Category Archives: Movies

Kalainjar Karunanidhi’s Uliyin Osai with Ilaiyaraja & Ilavenil

kalainjar_karunanidhi_ilaiyaraja_uliyin_osai_ilavenil.JPGதமிழகத்தின் இசைக்கலையை உலகம் அறியச் செய்ய இசை பல்கலைக்கழகம் அமைக்கப்படும்’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

முதல்வர் கருணாநிதியின் கதையில் உருவாகும் ‘உளியின் ஓசை’ என்ற திரைப்பட துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா என்னை சந்தித்த போது, நான் எழுதிய ‘சாரப்பள்ளம் சாமுண்டி‘ என்ற சரித்திர கதையை படமாக எடுக்க வேண்டும் என தீராத ஆசை உள்ளதாக தெரிவித்தார். அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. சரித்திர பின்னணி கொண்ட படத்தை உருவாக்குவது சாதாரணமான விஷயம் அல்ல. சமூக படத்தை விட பலமடங்கு அதிகமான செலவு செய்யவேண்டும் என்ற அனுபவ ரீதியான உண்மையை நான் உணர்ந்துள்ளேன்.ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரை பின்னணியாக வைத்து தஞ்சை கோவில் சிற்ப கூடத்தை கதைக்களமாக அமைத்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளேன்.

என் வசனத்தை மட்டும் நம்பியிராமல் கலை, நடனம், இசை ஆகிய அனைத்து அம்சங்களும் கொண்டதாக இந்த படம் அமையும். தமிழனின் வரலாறு குறித்து அவனே சொல்லாததால் வெளியில் தெரியாமல் போயிற்று. முகலாயர்களுக்கு வரலாறு இருப்பது போல் தமிழர்களின் வரலாற்றை சொல்ல முடியாத நிலை உள்ளது. மனுநீதி சோழன் திருவாரூரில் கட்டிய கோட்டை இப்போது இல்லை. தஞ்சாவூர் கோட்டை தூள் தூளாகி விட்டது. இதற்கு காரணம் நம்முடைய வரலாறுகளை நாம் பதிய வைக்கத் தவறி விட்டோம்.

இதனால் வரலாற்று உண்மைகள் அழிந்து விட்டன. உத்திரமேரூர் பராந்தக சோழன் கல்வெட்டில் உள்ளாட்சி தேர்தல் முறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தான் தற்போதைய உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக, வாங்கிய கடனை திரும்ப தருபவர்களாக இருக்க வேண்டும் என அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகுதி உடையவர்கள் குடவோலை முறையில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உத்திரமேரூரில் உள்ள ஒரே ஒரு கல்வெட்டு மூலம் இந்த உண்மைகளை தெரிந்து கொள்ள முடியும். வரலாறுகளை புரிந்து கொள்ள இதுபோன்ற கல்வெட்டுகளை அமைக்க வேண்டியது அவசியம்.தஞ்சை கோவிலில் பரத கர்ணம் 108க்கு உரிய சிலைகளில் 87 சிலைகள் தான் உள்ளன. மீதமுள்ள சிலைகள் ஏன் உருவாக்கப்படவில்லை என்ற எனது கேள்விக்கான பதில் தான் இந்த படத்திற்கான கதை.

பல்கலைகழகம்:

இளையராஜா பேசும் போது, நமது இசைக்கலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இது அரசு விழா இல்லை என்றாலும் அவரது கோரிக்கைக்கு இசைந்து தமிழகத்தின் இசை பல்கலைக் கழகம் துவங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிடுகிறேன். இந்தியாவின், தமிழகத்தின் இசைப் பெருமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் துவங்கப்படும் அந்த பல்கலை க்கழகத்திற்கு நானும் இளையராஜாவும் வலிவூட்டுவோம்.

