Monthly Archives: செப்ரெம்பர் 2007

Terrorism and civil liberty | Is torture ever justified?

இந்தியாவில்… ?

Torture world Countries India Acceptable

To date, 144 countries have ratified the Convention against Torture. (The hold-outs include such usual suspects as Sudan, North Korea, Myanmar and Zimbabwe, but also India.)

நன்றி: தி எகானமிஸ்ட்

Amnesty International Report 2007 • Sri Lanka

Sun TV – Ganesh Chathurthi special programs

இது work in progress. எப்பொழுது பார்த்து முடிக்கிறேனோ அதுவரை இற்றைப்படுத்தப்படும்.

1. சிறந்த நன்றியுரை: ‘சிவாஜி’ திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கர்.

மொட்டை பாஸ் தலையில் தட்டுவதற்கு தேவைப்பட்ட உழைப்பைக் கோடிட்டு காட்டி, ஒரு செகண்டுக்கு இவ்வளவு மினுக்கிட்டால், 12,000 விநாடிக்கு எவ்வளவு உழைத்துக் கொட்டியிருப்பார் என்பதை மேஜிக்கலாக ரியலைஸ் செய்யவைத்தார்.

மொட்டைத் தலையில் அதிறும் அந்த ஒலி, பில்லியர்ட்ஸ் பந்து அடித்தவுடன் ஏற்படும் நாதமும் தபலாவின் சத்தமும் இணைந்தது.Kaanal Neer Ritheesh Singapore Best Actor

2. சிறந்த நடிகை: சிங்கப்பூர் கலைவிழா தொகுப்பாளர் அனு ஹாஸன்

‘கானல் நீர்’ திரைப்படத்தில் நடித்து உள்ளங்கவர் கள்ளனாக, புது முக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரித்தீஷைப் பாராட்டி ஒன்றைரை நிமிடம் நக்கல் வெளிப்படாமல், நையாண்டி எட்டிப்பார்க்காமல் பேசியதற்காக வழங்கப்படுகிறது.

3. சிறந்த பேச்சாளர்: மொக்கை பேசினார் சேரன்

பேசினார். பேசியதையேத் தொடர்ந்து அலுக்காமல் பேசினார். பேசிக் கொண்டிருக்கிறார். கேள்விகளும் படு திராபை ரகம். ஆனந்த விகடன் மாதிரி வாயில் வார்த்தை வரவழைக்கும் கலையை எப்பொழுதுதான் தமிழ் வெள்ளித்திரைகள் கற்றுக் கொள்ளுமோ!

4. சிறந்த பேச்சாளினி்: ஜூனியர் ‘ஸ்னேஹா’ ஷெரின்

ஸ்னேஹா போல எந்த டாபிக் கொடுத்தாலும் கருத்து இருக்கிறதோ, விஷயம் தடவலோ, தட்டித் தடுமாறாமல் பேசுகிறார். ‘திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபியிடம் உதவி நெறியாளராக சேர்ந்துவிட்டார். சுகாசினியைத் தொடர்ந்து இன்னொரு கதாநாயகி ↔ இயக்குநர்.

5. சிறந்த நிகழ்ச்சி: சத்யராஜூடன் பேட்டி

கேள்வி: ‘நமீதா உங்களுடன் பல படங்கள் நடித்தது பற்றி?’

சத்யராஜ்: ‘அவங்க என் கூட நடிக்காம இருக்கிறதுதான் அவங்களுக்கு பெட்டர். என்னை மாதிரி வயசான ஆளுங்களோட நடிச்சா மார்க்கெட் அவுட்னு அர்த்தம்.

ஆன்டன் பாலசிங்கமாக நடிக்க ஆசை என்றார். குளிர் கண்ணாடியுடன் நேர்காணல் தொடுத்தவரை ‘ஹீரோயினை சைட் அடிக்க போட்டிருக்கீங்களா!’ என்று எதார்த்தமாய் கால்வாரினார். சம்பிரதாய கேள்விகளுக்குக் கூட அவரின் பாமர பதில் தவறவிடக் கூடாத நிகழ்ச்சியாக்கியது.

‘சிவாஜி’யில் காசிமேடு ஆதிக்கு கதாபாத்திரத்தின் கனம் கம்மி என்றார். நான் நடித்தால் பதிலுக்கு பதில் எகத்தாளமாய் ‘என்ன அதிறுது? சும்மா சவுண்ட் விடாதஜி’ என்று போட்டுத் தாக்கினால்தான் சரிப்படும் என்று இயல்பாகப் பேசினார்.

