Tag Archives: America

இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் யார் நல்லது? – அமெரிக்க அதிபர் தேர்தல்

நேற்றைய கேள்வி – பதிலின் தொடர்ச்சி…

3. ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அமெரிக்காவில் மாற்றம் வராது’ என்று மேலோட்டமான அனுமானம் எனக்கு உண்டு. அடுத்து மெகயின் வந்தால் எது வேறுபடும்? ஒபாமாவாக இருந்தால் எப்படி ஆகும்??

பெரிய மாறுதல்கள் வர வாய்பில்லாவிட்டாலும் அரசாங்க மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தை எந்த வகையிலாவது சட்டமாக்கிவிட டெமக்கரட்ஸ் உத்வேகம் காட்டுகிறார்கள்.அதன் மூலம் ஆப்ரிக்க அமேரிக்கர்கள் மற்றும் லத்தீனோக்களின் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று டெமக்ராடிக்கட்சி நினைக்கிறது. அரசாங்கத்தின் உதவித்தொகைகளில் அவ்விரு சமூகங்களே அதிகம் பெறுவதால் இவ்வாறான திட்டத்தை அறிமுகங்செய்வது அந்த வோட்டு வங்கியை தனதாக்கிக் காக்க முடியும் என்பது டெமாக்ரட்ஸின் திட்டம்.அவர்கள் தங்கள் தேவையை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்! அதனால் ஜனநாயகக் கட்சி ஆட்சிஅமைக்கும்பட்சத்தில் அரசாங்க மருத்துவக் காப்பீடு எந்த வகையிலாவது அமல்படுத்தப்படும்.

இவ்வாறான அரசாங்க் தலையீட்டிற்கு அரசாங்கத்திற்கு வருவாய் அதிகம் தேவைப்படும். அதற்கு ஒரே வழி வரி அதிகரிப்பபது மட்டுமே. பராக் மற்றும் ஹில்லாரியின் மருத்துவக் காப்பீட்டை அமல் படுத்த அமெரிக்கர்களின் வரியை பத்து சதவீதமாவது உயர்த்தினால் மட்டுமே முடியும் என்று பல வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடுத்ததாகப் போர். அமெரிக்காவின் பொருளாதாரம் போரினால் விளையும் நன்மைகளில் வளர்ந்தது (Benefactor of the ‘Broken Window’ economic principle). எங்காவது எதற்காகவாவது போர் நடந்தால்தான் அமெரிக்காவினால் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடியும். முன்னாள் சோவியத் ரஷ்யாவுடன் கொண்ட பனிப்போரினால் அமெரிக்க வர்த்தகம் பல மடங்கு வளர்ந்தது. சோவியத்தின் மறைவிற்குப்பிறகு தனது தளவாட விற்பனை, மற்ற நாடுகளைக் காக்க வாங்கும் மானியம், குறைவற்ற எண்ணை இறக்குமதிக்கான ஒப்பந்தங்கள் போன்ற பல வர்த்தக தொடர்புகளிலும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நெருக்கடி வளர்கிறது. அதை சமன் செய்ய அமெரிக்கா தன்னை ஒரு வல்லரசாகக் காட்டி மிரட்டுவது அவசியமாகிறது.

பராக் ஜனாதிபதியானால் அவ்வாறான ஒரு சக்தி வாய்ந்த தளபதியாக செயல்படுவாறா என்பது சந்தேகமே. Barack’s ascend to presidency could start America’s fall from being a super power.

4. இந்தியர்களின் நலனுக்கு எவரின் எந்தக் கொள்கை உகந்தது? எச்1பி எண்ணிக்கை அதிகரிப்பார்களா? பச்சை அட்டை துரிதப்படுமா? எவரினால் இந்தியாவுடன் வர்த்தகம் மேம்படும்?

The biggest myth amonst Indians is that emocrats favor aliens or immigration which is NOT the fact! உங்களுக்கு சந்தேகமிருந்தால் ஜான் கெர்ரியின் சென்ற தேர்தல் வலைதளதில் தேடிப்பார்க்கவும்! இப்போதைய தேர்தலில் இம்மிக்ரேஷனுக்கு அத்துணை முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் இரு வேட்பாளர்களும் அதைப்பற்றி பெரும் அக்கரை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் வந்தேறிகளுக்கான குடியுரிமை சட்டங்களை முன்னின்று இயற்றி அதை அமல் படுத்தியது குடியரசுக் கட்சியே!