keerthi_chawla_akshaya_mu_karunanidhi_tamil_cinema.jpgபடத்தில் புது நடிகைகள்: ‘உளியின் ஓசை’ படத்தயாரிப்பாளர் ஆறுமுகநேரி முருகேசன் கூறியதாவது:

இப்படத்தின் தொடக்க விழாவிற்கு முன்பு திரைக்கதை குறித்து இயக்குனர் குழுவினருடன் முதல்வர் கருணாநிதி தீவிர விவாதத்தில் ஈடுபட்டார். பேராசிரியரை போல் வகுப்புகளை நடத்தினார். காலை 8 மணிக்கு அமர்ந்த முதல்வர் மாலை 6.30 மணி வரை தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டார். இந்த திரைப்படம் நன்கு அமைய பல யோசனைகளை தெரிவித்தார். இந்த படம் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை முதல்வருக்கு ஏற்பட்ட பிறகே துவக்க விழாவிற்கான தேதியை அறிவித்தார்.

முதல்வர் கருணாநிதி விரும்பும்படியும், இன்றைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்பவும் வெற்றிப்படமாக இந்த படம் அமையும். இந்த படத்திற்காக ஏ.வி.எம்., முதல் தளத்தில் கலை இயக்குனர் மகி பல லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமான சிற்பக் கூடத்தை அமைத்துள்ளார்.இளவேனில் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

வினித், கீர்த்தி சாவ்லா, அக்ஷயா, மனோராமா, சரத்பாபு, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வரும் 11ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Prakashraj’s mayilu – Back to Ilaiyaraja

mayilu_tamil_cinema_movies_prakashraj_ilaiyaraja.jpg

mayilu_tamil_moser_baer_jeevan_prakashraj_ilaiyaraja.jpg

Netflix – ரிசர்வ் செய்யப்படுகிறது

1. The Darjeeling Limited

2. Trade

3. Jindabyne

4. Eastern Promises

5. In the Valley of Elah

Vairamuthu Question & Answer – Incidents, Detractors

தொடர்புள்ள பதிவு:

Vairamuthu answers – Bharathy, Tamil kavithai, Music Directors, Songs

அ.அமலோர்ப்பவமேரி, ஆத்தூர்.

உங்கள் இலக்கியப் பயணத்தில் எதிர்ப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

‘தினமணி கதிரி’ல் சுதாங்கன் ஆசிரியராயிருந்தபோது, ‘வள்ளுவர் முதல் வைரமுத்து வரை’ என்ற ஒரு தொடரை இலக்கிய ஆர்வலர் சிவா எழுதி வந்தார். தலைப்பைப் பார்த்ததும் தமிழ்நாட்டின் மூத்த முன்னோடிக் கவிஞர் ஒருவர் தீப்பிழம்பாய்ச் சினந்தெழுந்தார். ஒரு சிறு பத்திரிகையில் எதிர்ப்பறிக்கையும் எழுதி வெளியிட்டார். ‘‘யாரோடு யாரை ஒப்பிடுவது? ‘வள்ளுவர் கடல்’; வைரமுத்து குட்டை’’ என்று முடித்திருந்தார்.

அறிக்கை வந்த அடுத்த வாரம் அதே கவிஞரின் தலைமையில் ஒரு நூல் வெளியீட்டு விழா. நானும் அதில் சொற்பொழிவாளன். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று மன்றம் முழுக்க நிலவியது ஒரு மயான அமைதி. நான் எழுந்தேன். ஒலிபெருக்கி முன்னால் முப்பது நொடிகள் மௌனம் காத்தேன்; பிறகு பேசினேன்.

‘‘வள்ளுவர் முதல் வைரமுத்து வரை’ என்று ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதை ஏற்பதோ எதிர்ப்பதோ அவரவர் உரிமை. அறிக்கை வெளியிடுவது அவரவர் திறமை. ஆனால் அறிக்கையில் பொய் சொல்லக்கூடாது. அறிக்கை வெளியிட்டவர் ‘வைரமுத்து குட்டை’ என்று முடித்திருக்கிறார். நீங்களே சொல்லுங்கள். நானா குட்டை? இங்கிருக்கும் கவிஞர்களில் நான்தானே உயரம்?’’ என்றேன். இறுக்கமாயிருந்த அரங்கம் இன்னிசையாய் சிரித்தது.

