Category Archives: Uncategorized

முன்னுமொரு காலத்தில்

வலையில் இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக பதிவது பெரிய விஷயம். இரண்டாண்டு காலமாக ரமணீதரன் வலைப்பதிந்து வருகிறார். வலைப்பதிவு ஏன், நியு ஜெர்ஸி பெட்னா விழா குறித்த பதிவுகள், திரைப்படங்கள், PBS / NPR-இன் All Things Considered, The Connection, On Point என்று விளாசுகிறார்.

லிட்டில் பிக் மேன், The Hudsucker Proxy, தி ஸ்டிங், Rio Lobo, பிக் ஜேக், The Comancheros, Rio Grande , Sands of Iwo Jima, Cradle will rock, ரிபல் விதவுட் அ காஸ், ப்ளூ க்ரஷ், தி பேட்ரியாட், தி ரெக்ரூட், தி ஹவர்ஸ், தி வேனிஷிங் ஹாரி, un ami qui vous veut du bien (With a Friend Like Harry), சவுண்ட் அண்ட் ஃப்யூரி, Yadon ilaheyya (Divine Intervention), லீவிங் ஜெருசலம் பை ரயில்வே, தி எண்ட் ஆஃப் தி அஃபேர், எ க்ரையிங் கேம், மிட்நைட் இன் தி கார்டன் ஆஃப் குட் அண்ட் ஈவில், என்று பார்த்த படங்களுக்கு எல்லாம் பார்வையோ விமர்சனமோ (இப்பொழுதாவது) முன்வைத்தால் நன்றாகத்தான் இருக்கும்.

அப்பொழுது எனக்கு வந்த சந்தேகம். மனிதர் தூங்குவாரா அல்லது கண்ணிமைக்கும் நேரங்கள்தான் உறக்கம் என்று நினைக்கிறாரோ என்று தோன்றும். பிறகு புள்ளை குட்டிக்காரர் ஆகிப்போனார். பாஸ்டன் வந்தபிறகு சகவாசமும் சரியில்லை. கெட்டுப் போயிருக்கிறார் :-/

The redistricting plan, வானொலி நாடகங்கள், கதைசொல்லிகள், ஞானக்கூத்தனின் கவிவகுப்பு, தமிழன் அடையாளம், கண்ணில் தெரியுது வானம், அவருக்கு ரொம்பப் பிடித்தமான எழுதுபொருளான கவிதை, அன்றைய நாளிலே அவர் அஞ்சிய இன்னொரு சொல்லான பாரதி, உயர்வு நவிற்சி, சரிகைக்குஞ்சச்சொற்கள்,
காற்றடைத்தபைக்கூற்றுகள், சில கெட்ட உறுப்புகள் என்று எழுந்தவை, எதிர்ப்பட்டவை, பார்வை, மற்றவை என்று அடுக்கி உங்களை வலைபாஸ் (தமிழில் என்ன?) பாதையில் விடப்போவதில்லை.

(தமழ்ச் சொல் என்றவுடன் கண்ணில் படுவது: மறுப்புக்கூற்று (disclaimer), narcissist masks — தன்னீர்ப்புமுகமூடிகள் போன்ற சொல்லாக்கங்கள்.)

வானவியற்றுறையையும் விடவில்லை. பெயரிலி ஆகிப் போனதும் இங்கே பதிவது குறைந்து போனது.

அவருடைய பதிவுகளில் இருந்து:

