அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது?
எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு?
எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு?
நன்றி: Obamaland and McCainland
அமெரிக்கா எவ்வாறு வாக்களித்துள்ளது?
எந்தப் பகுதிகள் ஒபாமா ஆதரவு?
எந்தப் பகுதிகளில் மெகயின் ஆதரவு?
நன்றி: Obamaland and McCainland
இவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்
தொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்
நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு வித அழகுடன் மின்னும். மழைக்காலத்து சிக்னல்கள் என் மனதுக்குப் பிடித்த ஒரு காட்சி.
மழையில் நனைந்த சிக்னலனின் ஈரமான சிவப்பை ரசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தீடீரென நாளைக்கு எலக்ஷன் நாள் என்பது உறைத்து இடது புறம் இருந்த ஓட்டுச் சாவடியாகிய தீயணைப்பு நிலையத்தை நோக்கினேன். சாதாரண நாட்களில் கூட ஒரு சில தீயணைப்பு வண்டிகள் பள பளவென வெளியில் நிற்க ஆளரவம் தெரியும் அந்த நிலையமோ. மழையிலும் இருட்டிலும் அநேகமாக காணாமலேயேப் போயிருந்தது. இந்த இடத்திலா நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று. எந்தவித பரபரப்பும் இன்றி இருட்டில் கிடந்தது அந்த தீயணைப்பு நிலையம்.
மழையில் ஊறிய பச்சை மிளிர, கார் முன்னே செல்ல என் நினைவுகள் மெல்ல பின்னே சென்றன. தேர்தல் என்பது இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான பண்டிகைகளில் தேர்தலும் ஒரு திருவிழாவக மாறிப் போன கால கடத்தில் பல தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன்.
நம் மக்களுக்கு பரபரபுத் தீனி போடவும், கொண்டாடவும் வம்பு பேசவும் வாய்ப்பளிக்கும் மற்றொரு திருவிழாவாக மட்டுமே நம் தேர்தல்கள் இயங்கி வருகின்றன. உபரியாக தேர்தல் தினங்கள் கிரிமினல்களை உற்பத்தி செய்யும் தினமாகவே மாறி வருகின்றன. தேர்தல் கமிஷன்களின் கெடுபிடியால் திருவிழாவின் உற்சாகம் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.
இருந்தாலும் சிறு வயதில் தீபாவளியைப் போலவே தேர்தல் தினங்களும் உற்சாகமளிக்கும் தினங்களாகவே இருந்தன.
நிச்சயம் இந்த அமெரிக்க ஓட்டுச் சாவடி போல களையிழந்த ஒரு ஓட்டுச் சாவடியை இந்தியாவின் மனித நடமாட்டமில்லாத காட்டுப்புற ஓட்டுச் சாவடிகளில் கூடக் காண இயலாதுதான். வாக்குச் சாவடிகள் என்றுமே பரபரப்பான ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் இடங்களாகவே உள்ளன. ட்யூப் லைட்டுக்கள், துப்பாக்கிகளுடன் போலீஸ்காரர்கள். கலவரப் பகுதிகளில் சட்டித் தொப்பி போலீஸ்கள், பூத்தைச் சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும் கட்சிக் காரர்கள், மறுநாள் தேர்தலை நடத்த முந்திய நாளே வந்திருந்து
பள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அவர்களுக்கு உபசாரம் செய்ய டீக் கடைகள், வரிசை, வரிசையாக வந்து ஏற்பாடுகளைச் சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகளின் ஜபர்தஸ்துகள், போலீஸ்காரர்களின் விரட்டல்கள் என்று பூத்கள் மறுநாள் மர்மத்தைத் தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் ப்ரபரப்பான இடங்களாக்வே இருக்கும்.
தேர்தல் தினத்தன்று ஓட்டுச் சாவடிக்கு 200 அடிக்கு முன்னாலேயே கீற்றினால் வேயப் பட்ட கட்சி அலுவலகங்கள் பரபரப்பாக இயங்கும். கரை வேட்டித் தொண்டர்கள் கைகள் கூப்பி வரவேற்றுக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஓட்டருக்கும் கட்சி சின்னம் பொறிக்கப் பட்ட சின்ன ஸ்லிப் தயார் செய்வது சரிபார்ப்பது அவற்றை வீடுகளில் கொண்டு கொடுப்பது, என்று தேர்தலுக்கு முந்திய நாளும் தேர்தல் நாளும் பரபரப்பாக இயங்கும் தினங்களாகவே இருக்கும்.