என்னை பொருத்தமட்டில் (ஒரு சுயநல நோக்கில்கூட) எச்1பி எண்ணிக்கை இப்போதிருக்கும் அளவே அதிகமாகப்படுகிறது. மேலும் எச்1பி, பச்சை அட்டைக்களில் அரசாங்கம் நேரிடையாக தலையிடுவதில்லை. பச்சை அட்டை வழங்க அதிக ஆண்டுகள் எடுப்பதற்குக்காரணம் இல்லீகல் இமிக்கரண்ட்ஸ் எனப்படும் சட்டவிரோத வந்தேரிகளுக்கு அரசாங்கம் சட்டபூர்வ குடியுரிமை வழங்க முடிவெடுத்ததே காரணம். அந்த திட்டத்தினால் குடிநுழைவுத்துறையினர் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட பல விண்ணப்பங்களை பார்க்க தேவையான ஆட்பலமின்றி நிலுவையில் கிடத்தப்பட்டது. மேலும் எச்1பி அதிகப்படுத்துவதாலும் பச்சை அட்டை வழங்க அதிக தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதாரம் முன்னேற்ற ஏற்பட்டு திறனுள்ள ஆட்களுக்கான தேவை ஏற்பட்டால் ஒழிய எச்1பியை அதிகப்படுத்துவது முட்டாள்தனமே. மேலும் ஏற்கனவே இங்குள்ளவர்களின் பணி நிலவரமே ஆட்டம் காணும் போது அதிக ஆட்களை இறக்குமதி செய்வது மக்களுக்கு அபிமானம்தரக்கூடியது அல்ல.

BRICS – Brazil, Russia, India, China and South Africa (Previously BRIC now SA joined the league to become the emerging five) ஆகிய ஐந்து நாடுகளின் வளர்ச்சியை புறக்கணிக்கமுடியாத ஒரு தளத்தில் இன்றைய பொருளாதாரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. உலக வர்த்தகதில் போட்டியிடவும், அதில் கலந்து கொள்ளவும் இந்த ஐந்து நாடுகளிடமும் நல்ல நட்புறவை பேணுவதே புத்திசாலித்தனம் என்பதை இரு கட்சிகளைச் சேர்ந்த அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அதனால் எந்த கட்சி வந்தாலும் இந்தியாவுடனான வர்த்தகமும் பொருளாதார பரிவர்த்தனைகளும் அதிகரிக்கும் என்பதே உண்மை!

5.நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஸ்லேட் போன்றவை ஏன் குடியரசுக் கட்சிக்கு சார்பாக தலையங்கங்கள் தீட்டுவதில்லை?

அதையே நான் திருப்பிக்கேட்கலாம் – ஏன் அவர்கள் ஜனநாயகக் கட்சியை குடியரசுக் கட்சியைத் தாக்குவதைப்போல தாக்குவதில்லை? தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் எப்படி மிடியா உலகையே தன் பிடியில் வைத்திருக்கிறதோ அதைப்போலவே இங்கு ஜனநாயகக் கட்சியும். பராக் ஒரு கொலையே செய்தாலும் அதை கருணைக் கொலை என்று வாதிடக்கூடிய பத்திரிக்கைகள் இங்கு அதிகம். மேலும் பெரும்பான்மையான குடியரசுக் கட்சிக்காரர்கள் அந்த பத்திரிக்கைகளை படிக்காமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். முன்னால் கம்யூனிஸ்ட் மற்றும் இடது சார்புடைய வெளிநாடுகள் மூலம் அவர்களுக்கு பணம் வருவதாலும் இருக்கலாம்.

டைனோ | டைனோ

தமிழ் ஊடகங்களில் :: அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜோ பைடன்'

தமிழ் பிபிசி:

நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேட்டியிடும் பராக் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.

சில நாட்களுக்கு இருந்த ஊகங்களுக்கு மத்தியில், காலை மூன்று மணிக்கு லட்சக்கணக்கான தனது ஆதரவாளர்களுக்கு அலைபேசி குறுந்தகவல் மூலம் இந்த செய்தியை பராக் ஒபாமா உறுதி செய்துள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செனட்டில் பணிபுரிந்து வரும் ஜோ பைடன், செனட்டின் செல்வாக்கு மிக்க வெளியுறவு திட்டக்குழுவின் தலைவராகவும் இருக்கின்றார்.

