ஏ ஆர் ரெஹ்மான் – ஆஸ்கார் விருது


பழசு: That Old Feeling: Isn't It Rahmantic? – TIME: “A.R. Rahman is not just India’s most prominent movie songwriter — in a land of a billion people where movie music truly is popular music — but, by some computations, the best-selling recording artist in history. His scores have sold more albums than Elvis or the Beatles or all the Jacksons: perhaps 150 million, maybe more.”

“Before coming, I was excited and terrified. The last time I felt like that was during my marriage. There’s a dialogue from a Hindi film called “Mere paas ma hai,” which means “I have nothing but I have a mother,” so mother’s here, her blessings are there with me. I am grateful for her to have come all the way. And I want to thank the Academy for being so kind, all the jury members. I want to thank Sam Schwartz, I/D PR, all the crew of Slumdog, Mr. Gulzar, Raqueeb Alam, Blaaze, my musicians in Chennai and Mumbai. And I want to tell something in Tamil, which says, which I normally say after every award which is ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ — “God is great.” Thank you”

“I just want to thank again the whole crew of SLUMDOG MILLIONAIRE, especially Danny Boyle for giving such a great opportunity. And the whole, all the people from Mumbai. The essence of the film which is about optimism and the power of hope in the lives, and all my life I had a choice of hate and love. I chose love and I’m here. God bless”

தொடர்புள்ள பதிவுகள்:

1. Pa. Raghavan | writerpara.com » பா ராகவன் » உலகை வென்ற இசை: அப்போது சொன்ன ‘எல்லா புகழும் இறைவனுக்கே’வைத்தான் இப்போதும் ரஹ்மான் சொன்னார். ஆஸ்கர் மேடையில் அபூர்வமாக ஒலித்த தமிழ்க்குரல். (இது எல்லா முஸ்லிம்களும் சொல்வது. நல்லது எது நடந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் என்பது வழக்கம். அதன் தமிழாக்கமே இது.) ஒன்றல்ல, இரண்டு விருதுகள். மணி ரத்னத்தைப் போலவே ஸ்லம் டாக் மில்லியனரின் இயக்குநர் டேனி பாயில் (Danny Boyle) ரஹ்மான் வாழ்வில் மறக்க முடியாத மனிதராகிப் போனார்.

2. jeyamohan.in » ஜெயமோகன் » ஏ.ஆர்.ரஹ்மான்,ரஸூல் பூக்குட்டி: ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஷாஜி சொல்லும்போது அவரது இசையமைக்கும் முறையைப் பற்றிச் சொன்னார். பாடகர்களிடம் அவர்கள் சொந்தக் கற்பனையை உபயோகித்துப் பாடச்சொல்கிறார் . இசைக்கலைஞர்கள் தங்கள் கற்பனைப்படி வாசிக்கிறார்கள். சிறந்ததைப் பொறுக்கி பொருத்தி அவர் பாடல்களை உருவாக்குகிறார். நா.முத்துக்குமாரும் அதைச் சொல்லியிருக்கிறார். ரஹ்மான் பல்லவி சரணம் என்று மெட்டு கொடுப்பதில்லை. அரைமணிநேரம் அந்த மெட்டை வாசித்தோ பாடியோ கொடுத்து விடுகிறார். அதற்கு எழுதப்படும் பலநூறு வரிகளில் இருந்து சிறந்ததை எடுத்துக் கொள்கிறார்

3. ஷாஜி சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை : முறையாக இசை பயின்றாலும்கூட திலீப் இசைத்துறைக்கு வர விரும்பவில்லை. ஒரு மின்பொறியாளராக வரவேண்டுமென்பதே அவரது விருப்பமாக இருந்தது. ”அப்போது நான் இசைமீது வெறியோடு இருக்கவில்லை. எனக்கு தொழில்நுட்பத்திலேயே ஆர்வமிருந்தது. குழந்தையாக இருந்தபோது எனக்கு சோறுபோடும் தொழிலாக மட்டுமே இசையை நினைத்தேன். அது என் அப்பாவின் அன்றாட வேலை. எனக்கு அதில் தனியான ஆர்வமேதும் இருக்கவில்லை” அவர் சொன்னார்.

