிருந்த என் அன்னை தன் மாமன் மகனை மணக்க ‘எழுதக் கூடாது’, என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. பாட்டியின் கண்ணீர் அன்னையின் பேனாக்களை மூடிக் கொள்ள வைத்தது.
முதல் கதை பிரசுரமான நாள்: நவ. 28, 1956
திருமணமான நாள்: ஜன. 28, 1958.
தந்தையின் அனுமதியோடு சில கதைகள் மீண்டும் பிரசுரமாக ஆரம்பித்தது. முதல் குழந்தை பிறந்த நாள்: ஜன. 19, 1960. ஆறாவது மாதம் ஜுரத்தில் அந்தக் குழந்தை மடிந்ததால் தன் எழுத்துப் பணியைத் துறந்த என் தாய் குடும்பமே உலகம் என வாழ்ந்தார்கள்.
என் தமையனுக்கு 15 வயது. என் தமக்கைக்கு 13 வயது. என் தந்தை விரும்பிப் படிக்கும் ‘தினமணி’ நாளிதழில் குழந்தை எழுத்தாளர் சங்க (கு.எ.ச.) சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளி வந்திருந்தது. அக்காவும், அண்ணனும் தூண்ட மீண்டும் எழுத ஆரம்பித்தார்கள்.
நவ. 13, 1976 அன்று ‘எல்.எல்.ஏ. பில்டிங்கில்’ (தேவநேயப் பாவாணர் நூலகத்தில்) ஏவிஎம் பரிசளிப்பு விழா நடக்கப் போவதாகவும், என் தாய்க்கு இரண்டாம் பரிசு கிடைத்திருப்பதாகவும் கடிதம் வந்தது. இப்போது எங்கள் குடும்பத்துக்கே இறக்கை முளைத்திருந்தது. விழாவில் கலந்து கொண்டு பரிசை வாங்கி வந்தோம்.
(கொஞ்சம் இடைச் செருகல்: கு.எ.ச.வின் 1978 வரலாற்றுப் போட்டியில் கலந்து கொண்ட என் சகோதரியும், ‘திரு.வி.க. வாழ்க்கை வரலாற்று’க்கு ஏவிஎம் வெள்ளிப் பதக்கம் பெற்றாள்.)
1983-இல் என் தாய் எழுதிய ‘கருணை விழிகள்’ என்ற நாவல் கு.எ.ச. மூலமாக முதல் பரிசான தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றுத் தந்ததோடு, கோகுலத்தில் தொடராகவும் வெளிவந்து சிறுவர்களிடையே பெரும் பாராட்டினை பெற்றது.
(சிறு குறிப்பு வளரும்)
Posted in Uncategorized
காஷ்மீர்… ப்யுடிஃபுல் காஷ்மீர்
வாத்து ஜோசியம் மூட நம்பிக்கைதான். ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் கிடைக்கும் ஆதாயங்கள் பல:
1. பாகிஸ்தானிடம் ‘kashmir’ என்று ஒன்று இல்லவே இல்லை
என்று சத்தியம் செய்யலாம்.
2. kashmir பிரசினையை தீர்த்து விட்டதாக அறிவிக்கலாம்.
3. அரசாங்கக் கோப்புகளின் பெயர் மாற்ற, பலகைகள் எழுத,
பயணசீட்டுகளை மாற்ற என்று செலவழித்து பணபுழக்கத்தை
அதிகரிக்கலாம்.
4. JKLF போன்ற அமைப்புகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற
ஒரு குட்டி நகரை POK-இல் அமைத்து Kashmir என்று
பெயர் சூட்டி விட்டு, தாரை வார்க்கலாம்.
Posted in Uncategorized
அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சி
சார்பில் நிற்பதற்கு போட்டா போட்டி. ஒரு ராஜீவ்
காந்தியோ, அத்வானியோ இறந்தால் மட்டுமே இந்தியாவில்
நிகழக் கூடிய அடிதடிகள் இங்கு நடக்கின்றன. முண்ணனியில்
உள்ள ஹோவார்ட் டீன் எல்லா அரசியல்வாதிகள்
போலவே, அமெரிக்காவில் தோன்றும் சகல பிரசினைகளுக்கும்,
வியாதிகளுக்கும், தலைவலிகளுக்கும், கணினி
சண்டித்தனங்களுக்கும் புஷ்ஷின் அரசாங்கமே காரணம்
என்று அறிக்கைப் போர் நடத்துகிறார்.
அது ஒரு நாலெழுத்து கெட்ட வார்த்தை. #%@ என்று எழுதலாம்
·..க் என்று எழுதலாம். வாயில் பெயர்ச்சொல்லாக, வினைச்
சொல்லாக, ஆச்சரியக்குறியாக, கோபக்கணையாக,
நகைச்சுவைக்காக எதுக்கு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால், அச்சில் ஏனோ கோலோச்ச வில்லை. ‘வின்னர்’
ஆக ப்ரசாந்த் முயற்சிப்பது போல் சிரம் தசை நடக்கும் ஜான் கெரி இளவட்டப் பத்திரிகையில் நான் ஒண்ணும் கட்டுப்
பெட்டி இல்லையாக்கும் என்று திருவாய் மலர்ந்தருளுகிறார்.
காசு பணம் வாங்காமல் தீக்குளிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். தன்னுடைய கோவிலில் இரக்க குணத்திற்காக கும்பிடும் அவலோகித்தா போதிசத்வா முன் வேண்டிக் கொண்டு, இறக்கமற்ற நாடான அமெரிக்காவிடம் மூன்று கோரிக்கைகள் வைக்கிறார். வியட்நாமியர் விடுதலையும், மனித உரிமையும், மத சுதந்திரமும் பெறவேண்டும்.
நம்ம காஷ்மீர் மாதிரிதான் இஸ்ரேலும். ஆனால், முப்து முகமத் சயித் குடும்பத்தார் கடத்தப் பட்டால், உயிருன் முக்கியத்துவம் உணரப்படும். இஸ்ரேலிய படை வீரருக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. பாலஸ்தீனுக்கு அநீதி இழைக்கிறோம் என்று மனது குத்த, போர் படையில் இருந்து ஒழுங்காக விலகி, அஹிம்சை முறையில் எதிர்க்கிறார். வழக்கம் போல் சந்தில் யாராவது மனித குண்டு வீசி நூறு பேரைக் கொன்று விடுவார்களோ என்றெண்ணி, எதிர்ப்பவர்களைக் காலில் சுட ஆணையிட்டிருக்கிறார் இஸ்ரேலின் மேஜர். அதுவும் சிவப்புக் கோட்டைத் தாண்டாமல் இருக்க அடி மட்டுமே படுமாறு சுட்டவைதான்.
இஸ்ரேலின் ஊடகங்களும், மனித நல கழகங்களும், மனித உரிமை மன்றங்களும், வெகுண்டெழுந்து விட்டார்கள். எப்படி நம்மில் ஒருவனை சாய்க்கலாம். உயிர் போகா விட்டாலும், துவண்டது இஸ்ரேலியன் அல்லவா?
Posted in Uncategorized
முதற் பிரசுரம் – ஆர். பொன்னம்மாள் (3)
அம்மாவின் தோழிகளை விரல் விட்டு எண்ண ஆரம்பித்தால் ஒரு கை அதிகம். முக்கியமானவள் ருக்மிணி. பதினாறு வயது; ‘எழுது’ என்று (நம் மரத்தடி தோழர்களைப் போல்) தூண்டினாள். ‘நானா? முடியுமா? அச்சில் வருமா?’ என்ற சந்தேகங்களைத் துடைத்தவள் தோழி. எழுதினாள். தோழி சொல்படி ஸ்டாம்பு வைத்து! முக்கால்வாசி திரும்பிக் கூட வரவில்லை.
கன்னடியன் வாய்க்காலில் குளிக்கப் பிடிக்காமல் ஒரு மைல் தூரமிருக்கும் தாமிர பரணிக்கு நீராடச் செல்வார்கள். அதுவும் எப்படி? படித்துறையில் அல்ல! தாண்டித் தாண்டி நடுப் பாறைக்கு. அவள் விரும்பிய தனிமை அங்குதான் கிடைத்தது. தேகம் சிலிர்க்கும் மட்டும் நீரிலேயே அமிழ்ந்து கிடப்பாள். மணிமுத்தாறு நதியிலும் அப்படித்தான். நீச்சலடித்தால் கூட தண்ணீரின் அலப்பல் தன் கற்பனையை பாதிக்கும் என்று தோழியிடம் நீச்சலைக் கற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்.
கரையிலிருந்த செம்பருத்தி, தங்க அரளி, கொன்றை, நந்தியா வட்டை போன்ற மலர்களைத் தொடுத்து மாலையாகக் கட்டி ‘லஷ்மீபதி’க்குச் சாற்றுவதே அவளின் இறைத் தொண்டு.
இரண்டரை ஆண்டுகளோடு கிராம வாழ்க்கை முடிந்து மதுரை அருகில் நத்தம் என்கிற ஊருக்குக் குடித்தனம் பெயர்ந்தது.
அங்கேயும் அவளுடைய இலக்கியப் பசிக்கு உணவு கிடைத்தது. ‘அருணாசலக் கவிராயரின்’ ராம நாடகக் கீர்த்தனைகளை இரண்டே நாட்களில் பாடித் தொண்டை கட்டிக் கொண்டது. அங்கே, ஜகதலப் பிரதாபன், மதன காம ராஜனெல்லாம் கிடைக்கப் பெற்றாள்.
கரு.முத்து. தியாகராஜன் செட்டியார் நடித்தி வந்த ‘தமிழ்நாடு’ ஞாயிறு மலரில் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்திருந்தது. ‘இரட்டைப் பரிசு’ என்று ஒரு கதை எழுதி அனுப்பினாள். திடீரென்று ஒரு மாலை… ‘போஸ்ட்’ என்று அவள் மடியில் விழுந்தது ‘தமிழ்நாடி’ன் ஞாயிறு மலர். அதில் ‘இரட்டைப் பரிசு’ பிரசுத்துக்க்குரிய கதையாக வெளிவந்திருந்தது. அவளுக்கு இறக்கை முளைத்து விட்டதா என்று தெரியவில்லை. பறந்தாள். அதன்பின், மாதமிருமுறை அவளது கதைகள் பிரசுரமாயின. ‘அன்பு மனம்’, வழிகாட்டி, இன்ப ரகசியம், விதி சிரித்தது, கண் திறந்தது, சந்தேகப் பேய் இவைகள் குறிப்பிடத் தக்கவை. வாசகர்களின் கடிதங்களையும் பெற்றவை.
முதல் கதைக்குக் கிடைத்த சன்மானம் ஐந்து ரூபாய். அப்புறம் ஒவ்வொரு கதைக்கும் பத்து ரூபாய். ‘தமிழ்நாடு’ நாளிதழின் ஆசிரியரான திரு. எம். எஸ். பி. சண்முகம் பாராட்டி எழுதிய கடிதங்கள் குடும்பத்தில் புயலை எழுப்பியது.
(சிறு குறிப்பு வளரும்)
Posted in Uncategorized
மின் அரட்டைகளும் மின்னல் வேக கணிப்புகளும்
காசி குறிப்பிடும் ந(ண்)பர் யாராக இருக்குமோ என்று மண்டை குடைய வேண்டாம். நான்தேன்! வக்கணையாக பதில் சொல்ல ஆசைதான். அவரவர் perception-படி விஷயங்கள் அனுமாணிக்கப் படுகிறது.
பாராவின் ‘மெல்லினம்’ அசை போட கொடுக்கும் சில வரிகள்:
நிர்மலாவுக்குக் குழப்பமாக இருந்தது. ரொம்ப சாமர்த்தியமாக ஒரு புகாரை, புகார் தொனியில் அல்லாமல் நட்புணர்வுடன் செய்தி அறிக்கை போல் வாசித்து விட்டுப் போயிருக்கிறாள் ஒருத்தி. ஆனால், புகார் புகார் தான். எந்தத் தொனியில் சொல்லப்பட்டால் என்ன?
பாராவின் அலகில்லா விளையாட்டு’ உபயம்:
* அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.
* உணர்ச்சி மிகுந்தால் அழுகை வருகிறது. கோபம் வருகிறது. சிரிப்பு வருகிறது. அறிவு மிகுந்தால் அமைதி வருகிறது. புத்தி விழித்துக்கொண்டு நாலையும் யோசித்துத் தெளிவு பெறுகிறது.
* கூடியவரை நல்லது செய்ய முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டியது தான். நமக்கே செய்துகொண்டாலும் நல்லது நல்லது தான்.
* ஆனால் லட்சியம் உள்ளவர்களுக்கெல்லாம் காரியம் கைகூடிவிடுகிறதா என்ன?
Posted in Uncategorized
இறந்தவர் திரும்பி வந்தால்?
Navans weblog :: இறந்தவர் சங்கம்: லால் பிஹாரி இறந்திருந்த போது உயிர் பிழைக்க பல வித்தியாசமான போராட்டங்களைச் செய்திருக்கிறார். கைதாகி விட்டு நீதிபதி முன்னால் நான் உயிருடன் இல்லை என்று சொல்லியிருக்கிறார். தன் மனைவிக்கு தன்னுடைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார். இறுதியில் தன்னுடைய நிலம் திரும்பக் கிடைத்த பொழுது அதைத் திருடிய தன்னுடைய உறவினரே வெட்கும் படியாக அவருக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். ” – நவன்
‘டபுள் ஜெபர்டி’ என்னும் படத்தை நினைவு படுத்தும் செய்தி. டெலிகிராப், டைம் ஆசியா, பைனான்சியல் எக்ஸ்பிரஸ் என்று சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார்.
Posted in Uncategorized
Oh… My Lord! Please Forgive Me…
பாராவின் பத்து வரங்கள் கிண்டலுக்காகவே எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அந்தக் காலத்தில் அசுரர்களுக்கு வரம் கொடுத்து விட்டு, நிவர்த்தி செய்வதற்கு ஏதாவது மாற்று கண்டுபிடிப்பார்கள். ஹிரண்ய கசிபுக்கு நரசிம்மர், இந்திரஜித்துக்கு இலக்குவன் என்று. இதோ என்னுடைய பிராயசித்த பிரார்த்தனைகள்.
1. அம்மா, அன்னை, புனிதத் தாய், ஜெ.ஜெ., அவர்கள் தமிழ்நாட்டின் நாற்பது இடங்களிலும், கேரளா, கர்நாடகா, மிசோராம் என்று நான்கு இடங்களிலும் லோக் சபா தேர்தலில் வெற்றியடையட்டும்.
2. மருத்துவ சீட்டுகள் மூலம் மாரிவானா, கஞ்சா, இன்ன்பிற லாகிரி வஸ்துக்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும். (பின்னர், முறைகேடு, சீர்கேடு என்று காரணம் சொல்லி (பின்வரும்) திமுக அரசு மருந்துக் கடைகளை சுவிகரித்துக் கொள்ளும்).
3. அப்துல் கலாம் வெண்பாக்களிலும், சோனியா இத்தாலிய ஹைக்கூக்களிலும் வாழ்த்திக் கொள்ள ஆரம்பிக்கட்டும்.
4. வெகுஜன பிரசுரங்களை சிறு பத்திரிகையாளர்கள் எடுத்து நடத்தட்டும். (தமிழ் படிக்கும் ஓரிரு ஜீவன்களும் விட்டு விட்டு, இணையத்துக்கும், இன்னாததற்கும் பறந்து விடுவர்).
5. கட்சித் தலைவர்களை, உட்கட்சி பினாமிகளே காலை வாராதிருக்க வேண்டும்.
6. (பார்க்க 2-ஆம் கோரிக்கை). நூறு மில்லிகிராம் மேல் கஞ்சா அடிக்காமல் கூட்டங்கள் தொடங்கட்டும்.
7. ரஜினி, கமல், விஜயகாந்த், தனுஷ், நந்தா, கரண் எல்லோரும் காவிரி வருவதற்காகவும், சரத் விளையாடுவதற்காகவும் போராடட்டும்.
8. கனிமொழியை தமிழக முதல்வராக்க முயற்சிக்க வேண்டும்.
9. சங்கராச்சாரியார் சொல்லும் வேட்பாளர்களுக்கு ‘சாப்பா’ குத்தாதிருக்க புத்தி வரட்டும்.
10. சிம்ரன் ‘ஸ்டாண்டப் காமெடி’யாக புதிய படங்களையும், புத்தகங்களையும் அறிமுகம் கொடுத்து பொது மக்களுக்கு எடுத்து செல்லட்டும்.
Posted in Uncategorized
துள்ளித் திரிந்த காலம்
என் அம்மாவின் பிறந்த நாள் மே 21, 1937. அவரின் பெற்றோர்களான லக்ஷ்மி, இராமசுப்பிரமணியம் பெயரிலும் பத்திரிகைகளில் எழுதி உள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர். 1944 ஜனவரியில் அம்மாவுக்குத் தங்கை பிறந்தாள். அதே ஆண்டு கந்த சஷ்டியன்று தந்தையை இழந்தார்.
1951-இல் சென்னையை விட்டு கல்லிடைகுறிச்சிக்கு அருகில் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு குடி பெயர்ந்தனர். தாத்தாவின் பிரிவை மறக்க தாய் துணையாகத் தேடிக் கொண்டது படிக்கும் பழக்கத்தை. ஆனந்த விகடன் துணுக்குகளைப் படித்த சிறுமி மெதுவாக சிறுகதைகளைப் படித்தாள். தொடர்ந்து ‘லஷ்மி’யின் நாவல்களான பெண்மனம், காஞ்சனையின் கனவு, லட்சியவாதி, ‘தேவனின்’ துப்பறியும் சாம்பு, ஸ்ரீமான் சுதர்சனம், மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், ‘எஸ்.ஏ.பி’யின் காதலெனும் தீவினிலே, இன்றே,இங்கே,இப்பொழுதே, நீ, சூறாவளி போன்ற கதைகளில் லயித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களோடு வாழ்ந்ததாகவே சொல்லி யிருக்கிறார்கள்.
கல்கியின் ‘பொன்னியின் செல்வனே’ சரித்திரமும் ருசியாயிருக்கும் என்று அவர்களுக்கு சொல்லி கொடுத்தது. பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி, எல்லார்வி கதைகள் அம்மாவின் உணர்வுகளை அலைக்கழித்தவை. இன்னார் கதைகள் என்று பொறுக்காமல், போரடிக்கும் (நான் எழுதுவது போன்ற 🙂 கதைகளிலும் என்ன இருக்கிறதென்று பார்க்க பொறுமையுடன் படித்தாள்.
பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தோடு சென்னை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. சிங்கம்பட்டியில் ஒரு ஓவர்ஸியர் குடும்பத்தில் கல்கி இருப்பதை அறிந்து மீண்டும் வந்தியத்தேவனும், குந்தவையும், நந்தினியும், அருள்மொழி வர்மனும் அவளோடு உறவாடினர். மீண்டும் ஆனந்த விகடன் அவர்களின் நண்பனானான்.
ஒரு சிவராத்திரி இரவில் பெரிய எழுத்து விக்ரமாதித்தனை முடித்தாள். அவர்கள் பெரியப்பா வீட்டிலிருந்த கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் அவளை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது. அவளைச் சுற்றி எப்போதும் சிறுவர், சிறுமியர் அவளது கற்பனைக் கதைகளைக் கேட்க; பிள்ளைகலைச் சாக்கிட்டு பெற்றோரும் கூடினர்.
அவளுக்கு மிகவும் பிடித்த பத்திரிகை குமுதம். போரடித்த போது படிக்க ஆரம்பித்த சாண்டில்யனின் சரித்திரக் கதைகளால் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டாள். குறிப்பாக சீனாவின் அங்குபங்சர் சிகிச்சையில் காதலே பிறந்தது.
(சிறு குறிப்பு வளரும்)
Posted in Uncategorized










