Monthly Archives: ஜனவரி 2004

எனக்குப் பிடித்த பாடல்கள்

1. பூங்குருவி பாடடி; சுக ராகம் தேடித்தான் – சுந்தர காண்டம்

2. அன்பெனும் மழையிலே – மின்சார கனவு

3. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு – விடுதலை

4. காற்றில் எந்தன் கீதம் – ஜானி

5. மந்திர புன்னகையோ, மஞ்சள் நிலவோ – மந்திர புன்னகை

6. தீர்த்தக்கரையினிலே – வறுமையின் நிறம் சிகப்பு

7. அக்கம்பக்கம் பாரடா – உன்னால் முடியும் தம்பி

8. கவிதைகள் சொல்லவா – உள்ளம் கொள்ளை போகுதே

9. அடி பெண்ணே – முள்ளும் மலரும்

10. வேறு இடம் தேடிப் போவாளோ? – சில நேரங்களில் சில மனிதர்கள்

11. கண்டதை சொல்லுகிறேன் – do –

12. சிந்தனை செய் மனமே – ???

13. சுந்தரி சௌந்தரி நிரந்தரியே – தூக்கு தூக்கி

14. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் – மலைக் கள்ளன்

15. வாராங்கோ… வாராங்கோ – செந்தூரப் பூவே

16. My Name is Birlaa – பிர்லா

17. ஆசை நூறு வகை – (அடுத்த வாரிசு?)

18. நானாக நானில்லை தாயே – தூங்காதே தம்பி தூங்காதே

19. சக்கரை நிலவே – யூத்

20. வேதம் நீ! இனிய நாதம் நீ – ???

21. பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன் – ???

22. அது இருந்தா இது இல்லே… இது இருந்தா அது இல்லே. – ???

23. இதோ இதோ என் வாழ்விலே – வட்டத்துக்குள் சதுரம்

24. வாழ்வே மாயமா? வெறுங்கனவா? – காயத்ரி

25. மேரா நாம் அப்துல் ரெஹ்மான் – சிரித்து வாழ வேண்டும்

26. உனக்கென்ன குறைச்சல் – வெள்ளி விழா

27. கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு – வெற்றி கொடி கட்டு

28. கொஞ்ச நாள் பொறு தலைவா – ஆசை

29. முத்தைத் தரு – அருணகிரிநாதர்

30. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் – ???

31. அழகிய கண்ணே – உதிரிப்பூக்கள்

32. பூமாலையே தோள் சேரவா –

33. நான் தேடும் செவ்வந்திப் பூவிது –

34. அகரம் இப்போ சிகராமாச்சு – சிகரம்

35. ஒரு கிளி உறங்குது; உரிமையில் பழகுது. ஓ மைனா – கீதாஞ்சலி

36. ஆண்டவனைப் பார்க்கணும் – ???

37. காதல் என்பது பொதுவுடமை – பாலைவன ரோஜாக்கள்

38. ஆறும் அது ஆழமில்ல – ???

39. சோலை புஷ்பங்களே – ???

40. வைகைக் கரை காற்றே நில்லு – ??? (தங்கைக்கோர் கீதம்?)

படம் தவறு என்றாலோ, இடாத படங்கள் தெரிந்தாலோ

சொல்லுங்கள்.

கடந்த வருடத்தில்… (புலம்பல் – 1)

மரத்தடியில் ஒன்றைத் தேடப் போகையில் என்னுடைய பழைய மடல்களைக் கிண்ட கொஞ்சம் நேரம் கிடைத்தது. கடந்த ஒரு வருடத்தில் சினிமாவை குறித்தே அதிக அளவில் எழுதியுள்ளேன். திரைப்படம் அது சார்ந்த பாடல்களைத் தவிர வேறு எதற்கும் பதிலும் ஒழுங்காகத் தருவதில்லை. பரவாயில்லை… ஒன்றிலாவது ஏதோ கொஞ்சம் கிறுக்க முடிகிறதே!

ஈ-கலப்பையில் யூனிகோட்

புதிய தட்டெழுத்து விசைபலகையை எ-கலப்பையில் பூட்ட, கீழ்கண்ட முறையினை பின்பற்றுங்கள்.

1. UNICODETAMIL.kmx

Alternate Location

என்ற வலைசுட்டியில் இருந்து UNICODETAMIL.kmx(அல்லது வேறு தேவையான .kmx கோப்பு) என்ற கோப்பை வலையிறக்கி உங்கள் கணினியில் சேமித்துவைத்துக்கொள்ளுங்கள்.

(Do a Right Click on the Link and ‘Save Target As…’)

2. எகலப்பை இயக்கத்தில் இருக்கிறதா என சரிபார்த்து, இயக்கத்தில் இல்லை என்றால் ஓடவிடுங்கள்.