வேட்பாளர்கள் கடைசி கடைசியாக வீடு வீடாகப் போய் ஓட்டுச் சேகரிப்பதும் மும்முரமாய் அந்த இரு தினங்களே நடக்கும். வயதான பாட்டி தாத்தக்களை காரில் அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பது தனி காமெடியாக இருக்கும். முக்கியமாக தேர்தல் தினங்களில் விடுமுறை இருக்கும். யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கணவன்மார்களால் மனைவிகளுக்கு நினைவுறுத்தப் பட்ட படியே இருக்கும்.
கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு என்ற சிறுகதையில் மாமியாருக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன மருமகள் நினவுக்கு வருகிறது. ஓட்டுப் போடும் தினத்தன்று ஃபார்முலா தமிழ் படங்கள் போலவே வெட்டு குத்து கொலை போன்ற வயலன்ஸ் காட்சிகளுக்கும் நம் தேர்தல்கள் குறை வைப்பதேயில்லை. சமீப காலங்களாக தெலுங்குப் படங்களை நிறுவுத்தும் காட்சிகளை தமிழினத் தலைவரும் அவரதம் புத்திரபாக்கியங்களும் குறையில்லாமல் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரபரப்பு மிகுந்த ஒரு மசாலா படத்திற்கு இணையானதாகவே இருந்து வருகிறது.
அமெரிக்காவில் ஓட்டுப் போடும் இடம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் தெருவில் தீயணைப்பு நிலையம். பள்ளிக் கூடம், அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாது யார் வீட்டு கார் நிறுத்தும் காரேஜ் கூட ஓட்டுச் சாவடியாக உருமாறி விடுகிறது. தேர்தல் நாளன்று காலையில் வந்து ஓட்டுப் பெட்டிகளையும் இன்ன பிற சாதனங்களையும் சாவகசாமாகக் கொண்டு வைத்து விடுகிறார்கள்.
இங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் தவிர வேறு யார் யார் நிற்கிறார்கள் என்பதை நாம் தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில போட்டியாளர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி வீட்டுக்குப் ஃபோன் போட்டு ஓட்டுக் கேட்க்கிறார்கள். மற்றவர்கள் சின்னதாக ஒரு சில இடங்களில் போர்டுகள் வைப்பதுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள்.
தாரை தப்பட்டை, ரெக்கார்ட் டான்ஸ், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை முன்னே வர வேட்டிகளும் துண்டுகளும் தரையைத் துடைக்க வரும் வேட்ப்பாளர்களை இங்கு காண முடிவதில்லை. இங்கு தேர்தல்கள் டி வி யில் தொடங்கி டி வி யிலேயே முடிந்து விடுகின்றன. உற்சாகத் திருவிழாக்கள் காணக் கிடைப்பதில்லை. தலைவர்களின் திருமுகங்கள் டி வி யில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.
இந்தியாவில் தேர்தல் திருவிழாவின் பொழுதுதான் தலைவர்கள் வெளியே வருவார்கள். ஐந்தாண்டுகள் ஓய்வில்லாமேலேயே ஹைதராபாத் தோட்டத்திலும் கொடநாட்டுப் பங்களாவிலும் ஒயாது ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா கூட தேர்தல் திருவிழாக்களின் பொழுது மக்களுக்குத் தரிசனம் தரத் தவறுவதேயில்லை. தலைவர்கள் மட்டும் என்ன சிவாஜி, எம் ஜி ஆர் தொடங்கி தவக்களை குமரி முத்து வரை நடிகர்களையும் அருகில் இருந்து பார்க்கக் கிடைக்கும் தருணங்களும் இந்தத் திருவிழாக்கள்தானே?
சிவாஜி என்றால் சிவப்பு, பச்சை, மெரூன், அல்லது ஊதா நிறத்தில் பட்டில் செய்த இறுக்கமான ஜிப்பா அணிந்து வருவார். எம் ஜி ஆரோ பள பளக்கும் வெள்ளை வேட்டி சட்டையில் புசு ப்சு தொப்பியும் ஒரு இஞ்சு ரோஸ் பவுடருமாக தரிசனம் தருவார். இன்னும் பல தலைவர்கள் ஜீப்புகளில் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று வரும் பிம்பங்களாகவே மனதில் பதிந்து போய் விட்டனர்.
