Tag Archives: பட்டியல்

Notable Hindi Songs – 2007 – Film Music: Top 13

2008 முடிவதற்கு முன்பாகவே பதிந்து வைக்க முடிகிறது 🙂

எந்த வரிசையிலும் இல்லை; என்றாலும்

  • ‘ஹே கண்பத்’, நோ ஸ்மோக்கிங் போன்றவை அடிக்கடி கேட்கும் பட்டியலில் இருக்கின்றன.
  • சக்தே இந்தியா, சீனி கம், குரு ஏற்கனவே நிறைய தடவை கேட்டிருப்பீர்கள்!
  • வெல்கம் படத்தின் குத்துப் பாடல், சிவாஜியோடு முட்டிய ஜூம் பராபர் ஆகியவை கேட்டிருக்காவிட்டால், பாப் கல்ச்சர் அறிய காது கொடுக்கவும்.
  • ‘ஹம் தோ அய்ஸே ஹை பையா’ பாடல் பால் மணம் மாறா பாலகனாக இருந்தபோது வந்த ‘ஃபிர் பீ தில் ஹை ஹிந்துஸ்தானி’ போல் துள்ளலாக இருக்கிறது; ‘காசிசென்றுவந்தவுடன் பார்த்ததாலோ என்னவோ தனிப் பாசத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
  • படங்களை மொத்தமாக குறிப்பிட வேண்டும் (அல்லது) எந்தப் பாடலை சொல்வது என்னும் குழப்பத்தில் தீம் கோர்வைகளைத் தவிர்த்து, ஒரு படம் ஒருமுறைதான் இடம்பெறுமாறு அமைத்த பட்டியல் இது.
  • தமிழ்ப்படப் பாடல் பட்டியலுக்கு – Tamil Film Songs – Best of 2007 Movie Music « Snap Judgment
  1. சந்தா ரே (நிலாப் பாடல்) – ஏகலவ்யா
    • பாடியவர்: ஹம்ஸிகா ஐயர்
    • இசை: ஷாந்தனு மொய்த்ரா
    • பாடலாசிரியர்: ஸ்வானாந்த் கிர்கிரே
  2. சா ரஹா‘ராம் கோபால் வர்மா’வின் ஆக்
    • பாடியவர்: ஷ்வேதா பண்டிட், வினோத் ரதோட்
    • இசை: அமர் மொஹிலே, டிஜே அமித், கணேஷ் ஹெக்டே, நிதின் ரால்வாக்கர், பிரசன்னா சேகர்
    • பாடலாசிரியர்: ஜெய்தீப் சாஹ்னி
  3. ஹம்தோ அய்ஸே ஹேன் லகா சுனரி மே தாக்
    • இசை: ஷாந்தனு மொய்த்ரா
  4. ஜப் பீ சிகரெட் நோ ஸ்மோகிங்
    • பாடியவர்: அத்னான் சாமி
    • இசை: விஷால் பரத்வாஜ்
    • பாடலாசிரியர்: குல்சார்
  5. மௌலா மேரே லே லே மேரி ஜான் சக் தே இந்தியா
    • பாடியவர்: கிருஷ்ணா, சலிம் மெர்சன்ட்
    • இசை: சலீம் – சுலைமான்
    • பாடலாசிரியர்: ஜெய்தீப் சானி
  6. ஆஜா நாச்லே ஆஜா நாச்லே
    • பாடியவர்: சுனிதி சௌஹான்
    • இசை: சலிம் – சுலய்மான்
    • பாடலாசிரியர்: பியூஷ் மிஷ்ரா
  7. குர்தி மல்மல் திநிஷப்த்
    • பாடியவர்: அனுராதா போட்வால், கைலாஷ் கெர், ஸ்னேகா பந்த், சோனு நிகம், சுதேஷ் போஸ்லே
  8. கண்பத் ஷூட் அவுட் அட் லோகன்ட்வாலா
    • பாடியவர்: அன்ச்சல், மிகா
    • இசை: மிகா
    • பாடலாசிரியர்: மிகா
  9. சீனி கம் சீனி கம்
    • பாடியவர்: ஷ்ரேயா கோஸல்
    • இசை: இளையராஜா
    • பாடலாசிரியர்: சமீர்
  10. ஊன்ச்சா லம்பா வெல்கம்
    • பாடியவர்: ஆனந்த் ராஜ் ஆனந்த் & குழு
    • இசை: ஆனந்த் ராஜ் ஆனந்த்
    • பாடலாசிரியர்: ஆனந்த் ராஜ் ஆனந்த்
  11. மேரி ஜிந்தாரி கன்னா & அய்யர்
    • பாடியவர்: மதுஸ்ரீ, சுக்விந்தர் சிங்
    • இசை: தபுன் சூத்ரதார்
    • பாடலாசிரியர்: ராஜேஷ் ஜோரி
  12. ஜூம் பராபர் ஜூம் ஜூம் பராபர் ஜூம்
    • பாடியவர்: ஷங்கர் மகாதேவன், சுனிதி சவுஹான், ஜூபீன் கர்க்
    • இசை: சங்கர் – எசான் – லாய்
    • பாடலாசிரியர்: குல்சார்
  13. திருமணப் பாடல் காந்தி மை ஃபாதர்
    • பாடியவர்: பலர்
    • இசை: பியூஷ் கனோஜியா

