Category Archives: Polls

Republican Primary – Iowa Straw Poll: Results (Election Series – 7)

1. The American right | Under the weather | Economist.com: “The conservative movement that for a generation has been the source of the Republican Party’s strength is in the dumps”

Economist on Republican Party swing for the Preseident Primary Polls

Party Affiliations - Democarat vs Republican2. Romney Wins Iowa Straw Poll by a Sizable Margin – New York Times

For all the hoopla and hype — there were news crews here from around the globe — the political significance of this event was questionable. Rudolph W. Giuliani of New York, like Mr. McCain, said he would not compete in the poll, citing the early advantage that Mr. Romney had built.

It cost $35 to cast a vote, and most of the campaigns picked up the cost of the voting tickets. Mr. Romney dispatched a fleet of buses to bring in his supporters.

it sought to replicate the strategy that won George W. Bush the nomination in 1999. The campaign spent $25,000 to rent the patch of lawn where they pitched a tent for the afternoon. He received about the same percentage of votes as Mr. Bush did eight years earlier.

3. For a Joke-Telling Candidate, a Second-Place Finish – New York Times

In West Des Moines the other evening, he was talking about cutting spending and taxes to an attentive audience when he was halted by the trill of a cellphone.

“If that’s Dick Cheney wanting me to go on a duck hunt, tell him I’m not doing it,” he said.

Finance reports of Presidential Primary candidates (Presidential Primary Series – 6)

1.

presidential primary USA McCain Giuiliani edwards Obama Clinton Romney spending NYT

நன்றி :New York Times – Where Campaign Money Goes

2. Opinion of Hillary Rodham Clinton:

Hillary Clinton Opinion Poll by New York Times (President Primary) - Democrats Candidate

3. Thanks: NYT

New York Times Survey for Hillary Clinton

4. Women Supportive but Skeptical of Clinton, Poll Says – New York Times

5. Stealing America By David Truskoff

Where do you think Clinton came up with the quick 30 Million and Obama, out of no where, acquired 33 million. Both of them have been openly courting Pro Israel money. Most large donors, of course, want something back for their money. The prediction for the 2008 presidential race is that the candidates will spend a Billion and the one who spends the most almost always wins. It is stealing America.

When the Democratic Party kicked the war mongering Lieberman out because he was so far out of the American mainstream of political thinking he magically came up with $20,219,460, ran as an independent and won. In his state the candidate that spent the most money won five out of the six races.

Lieberman’s people claimed that 86% of that money came from individual donors and only 12% came from Political action Committees. Under the old law that would mean that approximately 17,563 individuals gave one thousand. That would not be too difficult for the American Israel Public Affairs Committee to do.

Rebirth of a Realist

Cartoons (Week of July 16)

Shekawath double standards VP karunanidhi DMK PoliticsAdade mathy dinamani MBBS Study expenses prices capitation exorbitant fees

Continue reading

Madurai West bypoll Calculations & an old op-ed by Kalachuvadu

2006

முந்தைய வேட்பாளருடனான வித்தியாசம்

வாக்களித்தோர் சதவிகிதம்


மொத்த வாக்காளர்கள்

1,85,269

பதிவான வாக்குகள்

1,31,030

வாக்கு சதவிகிதம்

70.72%

.தி.மு..

57,208

43.66 %

காங்கிரஸ்

53,741

3,467

41.01 %

தே.மு.தி..

14,527

39,214

11.09 %

பா...

1,851

2007

கடந்த தேர்தலில் இருந்து வாக்கு மாற்றம்

மொத்த வாக்காளர்கள்

1,56,180

-29,089

பதிவான வாக்குகள்

1,17 895

-13,135

வாக்கு சதவிகிதம்

75.49%

↑ 4.77 %


காங்கிரஸ்

60,933

51.68 %

7,192

(↑ 13.38 %)

.தி.மு..

29,818

31,115

25.29 %

-27,390

(↓ 47.88 %)

தே.மு.தி..

21,272

8,546

18.04 %

6,745

( 46.43 %)

பா...