இது ஒரு மாபெரும் கூட்டணி என்றும், இது அமெரிக்காவில் மாற்றங்களை கொண்டு வரும் என ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரங்கள் சார்பாக பேசவல்லவர் கூறியுள்ளார்.


தினத்தந்தி

இந்தியாவுக்கு ஆதரவானவர் : ஜோசப் பிடன், இந்திய அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர் ஆவார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் பாரக் ஒபாமா போட்டியிடுகிறார். ஆளும் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். தனது கட்சி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு யாரை நிறுத்துவது என்று ஒபாமா பல நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.

  • கிளிண்டனின் மனைவி ஹலாரி,
  • இந்திய வம்சாவளி கவர்னர் பாபி ஜிண்டால் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில், டெலாவரே மாகாண செனட் உறுப்பினர் ஜோசப் பிடனை, தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஒபாமா தேர்வு செய்துள்ளார். ஜோசப் பிடனின் வயது 65. அவர் தற்போது செனட் சபையின் வெளியுறவு கமிட்டி தலைவராக இருக்கிறார். இவர் முதல்முறையாக 1972-ம் ஆண்டு செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 29. தற்போது 6-வது தடவையாக செனட் உறுப்பினராக இருக்கிறார். செனட் சபையில் பல்வேறு கமிட்டிகளில் பதவி வகித்துள்ளார். இவர் வெளியுறவு கொள்கை மற்றும் ராணுவ கொள்கைகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.

இந்த கொள்கைகளில் ஒபாமாவுக்கு அனுபவம் இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, ஜோசப் பிடனின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவரை ஒபாமா தேர்வு செய்துள்ளார்.

ஜோசப் பிடன், ஏற்கனவே கடந்த 1988-ம் ஆண்டிலும், இந்த ஆண்டிலும் அதிபர் பதவி வேட்பாளர் ஆவதற்கு முயன்றார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது துணை ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பை பெற்றுள்ள அவர், டென்வரில் நடைபெற உள்ள ஜனநாயக கட்சி மாநாட்டில், 27-ந் தேதி உரையாற்றுகிறார்.

ஜோசப் பிடன், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவானவர் ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், ஜான் கெர்ரி, சக் ஹகெல் ஆகிய செனட் உறுப்பினர்களுடன் இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். இடதுசாரிகளின் ஆதரவு வாபசையும் மீறி, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற மன்மோகன்சிங் உறுதியாக இருப்பதை அறிந்து, அவரை பாராட்டினார்.

இந்தியாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய உதவுவது, அமெரிக்காவுக்கு பலன் அளிக்கும் என்ற கருத்துடையவர், ஜோசப் பிடன். இந்திய அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்க பாராளுமன்றத்தில் இறுதி ஒப்புதலுக்கு வரும்போது, இவர் அதற்கு ஆதரவாக உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்: அறிவித்தார் ஒபாமா:

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.


தினமணி

ஜனநாயகக் கட்சி யு.எஸ். துணை அதிபர் வேட்பாளர் ஜோசப் பிடன்

வாஷிங்டன், ஆக. 23: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமா, துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பிடன் (65) என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தீவிரமாக ஆதரிப்பவர் ஜோசப் பிடன். இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற இவர் மிகவும் உதவியாக இருப்பார் என்று நம்பப்படுகிறது. அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டபோதிலும், அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முனைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் உறுதியை சமீபத்தில் ஜோசப் பிடன் பாராட்டினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால் துணை அதிபராக ஜோசப் பிடன் தேர்ந்தெடுக்கப்படுவார்.


Thatstamil.com
Joseph Biden is Obama’s running mate, ஓபாமாவின் துணை அதிபர் வேட்பாளர் ஜோசப்:


Webdunia.com

அமெ‌ரி‌க்க துணை அ‌திப‌ர் வே‌ட்பாளரை தே‌‌ர்‌ந்தெடு‌த்தா‌‌ர் ஒபாமா!: டெ‌ல்லோவா‌ர் சென‌ட்ட‌ர் ஜோச‌ப் ‌பிடேனை‌ பரா‌க் ஒபாமா தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளா‌ர்.