Anjaathey – Bharathi Aathichoodi

அஞ்சாதே பாடல்:

1. அச்சம் தவிர்
62. நையப் புடை
76. மானம் போற்று
96. ரௌத்திரம் பழகு
2. ஆண்மை தவறேல்
43. தாழ்ந்து நடவேல்
30. சூரரைப் போற்று
45. தீயோர்க்கு அஞ்சேல்
…(¶#¶)…

11. ஓய்தல் ஒழி
61. நேர்ப்படப் பேசு
43. தாழ்ந்து நடவேல்
26. சாவதற்கு அஞ்சேல்

14. காலம் அழியேல்
16. கீழோர்க்கு அஞ்சேல்
74. போர்த்தொழில் பழகு
52. தோல்வியில் கலங்கேல்
…(¶#¶)…

69. புதியன விரும்பு
106. வீரியம் பெருக்கு
19. கெடுப்பது சோர்வு
51. தொன்மைக்கு அஞ்சேல்

107. வெடிப்புறப் பேசு
54. நன்று கருது
110.வௌவுதல் நீக்கு
53. தவத்தினை நிதம்புரி
…(¶#¶)…

13. கற்றது ஒழுகு
21. கைத்தொழில் போற்று
32. சேர்க்கை அழியேல்
72. பேய்களுக்கு அஞ்சேல்

38. ஞாயிறு போற்று
75. மந்திரம் வலிமை
36. சௌரியம் தவறேல்
55. நாளெல்லாம் வினை செய்


பாக்கி ஆத்திச்சூடி
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
12. ஔடதம் குறை
15. கிளைபல தாங்கேல்
17. குன்றென நிமிர்ந்து நில்
18. கூடித் தொழில் செய்
20. கேட்டிலும் துணிந்து நில்
22. கொடுமையை எதிர்த்து நில்
23. கோல்கைக் கொண்டு வாழ்
24. கல்வியதை விடேல்
25. சரித்திரத் தேர்ச்சிகொள்
27. சிதையா நெஞ்சு கொள்
28. சீறுவோர்ச் சீறு
29. சுமையினுக்கு இளைத்திடேல்
31. செய்வது துணிந்து செய்
33. சைகையில் பொருளுணர்
34. சொல்வது தெளிந்து சொல்
35. சோதிடந்தனை இகழ்
37. ஞமலிபோல் வாழேல்
39. ஞிமிரென இன்புறு
40. ஞெகிழ்வது அருளின்
41. ஞேயம் காத்தல் செய்
42. தன்மை இழவேல்
44. திருவினை வென்று வாழ்
46. துன்பம் மறந்திடு
47. தூற்றுதல் ஒழி
48. தெய்வம் நீ என்று உணர்
49. தேசத்தைக் காத்தல் செய்
50. தையலை உயர்வு செய்
56. நினைப்பது முடியும்
57. நீதிநூல் பயில்
58. நுனியளவு செல்
59. நூலினைப் பகுந்துணர்
60. நெற்றி சுருக்கிடேல்
63. நொந்தது சாகும்
64. நோற்பது கைவிடேல்
65. பணத்தினை பெருக்கு
66. பாட்டினில் அன்பு செய்
67. பிணத்தினைப் போற்றேல்
68. பீழைக்கு இடம் கொடேல்
70. பூமி இழந்திடேல்
71. பெரிதினும் பெரிது கொள்
73. பொய்ம்மை இகழ்
77. மிடிமையில் அழிந்திடேல்
78. மீளுமாறு உணர்ந்து கொள்
79. முனையிலே முகத்து நில்
80. மூப்பினுக்கு இடங்கொடேல்
81. மெல்லத் தெரிந்து சொல்
82. மேழி போற்று
83. மொய்ம்புறத் தவம் செய்
84. மோனம் போற்று
85. மௌட்டியந்தனைக் கொல்
86. யவனர்போல் முயற்சிகொள்
87. யாவரையும் மதித்து வாழ்
88. யௌவனம் காத்தல் செய்
89. ரஸத்திலே தேர்ச்சி கொள்
90. ராஜஸம் பயில்
91. ரீதி தவறேல்
92. ருசிபல வென்றுணர்
93. ரூபம் செம்மை செய்
94. ரேகையில் கனிகொள்
95. ரோதனம் தவிர்
97. லவம்பல வெள்ளமாம்
98. லாவகம் பயிற்சி செய்
99. லீலை இவ்வுலகு
100. உறுத்தரை இகழ்
101. உலோக நூல் கற்றுணர்
102. லௌகிகம் ஆற்று
103. வருவதை மகிழ்ந்துண்
104. வானநூல் பயிற்சிகொள்ள
105. விதையினைத் தெரிந்திடு
108. வேதம் புதுமை செய்
109. வையத் தலைமைகொள்

