Category Archives: Reviews

வார்த்தை – எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்)

வேகமாக வாசிக்கிறபோதும் சரி. நிதானமாக வாசிக்கிறபோதும் சரி, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நமக்கில்லை. – பஸ்க்கால்

இணையத்திற்கு அறிமுகமானவர்களிடமிருந்து வரும் இதழ் என்பதாலோ என்னவோ, எனி இந்தியனின் ‘வார்த்தை’ குறித்து நிறைய விமர்சனம்/அறிமுகம்/அனுபவம் எல்லாம் புழங்குகிறது.

முதலில் + கள்:

1. வலையகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக http://www.vaarththai.com/ அட்டைப்படத்தில் பிரதானமாகக் காட்சியளிக்கிறது.

2. ஒவ்வொரு பக்கமாக புரட்டி என்ன இருக்கு என்று தேடாமல் உள்ளடக்கம் உடனே கிடைக்கிறது.

ஒரேயொரு இடர்ப்பாடு: கட்டுரை/கதைகளின் முடிவில் ஏதாவது விநோத சின்னம் இட்டு (§ ♦) ‘முடிஞ்சுடுத்துப்பா’ என்று பாமரர்களுக்கு உணர்த்தியிருக்கலாம்.

பொருளடக்கம்:

1. கேள்வி – பதில்: ஜெயகாந்தன் – 8/10

கேள்விகள் தூள் ரகம். பதில்கள் மாட்டிக் கொள்ளாத பப்படம்.

2. தலாய் லாமா நோபல் பரிசு பேச்சு: துகாராம் – வாசிக்கவில்லை

ஆங்கிலத்தில் கிடைக்கிறதை, அணுகக்கூடிய ஆங்கில நடையில் கிடைத்தால், அசல் மொழிபெயர்ப்பையே வாசித்துவிடுவது பிடித்திருக்கிறது.

3. ஐயம் இட்டு உண்: நாஞ்சில் நாடன் – வாசிக்கவில்லை

படித்துவிட்டு வருகிறேன்

4. சினிமா: செழியன் – வாசிக்க இயலவில்லை (0/10)

நிழல்‘ என்னும் சுவாரசியமான பத்திரிகையில் கூட இந்த மாதிரி ‘well left’ என்னும் டெஸ்ட் மேட்ச் ரம்பங்கள் வந்துவிடுவதுண்டு.

5. மன்மதன்: அ முத்துலிங்கம் – 10/10

நீங்கள் காசு கொடுத்து இதழ் வாங்குவதற்கான காரணம் #1

6. Pygmies – சேதுபதி அருணாசலம் – 10/10

அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் தவழுகிறதே… இன்னொரு செழியனோ என்னும் பயத்துடன் அணுகினாலும், சொந்த அனுபவத்தை வைத்து இயல்பான மொழியில் அச்சுறுத்தாத அறிமுகம்.

7. சிறுகதை: எஸ் ராமகிருஷ்ணன் – 10/10

என்னாமா எழுதறாரு… (இணையத்தில்) புனைவு எழுதறவங்க எல்லாரும் ஒரு தபா இந்த மாதிரி கதைங்களப் படிச்சுட்டு கற்பனை குதிரையத் தட்டணும். இவரோடதுக்கு மட்டும் படமெல்லாம் படா ஜோரு. மத்ததுக்கெல்லாமும் இப்படி வரஞ்சிருந்தா தூக்கியிருக்கும்!

8. மலேசியா: ரெ கார்த்திகேசு – 6/10

மலேசியாவின் வரலாறு முழுமையாகக் கிடைக்கிறது. கட்டுரையில் துளி அவசரம் எட்டிப் பார்த்து, சமீபத்திய தேர்தல் முடிவு அலசலுக்கு முழுமையான தெளிவு கிடைக்காமல் பறக்கிறது. நூறு, நூற்றைம்பது ஆண்டு சரித்திரப் பின்னணி தேவைதான் என்றாலும், அதற்குரிய விலாவாரியான சித்தரிப்பு கொடுத்திருக்கலாம்; அல்லது இரண்டு/மூன்று மாதமாக தொடராக முழுமையாக்கி இருக்கலாம்.

9. பாவண்ணன் சிறுகதை – என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்; ஏமாற்றி இருக்க மாட்டார். இனிமேல்தான் படிக்க வேண்டும்.

10. வ ஸ்ரீநிவாசன் கட்டுரை – 10/10

மிக மிக எதார்த்தமான பேச்சுவழக்கு நடை அள்ளிக் கொண்டு போகிறது. தி ஹிந்துவில் ஆரம்பித்து, புது தில்லி வாசத்தைத் நினைவலையாக்கி, சுஜாதாவையும் பேருக்கு தொட்டுக் கொண்டு, புத்தக முன்னுரைகளை காலை வாரி, கத்தாழக் கண்ணால என்று பாப் கல்ச்சரையும் விடவில்லை.

11. Pascal – நாகரத்தினம் கிருஷ்ணா: 8/10

விக்கிப்பிடியா போன்ற பற்றற்ற நடைக்கும் ப்ராடிஜி போன்ற தகவல் சார்ந்த புத்தக வாசத்திற்கும் இடையிலேயான மணம்.

12. (அ) கவிதை – தமிழச்சி தங்கபாண்டியன்: 5/10

செட் தோசை

ஆ) சல்மா: 5/10

கொத்து பரோட்டா

இ) நிர்மலா: 7/10

டாப்பிங் இல்லாத ஊத்தப்பம்

ஈ) பி கே சிவகுமார்: 5/10

Appetizer Platter

உ) வ ஐ ச ஜெயபாலன்: வாசிக்கவில்லை

ஊ) ஹரன் பிரசன்னா: 10/10

கதை நேரம் & நாம் இரண்டுமே தூள் ரகம்

13. புலம்பல்/விண்ணப்பம்: லதா ராமகிருஷ்ணன் – 10/10

நியாயமான கோரிக்கை. ஆனால், சீனாவிற்கெதிராக போராட்டம் நடத்துவது போல் பயனில ஆகாமல் இருக்க வேண்டும்.

14. ‘மெல்லக் கனவாய் பழங்கதையாய்: பா விசாலம்‘ – புத்தக விமர்சனம்: வே சபாநாயகம் – 9/10

காசா… பணமா? 10/10 கொடுக்கலாம்தான்! வேறு பதிப்பக வெளியீடு எதுவும் கிடைக்காமல், எனி இந்தியன் புத்தகத்துக்கே விமர்சனம் என்பதால்…

15. இசை அனுபவங்கள்: சுகா – 10/10

நீங்கள் காசு கொடுத்து இதழ் வாங்குவதற்கான காரணம் #2

16. வெ. இறையன்பு: சிறுகதை – 1/10

சிறுபத்திரிகை என்று ஏன் வந்தது? சிறுவர்களையும் கவரும் கதை.

17. ஜெயமோகன் சினிமாவில் பணிபுரிய தடா: சட்டம் – கே எம் விஜயன் – 10/10

To the point. அம்புட்டுதான்.

18. இரா. முருகன் – 5/10

டெட்லைன் அவசரத்தில் எழுதியதோ 😦 அல்லது என் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமோ?

19. சுஜாதா: கோபால் ராஜாராம் – அஞ்சலைக் கிழித்து அவசர அவசரமாக புரட்டிய சமயத்தில் உடனடியாக வாசித்தது; அஞ்சலி செலுத்தப்பட்டவருக்கு மரியாதையும்; வாசகருக்கு விஷயதானமும்.

