Tag Archives: வாழ்க்கை

Dor (நூல்) – விமர்சனம்

நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை. பார்க்கவேண்டிய திரைப்படம்; நம்பக் கூடிய திரைக்கதை.

ஸ்பாயிலர்சுடன் சில சிதறல்:

  • dor-2006-5b-1_1188030619.jpgஜீனத் ஆக நடித்த குல் பனாக் (Gul Panag) மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.
  • பல மோசமான படங்களில் ஆயிஷா தகியாவை பார்த்து ‘நடிப்பு வராத பொண்ணு’ போல என்று நினைப்பை உருவாக்கி வைத்தவர். இந்தப் படத்தில் இவர் இன்னொரு சிம்ரன்!
  • ‘Dutch courage’ ஆக தண்ணியடித்துவிட்டு வந்து, ஜீனத்திடம் ‘ஐ லவ் யூ’ சொல்லும் ஷ்ரேயஸ் தல்பாடேவும் (Shreyas Talpade), அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் தோழமையும்; கடைசியாக கல்லூரியில்தான் இந்த மாதிரி கோணங்கித்தனம் செய்து, வழியாமல், எதார்த்தமாக வாழ்க்கை தொடர்ந்தது. அதையே கிராமத்தில் பார்ப்பது ‘நடக்காது!’ என்று சாதாரணமாக எண்ண வைக்கும். ஆனால், ஜீனத்தின் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு, அதை சரியாக உணரவைக்கிறது.
  • வசனங்கள்: எளிமை. ஆனால், உணர்ச்சி & எழுச்சி உண்டு. தினசரி பேசுவது போல் இருந்துகொண்டே பலநாள் வடிகட்டிய சாராம்சங்களைக் கொடுக்கிறது. நாவல் எழுத்தில் கிடைக்கும் அழுத்தம் கொண்டவை.
  • படத்திற்கு ஆதாரம் (அசல் கதை) மலையாளப் படமாம் (என்ன படம்?)
  • தமிழ்ப்பதிவர் எல்லாருக்கும் ஏதாவது தீனி இருக்கிறது: சவுதி அரேபிய இஸ்லாமிய ஷரியத்தை எதிர்ப்பவர்; ஆண்கள சார்ந்து இயங்கும் இந்து மதத்தின் விமர்சகர்; முதலாளித்துவத்தின் கூறுகளை தாக்கும் கம்யூனிஸ்ட்; ‘ராத்திரி பத்து மணிக்கு’ என்று காந்திஜியை மேற்கோள் காட்டும் பெண்ணியவாதி…
  • சினிமாத்தனம் இல்லாத வெற்றிப்படமா: கடைசியில் ரயில்வே ஸ்டேசன், தில்வானியா துலானியா லே ஜாயேங்கே

காதல் உண்டு; காமெடி உண்டு; திருமண பந்தமும், அந்த உறவின் பாசமும் உண்டு; நட்பு உண்டு; சென்டியும் இருக்கிறது… இருந்தும் மசாலாப் படம் பார்த்தபிறகு மனசு முழுக்க நிறைந்திருக்கும் ஏமாற்றம் மட்டும் இல்லை.

புகைப்படம்: யாஹு

ஏன் பெண்ணென்று பிறந்தாய்? (அ) பசிக்குது பசிக்குது தெனம்தெனம்தான் தின்னா பசியது தீர்ந்திடுதா!

All in a Day’s Work - Women’s Life Story

நன்றி: Skirt  | Boston

நான்கு சிறுகதை – வாசக அனுபவம்

‘இலக்கியச் சிந்தனை’யால் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ள கதை: Marathadi : மீனாமுத்து: “யாத்தி”

அமெரிக்கா போன்ற சட்டதிட்டங்கள் ஓரளவு கடுமையாக, உடனடியாக நிறைவேற்றும் நாடுகளிலேயே, இந்தக் கொடுமை எளிமையாக, அன்றாடம் நடந்தேறுகிறது, ‘படித்தவர்கள் பண்பற்றவர்கள்’ என்பது போல் பல கேஸ்கள்; சமீபத்தில் கைராசியான நியு யார்க் மருத்துவ தம்பதியர்கள் கைதாகி, குற்றமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நிகழ்வை ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையாகக் கண்முண் கொணருகிறார். அதிர்ச்சிக்காக மட்டும் இல்லாத நேர்த்தியான முடிவு. மிகவும் பிடித்திருந்தது.