சில எதிர்ப்புகள் திருத்திக்கொள்ள; பல எதிர்ப்புகள் சிரித்துக்கொள்ள.

க.சோமசுந்தரம், குடியாத்தம்.

‘‘எச்சத்தால் காணப்படும்’’ என்கிறாரே வள்ளுவர்! அது என்ன எச்சம்?

நீ இல்லாத இடத்திலும், காலத்திலும் உன் பெருமையோ, சிறுமையோ பேசும் நுண்பொருளோ பருப்பொருளோ உன் எச்சம்.

ஜான். புஷ்பராஜ், சீர்காழி.

தமிழ்த் தொலைக்காட்சிகளில் நீங்கள் கூர்ந்து கவனிக்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?

சன் டி.வி. _ சென்றவார உலகம்

ஜெயா டி.வி. _ தேன் கிண்ணம் (கறுப்பு வெள்ளைப் படப் பாடல்கள்)

விஜய் டி.வி. _ நீயா? நானா?

ராஜ் டி.வி. _ செய்திகள்

மக்கள் தொலைக்காட்சி _ நீதியின் குரல்.
என். உஷாநந்தினி, மண்ணச்சநல்லூர்.

கதாநாயகர்களுக்கு நீங்கள் எழுதிய பாடல்களில் பிடித்த பாடல்களைச் சொன்னீர்களே… கதாநாயகிகளுக்கு?