20.சிங்கப்பூர் – தமிழ்: எம் கே குமார் – 7/10

கேள்விகள் ஒவ்வொன்றும் நறுக்கென்று நிமிர வைக்கிறது; ஆனால் சட்டென்று சாதாரணமான சம்பவங்களுடன் சப்பென்று முடிந்து விடுகிறது.

21. மார்க்சியம் – தமிழாக்கம்: மணி வேலுப்பிள்ளை – 5/10

பனியில்லாத பாஸ்டனா? கம்யூனியக் கட்டுரை இல்லாத தமிழ் இதழா?

22. அனுபவம் – பி ச குப்புசாமி: 9/10

சிறுகதைக்குரிய வேகம், விவரிப்பு, சம்பாஷணை; ஆனால், நிறைவில்லாத தன்மை தரும் ஏதோவொன்று இருந்தாலும் மிக சுவாரசியமான இதழாசிரியரின் பகிர்வு.

மொத்தத்தில்: 73%

அமெரிக்கா இல்லை; அரசியல் இல்லை; வித்தியாசம் உண்டு; புதுமுகங்களின் பரிமளிப்பு உண்டு.

வாழ்த்துகள்!

Dor (நூல்) – விமர்சனம்

நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை. பார்க்கவேண்டிய திரைப்படம்; நம்பக் கூடிய திரைக்கதை.

ஸ்பாயிலர்சுடன் சில சிதறல்:

  • dor-2006-5b-1_1188030619.jpgஜீனத் ஆக நடித்த குல் பனாக் (Gul Panag) மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.
  • பல மோசமான படங்களில் ஆயிஷா தகியாவை பார்த்து ‘நடிப்பு வராத பொண்ணு’ போல என்று நினைப்பை உருவாக்கி வைத்தவர். இந்தப் படத்தில் இவர் இன்னொரு சிம்ரன்!
  • ‘Dutch courage’ ஆக தண்ணியடித்துவிட்டு வந்து, ஜீனத்திடம் ‘ஐ லவ் யூ’ சொல்லும் ஷ்ரேயஸ் தல்பாடேவும் (Shreyas Talpade), அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் தோழமையும்; கடைசியாக கல்லூரியில்தான் இந்த மாதிரி கோணங்கித்தனம் செய்து, வழியாமல், எதார்த்தமாக வாழ்க்கை தொடர்ந்தது. அதையே கிராமத்தில் பார்ப்பது ‘நடக்காது!’ என்று சாதாரணமாக எண்ண வைக்கும். ஆனால், ஜீனத்தின் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு, அதை சரியாக உணரவைக்கிறது.
  • வசனங்கள்: எளிமை. ஆனால், உணர்ச்சி & எழுச்சி உண்டு. தினசரி பேசுவது போல் இருந்துகொண்டே பலநாள் வடிகட்டிய சாராம்சங்களைக் கொடுக்கிறது. நாவல் எழுத்தில் கிடைக்கும் அழுத்தம் கொண்டவை.
  • படத்திற்கு ஆதாரம் (அசல் கதை) மலையாளப் படமாம் (என்ன படம்?)
  • தமிழ்ப்பதிவர் எல்லாருக்கும் ஏதாவது தீனி இருக்கிறது: சவுதி அரேபிய இஸ்லாமிய ஷரியத்தை எதிர்ப்பவர்; ஆண்கள சார்ந்து இயங்கும் இந்து மதத்தின் விமர்சகர்; முதலாளித்துவத்தின் கூறுகளை தாக்கும் கம்யூனிஸ்ட்; ‘ராத்திரி பத்து மணிக்கு’ என்று காந்திஜியை மேற்கோள் காட்டும் பெண்ணியவாதி…
  • சினிமாத்தனம் இல்லாத வெற்றிப்படமா: கடைசியில் ரயில்வே ஸ்டேசன், தில்வானியா துலானியா லே ஜாயேங்கே

காதல் உண்டு; காமெடி உண்டு; திருமண பந்தமும், அந்த உறவின் பாசமும் உண்டு; நட்பு உண்டு; சென்டியும் இருக்கிறது… இருந்தும் மசாலாப் படம் பார்த்தபிறகு மனசு முழுக்க நிறைந்திருக்கும் ஏமாற்றம் மட்டும் இல்லை.

புகைப்படம்: யாஹு

நான்கு சிறுகதை – வாசக அனுபவம்

‘இலக்கியச் சிந்தனை’யால் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ள கதை: Marathadi : மீனாமுத்து: “யாத்தி”

அமெரிக்கா போன்ற சட்டதிட்டங்கள் ஓரளவு கடுமையாக, உடனடியாக நிறைவேற்றும் நாடுகளிலேயே, இந்தக் கொடுமை எளிமையாக, அன்றாடம் நடந்தேறுகிறது, ‘படித்தவர்கள் பண்பற்றவர்கள்’ என்பது போல் பல கேஸ்கள்; சமீபத்தில் கைராசியான நியு யார்க் மருத்துவ தம்பதியர்கள் கைதாகி, குற்றமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நிகழ்வை ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையாகக் கண்முண் கொணருகிறார். அதிர்ச்சிக்காக மட்டும் இல்லாத நேர்த்தியான முடிவு. மிகவும் பிடித்திருந்தது.

மென்மையான எழுத்துக்களை தட்டச்சும்போது கூட என்னுடைய கீபோர்ட் சத்தமெழுப்பி, சிந்தையைக் கலைத்துப் பொடும். அது போல், சிறுகதையைப் படிக்கும்போது ஆச்சரியக்குறிகள் தொடர்வண்டியாக நடுவில் வந்து ஓசையெழுப்புகின்றன.


Thinnai: “ஒரு நாள் உணவை… – ரெ.கார்த்திகேசு”

குழந்தைகளை கம்பேர் செய்யக்கூடாது; சுஜாதாவையும் சுரதாவையும் ஒப்புமையாக்கி தராசு எல்லாம் கூடாது என்று எண்ணுபவன் நான். இருந்தாலும், முந்தைய கதையில் முழுநீள வாழ்க்கையே விவரித்திருக்க, இங்கு சம்பவம் விரிகிறது.

விவரணப்படம் போல் ஆகிவிடும் அபாயம் இருந்தாலும், அவ்வாறு போரடிக்காத சஸ்பென்ஸ் நோக்கிய விறுவிறுப்பு. மணமான இல்லறத்தில் நிகழ்வதை படம் பிடித்து ஓடவிடும் லாவகம்.

நான் என்ன நினைக்கிறேன் எனக் கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 10-15 நிமிடம் பேசுவார்கள். சிலர் நம் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே பேசுவதால் அகலவும் முடிவதில்லை.

போன்ற களையான பிரதேசங்கள்.

தவறவிடக்கூடாத ஆக்கம்.


அ.முத்துலிங்கம் எழுதி விரைவில் வெளிவரப்போகும் சுயசரிதைத் தன்மையான நாவலின் ஓர் அத்தியாயம்தான் மேலே தந்திருப்பது.

என்று பீடிகையுடன் முடிகிறது: Thinnai – யுவராசா பட்டம் – அ.முத்துலிங்கம்

விமர்சிக்கலாம் என்று படிக்க ஆரம்பிக்கும் ஆணவம், தொலைந்து போக வைக்கும் சாமர்த்தியம். ‘நிஜம்தானோ!’ என்னும் பிரமிப்பு. ‘அச்சச்ச்சோ’ என்று தொடரும் பரிதவிப்புடன் பதற வைத்து எழுத்துக்குள் மூழ்க வைக்கிறார்.


