வதந்திகள் உடலுக்கு நல்லது என சொல்லவும் சிலர் இருக்கிறார்கள். தீநடத்தையை மூட்டை கட்டவும், நட்பை வளர்க்கவும், செய்திகளை சுற்றறிக்கை அனுப்பவும் கிசுகிசுக்கள் பயன்படுகிறது என்கிறார்கள்.
ப்ளாகர் அக்கவுண்ட் ஆரம்பித்து இரண்டாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆயிரம் பதிவுகளை எட்டிப் பிடித்தாச்சு. கிட்டத்தட்ட நூறாயிரம் தடவை பதிவுகள் பார்க்கப்பட்டிருக்கிறது. நானாக எழுதியது நூறாவது தேறும் (தேறுகிறதோ இல்லையோ… நிச்சயம் ‘இருக்கும்’ 🙂
ஒரு வாரம் விடுமுறை விட்டு எழுதியதில் எவ்வளவு fallacy, sophism, ஜல்லி, ஜட்கா, கிசுகிசு என்று எண்ணிப் பார்த்தேன். நேரம் போதவில்லை. இது சரிப்படாது என்று ‘பழைய குருடி; சுவற்றுக் கீரையை வழிச்சுப் போடு’ என்னும் கதையாய் திரும்பி வந்துவிட்டேன்.
எழுதுவது, படிப்பது, பகிர்ந்து கொள்வது, ஒப்பேற்றுவது எல்லாமே மஜாவாகத்தான் இருக்கிறது. ‘அரிப்பெடுத்தவன் கை’ என்று பாரா சொல்வதை ‘வலைப்பதிந்தவன் கீபோர்ட் போல’ என்று மாற்றிக் கொள்ளலாம்.
103 போட உதவியவர்கள் கிட்டத்தட்ட 102வது இருப்பார்கள்.
லிஸ்ட் போட்டாலே மறப்பது சகஜம். (தமிழ்மணம், வலைப்பூ போல) குறிப்பிடாமல் விட்டவர்கள் மேல் உரிமை அதிகம்.
அனைவருக்கும் நன்றி!!!
விடாது …. :-))
தொட்டுக்க ஒரு நியுஸ் :: பெண்களை கேலி – கிண்டல் செய்து பாடல், வாலி – பா.விஜய் உள்பட சினிமா கவிஞர்கள் மீது திடீர் வழக்கு!