3. உங்கள் கணினியில் வலதுகை பக்கம், கீழ் ஓரத்தில் எகலப்பையின் ‘அ’ அல்லது ‘k’வடிவம் இருக்கும் அல்லவா, அதன் மேல் mouse pointerஐ வைத்து , right click செய்யவும், அப்போது தோன்றும் சிறு சாளரத்தில், “keyman configuration”ஐ தேர்ந்தெடுக்கவும்.

4. பிறகு வரும் ‘Tavulte soft configuration’ சாளரத்தில் , “install keyboard” பொத்தானை அழுத்தவும்.

5. பிறகு இந்த “UNICODETAMIL.kmx” டைப்ரைட்டர் கீபோர்டை கோப்பை தெரிவு செய்து ‘ok’ பொத்தானை தட்டினால், புதிய கீபோர்ட் நிறுவிவிடும்.

6. ‘Keyboard Details’ பகுதியில் உங்களுக்குத் தேவையான குறுக்குவழியை(Shortcut) தேர்ந்தெடுங்கள். நான் பயன்படுத்துவது

டிஸ்கி: Ctrl + Alt + 2

யூனிகோட்: Ctrl + Alt + 3

ஆங்கிலம்: Ctrl + Alt + 1

பிறகு புதிய கீபோர்டை எகலப்பையில் பயன்படுத்தலாம்.

7. பின்னூட்டங்கள் பகுதியில் நேரடியாக யூனிகோட் பயன்படுத்தலாம். யூனிகோட் சில சமயம் நோட்பேடில் சரியாக அடிக்க முடியாமல் போகலாம். Wordpad பயன்படுத்தி பாருங்கள்.

எழுதியவர்: முகுந்தராஜ் (mugunth@thamizha.com)

தேதி: 04 மார்ச் 2003

சில இடைச் செருகல்கள்: பாலாஜி (bsubra@india.com)

புதுகோட்டையிலிருந்து சரவணன்

பாடியவர்கள்: குணால், ஹேமா சர்தேசாய், நிதிஷ் கோபால், யூகி

இசை: யுவன் ஷங்கர் ராஜா

M:

ஆ…

நாட்டு சரக்கு நச்சுனுதான் இருக்கு

கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுனு தான் இருக்கு

M 1:

புதியதா பாடுடா மச்சி

M:

கோரஸ் 1:

நாட்டு சரக்கு நச்சுனுதான் இருக்கு

கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுனு தான் இருக்கு

தங்கக் குடமே தஞ்சாவூரு கடமே

மந்திரிச்சு விட்டுப் புட்ட மலையாளப் படமே!

கோரஸ் 2:

என்ன சைஸு இது மாமேய்

என்ன வயசு இது,

அய்யே ஐஸு இது ஆமா

ரொம்ப நைசு இது

நெஞ்சை நசுக்கி

கண்ணை அசக்கி

என்னை மசாஜுதான் செஞ்சி புட்டாளே

கோரஸ் 1

பள்ளிக்கூடத்தில நாங்க பழுத்த பிஞ்சுங்கதான்

ஓன்னா பாத்ததுலே லேசா கொதிக்கும் நெஞ்சுலதான்

F:

ஆறடி சந்தையிலே தினமும் அல்வா வித்தவதான்

ஆட்டு மந்தையில இருந்து ஆனைப் புடிச்சவதான்

ஹோய்….

M:

ஓட்டை பாலத்தில் ஊதும் பீடி தான்

ரயிலு புகையாக தான் விட்டோமடி

F:

காட்டு பல்லத்தில் கள்ளன் புடிக்கவே

கொத்தும் மைனாவும் சுட்டோமடா

M:

மஞ்ச கிழங்கே, மச்சினி உன் உடம்பா

நெஞ்சுக்குள்ளே வீடு கட்டி நிக்கிறியே குறும்பா

பச்ச நரம்பா பத்தினி நீ கரும்பா

உன்னுடைய முதுகில ஒட்டிக்கிறேன் தழும்பா

G:

ரரரறே….ஆ…

லுளுலு…

போடு….

அமுக்கிப் போடு….

M:

வாடி வஞ்சியம்மா நெஞ்சை வலைச்சிப் பூட்டிகிட்டே

இடுப்பில் மடிப்பு இல்லே எங்க இஸ்திரி போட்டுகிட்டே

F:

அரும்பு மீசையில நீதான் ஆளத் தூண்டி விட்ட

அருணாக் கைத்துலதான் என்ன கட்டிப் போட்டுபுட்ட

M:

சுருக்கு பைய்யில சுருக்கு பைய்யில

சுருங்கிப் போவோமே உன் கைய்யில

F:

அடுத்தத் தையிலே வீட்டில் சொல்லித்தான்

பொண்ண பாத்துக்கோத் தங்கத்தில

M:

கோரஸ் 1

கோரஸ் 2

கோரஸ் 1

M 2:

ஹேய் வாந்தி எடுக்காதே மடையா…

அர்மீனியாவுக்கும் அணுகுண்டு: பாக். புது திட்டம்

பாராவின் பதிவை பிரதிபலிக்கிறது

டைம்ஸ்.