நுனிப்புல்: ஐந்தும் ஆறும் – புனைவு என்பது உணர்ச்சிகளை சித்தரிப்பது; கேள்விகளை எழுப்புவது.

‘நந்தா’ திரைப்படத்தில் பல காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், அந்த துவக்க காட்சியில் நடக்கும் பிரதோஷ உபன்யாசம் மறக்க முடியாதது. எள்ளல்தன்மையுடன் தொடரும் திரைக்கதையில் வீட்டில் நடப்பதைக் காட்டி லெக்சர் மகிமையை சிந்திக்கவைப்பார்கள். திருக்குறள் என்னதான் கலக்கலாக இருந்தாலும், அதைப் போல் போதனை இலக்கியம் எனக்கு அசூயையே தருகிறது.

ஒரு வேளை.. ‘பெண்ணெழுத்தின் நாடித்துடிப்பு பெண்ணிற்குத்தான் புரியும்’ என்னும் மங்கையர் மலர் கால ஃபீலிங்குடன் மனைவியிடம் கொடுக்க, அவரோ லாஜிக்கலாக கேள்விகளை எழுப்பும் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார். ‘எலக்கியம்னா அனுபவிக்கனும்; நோ க்வெஸ்டின்ஸ்’ என்று மகளுக்கு ஈசாப் நீதிக்கதைகளை வாசிப்பதுடன் அனுபவம் முடிந்தது.

The In-Laws – Michael Douglas & Albert Brooks (2003)

ஆல்பர்ட் ப்ரூக்ஸ் நடந்தால் சிரிப்பு வரும். ‘Defending Your Life’ போல் சிரித்தால் யோசனை வரும். கமல் போன்ற திறமையான இயக்குநர், நடிகர் கம் எழுத்தாளர். இந்தப் படத்தில் நாசர் ஏற்று நடிக்கும் முசுடு போன்ற கதாபாத்திரம்.

மைக்கேல் டக்ளஸ் வில்லத்தனம் செய்வார். காதல் மன்னனாக காத்தரீன் ஜீடா ஜோன்ஸையொத்த பெண்களை வலையில் வீழ்த்துவார். என்றாவது இவரைக் குறித்து இன்னும் விரிவாக எழுதவேண்டும். இந்தப் படத்தில் சத்யராஜ் போன்ற சகலகலா பேர்வழி ரோல்.

சூப்பர் பௌல் பார்த்து பேட்ரியாட்ஸ் தோற்ற சோகத்தைக் கழுவ இருவரும் நடிக்கிறார்கள் என்றவுடன் பார்க்க ஆரம்பித்த படம். தவற விடாமல் பார்க்கும் ‘பாஸ்டன் லீகல்‘ தொலைக்காட்சித் தொடரின் கான்டிஸ் பெர்கனும் கவுரவத் தோற்றத்தில் வந்துபோகிறார்.

ஒன்றரை மணி நேரம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். கொஞ்சம் லாஜிக் கூட உண்டு. அடல்ட்ஸ் ஒன்லி ரகமான காட்சிகள் எதுவும் இல்லை.

சீரியஸ் நாசரும், சிஐஏ சத்யராஜூம் இணைந்தால் நடக்கும் களேபரம், அங்க சேஷ்டைகள், கிரேசி டைமிங் காமெடிகள் நிறைந்த கதை. தமிழில் ஒழுங்குபட எடுத்தால் பிய்த்துக்கொண்டு ஓடும்.

மேலும் அறிய: ஐ.எம்.டி.பி.

கேடி – டிவித்திரை விமர்சனம்

Ilianaஇந்தப் படத்தை சமீபத்தில் சன் டிவியில் போட்டிருந்தார்கள். பார்த்த பலரும், வேண்டிய அளவு பயமுறுத்தியிருந்ததால், மிகக் குறைந்த எதிர்பார்ப்புடனே பார்க்க ஆரம்பித்தேன்.

கேர்ஃப்ரீ வாங்குவதகு கூச்சப்படும் கல்லூரி மாணவி எண்பதுகளுக்கு முந்தைய எஃபெக்டை கொடுத்தது. மற்றபடிக்கு முதல் பாதி தேவலாம். இரண்டாம் பாதி போகப் போக நெளிய வைத்து, இறுதிக்காட்சியில் இது வரை பார்த்தவர்கள் படித்து படித்து சொல்லியிருந்த எச்சரிக்கைகளை உறுதியாக்கியது.

தமண்ணாவை மொத்தமாக வில்லியாகவே நடமாட விட்டிருக்கலாம். கடைசியில் தியாகி ஆக்குவது ஹீரோ மேல் பரிதாபம் வரவைக்காமல், இலியானாவையும் கோமாளியாக சித்தரித்தது.

‘ஆதிவாசி’ பாடலில் பூச்சிகளை எல்லாம் தொப்புளில் ஊறவிடுவது தமிழகத்தில் காவேரி போன்ற கற்பனை.

சராசரி மாணவனை சாதனை மாணவனாக்குவதை ‘காதலன்‘ சொல்லியது. ரவியின் முந்தைய படம் செவன் ஜி, பத்ரி போன்ற வெற்றி பெறக்கூடிய ஃபார்முலாதான். காதலுக்காக போட்டியில் கலந்து கொள்வது; வீழ்ந்து கொண்டிருப்பவன் உந்தப்படுவது என்று ரொம்ப சுவையான, நிச்சயம் வென்றிருக்கக் கூடிய சமாச்சாரங்கள்.

கூடவே இலியானா, தமண்ணா.

கதையே இல்லாமல் ‘எனக்கு 20; உனக்கு 18’ கொடுத்த இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இனிமேல் இந்த மாதிரி திரைக்கதைகளை சொதப்பாமல் சொல்லத் தெரிந்து கொண்டால், அப்பா ஏ ஏம் ரதனத்திற்கு ‘பீமா’ கடனை மீட்கலாம்.

தொடர்புடைய தமிழோவியம் விமர்சனம்: KD / கேடி

ஆயுதம் – மனோஜ்: சிறுகதை குறித்த எண்ணங்கள்

டைம்ஸ் ஆப் இந்தியாவின் இலக்கியச் சிறப்பிதழான “இன்று” தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதையைப் படிக்க மணிகண்டன் பதிவுக்கு செல்லவும்.

படித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணங்கள்:

1. கதை நன்றாக இருக்கிறது. நெடுநாள் தாக்கம் எல்லாம் எதுவும் கிடைக்கிற மாதிரி இம்பாக்ட் இல்லாத ஆக்கம்.

2. ட்ராஃபிக் திரைப்படம் போன்ற சிதறலான சம்பவங்களைக் கோர்க்கும் கதை என்று படிக்க ஆரம்பித்தவுடன் தோன்றியது. ஆனால், நிகழ்வுகளில் இருக்கும் ஒற்றுமைகளை, போதனையாக சொல்லிச் செல்கிறது.

3. செர்பியா, ஆப்பிரிக்கா செய்திகளைக் கட்டுரை வடிவில் தரும்போது கூட வாசகனுக்கு உந்துதல் தந்து மேற்சென்று ஏதாவது செய்யத் துடிக்க வைக்க முடியும். இந்தக் கதையில் அதெல்லாம் மிஸ்ஸிங். (படிக்க: Before the War: “Remembering an everyday life in Bosnia: November / December 2007 by Courtney Angela Brkic, from Dissent”).

4.

இரைந்தே கேட்டான். ‘ஹேவ் யு எவர் ஃபக்ட்..’. பிறகு இன்னும் குனிந்து, கை குவித்து சைகையோடு கேட்டான். “இதுவரைக்கும் யாரையாச்சும் பண்ணியிருக்கியா….”.

