Monthly Archives: செப்ரெம்பர் 2006

Thamizmanam vs Thenkoodu – Alexaholic

1. Daily Reach :: கடந்த மாதத்தில் வாசகர்கள் அதிகம் நாடியது: தமிழ்மணம் x தேன்கூடு

(ஆகஸ்ட் 30, 15 இரண்டு நாளிலும் எப்படி இவ்வளவு கூட்டம்?)

2. ஆறு மாத அலசல்: தமிழ்மணம் x தேன்கூடு

(வாரயிறுதிகளில் கூட்டம் அலைமோதாது!)

3. மூன்று மாதம்: தமிழ்மணம் x தேன்கூடு x பத்ரியின் வலைப்பதிவுகள்

(பத்ரியை தேன்கூட்டை விட நிறைய பேர் பார்க்கிறார்கள்!)

நீங்களும் உங்கள் பதிவுகளை இட்லி-வடை போன்ற நட்சத்திரப் பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். (Alexaholic) அலெக்ஸாவின் மிகப் பெரிய நிறை (எதிர்மறையாக பேச வேண்டாம் என்னும் நல்லெண்ணத்தால்) மலையையும் மடுவையும் சீர்தூக்க இயலாது. எனவே, தினமலர், தினகரன், தினத்தந்தி என்று ஒரு பக்கம் வரைபடம் இடலாம்; அல்லது தமிழ் முரசு, மாலை மலர் என்று இன்னொரு பார்வை காணலாம். மொத்தமாக தி ஹிந்து, நியு யார்க் டைம்ஸ், ஈ-தமிழ் என்று போடச் சொன்னால் அலெக்ஸாவின் முடிவுகள் போதாமையை வெளிப்படுத்தும்.

நன்றி: Alexaholic: Website Statistics and Website Traffic Graphs & Wikipedia.org is more popular than… – Meta


| |

News Stories – Sep 1st Week

  1. சேர்த்து வைத்த துணைநகரம் :: கைகொடுத்த பா.ம.க. & கண்சிமிட்டும் ரஜினி!எஸ்.சரவணகுமார்

    பணம் காசக் கண்டு விட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலமாச்சுதடா கண்மணீ!

  2. அமெரிக்க யேல் பல்கலை.யில் தமிழ் விரிவாக்கப் பணி :: எழுத்தாளர் காஞ்சனா தாமோதரன் முயற்சி
  3. பாஜகவினரின் தாக்குதலைக் கண்டித்து லக்நௌவில் கத்தோலிக்க பள்ளிகள் மூடல்

    லக்நௌவில் உள்ள லோரெட்டோ கான்வென்ட் பள்ளியில் கடந்த 6-ம் தேதி சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த நோபோ குமார் மண்டல் என்ற கிறிஸ்தவர் கலந்துகொண்டார். பிரார்த்தனையின்போது அவர், யேசு கிறிஸ்து தனது உடலில் கலந்திருப்பதாக கூறினார். இதனைக் கண்ட மாணவர்கள் பயந்துபோயினர்.

    இந்நிலையில், லோரெட்டோ கான்வென்ட் பள்ளிக்குள் பாரதீய ஜனதா கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனர். கிளர்ச்சியுடன் வந்த அவர்கள், பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர்.

  4. தென்னிந்திய சினிமா, ‘டப்பிங்’ கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி
  5. அரசு வழங்கும் உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு :: இளைஞர்கள் அதிருப்தி
    • அரசு தரும் உதவித் தொகையைப் பெறுவதற்கு தற்போது ரூ. 500 செலுத்தி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும்
    • தாய் அல்லது தந்தை, கணவர் அல்லது மனைவியின் மாத வருமானம் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது
    • அஞ்சல் வழிக் கல்வி பயில்வோருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படாது
  6. திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிவதை தவிர்க்கத் தயாராக இருந்தேன் :: ஆர்.எம்.வீ. பிறந்தநாள் விழாவில் கருணாநிதி பேச்சு
  7. மணிப்புரி மொழிக்கு நாகா மாணவர் தடை
  8. பாக். துருப்புகள் நடமாட்டம்:

    பாகிஸ்தானில் பலுசிஸ்தான் பழங்குடி இனத் தலைவரும் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தவருமான அக்பர் பக்டி மர்மமான முறையில் கொல்லப்பட்டது உள்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆப்கன் எல்லையில் தலிபான்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் துருப்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