காமராஜர், அண்ணாத்துரை, ராஜாஜி, ஜூப்பில் இருந்து ஊன்று கோலோடு இறங்கிய பி.ராமமூர்த்தி துணையாக ஏ பாலசுப்ரமணியன் போன்ற தலைவர்கள் அவர்கள் நின்று வரும் ஜீப்புடன் சேர்ந்தே என் மனதில் பதிந்து உறைந்து போயினர். இந்திரா என்றால் தலையில் கட்டிய ஸ்கார்ஃப் பட படக்க கூலிங் கிளாசுடன் கன்வெர்டிபிள் காரில் பறந்து செல்லும் படிவம், ராஜீவ் என்றால் ஜிப்சி ஜூப்பில் தொங்கிக் கொண்டு போகும் உருவம், ஜெயலலிதா என்றால் டாட்டா சுமோவில் கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு கையசைக்கும் தோற்றம் என்று வாகனங்களை விலக்கித் தலைவர்களின் உருவங்களை மனக்கண் முன் கொண்டு வர முடிவதேயில்லை. அது போல வாகனங்களில் விரைந்து செல்லும் தரிசனங்களைக் கூட இங்குள்ள தலைவர்கள் தருவதில்லை.
பல்லாயிரம் வாட்ஸ் ஃபோகஸ் லைட்டுக்களின் வெளிச்சத்தையும் மீறி பளீரென்று தோன்றிய அழகி ஜெயலலிதாவின் முகத்தை முதன் முறை கண்ட நினைவை இன்றும் என்னால் மறக்க முடிவதேயில்லை. தமிழ் நாட்டில் எந்தவொரு நடிகைக்கும் இல்லாதிருந்த தோரணை அது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப் போட்டேன் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை 🙂
அதே அழகும் கவர்ச்சியும் இன்று சாராப் பெல்லனிடம் இங்கு காண்கிறேன். ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிவு மட்டுமே இவரிடம் மிஸ்ஸிங். மற்றபடி இவர ஒரு ஜெயலலிதாவின் க்ளோனாகவே தோன்றுகிறார்.
ஒரு முறை தாசில்தார் ஒருவர் ஓட்டுச் சாவடி அமைப்பதற்காக மேற்உத் தொடர்ச்சி மலைக்குச் செல்ல நேர்ந்ததையும் யானை துரத்தியதால் வெகு நேரமாக பதுங்கிக் கிடந்ததையும் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டி விட்டார். யானைகள், சிறுத்தைகள் அதிகம் உள்ள தொலை தூர மலைக் கிராமம் அது. இந்தியத் தேர்தலகள் இது போன்ற சாகசங்களையும் உள்ளடக்கியது.
என் பக்கத்து வீட்டுக்காரர் எலெக்ஷன் டூட்டிக்காக ஒரு ஊருக்குப் போய் விட்டு ரெண்டு கட்சிக்காரர்களுக்குள் சண்டை வந்து விட ஓட்டுப் பெட்டிகளுடன் தூக்கிப் போட்டு இவரையும் கொளுத்த இருந்திருக்கிறார்கள்,. பத்து மைல் தூரம் ஓடி வந்து உயிர் பிழைத்த கதையை இன்றும் சொல்வார். தேர்தல் வேலைக்குப் போவது அப்படி ஒன்றும் சுவாரசியமான காரியமோ, பாதுகாப்பான காரியமோ கிடையாது. உயிருக்கு உத்தரவாதமில்லாத ஓட்டுச் சாவடிகள் இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளன. உயிர் பலி விழாமல் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட இந்தியாவில் நடத்தி விட முடியாது.
பழைய நினைவுகளுடன் வீடு வந்து உறங்கி காலையில் சற்றுச் சந்தேகத்துடனேதான் ஓட்டுச் சாவடிக்குச் சென்றேன். ராத்திரி ஒருவரைக் கூட காணுமே இன்றைக்கு நிஜமாகவே இந்த இடத்தில் எலக்ஷன் நடக்குமா என்றொரு சம்சய்த்தோடுதான் சென்றேன்.