ஆங்கிலத்தில் எழுதும்போது தெள்ளத்தெளிவாக விழுகிற வார்த்தைகள், தமிழில் வரும்போது சைவமாக மாறுகிறது. இந்த இடம் தவிர பிற இடங்களில் மொழிபெயர்த்தே தரும் மனோஜ், இங்கு மட்டும் ஆங்கிலத்திற்கு தாவுகிறார். செர்பியாவில் ஆங்கிலம் பேசமாட்டார்கள் போன்ற இடறல்களை விக்கிப்பிடியாவில் தேடினாலே தவிர்த்திருக்கலாம்.

5. கற்பனைக்கதை எழுதும் கலையின் நோக்கம் பொழுதுபோக்கி மகிழ்ச்சியளிப்பது, செய்தியை மனதில் நிறுத்துவது, மாற்று கண்ணோட்டங்களை ஊடாட விடுவது, உணர்ச்சிகளைப் பகிர்வது என்றால் படித்தால் போரடிக்காத வகையில் செய்தி ஆசிரியரின் குற்றவுணர்வை முன்வைக்கும் சிம்பிளான மதிப்பீடுகள் ஜட்ஜ்மென்ட்டாக முடிவது வாசகனுக்கு சோகமான அனுபவம்.

Kirukkal.com – சுப்புடுவிற்கு சுப்புடுத்தனமான விமர்சனம்

அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை

நன்றாக வந்திருக்கிறது. அட்வைஸ் பொழியும் கதை.

முதல் பாதியில் கிடைத்த துள்ளல்; முடிவில் போட்ட சென்டி எல்லாம் பார்த்தால் தமிழ் சினிமா திரைக்கதை மாதிரி இருந்துச்சு.
Host unlimited photos at slide.com for FREE!

ஆங்காங்கே ‘சிக்கி முக்கி நெருப்பே’ என்று ஆண்டிஸ் (ஆண்டஸ் மலையா ஆன்டீஸ் மலையா?) பாடல் ஒன்று போட்டால் முழுப்படமாக்கிடலாம் 🙂

நம்முடைய முந்தைய ஜெனரேஷன் இந்த ‘கடன் வாங்கக்கூடாது / சேமிச்சு வாழணும்; சிக்கனமா இருக்கணும் / வாழ்க்கையே வங்கி சேமிப்பு புத்தகத்தில் இருக்கிறது’ போன்ற கோட்பாடுகளை உடைத்தெறிந்து விட, புதிய ஜெனரேஷன் ‘ஸ்டாக் மார்க்கெட்; ஈ-பே; டீல்ஸ்4யூ.காம்’ என்று அவர்கள் மாதிரி ஆகிப் போனதை கல்க்கலா காமிச்சு இருக்கீங்க.

இணைய இதழ்களுக்காவது அனுப்பி வைக்கலாமே. ரொம்ப இயல்பா வந்திருக்கு.


ராட்டடூயி – சிறுகதை

முதல் கதையை விட இது இன்னும் கொஞ்சம் ரசிக்கவைக்கிறது.

வீட்டின் வரைபடம் எல்லாம் காமித்து மிரட்டுகிறார். நம்பகத்தன்மை அதிகம் உள்ள, டிராமாத்தனம் இல்லாத ஆக்கம்.
Host unlimited photos at slide.com for FREE!

லீனியராக சொல்லாமல், பழைய விஷயங்களை இடைச்செருகலாக சாமர்த்தியமாக நுழைப்பது, சமகால விவரணைகள், முடிவு எல்லாமே தூள்.

இப்படியே இரண்டு வாரம் ஓடிப் போக, இன்று தான் அது எலி என்று தெரிய வந்தது. தான் கையால் அந்த கருப்பு எலிப்புழுக்கையை உடைத்தது, முகர்ந்து பார்த்தெல்லாம் ஞாபகம் வர, குமட்டிக் கொண்டு வந்தது. ஏனோ திரும்பிக் போய் கையை அலம்பிக் கொண்டான்.

இதே ரேட்டில் கதை எழுதிக் கொண்டிருந்தால், அமெரிக்க பின்னணியில் ‘பிரிவோம்… சந்திப்போம்’ ஸ்டைலில், சுவாரசியமான தேஸி என்.ஆர்.ஐ.யின் வித்தியாசமான ‘மூன்று விரலை’ நாவலாக்கித் தரக்கூடிய நம்பிக்கையை வரவைக்கும் ஆக்கம்.

Host unlimited photos at slide.com for FREE!

பார்த்த படங்கள்

1. அழகிய தமிழ்மகன்: கடைசி அரை மணி நேரம் பார்க்க முடியாதபடிக்கு சில நிர்ப்பந்தங்கள். மற்றபடி, பார்த்தவரைக்கும், விஜய் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் என்று கோவி கண்ணன் சொல்வது போல் பலவும் இருப்பதால், ரசிக்கவைத்து ஈர்த்தது.

2. சக் தே இந்தியா: ரொம்ப ரொம்ப நல்ல படம். இந்த மாதிரி ஷாரூக் முயற்சிகள் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும். விறுவிறுப்பான ஹாக்கி ஆட்டங்கள். உணர்ச்சி பொங்கும் திரைக்கதை, வசனம். ஹீரோயிஸம் இல்லாத நாயகன்.

3. ஈ.டி.: எத்தனையோ முறை பார்த்திருந்தாலும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்குக்காகவும் அந்த அன்னியருக்காகவும் மீண்டும் குடும்பத்துடன் மகிழவைத்த படம்.

Evano Oruvan – Poster (& Review from an acquaintance)

மாதவன் தயாரித்து நடித்துள்ள எவனோ ஒருவன் திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி

evano oruvan sangitha mathavan dombivili fast Tamil Cinema Movies Films Reviews Posters Dinamaniநடிகர் மாதவன் தனது நிறுவனம் லியுக்கோஸ் பிலிம்ஸ் சார்பில் ‘எவனோ ஒருவன்’ என்ற தமிழ் படத்தைத் தயாரித்து அதன் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமிழ் பட வரலாற்றில் ஒரு புதுமையாக, முதன் முறையாக, இந்தத் திரைப்படத்தின் முதல் திரையிடல் வட அமெரிக்காவில் நடந்துள்ளது. ஹெச் எஸ் பி சி வங்கி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் விப்ரோ சந்தூர் சோப் நிறுவனங்களுடன் இணைந்து இந்த சினிமா கலிஃபோர்னியா வாழ் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கு மட்டும், படம் அதிகாரபூர்வமாக வெளியிடப் படும் முன்பாகவே திரையிடப் பட்டது. இந்தத் திரையிடலை ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருந்தார் மாதவன். அக்டோபர் 26 சனிக்கிழமை அன்று, கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஓசே நகரின் செஞ்சுரி 10 திரையரங்கில் இந்த சிறப்பு திரைப்பட காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஹெச் எஸ் பி சி வங்கியும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் கலிஃபோர்னியா பே ஏரியாப் பகுதியில் உள்ள தமிழ் ரசிகர்களை இந்த நிகழ்ச்சிக்காக வரவேற்றிருந்தனர்.

