Category Archives: Reviews

தினமணி – 2007 தமிழ் பத்திரிகை தீபாவளி மலர்கள்: அறிமுகம்

2007 Diwali Malar Deepavali Magazine Specials Dinamani

Dinamani – Tamil Books: Mini Reviews

1. சித்தர் பாடல்கள் தொகுதி 1&2 மூலமும் உரையும் – அறிவொளி (SIDDHAR PADALGAL VOL 1 & 2 MOOLAMUM URAIYUM)

சிவவாக்கியர் முதல் அகப்பேய் சித்தர் வரை உள்ள அனைத்து சித்தர்களின் பாடல்களுக்கும் மூலபாடல்களுடன் தெளிவுரை மற்றும் விளக்கவுரையுடன் அமைந்துள்ளது,
2. அன்னா கரீனினா

லியோ டால்ஸ்டாயின் படைப்புகளில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறத அன்னா கரீனினா எனும் நாவல், இதனை பேராசியர் நா,தர்மாராஜன் மிகவும் எளிமையாக மொழிபெயர்த்துள்ளார்,

3. குருவும் சீடனும் (ஞானத் தேடலின் கதை) Rs.100.00
நித்ய சைதன்ய யதி; தமிழில்: ப.சாந்தி

பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 192

4. கள்ளர் சரித்திரம் Rs.65.00
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 128

5. விசும்பு (அறிவியல் புனைகதைகள்) Rs.85.00
ஜெயமோகன்
பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 150

6. கு.அழகிரி சாமி கதைகள் Rs.275.00
சாகித்திய அக்காதெமி
பதிப்பாளர்: சாகித்திய அக்காதெமி

7. மகாவம்சம் Rs.100.00
ஆர்.பி. சாரதி
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 240

8. இரா. முருகன் கதைகள் Rs.350.00
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 848
9. ஜமா இஸ்லாமியா Rs.60.00
பா. ராகவன்
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 140

10. அன்புடையீர், நாங்கள் அபாயகரமானவர்கள் Rs.60.00
பா.ராகவன்
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 127

11. நேநோ Rs.100.00
சாரு நிவேதிதா
பக்கங்கள்: 212

12. மஞ்சள் வெயில் Rs.65.00
யூமா.வாசுகி
பதிப்பாளர்: அகல் பதிப்பகம்
பக்கங்கள்: 133

13. சிறை அனுபவம் Rs.30.00
கி.சடகோபன்
பதிப்பாளர்: அகல் பதிப்பகம்
பக்கங்கள்: 72

14. கானல் நதி Rs.200.00
யுவன் சந்திரசேகர்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 374

15. கலகம் காதல் இசை Rs.70.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 120

16. விழித்திருப்பவனின் இரவு Rs.110.00
எஸ்.ராமகிருஷ்ணான்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 192

17. உறுபசி Rs.75.00
எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 135

18. ஒற்றையிலையென Rs.40.00
லீனா மணிமேகலை
பதிப்பாளர்: கனவுப் பட்டறை

19. ஆதியில் சொற்கள் இருந்தன Rs.30.00
அ.வெண்ணிலா
பதிப்பாளர்: மதி நிலையம்

20. தப்புத் தாளங்கள் Rs.90.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 152

21. ராஸ லீலா Rs.400.00
சாரு நிவேதிதா

பதிப்பாளர்: உயிர்மை – பக்கங்கள்: 658

22. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் Rs.100.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: கனவுப் பட்டறை
பக்கங்கள்: 200
23. அரவான் Rs.90.00
எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 168

24. தமிழவனின் ”வார்ஸாவில் ஒரு கடவுள்”

25. ஜீ.முருகனின் ” மரம்”

26. புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ” கன்யாவனங்கள்” (மலையாள நாவலின் தமிழாக்கம்)

27. சி.வி. பாலகிருஷ்ணணின் ”திசை” (மலையாள நாவலின் தமிழாக்கம்)

28. எஸ். செந்திகுமாரின் ” ஜீ. செளந்தர ராஜனின் கதை”

29. வா.மு.கோமுவின் ”கள்ளி”

30 எஸ். ராமகிருஷ்ணனின் ” யாமம்”


நிழல்கள்: புத்தகக் காட்சி – என் க�கயறு – தகழி சிவசங்கரன் பிள்ளை, தமிழில் சி.ஏ.பாலன் – சாகித்ய அகாடமி
மார்த்தாண்ட வர்மா – சாகித்ய அகாடமி
இருபது கன்னடச் சிறுகதைகள் – சாகித்ய அகாடமி
காந்தியம் – அம்பேத்கர் – விடியல்
இந்துயிஸத்தின் தத்துவம் – அம்பேத்கர் – விடியல்
கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும் -ஆ.சிவசுப்ரமணியன் – வம்சி
சிறுவர் சினிமா – விஸ்வாமித்திரன் – வம்சி
பாதையில்லாப் பயணம் – ப்ரமிள் – வம்சி
நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம் – காலச்சுவடு
அக்ரஹாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன் – காலச்சுவடுப்
புணலும் மணலும் – ஆ.மாதவன் – காலச்சுவடு
புத்தம் வீடு – ஹெப்சிகா ஜேசுதாஸன் – காலச்சுவடு
ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – காலச்சுவடு
நடந்தாய் வாழி காவேரி – தி.ஜா & சிட்டி – காலச்சுவடு
பேசும்படம் – செழியன் – காலச்சுவடு
இரானிய சினிமா – திருநாவுக்கரசு – நிழல்
உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன் – விஜயா பதிப்பகம்
யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
சுஜாதாவின் குறுநாவல்கள் – உயிர்மை
சொல்லில் அடங்காத இசை – ஷாஜி – உயிர்மை
நான் வித்யா – கிழக்கு
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் – கிழக்கு
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் – கிழக்கு
மாயினி – எஸ்.பொன்னுத்துரை – மித்ர வெளியீடு
சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் – தமிழினி
கமண்டல நதி – ஜெயமோகன் – தமிழினி
காந்தி இறுதி 200 நாள்கள் – பாரதி புத்தகாலயம்
விடுதலைப் போரில் பகத்சிங் – பாரதி புத்தகாலயம்
கங்கணம் – பெருமாள்முருகன் – அடையாளம்
புஸ்பராஜா படைப்புகள் – அடையாளம்
முட்டம் – சிறில் அலெக்ஸ் – ஆழி
உலக சினிமா – செழியன் – ஆனந்தவிகடன்
சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி – என்.சி.பி.எச்.
பண்டைய இந்தியா (பண்பாடும் நாகரிகமும்) – டிடி கோசாம்பி – என்.சி.பி.எச்.
பாரதிபுரம் – யூ.ஆர்.அனந்த மூர்த்தி – அம்ருதா
உயிர்த்தலம் – ஆபிதீன் – எனி இந்தியன்
வாஸந்தி கட்டுரைகள் – எனி இந்தியன்
வெளி இதழ்த் தொகுப்பு – எனி இந்தியன்
நதியின் கரையில் – பாவண்ணன் – எனி இந்தியன்
ஈழத்து தலித் சிறுகதைகள் – எதிர் வெளியீடு
அரவாணிகள் பற்றிய புத்தகம் ஒன்று – தோழமை வெளியீடு