திலீபின் இசையார்வம் அவரது தந்தை வாங்கிவைத்திருந்த யூனி வோக்ஸ், க்ளாவியோலின் போன்ற மின்னணு இசை கருவிகளைச் சார்ந்து வளர்ந்தது. அக்காலங்களில் மின்னணு இசைக்கருவிகள் இந்திய இசையில் மிகமிகக் குறைவு. ”என்னால் அந்த கருவிகளில் இருந்து கண்ணை விலக்க முடிந்ததில்லை. தடைசெய்யபப்ட்ட அபூர்வமான விளையாட்டுப்பொருட்களாக அவை எனக்குத் தோன்றின” திலீப் தன் நாளின் பெரும்பகுதியை அக்கருவிகளில் விளையாடுவதில் செலவழித்தார், அதுவே அவரது எதிர்காலத்தை வடிவமைத்தது.

4. Shaji Chennai: A R Rahman: From R K Sekhar to Oscar: It was his jingle composed for advertising Allwyn Trendy wrist watches in 1987 that won Dileep recognition as composer in his own individual capacity. He became a full-time composer of advertisement jingles. He composed music for three hundred advertisements in five years. His jingles became famous. He later commented: “Composing music for jingles created awareness in me about the precision in music. In the few seconds given to us we have to create a mood and convey a message as well. Jingles taught me discipline in music.” The signature tune of Asianet was also composed by him.

5. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான்: எஸ். ராமகிருஷ்ணன்: RAMAKRISHNAN ::: “அவர் எதையும் உடனே மறுப்பதில்லை, மாறாக அவர் தான் யோசிப்பதாக சொல்கிறார். அது போலவே தனது இசை மற்றும் தான் செய்து கொண்டிருக்கும் வேலைகள் பற்றி அதிகம் விவாதிப்பதுமில்லை.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ரஹ்மான் ஆஸ்கார் விருதை கையில் வாங்கியபடியே தமிழில் சொல்லிய நிமிசம் என்னை அறியாமல் கண்கள் ததும்ப துவங்கியது. அது ரஹ்மான் வாங்கிய விருது மட்டுமல்ல. இத்தனை வருடங்களாக இந்திய சினிமா கண்டு கொண்டிருந்த கனவை ரஹ்மான் நிறைவேற்றி காட்டியுள்ளார் என்ற உச்ச சந்தோஷத்தின் வெளிப்பாடு. ”

6. LOSHAN – லோஷன்: எல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..:

பீ.சுசீலா(கண்ணுக்கு மையழகு)
டி.கே.கலா(குளிச்சா குத்தாலம்)
கல்யாணி மேனன்(முத்து படப்பாடல்)
சீர்காழி சிவ சிதம்பரம் (ஓடக்கார மாரிமுத்து,அம்மி மிதிச்சாச்சு)
டி.எல்.மகராஜன்(நீ கட்டும் சேலை)
M.S.விஸ்வநாதன் (மழைத்துளி மழைத்துளி)

7. ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ ஆர் ரஹ்மான் :: கோவி லெனின் – நக்கீரன்: ரங்கீலா உள்ளிட்ட நேரடி இந்திப்படங்களுக்கு அவர் இசையமைத்த விதமும், வந்தேமாதரத்திற்கு புதிய இசைவடிவம் கொடுத்து அதனை இந்தியாவின் இரண்டாவது தேசியகீதமாக்கிய திறமையும் அவரது புகழை உயர்த்தின. ரகுமானே நவீன இந்திய இசையின் அடையாளம் என உலக நாடுகளால் பார்க்கப்பட்டது.

8. சுரேஷ் கண்ணன் :: பிச்சைப்பாத்திரம்: 81வது வருட ஆஸ்கர் விருதில் இந்தியர்கள்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக Best Sound Mixing-க்கான ஆஸ்கர் விருது பெற்ற ராசுல் பூக்குட்டியின் நேர்காணலை சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்த போது “ஒரு திரைப்படம் என்பது பல்வேறு நுட்பக் கலைஞர்களின் கூட்டால் உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால் உள்ள பல கலைஞர்களின் உழைப்பிற்கு வெளிச்சமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை” என்று வருத்தப்பட்டார். “ஸ்லம்டாக் மில்லியனரை விட நான் அதிகம் உழைத்தது ‘Gandhi My Father’ திரைப்படத்திற்கு. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை”

9. கணேசன் செந்தில்குமரன் : கணேஷின் பக்கங்கள்!: ஏ.ஆர்.ரகுமான்-ப‌ரவசம்: “எதில் லைவ்வாக போடுகிறார்கள் என்று தேடிய போது StarMovies ல் ஓடிக் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் ஏதாவது சினிமா விழாக்களில், இங்க்லீஷில் பேசுவதை ஸ்டைலாகவும், பெருமையாகவும் நினைக்கும் ஸ்ரேயாக்களுக்கும், த்ரிஷாக்களுக்கும் கொடுத்த மூக்குடைப்பு.

10. ஒஸ்கார், ரகுமான், விருதுகள், உலகமயமாதல், இந்திய மேலாதிக்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் போர். :: படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்: ரகுமான் இந்திய தேசியத்தினது ஒதுக்கல்களை விமர்சித்தோ அல்லது பாரம்பரிய இந்திய இசைக்கூறுகளை முன்னிறுத்தியோ தனது இசைப்பயணத்தை தொடர்ந்திருந்தால் இந்நிலையை அடைந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இவ்வாறே மாயா அருள்பிரகாசம் தீவிரவாத எதிர் நிலைப்பாட்டை எடுத்தவாறு புலிகளை விமர்சித்திருந்தால் அவருக்கு இந்நேரம் ஒச்கார் கிடைத்திருக்கக் கூடும். ஆளும் வர்க்கங்கள் சில அளவீடுகளைக் கொண்டுள்ளன. அவற்றைத் திருப்தி செய்பவர்களுக்கு மாத்திரமே வளர்ச்சி, புகழ், விருது எல்லாம் சுலபமானவை. மாயாவிற்கான வாய்ப்பு அவரது அரசியல் நிலப்பாடால் தகர்ந்து போயிருக்கலாம் என்பதை நினைத்து வருத்தப்படுவதா அல்லது ரகுமானது அரசியல் நிலைப்பாடற்ற நிலையைக் கண்டு சந்தோசப்படுவதா என்பது அவரவர் நிலைப்பாடு.

இந்தியர்கள் பெரிய அளவில் ஏற்கனவே புகழ்பெற்றிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் பெரும்பாலும் மேற்கத்தையவர்களாக முற்றுமுழுதாக மாறிப்போன இந்தியர்களே.

11. குசும்பு: ஆஸ்கார் A.R. ரஹ்மான் விருதும் என் வருத்தமும்!!!: A.R. ரஹ்மான் ஒரு ஆங்கிலேயே அடிவருடி—–> முன்போக்கு சிந்தனையாளர் முனுசாமி

12. குமரன் குடில்: ஆஸ்கர் வாழ்த்துக்களும் மனசாட்சியின் குரலும் 🙂: எஸ்.ஜே.சூர்யா

ரொம்ப மகிழ்ச்சி. நான் ரஹ்மானோடு பல படங்களில் பணியாற்றியுள்ளேன்.

என்னை யாரும் மறந்திடாதிங்க. நானும் டைரக்டர் தான்… டைரக்டர் தான்… ஆமா, சொல்லிட்டேன்.

3 responses to “ஏ ஆர் ரெஹ்மான் – ஆஸ்கார் விருது

  1. Comparison of A.R.Rahman and M.I.A. Arulpragasam seems as funny and peculiar as Dr.S.Ramadoss and Dr.Anbumani Ramadoss .In this one is father and son,the other two people who expanded their professions in western world by choice or necessity!

  2. Guys….
    First of all …..OSCAR IS A AWARD GIVEN FOR AMERICAN FILMS to AMERICANS……Since SLUMDOG is a american film rehman got award……
    Is any americn given importance to our FILM FARE award…………………….
    LAAGAN participated under foreign film category..Only one award in that category……..
    I dont think this as best award………
    just media hype is more for OSCAR ………
    Rehman just completed 100 films……..
    ILAYARAJA 900 films………………and Re recording rehman can not stand b4 raja…….
    and MOST OF REHMAN SONGS R COPIED FROM WESTERN MUSIC,ARABIC,AFRICAN,MSVISWANATHAn,DEEP FOREST

    ……for example
    KANDU KONDEN KANDUKONDEN->chinna kannan azhaikiran……..
    KATRE EN VAASAL VANTHAI–>agaya panthalile
    Enna VILAI azhage–>THANGA PADAKATHIN MELA
    Ok…..
    Just media is hyping REHMAN and OSCAR ……….He IS JUSTA MUSIC DIRECTOR like DEVA

  3. பிங்குபாக்: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.