1. அழகிய தமிழ்மகன்: கடைசி அரை மணி நேரம் பார்க்க முடியாதபடிக்கு சில நிர்ப்பந்தங்கள். மற்றபடி, பார்த்தவரைக்கும், விஜய் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் என்று கோவி கண்ணன் சொல்வது போல் பலவும் இருப்பதால், ரசிக்கவைத்து ஈர்த்தது.
2. சக் தே இந்தியா: ரொம்ப ரொம்ப நல்ல படம். இந்த மாதிரி ஷாரூக் முயற்சிகள் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும். விறுவிறுப்பான ஹாக்கி ஆட்டங்கள். உணர்ச்சி பொங்கும் திரைக்கதை, வசனம். ஹீரோயிஸம் இல்லாத நாயகன்.
3. ஈ.டி.: எத்தனையோ முறை பார்த்திருந்தாலும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்குக்காகவும் அந்த அன்னியருக்காகவும் மீண்டும் குடும்பத்துடன் மகிழவைத்த படம்.
அதிமுக ஆட்சி மாறும் சமயத்தில் அகஸ்மாத்தாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் தீப்பிடித்தது போல், அமெரிக்காவிலும் நடந்தேறுகிறது.
Fire at White House office building forces evacuation – Los Angeles Times: “The website Democratic Underground lit up with comments and questions from readers: ‘Too many documents to shred,’ nradisic posted at 9:48 a.m. ‘What records are being ‘cleaned up?’ ‘ asked Botany, two minutes later. ‘What all is going up in smoke?’ asked gratuitous, at 9:53 a.m.
On the Huffington Post website, humorist Andy Borowitz had his own take: ‘The White House, one of the most historic structures in the nation’s capital, burnt to the ground today after Vice President Dick Cheney attempted to incinerate a cache of CIA interrogation tapes in his office.’
Casting its own skepticism on suggestions from the political left that the blaze was the equivalent of the 1933 Reichstag fire, which Adolf Hitler used to extend Nazi control in Germany, Little Green Footballs, a conservative website, reported: ‘There was a fire in Dick Cheney’s office this morning, and as usual the leftist blogosphere is brimming over with lunatic ranting.'”
உலகப்பொதுமறை:
1. இது சிதம்பர ரகசியம் எல்லாம் இல்லை. மென்பொருள் துறையில் வேலை செய்யும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
– தமிழ் சசி / Tamil SASI (ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ?)
நாட்டாமை & சட்டம் என் கையில்:
2. திரட்டிகள் வெறும் பதிவு, பின்னூட்டம் திரட்டுவது என்று மற்ற திரட்டிகள் போலில்லாமல் ஒரு வலைப்பதிவு சமூகமாக இருந்து வருகின்றது, நட்சத்திரம், பூங்கா, சுடர் விளையாட்டு என தமிழ் வலைப்பதிவர்களின் பங்கேற்ப்பை ஊக்குவிக்கின்றது, information காலத்தை தாண்டி இப்போது(ம்) நாம் Participatipon(participation) காலத்தில் இருக்கிறோம்.
…
OPML என்பது ஒரு திரட்டியின் சொத்து.
…
தமிழ்மணத்தில் பதிவர் பட்டியல் இருக்கே அங்கேயிருந்து எடுத்துக்கொள்ளவேண்டியது தானே என்றால் அங்கே காப்பிரைட் பிரச்சினை உண்டு.
– குழலி (OPML பகிர்வு, ip , திரட்டி அரசியல், டெக்னாலஜி பிதாமகன் ரவிசங்கரின் டெக்னிக்கல் தவறுகள் மற்றும் இன்ன பிற…)
உன்னால் முடியும் தம்பி:
3. ஒரு பதிவரின் பதிவைத் திரட்ட அவரின் அனுமதி தேவையில்லை என்பது எனது ஆணித்தரமான கருத்து.
…
இணையம் இயங்குவதற்கே இது தான் அடிப்படை. சுதந்திரம் விரும்பும் பதிவர்கள் முதலில் வலைப்பதிவில் எழுதவே கூடாது.
– ரவிசங்கர் (பதிவுகளைத் திரட்ட பதிவரின் அனுமதி தேவையா?)