மென்மையான எழுத்துக்களை தட்டச்சும்போது கூட என்னுடைய கீபோர்ட் சத்தமெழுப்பி, சிந்தையைக் கலைத்துப் பொடும். அது போல், சிறுகதையைப் படிக்கும்போது ஆச்சரியக்குறிகள் தொடர்வண்டியாக நடுவில் வந்து ஓசையெழுப்புகின்றன.


Thinnai: “ஒரு நாள் உணவை… – ரெ.கார்த்திகேசு”

குழந்தைகளை கம்பேர் செய்யக்கூடாது; சுஜாதாவையும் சுரதாவையும் ஒப்புமையாக்கி தராசு எல்லாம் கூடாது என்று எண்ணுபவன் நான். இருந்தாலும், முந்தைய கதையில் முழுநீள வாழ்க்கையே விவரித்திருக்க, இங்கு சம்பவம் விரிகிறது.

விவரணப்படம் போல் ஆகிவிடும் அபாயம் இருந்தாலும், அவ்வாறு போரடிக்காத சஸ்பென்ஸ் நோக்கிய விறுவிறுப்பு. மணமான இல்லறத்தில் நிகழ்வதை படம் பிடித்து ஓடவிடும் லாவகம்.

நான் என்ன நினைக்கிறேன் எனக் கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 10-15 நிமிடம் பேசுவார்கள். சிலர் நம் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே பேசுவதால் அகலவும் முடிவதில்லை.

போன்ற களையான பிரதேசங்கள்.

தவறவிடக்கூடாத ஆக்கம்.


அ.முத்துலிங்கம் எழுதி விரைவில் வெளிவரப்போகும் சுயசரிதைத் தன்மையான நாவலின் ஓர் அத்தியாயம்தான் மேலே தந்திருப்பது.

என்று பீடிகையுடன் முடிகிறது: Thinnai – யுவராசா பட்டம் – அ.முத்துலிங்கம்

விமர்சிக்கலாம் என்று படிக்க ஆரம்பிக்கும் ஆணவம், தொலைந்து போக வைக்கும் சாமர்த்தியம். ‘நிஜம்தானோ!’ என்னும் பிரமிப்பு. ‘அச்சச்ச்சோ’ என்று தொடரும் பரிதவிப்புடன் பதற வைத்து எழுத்துக்குள் மூழ்க வைக்கிறார்.


நுனிப்புல்: ஐந்தும் ஆறும் – புனைவு என்பது உணர்ச்சிகளை சித்தரிப்பது; கேள்விகளை எழுப்புவது.

‘நந்தா’ திரைப்படத்தில் பல காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், அந்த துவக்க காட்சியில் நடக்கும் பிரதோஷ உபன்யாசம் மறக்க முடியாதது. எள்ளல்தன்மையுடன் தொடரும் திரைக்கதையில் வீட்டில் நடப்பதைக் காட்டி லெக்சர் மகிமையை சிந்திக்கவைப்பார்கள். திருக்குறள் என்னதான் கலக்கலாக இருந்தாலும், அதைப் போல் போதனை இலக்கியம் எனக்கு அசூயையே தருகிறது.

ஒரு வேளை.. ‘பெண்ணெழுத்தின் நாடித்துடிப்பு பெண்ணிற்குத்தான் புரியும்’ என்னும் மங்கையர் மலர் கால ஃபீலிங்குடன் மனைவியிடம் கொடுக்க, அவரோ லாஜிக்கலாக கேள்விகளை எழுப்பும் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார். ‘எலக்கியம்னா அனுபவிக்கனும்; நோ க்வெஸ்டின்ஸ்’ என்று மகளுக்கு ஈசாப் நீதிக்கதைகளை வாசிப்பதுடன் அனுபவம் முடிந்தது.

கம்யூனிசத்துக்கு ஸ்டாலின்; கமர்ஷியலிசத்துக்கு சுகார்தோ

வியட்நாம் என்றவுடன் அமெரிக்கா கால் நுழைத்து இலங்கையில் ஐபிகேஎஃப் போல் மூக்குடைபட்டதும், நாபாம் தெளித்து அழித்ததும், நேற்றைய ஜனாதிபதியாக விரும்பிய ஜான் கெர்ரியை ‘ஸ்விஃப்ட் போட்‘டியதும், இன்றைய ஜனாதிபதியாக விரும்பும் ஜான் மெக்கெயினின் சிறைக்கால அனுபவமும் அவரவரின் கொள்கை சார்ந்து நினைவுக்கு வரும்.