பத்மினி _ பூவே பூச்சூட வா (பூவே பூச்சூட வா),

சரோஜாதேவி _ சின்னக்கண்ணா (தாய்மேல் ஆணை),

லட்சுமி _ கட்டிக் கரும்பே கண்ணா (சம்சாரம் அது மின்சாரம்),

சுஜதா _ தாலாட்டு மாறிப்போனதே (உன்னை நான் சந்தித்தேன்),

ஸ்ரீப்ரியா _ தேர்கொண்டு சென்றவன் (எனக்குள் ஒருவன்),

ராதிகா _ தென்கிழக்குச் சீமையில (கிழக்குச் சீமையிலே),

சரிதா _ கண்ணான பூ மகனே (தண்ணீர் தண்ணீர்),

அம்பிகா _ பாடவா உன் பாடலை (நான் பாடும் பாடல்),

ராதா _ ராசாவே ஒன்ன நம்பி (முதல் மரியாதை),

சுஹாசினி _ நானொரு சிந்து (சிந்துபைரவி),

பூர்ணிமா _ சாலையோரம் சோலை ஒன்று (பயணங்கள் முடிவதில்லை),

ரேவதி _ வான்மேகம் (புன்னகை மன்னன்),

பானுப்ரியா _ நாடோடி மன்னர்களே (வானமே எல்லை),

ஊர்வசி _ சிறிய பறவை (அந்த ஒரு நிமிடம்),

குஷ்பூ கொண்டையில் தாழம்பூ (அண்ணாமலை),

ரோஜா _ ஆசை கேப்பக்களிக்கு ஆசை (தமிழ்ச்செல்வன்),

ஷோபனா _ முத்தம் போதாதே (எனக்குள் ஒருவன்),

நதியா _ அன்புள்ள அப்பா (அன்புள்ள அப்பா),

அமலா _ புத்தம் புது ஓலைவரும் (வேதம் புதிது),

மதுபாலா _ சின்னச் சின்ன ஆசை (ரோஜா),

நக்மா _ தங்கமகன் இன்று (பாட்ஷா),

மனிஷாகொய்ராலா _ கண்ணாளனே (பம்பாய்),

ஐஸ்வர்யாராய் _ நறுமுகையே (இருவர்),

சிம்ரன் _ இன்னிசை பாடிவரும் (துள்ளாதமனமும் துள்ளும்),

ஜோதிகா _ திருமண மலர்கள் (பூவெல்லாம் உன் வாசம்),

ஷாலினி _ சிநேகிதனே (அலைபாயுதே),

யுக்தா முகி _ யுக்தா முகி (பூவெல்லாம் உன் வாசம்),

ரீமாசென் _ ஆரிய உதடுகள் உன்னது (செல்லமே),

த்ரிஷா _ நீ யாரோ? நான் யாரோ? (ஆய்த எழுத்து),

மீனா _ தில்லானா தில்லானா (முத்து),

சௌந்தர்யா _ நகுமோ (அருணாசலம்),

சுஷ்மிதாசென் _ சோனியா (ரட்சகன்),

கஜோல் _ பூப் பூக்கும் ஓசை (மின்சாரக் கனவு),

மீனாட்சி சேஷாத்ரி _ குளிச்சாக் குத்தாலம் (டூயட்),

ஷில்பாஷெட்டி _ தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை (மிஸ்டர் ரோமியோ),

சிநேகா _ காடுதிறந்தே கிடக்கின்றது (வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்),

மீராஜாஸ்மின் _ சண்டக்கோழி (ஆய்தஎழுத்து),

அசின் _ மனமே மனமே (உள்ளம் கேட்குமே).

சட்டென்று நினைவுக்கு வந்தது இவ்வளவுதான்; விட்டுபோனவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்..

கே: வாழ்க்கை என்பது?
ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம்.

கே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்?
ப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.”

கே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?
ப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்;

காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்;

அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்;

நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்;

கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்;

மூத்த சவரத் தொழிலாளி;

விதவைகளின் மாமியார் மற்றும்

விலைமகளின் தாயார்.

Sun TV – Ganesh Chathurthi special programs

இது work in progress. எப்பொழுது பார்த்து முடிக்கிறேனோ அதுவரை இற்றைப்படுத்தப்படும்.

1. சிறந்த நன்றியுரை: ‘சிவாஜி’ திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கர்.

மொட்டை பாஸ் தலையில் தட்டுவதற்கு தேவைப்பட்ட உழைப்பைக் கோடிட்டு காட்டி, ஒரு செகண்டுக்கு இவ்வளவு மினுக்கிட்டால், 12,000 விநாடிக்கு எவ்வளவு உழைத்துக் கொட்டியிருப்பார் என்பதை மேஜிக்கலாக ரியலைஸ் செய்யவைத்தார்.

மொட்டைத் தலையில் அதிறும் அந்த ஒலி, பில்லியர்ட்ஸ் பந்து அடித்தவுடன் ஏற்படும் நாதமும் தபலாவின் சத்தமும் இணைந்தது.Kaanal Neer Ritheesh Singapore Best Actor

2. சிறந்த நடிகை: சிங்கப்பூர் கலைவிழா தொகுப்பாளர் அனு ஹாஸன்

‘கானல் நீர்’ திரைப்படத்தில் நடித்து உள்ளங்கவர் கள்ளனாக, புது முக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரித்தீஷைப் பாராட்டி ஒன்றைரை நிமிடம் நக்கல் வெளிப்படாமல், நையாண்டி எட்டிப்பார்க்காமல் பேசியதற்காக வழங்கப்படுகிறது.

3. சிறந்த பேச்சாளர்: மொக்கை பேசினார் சேரன்

பேசினார். பேசியதையேத் தொடர்ந்து அலுக்காமல் பேசினார். பேசிக் கொண்டிருக்கிறார். கேள்விகளும் படு திராபை ரகம். ஆனந்த விகடன் மாதிரி வாயில் வார்த்தை வரவழைக்கும் கலையை எப்பொழுதுதான் தமிழ் வெள்ளித்திரைகள் கற்றுக் கொள்ளுமோ!

