Daily Archives: ஜனவரி 16, 2006

Jeyamohan 

Jeyamohan Posted by Picasa

Jeyamohan 

Jeyamohan Posted by Picasa

Jayamohan Books by Thamizhini 

Jayamohan Books by Thamizhini Posted by Picasa

ஜெயமோகன்

Jeyamohanஜெயமோகன் 1962 ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி குமரி மாவட்டம் திருவரம்பு கிராமத்தில் பிறந்தார்.

பெற்றோர்: எஸ். பாகுலேயன் பிள்ளை – பி. விசாலாட்சி அம்மா.

வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்த அவர் படிப்பை முடிக்கவில்லை. 1981 டிசம்பரில் வீட்டை விட்டுத் துறவியாகச் சென்று மூன்று வருடங்கள் அலைந்தார். 1984 நவம்பரில் கேரளத்தில் காசர்கோடு நகரில் தொலைபேசித் துறையில் உதவியாளராக தற்காலிக வேலையில் சேர்ந்தார். 1988 நவம்பரில் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகிவந்து தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பணியாற்றத் தொடங்கினார்.

மனைவி: அருண்மொழி நங்கை
குழந்தைகள்: அஜிதன், சைதன்யா

1997 முதல் நகர்கோவில் வாசி.

ஜெயமோகனின் முதல் சிறுகதைத் தொகுப்பு

  • ‘திசைகளின் நடுவே’ 1991-இல் வெளிவந்தது.
  • ‘மண்’ (1995),
  • ‘ஆயிரங்கால் மண்டபம்’ (1998),
  • ‘கூந்தல்’ (2003) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும்
  • ‘விஷ்ணுபுரம்’ (1997),
  • ‘பின்தொடரும் நிழலின் குரல்’ (1999),
  • ‘கன்னியாகுமரி’ (2000),
  • ‘காடு’ (2003),
  • ‘ஏழாம் உல்கம்’ (2004)
  • ‘கொற்றவை’ (2005) ஆகிய நாவல்களும் வெளிவந்துள்ளன.

    Jayamohan Books by Thamizhiniபத்து திறனாய்வு நூல்களையும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.

  • ‘இலக்கிய முன்னோடிகள் வரிசை’யில் ஏழு நூல்கள் 2003இல் வெளிவந்தன.
  • ‘நாவல்’ (1991),
  • ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ (1998),
  • ‘நவீனத் தத்துவத்துக்குப்பின் தமிழ்க் கவிதை – தேவதேவனை முன்வைத்து’ (2001),
  • ‘பனிமனிதன்’ (2002),
  • ‘சங்கச் சித்திரங்கள்’ (2003),
  • ‘இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்’ (2003),
  • ‘வாழ்விலே ஒரு முறை’ (2004),
  • ‘ஜெயமோகன் குறுநாவல்கள்’ (2004),
  • ‘உள்ளுணர்வின் தடத்தில்’ (2004),
  • ‘எதிர்முகம்’ (2004)
  • ‘நினைவின் நதியில்’ (2005) ஆகியவையும் அவரது படைப்புகளில் அடங்கும்.

    மலையாளத்திலும் எழுதிவருகிறார்.

    விருதுகள்

  • ‘ரப்பர்’ நாவலுக்காக ஜெயமோகன் 1989-இல் அகிலன் நினைவுப் பரிசும்
  • ‘ஜகன்மித்யை’ கதைக்காக 1991-இல் ‘கதா’ விருதும் பெற்றார்.
  • 1992-இல் இலக்கியத்துக்கான தேசிய விருதான ‘சன்ஸ்கிருதி சம்மான்’ அவருக்கு வழங்கப்பட்டது.

    தகவல்கள்: ‘ஜெயமோகன் சிறுகதைகள்’ – உயிர்மை


    | |