  9. சொந்தச் செலவில் இலவச அரிசி வழங்கிய முதல்வர் :: சோ. முருகேசன்சா. பக்கிரிசாமிப்பிள்ளை நூற்றாண்டு நாள்.
  10. குறும்பட போட்டியில் பங்கேற்க வாய்ப்பு :: சென்னையில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி மையத்தின் (SCARF) போட்டி
  11. நெரிசலை சமாளிக்க துணை நகரத்துக்கு மாற்றாக புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம்- அரசுக்கு யோசனை :: வி. கிருஷ்ணமூர்த்தி

சென்ற வார செய்தித் தொகுப்பு


| |

Common Man’s Sep. 11 Impact


நன்றி: Hutch Owen – Let’s Get Furious

நன்றி: BBC NEWS | Special Reports | 629 | 629 | How 9/11 changed America: In statistics


| | | |

Creamy Layer Exclusion for BCs – Veeramani & KM Vijayan

Dinamani.com – TamilNadu Page

வசதியுள்ளோருக்கு இடஒதுக்கீடு மறுக்கும் பரிந்துரை கூடாது: வீரமணி எதிர்ப்பு

சென்னை, செப்.12: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு தருவது தொடர்பான அறிக்கையில், பணவசதி படைத்தோருக்கு விலக்கு அளிக்கும் பரிந்துரையை ஏற்க முடியாது என தி.க. தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உயர் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு தருவது தொடர்பான அறிக்கையை செப்.15-ல் அரசுக்கு சமர்ப்பிக்கப் போவதாக, அதற்கான குழுவின் தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

பணவசதி படைத்தோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தையும் இதில் சேர்க்கப் போவதாகத் தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் நீண்ட நேர விவாதத்துக்குப் பிறகு, இதுபோன்ற திட்டத்தைச் சேர்க்க வேண்டியதில்லை என முடிவு செய்யப்பட்டது. எனவே, மேற்படி திட்டத்தை பரிந்துரையில் சேர்ப்பது, இந்த முடிவுக்கு முரணானதாகும்.

திறந்த போட்டிக்கோ அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவுக்கோ இதுபோன்ற திட்டம் ஏதும் இல்லை. அதுதான் சரியான சமூக நீதியாகும். பிற்படுத்தப்பட்டவர்கள் மீது மட்டும் ஏன் இந்தத் தாக்குதல் தொடுக்க வேண்டும்?

வீரப்ப மொய்லியின் அறிக்கையில் இதுகுறித்த பரிந்துரை இருக்குமானால், நாடு முழுவதும் அந்த அறிக்கையை தி.க. சார்பில் எரிப்போம் என வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பிற்பட்டோரில் வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுதில்லி, செப். 12: பிற்பட்ட வகுப்பினரில், “கிரீமிலேயர்‘ என அழைக்கப்படும் வசதி படைத்தோருக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கடந்த 1992-ம் ஆண்டு மண்டல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பிற்பட்டோரில் வசதி படைத்தோரைக் கண்டறியாத ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் கூறியதை அடுத்து, நீதிபதிகள் ஏ.கே. மாத்தூர் மற்றும் அல்டமாஸ் கபீர் ஆகியோர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தனர்.

“கன்ஸ்யூமர் கேர்’ என்ற நுகர்வோர் அமைப்பு, இதுதொடர்பாக பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. விவரம்:

மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பிற்பட்ட வகுப்பினரில் யாரைச் சேர்ப்பது, உரிய பிரதிநிதித்துவம் உள்ளதா, இல்லையா என்பதைப் பார்த்து, அரசுக்குப் பரிந்துரை செய்வதற்கு ஒரு குழுவை நியமிக்குமாறு மண்டல் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை, அரசைக் கட்டுப்படுத்தும்.