ஆனால், இந்தோனேசியா என்றவுடன் சுனாமிப் பேரலையோ, நைக்கியின் குழந்தைத் தொழிலாளர்களோ, பாலி தீவிரவாதத் தாக்குதலோ, பஞ்சசீல கொள்கையோதான் நினைவுக்கு வருகிறது.

கம்போடியா, வியத்னாம் மாதிரி மூக்குடைபடாமல் சாணக்கியத்தனமாக வென்ற நாடுகளில் இந்தோனேசியா குறிப்பிடத்தக்கது. கத்தியின்றி, ரத்தமின்றி கரன்சி கொடுத்து அமெரிக்க பாக்கெட்டுக்குள் வீழ்ந்த நாடு.

இந்தியாவில் பாதி சைஸ். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிகச் சரியாக 17,508 தீவுகள்.

இத்தனை தீவுகள் இருக்கிறதே… இன்னொன்றையும் சேர்த்துக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் கிழக்கு திமோரையும் கையகப்படுத்தினார் தற்போது இறைவனடி சேர்ந்துள்ள சுகார்தோ.

சுகார்டோ எத்தனை பேரை தீர்த்துக் கட்டினார் என்றால் யாரிடம் கணக்கு கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஐந்து லட்சத்தில் இருந்து இருபது லட்சம் வரை சொல்கிறார்கள். சுகர்னோ, சுகார்தோ போன்ற இந்தோனேஷியாவின் தலைவர்களிடம் கேட்டால் நாட்டின் 24 கோடியில் ஒரு சதவீதம் சவமானதற்கு ‘இத்தனை ஃபீலிங்கா?’ என்று அழிச்சாட்டியமாக லுக் விடுவார்கள்.

பள்ளிப்படிப்பை முடித்திராததால் அவரிடம் கொள்ளையடித்த பணத்துக்கு சரியான அக்கவுண்டிங் தாக்கலாகவில்லை. ஃபிடல் காஸ்ட்ரோவை விட அதிக அளவு சேர்த்து அகில லோகத்தின் தலை பத்து பணக்காரராக, இந்தோனேசியாவுக்கேற்ற எள்ளுருண்டையாக பதினைந்தில் இருந்து முப்பத்தைந்து பில்லியன் (இந்திய ரூபாயில் இன்றைய மதிப்பில் 100000,00,00,000 கிட்டத்தட்ட 100,000 கோடி ருப்பீஸ்) சேவிங்ஸ் கணக்காகியுள்ளது.

உலகின் அதிகமான இஸ்லாமியர் மக்கட் தொகையை கொண்டநாடு இந்தோனேசியா. ஆயினும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்துவர்களும் உண்டு. மதச்சார்பற்ற ஒரு நாடாக இந்தோனேசியா விளங்குவது பிடிக்காத ஒசாமா பின் லாடனின் அன்பர்கள் சில மாநிலங்களில் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நவீன இந்தோனேசியாவை நிறுவிய-நிறுவன அதிபர் சுகர்ணோ. 1967-ம் ஆண்டு அதிபர் சுகர்ணோவை நீக்கி விட்டு இராணுவத் தலைவர் சுகார்டோ பதவிக்கு வந்தார். சுமார் 32 ஆண்டுக்காலம் முஷாரஃப்கரம் கொண்டு மக்களை அடக்கி ஆண்டார். ருவாண்டா, இடி அமீன், ஸ்லொபதன் மிலோசெவிச் காட்டிய பாதையில் இவர் ஜனநாயக முறைப்படி கட்சி துவங்கி, கோல்கார் கட்சி என்று நாமகரணமிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று யாருமே இல்லாத பெருமை கொன்டவர் சுகார்தோ. யாராவது கொடி தூக்கினால், கம்யூனிசம் பேசினால், எம்-16 வெட்டு ஒன்று, தாழப் பறந்து பறந்தடிக்கும் விமானம் இரண்டு என்று மும்முரமாக குடியரசைத் தழைத்தோங்க செய்தவர்.