6. சிறந்த ஆட்ட கலைஞர்: நடன இயக்குநர் ராம்ஜி

ரஜினியை மிஞ்சும் நடனம் என்று விளித்தால் அது ராம்ஜிக்கு வஞ்சப்புகழ்ச்சியாகி விடும். பரபரப்பு, துள்ளல், grace கலந்த நளினம் எல்லாம் உண்டு. துவக்க ஆட்டத்தில் மேற்கத்திய ஆட்டமும் சாஸ்திரீய சங்கீதமும் கலந்து வித்தியாசமும் உண்டு.

7. சிறந்த ஆட்டக்காரி: one film flopper ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ அபர்ணா

மஸ்தானா மஸ்தானா‘வில் வந்திருக்க வேண்டியவர். ஒற்றைநாடி தேகமாக இருந்தும் மூச்சு வாங்கல் இருக்கட்டும்; உடம்பையாவது லூசாக வைத்து ஆடியிருக்கிலாம். கலக்கல் ஆட்ட அமைப்பை (dance choreography) மிரட்சியுடன் ஆடி அப்பீட்டானார்.

8. சிறந்த ஆடை அலங்காரம்: ‘காதல்’ சந்தியா

தொப்பை என்பது தமிழ் ரசிகர்களின் கனவுப் பிரதேசம். பத்மினி ஆரம்பித்து நயன் தாரா, நமீதா வரை போஷாக்கான காம்ப்ளான் கேர்ள்களை ரசிக்கும் கோலிவுட் உலகம். இருந்தாலும், கொழுப்பு மட்டும் திரட்சியாகத் தனித்துத் தெரியுமாறு ஆடை அணிவது, மில்ஸ் அண்ட் பூன் படிக்கும் chick- இடம் யூமா வாசுகி நாவலை படிக்க வைக்கும் கொடூரம்.

The Mystical Marriage of Saint Catherine of Alexandria by Giuseppe Ribera

Mystical Marriage of Catherine ribera

படம் உதவி: விக்கிப்பீடியா

கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையேயான உறவை கணவனுக்கும் மனைவிக்கும் வேதாகமங்கள் ஒப்பிடுகிறது. கன்னித்தன்மை இழப்பது என்பது ஆன்மாவை இறைவனிடம் சமர்ப்பிப்பதற்கு சமமாக கருதப்பட்டது.

இங்கே குழந்தை யேசுவுடன் காத்தரீனுக்கு மணமுடிப்பு நடக்கிறது.

இந்தத் திருமணத்தை காரணம் காட்டி தன்னை விரும்பும் பேரரசனை மணக்க மறுக்கிறாள். அவனும் விடாக்கண்டனாக, ஐம்பது தத்துவ அறிஞர்களைக் கொண்டு தெளிவாக்க முயற்சிக்கிறான். மறுதலிக்கிறாள்.

தெய்வீகத்தை மறக்க வைக்க இயலாத உளவியல் நிபுணர்கள் அனைவரையும் அபிராமி பட்டரைப் போல் அந்தாதி எல்லாம் பாட வைத்து வேடிக்கை பார்க்காமல், எரிக்க உத்தரவிடுகிறான் மன்னாதி மன்னன்.

மோதிரம் அணிவித்த பிஞ்சுக்கைகளுக்கு முத்தம் கொடுப்பதை ரிபேரா தீட்டியிருக்கிறார்.

என் புருஷன் குழந்தை மாதிரி‘ என்பது இந்த ஓவியத்தின் தமிழாக்கம்.

Dasavatharam Delays – Trichy Kamal Fans: Poster

Dasavatharam Kamalahasan Trichy Fans Delay Poster

Kalainjar Mu Karunanidhi & Anna as Ram & Anjaneya – Chennai Posters

Palavakkam DMK Poster Annadurai Karunanidhi EVR Periyaar


Book Picks

1. Exposing the Real Che Guevara: And the Useful Idiots Who Idolize Him: Humberto Fontova

  • By the end of the preface, he’s pinned 14,000 executions on Guevera and credited positive portrayals to the public relations work of Castro and the laziness of biographers.
  • Presenting a failed physician, an inept guerrilla and a hapless sycophant, Fontova adds insult to injury by claiming Che was “deathly afraid to drive a motorcycle.”
  • He was a violent Communist who thought nothing of firing a gun into the stomach of a woman six months pregnant whose only crime was that her family opposed him.
  • And he was a hypocrite who lusted after material luxuries while cultivating his image as a man of the people.