தீர்ப்புக் கூறப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், தமிழகம் மட்டும் அந்தத் தீர்ப்பைப் பின்பற்றவில்லை. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்கிறது. ஆனால், அவர்களில் வசதி படைத்தோர் அதிலிருந்து விலக்கப்படாததால், தகுதியுள்ளவர்களுக்கு அந்த சலுகை கிடைப்பதில்லை. எனவே, பிற்பட்டோரில் வசதி படைத்தோரை அடையாளம் கண்டு, அவர்கள் இட ஒதுக்கீடு பயனை அனுபவிப்பதிலிருந்து நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

US Open Tennis

யு.எஸ். ஓப்பன் டென்னிஸ்

  • ஆனா கோர்னிகோவா மாதிரி பதுமை நடை மட்டும் பயிலாமல், வெற்றியும் கண்டார் மரையா ஷரபோவா
  • மகளிர் & ஆடவர் இறுதிச்சுற்று, ஐந்து மலை கடந்த அகஸிக்கும் பாக்தாதிசுக்கும் இடையேயான இரண்டாம் சுற்று என்று மூன்று ஆட்டங்களை மட்டுமே தொலைக்காட்சியில் பார்க்க நேரம் கிடைத்தது.
  • பெக்கர் வெல்ல வேண்டும் என்று பிரார்தித்த காலந்தொடங்கியே, முக்கிய தருணங்களில் ஓரிரு புள்ளிகளை தட்டிச் சென்றால், ஆட்டத்தை வென்று விடலாம் என்று அறிந்திருந்தேன். அந்த அதிமுக்கிய 30-40 கணக்கு சமயத்தில், நிதானம் தவறாமல், பதறாமல், தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்பவர்களைப் பார்த்தால் பொறாமை கலந்த ஆச்சரியம் வருகிறது.
  • இறுதியாட்டத்தின் மூன்றாவது செட். 6-5 என்று பின்தங்கியிருந்தாலும் சொந்த சர்வீஸை தக்கவைத்தால் டை ப்ரேக்கருக்கு இழுத்து விடலாம். தடாலடியாக 0-40 என்று ரோடிக் சரியும்படி, தன்னுடைய ஆட்டத்தினை உயர்த்திக் காட்டுகிறார் ரோஜர் ஃபெடரர். அதுவரை பரிமளித்து வந்த ஆண்டி ரோடிக் சின்ன சறுக்கலில் தன்னம்பிக்கை இழந்து ஆட்டத்தைக் கைவிடுகிறார்.
  • மகளிர் இறுதியில் மரியாவின் வீச்சுக்கு ஜஸ்டினால் (Justine Henin-Hardenne) ஈடே கொடுக்கமுடியவில்லை. தன் அழகை நன்கறிந்தவர், ஈவினிங் கௌன் மிளர ஒவ்வொரு ஆடையில் தோன்றினாலும், ‘ஆட்டத்தின் மேலே கண் வையடா தாண்டவக்கோனே’ என்று நிறைவாக வென்றார். கடந்த முறை சந்தித்தபொழுதெல்லாம் இதே ஜஸ்டினிடம் ஜகா வாங்கி மண்னைக் கவ்வியதை நினைத்து மிரளாமல், எடுத்தவுடன் தோல்விமுகமாக 0-2 என்று தடம்புரண்டாலும், பொறுமையாக முன்னேறி, உணர்ச்சிகளைப் புதைக்காமல் வெளிப்படுத்தி, சிறப்பான ஆட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • பிபிசி செய்தி: ஐம்பதினை எட்டும் நவரடிலோவோ ஐம்பது ஒன்பது பட்டங்களுடன் விடைப்பெற்றார் – ஓய்வு பெறும் வயதே அல்ல. இன்றும் ஆடினால் கூட, எதிராளி கெலிப்பது கஷ்டம்தான்.
  • The Unsung Hero : outlookindia.com – மார்ட்டினாவுக்கு சற்றும் சளைத்தவரல்ல இந்தியாவின் லியாண்டர் பியஸ். சானியா, சச்சின் என்று ஈயங்கள் மிளிரும் காலத்தில் இவருக்கு இந்தியாவில் கிடைக்கும் மரியாதை சற்று குறைச்சல்தான்.


    | |

  • Vettaiyaadu Vilaiyaadu – Madhavan’s Review

    சொதப்பல் விளையாட்டு – மாது

    வெள்ளித்திரையில் ‘வேட்டையாடு விளையாடு‘ கண்டு களித்த சக பாஸ்டனார் மாதுவின் மடல்.