4. சிறந்த பேச்சாளினி்: ஜூனியர் ‘ஸ்னேஹா’ ஷெரின்

ஸ்னேஹா போல எந்த டாபிக் கொடுத்தாலும் கருத்து இருக்கிறதோ, விஷயம் தடவலோ, தட்டித் தடுமாறாமல் பேசுகிறார். ‘திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபியிடம் உதவி நெறியாளராக சேர்ந்துவிட்டார். சுகாசினியைத் தொடர்ந்து இன்னொரு கதாநாயகி ↔ இயக்குநர்.

5. சிறந்த நிகழ்ச்சி: சத்யராஜூடன் பேட்டி

கேள்வி: ‘நமீதா உங்களுடன் பல படங்கள் நடித்தது பற்றி?’

சத்யராஜ்: ‘அவங்க என் கூட நடிக்காம இருக்கிறதுதான் அவங்களுக்கு பெட்டர். என்னை மாதிரி வயசான ஆளுங்களோட நடிச்சா மார்க்கெட் அவுட்னு அர்த்தம்.

ஆன்டன் பாலசிங்கமாக நடிக்க ஆசை என்றார். குளிர் கண்ணாடியுடன் நேர்காணல் தொடுத்தவரை ‘ஹீரோயினை சைட் அடிக்க போட்டிருக்கீங்களா!’ என்று எதார்த்தமாய் கால்வாரினார். சம்பிரதாய கேள்விகளுக்குக் கூட அவரின் பாமர பதில் தவறவிடக் கூடாத நிகழ்ச்சியாக்கியது.

‘சிவாஜி’யில் காசிமேடு ஆதிக்கு கதாபாத்திரத்தின் கனம் கம்மி என்றார். நான் நடித்தால் பதிலுக்கு பதில் எகத்தாளமாய் ‘என்ன அதிறுது? சும்மா சவுண்ட் விடாதஜி’ என்று போட்டுத் தாக்கினால்தான் சரிப்படும் என்று இயல்பாகப் பேசினார்.

6. சிறந்த ஆட்ட கலைஞர்: நடன இயக்குநர் ராம்ஜி

ரஜினியை மிஞ்சும் நடனம் என்று விளித்தால் அது ராம்ஜிக்கு வஞ்சப்புகழ்ச்சியாகி விடும். பரபரப்பு, துள்ளல், grace கலந்த நளினம் எல்லாம் உண்டு. துவக்க ஆட்டத்தில் மேற்கத்திய ஆட்டமும் சாஸ்திரீய சங்கீதமும் கலந்து வித்தியாசமும் உண்டு.

7. சிறந்த ஆட்டக்காரி: one film flopper ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ அபர்ணா

மஸ்தானா மஸ்தானா‘வில் வந்திருக்க வேண்டியவர். ஒற்றைநாடி தேகமாக இருந்தும் மூச்சு வாங்கல் இருக்கட்டும்; உடம்பையாவது லூசாக வைத்து ஆடியிருக்கிலாம். கலக்கல் ஆட்ட அமைப்பை (dance choreography) மிரட்சியுடன் ஆடி அப்பீட்டானார்.

8. சிறந்த ஆடை அலங்காரம்: ‘காதல்’ சந்தியா

தொப்பை என்பது தமிழ் ரசிகர்களின் கனவுப் பிரதேசம். பத்மினி ஆரம்பித்து நயன் தாரா, நமீதா வரை போஷாக்கான காம்ப்ளான் கேர்ள்களை ரசிக்கும் கோலிவுட் உலகம். இருந்தாலும், கொழுப்பு மட்டும் திரட்சியாகத் தனித்துத் தெரியுமாறு ஆடை அணிவது, மில்ஸ் அண்ட் பூன் படிக்கும் chick- இடம் யூமா வாசுகி நாவலை படிக்க வைக்கும் கொடூரம்.