வீட்டிலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலேயேதான் ஓட்டுச்சாவடி (ஓட்டுப் போட்டால் சாவடிப்பார்கள் என்று எவ்வளவு முன்யோசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்) இருந்தது, காலையில் ஒரு எட்டரை வாக்கில் நடந்தே சென்றோம். வழி மறித்து யாரும் ஓட்டுக் கேட்க்கவில்லை. தோரணங்கள் இல்லை. கொடிகள் இல்லை. ஆரவாரங்கள் இல்லை. ஸ்லிப் கொடுக்க ஆளில்லை.
வயதானவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வரவில்லை. கரை வேட்டிகள் இல்லை. பட்டா பட்டி டவுசர்கள் இல்லை, அம்மா இரட்டை இலைக்குப் போடுங்க, ஐயா உதய சூரியனுக்குப் போடுங்கள் என்ற கெஞ்சல்கள் இல்லை. அப்படி ஒரு பேரமைதி,.
தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு நூறடி தூரத்தில் ஒரு பெண் ப்ரோபிஷன் 8 க்கு நோ என்று ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுத்தார்.
ஃபையர் ஸ்டேஷன் முன்னால் சோம்பலாக ஒரு இருபது பேர்கள் வரிசையில் நின்றார்கள்.
அங்கிருந்த ஒரு வாலண்டியரிடம் ஏனுங்க நிஜமாகவே எலக்ஷன் நடக்குதுங்களா என்றேன். ஏன் சந்தேகம் என்றவரிடம் ஒரு போலீசைக் கூடக் காணோமே என்றேன். போலீசா? அவர்கள் எதற்கு என்று சற்றே மிரண்டு போய் என்ன ஏற இறங்கப் பார்த்தார்.
வரிசையில் நகர்ந்து உள்ளே போனோம். முதல் முறையாக ஒரு தீயணைப்பு நிலையத்திற்குள் நுழைந்தேன். உள்ளே எஞ்சினீயரிங் காலேஜ் ஹைட்ராலிக்ஸ் லாப் போல இருந்தது. சுற்றி உயர உயர ஏணிகளை சாத்தியும் நிறுத்தியும் வைத்திருந்தார்கள். மேலே ராட்சச மஞ்சள் வண்ன தண்ணீர் ஹோஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஃபயர் ஸ்டேஷனில். இருந்த ரெண்டும் எஞ்சினையும் வெளியே டிரைவ் வேயில் கொண்டு போய் நிறுத்தி உள்ளே ஓட்டுப் போட இடம் தயார் செய்து வைத்திருந்தார்கள்.
எலக்ஷனை நடத்தியதும் தொண்டர்களே. அரசாங்க அதிகாரிகள், ஜீப்புகள். ஜபர் தஸ்துகள், கலெக்டர், எஸ் பி விசிட்கள் ஏதும் கிடையாது. நிறைய பேர் குழந்தைகளையும் வேடிக்கை காண்பிக்க அழைத்து வந்திருந்தனர். எனக்கு முன்னால் நின்ற கருப்புப் பெண்மணி தன் பையனையும் பள்ளிக் கூடத்துக்குப் பெர்மிஷன் சொல்லி விட்டு அழைத்து வந்திருந்தார். அவர்கள் இனத்தில் ஒருவர் பிரசிடெண்டாகப் போகும் வரலாற்றுத் தருணத்தைத் தன் பையனும் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பரபரப்பு அவரிடம் தெரிந்தது.
எல்லோரிடமும் ஒரு வித தோழமையும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்தது, மாற்றம் வரப் போகிறது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டன அந்தப் புன்னகைகள். அனேகமாக 90 சதம் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடும் கூட்டம் அது. நாங்கள் ஓட்டுப் போடுவதை வேடிக்கைப் பார்க்க சில வயதான இந்தியர்கள் கூடியிருந்தார்கள். யாரையும் யாரும் விரட்டவிலலை. எந்த விதமான கெடுபிடிகளோ பரபரப்புக்களோ இல்லை.
ஒரு பாட்டி என் பெயரைச் சரிபார்த்து இவ்வளவு நீள பெயரை என் வாழ்நாளில் உச்சரிக்க முடியாது டியர் வெரி சாரி என்று சொல்லி, பட்டியலில் இருந்த என் பெயருக்கு மேலாக ஒரு அடிஸ்ஸ்கலை வைத்து பென்சிலால் பெயரை அடித்து விட்டு என்னிடம் வாக்குச் சீட்டைக் கொடுத்தார்.