நன்றி: Andhimazhai – பாரதியார் ஆத்திச்சூடி

ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள்

ஆணுக்கு மட்டுமே பிடித்த பாடல்கள் என்று ஏதாவது இருக்கிறதா? குத்துப்பாடல்களும் குலுக்கல்களும் பெண்களுக்கும் ரசிக்கிறதா? மெட்டு ரசிக்கப்படுகிறதா? காட்சியாக்கமா? மூன்று மணிக்கு ஃபோன் சிணுங்குவதை நிறுத்துபவர்கள் இருக்கட்டும்; சிற்றஞ்சிறுகாலே மூன்று மணி தாகசந்திக்கு யாரைக் கேட்க விருப்பம்?

ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள்

1. ‘அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க’ – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

2. ‘செவ்வந்தி பூமுடிச்ச சின்னக்கா’ கேட்க விரும்பினால் இன்னும் ரொமான்ஸ் மூடு போகவில்லை என்று அர்த்தம். அல்லது நண்பர் குழாம் தூங்கிப் போனதும் காரணமாக இருக்கலாம். இரண்டையும் சரி செய்தால் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’

3. ‘வஜ்ஜிரம் வவ்வாலு மீனுதானா!’ – செம்பருத்தி

4. ‘போட்டு வைத்த காதல் திட்டம் ஒகே கண்மணி’ – சிங்காரவேலன்

5. ‘கூடையில கருவாடு; கூந்தலிலே பூக்காடு’: ஒரு தலை ராகம்; ஒரிஜினல் டி ஆர் சிச்சுவேசனுக்கு ஏற்ப ‘அட பொன்னான மனசே பூவான மனசே’ என்று உருமாற்றலுக்கும் ஏற்றவர்.

6. ‘எம்மாடி ஆத்தாடீ! உன்ன எனக்கு தரியாடீ?’ – எம்மா எம்மா எம்மம்மாஆ; தற்போதைய காளை ‘குட்டிப் பிசாசே’வும் சரியான ஆம்பிளையின் தேர்வு.

7. ‘தண்ணிதொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’ – சிந்துபைரவி

8. ‘காதல் என்பது பொதுவுடைமை; கஷ்டம் மட்டுந்தானே தனியுடைம’ – பாலைவன ரோஜாக்கள்

9. ‘ஆசை நூறு வகை’ (அசல்): அடுத்த வாரிசு

10. ‘கண்ணத் தொறக்கணும் சாமீ; கையப் புடிக்கணும் சாமீ!’ – முந்தானை முடிச்சு

தொடர்புள்ள பதிவுகளில் சில:

பெண்ணின் ஸ்டீரியோடைப் மனதைத் தொட்டுச் செல்லும் பாடல்களை guess செய்தால்…

1. ‘கவிதைகள் சொல்லவா? உன் பெயர் சொல்லவா? இரண்டுமே ஒன்றுதான்!’ – உள்ளம் கொள்ளை போகுதே