சதாம் உசேனின் குவைத் ஆக்கிரமிப்பு போல் 1975ல் கிழக்கு டிமோர் பக்கம் இவரது பராக்கிரமம் திரும்பியது. குவைத் மாதிரி இல்லாமல் அமெரிக்காவின் ராஷ்டிரபதி ஜெரால்ட் ஃபோர்ட்- இன் பரிபூரண அனுக்கிரகம் இந்தோனேசியா பக்கம் இருந்தது. கடாரம் வென்ற சுகர்னோ என்று அதன் பிறகு வந்த கார்ட்டர், ரொனால்ட் ரீகன், பில் க்ளின்டன், அப்பா புஷ் போன்ற அமெரிக்க ஜனாதிபதிகளால் கொண்டாடப்பட்டார்.

கிழக்குத் டிமோர் போரில் கிளர்ச்சியில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேரை மட்டுமே கொன்று, மீதம் உள்ள ஐந்து லட்சம் தைமூரியர்களை விட்டுவைத்து தன்னுடைய ஜீவகாருண்யத்தை பறைசாற்றி, மனிதர்குல மாவிளக்கு பட்டம் பெற்றார்.

அம்மையாருக்கு உடன்பிறவா சகோதரி, முன்னாள் கலைஞருக்கு சன் டிவி பிரதர்ஸ் போல் கல்லாவை கவனிக்க அவர் மனைவி மேடம் டியன் என்றழைக்கப்படும் சிதி ஹர்தினா (Siti Hartinah Suharto) — உறுதுணையாக கையூட்டுக்கு சிங்கிள் விண்டோவாக திகழ்ந்து பிசினஸ் சூழலை எளிதாக்கினார்.

தற்போதைய இந்தியாவின் ப. சிதம்பரம் போல் பொருளாதாரம் துள்ளி குதித்து விளையாடும் வரை மக்கள் அவர் பக்கம் சிக்கென பிடித்திருந்தார்கள். ‘நீயுமுன்றன் பைநாகப்பாய் சுருட்டிக்கொள்‘ என்று அமெரிக்க வர்த்தகர்கள் ஆசியாவை விட்டு மூட்டை கட்ட, வந்தது சனி.

என்றேனும் மாற்றம் வந்தே தீரும் என்கிற நிலையில் சுகார்டோ பதவி விலகினார். என்றாலும் சீனாவின் மாவோ, கம்போடியாவின் பொல் பொட், பிலிப்பைன்சின் ஃபெர்டினான்ட் மார்கோஸ் போல் தனிப்பெரும் ஆளுமையாக விளங்கி ரசிகர் மன்றக் கண்மணிகள் நெஞ்சத்தில் நீங்காத தலைவனாகி இருக்கிறார்.

இந்தோனேசியாவின் சாலைகள் சுகர்தோவின் மகள் சிதி ஹரிதயந்தி ருக்மண (Siti Hardiyanti Rukmana) பெயருக்கு பட்டா போடப்பட்டு, சுங்கவரி அத்தனையும் அவருக்கு போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு மகனுக்கு இந்தோனேசியாவின் எண்ணெய்க்கிணறுகளும் பெட்ரோல் ஊற்றுக்களும் முழுக்க சொந்தமாக்கப்பட, இன்னொரு மகனுக்கு டிவி, கார், கொக்கோ, தேக்கு, சேமநல பாதுகாப்பு முதல் ஆணுறை நிறுவனங்கள் என்று தொண்ணூறு ஸ்தாபனங்களுக்கு அதிபதியாக்கி நிறைந்த வாழ்வையும் வளத்தையும் வழங்கியிருக்கிறார்.

அவரின் நல்லெண்ணத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக கிட்டத்தட்ட இருபது சதவிகித அரசுத்துறை ஒப்பந்தங்கள் மற்றவர்களுக்காக விட்டுகொடுக்கப்பட்டிருப்பதை சொல்லலாம்.

வாரிசு அரசியலை மறக்காத மக்களாக இந்தோனேசியர்களும் சுகார்னோவின் இரண்டாவது மகளான மேகாவதி சுகர்ணோபுத்ரி கட்சியை ஆதரித்து தேர்தலில் வெல்லவைத்து கோலோச்ச வைத்தார்கள். கட்டாங்கடைசியாக இவரின் ஆட்சிக்காலத்தில்தான் ஐ.நா.வின் கட்டபஞ்சாயத்தால் இந்தோனேசியாவின் ஒரு பகுதியான கிழக்கு தைமூர் தனிநாடாக மாறியது. இதை மேகாவதி நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு.அண்டைநாடுகளின் மலேசிய மஹாதிர் முகமது, சிங்கை லீ க்வான் போல் சுரண்டல் பெருச்சாளித்தனமற்ற பொருள்முதல்வாதம் பின்பற்றாமல், சிலியில் அல்லக்கையாக இருந்த அக்ஸ்டோ பினோச்சே போல், பரம சௌக்கியமாக வாழ்ந்து கல்யாண சாவு பெற்றிருக்கும் சுகார்தோ நினைவாக பழமாகிப் போன பழமொழி:

அரசன் அன்று கொல்வான்;
அமெரிக்கன் யாருக்கும் தெரியாமல் சப்ளை செய்வான்!