2. Young Stalin: Simon Sebag Montefiore

A mastermind of bank robbery, protection rackets, arson, piracy and murder, he was equal parts terrorist, intellectual and brigand.

3. The Plenitude: Creativity, Innovation, and Making Stuff (Simplicity: Design, Technology, Business, Life): Rich Gold, John Maeda

Gold, a scientist, inventor and artist who worked at times for the toy company Mattel and the legendary Xerox PARC research labs

4. Evocative Objects: Things We Think With: Sherry Turkle

  • These essays reveal objects as emotional and intellectual companions that anchor memory, sustain relationships, and provoke new ideas.
  • the simplest of objects–an apple, a datebook, a laptop computer–are shown to bring philosophy down to earth.
  • The notion of evocative objects goes further: objects carry both ideas and passions. In our relations to things, thought and feeling are inseparable.
  • the role of objects in design and play, discipline and desire, history and exchange, mourning and memory, transition and passage, meditation and new vision.
  • Turkle pairs each autobiographical essay with a text from philosophy, history, literature, or theory, creating juxtapositions at once playful and profound.

Table of Contents and Sample Chapters

5. Still Life With Oysters and Lemon: On Objects and Intimacy: Mark Doty (The Austin Chronicle: Books: Review)

6. Taking Things Seriously: 75 Objects with Unexpected Significance: Joshua Glenn, Carol Hayes

Shelfari Spam

tamil Cards Greeting Spam Shelfari Recover Health

அசல்: தி நியு யார்க்கர்

முதலில் ஷெல்பாரி எரிதங்களுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். மன்னிப்பு கோருகிறேன்.

‘ஏதோ… புத்தகக் கடை! பதிந்து வைத்துக் கொண்டால், நாலு புத்தகம் படித்த மாதிரி சீன் காட்ட உபயோகப்படும்’ என்னும் ஆர்வத்தில் நானும் செல்பாரியில் இணைத்துக் கொண்டேன். இந்த லிங்க்ட் – இன், ஃபேஸ்புக் மாதிரி மின்னஞ்சல் புத்தகத்துக்குள் நுழைய அனுமதியும் கொடுத்து வைத்தேன்.

அவர்கள் எல்லாம், யாருக்கு அனுப்பவேண்டும் என்று கேட்பார்கள். ஒரு வாட்டிக்கு, ரெண்டு வாட்டி யோசிக்க வைப்பார்கள்.

ஷெல்பாரி அப்படி எல்லாம் முன் வைத்த காலை பின் வைக்க வாய்ப்பு எதுவும் கோராமல், தொடர்ச்சியாக அனுதினமும் அனைத்து மின்னஞ்சலுக்கும் ‘சேர்ந்தாச்சா? சேராட்டி நாளைக்கும் படுத்துவேன்!’ என்று கழுத்தில் கத்தி நீட்டுகிறது.

பல வருடமாக மறந்து போனவர்கள் ‘சௌக்கியமா?’ என்று தொலைபேச வைத்திருக்கிறது. பதினெட்டு மாதம் முன்பாக, அரை பாட்டில் மது உள்ளே மிதக்கும் தருணத்தில் அறிமுகமான சிலரிடம் இருந்து ‘உன்னை எனக்கு எப்படித் தெரியும்?’ என்று நலம் விசாரிப்புகளை முடுக்கி விடுகிறது. சுருக்கமாக, பலரை வாட்டி எடுக்கிறது.

தீர்வாக, என்னுடைய ஷெல்பாரி கணக்கை நீக்கி பிராயசித்தம் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த பர்த்டே அலார்ம், லைப்ரரி திங் எல்லாம் இல்லாத ‘சார்… போஸ்ட்’ காலத்துக்கு செல்ல வேண்டும். பத்து பிரதியெடுத்து அனுப்பி இருப்பார்கள்.

கொசுறு:

Vacation Beggar Alms Compensation

நான்காம் ஆண்டு விழா

1. சோடா பாட்டிலை பார்த்தவுடன் எனக்கும் நான்காண்டு முடிந்தது ஞாபகத்துக்கு வந்தது.