2. ‘தைப்பொங்கலும் வந்தது, பாலும் பொங்குது’ – மகாநதி

3. ‘காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்’ – தம்பிக்கு எந்த ஊரு

4. ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ – மௌன ராகம்

5. ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ – ஆசை

6. ‘வசீகரா’ – மின்னலே

7. ‘பச்சை நிறமே’ – அலைபாயுதே

8. ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்… ஒற்றை நாணயம்’ – ஆனந்தம்

9. ‘மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே’ – ரோஜாக்கூட்டம்

10. ‘குறுக்கு சிறுத்தவளே’ – முதல்வன்

சிறப்பு கொசுறு: ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ – ஆட்டோகிராப்

Writer Sujatha

Thiruppur Krishnan:

“வேண்டாம் வரதட்சிணை” என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் – என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:

பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!


InterviewsTFM Page Magazine – Screen-Turners: Chap 3.1 – Something about Sujatha (Naaz)

தீராநதி – குமுதம்.காம்: “சுஜாதா நேர்காணல்”

Miscellany:

அவருக்கு பிடித்த 10 படங்கள் « Snap Judgment

கல்கி வளர்த்த சிரிப்பலைகள் « Appusami.com

site:www.thinnai.com சுஜாதா – Google Search

Excerpts from his Works:
சுஜாதா « Snap Judgment: என் இனிய இயந்திரா

கண்ணம்மா: சுஜாதாவின் சிறு சிறுகதைகள்: (Six Word Stories)

Sujatha Turns 70 – Katrathum Petrathum: Anandha Vikadan « Tamil Archives

Experiences:

அறுபது அமெரிக்க நாட்கள் (17) « தமிழன் எக்ஸ்பிரஸ் :: டிசம்பர் 25-31, 1996

Bloggers with Sujatha

கில்லி – Gilli » Blog Archive » Meeting writer Sujatha

தேசிகன் பக்கம்: “எழுபத்தொன்று – சுஜாதா”

தேசிகன் பக்கம்: “ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா”

ஒரு அரட்டையும் ஒரு பதிவும் « Snap Judgment

Family & Life:

பிச்சைப்பாத்திரம்: எழுத்தாளர் (திருமதி & திரு) சுஜாதாவின் நேர்காணல்

Movie Reviews:

தேசிகன் பக்கம்: வேட்டையாடு விளையாடு விழா பற்றி சுஜாதா

Controversy, Issues, Critiques:

கில்லி – Gilli » Blog Archive » Sujatha’s Short Story & Bloggers’ Reaction

பெருசுகளின் பெருங்காப்பியங்கள: புறநானூறு : சுஜாதாவின் பிழைகள்

கில்லி – Gilli » Blog Archive » Azhagiya Periyavan, Sujatha & Dalit Ilakkiyam

Book reviews:

PK Sivakumar – கற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்

Thinnai: “மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘) – பாவண்ணன்”

Thinnai – ஜெயமோகன்: “தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா: உயிர்மை பதிப்பகம்”

Thinnai: “சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் – ஜெயமோகன்”

Homepages:

:: WriterSujatha.com:: Home Page

:: Ambalam :: Tamil Ezine

Sujatha – Wikipedia, the free encyclopedia

சுஜாதா (எழுத்தாளர்) – தமிழ் விக்கி


கணிப்பொறி “கேண்டீன்” இரண்டிலும் அடிக்கடி ஒரேபிரச்சனைதான். சர்வர் ப்ராப்ளம்.
-சுஜாதா, அம்பலம்இந்தியா டுடே 30-8-2000 :: சுஜாதா பதில்கள்

கேள்வி: ‘கவிதைகளைத் திருடி எழுதினார் கண்ணதாசன்’ என்று ஒரு கவிஞர் கூறியுள்ளாரே?

பதில்: மணிமேகலையில் திருக்குறள் வருகிறது. ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது. மற்ற இலக்கியங்களில் வரும் வரிகளைப் பின்வரும் இலக்கியக்கர்தாக்கள் பயன்படுத்துவது இயல்பானதே. ஷேக்ஸ்பியர் தட்டின வரலாறுகளும் வரிகளும் எண்ணற்றவை. ஷேக்ஸ்பியரிடமிருந்து தட்டினதும் அவ்வண்ணமே. இத்தகைய குற்றச்சாட்டுகள் நிற்காது. சாதனைகள் தான் நிற்கும்.


ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா
ஆர். விஜி, அரகண்டநல்லூர்

இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்..?

பெட்ரோலும், கூட்டுக் குடும்பங்களும், கல்யாணமும், பிள்ளைப் பேறும், தாய்ப்பாசமும், விமான, பஸ் பயணமும், செலுலாய்டு சினிமாவும், டெலிபோனும் பெரும்பாலான வியாதிகளும், கடவுள் பக்தியும், கதை, கவிதைகளும், ரூபாய் நோட்டும் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது அழிந்து போக. தற்கொலை மட்டும் பாக்கியிருக்கும்.

த. சத்தியநாராயணன், அயன்புரம்.
உலகின் முதல் டெர்ரரிஸ்ட் யார்?

சதாம் என்கிறது அமெரிக்கா. ஒஸாமா என்றும் சொல்லி வந்தார்கள். ‘அமெரிக்காதான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட்’ என்கிறார் நொவம் சாம்ஸ்கி. மகாபாரதத்தில் துரியோதனன் மகன் ஒருவன் டெர்ரரிஸ்ட்டாக இருந்திருக்கிறான். இந்திரன்தான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட் என்று இந்து புராணங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர் எழுதியிருக்கிறார். முதல் டெர்ரரிஸ்ட் சரித்திரத்தில் முதன் முதல் ஒடுக்கப்பட்ட குழுவினரில்தான் பிறந்திருக்க வேண்டும்.


வாக் போகையிலே… – மெரீனா ”என்ன சார், ஈவினிங் வாக்கா?””ஆமா..”

”ஏன், இப்பல்லாம் நீங்க ஒண்ணுமே எழுதறதில்லே?”

”நிறைய எழுதியாச்சே..”

”நிறைய பேசியாச்சேன்னு, யாராவது பேசாம இருக்காங்களா?” உதிர்த்த பொன்மொழியை அவரே ரசித்துக்கொண்டார்!

”எப்பவாவது எழுதக் கூடாதா?”

”எதை எழுதுவது?”

”எதையாவது…”

”எதையாவது எழுதினா யாரு போடுவாங்க..?”

”யாராவது..”

”யாரு படிப்பாங்க?”

”படிக்கிறவங்க படிச்சுட்டுப் போறாங்க…”

”நீங்க படிப்பீங்களா?”

”ஐயையோ! என்னை நம்பி எழுதாதீங்க… எனக்கு எதைப் படிக்கவும் நேரமில்லே.. போறபோக்குலே பத்திரிகை போஸ்டர்களைப் படிக்கிறதோட சரி..” புறப்பட்டேன்.

”சும்மா இருக்காதீங்க.. என்னை மாதிரி தினம் டைரியாவது எழுதுங்க. எழுதற பழக்கம் விட்டுப் போயிடக்கூடாது!”

வலைப்பதிவில் எத்தனை வகைகள் உண்டு?

‘நான் வலைப்பதிகிறேன்’ என்றவுடன் எழும் கேள்வி: ‘என்னவெல்லாம் பதிவீர்கள்?’

அதற்கு விடையளிக்கும் முயற்சி.

Monologue – அனுபவம் சார்ந்த ஆழ்ந்த சுய சிந்தனை: புனைவு போல் ஒழுக்கமான நடை வேண்டும். அடைப்புக்குறிக்குள் சொந்த கிறுக்கல் எல்லாம் எட்டிப் பார்க்காது. சுவாரசியம் குன்றாமல் பறக்கும். தன்மையில் வந்திருக்கும். நிஜம் போல் காட்சியளிக்கும். திடீர் திருப்பம் தரும் முடிவு இல்லாவிட்டாலும் பளிச்சென்று இறுதிப்பாகம் இருக்கும்.

இவற்றைக் காண்பது வாரிசாக இல்லாத அரசியல்வாதியாக இருந்தும் வெற்றியடைவதைப் போல கொஞ்சம் அரிய வகை.

இந்த நடையை பெரும்பாலும் செல்வராஜ் பதிவுகளிலும் ஜெயமோகன் எழுத்துகளிலும் கண்டிருக்கிறேன்.