    தலைப்பை படித்துவிட்டே புரிந்திருக்கும். வேறு தலைப்பு தோன்றவில்லை – மன்னிக்கவும். பலருக்கு புரிந்திருக்கும் வேட்டையாடு விளையாட்டை பற்றிய கட்டுரை என்று. விறுவிறுப்பாக ஆரம்பிக்கின்றது கதை. கொடூரமான கொலை. துப்புத் துலக்க வருகிறார் உயர் காவலதிகாரி. பிணத்தைக் கண்டுபிடிக்கிறார். அதற்குப் பிறகு படம் நகர மறுக்கின்றது. ஏதேதோ காட்டி படத்தை கஷ்டப்பட்டு நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர். (பார்வையாளர்கள் இஙகேயே வெளியே செல்லலாம்)

    மிக வலுவான கதை முடிச்சை வைத்துக்கொண்டு, அதை அவிழ்ப்பதில் தவறியிருக்கிறார்கள். கொடூரக் கொலைகளுக்கு வலுவான காரணத்தையும், வில்லனையும் முன் வைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம் (Hannibalன் படத்தை வில்லனின் அறைச் சுவற்றில் ஒட்டி விட்டால், வில்லன் ஒரு Hannibal Lecterஆக ஆகிவிடமுடியாது). வில்லனை கண்டுபிடிக்கும் விதத்தில் எந்தவித நுட்பமும் இல்லாதது ஒரு thrillerன் மிகப் பெரிய குறை. வில்லனின் கதாபாத்திரம் மிக மெலிதாக படைக்கப் பட்டிருக்கிறது. தலை நிறைய முடி வைத்துக் கொண்டு இரைந்து பேசினால் (பேசுவது பாதி புரியவில்லை) சைகோ வில்லனாக ஆகி விட முடியாது. நடு நடுவே வில்லன் தான் ஒரு மிகச் சிறந்த மருத்துவராக் உலகை சாவிலிருந்து காப்பாற்றப் போகிறேன் என்று வசனம் பேசுகிறார், எதற்கு என்று புரியவில்லை. ஒரு வேளை பார்வையாளர்களை சைகோ ஆக்கப் பார்க்கிறார்களோ?

    கமல்-ஜோதிகா காதல் filler valueக்காக சேர்த்திருப்பது போலிருக்கிறது. ஏற்கனவே தோய்ந்த கதையே மேலும் தொய்ய வைக்கிறது. படத்தில் இருந்த சிறு விறு விறுப்பையும் போக்கி விடுகிறது.

    கதாநாயகன் மிகவும் கஷ்டப்படாமல் வில்லனை கண்டுபிடித்து விடுகிறார். இங்கேயாவது படத்தை முடித்திருக்கலாம். பார்வையாளர்கள் மகிழ்ந்திருப்பார்கள். “ஒ…இன்னும் இரண்டரை மணி நேரம் முடியவில்லையா இன்னும் கொஞ்சம் இழுப்போம்” என்று வில்லனை தப்பிக்க விடுகிறார்கள். அதற்குப் பிறகு ஒரிரு தமிழ்ப் படங்களைப் பார்த்திருந்தால் கூட முடிவை யூகித்திருக்க முடியும்.

    படத்தில் ஒரிரு நிறையும் இருக்கிறது – ப்ரகாஷ்ராஜின் நடிப்பு (அழுகைப் பயிற்சி கமலா?), ஜோதிகாவின் அலட்டலில்லா நடிப்பு, ந்யூ யார்க் ஒளிப்பதிவு, கமலின் தொப்பை.

    இந்த படத்திற்கு ப்ராயச்சித்தமாக கமலும் கௌதமும் தனித்தனியாக ஒரு நல்ல படத்தை எடுத்து தமிழ்த் திரையுலகிற்கு சமர்ப்பிக்க கடவதாக.


    | | |

    1000 Years from Now: Desires & Predictions

    தெரியல! :: இன்னும் ஆயிரம் ஆண்டுகளில்… என்ன நடக்கும் என்று கேட்கிறார்.

    விரிவாக நிதானமாக எழுதி முடிக்கும் வரை… உடனடியாக தோன்றியது:

    நன்றி: Baldo – Online Comics

    என்னை விட சிறப்பாக அலசும் ஐவரை இப்பொழுதே சொல்லிவிடுகிறேன்:

    1. வெங்கட்
    2. முத்து (தமிழினி)
    3. உஷா
    4. கே வி ராஜா
    5. தமிழ் சசி


    | |

    Karunanidhi vs Jayalalitha – War of Press Releases

    Dinamani.com – TamilNadu Page

    அதிமுக ஆட்சிக் காலத்தில் கோப்புகள் தேங்கியிருந்ததை நிரூபிக்கத் தயார்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