நிகழ்ச்சிக்காக, ‘எவனோ ஒருவன்’ திரைப் படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் நடிகர் மாதவன், திரைப்படத்தின் இயக்குனர் நிஷிகாந்த் காமத், கதாநாயகி நடிகை சங்கீதா ஆகியோர் இந்தியாவில் இருந்து அமரிக்கா வந்திருந்தனர். அமெரிக்காவில் நியுயார்க் மற்றும் சான் ஓசே நகரங்களிலும் இன்னும் பல நாடுகளிலும் இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் (special screening) தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. டிசம்பரில் வெளியிடப் படும் ‘ எவனோ ஒருவன்’ திரைப்படமே தமிழ் திரையுலகில் முதல் முறையாக வெளிநாடுகளில் சிறப்பு ஒளிபரப்புச் செய்யப் பட்டு வரவேற்பை பெற்று பின் தமிழ் நாட்டில் ரீலீஸ் செய்யப் பட இருக்கிறது. சான் ஓசே திரையரங்கில் அரங்கு நிறைந்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினை இத் திரைப்படம் பெற்றது. வழக்கமான தமிழ்த் திரைப்பட ஃபார்முலாவை விட்டு முற்றிலும் விலகி எடுக்கப் பட்டிருந்த இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

சிறப்பு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து ரசிகர்களை வரவேற்ற மாதவன், இந்த முறை தான் தயாரித்தப் படத்தினை அமெரிக்கா வாழ் தமிழ் ரசிகர்களின் பார்வைக்கும் ரசனைக்கும் முதலில் காண்பிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார். இயக்குனரரயும், நடிகை சங்கீதாவையும் அறிமுகப் படுத்தினார். ஹெச் எஸ் பி சி வங்கி அதிகாரிகளின் வரவேற்பினையும், மாதவனின் சிற்றுரரயையும் தொடர்ந்து ‘ எவனோ ஒருவன்’ தமிழ் திரைப்படம் திரையிடப் பட்டது.

திரையிடல் முடிந்த பின்பாக படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு மாதவனும், நடிகை சங்கீதாவும், இயக்குனர் நிஷிகாந்த் காமத்தும் பதில் அளித்தனர். பின்னர் பல ரசிகர்களின் விமர்சனங்கள் பதிவு செய்யப் பட்டன. கலிஃபோர்னியா வாழ் தமிழ் ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் மிதந்த நடிகர் மாதவன் அனைத்து ரசிகர்களுக்கும் புன்னககயுடனும் பொறுமையுடனும் தனது கையொப்பம் இட்டு எவனோ ஒருவன் புகைப் படத்தினை வழங்கினார். ரசிகர்கள் அனைவருடனும் புகைப் படம் எடுத்துக் கொண்டார். பின்னர் ரசிகர்களுடன் மவுண்டன் வ்யூ நகரில் உள்ள இந்திய உணவகத்திற்குச் சென்று இரவு விருந்தளித்தார். இத்துடன் கலிஃபோர்னியா சிலிக்கான் வேலியில் மாதவனின் எவனோ ஒருவன் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி நிறைவுற்றது.


எவனோ ஒருவன் – திரைப்பட விமர்சனம்

தமிழ் திரையுலகில் ஆடல், பாடல், சண்டைகள், ஹீரோ வழிபாடல் போன்ற யதார்த்தத்துக்கு ஒவ்வாத நிஜமில்லாத வணிக சமாச்சாரங்கள் தவிர்த்த மண்சார்ந்த பிரச்சினைகளை அலசும் நிஜமான சினிமாக்கள் வருவது வெகு அரிது. வணிக சமரசங்களை முற்றிலும் தவிர்த்து கதையம்சத்துக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள படம் எவனோ ஒருவன். கோடிக்கணக்கான மக்களில் ஒருவன், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை அதற்கானத் தீர்வுகளைத் தேடும் ஒருவன் எவனோ ஒருவன். நாலு பாடல்கள், ஐந்து சண்டைகள், இரண்டு நாயகிகள் இல்லாமல் எடுத்தால் தமிழ் படங்களைப் பார்க்க மாட்டார்கள் என்ற நிலையில் தமிழ் மக்களின் ரசனையய மலிவு படுத்தி வைக்கப் பட்டிருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குள் இருக்கும் மேலான ரசனையை நம்பி நடிகர் மாதவன் துணிந்து ஒரு நல்ல படத்தை தமிழில் ஒரு புதிய முயற்சியை, தரமான சினிமா அனுபவத்ததக் கொணர்ந்திருக்கிறார்.

ஒரே வகை மசாலா என்னும் மாயச் சுழலில் சிக்கித் தவித்து மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட உலகுக்கு ஒரு புதிய வரவு இந்த எவனோ ஒருவன் , இது போன்ற படங்களின் வெற்றி உலகத் தரத்திற்கு இணையான தமிழ் படங்களை மேலும் தயாரிக்கவும் இயக்கவும் மாதவன் போன்ற கலைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். புதிய இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் இது போன்ற தரமான சினிமாக்களை எடுக்கத் தூண்டும் நெம்புகோலாக அமையும். நடிகர்களுக்கும் சண்டைகளையும் டூயட்களையும் தவிர்த்து யதார்த்தப் படங்களில் நடிக்கக் கூடிய துணிவை அளிக்கும். மலையாளத்திலும், வங்காளத்திலும், மராத்தியிலும் இது போன்ற முயற்சிகள் பெருத்த வரவேற்பையும், விருதுகளையும் அள்ளிக் குவிக்கும் பொழுது தமிழிலும் அது போன்ற ஒரு ஆரோக்கியமான திரைப்படச் சூழ்நிலையைக் கொணர முயலும் மாதவனின் முயற்சி ஆதரிக்கப் பட வேண்டியது. பாடலும், நடனமும், அபத்தமான ஹாஸ்யக் காட்சிகளும், காதல் கதைகளும் இல்லாமல் மக்களின் பிரச்சினைகளை, நகரப் புறங்களில் மக்கள் சந்திக்கும் அன்றாட சிக்கல்களை ஒரு நிஜ சினிமமவாக எவனோ ஒருவன் சொல்லியிருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை மிகுந்த விறுவிறுப்புடனும் உணர்ச்சி வேகத்திலும் பயணிக்கிறது.

எவனோ ஒருவனின் கதை புதிதல்ல. பல்வேறு திரைப்படங்களிலும் ஹாலிவுட் படங்களிலும் சொல்லப் பட்ட கதையின் ஒரு வடிவம் தான். இயக்குனர் நிஷி இது ஃபாலிங் டவுண் என்ற ஹாலிவுட் படத்தினால் உந்தப் பட்ட கருவே என்கிறார். . ஆனால் அந்தக் கதை சொல்லப் பட்ட விதமும், கதையமைப்பும், சூழலுமே இந்தப் படத்தை, இதே போன்ற கதைச் சாயலுடன் கூடிய பிற தமிழ்/ஆங்கிலப் படங்களில் இருந்து வித்தியாசப் படுத்துகிறது. முக்கியமாக போலீஸ் அதிகாரி வெற்றிசெல்வனின் பாத்திரப் படைப்பு இந்தப் படத்திற்கு வித்தியாசமான ஒரு பரிணாமத்தை அளிக்கின்றது. இது வரை இதே போன்ற கதையின் சாயலுடன் வந்த நான் சிகப்பு மனிதன், ஜெண்டில் மேன், இந்தியன், அந்நியன் போன்ற திரைப்படங்கள் மிகைப் படுத்தப் பட்ட, ஃபாண்டசிகள் நிரம்பிய வகைத் திரைப் படங்கள். யதார்த்தத்துக்கும் நிஜவாழ்வுக்கும் ஒவ்வாத ஹீரோ வொர்ஷிப் நிறைந்த சினிமாக்கள். அது போன்ற மிகைப் படுத்தல்களைத் தவிர்த்து ஒரு சாதாரணனின் இயல்பான யதார்த்தமான பார்வையில் மட்டுமே எவனோ ஒருவன் சொல்லப் படுகிறது. இது போன்ற கதை சொல்லலும் திரை அமைப்பும் தமிழ் படச் சூழலில் அடிக்கடி நிகழ்வதில்லை. இது போன்ற திரைப்படங்களே உலக அரங்கில் மதிப்பும் மரியாதையும் விருதுகளையும் பெற்றுத் தருகின்றன. தமிழ் படங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் உலக அரங்கில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரப் போவது உறுதி.