Portrait – நிகழ்வுகளை கண் முன்னே நிற்க வைத்தல்: தேர்ந்த விவரிப்பு மூலம் புள்ளிவிவரம் கூட உருவம் பெறும். நம்பகத்தன்மை கோரிடும். சித்திரமாக விவரங்கள் பொதிந்திருந்தாலும் எளிதில் அணுகமுடியும் பாவம் கொண்டிருக்கும். உணர்ச்சிகளை விட சம்பவங்கள் கொண்டு ஈர்க்கும்.

எளிது போல் தோன்றினாலும் சன் நியூஸின் நேர்த்தியும் பொறுமையும் வேண்டும். பரபரப்புக்கு ஆசைப்படாத மனம் வாய்க்கும் நேரங்களில் முயற்சிப்பது உசிதம்.

பத்ரியை மனதில் வைத்து எழுதிய மாதிரி பட்டாலும் செல்வன், நாராயண் ஆகியோரை எடுத்துக்காட்டலாம்.

Phenomenology – நடந்ததை தத்துவார்த்தமாக தன்வயமாக்குதல்: சாட்சிபூதமாக இருக்கும். செய்திகளை, ஆக்கங்களை சொந்தக் கருத்துடன் முன்வைக்கும். உளவியல் சார்ந்த உலகளாவிய பார்வை கொடுக்கும். பழகிப்போகும் வரை அணுகுவதற்கு கரடுமுரடாகத் தடுக்கும்.

விகடன், குமுதம், விட்டலாச்சார்யாவை விட்டுவிட்டு காலச்சுவடு, புதிய *** என்று வாசித்தால் எழுத்துப்பயிற்சி கிடைக்கும். அகரமுதலி வைத்துக் கொண்டு எளிய வார்த்தைக்கு சப்ஸ்டியூட்டாக சங்கச்சொல் போடுவது சாலச் சிறந்தது.

டிஜே, அய்யனார், சுகுணா திவாகர் என்று நிறைய இலக்கியவாதிகளை சொல்லலாம்.

Synergy – உரையாடல், ஊக்கத்திரி: தனித்தனி கூண்டுகளாக இருக்கும் காய்களை அவியலாக்கும் ஜாம்பவான் சமர்த்தர். அனுமன்களை அடையாளம் காண வைக்கும் தூண்டில் வீசும் பதிவுகள் கிடைக்கும். தேங்கிக் கிடக்கும் இடத்தை சுறுசுறுப்பாக்கும் திட்டம் தீட்டும். தனி மரங்கள் நெடிந்துயர விரும்பும் தோப்பில் பல மரம் கண்ட தச்சராய் வெட்டி வீழ்த்தாமல், பறவையாய் பரஸ்பரம் அறிமுகம் கொடுக்கும்.

வேதாளங்கள் நிறைந்த உலகு என்பதால் மனந்தளராத விக்கிரமாதித்த மனப்பான்மை வேண்டும். பெண்களாய் இருந்தால் இயல்பாகவே அமைந்த மானகை/மேலாண்மை குணாதிசயங்கள் கைகொடுக்கும். வேற்றுமைகளை அடுக்குவதை விட ஒற்றுமைகளைக் கண்டறிந்து ‘அட’ போடத் தெரிந்திருக்க வேண்டும்.

சர்வேசன், செல்லாவை சொல்லலாம்.

Mongering – வாங்க, விற்க: சொந்த விருப்பங்கள் சார்ந்து இயங்கும். சில சமயம் சிலரால் வெறுப்பை உமிழ்வதுடன் கோர்த்துவிடப்பட்டாலும், அதிகம் மாறுபடாத வாதங்கள் தொடர்ச்சியாக கிடைக்கும். வாசகரை அச்சுறுத்தும். விதைக்க விரும்புவதை எப்பாடுபட்டேனும் விற்றே தீரும். பொருத்தமான ஒப்புமைகளுடன் சம்பந்தமில்லாத உருவகங்களும் நுழைந்திருக்கும்.

இவற்றை இலக்கியப்ப்பதிவுகளுடன் குழப்பிக்கொள்ள கூடாது. நியாய உணர்ச்சி இல்லாத லாஜிக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். கொண்ட கொள்கைக்காக எக்காரணம் கொண்டும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு வாசனை உண்டு என்பதை மறக்கவேண்டும்.

எல்லாப் பதிவுகளும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பதற்கேற்ப அனைவரிலும் ஓரிரு இடுகையாவது இப்படி இருக்கும்.