துணை அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் போ‌ட்டி‌‌க்கு தே‌ர்‌ந்தெ‌டு‌க்க‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று கருத‌ப்ப‌‌ட்ட இ‌‌ன்டியான சென‌ட்ட‌ர் இவ‌ா‌ன் பயா, ‌வி‌ர்‌ஜியானா கவ‌ர்ன‌ர் ‌டி‌ம் கெ‌ய்‌ன் ஆ‌‌கியோரை ‌பி‌ன்னு‌‌க்கு‌த் த‌ள்‌ளி‌‌‌வி‌ட்டு, 65 வயதாகு‌ம் ‌பிடே‌ன்-ஐ ஒபாமா தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

‌சென‌ட் அயலுறவு ந‌ட்பு குழு‌த் தலைவரான பிடே‌ன் கட‌ந்த 1972 ஆ‌ம் ஆ‌ண்டு தனது 29-வது வய‌தி‌ல் முத‌ல் முதலாக அ‌ந்நா‌ட்டு பாராளும‌ன்ற‌த்து‌க்கு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.


மேலும் :: Google செய்திகள்

அமெரிக்காவில் இனவெறியா – ஒபாமா செய்திகள்

மேற்கு வர்ஜினியாவில் தேர்தல் நடந்து முடிந்தது. அது தொடர்பான விழியம்:

நன்றி: Obama Faces Racism in West Virginia Video – Metacafe

வெஸ்ட் வெர்ஜீனியாவில் எதிர்பார்த்தவாறே ஹில்லரி எளிதில் வென்றார். ஆனால், ஹில்லரி க்ளின்டனை விரும்பும் வெள்ளையின வாக்காளர்களைக் கவர்வதற்காக ஜான் எட்வர்ட்ஸை தன் பக்கம் இழுத்துள்ளார் பராக் ஒபாமா. லத்தீனோ வாக்கு தேவைப்படும் காலம் கடந்தபின் கிடைத்த ரிச்சர்ட்ஸன் ஆதரவு மாதிரி பாட்டாளி வர்க்க வோட்டுகள் தேவைப்படும் நேரம் கழிந்தபின்னே ஆற அமர தன்னுடைய சார்பை ஒப்புக்கு சப்பாணியாக ஜான் எட்வர்ட்ஸ் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கிட்டத்தட்ட ஹில்லரி க்ளின்டனின் ஆதர்ச ஆதரவாளர்கள் தவிர பெரும்பாலானவர்கள் பராக் ஒபாமாவிற்கு மாறியபிறகு கிடைத்திருக்கும் எட்வர்ட்சின் ஆதரவினால் அடுத்து வரும் கென்டக்கியில் ஹில்லரியின் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படலாம்.

மேற்கு வர்ஜீனியா, கென்டக்கி போன்ற இவையெல்லாம் ஜனநாயகக் கட்சி நிச்சயம் தோற்றுவிடக் கூடிய இடங்கள் என்பதால் அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. எனினும், இந்த மாகாணங்களின் பிரதிநிதிகளைப் பெறுவதற்கான போட்டியாக இவை மாறியுள்ளதால், இந்தத் தேர்தல்களும் கவனிப்பைப் பெறுகின்றன.

முக்கிய கட்சிகளான ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவப்போகும் மாநிலங்கள்: Election Guide 2008 – Presidential Election – Politics – Electoral Map – The New York Times: “Here are what the Obama and McCain campaigns now consider the true battleground states going into the fall campaign, assuming — as both candidates now do — that Barack Obama is likely to win his party’s nomination. In addition to these states, both sides have states that they say (or rather hope) will come into play in the months ahead — think New Jersey for Republicans and Georgia for Democrats — but for the time being, this is where the action is going to be.”

தொடர்புள்ள அலசல் பத்தி Trailhead : Hard-Working White American Endorses Obama: “Edwards is still influential. Just look at the 7 percent of the vote he picked up in West Virginia—impressive for someone who dropped out more than three months ago. If Edwards supporters in Kentucky take his cue and vote for Obama…”

அமெரிக்கா, ஆஸ்திரியா – ஆன்மிகம், ஆண், அப்பியாசம்

ரொம்ப நாளாக வரைவோலையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை; பின்னணி அறியவில்லை என்பது சுணங்கலுக்கு முதல் காரணம். ரொம்ப ஆறிப் போய்க் கொண்டிருக்கிறது/நினைவை விட்டு அகல்கிறது என்பது இன்னொரு காரணம். எனவே, டிராஃப்ட்… அப்படியே…