1. நான்,வித்யா – வித்யா – கிழக்கு பதிப்பகம்
2.எஸ்.புல்லட் – அய்யப்ப மாதவன் – தமிழினி
3.குட்டிக்கதைகள் – கண்ணதாசன் – வானதி
4.60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா – உயிர்மை
5. ஹைக்கூ ஒரு புதிய அனுபவம் – சுஜாதா – உயிர்மை
6.குற்றவுணர்வின் மொழி – பாம்பாட்டிச்சித்தன் – அன்னம்
7.சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளர் மரக்கன்று – யுமா.வாசுகி – அகல்
பதிப்பகம்
8.ரத்த உறவு – யுமா.வாசுகி -தமிழினி பதிப்பகம்
9.ஒரு இரவில் 21 சென் டிமீட்டர் மழை பெய்த்தது – முகுந்த் நாகராஜன் – உயிர்மை
10.விடிந்தும் விடியா பொழுது – தேவதேவன் – தமிழினி
11.கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள் – மீரா -அகரம் வெளியீடு (பத்தாவது முறையாக
வாங்குகிறேன்!!!!!)
12.மேகதூதம் – காளிதாசன் – சாந்தி பிரசுரம்
13.உறக்கமற்ற மழைத்துளி – கல்யாண்ஜி -வ.வு.சி நூலகம்
14.வனப்பேச்சி – தமிழச்சி தங்கபாண்டியன் – உயிர்மை
15.ஒளியறியாக் காட்டுக்குள் – தேன்மொழி தாஸ் – காலச்சுவடு
16.மஞ்சள் வெயில் – யுமா.வாசுகி – அகல்
17.வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு – யுமா.வாசுகி -தமிழினி*குறும்படம்:
*
யாதும் ஊரே யாவரும் கேளீர் – கவிஞர். தேவதேவன் பற்றி பிரான்ஸிஸ் கிருபா இயக்கிய
குறும்படம்.*


கடகம்: சென்னை புத்தக கண்காட்சி 2008:
கட்டுரைத் தொகுப்பு

1. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
– நாஞ்சில் நாடன் ; தமிழினி பதிப்பகம் 2.கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.
(பல்வேறு இலக்கியவாதிகள் தங்களைக் கவர்ந்த நூல் பற்றி எழுதிய கட்டுரைகள் )
-அ முத்துலிங்கம்; உயிர்மை பதிப்பகம்3. டாக்டர் உ.வே.சா. அவர்களின் உரைநடை நூல்கள்
டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் சென்னை-90; ஜெயராம் அச்சகம் கவிதை தொகுப்பு
1. ஒரு இரவில் 21 செண்ட்டி மீட்டர் மழை பெய்தது
முகுந்த் நாகராஜன்; உயிர்மை பதிப்பகம்2. ஒரு கிராமத்து நதி
சிற்பி; விஜயா பதிப்பகம்3. பாம்புக்காட்டில் ஒரு தாழை
லதா; காலச்சுவடு பதிப்பகம்

நாடகம்

1. என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது
செழியன்; உயிர்மை பதிப்பகம்

நாவல் /புதினம்

1.பாலிதீன் பைகள்
இரா நடராசன்

2. லங்காட் நதிக்கரை
அ. ரெங்கசாமி; தமிழினி

3. வாசந்தியின் சிறை
பம்பாய் கலவரங்களின் பின்னணியில் எழுதப்பட்டது

4. தகப்பன் கொடி
அழகிய பெரியவன்

5. பாழி
கோணங்கி

6. கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன்; காலச்சுவடு பதிப்பகம்

மொழிபெயர்ப்பு நூல்கள்

1. ஆட்டுக்குட்டிகள் அளித்த தண்டனை
(சிறுகதை தொகுப்பு)

வாழ்க்கை சரிதம்

1.என் சரித்திரம்
டாக்டர் உ.வே.சா

2. நளினி ஜமீலா
காலச்சுவடு பதிப்பகம்

சிறுகதை தொகுப்பு

1. பின் சீட்
ஜெயந்தி சங்கர்
மதி நிலையம்

2. ஒரு கப் காப்பி
இந்திரா பார்த்தசாரதி

3. மெளனியின் ‘அழியாச்சுடர்’

பயணம்

1. கடலோடி
நரசய்யா


1. நதியின் கரையில் – பாவண்ணன் -எனிஇந்தியன்
2. உள்ளுணர்வின் தடத்தில் – ஜெயமோகன் – தமிழினி
3. எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
4. மகாவம்சம் – ஆர்.பி. சாரதி – கிழக்கு
5. தமிழ் மொழி வரலாறு – தெ.பொ.மீ.களஞ்சியம் ச.செயப்பிரகாசம் – காவ்யா
6. நள்ளிரவில் சுதந்திரம் – Dominique Lapierre and Larry Collins , தமிழில் : வி.என்.ராகவன் – மயிலை பாலு’ – அலைகள் வெளியீட்டகம்
7. இந்தியப் போர் (பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட நூல்) – சுபாஷ் சந்திரபோஸ் – அலைகள் வெளியீட்டகம்
8. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
9. சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் – சு.பொ.அகத்தியலிங்கம் – பாரதி புத்தகாலயம்


தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal1.வெள்ளிப் பாதசரம்
எழுத்தாளர் : இலங்கையர்கோன்
பக்கம் : 232
விலை : 125.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
2.வேடந்தாங்கல் – கவிதைத் தொகுப்பு
எழுத்தாளர் : முனைவர் அ.இளங்கோவன்
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர3.சூரியப் பொருளாதாரம் – கட்டுரைத் தொகுப்பு
எழுத்தாளர் : முனைவர் அ.இளங்கோவன்
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர4.உனையே மயல் கொண்டு
எழுத்தாளர் : டாக்டர் என்.எஸ்.நடேசன்
பக்கம் : 152
விலை : 80.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
5.காவேரி கதைகள் – 1
எழுத்தாளர் : காவேரி
பக்கம் : 312
விலை : 250.00 In Rs
வெளியீடு : மித்ர6.காவேரி கதைகள் – 2
7.பெருவெளிப் பெண்
எழுத்தாளர் : ச.விசயலட்சுமி
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
8.பின்நவீனத்துவச் சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்
எழுத்தாளர் : யாழினி முனுசாமி
பக்கம் : 112
விலை : 70.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
9.உதிரும் இலையும் உதிராப் பதிவுகளும்
தொகுப்பாசிரியர் : ஜெ.கங்காதரன்
பக்கம் : 96
விலை : 60.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
10.எண்ணக் கோலங்கள்
எழுத்தாளர் : எஸ்.சந்திரபோஸ்
பக்கம் : 232
விலை : 125.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
11.பின்னிரவுப் பெருமழைஉணர்ச்சிக்குவியலான கவிதைகளின் தொகுப்பு.எழுத்தாளர் : மு.ரிலுவான்கான்
பக்கம் : 96
விலை : 60.00 In Rs
வெளியீடு : மித்ரதமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal: “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
விலை : 75.00 In Rs
பக்கங்கள் : 150
எழுத்தாளர் : பா.ஜீவசுந்தரி
பதிப்பகம் : மாற்று

* * * * *
கிறுக்கி
விலை : 75.00
பக்கங்கள் : 160
பதிப்பாசிரியர் : கோ.பழனி
பதிப்பகம் : மாற்று

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal:”1084 ன் அம்மா”
வங்கமொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய Mother Of 1084 என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு.கிருஷ்ணமூர்த்தி.
விலை : 75.00
பக்கங்கள் : 152
பதிப்பகம் : பரிசல்

கோபுரத் தற்கொலைகள் – ஆ.சிவசுப்பிரமணியன்
விலை : 50.00
பக்கங்கள் : 104
பதிப்பகம் : பரிசல்

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal:
“முடிந்து போன அமெரிக்கக் கற்பனைகள்”
விலை : 80.00 In Rs
பக்கங்கள் : 168
எழுத்தாளர் : பா.செயப்பிரகாசம்
பதிப்பகம் : தோழமைஅரவாணிகள்
விலை : 175.00 In Rs
பக்கங்கள் : 368
தொகுப்பாசிரியர் : மகாராசன்
பதிப்பகம் : தோழமை

பாரதி – ஒரு சமூகவியல் பார்வை
விலை : 75.00 In Rs
பக்கங்கள் : 160
தொகுப்பாசிரியர்கள் : பெ.மணியரசன், அ.மார்க்ஸ்
பதிப்பகம் : தோழமை

மரணம் – என் தேசத்தின் உயிர்

விலை : 45.00 In Rs
பக்கங்கள் : 72
எழுத்தாளர் : இனியன்
பதிப்பகம் : தோழமை

காற்றின் பக்கங்கள்
விலை : 120.00 In Rs
பக்கங்கள் : 224
கட்டுரையாளர் : மணா
பதிப்பகம் : தோழமை

மக்களை வழிநடத்தும் தலைமை உருவாகும்
பழ.நெடுமாறன் நேர்காணல்
விலை : 50.00 In Rs
பக்கங்கள் : 96
நேர்காணல் : மணா
பதிப்பகம் : தோழமை

வசந்த காலத்திலே….. ஜார்ஜி குலியா
(Georgij Dmitrijevič Gulia)
விலை : 100.00 In Rs
பக்கங்கள் : 120
தமிழில் : தி.க.சி
பதிப்பகம் : தோழமை
* * * * *

ஒரு கோப்பை தண்ணீர் த்துதவமும் காதலற்ற முத்தங்களும்
பெண் விடுதலை குறித்த மார்க்சியப் பார்வைகள்
விலை : 100.00 In Rs
பக்கங்கள் : 160
தொகுப்பாசிரியர் : மகாராசன்
பதிப்பகம் : தோழமை


Book Selections by Boston Globe – 2007 « Snap JudgmentHost unlimited photos at slide.com for FREE!


Tamil Books – Reviews, Listing from Dinamalar « Tamil Newsdinamani_books_intro_reviews_tamil_publishers.jpgdinamani_books_new_literature_tamil_authors_quick_reviews.JPGDinamani Books List Publishers Quick Reviews Tamil Ilakkiyamnew_tamil_books_dinamani_thursday_issue_quick_reviews.jpgDinamani Books Thursday Critic Tamil Literature LibraryDinamani Books Reviews Tamil Literature Readersdinamani books review Listing Tamil Literaturedinamani_books_reviews_critiques_quick_library.jpgdinamani_books2.jpgdinamani_books_listing1.jpgHost unlimited photos at slide.com for FREE!Host unlimited photos at slide.com for FREE!Host unlimited photos at slide.com for FREE!Books – 1

Dinamani Book reviews 2

Ingmar Bergman = இயக்குநர் பாலச்சந்தர்

‘நகுலன்’ தேவாதி தேவன் என்று எல்லாரும் புகழ, தரைக்கு இறக்கினார் அ.மி. அது போல் இங்மேர் பெர்க்மேன் (Ingmar Bergman – ஐ எல்லாரும் புகழ, மறுபக்கம் காட்டுகிறது நியு யார்க் டைம்ஸ்.