1,308

 

 

 

 

 

 

முந்தைய தலையங்கம்: எது பெரிய ஆபத்து? (காலச்சுவடு)

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் முடிவுகள் இயல்புக்கு மாறான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிபெறுவது புதியதல்ல. அதிலும் ஜெயலலிதாவுக்கு இது புதிதல்ல. 12 அமைச்சர்கள், 60 எம்.எல்.ஏ.க்கள், கோடிக்கணக்கில் பணம் ஆகிய ‘யதார்த்தங்க’ளைக் கவனத்தில் கொண்டால் இவ்வெற்றி வியப்பளிக்காது. தி.மு.க. அணியும் சளைக்காமல் (மத்திய) அமைச்சர்களை, எம்.எல்.ஏ.க்களைக் களமிறக்கியிருந்தது. பண விஷயத்திலும் ‘குறை’ இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக ஏழு கட்சிக் கூட்டணி அது. இருந்தும் பெரிய வாக்கு வித்தியாசம் எப்படி ஏற்பட்டது என்பதுதான் பலரும் சுட்டிக்காட்டும் ‘புதிர்’.

 

2001 சட்டமன்றத் தேர்தலில் பெற்றதைவிட அதிக வாக்குகளை இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. பெற்றுள்ளது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணி பெற்ற வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இவற்றைச் சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள் வாக்காளர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவாக இதைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் அவர்கள் இரு அம்சங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை.

 

ஒன்று: இந்த இரு தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம். காஞ்சிபுரத்தில் 2001 சட்டமன்றத் தேர்தல் – 2004 நாடாளுமன்றத் தேர்தல்களின் வாக்காளர் எண்ணிக்கைகளுக்கிடையே வெறும் 32 வாக்குகள் மட்டுமே வித்தியாசம். கும்மிடிப்பூண்டியிலோ 2004 தேர்தலின்போது வாக்காளர் எண்ணிக்கையில் 4854 பேர் குறைந்திருந்தனர். ஆனால் இவ்விரு தொகுதிகளிலும் இடைப்பட்ட இந்த ஓராண்டில் சுமார் 16 ஆயிரம் வாக்காளர்கள் கூடியுள்ளனர். இப்படி அதிகரித்த வாக்குகள் யாவும் அ.தி.மு.க.வுக்கே சென்றுள்ளன.

 

இரண்டாவது: வாக்களித்தோர் எண்ணிக்கையில் காணப்பட்ட அபரிமிதமான வேறுபாடு, காஞ்சிபுரத்தில் மட்டும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்தத் தொகுதியில் பல வாக்குச் சாவடிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குப் பதிவு நடந்துள்ளது.

 

இடைத் தேர்தல் முடிவு வரவிருக்கும் பொதுத் தேர்தலின் அறிகுறி என உண்மையாகவே நம்பினால் அ.தி.மு.க.வை எவராலும் காப்பாற்ற முடியாது. தி.மு.க.வோ இப்போதாவது சுயபரிசீலனை செய்துகொள்வது நல்லது. தகுதிக்கு அதிகமாக மாறன் குடும்பத்துக்குத் தரப்படும் முக்கியத்துவம் கட்சியின் பிற தலைவர்களைப் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

 

பொதுத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது எனச் சொல்பவர்கள் இடைத் தேர்தலில் செய்ததைப்போல் பண பலத்தையும் அதிகார பலத்தையும் அது பயன்படுத்த முடியாது என்பதைக் காரணமாகக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த முடிவுகள் அதைக்கூட அவர்கள் செய்யக்கூடியவர்கள்தான் என்ற அச்சத்தையே ஏற்படுத்துகின்றன. பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகிற அரசியல் கட்சிகளைவிடவும் பணம் கொடுத்தால் வாக்களிக்கிற வாக்காளர்களே மிகவும் ஆபத்தானவர்கள். இதை எப்படி எதிர்கொள்வது?