Suharto Indonesia—————————————————————————————————-

தொடர்புடைய இடுகைகளில் குறிப்பிடத்தக்க சில:

உதவியவை:

  1. Varaidhal – Special
  2. Indonesia – Wikipedia, the free encyclopedia
  3. Economist.com | Country Briefings: Indonesia
  4. Indonesia : Country Studies – Federal Research Division, Library of Congress
  5. BBC NEWS | Asia-Pacific | Country profiles | Country profile: Indonesia

கொடுங்கோலன்:

  1. Democracy Now! | Former Indonesian Dictator, U.S. Ally & Mass Murderer, Suharto, 86, Dies
  2. Democracy Now! | The Democrats & Suharto: Bill Clinton & Richard Holbrooke Questioned on Their Support for Brutal Indonesian Dictatorship
  3. Democracy Now! | Massacre: The Story of East Timor
  4. News and Comment: Suharto Dead. Six Billion Alive. Time for a Little Reform.

Economists with GunsAuthoritarian Development and U.S.-Indonesian Relations, 1960-1968

Bradley R. Simpson
Forthcoming: Available in MarchBuy this book
 

—————————————————————————————–
வாழ்விக்க வந்த வள்ளல்:

  1. Suharto’s Indonesia – WSJ.com
  2. Suharto’s Legacy – WSJ.com

ரெண்டுங்கெட்டான்:

  1. NPR: Indonesia’s Suharto Left Iron-Fisted Legacy
  2. Suharto News – The New York Times

Prejudiced generalizations: Gangs, drugs, violence & suicides

(வாய்ப்புக்கும் இடமளித்தமைக்கும்) நன்றி: தமிழ் உலா – என்றென்றும் அன்புடன்், பாலா

தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய பாஸ்டன் பாலாவின் பார்வை

கேள்வி: தமிழ்மணம் சேவை தொடங்கி கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஆகி விட்ட நிலையில், தமிழ் வலைப்பதிவுலகில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க விஷயமாக அல்லது வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: முதலில் தனிமனிதனாக எனக்கு ஏற்பட்ட வளர்ச்சியை சொல்லி விடுகிறேன். பதிவுலகம் இல்லாவிட்டால் நான் இந்த பரிபக்குவத்தை அடைய இன்னும் பல நாள் ஆகியிருக்கும்.

1995- இல் ‘ஆசை’ படம் பார்த்தபோது இப்படியெல்லாம் வக்கிரம் பிடித்தவர்கள் இருக்க மாட்டார்கள். இயக்குநர் வசந்த்துக்கு அதீத கற்பனை என்று புறந்தள்ளியிருந்தேன். ஆனால், ஒரு மாமாங்கம் கழித்து ‘சத்தம் போடாதே’வில் மீண்டும் ஒரு சைக்கோவை பார்த்தபோது நம்ப முடிந்தது.

அடுத்து கொஞ்சம் பெரிய அளவில் யோசித்தால்…

தமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால், மனநிலை பிறழ்ந்தவர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.

அலுவலில் 14/15 மணி நேர கசங்கல். கணினி முன் இருக்கும்வரை காபி. கணினி விட்டு எழுந்தவுடன் பொய் கும்மாளங்களுடன் கோப்பை நிறைய குடித்தல். உடலை மாசு படுத்தும் இந்த பானங்களை உட்கொள்ளுவதால் முப்பதிலேயே அறுபதைப் போன்ற கிழடு தட்டிய தோற்றம் மட்டுமல்ல. அகமும் வயதாகிப்போகிறது.

இதை மறைக்க இணையம் உதவுகிறது. ‘அந்த நாள் ஞாபகம்’ என்று ஆட்டோகிரா·ப் போட்டு பழைய நினைப்புகளை பகிர்ந்து அலைபாயும் சீற்றத்தை தணிக்க வைக்கிறது.

