Category Archives: Uncategorized

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்?

rhizomes&nodes: “நாடெர் எடுத்துள்ள முடிவு குறித்தும் எழுத வேண்டும்.அவர் ஜனநாயக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்கள் நியாயமானவையே- ஆனால் இம்முடிவு யார் தரப்பை வலுப்படுத்தும், ஒட்டுகள் சிதறினால் யார் பயனடவார்கள்?“.

தமிழ்நாட்டில் பெயர் குழப்பம் செய்வார்கள். திமுக சார்பாக மைலாப்பூரில் ‘ராமஜெயம்’ என்பவர் தேர்தலில் நின்றால், அதே பெயர் கொண்டுள்ள இருவர் சுயேச்சையாக போட்டியிடுவார்கள். திமுக-வை சேர்ந்த இன்னும் சிலர் போட்டி வேட்பாளராக எதிர்கட்சியின் சார்பில் களமிறக்கப் படுவார்கள். அவரின் சாதி, இனம், மொழி இன்ன பிற பாகுபாடை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக நிக்கவைக்கப் படுவார்கள். திமுகவும் இதே மாதிரி வேலையை தன்னுடைய எதிர்கட்சி வேட்பாளருக்கு பதில் மரியாதை செய்யும்.

அமெரிக்காவின் ரால்ஃப் நாடரும் கிட்டத்தட்ட இதே போன்ற உதவியை புஷ்ஷுக்கு மீண்டும் செய்வார் போலத் தெரிகிறது. போன தடவை ப்ளோரிடா மற்றும் பல மாநிலங்களில் விந்தியாவின் மெல்லிய ஆடை நெய்த இழை போன்ற ஓட்டு வித்தியாசத்தில் ஆல் கோர் தோற்கக் காரணமானவர். ஆனால், புளித்துப் போன இரு கட்சிகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குபவர். சிகரெட் விற்பவர்களும், காப்பீடு நிறுவனங்களும், மருந்து தயாரிப்பவர்களும், கார் கம்பெனிகளும் பணத்தைக் கொட்டி வளர்க்கும் கட்சிகளுக்கு நடுவே, தேர்தல் நிதி கையூட்டு வாங்காமல் போட்டியிட முயற்சிப்பவர்.

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி வழங்குகிறது. தங்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும். கொடுக்கும் விகிதாசாரங்களில்தான் வேறுபாடு. இந்த டிவி சீரியல் மந்தை கூட்டத்தில் தனித்து நிற்பவர்: நாடர்.

த.மா.கா. சீரிய கொள்கைகளை கொண்டிருக்கலாம். ஆனால், தனிவழி சென்றதால், மீண்டும் அதிமுக கோலோச்ச வழிவகுத்தது. பஞ்சதந்திரக் காலத்தில் இருந்து சொல்லி வரும் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ ஏனோ நினைவுக்கு வருகிறது.

மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா….

சில நாட்கள் முன்பு பிபிசியின் இந்த நாள் பகுதியில் லுமும்பா இறந்ததாக அறிவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்திருந்தார்கள். இவரை குறித்து எனக்கு முதலில் அறிமுகம் செய்தவர் கணேஷ். ராகாகி-யில் அவர் எழுதியதில் இருந்து:



காங்கோ நாட்டின் முதல் பிரதமர் “லூமும்பா”…. சுருக்கமாகச் சொல்வதானால் காங்கோ நாட்டு காந்தி…

Patrice Lumumbaதனது பேச்சாற்றலினால் காங்கோ மக்களை ஓன்று படுத்தி பெல்ஜியத்திடமி¢ருந்து விடுதலை வாங்கித் தருகிறார். 35 வயதில் காங்கோவின் முதல் பிரதமர்…..ஆனால், வெளியேற வேண்டிய பெல்ஜிய அதிகார கும்பலும் அமெரிக்க CIA வும் சேர்ந்து இரண்டே மாதங்களில் லுமும்பாவை பதவியை விட்டுத் தூக்கிவிட்டு, கர்னல் “மொபுட்டு” வை பிரதமராக்குகிறார்கள்..லுமும்பா house arrestல்…. ஒர் மழை நாள் இரவில் லுமும்பா குடும்பத்தோடு காரில் தப்பிக்கிறார்… அவர்களை ஓட விட்டு நாட்டின் எல்லையில் பிடிக்கிறது ராணுவம்…..சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்.. காங்கோ நாட்டின் அரசாங்க விழாவில் “மொபுட்டு” லுமும்பாவின் தியாகத்தை மக்களின் முன் புகழ்ந்து கொண்டிருக்கும் போது, மொபுட்டுவின் ராணுவம் லுமும்பாவை காட்டில் வைத்து சுட்டுக் கொல்கிறது……..

படம் பாருங்கள்.. நமக்கு பரிச்சயமில்லாத, பழக்கமில்லாத ஓரு நாட்டின் தலைவன்….இருந்தாலும் படம் பார்த்தபின் லூமும்பா நம் மனதை தொட்டுச் செல்வது உறுதி… அதுவே இந்த படத்தின் படைப்பாளிகளின் வெற்றியும்………

படம் பிரெஞ்ச் மொழியில், ஆங்கில sub titles……

பிபிசி செய்தித்தளம் மேலும் தகவல்களைக் கொடுக்கிறது.

(அமெரிக்காவில் எந்த ஊடகமாவது இதே போல் ‘ஹைதி’ குறித்து பாரபட்சமற்ற அலசல்களைக் கொடுக்கிறதா?):

* கசாய் மாகாணத்தில் ஆயிரம் பேரை கொன்று குவித்ததாக லுமும்பாவின் மீது குற்றஞ்சாட்டப் பட்டிருந்தது.

* நான்கு மாதமே அரியணையில் இருந்த பிறகு, கம்யூனிச சிந்தனைகளால் ராணுவத்தின் ஆதரவை இழக்கிறார்.

* புதிய ஜனாதிபதி மொய்ஸே ஷோம்பெ “இது எங்களுடைய பிரச்சினை; மற்றவர்கள் தலையிட வேண்டாம்” என்று கூறி ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க முயற்சித்ததை (இந்தியா காஷ்மீர் விவகரத்தைத் தடுப்பது போல்) தடுத்து விடுகிறார்.

காலம் நிகழ்வு
ஜூன் 1960 லுமும்பா பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
அக்டோபர் 1960 பதவி பறிக்கப் படுகிறது
டிசம்பர் 1960 லுமும்பா கைதாகிறார்.
18 ஜனவரி 1961 லுமும்பா மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் encounter முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
செப்டம்பர் 1961 புதிய ஜனாதிபது கசுவுபூ ்கர்னல் சோசப் மொபுட்டுவை ஆட்சியிழக்க வைக்கிறார்.
நவம்பர் 2001 அமெரிக்கா மற்றும் பெல்ஜியாவுக்குத் தெரியாமல் லுமும்பா கொலை அரங்கேறியிருக்காது என்னும் பெல்ஜியாவின் அறிக்கை வெளியாகிறது.்
பிப்ரவரி 2002 பெல்ஜியா தவறை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கிறது. சுதந்திரத்தை நிலைநாட்ட கொங்கோவுக்கு மூன்று மில்லியன் நிதி அள்ளித் தருகிறது.

ஆஸ்கர் – ‘அ’ முதல்… – சந்திரன்

நச்சாதார்க்கும் இனியன் : “ஆஸ்கர் பரிசு பெற்ற படங்களின் வரிசையையும் சிறு குறிப்பை மட்டுமே ஆசிரியர் தந்துள்ளார். ஏன் அந்தப் படம் ஆஸ்கர் பரிசு பெற்றது- போன்ற செய்திகள் நூலில் இல்லை. வெறும் தரவுகள் வாசகனுக்கு எந்தவித அனுபவத்தையும் தரப்போவதில்லை. படம் பார்க்காத பார்வையாளர்களையும் பார்க்க வைக்கும்படி படங்களைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். நூலாசிரியர் பார்க்காத காரணத்தினால் பல படங்களை வாசகன் அறிந்து கொள்ள முடியாமல் ஆக்கப்பட்டிருப்பது இந்நூலின் குறை!”

நன்றி: ஆறாம்திணை

பீடி – (மீறல் வகைமையில் ஒரு சிறுகதை): கோபி கிருஷ்ணன்

சிறுகதைகள் மீது என்னுடைய பார்வை, ஒரு சிலரின் கவிதை மேலான கருத்து போல் ஆகி வருகிறது. குமுதம்/விகடனாலோ அல்லது இணையத்தில் காணப்படும் கதைகளினாலோ, இப்படி ஒரு எண்ணம் மேலோங்கி விட்டது. (இவ்வாறு தோன்றுவதற்கும் நான் கதை எழுத ஆரம்பித்ததுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை Smile). ரசிக்கும்படியான கதைகளை படித்தல் அரிதாகி வரும் தருணங்களில், நான் படித்ததில் பிடித்த ஒன்றில் இருந்து சில பகுதிகள்:



“பீடி ஒரு கலாச்சாரக் குறியீடு… கலாச்சாரப் பாதுகாவலர்கள் மன்னிக்காவிட்டால் பாதகமில்லை.

சூழலியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவும், ஓஸோன் படலத்தில் பொத்தல். மனப்படலத்தில் ஏராளமான பொத்தல்கள் . வாயில் சதா நிக்கோட்டினை நாடும் விழைவு.

புகைத்தலின் உதயம் : 16.10.68 இரவு. காரணம் அந்தரங்கமானது. என் மீது நானே அருவருப்பு கொள்ளச் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட களங்கம்.

புகைத்தலின் மறைவு : என் மறைவு நாள். என் பிணத்துக்கு எரியூட்டும் போது ஒரு கட்டு சந்திரிகா பீடியை என்னருகில் வையுங்கள். என் இறுதி ஆசை இது மட்டும்.

1975 தாம்பரத்தில் ஒரு ராத்தங்கலுக்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். படுக்கையில் கிடந்தவண்ணம் புகைத்துக்கொண்டிருந்தேன். யதேச்சையாகக் கூரையைப் பார்த்ததில் ‘உங்கள் சாம்பலை எங்கு அனுப்ப?’ என்ற ஆங்கில வாசகம் தென்பட்டது. இருப்பினும் அமைதியாக புகைத்தல் தொடர்ந்தது.

பீடி ஒரு குறியீடு.”



நன்றி: ஆறாம்திணை

யோசிப்பாரா ரஜினி? – ஆர்.வெங்கடேஷ்

தமிழ் சிஃபி – சமாச்சர்:: ரஜினி: “நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. இந்தியா முழுவதுமே, சினிமா தரும் பாப்புலாரிட்டியை நம்பி, அரசியலில் கால் வைக்கும் பிரபலங்கள் ஏராளம். குறைந்தபட்சம் ஒரு எம்.பி.யாகவோ, மந்திரியாகவோ கூட ஆகிவிடுகிறார்கள். கவர்ச்சி அரசியல் என்பது இன்றைய இந்தியாவின் தலையெழுத்துக்களில் ஒன்று. அதை இந்தியர்கள் ஏற்கவும் பழகிவிட்டார்கள்.

ஆனால், ரஜினி விஷயத்தில் எம் கவலையெல்லாம், ரசிகர்கள் பக்கம்தான். இன்னும் ரஜினி வாயைத் திறந்து தமது அரசியல் பயணம் பற்றியோ, கொள்கைகள் பற்றியோ எதுவுமே பேசவில்லை. தனக்கென இயக்கம் கண்டு, ஜனநாயக அரசியலில் அவர் பங்கெடுத்துக்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கவும் இல்லை. ஆனால், ரசிகர்கள் மட்டும் உதைபட்டுக்கொண்டும், மண்டை உடைந்துகொண்டும் இருக்கிறார்கள்.”

சுற்றுபுற வீடுகள் (4) – Muse Log

நான் கோக் குடிப்பதில்லைதான் என்றாலும், விரும்பி அருந்தும் மனைவி மற்றும் நண்பர்களை உஷார் செய்யவேண்டும். இந்தியாவில்(லும்) எந்தவிதமான நச்சுப் பொருளகளும் இல்லை கற்பூரமேற்றி சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் தயார் செய்யும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் புட்டிகள் வாங்குபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்தத் தண்ணீர் குடித்தாலும் ஆபத்தே. பேசாமல் சக்கரவாகப் பறவையாகி மழையை மட்டும் அட்மாஸ்ஃபியருக்கு அப்பால் சென்று குடித்து விட்டு உயிர் வாழவேண்டும்.

குமரகுருவின் ம்யூஸ்-லாஃக் மூலம் என்னுடைய வருகைப் பதிவேடு அதிகரித்தது. அவருடைய Muse Log-க்கு ஒரு அறிமுகம் தேவையில்லை. கல்யான் வர்மாவின் கோக் ஏன் குடிக்கக்கூடாது என்னும் செய்முறை விளக்கத்தை பார்க்க சொல்லியிருந்தார்.

குமரகுரு சொல்வது போல் இந்தியா மிளிர்கிறது பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது. விஐபி லக்கேஜ் விளம்பரத்தில் வந்த அம்மா-பையன் பிரிவாக இருக்கட்டும், இப்போது வரும் ஐசிஐசிஐ ‘நான் உன்னுடன் வாழ்நாள் முழுவதும்’ ஆகட்டும், ரிலயன்ஸ் மொபைலின் சம்பந்தம் இல்லாமல் ஊக்கமடைபவர்களைக் காண்பிக்கும் செல்பேசியாகட்டும், ‘ஹமாரா பஜாஜ்’ உருக்கமாகட்டும், ஒரு செண்டிமெண்டல் ஃபூலாகிய எனக்குப் பிடித்த விளம்பரங்கள் அனைத்துமே.

அவர்கள் தாய்மண்ணையும், இந்தியப் பற்றையும், பாசபந்தத்தையும் காட்டி காசு செலவழிக்க சொல்கிறார்கள். வாஜ்பேயி ஓட்டு கேட்கிறார். தவறா?

நன்றி: வர்மா

ஆஸ்கார் ஆருடங்கள்

ஆஸ்கர் விருதுகளில் கிட்டத்தட்ட நிறையவற்றை ஹேமந்த் சரியாகவே கணித்துள்ளார்.

என்னுடைய பட்டியல்:

விருது பெறப்போகிறவர் பெற்றிருக்க வேண்டியவர்
சிறந்த நடிகர் ஜானி டெப் சான் பென்
சிறந்த துணை நடிகர் டிம் ராபின்ஸ் பெனிசியோ டெல் டோரோ
சிறந்த நடிகை டயான் கீடன் சர்லீஸ் தெரான்
சிறந்த துணை நடிகை ஹாலி ஹண்டர் ரெனீ செல்வகர்
சிறந்த வரைமுகட்ட படம் ஃபைண்டிங் நீமோ ??? (தெரியாது)
சிறந்த கலை லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் நான் விரும்பும் படம் பரிந்துரைக்கப் படவில்லை (பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்) எனவே, தி லாஸ்ட் சாமுராய்
சிறந்த உடை அமைப்பு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் லாஸ்ட் சாமுராய்
சிறந்த முகப்பூச்சு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் லாஸ்ட் சாமுராய்
சிறந்த இயக்கம் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மிஸ்டிக் ரிவர்
சிறந்த எழுத்து (புத்தகத்தை அடிப்படையாக வைத்து) லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்
சிறந்த எழுத்து (திரைக்கதை) லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன் ஃபைண்டிங் நீமோ
சிறந்த மாயாஜால வித்தை லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்
சிறந்த இசை (திரைப்படம்) லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பிஃக் ஃபிஷ்
சிறந்த படம் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மாஸ்டர் அண்ட் கமாண்டர்: தி ஃபார் சைட் ஆஃப் தி வோர்ல்ட்

ஆஸ்கார் பரிந்துரைகள் வந்தவுடன் கொடுத்த வலைப்பதிவு.

கணினி உபயோகங்கள்



For additional tech toons visit jklossner.com

எனக்குப் பிடித்தக் கதைகள்(73) – பாவண்ணன்

தேடியதும் கிடைத்ததும் – கரிச்சான் குஞ்சுவின் “நூறுகள்”

1)

பிறகு ஏதோ முடிவுக்கு வந்ததைப்போல பெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று ரயிலிலிருந்து இறங்கினாராம். நிலையத்தை விட்டு பத்துநிமிட தூரம் நடந்து வந்து ஒரு விடுதிக்குள் தேநீர் குடிப்பதற்காக நுழைந்தாராம். பிறகு, வெகுஇயல்பாக அப்பையைத் திறந்து பார்த்தாராம். குழந்தைகளுக்கான ஒருசில ஆடைகள். சில புதிய காலணிகள். வண்ணக் காலுறைகள். ஒரு பொம்மை. சில ஆப்பிள்கள். கொய்யாப்பழங்கள். இவற்றுக்கிடையே கைக்குட்டையால் கட்டப்பட்ட நூறு ரூபாய்க் கட்டொன்றும் இருந்ததாம். யாரிடமிருந்தோ கைப்பற்றிக்கொண்டு ஓடோடி வந்ததைப்போன்ற எண்ணங்களும் பின்னாலேயே யாராரோ துரத்திக்கொண்டு வருவதைப்போன்ற எண்ணங்களும் ஒருசில நொடிகளுக்கு மனத்தை அழுத்தினவாம்.

“அந்தப் பயணமே யாரையாவது பார்த்துப் பணத்தைப் புரட்டி எடுத்துக்கொண்டு வருவதற்காகத்தான். பத்துப்பேரைப் பார்த்தோம். பார்க்காத அந்தப் பதினோராவது ஆள் தாமாகவே முன்வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எண்ணிக்கொள்ளலாமே” என்று பதறும் தன் மனத்துக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினாராம். வீட்டுக்கு வந்ததும் அறையை மூடிக்கொண்டு பணத்தை எண்ணியிருக்கிறார். பத்தாயிரம் ரூபாய். அப்போதே மகனை அழைத்துக்கொண்டு பெங்களூருக்குச் சென்று கல்லூரியில் சேர்த்துவிட்டு விடுதிக்கும் பணத்தைக் கட்டிவிட்டு வந்தாராம். திரும்பிவரப் பேருந்துக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சப் பணத்தை அங்கேயே ஒரு வங்கியில் மகனுடைய பெயரில் போட்டுவிட்டாராம்.

எல்லாவற்றையும் சொல்லிமுடித்துவிட்டுத் தான் செய்தது சரியா தவறா என்ற கேள்வியை என் முன்னால் வைத்தார். நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே எழவில்லை. சரி என்கிற பதிலையே அவர் ஒரு பக்கம் முன்வைத்துக்கொண்டு தவறுதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களை அடுக்கினார். தொடர்ந்து அவர் வாதங்களை அவரே நொறுக்கும்படி சரிதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களையும் அடுக்கினார்.

—-

2)

வாழ்வும் ஒரு சீட்டாட்டம் போலத்தான். வெற்றிக்கான சீட்டு கிடைத்துவிட்டால் ஆட்டத்தில் மகிழ்ச்சி பிறந்துவிடும். ஆனால் அச்சீட்டின் வருகையோ வராமையோ நம் கையில் இல்லை. அட்டைகளின் சுழற்சியில் யாருக்கு அது வருமோ , யாருக்கு அது பொருந்திப்போகுமோ என்பது இறுதிவரை தெரிவதே இல்லை. வாழ்வில் அடைகிற வெற்றிக்கும் இப்படி ஒரு வெற்றிச் சீட்டு தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த வெற்றிச் சீட்டு எந்த முயற்சியும் இல்லாமலேயே கிடைத்துவிடுகிறது. வேண்டாம் என்று உதறித் தள்ளினாலும் காலடிக்கு வந்து சேர்கிறது. வேண்டும் என்ற தவமிருப்பவர்கள் கைகளில் அகப்படுவதே இல்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் வெற்றி எப்போது வரும் எப்போது கைநழுவிப்போகும் என்பது தெரிவதும் இல்லை.

எப்போதுமே தோல்வியைத் தழுவுகிறவர்தான் அவர். வாய்ப்பேச்சில் எப்படியாவது வெளியுலகில் காரியங்களைச் சாதிக்க முயல்பவர். கதை நடக்கும் நாளில் வெளியுலகில் தம் காரியத்தில் வெற்றி காண முடியாதபடி பெருந்தோல்விகள் காத்திருக்கின்றன. தன் படுக்கைக்கு நூறாவது பெண்ணை அழைத்துவந்ததை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் முதலாக சுந்தர காண்டத்தை நூறாவது முறையாகப் பாராயணம் செய்வதை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் வரை யாரும் உதவ முன்வரவில்லை. மாறாக காலமெல்லாம் தோல்வியையே தந்தபடியிருந்த சீட்டாட்டம் வெற்றியைத் தருகிறது. வெற்றிக்கும் தோல்விக்கும் தனிப்பட்ட அர்த்தம் எதுவுமில்லை. அவை வெறும் சொற்குவியல். அந்த உண்மையை நாம் கண்டடையும்போது நம் மனத்தில் “நூறுகள்” என்னும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதை ஆழமாக வேரூன்றுகிறது.