Nearly all the obituaries I’ve read take for granted Mr. Bergman’s stature as one of the uncontestable major figures in cinema — for his serious themes (the loss of religious faith and the waning of relationships), for his expert direction of actors (many of whom, like Max von Sydow and Liv Ullmann, he introduced and made famous) and for the hard severity of his images. If you Google “Ingmar Bergman” and “great,” you get almost six million hits.

At least part of his initial appeal in the ’50s seems tied to the sexiness of his actresses and the more relaxed attitudes about nudity in Sweden; discovering the handsome look of a Bergman film also clearly meant encountering the beauty of Maj-Britt Nilsson and Harriet Andersson. … It was a seductive error, but an error nevertheless.

If the French New Wave addressed a new contemporary world, Mr. Bergman’s talent was mainly devoted to preserving and perpetuating an old one. … We remember the late Michelangelo Antonioni for his mysteriously vacant pockets of time, Andrei Tarkovsky for his elaborately choreographed long takes and Orson Welles for his canted angles and staccato editing. And we remember all three for their deep, multifaceted investments in the modern world — the same world Mr. Bergman seemed perpetually in retreat from.

சன்னாசி மட்டும்தான் அசோகமித்திரனுக்கு பதில் கொடுக்க முற்பட்டார். பெர்க்மனுக்கு பலர் கிளம்பியிருக்கிறார்கள். ‘தம்ஸ் அப்’ சொல்லும் ரோஜர் ஈபர்ட் இங்கு கவனிக்கிறார்..

Sun TV – Ganesh Chathurthi special programs

இது work in progress. எப்பொழுது பார்த்து முடிக்கிறேனோ அதுவரை இற்றைப்படுத்தப்படும்.

1. சிறந்த நன்றியுரை: ‘சிவாஜி’ திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கர்.

மொட்டை பாஸ் தலையில் தட்டுவதற்கு தேவைப்பட்ட உழைப்பைக் கோடிட்டு காட்டி, ஒரு செகண்டுக்கு இவ்வளவு மினுக்கிட்டால், 12,000 விநாடிக்கு எவ்வளவு உழைத்துக் கொட்டியிருப்பார் என்பதை மேஜிக்கலாக ரியலைஸ் செய்யவைத்தார்.

மொட்டைத் தலையில் அதிறும் அந்த ஒலி, பில்லியர்ட்ஸ் பந்து அடித்தவுடன் ஏற்படும் நாதமும் தபலாவின் சத்தமும் இணைந்தது.Kaanal Neer Ritheesh Singapore Best Actor

2. சிறந்த நடிகை: சிங்கப்பூர் கலைவிழா தொகுப்பாளர் அனு ஹாஸன்

‘கானல் நீர்’ திரைப்படத்தில் நடித்து உள்ளங்கவர் கள்ளனாக, புது முக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரித்தீஷைப் பாராட்டி ஒன்றைரை நிமிடம் நக்கல் வெளிப்படாமல், நையாண்டி எட்டிப்பார்க்காமல் பேசியதற்காக வழங்கப்படுகிறது.

3. சிறந்த பேச்சாளர்: மொக்கை பேசினார் சேரன்

பேசினார். பேசியதையேத் தொடர்ந்து அலுக்காமல் பேசினார். பேசிக் கொண்டிருக்கிறார். கேள்விகளும் படு திராபை ரகம். ஆனந்த விகடன் மாதிரி வாயில் வார்த்தை வரவழைக்கும் கலையை எப்பொழுதுதான் தமிழ் வெள்ளித்திரைகள் கற்றுக் கொள்ளுமோ!

4. சிறந்த பேச்சாளினி்: ஜூனியர் ‘ஸ்னேஹா’ ஷெரின்

ஸ்னேஹா போல எந்த டாபிக் கொடுத்தாலும் கருத்து இருக்கிறதோ, விஷயம் தடவலோ, தட்டித் தடுமாறாமல் பேசுகிறார். ‘திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபியிடம் உதவி நெறியாளராக சேர்ந்துவிட்டார். சுகாசினியைத் தொடர்ந்து இன்னொரு கதாநாயகி ↔ இயக்குநர்.

5. சிறந்த நிகழ்ச்சி: சத்யராஜூடன் பேட்டி

கேள்வி: ‘நமீதா உங்களுடன் பல படங்கள் நடித்தது பற்றி?’

சத்யராஜ்: ‘அவங்க என் கூட நடிக்காம இருக்கிறதுதான் அவங்களுக்கு பெட்டர். என்னை மாதிரி வயசான ஆளுங்களோட நடிச்சா மார்க்கெட் அவுட்னு அர்த்தம்.

ஆன்டன் பாலசிங்கமாக நடிக்க ஆசை என்றார். குளிர் கண்ணாடியுடன் நேர்காணல் தொடுத்தவரை ‘ஹீரோயினை சைட் அடிக்க போட்டிருக்கீங்களா!’ என்று எதார்த்தமாய் கால்வாரினார். சம்பிரதாய கேள்விகளுக்குக் கூட அவரின் பாமர பதில் தவறவிடக் கூடாத நிகழ்ச்சியாக்கியது.

‘சிவாஜி’யில் காசிமேடு ஆதிக்கு கதாபாத்திரத்தின் கனம் கம்மி என்றார். நான் நடித்தால் பதிலுக்கு பதில் எகத்தாளமாய் ‘என்ன அதிறுது? சும்மா சவுண்ட் விடாதஜி’ என்று போட்டுத் தாக்கினால்தான் சரிப்படும் என்று இயல்பாகப் பேசினார்.