ஸ்ரீதர் வாசுதேவன் கோடிக்கணக்கான இந்தியர்களைப் போல அன்றாட வாழ்வின் அலுப்பிலும் சலிப்பிலும் உழல்பவன். நெருக்கமான தூய்மையற்ற சுகாதாரமற்ற சூழலிலும், ஊழலும் அராஜகமும், மனித நேயமின்மையும், சுரண்டலும், ஏமாற்றுதலும் நிறைந்த குழப்பமான நகர வாழ்வின் கொடுமைகளில் சிக்கி மீள முடியாமல் மூச்சுத் திணறுபவன். நாற்றமெடுக்கும் சமூக அமைப்புடன் அதன் நாற்றத்தைச் சகித்துக் கொண்டு, அனுசரித்துக் கொண்டு வாழ முடியாத, வாழப் பிடிக்காத, தன் கையயலாகாததனத்தின் மீது ஏற்படும் சுய கோபத்துடன் வாழும் தார்மீகக் கோபத்தைச் சுமந்து கொண்டு, மனதில் அழுத்திக் கொண்டு வாழும் ஒரு நகர்புற இளளஞன். சட்டத்தை மதிக்க வேண்டும், விதி முறைகளை மீறக் கூடாது, நேர்மையையும் உழைப்பையும் நம்ப வேண்டும் அநீதிக்கும், ஊழலுக்கும் துணை போகக் கூடாது என்ற காலத்துக்கு ஒவ்வாத உயரிய நோக்கங்களுடன் வாழ முயற்சிக்கும் ஸ்ரீதருக்குக் கிடைப்பது என்னவோ ஏளனமும், பரிகாசமும், இகழ்ச்சியும்தான். அன்பு மனனவியே கணவனின் ஊரோடு ஒத்துப் போக முடியாத லட்ச்சியங்களினால் அயர்வுற்று கணவனை நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு மாசு பட்ட அமைப்புடன் அனுசரித்து வாழ நிர்ப்பந்திக்கும் நிலமை. தன் லட்சியங்களுடன் வாழ முடியாத அயர்ச்சி, சீர் கெட்ட சமூகத்தின் அழுத்தம், அன்றாட வாழ்வின் சலிப்பு எல்லாம் சேர்ந்து ஸ்ரீதரின் பொறுமையின் எல்லையைச் சோதிக்கின்றன. கடும் மன அழுத்தமும், விரக்தியும், வேதனையும் ஒரு கட்டத்தில் அடக்க முடியாத எரிமலையாகப் பொங்கி வெடிக்கிறது. நெறிகெட்டுப் போன சமுதாயத்திடம் பொறுமை இழக்கும் ஸ்ரீதர் தன்னளவில், தன் பார்வையில் படும் அவலங்களுக்கெல்லாம் சட்டத்துக்கு ஒவ்வாத ஆனால் தன்னால் முடிந்த தீர்வை செயல் படுத்திப் பார்க்கக் கிளம்புகிறான். உயர்ந்த லட்ச்சியம் நேர்மை, ஊழலற்ற மனித நேயமிக்க சுமூகம் என்ற உயரிய கொள்கைகளான தீபத்தினை நோக்கிச் ஈர்க்கப் படும் விட்டில் பூச்சியாக அவன் கதை முடிகிறது.

ஸ்ரீதரின் மனசாட்ச்சி, ஸ்ரீதரின் விடுதலை பெற்ற சுய தீர்வுகள் சென்னை நகரைக் குலுங்க வைக்கிறது. செம்மறியாட்டுக் கூட்டத்திற்கு அவனது தார்மீகக் கோபம் வன்முறையாக்த் தோன்றுகிறது, அலட்ச்சியமும் சமூக நோக்கும் இல்லாத மக்களுக்கு மற்றொரு பரபரப்பு செய்தியாகக் கழிகிறது. வெகு சிலருக்கு மட்டுமே ஸ்ரீதர் மேற்கொண்ட தனி நபர் விஜிலெண்ட்டியிசத்தின் தாக்கம், அதன் அர்த்தம் புரிகிறது. ஸ்ரீதரின் குடும்பம் குழப்பத்தில் தவிக்கிறது. ஸ்ரீதர் போன்றவர்களின் கோபத்தை வளர விட்டால் அது அரசாங்கத்து வினையாக முடியும் என்பதனாலும், படித்த மக்களுக்கு அமைப்புசார் அரசாங்கத்தின் ஊழல் மீதும், மோசடிகள் மீதும் உள்ள கோபம் எந்த நேரத்திலும் உணர்ச்சிப் பிராவகமாக ஒரு சின்ன ஸ்ரீதர் வாசுதேவனால் தூண்டப் பட்டு விட்டால், அது ஆங்கோர் காட்டினின் பொந்தினில் வைத்த அக்னிக் குஞ்சாக நாட்டையே வெந்து தணித்திடும், அந்த அக்னிக் குஞ்சின் முழு வெப்பத்தைத் தாங்க முடியாது என்பதை உணர்ந்த அரசும், காவல்துறையும் ஸ்ரீதர் வாசுதேவன் என்ற ஒரு தனிநபர் புரட்ச்சியை அடக்கக் கிளம்புகிறது. ஒரு சாதாராண, படித்த பாமரன் தன் பொறுமையின் எல்லையைத் தாண்டினால், சாது மிரண்டால் என்ன நடக்கக் கூடும் அதன் விளைவுகள் என்ன அதன் தாக்கம் என்ன என்பது குறித்தான கேள்விகளள எழுப்பி, படத்தைப் பார்க்கும் மக்கள் மனதில் தார்மீகக் கேள்வி அலைகளை எழுப்புகிறது எவனோ ஒருவன், அது எழுப்பும் கேள்விகளே படத்தின் முக்கிய பலம். அஸ்திவாரம்.

ஸ்ரீதரின் தார்மீகக் கோபத்தையும் அதன் பின்னால் உள்ள நியாயத்தையும், நேர்மையின்பால், தூய்மையான லட்ச்சிய சமுதயாத்தின் மேல் அவனுக்குள்ள வேட்க்கையையும் அவனை வேட்டையாடக் கிளம்பும் காவல்துறை அதிகாரி மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்கிறார். ஸ்ரீதரின் மனசாட்ச்சி அந்த அதிகாரியிடம் அதிர்வலைகளையும், குற்ற உணர்வையும் சுய தேடல்களையும் தோற்றுவித்து இறுதியில் அவனது மனசாட்ச்சி அந்த அதிகாரியிடன் இடம் மாறுகிறது. காணும் ரசிகர்களிடமும் அதே கேள்விகளும், ஆரோக்கியமான சமூகத்தின் அவசியம் குறித்த உணர்வும் தீவீரமாக எழுப்புகிறது இந்தப் படம்.