 

 

Duverger’s law – Ramblings now, Thoughts later

APJ Abdul Kalam – Why two party system will not work for India? (Op-ed) « Tamil News

இரு கட்சி ஜனநாயகம் இந்தியாவைப் பொருத்தவரை சரிப்படுமா?

இத்தாலி போன்ற நாடுகளில் எக்கச்சக்க கட்சிகள். கனடாவில் கூட மாகாணத்துக்கு ஒரு கட்சியின் கை மேலோங்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

சமீபத்தில் ஃப்ரான்ஸில் தேர்தல் நடந்து முடிந்ததால், அங்கும் பல கட்சிகள் மக்கள் அபிமானத்தைப் பெற்று, சட்டசபையில் வெரைட்டி காண்பிப்பதை பார்க்க முடிந்தது. பிரான்சைப் பொருத்தவரை பல கட்சிகளின் வேட்பாளர்கள் ஜனாதிபதிக்குப் போட்டியிட்டாலும், அவர்களின் தேர்தல் முறை வேறு என்பதால், மிக அதிக வாக்குகள் பெற்ற இருவர் மட்டுமே கடைசியில் போட்டியிடுகிறார்கள்.

சென்ற ராஷ்டிரபதி தேர்தலில் வில்லன் #1 லெ பென் வந்துவிட்டதால், சிராக் மிக எளிதாக வென்றார். அதாவது, உமா பாரதிக்கு எதிராக முக அழகிரி நின்றாலும் ஜெயித்துவிடக் கூடிய நிலைமை.

இந்தத் தேர்தல் பரவாயில்லை. ஆனால், பெண் என்பதால் வாக்களிக்க மறுத்தார்களா என்பது ஆய்வறிஞர்களின் வேலை.

தொடர்பான செய்திக் குறிப்புகள்: France « Tamil News

தினமணி: மேலைநாடுகளைப் பொருத்தவரை, நமது நாட்டில் இருப்பது போல இந்த அளவு சாதி, மத, மொழி, சமுதாய, பொருளாதார ரீதியிலான பிரிவினைகள் கிடையாது

இது தட்டையான வாதம். அமெரிக்காவில் ஸ்பானிஷ், போர்த்துகீசியம், ஆரம்பித்து ஆக்கிரமித்த வியட்நாம் முதல் ஆக்கிரமிக்க நினைக்கும் விரிகுடா நாட்டு மொழிகள் உண்டு. கிறித்துவத்தில் இத்தனை பிரிவுகளா என்பது எங்கள் குக்கிராமத்தில் இருக்கும் பதினேழு விதமான தேவாலயங்களைக் கொண்டு புலப்படலாம்.

‘மெல்டிங் பாட்’ (மனம் ஒரு குரங்கு: கலாசாரங்கள் கலந்துருகும் கலயம்?) என்று ஒற்றைப்படையாக ஜல்லியடிக்கலாம். ஆனால், எக்கச்சக்க பிரிவுகள் என்பதுதான் நிதர்சனம்.

தமிழகத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கொள்கை, செயல்பாடு, தலைமையில் எவ்வளவு வித்தியாசங்களைக் காண இயலுமோ, அதை விட ஒன்றிரண்டை குடியரசுக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையே கண்டுபிடிக்கலாம்.

நேரம் கிடைக்கும்போது இதே பதிவில் தொடர எண்ணம்…

இது சாத்தியமா?

இன்னமும் 40 நாட்களில் தெரிந்துவிடும் தமிழகத்தினை யார் ஆளப்போகிறார்கள் என்பது. அ.தி.மு.க கூட்டணியின் பக்கம் தற்போதைக்கு நிலை ஆதரவாக இருக்கிறது என்பது குமுதம் சர்வேயில் தெரிகிறது. ஆனாலும், சொல்லமுடியாது. நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தப் போது, தி.மு.க தலைமையின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியினை தெரிவித்தார், ஆனாலும், ரஜினி போல, இன்னொரு முறை பிரச்சனைகள் இல்லாமல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கான ஒட்டுமொத்த ஆப்பு என்ற கருத்தினையும் முன்வைத்தார். எது எப்படியோ, ஏதோ ஒரு கூட்டணி வரப்போகிறது. ஆனால், முக்கியமாக அந்த கூட்டணி தமிழகத்தினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லுமா என்பதை இப்போது சொல்லமுடியாது.