6. சிறந்த ஆட்ட கலைஞர்: நடன இயக்குநர் ராம்ஜி

ரஜினியை மிஞ்சும் நடனம் என்று விளித்தால் அது ராம்ஜிக்கு வஞ்சப்புகழ்ச்சியாகி விடும். பரபரப்பு, துள்ளல், grace கலந்த நளினம் எல்லாம் உண்டு. துவக்க ஆட்டத்தில் மேற்கத்திய ஆட்டமும் சாஸ்திரீய சங்கீதமும் கலந்து வித்தியாசமும் உண்டு.

7. சிறந்த ஆட்டக்காரி: one film flopper ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ அபர்ணா

மஸ்தானா மஸ்தானா‘வில் வந்திருக்க வேண்டியவர். ஒற்றைநாடி தேகமாக இருந்தும் மூச்சு வாங்கல் இருக்கட்டும்; உடம்பையாவது லூசாக வைத்து ஆடியிருக்கிலாம். கலக்கல் ஆட்ட அமைப்பை (dance choreography) மிரட்சியுடன் ஆடி அப்பீட்டானார்.

8. சிறந்த ஆடை அலங்காரம்: ‘காதல்’ சந்தியா

தொப்பை என்பது தமிழ் ரசிகர்களின் கனவுப் பிரதேசம். பத்மினி ஆரம்பித்து நயன் தாரா, நமீதா வரை போஷாக்கான காம்ப்ளான் கேர்ள்களை ரசிக்கும் கோலிவுட் உலகம். இருந்தாலும், கொழுப்பு மட்டும் திரட்சியாகத் தனித்துத் தெரியுமாறு ஆடை அணிவது, மில்ஸ் அண்ட் பூன் படிக்கும் chick- இடம் யூமா வாசுகி நாவலை படிக்க வைக்கும் கொடூரம்.

Books – To Read (The New yorker)

Burqua & Nun & Modern1. “The Exception” by Christian Jungersen
Body Count: Books: The New Yorker: “In a Danish novel, office politics can be murder.”

This icy and affecting novel, with its juxtaposition of people trying to do good and yet behaving very badly toward each other, can certainly be read in many ways, but always with the vague unease that the privileged residents of Western liberal democracies feel about their comfortable lives. A onetime journalist and international-development expert named Gunnar observes, “We all know that the bottle of wine we’ve drunk tonight could have paid for vaccinating twenty kids and saving the life of at least one.” Soon enough, Gunnar has more to say on the broader question:

“I very much hope that the world will become a better place. And if it does, our grandchildren may look at us the way young people today regard the generation who collaborated with the Nazis. They’ll say, ‘I do not understand you.’ We will explain that life simply was the way it was. ‘Famines came and went and no one did anything about it. People died of hunger to provide us with cheaper coffee.’ We’ll have to admit that we knew but chose to do nothing about it.”

2. The Long March by Sun Shuyun
Briefly Noted: The New Yorker: Shuyun, a Chinese-born BBC documentary producer, retraces the route and interviews the few remaining survivors, in an account that shows the human cost of Mao’s revisionism

3. Prophet of Innovation by Thomas K. McCraw
Briefly Noted: The New Yorker: “After a series of dramatic turns (including stints as Austrian finance secretary and investment adviser to an Egyptian princess, and a tragic, arguably bigamous marriage), Joseph Schumpeter landed in the dubious sanctuary of Harvard (“despicable playground of despicable little tyrants,” he wrote), where he turned out several key texts in twentieth-century political economics. McCraw doesn’t get lost in the baroque details of Schumpeter’s story”

Poongaa – One Year Anniversary

முதலில் குமுதம் நிரஞ்சன் வகை பயோடேட்டா:

பெயர்: பூங்கா

வயது: செப்டம்பர் வந்தால் ஒராண்டு

நண்பர்கள்: எல்லா திசைகளிலும் இல்லை

திடீர் எதிரிகள்: நாலு கிலோபைட்டுக்கு மேல் எழுதியும் பூங்காவில் இடம்பெறாதவர்கள்

நீண்டகால எதிரிகள்: பாரதீயவாசிகள்

தொழில்: எல்லாரையும் எல்லாவற்றையும் படிக்கவைப்பது

பழைய பொழுதுபோக்கு: விவாதாங்களை நீட்டித்தது

புதிய பொழுதுபோக்கு: தொகுப்பாளரின் மேசையிலிருந்து மூச்சு வாங்க வைப்பது

பிடித்த வேலைபழைய கதைகளை கிளறுவது

பிடித்த இடம்: தமிழ் பாரதி அல்ல

மறந்தது: பூந்தோட்டம்

மறக்காதது: ‘இணையத்தமிழின் முதல் வலைப்பதிவிதழ்’ என்று பிரஸ்தாபிப்பது

விரும்புவது: வாழ்த்துச் செய்திகளைப் படிப்பது

கிடைப்பது: பயனர்களின் தொழில்நுட்ப பரிந்துரை

எரிச்சல்: நேரந்தவறிய ‘தமிழ்மணம் வாசிப்பில்‘ பத்திகள்

சமீபத்திய சாதனை: தொடர்ச்சியாக முப்பது+ இதழ்கள் கொண்டு வருவது

நீண்டகால சாதனை: தமிழில் வலைப்பதிவுகள் என்றால் தமிழ்மணம் என்றாக்கியது


இப்பொழுது திருவிளையாடலுக்கு மாறுவோம்:பிரிக்க முடியாதது என்னவோ? பூங்காவும் புரியாமையும்

பிரியக் கூடியது? பூங்காவும் பெண்ணியமும்

சேர்ந்தே இருப்பது? பூங்காவும் புரட்சியும்

சேராதிருப்பது? பூங்காவும் பட்டிமன்றமும்

கேட்கக் கூடாதது? இடுகைகள் ஏன் இடம்பெறவில்லை

கேட்கக் கூடியது? இடுகைகளை இடம்பெற்றதற்கு நன்றிகள்.