கையில் மை வைப்பது எல்லாம், இல்லை. ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் அவ்வளவுதான். அதை ஓட்டுச் சீட்டு என்று சொல்வது அபத்தம்,. ரெண்டு பக்கங்களும் 26 தேர்தல்களும் அடங்கிய பெரிய லிஸ்ட் அது. ஜனாதிபதி தேர்வில் ஆரம்பித்து உள்ளூர் முனிசிபாலிட்டி ஸ்கூல் போர்டு வரைக்கும் மொத்தம் 16 பதவிகளுக்கான வாக்கெடுப்புக்களும், ஒரு 10 பிரசின்னைகளுக்கான வாக்கெடுப்புக்களும் நிரம்பியிருந்தன,.
ஜனாதிபதி வேட்பாளர் தவிர பிற பதவிகளுக்குக் குத்து மதிப்பாக ஒரு பெயருக்கு நேர் கோடு போட்டோம். ஆம் பேனாவால் நாம் விரும்பும் பெயருக்கு நேராக ஒரு கோடு கிழிக்க வேண்டும். நம்ம ஊர் மாதிரி முத்திரை குத்துவது எல்லாம் கிடையாது. பல பிரச்சினைகளுக்கான கேள்விகள் குழப்பமான வாக்கிய அமைப்புகளாக இருந்தன.
படித்துப் பார்த்து ஓட்டு போட்டால் சரியாகத் தப்பாகப் போட்டு விடும் விதத்தில் கேள்விகளை மிகப் புத்திசாலித்தனமாக அமைத்திருந்தனர் முட்டாள்கள்.
உதாரணமாக ப்ரோபிஷன் 8: ஓரினபாலர் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கு யெஸ் என்று கோடு கிழித்தால் ஆம் தடை செய்ய வேண்டும் நோ என்பதற்கு நேர் கோடு கிழித்தால் ஓரின திருமணத்தைத் தடை செய்யும் முயற்சியைத் தடை செய்ய வேண்டும் என்று விசு பட வசனம் போலக் கேள்விகள் அமைந்திருந்தன.
இப்படி ஒரு குப்பாச்சு குழப்பாச்சாக ஓட்டுச் சீட்டை வடிவமைத்தால் எப்படி ஜனநாயகம் வெளங்கும்? ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா?, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா? மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா? விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா? உள்ளூர் பார்க்குகளை மேற்பார்வை செய்ய வரி விதிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு பத்து வேண்டுமா வேண்டாமா ஓட்டுக்களுக்கும் வாக்கிழித்தோம்.
இவர்கள் எலக்ஷன் நடத்தும் விதம் அப்படி ஒன்றும் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது டி என் சேஷனிடம் இந்த வேலையை அவுட் சோர்ஸ் செய்து விட வேண்டும். 200 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு எலக்ஷனை ஒழுங்காக நடத்தத் துப்பில்லாத ஒரு தேசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.
நானும் என் மனைவியும் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஆலோசனையெல்லாம் செய்து கோடு கிழித்து, கோடு கிழித்து ஓட்டுப் போட்டுக் கிழித்தோம். எல்லா தேர்வுகளுக்கும் சரியாகத் தப்பாகக் கோடு கிழித்த பின்னால் பூர்த்தி செய்த பாலட்டை ஒரு குப்பைத் தொட்டி போன்றிருந்த மெஷினில் உள்ளே கொடுத்தோம். அது உள்ளே வாங்கிக்க் கொண்டு 111 என்று எனது எண்ணைக் காட்டியது.
காலை 6 மணி முதல் 9 வரை மொத்தம் 111 பேர்கள் போட்டிருந்தனர். பலர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு போஸ்டலில் அனுப்பி விட்டார்கள். நேரில் வந்து போடுபவர்கள் மிகக் குறைவாக இருந்தது. ஓட்டுச் சீட்டை அந்தக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட்வுடன் ஒருவர் ஐ வோட்டட் என்றொரு ஸ்டிக்கரைக் கொடுத்தார்.
அமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியமான தேர்தல் முதல் முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் முக்கிய பதவிக்கு வரப் போகும் எலக்ஷன். வரலாற்றில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்
இவரின் முந்தைய பதிவு: ஒபாமா ஜனாதிபதியானால் என்ன செய்வார்?