ஸ்ரீதர் வாசுதேவனாக ஒரு சாதாரணக் குடும்பத் தலைவனாக, இரண்டு குழந்தைகளின் தகப்பனாக, தினமும் அதிகாலை அலாரம் வைத்து விழித்து, கார்ப்பரேஷன் லாரிக்குக் காத்துக் கிடந்து, தண்ணீர் பிடித்து, குழந்தைகளை தயார் செய்து, டிபன் பாக்சில் அடைத்த சாப்பாட்டுடன் எலக்ட்ரிக் டிரெயினில் நசுங்கி பீச் ஸ்டேஷன் வரை பயணம் செய்து, வங்கியில் அமர்ந்து மாலை வரை கரன்சி எண்ணிக் கணக்குப் பார்த்து அலுத்துக் களைத்து, மீண்டும் ரயில் பிடித்து கசக்கிப் பிழிந்து வாடி வதங்கி, வாழ்கையை அனுதினமும் ஒரே விதமாகச் சுற்றும் கடிகார முள் போல் அலுப்பும் சலிப்புடன் கழிக்கும் ஸ்ரீமான் பொது ஜனமாக எவ்வித ஹீரோத்தனங்களும் பாசாங்குகளும் இல்லாத வெகு இயற்கையாக நடித்திருக்கிறார் மாதவன். ஸ்ரீதர் வாசுதேவன் என்ற சாதாரணப் பாமரனின் பாத்திரத்துக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார் மாதவன். விரக்தியையும் வேதனையும் குமுறலையும், மன அழுத்தத்தையும் பாசத்தையும் எவ்வித மிகை நடிப்பும் இன்றி மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார் மாதவன். தமிழின் மிகத் திறமையான இயல்பான நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் மாதவன். எந்த இடத்திலும் தன் ஹீரோ இமேஜை நிரூபிக்க ஒரு இம்மி கூட அவர் முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாயில் ரத்தம் வர அடிப்பது அல்லது அடி வாங்குவது, நிதர்சனத்துக்கு மீறிய செயல்களைச் செய்வது என்பது போன்ற பாசாங்குகள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண வங்கி ஊழியனின் பொறுமையின் எல்லை மீறினால் என்ன செய்வானோ அதை மட்டுமே நடித்திருக்கிறார் மாதவன். இந்தப் படம் அவருக்கு மற்றொரு மைல்கல்.

அவரது மனைவியாக இரண்டு குழந்தைகளுடனும், இருண்டு கருத்த மாடிப் போர்ஷனில் கஷ்டப் பட்டு ஜீவனம் நடத்த வேண்டிய குடும்பத் தலைவியாகவும், விரக்தியும் வேதனையையும் கொட்டி தன் கணவனை இயல்பான மனிதனாக மாற்ற முயன்று தோற்கும் குடும்பப் பெண்ணாக தனக்கு அளிக்கப் பட்ட பாத்திரத்தை வெகு சிறப்பாகச் செய்திருக்கிறார் நடிகை சங்கீதா.

தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் தான் காணும் அநியாயங்களுக்கு உடனடி தீர்வு காண முயலும் ஸ்ரீதர் வாசுதேவன் கை மீறிப் போய் தனி நபரின் கோபம் ஒட்டு மொத்த வெள்ளைக் காலர் சமுதாயத்தின் கோபமாக வெடித்திடும் முன்பாக தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உலவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் மிகக் கச்சிதமாக நடித்திருக்கிறார் இயக்குனர் சீமான். ஸ்ரீதரைத் தேடும் பணி அவரது ஆன்மாவை பரிசோதனைக்கு உள்ளாக்கும் தன்னிடத்தில் சத்தியத்தைத் தேடும் பணியாக மாறி, தாங்க முடியாத மன உளைச்சலிலும், சுய பச்சாதாபத்திலும், விரக்தியிலும், குற்ற உணர்விலும் தத்தளிக்கும் அதிகாரியாக சீமான் மிகச் சிறப்பாகத் தனக்கு அளிக்கப் பட்ட பாத்திரத்தின் கனம் உணர்ந்து நடித்திருக்கிறார். அவரது மனசாட்ச்சியின் அழுத்தத்தின் கனம் ஒவ்வொரு காட்ச்சியிலும் அதிகரித்து அதிகரித்து, அந்தக் கனம் பார்ப்போர் மனதில் அப்படியே இறங்குகிறது. ஸ்ரீதரின் தனிநபர் போராட்டத்தின் ஒரே சாதனையாக ஒரு கறை படிந்த ஆனால் மனசாட்ச்சியுள்ள போலீஸ் அதிகாரியிடம் ஏற்படுத்தும் பெருத்த ஆன்ம விசாரமும், மன மாறுதலுமே. இது ஒரு ஆரோக்கியமான தொற்று நோயாகா மாறி படத்தைப் பார்ர்கும் ஒவ்வொருவரிடமும் ஸ்ரீதரின் மனசாட்ச்சி கேள்வி அலைகளை எழுப்புமானால் அதுவே இந்தப் படத்தின் மிகச் சிறந்த வெற்றியாக அமையும். சீமானின் நடிப்பும் பாத்திரமும் இந்தப் படத்தின் முக்கிய தூண்கள்.

அளவான பிண்ணனி இசையும், கச்சிதமான எடிட்டிங்கும் படத்தின் விறுவிறுப்புக்குத் துணை சேர்க்கின்றன. ஸ்ரீதரின் அலுப்பும் சலிப்பும் நிறைந்த அன்றாட நங்கநல்லூர் டூ பீச் பயணம், பரபரப்பு நிறைந்த சென்னை நகரத்தின் தொலைந்து போன மனிதத்தை காமெரா மிகச் சிறப்பாக காண்பிக்கிறது. ஸ்ரீதரின் அன்றாட வாழ்க்கையை அதை மீண்டும் மீண்டும் மிக வேகமாகக் காண்பித்து காண்போரை அந்த அலுப்பின் சலிப்பின் உச்சக் கட்டத்துக்குத் தள்ளி உணர வைக்கும் ஆரம்பக் காட்ச்சிகளின் விறு விறுப்பான எடிட்டிங் அபாரம். டி வி பேட்டிகளும், டி வி செய்திகளும் தக்க விதத்தில் பயன்படுத்தப் பட்டுக் காட்ச்சிகளை விறு விறுப்பாக நகர்த்திச் செல்கின்றன. அதே காட்ச்சிகள்தான் மக்களின் பொதுப் புத்தியையும் , அலட்ச்சிய மனப்பான்மையும், அக்கறையின்மையையும், அறியாமையையும், அப்பாவித்தனத்தையும், முட்டாள்த்தனத்தையும் காண்பிக்கின்றன. ஒரு ஸ்ரீதர் வாசுதேவனுக்கு எழும் தார்மீகக் கோபம் ஒவ்வொரு குடிமகனுக்கும் எழாமல் போவதே மக்களைக் காக்க வேண்டிய அமைப்பு அவர்களள ஏமாற்றும் அவல நிலைக்குக் காரணம் என்பதை படத்தின் பல்வேறு காட்ச்சிகள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன,

படத்தில் ஏற்கனவே காட்ச்சி பூர்வமாக விளக்கப் பட்டுள்ள காட்சிகளை மீண்டும் சீமானின் வசனங்கள் மூலமாகச் சொல்ல முயல்வதும், ஸ்ரீதர் வாசுதேவன்
யார் அவன் என்ன செய்ய முயல்கிறான் என்பதை முழுவதும் அறியும் முன்னாலேயே போலீஸ் அதிகாரி அவனைப் பற்றிய ஒரு மிகைப் படுத்தப் பட்ட பிம்பத்தைக் கொள்வதும், போலீஸ் உயர் அதிகாரி ஒரு இன்ஸ்பெக்கடரிடம் நேரடியாகக் கட்டளை இடுவதும், ஒரு சில இடங்களில் வாய் அசைவுகளின் ஒத்திசைவு இன்மையும் படத்தின் சில மெல்லிய குறைபாடுகள்.