சொல்லக்கூடாதது? பூங்காவில் கருத்து சுதந்திரம்

சொல்லக்கூடியது? ஊடகங்களில் கருத்து சுதந்திரம்

பார்க்கக்கூடாதது? பிடித்தவர்களின் மறுபக்கம்

பார்த்து ரசிப்பது? புனிதப்பசுக்களின் மறுபக்கம்

இதழுக்கு வேண்டியது? இடுகைகளின் சம்மதம்

வாழ்த்துகள்!

‘Aachi Ungal Choice’ Uma on Bloggers, Reviews, Harsh Criticism

Uma karunanidhi SunTV Kalainjar TV

விமர்சனங்களைக் குறித்து வைரமுத்து என்ன சொல்லி இருக்கிறார்?

விமர்சனங்கள் ஒருவரை செதுக்க வேண்டும்;
அவர்களின் வாழ்வை சிதைக்கக் கூடாது.


இணைய விமர்சனங்களைக் குறித்து உமாவின் விமர்சனம்:

பத்திரிகையாளர்கள் பண்ணுகிற விமர்சனம் எல்லாம் எவ்வளவோ பரவாயில்லீங்க…

இந்த இண்டெர்னெட்டில் வந்து இந்த பிளாகிங்கறப் பேரில படிச்சவங்க வந்து இந்த மீடியா பீப்பிளப் பத்தி அசிங்கமா எழுதறது, விமர்சனம் பண்ணுறது ரொம்ப வெட்கத்துக்குரியது. வேதனைக்குரியது.

படிச்சவங்க பண்ணுறதுதான் ரொம்ப வருத்தமா இருக்குது.

ஆச்சி உமாவுக்கு என்னோட சாய்ஸ் பாட்டு

‘உங்கள ஒண்ணும் செய்ய மாட்டோம்;
நாங்க தப்பு ஏதும் பண்ண மாட்டோம்.’

Recent Movies

1. ஹஸாரோ க்வான்ஷேன் ஏஸி குறித்து ஏற்கனவே எழுதியாச்சு. எழுதுவதை விட செயலில் எதையாவது செய்யத் தூண்டும் படம். சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி எல்லாம் தெரிகிறார்கள். முக்கிய மூன்று பாத்திரங்களும் வாழ்ந்திருக்கிறார்கள். தவறவிடக் கூடாத படம்.

டெல்லி, புரட்சி, இளமை, காதல், நட்பு, பரிவு என்று நிறைய பழக்கமான விஷயங்களை, பழக்கமில்லாத விதத்தில் அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து முடித்தவுடன் இந்திரா பார்த்தசாரதியின் ‘சுதந்திர பூமி’யைக் கையிலெடுத்தால், தமிழகச் சூழலும் இந்திய நோக்கும் இடஞ்சுட்டி பொருள் கொள்லலாம்.

2. சீனி கம்: தபு அழகு என்றால், அமிதாப் அழகனாய் ஜொலிக்கிறார். ராட்டடூயி பார்த்த ஜோருடன் இன்னொரு சமையல் நிபுணர் குறித்த படம். இளையராஜாவின் இசை. பளிச் பளிச் வசனங்கள். தன்னைவிடப் பெரியவரை கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறேன் என்று மகள் சொன்னவுடன் தெளிவாகப் பதறும் பரேஷ் ராவல்.

உன்னாலே உன்னாலே கூட இவ்வாறு ஜொலித்திருக்க வேண்டிய படம். ஆனால், இங்கு்கு காணப்பட்ட ஆழமான விவாதங்களை வளர்க்கும் சிந்தனைகளுக்கு பதிலாக இன்டெர்னெட் ஜோக்குகளைத் தோரணம் கட்டியதால் எந்த வசனமும் எஸ்.எம்.எஸ். தாண்டி பயனற்றுப் போகிறது. சீனி கம்-மில் படம் முடிந்த பிறகும் தனக்குள்ளே எண்ணங்களைக் கிளப்பி அசை போட்டு சுவைக்க வைத்திருக்கிறார் பால்கி.

3. நகாப்: சிவா சொல்லி இருக்காரே… என்று குருட்டு நம்பிக்கையில் அச்சத்துடன் பார்க்க ஆரம்பித்த படம். இப்படித்தான்… முன்பொருமுறை, இணையம் சாராத நண்பர் ‘சுப் சுப்கே‘ பாருங்க என்று சொல்லி, (அது விவேக்கிடம் இருந்து ‘சொல்லி அடிப்பேன்’ என்று வருகிறதாமே!) பார்க்க ஆரம்பித்து நொந்த பயத்துடன் பார்க்க ஆரம்பித்தோம்.

ஏமாற்றாத திருப்பங்கள். சுவாரசியமான கடகட திரைக்கதை. அக்ஷய் கன்னா ரசிகன் என்பதால் எதற்கும் குறைவில்லாத கலக்கல் படம்.

பாவம்… கிட்டத்தட்ட இதே மாதிரி தடாலடி திருப்பங்களுடன் ஆக்சன் த்ரில்லர் கொடுத்தவர், ‘ஆன் தி லாட்‘ நிஜ நாடகத்தில் அமெரிக்கர்களிடம் வாக்கிழந்து, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பையும் கோட்டை விட்டார் Catch By: Mateen Kemet என்னும் அந்தத் திரைப்படத்தைக் காண இங்கு செல்லவும்). அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால், என் போன்ற ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும்.

4. நான் அவன் இல்லை: ரொம்ப குறைவான எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்த படம். அதனாலோ என்னவோ பிடித்திருந்தது. ஏற்கனவே எல்லாக் காட்சிகளும் சன் டிவியில் காட்டியிருந்தாலும் ஜாலியான படம்.

சில விமர்சனங்கள்:

5. கோதாவரி: சாதாரண தெலுங்குத் திரைப்படம். இருந்தாலும் அரசியல்வாதியாக நேர்காணல். கல்யாணத்துக்கு முந்தைய மண-மனபயங்கள். முழு நிலவும் வெள்ளை ஆடையும் கொண்ட அக்மார்க் இந்திய சினிமாக் காதல். படகுப் பயணம். நாய் சொற்பொழிவாற்றல் என்று ஏதோவொன்று கனெக்ட் ஆகி கலக்கி இருக்கிறார்கள். தைரியமாக பார்க்கலாம். பத்ராசலம் cruise போகணும்னு ஆசை வரும்.