2. வேலை தேடும் நல்ல நாளில் செப்டம்பர் 14 ஆங்கிலப் பதிவு தொடங்கப்பட்டது. அதற்கு கொஞ்ச நாள் முன்னாள் தமிழ் டிஸ்கியில் இரண்டு (ஜூலை 22 & 28)ஆரம்பித்து வைத்திருந்தேன்.

3. ஈ-தமிழ், ஸ்னாப் ஜட்ஜ், கில்லி, சற்றுமுன் – வருடத்துக்கு ஒரு விருப்பம்.

4. ராகாகி, மரத்தடியில் கிடைத்த மதிக்கத்தக்க நட்புகள் ஏராளம். பதிவுலகில், விரும்பிப் பாராட்டும் நட்புகளின் சொந்தம் இணையக் குழுக்களோடு ஒப்பிட்டால் செம குறைச்சல்.

இந்த வருடத்துக்கான நமைச்சல்:

மாட்ட வேண்டியவர்கள் எல்லாம் குழாம் காலத்திலேயே அகப்பட்டதாலா அல்லது ஒழுங்காகத் தேடிப் பிடிக்கவில்லையா அல்லது பாதி பரிச்சயம் ஆனவர்களை அம்போவென்று விட்டு, ஆற்றில் ஒரு கால் சேற்றில் திளைத்தல் இன்னொரு கால் என்று ஆனதாலா?

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன – இந்திரா பார்த்தசாரதி

Kizhakku Book Wrapper - Indira Parthasarathyகல்லூரியின் வளாக நேர்காணலில் எல்லோருக்கும் வேலை கிடைத்துக் கொண்டிருந்த சமயம். பெங்களூர் நிறுவனம் கிடைத்தால் தேவலாம். மென்பொருள் எழுத வைத்தால் சிலாக்கியம். சம்பளம் நிறைய கொடுத்தால் பூரண திருப்தி. நூறு பேர் போட்டியிடும் பந்தயத்தில், முந்தி வந்து வேலை கிடைத்தாலும், கிடைக்கப்பெற்ற அனைவரும் அசுவாரசியமாய் இருப்பார்கள்.

‘ஒப்பந்தம் கேட்கிறான்’, ‘இனிமேல் வரப்போவதுதான் நல்ல நிறுவனம்’, ‘சம்பளம் கம்மி’… காரணங்கள் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.

முற்றுகைகளைத் தொடர்பவனுக்கு இந்த அதிருப்தி தீர்மானங்கள், விரக்தி கலந்த வெறுப்பை ஊட்டுபவை. அவனுக்குத் தேடல் எதுவும் இருக்காது. லட்சியம், குறிக்கோள், ஆதர்சம், சுயவிசாரம், வாழ்க்கைப் பயணம், கொள்கைப்பிடிப்பு எல்லாம் பறந்தோடும். தனக்காக இல்லாவிட்டாலும், பிறருக்காக, நிரூபிப்பதற்காக அனுதினமும் கர்மமே என்று படை எடுப்பான்.

இப்பொழுது வேலை தேடாவிட்டாலும், இத்தகைய சூழல் அமைந்தே உள்ளது. பொன் செய்யும் மருந்தாகிய போதுமென்ற மனத்துடன் சிலரும், கால்களைத் தரையில் ஊன்றிக் கொண்டு அனுமனாக விசுவரூபம் எடுத்து சூரியன்களைத் தொடும் உச்சிக்கு விரைபவர்களும் கிடைக்கிறார்கள்.

‘பொம்மரில்லு’ நித்யாவாக கதாநாயகி. ‘விடுகதை’ பிரகாஷ்ராஜாக நாயகன். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திலகம். ‘சொப்ரானோஸ்’ முடிவு. இப்படித்தான் டக்கென்று கதைச் சுருக்கம் போடலாம்.

பதில்கள் கிடையாது. வழிகாட்டல்கள் கிடைக்காது. வாழ்க்கைப் புரிதல்கள் சொல்லித்தரப் பட மாட்டாது.