* பாகிஸ்தானுக்கு என்றுமே தனி வழி. வட கொரியா, ஈரான், லிபியா

என்று பல நாடுகளுக்கு அணு அயுத தொழில் நுட்பத்தை தாரை

வார்த்துள்ளது.

* ரஷியாவிற்கு எதிராக ஒரு நட்பு நாட்டின் அவசியம் கருதி கண்டுக்காமல்

விட்டு விட்டிருந்தார்கள்.

* நெதர்லாண்ட்ஸில் இருந்து 1976-இல் பாகிஸ்தான் திரும்பிய முனைவர் கான்

பல முக்கியமான வடிவமைப்புகளைத் திருடி எடுத்துக் கொணர்ந்துதான் முக்கிய

திருப்பம்.

* ‘மேற்கத்திய நாடுகளின் எதிரி பாகிஸ்தான் மட்டுமல்ல; ஒட்டுமொத்த

இஸ்லாமுக்கும் எதிரிகள்’ என்கிறார் கான்.

* யூரேனியம் செண்ட்ரி·ப்யூஜ்களை தயாரிக்கும் வித்தைகளை

‘யான் பெற்ற இன்பம் …’ என 1998-இல் கான் அறிவியில் சஞ்சிகைகளில்

வெளியிட்டு விடுகிறார்.

* 1987-இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், இந்தியாவை

மிரட்டவும் எச்சரிக்கவும் பயன்படுகிறது.

* ‘அழுகிற பிள்ளை பால் குடிக்கும்’ என்பது போல் அமெரிக்க உளவுத் துறை

1986-இல் பாகிஸ்தானிடம் அணுகுண்டுக்கான யூரேனியம தயார் என்ற அறிக்கை

சமர்ப்பிக்கப் பட்டவுடன் நான்கு பில்லியன் (அம்மாடியோவ்…) டாலர் உதவித்

தொகை வழங்கப் படுகிறது.

* சைனாதான் எல்லாவற்றிற்கும் கால்கோள் போட்டது. 1960-இலேயே

பக்கத்து வீட்டுக்காரருக்கு அணுகுண்டுகள் தயரிக்க பாலபாடம் ஆரம்பித்தது.

* பதிலுக்கு உதவி செய்ய முனைவர் கானும் தான் எடுத்து வந்த ஐரோப்பிய

வடிவமைப்புகளை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறார்.

* மாப்பிள்ளை கொடுத்து மருமகள் எடுப்பது போல் வட கொரியாவிடம்

ஏவுகணை வித்தையை வாங்கி செண்ட்ரி·ப்யூஜ் நுட்பங்களைத் தர

ஒப்புக் கொண்டார்கள்.

* முஷார·ப்பை இதுவரையில் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாமல் இருக்க இவற்றை

பொதுஜனத்திற்கு வெளியிடுவதை தவிர்த்து வந்தவர்கள், இப்பொழுது டைம்ஸ்,

போஸ்ட் இன்ன பிற நாளிதழ்கள் மூலம் அமெரிக்கர்களை வெளிச்சத்துக்கு

அழைக்கிறார்கள்.

* ஜெர்மானி, இத்தாலி, தாய்வான், ஜப்பான் என்று பல தேசங்கள், கைகள் மூலம்

பொருட்கள் வட கொரியாவிற்கும் மற்ற அமெரிக்க எதிரிகள் கையிலும்

சிக்காமல் தடுக்கிறார்கள். சீனா போன்ற மற்ற நாடுகள் உதவுகிறதா, தடுக்கிறதா

என்று சொல்லவில்லை.

* அமெரிக்காவிற்கு எதிரானவர்கள் அனைவருமே நண்பர்களாக விளங்கி,

ஒற்றுமையோடு, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள்.

பாடம்: அமெரிக்காவை ஏமாற்றுவது எளிது. ஆனால், ஏமாறியதாகக்

காட்டிக் கொள்ளாது.

பாகிஸ்தானின் அனவருக்கும் அணுசக்திக் கொள்கை

நன்றி: நியு யார்க் டைம்ஸ்


A brochure from Dr. Khan’s laboratory, advertising technology used in centrifuges to make nuclear arms, was circulated to aspiring nuclear states and a network of middlemen. It was provided to The New York Times by the Institute for Science and International Security, in Washington.

பெயரிலிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்

காசியின் இன்றைய நியூக்ளியஸ் வலைப்பதிவில்

‘யாரோ’க்களின் இணைய முகவரியை கண்டுபிடிக்கும் வழிகளை சொல்கிறார்.

ஹெரால்ட் ட்ரிப்யூனின் வலைப்பக்கங்களுக்கு

சென்றால் நமது கணினிக்களை நச்சரிக்கும் கிருமிகளையும்,

நாம் செல்லும் அல்லது தடுக்கி விழுந்து விடும் வலைப்பக்கங்களில்

இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகளையும் அறியலாம்.

அரேபியாவில் இருந்து கொண்டு அமெரிக்கா என்றும், வேவு

பார்க்கும் ஓற்று நிரலிகளையும், இன்ன பிற ஜந்துக்களையும்

நம் வலை மேய்தலில் இருந்து காக்க உதவுகிறார்கள். அந்தரங்கம்

புனிதமானது!?

சத்தியமாய் நான் பெயரிலியோ, முதுகெலும்பிலனாரோ அல்ல!

மயூரா நெட் – வலைத்தமிழ் அந்தம்

சுவைத்தவை: ”

‘வள்ளுவர்செய் திருக்குறளை

மறுவறநன்கு உணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மநுவாதி

ஒருகுலத்துக்கு ஒருநீதி’

– மனோன்மணீயம்

திருக்குறளில் அடங்கியுள்ள 1330 குறள்களும் கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியாரின் ஆங்கில மொழியாக்கத்துடனும், பேராசிரியர் – டாக்டர் மு. பெரி. மு. இராமசாமி அவர்களின் எளிய உரையுடனும் பகுதி பகுதியாகப் பிரித்து இவ்வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த இணைப்பினை அழுத்தி அவற்றினைப் பார்வையிடலாம். “

புத்தக அறிமுகங்கள் – ஆர். பொன்னம்மாள் (5)

கடவுளின் கருணை, கல்லுக்குள் ஈரம், புடமிட்ட பொன், மனமாற்றம் முதலான நான்கு கதைகள் கொண்ட முதல் தொகுப்பு பழனியப்பா பிரதர்ஸ் மூலமாக வெளியிடப்பட்டது.

புடமிட்ட பொன்: ஒரு சிறுவன் வீட்டை விட்டுப் போனால் எப்படிபட்ட துன்பங்களை அனுபவிக்க நேரிடும், பெற்றோரை தண்டிப்பதாக எண்ணி அவன் வாழ்க்கையை அவலப்படுத்திக் கொள்ளும் விதத்தை சித்தரிக்கிறது. இதைப் படிக்கும் சிறுவர், சிறுமியர் வாழ்க்கை என்பது, திரைப்படம் அல்ல. பணக்காரன் கையில் செல்லக் குழந்தையாய் வாழ்வோம் என்பது கனவு என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

தந்தை மகனை டேபிள் துடைப்பவனாகப் பார்த்தும் கூட கண்ணீரை சொரியாமல், கட்டிப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வா என்று அழைக்காமல் பேசுவது பெற்றோருக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று உணர்த்தலாம்.

கல்லுக்குள் ஈரம் பொல்லாதவனான ஒரு பையனின் கல் போன்ற மனதிலுள்ள ஈரத்தை ஒரு சிறுமி பொறுமை என்னும் உளி கொண்டு உடைத்து வெளிபடுத்தும் விதத்தை சொல்லும் கதை. (இரண்டாம் பரிசு என்பது சற்றே வயதான குழந்தைகளுக்கு என்பதாலே என்று விழாவில் திரு. எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

கருணை விழிகள்: மோகன் ஏழைச் சிறுவன். சென்னைக் கடற்கரையில் சுண்டல் விற்பவன். பெற்றோரை இழந்த அவனுக்கு பாட்டி மட்டுமே உறவு. ஏழையாலும் பிறருக்கு உபகாரமாக வாழ முடியும் என்பதை உணர வைக்கும் நாவல். பாட்டியின் கருணை நிரம்பிய விழிகள் சாகாமல் மோகனோடு படிப்பவர் விழிகளையும் ஈரமாக்குகின்றன. இது வானதி பதிப்பகத்தாரின் 1984-ம் ஆண்டு வெளியீடு.

அன்பு உள்ளம்: ராஜேஷ¤ம், அவன் தங்கையும் விடுமுறையில் மாமா வீடு சென்று பின்னர் காணாமல் போய் பெற்ற அனுபவங்களைச் சொல்லும் சிறுவர் நாவல். 1978-இல் பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு. இதை வெளியிட்டவர் கவர்னராயிருந்த திரு. பட்வாரி அவர்கள்.

(சிறு குறிப்பு வளரும்)

பாரிஸ் ஹில்டன் (பாரிஸின் ஹில்டன் அல்ல :)

Paris Hilton

பாரிஸ் ஹில்டன்