தில்வாலே துல்லானியா லே ஜாயேங்கே வசனம் மாதிரி படிக்கவும்: ‘பெரிய பெரிய திரட்டிகளில் இப்படி சின்னச் சின்ன முடக்கல் எல்லாம் சகஜமப்பா’
(“It’s alright Senorita, Bade Bade Deshon Mein, Aisi Choti Choti Baatein Hoti Rahti Hain.“)
4. தமிழ்மணம் வழங்கி செயல் இழந்தாலோ தளப் பராமரிப்பு வேலைகளுக்காகத் தளத்தைத் தமிழ்மணம் தற்காலிகமாக முடக்கி வைத்தாலோ, அது தமிழ்மணக் கருவிப்பட்டைச் சேவையைப் பெறும் 2000+ பதிவுகளையும் சேர்த்து முடக்கும். முடக்கும் என்றால் தமிழ்மணம் வழமைக்குத் திரும்பும் வரை 2000+ பதிவுகளின் ஒரு பக்கத்தையும் யாரும் திறக்கவும் படிக்கவும் முடியாது. அல்லது, பக்கம் திறக்கப்பட மிக மிகத் தாமதம் ஆகலாம்.
– ரவிசங்கர் (தமிழ்மணம் – Defective by design !)
ஃப்ரீயா கொடுத்தா பினாயிலைக் கொண்டு பாரணைய முடிச்சுக்குங்க
5. தமிழ்மணத்தில் இடுகைகளை இணைத்தால் தானே இந்த பிரச்சினை? இடுகைகளை இணைக்காமல் விட்டால் பிரச்சினையிருக்காதே. எப்படியும் ‘நிறுவனப்படுத்தப்பட்ட திரட்டிகளுக்கு’ எதிரான உங்களுக்கு உங்கள் இடுகைகளை அத்தகைய திரட்டிகளில் இணைக்க வேண்டிய அவசியம் இருக்காதென்றே
நினைக்கிறேன். அவ்விதத்தில், உங்கள் இடுகைகள் திரட்டிகளின் பிடிகளில் சிக்காமல் உங்கள் சுதந்திரமும் காப்பாற்றப்படும்; படம் தோன்ற வாய்ப்பில்லாமல் உங்கள் பிரைவேசியும் காப்பாற்றப்படும் அல்லவா? அதைவிட, திரட்டிகளிலிருந்து உங்க பதிவுகளை முழுமையாக நீக்கச்சொல்லிக் கேட்டால் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த மாதிரி ஆகிவிடுமே!
– மு. சுந்தரமூர்த்தி (தமிழ்மணத்துக்கு பகிரங்க மடல் :))
ஆலோசனை எப்பவுமே அடுத்தவருக்குத்தான்; பூங்காவுக்கல்ல!
6. எளிமையாக எழுதுதல் என்பது முதிர்ந்த எழுத்தின் அடையாளம். (என்றால்)
– Thangamani
உதாரணங்கள், ஒப்புமைகள், எடுத்துக்காட்டுகள் எல்லாம் ஒரு வழிப்பாதை
7.இந்தியாவில் குடும்பம் குட்டியோடு வாழ்ந்து கொண்டு இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் இது போன்ற கேள்விகள் கேட்பவர்களில் பலருண்டு. அவர்களை பார்த்து “இந்தியாவில் இருப்பதுதானே ப்ரச்னை. இந்தியாவை விட்டு வெளியேறி சுபிட்சமாக இருக்கலாமே” என்று சிறுபிள்ளைத்தனமாக கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது.
– முகமூடி8. you have the cake and eat it too. That is fine. But the strange thing is you want chew the cake and spit it on their face.
– மு. சுந்தரமூர்த்தி
9. மு.மூ.வின் புத்திசாலித்தனமான உதாரணத்தை (அது குழந்தைத்தனமானதாக இருப்பினும்)நீங்கள் ரசிப்பதும் விசித்திரமாக உள்ளது.
– மு. சுந்தரமூர்த்தி
நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும்
10. ஒரு வேண்டுகோள் விடுவித்தால் அதனை சரி செய்யப்பார்க்கனும், இல்லைனா, எதுக்கு இங்கே வரேனு கேட்டா எப்படி?
இலவச உணவு வழங்கினாலும் அதில் புழு இருந்தால் கேள்வி கேட்பார்கள். ஓசி சோறு அதில என்ன கேள்வினு கேட்க முடியாது.