அயல்நாடுகளில் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்களின் நிலை மேலும் பரிதாபம். மனைவியை விட்டு பிரிந்து இருக்கும் நிலை சிலருக்கு. சன் செய்திகள் தொட்டு காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள் வரை நிஜம் முதல் நிழல் வரை வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் பொறுக்கி என்னும் சித்தரிப்பால், மணமுடிக்காத நிலை சிலருக்கு. உரையாட தோழமை இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத மேற்கத்திய நாகரிக தனிமைச் சிறை. அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் விளையாட்டைத் தவிர எதை வேறு குறித்தும் பேச்சை வளர்க்க மாட்டார்கள். சினிமாவா… நோ; செய்திகள் – நோ…நோ; அரசியல் – மூச்!

இவர்களுக்கெல்லாம் வலைத்தமிழ்ப்பூக்கள் வடிகாலாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, பொறுமைக்கு பேர் போன பூமாதேவியாக ரட்சித்து, மன அழுத்தத்தை நீர்க்க வைக்கிறது.

பெங்களூரு முதல் பாஸ்டன் வரை முந்தைய தலைமுறை போல் குடும்பத்தோடு ஒன்றி வாழாத நிலையில் சுருங்கி பதுங்குகுழி ஜீவனம். பேரக் குழந்தைகளுக்கு போர் அடித்தால் டிவியோ வெப்கின்ஸோ ஓடும். அடுக்களை வேலை முடிந்து களைத்த மனைவியோடு பேசுவதற்கு அந்தக்காலத்திலாவது நாலு நிமிஷம் கிடைத்தது. இன்றைய தொல்லைபேசி, செல்பேசி முதல் நள்ளிரவு அவுட்சோர்சிங் மின் அரட்டை காலத்தில், இல்லத்தரசியுடன் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால்தான் உரையாடல் உண்டு.

மனதுக்குள் புதைந்து அழுத்தும் சமாச்சாரங்களைக் கொட்டி, அதற்கு கனிவாக நாலு பதில் வார்த்தை பெற இணையத்தை விட்டால் இவர்களுக்கு புகலிடம் இல்லை. விவாகரத்து, மக்கட்செல்வம் திசைமாறுதல் போன்ற பனிகளில் சறுக்காமல், காரோட்ட, வாழ்க்கைச்சங்கிலியாக வலைப்பதிவை பாவித்து போலி வாழ்க்கை வாழ வழிவகுத்திருக்கிறது.

இந்தப் பார்வை சுயமறுப்பை (denial) உருவாக்கினாலும், கொஞ்சம் வெகுசன பத்திரிகைகளின் சிந்தனையை பிரதிபலித்தாலும், தமிழ்ப்பதிவுகள் மீது நான்கு வருடம் முன்பிருந்த நம்பிக்கை உடைந்ததன் நிதர்சனமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

எப்படி உடைகிறது?

சமீபத்தில் படித்த Influencer: The Power to Change Anything (பார்க்க: Book Selections by Boston Globe – 2007 « Snap Judgment) புத்தகத்தின் உதவியோடு சில குறிப்புகள்.

பிரச்சினகள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தனிமனித அளவில் குடும்பத்திற்கான வருவாய் ஆகட்டும்; உலக அளவில் இராக், ஈழம், வறுமை ஆகட்டும்; பணக்காரியாக இருந்தால் பூமி வெம்மை அடைவதாகட்டும்; ஏழையாக இருந்தால் எயிட்ஸ் நோய் முதல் பட்டினி வரை பலவும் இருக்கிறது.

இவற்றைப் பார்த்து புலம்பி ‘எங்கே நிம்மதி? ஏது நீதி?’ என்று சொல்லி ஓடி வருபவர்கள் மட்டும்தான் தமிழ்ப்பதிவுகளை நிறைத்திருக்கிறார்கள். பதிவர்களுக்கு பொறுமை இல்லை; தீர்வுகளை திடமாக முன்னெடுத்துச் செல்லும் திறமை இல்லை.