பாதியில் தூங்கிப் போனால் என்னைத் திட்ட வேண்டாம். நண்பர் இந்தப் படத்தை அனுதினமும் இரவில் போட்டு, கண்ணயர்ந்தால், சொப்பனங்களில் தெளிந்த நீரோடையாக நிம்மதி பிறக்கும் என்றார். பாடல்கள் அவ்வளவு ரம்மியம்.

Tamilveli.com – Some UI Thoughts

தமிழ்வெளி – இன் user interface குறித்து பயனராகத் தோன்றியவை:

1. உரல் (http://www.tamilveli.com/) ரொம்ப எளிதில் தட்டி்சி செல்லும்விதமாக இருக்கிறது. +1

2. எழுத்துக்களுக்கிடையே போதிய இடைவெளி இல்லை. வார்த்தை, வரி, பத்தி என்று எல்லாவற்றுக்கும் இடையே வெள்ளை நிறம் நிறைய வேண்டும். தற்போதைக்கு பார்த்தவுடன் மயக்கமா… கலக்கமா… குழப்பமா! -1

3. ‘அச்சு மாதிரி‘ அமர்க்களம். வேண்டிய பதிவுகளை தேர்ந்தெடுத்து, ஹாயாக பக்கங்களைப் புரட்டலாம். +1

4. சுட்டி செல்லாமல், அங்கேயே காட்டும் தேடல் அருமை +1ஆனால், ‘முன்னோட்டம் மட்டும்‘ அல்லது ‘முழுமையான இடுகை‘ என்று இரண்டு தேர்வுகளை வாசகர்களிடமே விடலாம். மொத்தமாக் காட்டுவதால், தேடல் முடிவுகள் வருவதற்கு தாமதமாகிறது. -1

பழையதிலிருந்து புதிதுக்கு‘ & ‘புதியதிலிருந்து பழையதற்கு‘ மக்கர் செய்வதால் -1.

5. திடீரென்று மாமல்லபுர ஓவியம் எட்டிப் பார்க்கிறது. பல பக்கங்களில் வேறு இலச்சினைகள் வருகிறது. இடைமுகத்தை நிலையாக நிறுத்தலாம். (0)

6. உரல்களை சுட்டினால், தேன்கூடு, தமிழ்மணம் போல் இங்கும் புத்தம்புதிய சாளரங்களை (அல்லது tabs) திறந்து, இடுகையைக் காண்பிக்கிறார்கள். அதே சாளரத்தில் வலைப்பதிவை படிக்கும் வசதி வேண்டும். பயனரே விருப்பப்பட்டால், தனியாக திறந்து கொள்வார் என்று அவரின் இச்சைக்கே விட்டுவிடும் இடைமுகம் வேண்டும். (0)

7. பக்கத்தின் முடிவுக்கு சென்றவுடன் ‘முந்தைய இடுகைகள்‘ என்றோ, ‘பழைய பதிவுகள்‘ என்றோ, ப்ளாக்ஸ்பாட் (அல்லது) வோர்ட்பிரெஸ்.காம் தளத்தில் ‘Older Posts‘ என்று தூண்டில் இழுப்பது போல் போட்டு வைக்கலாம். மீண்டும் மவுசைத் தூக்கிக் கொண்டு, ஹோம் செல்ல நேரிடுவதால் -1

8. ‘இதர வகை பதிவுகள்‘ என்று சோத்தாங்கைப் பக்கம் வருவது எந்த வகை? எப்படி அங்கு இடுகைகள் இடம்பிடிக்கின்றன? (0)

9. ‘பின்னூட்டங்கள்‘ என்னும் பகுதியில் பழைய மறுமொழிகளின் நிலவரங்களை எவ்வாறு பார்ப்பது? பின்னூட்ட எண்ணிக்கைக்கு பக்கத்தில் – 0, 1, 2 என்று எண்கள் வருகிறதே… அது எதைக் குறிக்கிறது?

(எத்தனை பேர் அழுத்தி உள்ளே சென்றார்கள் என்னும் எண்ணிக்கை என்றால், பின்னூட்டங்களில் இந்த எண்ணைத் தவிர்த்து விடலாம். இடுகைகளிலும் இந்த எண் காணப்படுவது, பரபரப்பான பதிவுக்கு செல்ல வழிகாட்டுவது வசதிதான் என்றாலும், மறுமொழிப் பட்டியலில் குழப்பம் கொடுக்கலாம்.)

10. #8, #9 போல் எழும் வழமையாக கேட்கும் கேள்விகளுக்கு FAQ போட்டு, உதவிப் பக்கங்களைப் பார்க்க சொல்லலாம்.

  • தேன்கூடு என்றால் ‘பல மரம் கண்ட தச்சன்‘ போல் அகரமுதலி, சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ற personalization + customization;
  • தமிழ்மணம் என்றால் ‘சூடான இடுகைகள்’, பூங்கா தேர்ந்தெடுப்புகள்;
  • என்பது போல் தற்போதைக்கு தமிழ்வெளிக்கு அடையாளங்கள், USP இல்லாதது மீண்டும் மீண்டும் வரத் தூண்டாமல், எப்பொழுதோ மட்டுமே வரவைக்கிறது.

ஏற்கனவே இருப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல் தமிழ்ப்ளாக்ஸ்.காம் போல் புதியவை வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மாற்று முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் தமிழ்வெளிக்கு பாராட்டு கலந்த வாழ்த்துக்கள்.