இங்கே வாக்களித்து விட்டேன்.
நானும் இன்று வாக்குச் சாவடிக்குப் போனேன். சிறிது மழையில் வீடுகளெல்லாம் நனைந்திருந்தன. நல்ல குளிர். காலை 7.45க்குப் போனால் எப்படி இருக்கும்?
வழக்கமாக வீடுகளெல்லாம் கோடை முடிவதற்குள் வெளிப்பக்கம் அடிக்க வேண்டிய (தேவையாய் இருந்தால்) பெயிண்ட் எல்லாம் அடித்து, கூரைகளை எல்லாம் புதிதாக்கி 90 சதவீதம் வீடுகள் புதுப்பிக்கப் படும் ஒரு பகுதியில் இருக்கிறேன். இந்த வருடம், சென்ற வருடம் போலவே, மக்களின் நிதி நிலை சரியில்லை என்பது தெரிய வர ஆரம்பித்திருக்கிறது. ஒரு தெளிவான வேறுபாடும் புலப்படுகிறது.
காலை இளம் வெயிலில் அந்த ஈரப் பிசுபிசுப்பு உள்ள மெலிய குளிர் காற்றில் நடக்கையில் பல வீடுகள் தம் பொலிவிழந்து காணப்பட்டது புலப்பட்டதில் சிறிது யோசித்ததில் அவை அனேகமாக வயதான மனிதர்கள் வாழும் வீடுகள் என்பது புலப்பட்டது. ஓய்வு ஊதியம், சேமிப்பில் காலம் தள்ளும் மனிதருக்கு வயதானவருக்கு இந்த வருடங்கள் நல்ல வருடங்களே அல்ல.
ஓரளவு பார்க்கப் புதிதாகவும் நல்ல பராமரிப்பிலும் இருந்த வீடுகள் தெருவில் எவை என்றால் புதிதாய்க் குடி வந்தவர்கள், இளம் குழந்தைகள் உள்ளவர்கள், இருவரும் வேலைக்குப் போகும் மனிதர் உள்ள வீடுகள் இப்படி. இன்னும் வேலை பார்க்கும் குடும்பங்களால் இந்தக் கஷ்ட காலத்திலும் அதிகம் பிரச்சினை இல்லாமல் காலம் தள்ள முடிகிறது போலும்.
கூட என் மகள் வந்தாள். கல்லூரியில் இருந்து நேற்று இரவே வந்து விட்டாள்.
ப்ரைமரியில் முதல் தடவையாக வாக்களித்தாள். அவளுடைய மொத்த ஹாஸ்டலும் ஒபாமா என்று தெரிவித்தாள். சிலர் பழமைப் பார்வை உள்ளவர்கள்- மகெய்ன் ஆதரவாளர்கள் உண்டு, ஆனால் ஒபாமாவுக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவால் மௌனம் காக்கிறார்களாம்.
அவளுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிப்பதில் மிக மகிழ்ச்சி, பெருமை. அவளை விட வாக்குப் போட உரிமை பெற பல ஆண்டுகள் இன்னும் இருக்கும் மகனுக்கு ஒரே துடிப்பு, தானும் வருவேன் என்று. அம்மாவோடு போ என்று சொல்லி, பள்ளிக்கு அனுப்பி
வைத்தேன்.
பெயரைக்கேட்டு சிறிது திக்குமுக்காடினார் வாக்காளர் உதவியாளர். வயதானவர். ஒரு பென்சில் டிக் போட்டு விட்டு அடுத்த மேஜையில் வாக்குச் சீட்டு கொடுத்தவரிடம் அனுப்பினார்.
சீட்டு கையில். பெண் ஒரு பூத் போன்ற இடத்தில் எல்லாவற்றிலும் வாக்கு போட்டாள். நான் ஒரு மேஜையில் அமர்ந்து கவனமாகக் குறித்தேன். இருவரும் ஓட்டுப் போட அந்த எந்திரத்துக்கு அருகில் போகையில் ஒரு போலிஸ்காரர், மேஜையில் அமர்ந்து பெயர், முகவரி கேட்டார். சொன்னதற்கு அவரும் ஒரு டிக் போட்டுக் கொண்டார் (நோட்டுப் புத்தகத்தில்).