இயக்குனர் நிஷிகாந்த் காமத் இந்தப் படத்தை மராத்தியில் ‘டோம்ப்பிவிலி ஃபாஸ்ட்’ என்ற பெயரில் எடுத்து ஏற்கனவே உலகத் திரைப்பட விருதுகள் உட்பட 36 விருதுகளைக் குவித்திருக்கிறார். ‘டோம்ப்விலி ஃபாஸ்ட்’ படத்தை தமிழில் சென்னைச் சூழ்நிலைக்குப் பொருத்தி மீண்டும் எடுத்திருக்கிறார். இந்தப் படம் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த ஒரு புத்துணர்வுள்ள ஆக்சிஜன். இந்த இயக்குனரை தமிழ் பட உலகு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமானால் தமிழ் திரையுலகுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பல காட்சிகளில் இயக்குனரது முத்திரை ஜொலிக்கிறது. இது போன்ற இயக்குனர்களின் வரவு தமிழ் திரையுலகினை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உலக அளவில் தமிழ் படங்களுக்கும் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தர இது பொன்ற புது இயக்குனர்களாலும் அவரை ஆதரிக்கக் கூடிய மாதவன் போன்ற நடிகர்களாலுமே முடியும். சென்னை மாநகரின் அவலங்களை புழுத்துப் புரையோடிப் போன, ஈ மொய்க்கும் அழுகிய மிருகம் ஒன்றை ஒரு குறியீடாகக் காண்பிக்கிறார் நிஷிகாந்த். ஊழல்களாலும், சட்ட மீறல்களாலும், மனிதநேயமற்ற மனிதர்களாலும், சுற்றுப் புற மாசு கேடுகளாலும், அராஜகங்களாலும், அதிகார வர்க்கத்தின் திமிராலும், மக்களின் அக்கறையின்மையினாலும், அறிவின்மையினாலும், அரசியல்வாதிகளின் மோசடிகளாலும் மொய்க்கப் படும் ஒரு அழுகிய புழுத்த உடலின் நிலையில்தான் சென்னை அல்லது எந்தவொரு இந்தியப் பெருநகரும் இந்தியாவில் இன்று இருக்கிறது என்பதை உணர்த்துகிறார் நிஷிகாந்த். இறுதியில் ஜன்னலோரம் சீட் கிடைக்காதா காற்றுக் கிடைக்காதா என்று ஏங்குவேன் அது இன்று கிடைத்திருக்கிறது என்று மாதவன் சொல்லும் பொழுது அதன் குறியீட்டில் இயக்குனர் நம்மை கலங்க வைக்கிறார்.

வணிக சமரசங்களற்ற மக்களின் அன்றாடப் பிரச்சினை ஒன்றைத் துணிவுடன் கருவாக எடுத்துக் கொண்டு அணுகிய நிஷிகாந்தும் அதைத் திரையில் சாதகமாக்கிய மாதவனும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே. இந்தப் படம் எவ்விதத் தீர்வையும் அளிப்பதில்லல. நல்லது கெட்டது என்று கருப்பு வெள்ளையாக எவ்வித மெசேஜும் கொடுப்பதில்லை. பார்ப்பவர்களை நிச்சயம் சிந்திக்கத் தூண்டும், எண்ண அலைகளை உருவாக்கும், பல நாட்க்களுக்கு தாக்கத்தை உருவாக்கும்,. அதன் விளைவு ஒட்டு மொத்த சமூகத்தில் ஒரு லேசான மாற்றத்தை உருவாக்கினால் அல்லது அதற்கான ஒரு சிறிய முயற்சியை படம் பார்க்கும் மக்களிடம் ஒரு லேசான தீப்பொறியைப் பற்ற வைத்தாலும் கூடப் போதுமானது. சமுதாய அவலங்களுக்குத் தீர்வு தனி மனிதர்களின் எண்ணப் போக்குகளின் மாற்றத்தில்தான் இருக்கிறது. அத்தகைய மாற்றத்தை சிறிதளவேனும் தூண்டும் ஒரு சேஞ்ச் ஏஜெண்டுகளாக இது போன்ற திரைப்படங்கள் அமைகின்றன. தமிழக ரசிகர்கள் அவசியம் காண வேண்டிய திரைப்படம் எவனோ ஒருவன்.

தொடர்புள்ள பதிவு: கில்லி – Gilli » Blog Archive » evanO oruvan, Movie Review – ‘DhooL’ Balaji

Blood and Belief: The PKK and the Kurdish Fight for Independence by Aliza Marcus

நன்றி & முழுவதும் படிக்க: எகனாமிஸ்ட் புத்தக விமர்சனம்

PKK: who are these indomitable fighters and what is their true goal?

Aliza Marcus, an American journalist who was put on trial in Turkey for her reporting on the Turkish army’s abuses against ordinary Kurds, charts the origins and evolution of the movement. Her scholarly, gripping account is based on interviews with, and the unpublished diaries of, former PKK militants.

With Syria’s blessing, the PKK sent its men and women into Lebanon’s Bekaa valley for training by Palestinian militants.

The group’s fortunes were even harder hit by the capture in 1999 of its leader, Abdullah Ocalan, by Turkish secret agents in Nairobi. His subsequent recanting—he called the rebellion “a mistake” and offered to “serve the Turkish state”—is well documented. But little is known about Mr Ocalan’s personal life and Ms Marcus helps to lift the veil shrouding a leader who used to shuttle between villas in Damascus and Aleppo while his fighters roughed it in the mountains. Deserters and dissidents would be summarily executed. Indeed Mr Ocalan did not hesitate to order the deaths of women and children if they were related to members of a stateemployed Kurdish militia that fought alongside the Turkish army.

it is plain that his leadership has become increasingly symbolic and that a new generation of hardliners is gaining the upper hand.

What is missing from Ms Marcus’s excellent reporting is the growing appeal of Turkey’s ruling Justice and Development (AK) party to Turkish Kurds. A mixture of social-welfare schemes and Islamic piety helped AK to trounce the biggest pro-PKK party in many of its former strongholds at the general election last July.

புத்தகத்தின் முன்னுரையில் இருந்து:

The small group of armed men and women grew into a tightly organized guerrilla force of some 15,000, with a 50,000-plus civilian militia in Turkey and tens of thousands of active backers in Europe. The war inside Turkey would leave close to 40,000 dead, result in human rights abuses on both sides, and draw in neighboring states Iran, Iraq, and Syria, which all sought to use the PKK for their own purposes.

The rebels had many reasons for returning to battle: it was a response to Ankara’s political inaction; it was a way to ensure that the PKK remained relevant and in control; and finally, there was Iraq to consider…the independent state that Kurds in Iraq, like many of those in Turkey, had long hoped for. And the PKK, once viewed as the dominant Kurdish group in the region, suddenly was afraid of slipping behind.

Turkey, where Kurds number some 15 million, making up about 20 percent of Turkey’s 70 million population.

The Kurds are the world’s largest stateless people.

The main reason was that when Kurds weren’t being killed by the thousands—as happened in Halabja—the West didn’t care. The Kurdish conflict seemed as remote as the region where they lived, a treacherous terrain intersected by the borders of Turkey, Iran, Iraq, and Syria. And the Kurds themselves were difficult to understand. Divided by borders, dialects, tribal loyalties, and blood feuds, it was easy to dismiss their uprisings as the machinations of gun-toting brigands suspicious of the central authority.