  • blogger.com தனது அண்மைய அமைப்பு மாற்றுதலோடு நீண்ட உள்ளிடுகைகளை ஏற்றுக்கொள்வதைத் தடை செய்கின்ற நோக்கமேதும் கொண்டதாலேயே, இந்த இரண்டு உள்ளிடுதல்களோடும் BIG POST ERROR என்று சுருக்கமான வரப்புயர விளக்கத்தைப் பெற்றேனோ தெரியாது 🙂 [அல்லது தமிழிலே நீண்டதாய் எழுதியதை ஆங்கிலத்திலே, “நல்ல கருத்துக்களைச் சொன்னார்; கைதட்டிவிடுங்கள்” என்ற பகிடிபோல மொழிபெயர்ப்பாகச் சொல்லியதோ தெரியாது :-D]
  • இன்னொரு ஆறுதலான விடயம், இணையத்தின் அறியப்பட்ட “I don’t care what kind of cake you bake; but, I will top it with my sour cream” அறிஞ்ஞ ஆசாமிக்குஞ்சுமோன்கள் இவரின் திரைப்படவிமர்சனங்களிலே தங்கள் உள்ளீடு என்றளவிலே இதுவரை குப்பை சொட்டாமல், கொட்டாமலிருப்பது.
  • வலைப்பதிதலிலே உள்ள எதையும் விரும்பியவாறு என்ற நாட்குறிப்புச்சுதந்திரத்தைக் கண்டு கொண்டாலும், சொல்லும் பாங்கிலே கொஞ்சம் நிதானமாக, பின்னாலே இரண்டடி வைத்து நின்று நான் சொல்லவருவதை நானே கேட்டு எழுதுவதாகத் தீர்மானம். அன்றாடம் கேட்பதும் காண்பதும் வாசிப்பதுமாக உள்ளே வருவனவற்றிலே எந்தளவு உள்ளே தங்குகிறது என்று தெரியவில்லை. ஒரு மாதம் கழித்துப் பார்த்தால், ‘இத்தனையையும் உள்வாங்கிக்கொண்டதால் என்ன பயன்’ என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. சில மாதங்களிலே அடையலின்மேலே அடையற்படிவாய்த் தேங்கி, பாறையாகிப் போய்விடுகிறது. கதை, கவிதை, கட்டுரை எழுதுவதே சூழல்–>இருப்பு–>மூட்டம் காரணமாகத் தேய்ந்து போகையிலே, இந்த வலைப்பதிவு குறைந்த பட்சம் அன்றாட அறிதலிலே ஓரிரண்டையாவது பதித்துக்கொள்ள உதவும்; இன்னும், பத்தாண்டுகளிலே திரும்பிப் பார்க்கையிலே வந்த பாதையும் அறிந்த கருத்துக்களும் எந்தளவு குறிகளையும் நிலைகளையும் மாற்றியிருக்கின்றன என்றாவது அறிவதிலே ஒரு திருப்தி ஏற்படக்கூடும்.
  • அரசு பதில்

    Kumudam Weekly ::

    எஸ்.ஜனார்த்தனன், சின்னதாராபுரம்.
    ‘தமிழ்நாடு விளங்காமல் போனதற்கு சினிமா பைத்தியங்களாக தமிழர்கள் இருப்பதுதான் காரணமா?

    அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், திரையரங்கங்கள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்க வேண்டுமே? தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக சினிமா ஆரம்ப காலத்தில் இருந்தது வேண்டுமானால் ஒரு காரணமாக இருக்கலாம்.

    வி.மாரிமுத்து, பரப்பாடி.
    சிறந்த கலைப் படைப்பு என்பதற்கு அளவுகோல் என்ன?

    (1)வாழ்க்கையின் அம்சம் ஒன்றை அந்தப் படைப்பு புதிதாக வெளிப்படுத்துகிறதா? வெளிப்படுத்தப்பட்ட விஷயம் உண்மையானதுதானா?
    (2) அது அழகாகவும், சொல்ல முற்பட்ட பொருளுக்கு ஏற்ற முறையிலும் அமைந்திருக்கிறதா?
    (3) கலைஞனுக்கும் அவன் படைத்த படைப்புக்கும் உள்ள உறவு சத்தியமானதா? மூன்றாவதாகச் சொன்ன இந்த அளவுகோல், மிக முக்கியமானது. படைப்பவனிடம் உதித்த அதே உணர்ச்சிகள், அதைப் படிப்பவனுக்கோ, பார்ப்பவனுக்கோ, கேட்பவனுக்கோ ஏற்படச் செய்வதே அந்தச் சத்தியம்தான்’ (சொன்னது டால்ஸ்டாய்)

    பரிநீதா

    இசை: ஷாந்தனு மொய்த்ரா (Shantanu Moitra)
    பாடலாசிரியர்: ஸ்வனாந்த் கிர்கிரே (Swanand Kirkire)
    சாய்ஃப் அலி கான், வித்யா பாலன், ரேகா, சஞ்சய் தத், தியா மிர்சா

    பியா போலே – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    அந்தக் கால மனீஷா கொய்ராலா போல் இருக்கிறார் நாயகி வித்யா பாலன். காதலை இயற்கையின் பல வண்ணங்களோடு ஒப்பிடும் வரிகள். 1942- எ லவ் ஸ்டோரி போன்ற மெல்லிய இசை. கொஞ்சும் ஷ்ரேயா கோசாலின் குரல் வெகு பாந்தமாக வருடுகிறது.
    மீண்டும் மீண்டும் கேட்கலாம்