    சென்னை, செப். 9: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் அதிக கோப்புகள் தேங்கியிருந்தன என்பதை நிரூபிக்கத் தயார் என முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில்தான் கோப்புகள் தேங்கியிருந்ததாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

    இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை விவரம்:

    எனது ஆட்சிக்காலத்தில் கோப்புகள் தேங்கியிருப்பதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டு உண்மையல்லை என்பதை பத்திரிகையாளர்கள், படித்தவர்கள், அதிகாரிகள் ஆகியோரடங்கிய பிரதிநிதிகள் குழு முன்னர் நிரூபிக்கத் தயார். எனது குற்றச்சாட்டு பொய் என்றால், அந்தக் குழு கூறுகிற தண்டனையை ஏற்கவும் தயார்.

    ஓய்வுபெற்ற அதிகாரிகளைப் பணியில் அமர்த்தியிருப்பதாக அவர் அநாகரிகமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். என்னிடம் பணியாற்றும் 5 செயலாளர்களில் ஒருவர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நான்கு ஆண்டுக்காலம் வேண்டுமென்றே பழிவாங்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியில் நியமிக்கப்பட்டிருந்தவர். மற்றொருவர் என்னிடம் 35 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றுபவர். அதிமுக ஆட்சிக் காலத்தில் 9 ஆண்டுக்காலம் பணி நீக்கம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டவர்.

    ஜெயலலிதாவும், தனது ஆட்சிக் காலத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகளான ஜானகி ராமன், தேவாரம் ஆகியோரை பணியில் அமர்த்தியிருந்தார்.

    மேலும் யாருடைய ஆட்சிக் காலத்தில் டிஜிபி-யும், உள்துறைச் செயலாளரும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது பொதுமக்களுக்கு நன்றாகத் தெரியும்.

    பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதற்காக டிஜிபி ரவீந்திரநாத் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மையிலேயே அவர் தவறு செய்திருந்தால் பணி நீக்கம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளாக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கான காரணம் ஏன் என்பது தெரியவில்லை.

    உள்துறைச் செயலாளராக இருந்த முனீர் ஹோதாவை தாற்காலிகப் பணி நீக்கம் செய்த உத்தரவை மத்திய அரசே மேற்கொள்ள மறுத்துவிட்டது. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் முனீர் ஹோதா துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டது குறித்து மசூரியிலுள்ள ஐஏஎஸ் பயிற்சிக் கழகத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

    இதேபோல சிறுபான்மையோர் உரிமை நாள் கொண்டாட வேண்டுமென்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. சிறுபான்மையோர் உரிமை நாளைக் கொண்டாட ரூ. 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யும்படி ஜனவரி 4, 2005-ல் கோப்பு ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டது. ஓராண்டுக்காலம் அந்த கோப்பு முதல்வர் அலுவலகத்திலேயே கையெழுத்தாகாமல் இருந்தது. தற்போது செப்டம்பர் 6-ம் தேதி அந்த கோப்பில் நான் கையெழுத்திட்டேன்.

    திருவனந்தபுரத்தில் நடைபெற்றது முதலமைச்சர் மாநாடு அல்ல. 11-வது ஐந்தாண்டு திட்டத்திற்கான வரைவு அணுகுமுறை ஆவணத்தை பரிசீலிப்பதற்கான வட்டாரக் கலந்தாய்வுக் கூட்டம்தான். இம்மாநாடு ஜூலை 22-ம் தேதி நடைபெற்றது. அதே நாளன்று தமிழக சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் காரணமாக, எனக்குப் பதில் இக்கூட்டத்தில் தமிழக திட்டக் குழு துணைத் தலைவரான நாகநாதன் பங்கேற்றார்.

    ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற கூட்டங்களில் முதலமைச்சரான அவரோ அல்லது நிதி அமைச்சரோ ஒரு முறை கூட பங்கேற்றது கிடையாது.

    இம்மாதம் 5-ம் தேதி தில்லியில் நடைபெற்ற முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காதது குறித்து ஜெயலலிதா கேள்வியெழுப்பியுள்ளார். கடந்த 4-ம் தேதி குடியரசுத் தலைவர் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் இரண்டில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. இதனால் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    ஆனால் 2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தில்லியில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநாட்டில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.