அந்த மாதிரி இல்லாமல் தனிக்கட்டையாக துடிப்புடன் திட்டத்தை வலியுறுத்தி பெருமளவில் நிறைவேற்றிய சிலரை உதாரணமாக்கலாம்:

1. The New Heroes . Meet the New Heroes . Mimi Silbert | PBS: குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பதினான்காயிரம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு காட்டும் பாதையை சுட்டி, சாதாரண மனிதர்களாக உலா வர வைத்திருக்கிறார். இதே போன்ற அமைப்பை கலிஃபோர்னியா மாகாணமும் செய்து பார்த்து வருகிறது. தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து, கள்ளக்கடத்தல், விபச்சாரம், திருட்டு போன்ற பஞ்சமாபாதகங்களுக்கு திரும்ப சென்று விடுபவர்களின் சதவீதம் – அங்கே 70 %. இவரிடம் மாட்டிக் கொண்டவர்களில் பத்தே சதவிகிதம்தான் மீண்டும் பழைய குருடிக்கு செல்கிறார்கள்.

2. Rx for Survival . Global Health Champions . Donald R. Hopkins, MD, MPH | PBS: வறுமைக்கோட்டுக்கு கீழே பாதாளத்தில் வசிக்கும் ஏழைகளை பாதிக்கும் நோய் அது. தோலில் இருந்து பூச்சிகள் குபுக்கென்று வெளியேறும் கினியாப் புழு வியாதி. பாதிக்கப்பட்டவர்களை 99.7% அதிரடியாக குறைத்துள்ளார்.

3. The Purpose Prize | Meet Donald Berwick: விகடனில் ஜோக் படித்திருப்போம். பம்மல் கே சம்பந்தத்தில் பார்த்திருப்போம். உடலுக்குள் அறுவை சிகிச்சைக் கருவிகளை வைத்துவிடுவது முதல் பல்வேறு கவனச் சிதறல்கள். அமெரிக்காவில் நேற்றுதான் ஒப்புதல் போட்டிருக்கிறார்கள். ‘மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை மாறிக் கொடுத்தனுப்பி விட்டால் மகப்பேறுக்கான செலவு இலவசம். அறுவை சிகிச்சை தவறாக செய்தால் பணம் தர வேண்டாம்.’ இந்த மாதிரி பெரிய மனசு அறிக்கை விடாமல், ஒண்ணேகால் லட்சம் உயிர்களை கடந்த பதினெட்டு மாதங்களில் காப்பாற்றியிருக்கிறார். அடுத்த குறிக்கோள்: ஐம்பது லட்சம் பேர்.

இந்த மாதிரி நாலைந்து பேர் தமிழ்மணத்தில் உலாவினால் போதும். ஒருவரின் தாக்கம் பலரை சென்றடையும்.

மேலும் ஒவ்வொரு சாதனைக்கும் பின்னணியில் அவரவர்கள் உறுதியாக நம்புகின்ற வழிகாட்டல்கள் இருந்திருக்கிறன. அதைப் பலரும் பின்பற்றி கடைபிடிக்கக் கூடியதாக மாற்றக்கூடிய திறன் இருந்திருக்கிறது.

இரண்டாவதாக எடுத்துக்காட்டிய டொனால்ட் ஹாப்கின்ஸை மீண்டும் உதாரண புருஷராக எடுத்துக் கொள்ளலாம்.

உலகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் நீர் ஆதாரத்திலும் கடைபிடிக்க மூன்று சீவாதாரமான பாவனைகளில் கவனம் செலுத்தினார்:

அ) எல்லோரும் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
ஆ) யாருக்கு ஏற்கனவே கினியாப்புழு நோய் தாக்கப்பட்டிருக்கிறதோ, அவர் நீர்நிலைக்கு செல்லக்கூடாது.
இ) முதல் இரண்டை எவர் கடைபிடிக்கவில்லையோ, அவரை தைரியமாக மற்றவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்.

கடைசியாக் உந்துகை நிறைந்த மாந்தர்களை களப்பணியாளர்கள் ஆக்கி இருக்கிறார்.

தமிழ்மணத்துக்கும் வலைப்பதிவுகளுக்கும் கூட டோனால்ட் ஹாப்கின்ஸின் வழிமுறைகள் பொருந்தும்.

ஆசையுடன் சத்தம் மட்டும் போடும்
சைக்கோ பாலாஜி.
பாஸ்டன்.

Sunday Cartoons – Classic Peanuts & Blondie and Dagwood

Host unlimited photos at slide.com for FREE!

Host unlimited photos at slide.com for FREE!

State of Chennai Roads – Aftermath of downpour: Cartoons by Mathy

Host unlimited photos at slide.com for FREE!