அரசைப் போற்றுதுமே → பரிசை பெற்றதுமே

2005 Dinamalar Best Pictures Cinema Tamil Nadu Film Awards

Movies to watch (Netflix)

1. No End in Sight

2. Rocket Science

3. Alice Neel

4. Superbad

5. The Devil came on Horseback

6. Blame it on Fidel

சரிகா – அன்றும் இன்றும்

திரைக்குப் பின் விருது

ஆண்டு: 2000

தேசிய விருது: சிறந்த ஆடை வடிவமைப்பு

படம்: ஹே ராம்

சரிகா & கமல் – பிரிவு: மார்ச் 24, 2002

திரைக்கு முன் விருது

ஆண்டு: 2006

தேசிய விருது: சிறந்த நடிகை

படம்: பர்சானியா

இந்தியன், நாயகன், மூன்றாம் பிறை படங்களுக்காக சிறந்த நடிகர் விருதை கமலஹாசன் பெற்றிருக்கிறார்.

Recent Movies

1. ஹஸாரோ க்வான்ஷேன் ஏஸி குறித்து ஏற்கனவே எழுதியாச்சு. எழுதுவதை விட செயலில் எதையாவது செய்யத் தூண்டும் படம். சஞ்சய் காந்தி, இந்திரா காந்தி எல்லாம் தெரிகிறார்கள். முக்கிய மூன்று பாத்திரங்களும் வாழ்ந்திருக்கிறார்கள். தவறவிடக் கூடாத படம்.

டெல்லி, புரட்சி, இளமை, காதல், நட்பு, பரிவு என்று நிறைய பழக்கமான விஷயங்களை, பழக்கமில்லாத விதத்தில் அறிமுகம் செய்து வைக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து முடித்தவுடன் இந்திரா பார்த்தசாரதியின் ‘சுதந்திர பூமி’யைக் கையிலெடுத்தால், தமிழகச் சூழலும் இந்திய நோக்கும் இடஞ்சுட்டி பொருள் கொள்லலாம்.

2. சீனி கம்: தபு அழகு என்றால், அமிதாப் அழகனாய் ஜொலிக்கிறார். ராட்டடூயி பார்த்த ஜோருடன் இன்னொரு சமையல் நிபுணர் குறித்த படம். இளையராஜாவின் இசை. பளிச் பளிச் வசனங்கள். தன்னைவிடப் பெரியவரை கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறேன் என்று மகள் சொன்னவுடன் தெளிவாகப் பதறும் பரேஷ் ராவல்.

உன்னாலே உன்னாலே கூட இவ்வாறு ஜொலித்திருக்க வேண்டிய படம். ஆனால், இங்கு்கு காணப்பட்ட ஆழமான விவாதங்களை வளர்க்கும் சிந்தனைகளுக்கு பதிலாக இன்டெர்னெட் ஜோக்குகளைத் தோரணம் கட்டியதால் எந்த வசனமும் எஸ்.எம்.எஸ். தாண்டி பயனற்றுப் போகிறது. சீனி கம்-மில் படம் முடிந்த பிறகும் தனக்குள்ளே எண்ணங்களைக் கிளப்பி அசை போட்டு சுவைக்க வைத்திருக்கிறார் பால்கி.

3. நகாப்: சிவா சொல்லி இருக்காரே… என்று குருட்டு நம்பிக்கையில் அச்சத்துடன் பார்க்க ஆரம்பித்த படம். இப்படித்தான்… முன்பொருமுறை, இணையம் சாராத நண்பர் ‘சுப் சுப்கே‘ பாருங்க என்று சொல்லி, (அது விவேக்கிடம் இருந்து ‘சொல்லி அடிப்பேன்’ என்று வருகிறதாமே!) பார்க்க ஆரம்பித்து நொந்த பயத்துடன் பார்க்க ஆரம்பித்தோம்.