Optical scanner எந்திரத்தருகே இருந்த பெண்மணி என் மகளிடம் இதுதான் முதல் தடவையா பெண்ணே என்றார். இல்லை, ப்ரைமரியில் வாக்களித்தேன் என்றாள்.
வாக்காளருக்கு உதவி செய்பவர்கள் சார்பின்றி இயங்க வேண்டும் என்று ஒரு விதி உண்டு. என்றாலும் மகளுடைய உற்சாகத்தைப் பார்த்து அவ்ருக்கும் உற்சாகம்.
Exciting isn’t it? என்றார்.
ஏன் அப்படிச் சொல்கிறார் என்று எங்கள் மூவருக்கும் தெரியும். சிரித்து விட்டுத் தலை அசைத்தோம். அந்த எந்திரத்துக்குப் போவதற்குள், ஒரு சர்ச்சுடைய பெரிய சமுகக் கூட்ட அறையான அந்த பெரிய கூடத்தில் நாங்கள் பல கருப்பர்களைக் கடந்தோம். அவர்களில் சிலர் வாக்காளர், சிலர் உதவியாளர். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்
கொண்டோம்.
சொல்லாமல் சொல்வது ஊக்குவிப்பது பாராட்டுவது வாழ்த்துவது எல்லாம் அந்தச் சிறு சிரிப்புகளில் பரிமாறப்பட்டன. அதே பரிமாறல் இந்த நடுவயதைத் தாண்டிய வெள்ளைப் பெண்மணியுடனும் நடந்தது.
வெளியே வந்தோம். சரித்திரம் நிகழ்ந்தது, அதில் நாம் ஒரு சிறு பங்கு வகித்தோம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்த ஒரு அதிசய நேரம் அது.
பதிவர் வாசன் ஓட்டு போட்ட: வாக்குசீட்டு
எட்டாண்டுகளுக்கு முன்பு ஆல் கோருக்கு வாக்களித்தால் ஜார்ஜ் புஷ்ஷுக்கு செல்லுமாறு கோடு போட்ட ஃப்ளோரிடா வாக்குச்சீட்டு வெகு பிரபலம். இவ்வளவு காலம் கழிந்தும் வடக்கு கரோலினா அது போன்ற குழப்பமான வாக்குச்சீட்டுகளை வடிவமைத்திருகிறது.
ஜனாதிபதி தேர்தல், மேல்சபை தேர்தல், எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல், நீதியரசர் தேர்தல் என்று ஒவ்வொன்றாக வாக்களித்துக் கொண்டிராமல் சட்டு புட்டென்று ‘என்னுடைய வாக்கு குடியரசுக் கட்சி‘க்கு என்று முத்திரை குத்துமாறு வாக்குச்சீட்டுகளை அமைப்பது வழக்கம்.
அதே போல்தான் வட கரோலினாவும் தன்னுடைய வாக்குச்சீட்டை நிர்ணயித்துள்ளது.
ஆனால், இந்த மாதிரி குடியரசு/ஜனநாயகம் என்று சொன்ன பின்னும், அதிபர் தேர்தலில் தனியாக இன்னொரு தடவை ஓட்டு போட வேண்டும். இல்லையென்றால், உங்கள் வாக்கு செல்லாது என்பதுதான் ஆன்டி க்ளைமாக்ஸ்.
‘ஒரு தடவை போட்டால் போதுங்க’ என்று சொல்லிவிட்டு, ‘இன்னொரு தடவை குத்தாவிட்டால் உங்க வாக்கு செல்லாதுங்க’ என்று சொல்லும் முன்னுக்குப் பின் முரணான அணுகுமுறை பல செல்லாத வாக்குகளை வரவழைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
முழுவதும் வாசிக்க: Editorial – This Year’s Butterfly Ballot – NYTimes.com: North Carolina’s ballot design is already causing confusion with early voters. If the presidential race is close, it could change the outcome.
மேலும் விவரங்களுக்கு:
1. How Bad is North Carolina’s Ballot Flaw? The Numbers Say, Pretty Bad: Brennan Center for Justice
2. Facing South: Voting Rights Watch: Could confusing ballots swing the presidential election in NC?
3. How Design Can Save Democracy: Interactive Graphic – NYTimes.com: “On Nov. 4, most ballots will repeat design mistakes made in previous elections. Many of these errors are avoidable. This year, the United States Election Assistance Commission released ballot design guidelines. Using these guidelines, we at AIGA developed this feature to identify common design problems and offer improvements”
வாக்கு போட்டாச்சா?
முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)
அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா?
போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.
அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:
நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா?
கிடைக்கிற சம்பளத்தை சுளையாக வீட்டுக்கு எடுத்துப் போக சொல்பவரா? ஈட்டிக்கடைகாரராக பாதி பிடுங்கிக் கொள்பவரா?
மெகயின் வருமான வரிவிலக்கு தருவார் என்பது இரண்டாவது காரணம்.
தொடர்புள்ள இடுகைகள்:
1. அசலாக சொன்ன பத்து காரணங்கள்: ஏன் மெகயின்?
2. அமெரிக்க தேர்தல் களம், பாஸ்கர் – உயிரோசை:
மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது முதலானவை பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு, திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் மெகைன்.
Posted in ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், மெக்கெய்ன், வாக்களிப்பு
குறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, அரசியல், இராக், ஒபாமா, சண்டை, தோல்வி, நிதி, போர், மெகயின், வரி, வருமானம், வெற்றி, Citizens, Common man, Defeat, Economy, Finance, Gulf, Iraq, Mccain, Obama, Polls, President, Tax, Victory, Voters, War
– யாஹு
ஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.
இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
அதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
தேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.
இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.
கவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.
முன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.
அழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.
வாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.
கல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.
வாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.
சாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.
சாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா? குவைத்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.
முன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.
ஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.
பஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
அர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.
4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.
அதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.
இந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
அமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.
அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.
இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
– தினமலர்
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:
கேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே?
பதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.
பாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.
எனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.
அதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
Posted in இந்தியா, உலகம், ஒபாமா, கருத்து, குடியரசு, செய்தி, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், துணை ஜனாதிபதி, பெண், பேலின், மெக்கெய்ன், வாக்களிப்பு
குறிச்சொல்லிடப்பட்டது ஆருடம், இந்தியா, இராக், ஊடகம், ஒசாமா, ஒபாமா, ஒஸாமா, கருத்துக்கணிப்பு, கவர்ச்சி, குடியரசு, க்ளின்டன், சாரா, செய்தி, செய்திகள், ஜனநாயக, ஜி8, தபால், தமிழகம், தமிழ்நாடு, தினசரி, நாளிதழ், பாகிஸ்தான், பாக், புஷ், பெண், பேலின், பைடன், போர், மெகயின், லாடன், வாக்கு. ஓட்டு
அமெரிக்க அதிபர் தேர்தலில் எவர் ஜெயிப்பார் என்பது இழுபறியாக இருந்தாலும், செனேட்டிலும் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசென்டேடிவ்ஸ் எனப்படும் காங்கிரசிலும் சர்வ நிச்சயமாய் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை வெற்றியை தக்கவைத்து, வித்தியாசத்தையும் பெருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொல்லப்போனால், மெகயின் இதை தீவிரமாக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கார்ல் ரோவ் உட்பட பலரும் வலியுறுத்துகின்றனர்.
ஏன் குடியரசுக் கட்சி தோற்கிறது?
1. தற்போதைய குடியரசுக் கட்சி தலைவர் ஜாஜ் டபிள்யூ புஷ்
2. ஜனாதிபதிக்குத்தான் ஒபாமாவுக்கு வாக்களிக்க முடியவில்லை. உள்ளூர் தேர்தலில் மட்டுமாவது ஜனநாயகக் கட்சியைப் பார்த்து குத்துவோம்.
மேலும் விவரங்களுக்கு: G.O.P. Facing Tougher Battle for Congress – NYTimes.com
2008 Election Map – Senate – Election Guide 2008 – The New York Times:
2008 Election Map – House – Election Guide 2008 – The New York Times:
Posted in குடியரசு, குடியரசு-பிறர், ஜனநாயகம், ஜனநாயகம்-பிறர், பொது, வாக்களிப்பு
குறிச்சொல்லிடப்பட்டது காங்கிரஸ், செனேட், மேல்சபை, ஹவுஸ், Candidates, Congress, Democrats, Elections, GOP, Majority, Minority, Polls, Republicans, Senate, States, Votes