– வவ்வால்
நன்றி சொல்ல எனக்கு… வார்த்தையில்லை எனக்கு… நாந்தான் மறுகறேன்
11. இன்னும் இதில் உள்ள சிலர் அவர்கள் பதிவில் ஒருவர் பின்னூட்டம் போட்டால் அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே வெளியிடுவர்கள், அப்படியே வெளியிட்டாலும் அதுகுறித்து கண்டுக்கொள்ள கூட மாட்டார்கள். அதாவது ஒரு பதிலும் கூற மாட்டார்கள். குறைந்த பட்சம் நன்றி தெரிவிக்கும் நாகரீகம் கூட இல்லாதவர்கள். இவர்கள் எல்லாம் விருது குழு என்று சொன்னால் … எப்படி.
– வவ்வால்
கடவுளிடம் வேண்டுகோள் வைக்கலாம்; உண்டியலில் காசு போடலாம். நியாயமா என்றால் கண்ணைக் குத்திடும் உம்மாச்சி
12. தமிழ்மண சேவை என்பது ஒன்று இப்படி இருக்க வேண்டும், இல்லை அப்படி இருக்க வேண்டும், இதைவிட்டு வேறு எப்படி இருக்க முடியும் என்று கேள்வி கேட்க நீங்கள் எந்த அத்தாரிட்டியை வைத்திருக்கிறீர்கள்? ஏன் இடைப்பட்ட ஒரு நிலையில் இருக்க முடியாதா? இன்னின்னவாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசனைகள் சொல்வது வேறு! இப்படி எப்படி இருக்கப் போயிற்று என்று எதிர்கேள்வி கேட்பது வேறு!
– செல்வராஜ் (R.Selvaraj)
(படிக்கப் படிக்க முத்துக்கள் சேர்க்கப்படும்)
இதெல்லாம் படிக்கும் போது என் மகள் பக்கத்தில் இருந்து கொண்டு கேட்ட கேள்வி: ‘ஏம்ப்பா எங்கே பார்த்தாலும் ஒரே ஆச்சரியக்குறியா இருக்கு?
பாண்டிய மன்னனாக வடிவேலு: ஆமா… இது என் டயலாக் இல்ல?
மன்னனுடன் கூட வந்திருக்கும் மந்திரிகள்: டயலாக்க ரிப்பீட் பண்ணாத்தான் ஜெயிக்க முடியும்.
மீனா: அழகு ராணி; அதிரூப சுந்தரி; ஆடவர் மயங்கும் அற்புத மேனி கொண்ட இந்த அரசிளங்குமரிக்கு, சுடுகாட்டில் எரியும் கொள்ளியில் இருந்து சூடு தாங்க முடியாமல் எழுந்தோடி வந்த பிணம் போல் இருக்கும் இவனா எனக்கு மணமகன்?
பார்வையாளன் ரஜினி: ஆ…ஆச்சு (தும்மல் போடுகிறார்)
மீனா கடுப்பாகிறார்
மீனா: என் கடைக்கண் பார்வை பட்டால் படைபலம் கொண்ட மன்னர் கூட்டம் அனைத்தும் நாடு மறந்து நகரம் மறந்து என் பின்னால் வர தயாராக இருக்கும்போது… என்னை நாடி வந்த பேடியே!
ரஜினி மீன்டும் பெருந்தும்மல்.
மீனா: என்னை நாடி வந்த பேடியே! இந்த பூலோகத்தில் மட்டுமல்ல. ஏழேழு லோகம் சுற்றிவந்தாலும் உன்னை ஒரு பைத்தியக்காரி கூட மணந்து கொள்ள மாட்டாள். ஹ்ம்ம்ம்… அமாவாசைக்கு பௌர்ணமி மேல் ஆசையா?
Rajni continues his lengthy preludes to and the sneezing process itself.
மீனா: தும்மினா ஒண்ணும் தப்பில்லைய்யா…ஆனா! இங்க ஒருத்தி அழகா நடிச்சுட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ற மாதிரி தும்முறியே… அதான் தப்பு!
ரஜினி: ஏம்மா… இந்தத் தும்மலு, இருமலு, விக்கலு, கொட்டாவி, நல்லது, கெட்டது, பசி, தூக்கம், பொறப்பு, இறப்பு, பணம், பட்டம், பதவி… இதெல்லாம் கேட்டு வராது. தானா வரும். வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது.