    எனது ஆட்சியில் கோப்புகள் தேக்கமடையவில்லை: நிரூபிக்கத் தயார்- ஜெ. அறிவிப்பு

    சென்னை, செப். 9: எனது ஆட்சியில் கோப்புகள் தேக்கமடையவில்லை. இதை பத்திரிகையாளர் முன்னிலையில் தெளிவுபடுத்தத் தயார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    முதல்வருக்கு உதவி செய்ய சில ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வர் அலுவலகத்தில் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்குப் பல துறைகளிலிருந்து கோப்புகள் அனுப்பப்படும். அந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணி நிமித்தமாக பல துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கும். சம்பந்தப்பட்ட கோப்புகளை அந்தந்த துறை பொறுப்புள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுதான் நடைமுறை.

    ஓய்வு பெற்ற அதிகாரிகளைப் பல காரண காரியங்களையும் ரகசிய சவுகரியங்களையும் முன்னிட்டு முதல்வர் கருணாநிதி தற்போது நியமித்து இருப்பது போல் நான் செய்யவில்லை. அம்மாதியான தேவைகள் எனக்கு இல்லை. எனவே ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேவையில்லை என்று முடிவு செய்து இன்றைக்கும் பணியில் இருக்கின்ற 5 ஐஏஎஸ் அதிகாரிகளை என் அலுவலகத்தில் பல்வேறு துறை சம்பந்தப்பட்ட நிர்வாக விஷயமாக எனக்கு உதவி செய்ய நியமித்து இருந்தேன். நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கோப்புகள் தேங்கியதாகவோ கோப்புகள் மீது நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றோ எந்த பேச்சும் கிடையாது.

    என்னிடம் பணியாற்றிய அதிகாரிகள் தங்கள் துறை சம்பந்தபட்ட கோப்புகளை அதற்கு உரிய நாள்களில் அதனுடைய அவசியம் கருதி, தன்மை கருதி என் கவனத்துக்குக் கொண்டு வந்து என் உத்தரவினை அவ்வப்போது பெற்றிருக்கின்றனர். கருணாநிதி சொல்வது போல் கோப்புகள் தேங்கி இருக்க வேண்டிய அவசியம் என் நிர்வாகத்தில் இல்லை.

    இன்றைய சூழ்நிலையில் என்னிடம் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகளையும் வைத்துக் கொண்டு அந்தக் கோப்புகளை என்னிடம் காட்டினால் பத்திரிகையாளர் முன்னிலையில் அது எந்தக் கோப்பு, என்ன காரணம் காட்டி பைசல் செய்யப்பட்டது என்ற விவரங்களை என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். இதையெல்லாம் விடுத்து வீண்பழி போடுவதும் அவதூறு செய்து கொண்டிருப்பதும் எந்த விதத்திலும் உண்மையாகிவிடாது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


    தில்லி முதல்வர்கள் மாநாட்டில் கருணாநிதி கலந்து கொள்ளாதது ஏன்? ஜெ.

    சென்னை, செப். 9: உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரம் இருக்கும்போது பிரதமர் கூட்டிய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் கருணாநிதிக்கு நேரமில்லையா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார்.

    இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    கருணாநிதி முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு இரண்டு முதலமைச்சர்கள் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரண்டிலும் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் தமது சொந்தக்காரர் நாகநாதனை, எந்தவித ரகசிய காப்புப் பிரமாணமோ அல்லது பதவி ஏற்பு உறுதிமொழியோ எதுவும் எடுத்துக் கொள்ளாத, எந்த விதத்திலும் அரசின் அன்றாட நிர்வாகத்துக்குச் சம்பந்தம் இல்லாத நாகநாதனை, உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக கருணாநிதி அனுப்பி வைத்தார்.

    கடந்த செப்டம்பர் 5-ம் தேதி தில்லியில் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடந்தது. உள்நாட்டு பாதுகாப்பு பற்றி கலந்தாலோசனை செய்ய இந்த மாநாடு நடைபெற்றது. இதிலும் முதல்வர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பாக எந்த அமைச்சரும் கலந்துகொள்ளவில்லை. தலைமைச் செயலாளர் மட்டும் கலந்துகொண்டார்.