Quotes – Jeyamohan on Historical Archives (Book Reader)

1. Thinnai: சில வரலாற்று நூல்கள் 1மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்) :: ஜெயமோகன் [The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989]

2. Thinnai: சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ் :: ஜெயமோகன் [Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ]

ஆங்கிலேயர் எழுதிய ஆவணக்குறிப்புகள் மற்றும் வரலாற்று நூல்கள் பொதுவாக கீழ்க்கண்ட சிறப்புகள் உடையவை.
1. தெளிவான செறிவான நடை
2. ஏராளமான தகவல்கள்
3. தகவல்களை பகுக்கவும் தொகுக்கவும் அறிவியல்நோக்கு சார்ந்த ஒரு அடிப்படைத்தளம்
4. பிரச்சார நோக்கம் இல்லாத பதிவுத்தன்மை.
5. பலதுறை அறிதல்களை தொகுக்கும் இயல்பு

அவை அனைத்துக்குமே கீழ்க்கண்ட குறைகளும் உண்டு
1. ஆதிக்க இனத்தின் நோக்கில் இந்தியாவை பார்ப்பதனால் உருவாகும் இயல்பான அலட்சியமும் புரிதல் குறைகளும்
2. மதக்காழ்ப்பும் மதக்காழ்ப்புள்ள பாதிரிமாரின் நூல்களை சார்ந்திருக்கும் தன்மையும்
3. இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டின் பல்லினப் பலமொழி பலமதப் பண்பாட்டை எளிதில் பொதுமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி.

கட்டப்பொம்மு நாயக்கனும் பூலித்தேவனும் நடத்திய கலகங்களின் விரிவான சித்திரம் அளிக்கப்படுகிறது. கட்டப்பொம்மு நாயக்கரின் கலகம் நாம் நன்கறிந்த சிவாஜிகணேசனின் திரைப்படம் காட்டும் சித்திரத்துக்கு பலவகையிலும் வேறுபட்டு இந்நூலில் காட்சியளிக்கிறது. கட்டபொம்மு நாயக்கருக்கு தேசியம் சார்ந்த புரிதலோ ஒரு நாட்டை அமைக்கும் நோக்கமோ இருந்ததாக தெரியவில்லை.

பிற பாளையக்காரர்களைப்போல அவரும் மற்ற பாளையபப்ட்டுகளில் மக்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷார் அவரை கட்டுப்படுத்தி கடுமையான கிஸ்தி போடுகிறார்கள். பொதுவாக பாளையக்காரர்களுக்கு போடப்பட்ட கிஸ்திக்கு எதிராக கடுமையான அதிருப்தி இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெ·ப்.ஜாக்ஸனிடம் வாதாடியபின் இறங்கிச்ச்செல்லும் வழியில் கட்டப்பொம்மு நாயக்கர் அவரை தடுக்க முயன்ற ஆங்கில ஊழியர் கிளேர்க்கை கொன்று தப்பிச்செல்கிறார்.

கட்டபொம்மு நாயக்கருக்கு அவரைச் சுற்றியிருந்த மறவர், வன்னியர் பாளையக்காரர்கள் அனைவருமே எதிராக இருக்கிறார்கள். ஊத்துமலை ஜமீந்தாரும், சிவகிரி ஜமீந்தாரும் சுப்ரமணியபிள்ளை தலைமையில் தங்கள் நாடுகளில் கொள்ளையடிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்களுக்கு எதிராக போராட வெள்ளையரை தங்கள் உதவிக்கு அழைக்கிறார்கள். இவர்களின் உதவிகொண்டு கட்டப்பொம்மு நாயக்கர் ஒடுக்கப்படுகிறார். இதன் விரிவான தகவல்கள் இந்நூலில் அளிக்கப்படுகின்றன.


3. Thinnai: சில வரலாற்று நூல்கள் – 3 மதுரை நாயக்கர் வரலாறு : (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) :: ஜெயமோகன் [பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018]

  • விஜயநகரத்தின் மிகச்சிறந்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இன்று கர்நாடகத்தில் ராஜராஜசோழன் போல ஒரு தொன்மமாக கருதப்படும் பெருமன்னர். [நான் கிருஷ்ண தேவராயன் என்ற பேரில் ரா.கி.ரங்கராஜன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்]
  • அவர் தன் தளபதி நாகம நாயக்கனை மதுரையை கைப்பற்றி கப்பம் பெற்றுவர அனுப்பினார். நாகமன் மதுரையைக் கைப்பற்றி தன்னை மதுரை மன்னனாக பிரகடனம் செய்து கொண்டார். ஆகவே நாகமனை வென்றுவர நாகமனின் மகன் விஸ்வநாத நாயக்கனின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் ராயர். மகன் தந்தையை வென்று சிறைப்பிடித்து கொண்டுசென்று ராயர் முன் நிறுத்தினான்.இந்த துரோகத்தை ஏன் செய்தாய் என்று ராயர் நாகமனிடம் கேட்டபோது என் மகனுக்கு ஒரு நாட்டைக் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று நாகமன் சொன்னதாகவும் விஸ்வநாத நாயக்கனிடம் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று ராயர் கேட்டபோது அவன் தன் தந்தையின் உயிரை கேட்டதாகவும் ராயர் விஸ்வநாதனை மதுரையின் சுதந்திர மன்னனாக பிரகடனம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறு மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக 1529ல் விஸ்வநாத நாயக்கன் முடிசூடினார் [இதை அகிலன் வெற்றித்திருநகர்‘ என்ற நாவலாக எழுதியிருக்கிறார்]
  • இன்று தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் மங்கம்மாள் போட்டவை. அவற்றை ஒட்டி உருவான புது ஊர்களே இன்றைய முக்கிய நகரங்களான சாத்தூர் சிவகாசி கோயில்பட்டி முதலியவை. இவற்றை இன்றும் கிராம மக்கள் மங்கம்மாள் சாலை என்றே சொல்கிறார்கள்– இப்போது போடப்படும் நாற்கரச் சாலையைக்கூட! மங்கம்மாள் கட்டிய பல வழிப்போக்கர் சத்திரங்கள் இன்றும் சாலையோரம் உள்ளன. [நா பார்த்தசாரதி ராணிமங்கம்மாள் என்ற நாவலை எழுதியிருக்கிறார்]

4. Thinnai: சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன் :: ஜெயமோகன் [Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974]