பிபிசி செய்தி: ஆஸ்திரியாவில் பெற்ற பெண்ணையே சிதைத்த கொடூரன் கைது

ஆஸ்திரியாவில் தனது பெண்ணையே சுமார் இருபது ஆண்டுகளுக்கு நிலவறையில் பூட்டி வைத்து பாலியல் சித்ரவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எழுபத்தி மூன்று வயதான அந்நபர் தனது பெண் மூலமாக மேலும் ஆறு பெண்களை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாற்பது வயதுகளில் இருக்கும் அப்பெண், தனது தந்தை கடந்த 1984 ம் ஆண்டு தன்னை நிலவறைக்குள் வரவழைத்து தனக்கு போதை வஸ்துகளை கொடுத்து தன்னை அப்போது இருந்து அடைத்து வைத்து இருப்பதாக கூறியுள்ளார். இந்த பெண்ணோடு சேர்த்து ஒரு சில குழந்தைகளும் நிலவறையிலேயே அடைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காமக் குரூரன் செய்தியை ஜீரணிக்கத் துவங்கியுள்ளனர் ஆஸ்திரிய மக்கள்

ஆஸ்திரிய மக்கள், தங்கள் நாட்டில் நடந்த மிகக் குரூரமான செய்தியை கொஞ்சம் கொஞமாக நம்பத் துவங்கியுள்ளனர்.

73 வயதான ஆண் ஒருவர், தனது மகளை இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவறையில் அடைத்துவைத்து, அந்த பெண் மூலம் ஏழு குழந்தைகளை பெற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கும் செய்தியை அந்நாட்டு மக்கள் படிப்படியாக ஜீரணிக்க முயன்று வருகிறார்கள்.

ஆஸ்திரியா நாட்டில் நிலவறையில் மனிதர்கள் அடைத்து வைக்கப்படும் செய்திகள் வெளியாவது, சமீபத்தில் இது மூன்றாவது முறை. நடாஷா காம்புஷ்ச் என்கிற இளம்பெண், எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவறையில் அடைக்கப்பட்டிருந்த பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிலிருந்து வெளியே வந்திருந்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர், தனது மூன்று பெண்களை ஏழு ஆண்டுகள் இருட்டறையில் அடைத்துவைத்திருந்த செய்தி 2005ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.


செய்தி: Foster care could be wrenching for Texas sect children – Yahoo! News

என்.பி.ஆர் ஒலித்தொகுப்பு: Texas Polygamy Case Challenges Religious Thinker : NPR

பலதார திருமணம் குறித்த நியு யார்க் டைம்ஸின் செய்திக் கோர்வை: Polygamy News – The New York Times

மேலும் செய்திகள்:
Texas Polygamy Raid May Pose Risk – New York Times

பிபிசி: BBC NEWS | Americas | More raids on Texas polygamy sect

டைம்:
1. The Texas Polygamist Sect: Uncoupled and Unchartered – TIME

2. Tracing the Polygamists' Family Tree – TIME

விழியம், பேட்டிகள்: Men From Polygamy Sect Speak, Early Show Co-Anchor Maggie Rodriguez Lands Exclusive Interview With 3 From Texas Compound – CBS News

ஒரே வீட்டில் இரு மனைவி இருப்பது அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் சட்டப்படி சரி: A different brand of polygamy – The Denver Post

வ.கே.கே.: ABC News: What's Next in Polygamy Custody Case?

காலங்காலமாக நடப்பதுதான்: Under God: Polygamy and Intrusion in West Texas – On Faith at washingtonpost.com

அடிக்கடி எழும் வினாக்களுக்கான பதில்கள்: 04/26/2008 | What is the FLDS polygamous sect? | Kansas.com

ஆஸ்திரியா குறித்து ஊடகமெங்கும் செய்தி அடிபட்டுக் கொண்டிருக்க, அமெரிக்காவில் இன்றளவிலும் தொடரும் இந்தப் பழக்கவழக்கம் குறித்து யாரும் கண்டுகொள்வதே இல்லையே? டெக்சாஸில் நிச்சயம் தோற்கப் போகும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களான ஒபாமாவும் ஹில்லரியும் கூட இந்த மாதிரி கூத்தை அரசியல் பிரச்சினையாக கையில் எடுக்காதது புரிகிறது. ஆனால், ஊடகங்கள்!?