    உறவினரின் முடிவெட்டும் நிலையத்தைத் திறந்து வைப்பதற்கு நேரம் இருந்த கருணாநிதிக்கு, உள்நாட்டு பாதுகாப்பு பற்றிய விஷயத்தில், பிரதமர் கூட்டிய முதல்வர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு நேரமில்லை. என்னே தமிழர்கள் பாக்கியம். இவருடைய அமைச்சரவையில் ஆட்டுக்கு ஒரு மந்திரி, ஆட்டு தாடிக்கொரு மந்திரி, மாட்டுக்கு ஒரு மந்திரி, மாட்டு கொம்புக்கு ஒரு மந்திரி என 30 அமைச்சர்கள் உள்ளனர். இந்த 30 பேரில் ஒருவர் கூட உள் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இரண்டு நாள் மாநாட்டில், அதுவும் பிரதமர் கூட்டிய கூட்டத்தில் கலந்துகொள்ள நேரம் இல்லை.

    இவ்வகை மாநாடுகளை எப்போதுமே நான் புறக்கணித்ததில்லை. ஏறக்குறைய அனைத்து உயர்மட்டக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன்.

    ஆனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்த இந்த 100 நாள்களில் இரண்டு முறை நடந்த முதல்வர்கள் மாநாடுகளுக்கு இரண்டு முறையும் இவர் போகவில்லை. நிர்வாகத்தைப் பற்றி இவருக்குத் துளியும் கவலை இல்லை. தமிழகத்தில் பயங்கரவாதம் வலுவாக கால் பதித்துவிட்டது என்பதை இந்த 100 நாள்களில் நாம் பார்த்து விட்டோம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

    Seevaga Sinthamani – Final Part

    சீவக சிந்தாமணி

    1. Part 14 - this is an audio post - click to play
    2. Part 15 - this is an audio post - click to play
    3. Part 16 - this is an audio post - click to play
    4. Part 17 - this is an audio post - click to play
    5. Part 18 - this is an audio post - click to play
    6. Part 19 - this is an audio post - click to play
    7. Part 20 - this is an audio post - click to play
    8. Part 21 - this is an audio post - click to play
    9. Part 22 - this is an audio post - click to play
    10. Part 23 - this is an audio post - click to play

    இன்னொரு முறை முழுவதாக மீண்டும் கேட்க வேண்டும். மாந்திரீக எதார்த்தவாதத்தின் அம்சங்களோடு அமைந்திருப்பதை அலச வேண்டும். ஹாரி பாட்டரின் மாயாஜாலங்களும் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மாயாவாதங்களையும் மிஞ்சும் மசாலாவோடு எழுதியிருக்கிறார்.

    தசாவதாரத்துக்கு பத்து நாயகி கொண்டு வருவது கூட சீவகன் செய்திருக்கிறான். கமல் மாதிரியே வித வித வேடம் தரிக்கிறான். கிழவனாய், மீன் இனமாய், கூடு விட்டு கூடு பாய்கிறான். டூயட் பாடுகிறான். டிஷ்யூம் போடுகிறான். அம்மா செண்டிமெண்ட் உண்டு. நகைச்சுவைக்கு நண்பர் குழாமும் இருக்கிறது.

    அற்புதத் தீவு‘, இம்சை அரசன் தொடர்ந்து சீவகனும் வெள்ளித்திரையில் வந்தால் உலக மகா மசாலா கிடைக்கும்.

    Seevaga Chinthamani – Audio Post :: சீவக சிந்தாமணி காப்பியத்தின் முதல் பகுதி

    | |

    BJP might Politicize? Sonia Gandhi Absent in the Vnade Matharam Anniversary Celebrations

    Dinamani.com – Headlines Page

    வந்தே மாதரம் நிகழ்ச்சியில் சோனியா பங்கேற்காததை பாஜக பிரச்சினை ஆக்கும்?

    டேராடூன், செப். 8: வந்தே மாதரம் பாடல் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்காததை, பிரச்சினை ஆக்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.

    தில்லியில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த வந்தே மாதரம் பாடல் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சோனியா கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் ஏனோ அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

    சோனியாவின் இந்த நடவடிக்கை பாஜகவுக்கு நிச்சயம் ஆதாயம் அளிக்கும் என டேராடூனில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்துக்கு வந்துள்ள அக் கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.

    காங்கிரûஸ தாக்குவதற்கு இது ஓர் ஆயுதமாகப் பயன்படும் என்றார் அவர். செயற்குழுவுக்கு முன்னதாக நடைபெற்ற கட்சி தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், வந்தே மாதரம் பாடல் பிரசார இயக்கத்துக்கு என தனியாக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அருண் ஜேட்லி, வெங்கைய நாயுடு, சஞ்சய் ஜோஷி, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் இக் குழுவில் உள்ளனர்.