ஆனால், மனிதர்களுக்கு இடையே உள்ள உறவை உணரலாம். எப்படி அது வளர்கிறது, எங்கே தேய்கிறது, எப்பொழுது அறுபடுகிறது என்று பார்க்கலாம். பாசத்தில் மாறுதல்கள் விளைவிக்கும் சக்திகளையும் காலப்போக்கில் எங்கெல்லாம் இறக்கை முளைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தன்னை அர்த்தப்படுத்துவதாக நினைத்து சுய வெளிப்பாடுகளைப் போர்த்தி உலகத்தின் அவசரத்தையும் கலகத்தின் போக்கையும் அனுசரிப்பதை அறியலாம்.Inthira Paarthasarathy

‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’ குறித்த லக்ஷ்மியின் பகிர்வை பார்க்கவும். படித்ததில் பிடித்ததை இங்கு பார்க்கவும்.

1. திருமணம் என்றாலே பரஸ்பர தியாகங்கள் என்றுதான் அர்த்தம்.

2. ‘Now or Never… இதுதான் என் வாழ்க்கைத் தத்துவம்.’

3. ‘நான் கோபப்படப் போறதில்லை. கோபப்படறதுக்குக் கூட, கொஞ்சம் தரமான குற்றச்சாட்டா இருக்கணும். நீங்க சொல்றது அதுக்குக்கூட யோக்கியதை இல்லை.’

4. கதாசிரியரையும் அந்த நெருப்பில் தூக்கிப் போடலாமென்று தோன்றிற்று, அமிர்தத்துக்கு. கதையிலே வரும் ‘வில்லன்‘ படுபாவியல்ல; கதாசிரியர்தான்.

5. ‘வங்காளத்திலே புதுசு புதுசாindira parthasarathi ‘தியேட்டர் குரூப்’ ஏற்படறதுன்னா புதுசு புதுசா ஏதாவது செஞ்சு காட்டணும்ங்கிற நமைச்சல்னாலே… ஆனா நம்மவங்க புதுசு புதுசா ‘தியேட்டர் குரூப்’ ஏற்படுத்தறது, பழைய குழுவிலே தனக்கு சான்ஸ் கிடைக்கலேங்கிற காரணந்தான்…’

6. வரிசை வரிசையாக ஆஸ்பத்திரிக் கட்டிடங்கள்… உள்ளே எவ்வளவு முனகல்களோ, வேதனைகளோ, வெளியே நின்று பார்த்தால் யாருக்குத் தெரியும்?

7. நிகழ்ச்சி என்பது நினைவுக்குச் செய்யும் கொடுமை. கனவு கனவாயிருப்பதில் எவ்வளவு சுகம்! நேரே பார்ப்பதை விட, வண்ணக் கண்ணாடியில் பார்க்கும்போது, பொருட்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!

8. ‘ஒரு கொள்கையிலே புகுந்துக்கிறது, ஒரு பந்தத்திலே மாட்டிக்கிட்டு முழிக்கிற மாதிரி…’

9. அவ்வாறு நினைவுறுத்துவதினால் நித்யா என்கிற இனிய கனவு, கடந்து போன இளமைப் பருவத்தின் நினைவுச் சின்னமாய், சிந்தனையில் மொக்கவிழ்ந்து மணம் வீசுகின்றது என்பதினாலா…?indira parthasaradhy

10. ‘கல்யாணம் செய்துண்டா இமேஜ் ஏது? இப்படித் துரத்திண்டு போறதுதான் உங்களுக்குத் திருப்தியைத் தர்றதோ என்னவோ?’

11. பாலுறவு என்பது ஆணோ பெண்ணோ ஒருவர் மீது ஒருவர் தீர்க்கும் வஞ்சினமோ?

12. ‘இவ்வளவு சீக்கிரம் ஒருத்தராலே சென்டிமெண்ட்டலாக முடியும்னா, அவர்கிட்ட அடிப்படையிலே ஏதோ கோளாறுன்னு அர்த்தம்’

13. ‘உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள பொருத்தமில்லாத தன்மையை ஓர் லட்சிய வேகத்தோட புரிஞ்சிண்டு நான் அனுதாபப்பட்டது வாஸ்தவம்தான். ஆனால், உங்க மாதிரி இருக்கிறவங்களுக்கு, அதாவது தைரியமில்லாம ஒரு சோகக் காவியத்தின் கதாநாயகன் மாதிரி, ஒடிஞ்சு போன இறக்கைகளை ராக்கெட்னு நினைச்சுண்டு பறக்கப் பார்க்கிற, அரை வேக்காட்டுக் கலைஞர்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கிற தெம்பு கிடையாது. சந்தர்ப்பம் கிடைச்சால் அதை அந்தச் சமயத்திலே பயன்படுத்திக்கணும்னு நினைக்கிற சுயநலந்தான் உங்களுக்கு…’

14. மந்தையிலிருந்து விலகிச் செல்ல முயன்ற புரட்சி ஆடு, பொறியில் அகப்பட்ட எலி, விடுதலையைக் கண்டு பயப்படுகின்றது. சமூகம் என்பது தவிர்க்க முடியாத சிறை! ஒன்று ஞானியாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பைத்தியமாக இருக்க வேண்டும். ‘தன்வயமான தர்மம்’ என்பது அப்பொழுதுதான் சாத்தியம்.