    கஸ்தோ மஸா – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    குழந்தைகளுடன் பயணிக்கும் ஹீரோ அறிமுகப் பாடல். கனவுக் காதலர்களை வர்ணிக்கிறார்.
    படம் பார்த்த பிறகு மேலும் பிடித்துப் போகலாம்

    சுனா மன் கா ஆகன் – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    பிரிக்கப்பட்ட இளஞ்ஜோடிகளின் தொக்கி நிற்கும் கேள்விகள். இடைவேளைக்குப் பின் சோகத்தைப் பிழிய உதவும்.
    பரவாயில்லை

    கேஸி பஹேலி ஜிந்தகானி – சுநிதி சௌஹான்
    மும்பையில் மூடப்பட்ட பார்களில் வரும் ஜாஸ் இசை போல் இடுப்பை மெதுவாக வளைத்து ஆடிப்பார்க்க வைக்கிறார்கள். திரையில் ரேகா தோன்றுவார்.

    ராத் ஹமாரி தோ – சித்ரா, ஸ்வனாந்த்
    சுவர்க்கோழி ரீங்காரமிட, இராப்பாடகனின் சோக அழைப்போடு துவங்குகிறது.
    அமைதியான நேரங்களில் கேட்கலாம்

    தினக் தினக் தா – ரீடா கங்குலி
    கல்யாண முன்னோட்டத்தின் குரூப் டான்ஸ். திரைப்படத்தின் துள்ளல் பாடல். ஹிந்திக்குக் கிடைத்திருக்கும் புதிய இலா அருணான, ‘ரீடா கங்குலி’ வெகு சீக்கிரமே தமிழில் ரகஸியாவுக்குக் குரல் கொடுத்து விடுவார்.
    இது நம்ம பாட்டுங்க

    ஹுயி மேன் பரிநீதா – சோனு நிகம், ஷ்ரேயா கோசால்
    முதற் பாடலான பியா போலே-வின் சோகப் பதிவு.

    படத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கும் பாடல்கள். பாடல்கள் கேட்க: RAAGA – Parineeta – Hindi Movie Songs

    What are Blogs? 

    What are Blogs? Posted by Hello

    Doc Searls recently spoke on the topic – "What bl…

    Doc Searls recently spoke on the topic – “What blogs are Vs What blogs are not” at Les Blogs recently. In an insightful presentation, Doc Searls explains the cardinal principles of blogging and their likely impact on the readers and society at large.

    Some snippets from the presentation:

    – Blogs inform but not deliver information

    – Blogging is about making and hanging minds

    – Blogging is about rolling snowballs dowhhill not about pushing rocks uphill

    – Blogs are an example of demand side supplying itself

    – Blogs don’t have to be sticky
    The presentation slides are available here

     Posted by Hello

    மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனை

    தினகரன் :: ராய்ப்பூர், ஏப். 28 – ராய்ப்பூரில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகள் நிர்வாணப்படுத்தி சோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. அப்போது தேர்வில் காப்பி அடிப்பவர்களை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட – பறக்கும் படையினர் ஒரு வகுப்பிலிருந்த 35 பெண்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்து பரிசோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதித்தார்களாம். ஒரு மணிநேரம் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கேடு கெட்ட செயல் சட்டீஸ்கர் மாநிலம் உமாரிய என்ற ஊரில் நடந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வி அமைச்சர் ராஜேஷ் முனத் தெரிவித்தார்.

    முஸ்லிம் திருமண விவாகரத்துக்கு புதிய கட்டுப்பாடு

    vikatan.com :: முஸ்லிம்கள் மும்முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்வதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் புதிய கட்டுபாடு விதித்துள்ளது.

    போபாலில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் 2 நாள் பொதுக்குழு கூட்டத்தின் முடிவில், நிருபர்களிடம் பேசிய வாரியச் செயலாளர் அப்துல் ரகீம் குரேஷி “முஸ்லிம் திருமண விதிமுறை மாதிரிச் சட்டம் ‘நிக்காஹ் நாமா‘ தயாரிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அல்லாஹ் பார்வையில் ‘தலாக்‘ செய்வது மிகவும் வெறுக்கத்தக்க ஒன்றாகும். எனவே முஸ்லிம்கள் விவாகரத்து செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    தம்பதிகள் விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அதற்குரிய கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும். ‘தலாக்’ என்பது கடைசி ஆயுதமாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே ‘நிக்காஹ் நாமா’வில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சமாகும்.