ஏமாற்றாத திருப்பங்கள். சுவாரசியமான கடகட திரைக்கதை. அக்ஷய் கன்னா ரசிகன் என்பதால் எதற்கும் குறைவில்லாத கலக்கல் படம்.

பாவம்… கிட்டத்தட்ட இதே மாதிரி தடாலடி திருப்பங்களுடன் ஆக்சன் த்ரில்லர் கொடுத்தவர், ‘ஆன் தி லாட்‘ நிஜ நாடகத்தில் அமெரிக்கர்களிடம் வாக்கிழந்து, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பையும் கோட்டை விட்டார் Catch By: Mateen Kemet என்னும் அந்தத் திரைப்படத்தைக் காண இங்கு செல்லவும்). அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்தால், என் போன்ற ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும்.

4. நான் அவன் இல்லை: ரொம்ப குறைவான எதிர்பார்ப்புடன் பார்க்க ஆரம்பித்த படம். அதனாலோ என்னவோ பிடித்திருந்தது. ஏற்கனவே எல்லாக் காட்சிகளும் சன் டிவியில் காட்டியிருந்தாலும் ஜாலியான படம்.

சில விமர்சனங்கள்:

5. கோதாவரி: சாதாரண தெலுங்குத் திரைப்படம். இருந்தாலும் அரசியல்வாதியாக நேர்காணல். கல்யாணத்துக்கு முந்தைய மண-மனபயங்கள். முழு நிலவும் வெள்ளை ஆடையும் கொண்ட அக்மார்க் இந்திய சினிமாக் காதல். படகுப் பயணம். நாய் சொற்பொழிவாற்றல் என்று ஏதோவொன்று கனெக்ட் ஆகி கலக்கி இருக்கிறார்கள். தைரியமாக பார்க்கலாம். பத்ராசலம் cruise போகணும்னு ஆசை வரும்.

பாதியில் தூங்கிப் போனால் என்னைத் திட்ட வேண்டாம். நண்பர் இந்தப் படத்தை அனுதினமும் இரவில் போட்டு, கண்ணயர்ந்தால், சொப்பனங்களில் தெளிந்த நீரோடையாக நிம்மதி பிறக்கும் என்றார். பாடல்கள் அவ்வளவு ரம்மியம்.

ஒரு கூடை ரீமேக்

சிலகம்மா செப்பந்தி‘ என்ற தெலுங்குப் படத்தில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் ஜோடியாக நடித்தனர். இது ‘அடிமைகள்‘ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். மலையாளத்தில் சாரதா நடித்த கேரக்டரில் தெலுங்கில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். கே.பாலசந்தர் மேற்பார்வையில் ஈரங்கி ஷர்மா டைரக்ட் செய்திருந்தார்.

இந்த தெலுங்குப் படமும் வெற்றி பெற்றது. இதையே தமிழில் கே.பாலசந்தர் உருவாக்கினார். தெலுங்கில் ரஜினி நடித்த கேரக்டரில் தமிழில் கமலஹாசனும், ஸ்ரீபிரியா நடித்த கேரக்டரில் ஷோபாவும் நடித்தார்கள். தமிழிலும் படம் வெற்றி பெற்றது.

எந்தப் படம்?

கொசுறு:

இந்தியில் “ராம் கு கா லட்சுமண்” என்ற பெயரில் ரந்திர்கபூர், சத்ருகன் சின்கா, ரேகா நடித்த படத்தின் தமிழ்ப் பதிப்பு வி.சி.குகநாதன் டைரக்ட் செய்த ‘மாங்குடி மைனர்‘. விஜயகுமார்தான் ‘மாங்குடி மைனர்’! இந்தியில் சத்ருகன் சின்கா ஏற்றிருந்த வேடத்தை தமிழில் ரஜினி ஏற்க, ரேகா கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார்.