தமிழக அரசியலில் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணிகளுக்கு மாற்றாக ஒரு மூன்றாம் கூட்டணி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளும் வீணாய்போயின. ஆக இருப்பதில் ஏதோ ஒரு கூட்டணி தான் வரப்போகிறது. ஆனால், இந்த முறை எந்த கூட்டணி வந்தாலும் அவர்களை பொதுமக்களாகிய நாம் எப்படி தட்டிக் கேட்கப் போகிறோம்.

இன்றளவும் ஒரு குடிமகனாய், என்னுடைய தொகுதி கவுன்சிலருக்கான கடமைகள் என்ன, என்னென்ன கேள்விகளை நான் கவுன்சிலரை எதிர்த்து கேட்க முடியும், என்னுடைய தொகுதிக்கு என்ன திட்டங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன, அவற்றுக்கான ஆதாரபூர்வமான கணக்குகளை பரிசோதிக்க முடியுமா, என்னுடைய தொகுதிக்கான விஷயங்களை தமிழக அரசின் இணையதளத்தில் பார்க்க முடியுமா என்று நிறைய கேள்விகள் எழுகின்றன. Accountability இல்லாமல் இருப்பதால் தான் அரசியல்வாதிகளால் ஊழல்கள் செய்யமுடிகிறது. இனியொருமுறை இம்மாதிரி நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். மணிரத்னம் படங்கள் போல இண்டர்வேலுக்கு மேல் நான் மந்திரியாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ முடியாது. இந்திய சனநாயக தேர்தல் முறைகளில் நம்பிக்கைகள் இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளில் எது சிறந்ததோ அதை கையிலெடுத்துக் கொண்டு எனக்கான, மக்களுக்கான வசதிகளையும், கேள்விகளையும் கேட்டு பெற்றுத்தர என்ன செய்ய முடியும் என்று தான் யோசிக்கிறேன்.

தகவல் அறியும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்று நினைக்கிறேன் [?!] எந்த விதமான தகவல்கள என்னுடைய தொகுதி பற்றிய, உறுப்பினர்கள் பற்றிய, எம்.எல்.ஏ, கவுன்சிலர், எம்.பி பற்றிய, திட்டங்கள், அரசு ஒதுக்கீடுகள் பற்றிய விவரங்கள் கிடைக்கும் ? இதில் இவை அடங்குமா? ஒரு வாக்காளனை ஒரு கட்சிக்கு ஒட்டுப் போடச் சொல்வது பிரச்சாரம். ஆனால், அவனுக்கும் போதிய அரசியல் அறிவினை கொடுத்தால் கையில் காசு வாங்கிக் கொண்டு, குடம்,சொம்பு, 500 ரூபாய் லட்டு மோதிரம் வாங்கினாலும், நாளைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை கேள்விக் கேட்க ஏதுவாக இருக்கும். இனியும், இந்திய அரசியல் சட்டம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதை விட, சட்டத்தின் ஒட்டைகளை, மக்களின் அறியாமையினை முதலீடாகக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை அவர்களின் வழியிலேயே போய் சட்டத்தினை தெரிந்து கொண்டு கேள்வி கேட்டு சட்டத்தின் முன் நிறுத்துவது தான் ஒரே வழி.

1. உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் என்னென்ன ?
2. உங்களுக்கு தெரிந்து அவர்களின் சொத்து மதிப்பு அவ்வளவுதானா. அப்படியில்லையென்றால், ஆதாரங்களுடன், தேர்தல் கமிஷனரிடத்தில் இதை கொண்டு செல்ல இயலுமா?
3. வட்டம், தொகுதி, மாவட்டம் என்ற வரையறையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அரசால் ஒதுக்கப்பட்ட திட்டத்தின் நகலோ, திட்டத்தினை நிறைவேற்றுபவர்களின் [கவுன்சிலர், கமிஷ்னர், கலெக்டர், காண்ட்ராக்டர்கள் ] பற்றிய தகவல்கள் பொதுவாக தமிழக அரசு இணணயதளத்தில் இருக்குமா?
4. அவ்வாறு இருப்பின், திட்ட மதிப்பீடுகளையும், திட்டகாலம், தொடக்கம், முடிவு, பணி நேரங்கள் பற்றிய விவரங்களை பொதுவாக அறிவிக்க முடியுமா? தொகுதியின் வரவு,செலவு நிதியாதரங்களைக் கொண்டு பாலன்ஸ் ஷீட் தாக்கல் செய்ய நிர்பந்திக்க முடியுமா?
5. எந்த விஷயங்களை ஒரு எம்.எல்.ஏவிடம் நேரடியாக கேட்க முடியும்? எவற்றினை அரசு அலுவலகங்களில் கேட்டு பெற முடியும்? [ஆட்டோ வீட்டுக்கு வராமல்]
6. சட்ட மன்ற தொடர் இல்லாத காலகட்டங்களில் ஒரு எம்.எல்.ஏவின் பணியென்ன?
7. சட்ட மன்றத்தில் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ என்ன கேள்விகள் கேட்டார், அதற்கு அவர் பெற்ற பதில்கள் பற்றிய விவரங்கள் இணையத்திலோ, பத்திரிக்கைகளிலோ கிடைக்குமா?
8. ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனியே ஆறுமாததிற்கோ, ஒரு வருடத்திற்கோ ஒரு முறை unaudited financial report செய்யும்போது மக்கள் நலனை முன்னிறுத்தும் அரசு ஏன் வெறுமனே பட்ஜெட் வரவு செலவுகளோடு நிறுத்திவிடுகிறார்கள் ? பொதுமக்களின் பார்வைக்கு ஏன் அரசின் வருடாந்திர/காலாண்டு திட்ட நிதி வரவு/செலவு விஷயங்களை வைக்கக்கூடாது?
9. இவற்றினை சட்டரீதியாக கொண்டு வரமுடியுமா? அப்படியில்லையெனில் இவற்றில் பெரும்பாலானவற்றினை பொதுமக்களுக்கு எடுத்து செல்ல என்ன செய்ய வேண்டும் ?

அழுகிற பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும். கேள்வி கேட்காமல் நியாயங்கள் கிடைக்காது. அச்சமின்றி கேள்வி கேட்கவும், அதற்கு ஒரு உறுப்பினரை பதில் சொல்ல வைக்கவும் சட்டம் தெரிய வேண்டும். ஒரு சாதாரண குடிமகனுக்கு அவனுடைய உரிமைகள், கடமைகள் பற்றிய விஷயங்கள் தெரியாமல், தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ “புரட்சி” வெடிக்காது. ஆக, வெறுமனே பதிவுகளில் ஜல்லியடிக்காமல், தமிழ்நாட்டின் ஒரு ஏழை வாக்காளனுக்கு நான் என்ன செய்யப் போகிறோம், நம் “அறிவுஜீவித்தனங்களையும், புத்திசாலி கணக்குகளையும்” வைத்துக் கொண்டு ?

இங்கே பதியும் நண்பர்களில் வழக்குரைஞர்கள், சட்டமறிந்தவர்கள் இருப்பின் நான் ஏன் தமிழகம் முழுவது கட்சி சார்பில்லாமல், ஒரு குடிமகனின் உரிமைகளை எடுத்துரைக்ககூடாது. நாளைய தமிழகத்தின் வாழ்வும்,தாழ்வும் நம்மிடத்திலும் இன்னமும் 41/2 கோடி மக்களிடத்திலும் இருக்கிறது. இதை மாற்ற என்ன செய்யப் போகிறோம்?