    ‘தலாக்’ கூறுபவர்கள் ஒரே முறையில் மூன்று முறை ‘தலாக்’ கூறமுடியாது. ஒரு ‘தலாக்’க்கும் இன்னொரு ‘தலாக்’க்கும் குறைந்தபட்சம் ஒரு மாத இடைவெளி இருக்கவேண்டும். ஒரு முறை ‘தலாக்’ சொன்னால் அதை மூன்று மாதத்துக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

    மேலும் விவரங்களுக்கு: NDTV

    பிரார்த்தனை

    தமிழோவியம் ஆசிரியர் மீனாக்ஷிக்கு நிம்மோனியா வந்துள்ளது. முழுமையாக குணமடைய இரண்டு வாரங்களாவது எடுக்கும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் நலமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    திரைப்படத்தில் திருமா

    செய்தி: Thirumavalavan goes from censoring Movies to Acting in them

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார். ‘அடங்க மறு’ போன்ற அரசியல் கட்டுரைகள் தொகுப்பின் மூலம் எழுத்தாளராகவும் அறியப்பட்டவர் திருமா.

    மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் ‘அன்புத் தோழி’ படத்தில் நடிப்பதற்கு அணுகியுள்ளார்கள். ஏற்கனவே பி.ஜே.பி.யின் எம்.பி. திருநாவுக்கரசர், திமுக-வின் ஸ்டாலின், பா.ம.க.வின் ராமதாஸ் போன்றோர் வெள்ளித்திரையில் தலையை காட்டி இருக்கிறார்கள்.

    திருமா ஈழப் போராட்டத்தை முனைப்புடன் கவனித்து ஈடுபட்டும் வருகிறார். இலங்கையில் நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட கதைக்கு திருமாவின் ஒப்புதலும் கிட்டிவிட்டது.

    கிருபா சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக பரணியும் (?) நாயகியாக சௌம்யாவும் நடிக்கிறார்கள்.

    நன்றி: teakada

    திருமா குறித்த முந்தைய பதிவு | நையாண்டி — திட்டாந்தப்பேச்சு

    சுகுமாரனின் திசைகளும் தடங்களும்

    Thinnai:

    பாவண்ணன் – வெளிச்சம் தரும் விளக்குகள்

    கட்டுரைகளின் அமைப்பையொட்டி இத்தொகுதி ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகள் இலக்கியம், சமூகநடப்பு, திரைப்படம் சார்ந்தவை. இவற்றைப்பற்றி முன்னுரையில் குறிப்பிடும்போது சுகுமாரன் பல கட்டுரைகள் பத்திரிகைகளின் தேவையையொட்டி எழுதப்பட்டதாகச் சொன்னாலும் தேவைக்கு எழுதிக்கொடுப்பதைக்கூட தன் மனம் ஈடுபட்ட துறைசார்ந்து மட்டுமே எழுதியிருப்பதை முக்கியமான அம்சமாகக் குறிப்பிடவேண்டும்.

    முதல் பகுதியில் எட்டு கவிதைத்தொகுதிகளுக்கும் கதைநூல்களுக்கும் சுகுமாரன் எழுதிய முன்னுரைகளும் அறிமுகக்கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கின்றன. “சொற்களில் பொருள்படும் சொல்லைக் கடந்த இயக்கமே” சுகுமாரனுக்குக் கவிதையாகப்படுகிறது. காசியபனின் “ராதை“, “கலங்கரை விளக்கு” ஆகிய கவிதைகளையும் கலாப்ரியாவின் “எம்பாவாய்” கவிதையையும் முன்வைத்து அவர் பகிர்ந்துகொள்ளும் வரிகள் அவருடைய பார்வையைத் தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.

    விடுப்பு நாளில் தாத்தா வீட்டுக்குச் சென்று திரும்பிய பேரனின் குறிப்பைப்போன்ற நெகிழ்ச்சியோடும் நெருக்கத்தோடும் எழுதப்பட்டுள்ள கட்டுரை “எது பஷீர்?”. மூன்றரைப்பக்கம் மட்டுமே இடம்பெறக்கூடிய அக்கட்டுரை எழுப்பும் உணர்வலைகள் மறக்க இயலாதவை. அச்சந்திப்பு நிகழ்ந்த தருணம் கேரள இலக்கிய உலகில் அவரைப்பற்றிய மாற்றுக்கருத்துகள் பொய்ப்படலமாகப் படர்ந்திருந்த காலம் என்று சுகுமாரன் குறிப்பிடுகிறார். அவருடைய சொந்த வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களின் பதிவாக எழுதிய மகத்தான “மதிலுகள்” நாவலை சற்றும் நாக்கூசாமல் ஆர்தர் கோஸ்லர் எழுதிய “நடுப்பகலின் இருட்டு” நாவலின் திருட்டு என்றும் அவரை ஒரு முஸ்லிம் மதவாதி என்றும் அவதூறுகள் நிரம்பியிருந்த காலம்.

    தம்மீது கொட்டப்பட்ட பொய்க்கருத்துகளை ஒட்டி எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் பஷீர் மௌனம் காத்தார். வேதனை நிரம்பிய மௌனம் அது. அம்மௌனத்தைச் சுட்டிக்காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு “சொல்லிவிட்டுப் போகட்டுமே, மனிதர்கள் என்றால் நாலு நல்லதும் சொல்வார்கள் கெட்டதும் சொல்வார்கள். நாம் நல்லதைமட்டுமே எடுத்துக்கொண்டால் போகிறது” என்று பதிலுரைக்கிறார்.

    ஆளுமை மிகுந்த மற்றொரு எழுத்தாளரான தகழியும் இன்னொரு தருணத்தில் தன்னை நோக்கிக் கேட்கப்பட்ட கேள்விக்கு “ஒரு விவசாயி தான் விதைக்கிற எல்லா நெல்லும் முளைக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுவான்” என்று சொன்னதையும் இந்தக் கருத்தோடு இணைத்துப் பார்க்கலாம். இத்தகு மௌனங்கள் படைப்பாளிகளின் மேன்மையை ஒருவிதத்தில் அதிகரிப்பதாகவே உள்ளது. தம் படைப்புகள்மீது படியும் அவதூறுகளுக்கு விடைசொல்லிக்கொண்டும் மாற்றுத் தரப்புகளை உருவாக்கிக்கொண்டும் இருப்பதல்ல ஒரு படைப்பாளியின் வேலை.

    நோபெல் பரிசுபெற்ற வில்லியம் கோல்டிங் எழுதிய படைப்புகளை அறிமுகம் செய்யும் கட்டுரை, அவருடைய புதினங்களைத் தேடிப் படித்துவிடவேண்டும் என்னும் அளவுகடந்த ஆர்வத்தை வாசகர்களிடம் உருவாக்கும் என்பது திண்ணம். “ஈக்களின் அரசன்“, “வாரிசுகள்” ஆகிய புதினங்களைப்பற்றி சுகுமாரன் தந்திருக்கும் குறிப்பு அவர் தம் வாசிப்பின் வழியே கண்டடைந்த அனுபவமாகவே இருக்கவேண்டும்.

    கோல்டிங் எழுதிய புதினங்களைப்பற்றிய கட்டுரையை அடுத்து இடம்பெற்றிருப்பது ஆனி பிராங்க் என்னும் யூதச்சிறுமி எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு. உலகையே குலுக்கிய புத்தகம். இரண்டாவது உலகப்போரின் சமயத்தில் நாஜிகள் நிகழ்த்திய அடக்குமுறைகளைப்பற்றியும் அக்கிரமங்களையும் நேருக்குநேர் பார்த்த ஒரு சிறுமி எழுதி வைத்துவிட்டுப் போன குறிப்புகள். மனித மனங்களில் நிறைந்திருக்கும் இருட்பகுதியை அம்பலப்படுத்தும் கோல்டிங் பற்றிய கட்டுரைக்கு அடுத்ததாகவே இக்கட்டுரையும் இடம்பெற்றிருப்பது விசித்திரமான ஒற்றுமை.

    வாழ்வின் வேட்கை” என்னும் நூலின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் சுகுமாரன் வான்கோ என்னும் மகத்தான ஓவியக்கலைஞனின்வாழ்க்கையை மிகத் திறமையாக அறிமுகப்படுதத்தியுள்ளார்.

    (திசைகளும் தடங்களும் – சுகுமாரன். அன்னம். விலை. ரூ90 )