காதல், ஊடல், சல்லாபம்…

‘இந்தச் சமாதிகளெல்லாம் யாருக்காக இருக்கும்?’ என்று கேட்டாள் நித்யா.

‘இதென்ன கேள்வி? மொகலாய மன்னன் அந்தப்புரத்திலிருந்த அவனோட அறுநூத்திச் சொச்சம் ராணிகளுக்காக இருக்கும்.’

‘உங்க குரல்லே லேசாப் பொறாமை தெரியறது…’

கடைசியாக… இ.பா வார்த்தையில் நாவலைக் குறித்து சொல்ல வேண்டுமானால்:

‘இது நல்லாயிருக்கு’

‘என்ன இப்படி சாதாரணமாச் சொல்றே’

‘எளிமையா சொன்னாத்தான் நன்னாச் சொல்லறதா அர்த்தம். பாக்கியெல்லாம் வெறும் சொல் விரயம்தான்.’

தொடர்புள்ள முந்தைய பதிவுகள்:
1. குருதிப்புனல் (நாவல்)

2. இந்திரா பார்த்தசாரதி: ஆறாம்திணை

3. Thinnai: தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல்’ – பாவண்ணன்

4. முரண்பாடுகள் – தமிழ் சிஃபி சமாச்சார் பத்திகளின் தொகுப்பு :: எதிர்வினை

எந்த கருத்துக் கணிப்பு நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையானது?

1. சட்டத்தை பொதுமக்கள் கையிலெடுப்பது குறித்து?

அ) நீதிமன்றங்களை அவமதிக்கும் செயல்
ஆ) மக்களுக்காகத்தானே சட்டம்?
இ) சட்டத்தை மீறுபவர்களுக்கு இடனடி பலன்
ஈ) அரசின் மெத்தனத்தை நிவர்த்திக்கும் குறியீடு
உ) ‘சட்டம் என் கையில்’ என்று கமல் படம் வந்துச்சே?

தொடர்புள்ள செய்தி

2. பொருளீட்ட நாடு விட்டு நாடு செல்வது

அ) குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்தால் சரி
ஆ) மொத்தமாக வெளிநாட்டில் தங்கினாலும் ஒகேதான்
இ) தாய்நாட்டுக்கு பணியாற்றாமல், அயல்நாட்டில் வசிப்பது தவறு
ஈ) தமிழ்நாட்டை விட்டு வயநாட்டுக்கு செல்வதைக் கேக்கறீங்களா?

தொடர்புள்ள செய்தி

3. சேலம் இருவுள் வாயில் கோட்டம் போராட்டம் குறித்து…

அ) மாநில அமைச்சர் இதுபோல் மத்திய அரசை எதிர்க்கக் கூடாது
ஆ) காந்தி பிறந்த மண்ணில் அறப்போராட்டங்கள் அவசியம்
இ) பொதுச் சொத்துக்களுக்கு சேதம்
ஈ) இந்திய தேசியத்தில் தமிழ்நாட்டில் அமைந்தாலும், கேரளாவில் இருந்தாலும் வித்தியாசம் கிடையாது.
உ) வள்ளுவர் கோட்டம் சென்னையில்தானே இருக்கு?

தொடர்புள்ள செய்தி

4. ஆர்குட் தளத்தில் போலி மாயாவதி

அ) போலிகளை களையெடுக்கவேண்டும்
ஆ) இதெல்லாம் கட்டுப்படுத்த முடியாது
இ) போலி முலாயம், போலி ராகுல் துவக்குவதுதான் சரியான வழி
ஈ) நான் ஃபேஸ்புக் விசிறி
உ) இது தேர்தலில் மண்ணக் கவ்விய எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி

தொடர்புள்ள செய்தி