*

http://www.thinnai.com/ar0822035.html

‘நாவலும் யதார்த்தமும்’ – சுந்தர ராமசாமி

1.

பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் மேடைப் பேச்சுகளை உள்ளூர ஒரு அநாகரிகம் என்றுதான் என் மனம் மதிப்பிடுகிறது. தன் முன்னால் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து தான் விரும்பும் கருத்துக்களை பேச்சாளர் கூறுவது; அதற்கான நேரத்தையும் அவரே தீர்மானித்துக் கொள்வது; பேசி முடித்ததும் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தன் பேச்சைப் பற்றி என்ன அபிப்ராயம் என்பதை அறிய துளிகூட அக்கறை இல்லாமல் மற்றோரிடத்துக்குப் பேசப் போய்விடுவது. பேச்சாளர் என்ன நினைக்கிறார் என்பது கேட்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. ஆனால் பேச்சைக் கேட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பேச்சாளருக்குத் தெரிவதேயில்லை. அவருக்கு அதற்கான அக்கறையும் இல்லை. சிந்தனை உலகத்தைச் சார்ந்த இந்த ஒருவழிப் போக்குவரத்தைத்தான் நான் அநாகரிகம் என்கிறேன்.

—-

2.

எங்களுக்கு அந்தக் கவலை இல்லை என்று நீங்கள் சொன்னால் அதிகக் கவலை கொண்டிருக்கிறீர்களோ என்று நான் சந்தேகப்படத் தொடங்குவேன். ஏனென்றால் எந்த விஷயத்தைப் பற்றி நான் கவலை கொண்டிருக்கிறேனோ அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் யாராவது விசாரித்தால் எனக்கு அதுபற்றி கவலையில்லையே என்றுதான் சொல்வேன். தன்னைப் போல் பிறரையும் நினைப்பதுதானே மனித சுபாவம். மனிதர்களுக்குரிய அநேக சுவபாவங்கள் எனக்கும் உண்டு. என் பிம்பத்திற்கு அந்தச் சுபாவங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு உண்டு.

—-

3.

ஒரு நாவலைப் படிக்கும்போது அது ஏதோ ஒரு விதத்தில் நம்மிடம் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உறவு சாதகமானதா? பாதகமானதா? நிறைவைத் தரக்கூடியதா? அல்லது குறையுணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதா என்பதையெல்லாம் இரண்டாவதாகப் பார்க்க வேண்டியது. நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம். நமக்குக் கட்டோடு பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். நண்பர்களைவிட அதிகமாக அவர்களை நினைத்துக் கொள்கிறோம். எதற்குச் சொல்கிறேன் என்றால் நமக்குப் பிடிக்கும் நாவல்கள்தான் நம்மைப் பாதிக்கின்றன என்பது அல்ல. பிடிக்காத நாவல்களும் நம்மைப் பாதிக்கின்றன. எதிர்மறையாகப் பாதிக்கின்றன. எந்தப் பாதிப்பையும் நிகழ்த்தாத நாவல் மனதிலிருந்து உதிர்ந்து போய்விடுகிறது. நேற்றுப் படித்து முடித்த ஒரு நாவல் இன்று மனதிலிருந்து உதிர்ந்துபோய்விட்டது; 20 வருடங்களுக்கு முன்னர் படித்த நாவல் மனதுக்குள் இன்றும் ஜீவகளையுடன் இருக்கிறது. ஏன் ஒன்று உதிர்ந்துபோயிற்று? ஏன் மற்றொன்று உயிர்ப்புடன் வாழ்கிறது? படைப்புச் சம்பந்தப்பட்ட அடிப்படையான பிரச்சனையே இதுதான்.

—-

(திருவண்ணாமலை, முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை – 16.8.1999)

http://www.thinnai.com/ar0815033.html