மீனா: யோவ்… வசனம் எல்லாம் கிழேயிருந்து என்ன வேணா பேசலாம்யா. இத்தன பேருக்கு முன்னால மேசையேறி பேசிப்பாரு. ஒதறும்!
ர.கன்னா: யாருக்கு உதறும்? என்னா நெனச்சுக்கிட்ட எங்க முத்துவப் பத்தி!? அவர் வண்டியோட்ற ஸ்டைல்ல பார்த்தே இந்த ஊர் மயங்கிக் கிடக்குது.
மீனா: வண்டி ஓட்டிடலாம்யா.. மேடையேற முடியுமா?
ர.கன்னா: யாரப் பாத்து என்னா கேள்வி கேக்கறே? இது என்னா மேடை? அவர் எந்த மேடையா இருந்தாலும் ஏறுவாரு! தைரியமாப் பேசுவாரு! ஆடுவாரு! பாடுவாரு… பார்க்கிறீயா!?
ரஜினி: என்ன கண்ணா… இப்படி மாட்டி விடுறீயே!
ர.கன்னா: சும்மா இரு முத்து! உன் வெயிட்டு உனக்கேத் தெரியாது!
மீனா: யோவ்… தைரியமான ஆம்பிளையா இருந்தா.. மெடையில வந்து ஆடிப்பாடி நடிக்க சொல்லுய்யா பார்ப்பம்…
கூட்டத்திலொருவர்: என்னா முத்தூ… அந்தப் பொண்ணு அது பாட்டுக்கு பேசிகிட்டிருக்கு. நீ பேசாம ஒக்காந்திட்டிருக்கியே.. மேடையில போய் கொஞ்சம் வெளையாண்டுட்டு வாம்மா…
ரஜினி: ஐய்யய்யோ… அண்ணே… நமக்கெதுக்கண்ணே இந்த வேண்டாத விளையாட்டெல்லாம்?
கூட்டத்தில் இன்னொருவர்: உன் வேலைய நீ காட்ட வேண்டாமா? போ வாத்யாரே
ரஜினி: அட சும்மா இருப்பா… ஏதோ சின்னப் பொண்ணு… தெரியாமப் பேசிடுச்சு…
ர.கன்னா: ஐய்யய்யே… இப்படி சொன்னா கேட்க மாட்டாருப்பா… நாமதான் அவரை மேடையேத்தி வுடணும்
ரஜினி மிரள மிரள மக்கள் குண்டு கட்டாக தூக்குகிறார்கள்.
மக்கள்: சும்மா பூந்து விளையாடும்மா… இத்தினி பேரு உன் பின்னாடி இருக்கம்ல…
ரஜினி: எசமான்…??
சரத்பாபு மையமாக உம் கொட்டி தலையாட்டுகிறார்.
ஒருவன் ஒருவன் முதலாளி பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் துண்டு ஸ்டைல் விசிறுகிறார் சூப்பர் ஸ்டார்.
ரஜினி: பெண் பார்க்க வந்த மன்னவனின் மனதைப் புண்படுத்திய மருத நாட்டின் மகளே! ஆண் அழகை முகத்தில் பார்க்காதே… அகத்தில் பார்! மற்றவர்களின் மனதைப் புண்படுத்துவதற்கு பதிலாக, நீ கூறிய அதே… அதே பதிலை, கொஞ்சம் புன்னகையுடன் கூறிப்பார்!
அப்பொழுது நீ அறிவாய்… அதில் இருக்கும் இனிமை! அவைதான் நீ பொறந்த நாட்டிற்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை!! பார்த்தாயா… தமிழ் மொழியின் அருமை!!!
மீனா: எல்லாரும் கை தட்டினா… நீ என்ன பெரிய ஆளா?
ரஜினி: அவங்க கை தட்டிதாம்மா எல்லாரும் பெரிய ஆளாயிருக்காங்க…
மீனா: டிராமா பார்க்க வந்தாயா? இல்ல… வம்பிழுக்க வந்தாயா?
ரஜினி: வம்புக்கு நான் இழுக்கல
மீனா: என்ன… திமிரா?
ரஜினி: அது எனக்கில்ல
மீனா: பின்ன எனக்கா?
ரஜினி: அப்படீன்னு நான் சொல்லல
மீனா: யோவ்… நீ உன் மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கே?
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde