Tag Archives: Life

Deconstructing Anna – Derogatory remarks on Dalit?

அண்ணா சொன்ன செஞ்சிக் கோட்டை சம்பவம்

தமிழ்நாடு காங்கிரசின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர், “எங்களை எந்தக் காலத்திலும் பதவியிலிருந்து அசைக்க முடியாது” என்று சட்டமனறத்தில் தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணா குறிப்பிட்டார்.

“செஞ்சிக் கோட்டைக்கு மதிப்பு ஒரு காலத்தில் இருந்து வந்தது. அந்த மதிப்புக்குக் காரணம் தேசிங்கு ராஜன். அவன் செஞ்சிக் கோட்டைக்கு அதிபதியாக இருந்தவரைதான் அதெல்லாம். இப்பொழுது அதே செஞ்சிக் கோட்டையில் சில இடையர்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் செஞ்சிக் கோட்டைக்கு மதிப்பு என்று சொல்லிவிட முடியுமா?”

இதற்கு அடுத்த இரண்டாவது பொதுத் தேர்தலில் ஐம்பது பேர் வரை சட்ட மன்றத்தில் திமுக உறுப்பினர்களாக வரமுடிந்தது.

நன்றி: அண்ணாவின் கதை: தினமணி கதிர் வெளியீடு :: நவீனன் (பிப்ரவரி, 1970)

நட்பைக்கூடத்தானே கற்பைப் போல எண்ணுவோம் – ஆண்

தோழியின் வீட்டுக்கு சென்ற மனைவி நேரம் போனது தெரியாமல் சன் டிவி பார்த்ததில் தாமதமாகிப் போகிறது. இரவு வீட்டுக்கு திரும்பாமல், நண்பியின் இடத்திலேயே டேரா அடித்துவிடுகிறாள். செல்பேசியிலும் போதிய அளவு சிக்னல் கிடைக்காமல் படுத்துகிறது.

காலையில் வீட்டுக்கு வந்தவுடன் தோழியின் இல்லத்தில் உறங்கியதை கணவனிடம் சொல்கிறாள்.

தனக்குத் தெரிந்த அவளின் தலை பத்து நண்பர்களை அழைத்து விசாரிக்கிறான் புருஷன்காரன். அவர்களில் எவரிடத்திலும் மனைவி தங்கவில்லை.

கொஞ்ச நாள் கழித்து…

கணவன் வீட்டுக்கு வராமல் வெளியில் தங்கிவிடுகிறான். வீடு திரும்பியவுடன், சில நாள் முன்பு மனைவி சொன்ன அதே சாக்கை சொல்கிறான். ‘நண்பனின் வீட்டில் போதை அதிகமாகி உறங்கிப் போனேன்’.

அவளும் அவனுடைய ஆத்மார்த்தமான அத்யந்த சினேகிதர்களைக் கூப்பிட ஆரம்பிக்கிறார்.

எட்டு பேர் அவன் தன்னுடைய இடத்தில் சீட்டாடி களைத்து நித்திரை பயின்றதாக சொல்கிறார்கள். பாக்கி இரண்டு பேர் இன்னும் அவன் அங்கேதான் இருப்பதாக தலையிலடித்து சத்தியம் செய்கிறார்கள்.

அசல்