Proposal – வேண்டுகோள், விண்ணப்பம், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு: திட்டமிடல் தென்படும். அனுபவத்தில் கிடைத்த தொலைநோக்கு பார்வை இருக்கும். மக்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் அறுதியிட்டு செய்யக்கூடிய ஆலோசனை நிறைந்திருக்கும்.

இதற்கு உதாரணமாக தருமி, ரவிசங்கர் போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

Replies – பதில், பிறர் பதிவு சார்ந்து எழுச்சி பெற்ற கருத்து தொகுப்பு: புரிகிற மாதிரி நச்சென்று நாலு வார்த்தை மட்டுமே இருந்தாலும், அதிரடியாக இருக்கும். அதுவரை ‘கொக்குக்கு மீன் ஒன்றே மதி’ என்பது சேணம் கட்டிய குதிரைகள் தாறுமாறாக ஓட ஆரம்பிக்கும். மறுமொழிகள் தருவதற்கு கூச்சப்படார்.

‘வஸ்தாது தோஸ்துங்க புழங்குதே… ரப்சர் ஆயிடுமே’ என்றெல்லாம் அஞ்சாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். எனினும், எப்பொழுதும் எதிர்த்தே பேசிக் கொன்டிருந்தால் வவ்வால் பதிவர் என்று நாமகரணமிடப்படும் அபாயம் இருப்பதால், தெளிவாக அறிந்த விஷயங்களில், கன்ஸிஸ்டன்ட் கொள்கையில் உறுதியாக இருக்கத் தெரியவேண்டும்.

பின்னூட்டங்கள் பதிவாக சிலர் வைத்துக் கொண்டிருந்தாலும் உடனடியாக தோன்றுபவர்கள் கல்வெட்டு பலூன் மாமா, இகாரஸ் பிரகாஷ், ரோசா வசந்த்.

Log – பதிவு: அனைத்துப் பதிவர்களுக்கும் பதிவுகள்தான் என்றாலும், டைரி என்பதற்கு அணுக்கமாக இருக்கும். அயர்ச்சியுறும் அளவு விவரம் காணப்படும். கருத்துத்திணிப்பு, அறச்சீற்றம் எல்லாம் நிகழாமல் அன்றாட வாழ்வை விவரிக்கும். சுவை, லயிப்பு போன்றவற்றை விட நம்பகத்தன்மை, சொந்த விஷயம், நிஜம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்.

ஸ்ரீராமதாஸ், மா சிவகுமார் என்று எண்ணி ஒரு கைக்குள் அடங்கும் அரிய சிலர் உண்டு.

இன்னும் இருக்கும். எங்கிருந்தாவது இந்த மாதிரி சுருட்டுவதற்கு, பட்டியல் அகப்பட்டவுடன் தொடரலாம்.

சன்ன சவுக்கின பேசுவது

எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்?

– விகடனில் வந்த நாஞ்சில் நாடனின் சிறப்புப் பேட்டி.

கிசுகிசு, வதந்தி, புறம் பேசுவது என்று பல விதங்களில் விளிக்கப்படுவதை, இணையத்தில் கண்ணுறும் இடங்களில் சேமித்து வைக்கும் முயற்சி:

1. அக்டோபர் 2005-ல் தமிழ் வலைப்பதிவர்கள் என்ற பெயரில் இயங்கிய சிலர் (ஏம்ப்பா, ஒரு தொழில்நுட்பப் பிரச்னையால சில பதிவுகளை தற்காலிகமான நீக்குனதுக்கு என்னமோ வலைப்பதிவுலகமே இருண்டு போனாமாரி கூவுனீங்களே, அந்தச் சிலரில் ஒரு டிக்கிட்டுங்கூட இன்னிக்கு பதிவுலகிலேயே காணமே, அட தமிழ்மணத்தை வுடு, தமிழ் வலைப்பதிவு உலகிலேயே காணமே, அதைக் கேக்குறேன். இதில் வேற நடுவுநிலை வியாக்கியானம் பேசிட்டு ரெண்டு நல்லவங்க வேற வீரப்பா இருந்துட்டாங்க, இன்னிக்கும் அவங்க வீம்பே அவங்களை நீரோட்டத்தில் சேரவிடாமத் தடுக்குது, ம், நல்லவங்க, வாழ்க
புனித பிம்ப தமாஷ்: காசி

2. வலைப்பதிவுலக புனிதப்பிம்பங்கள் பற்றி – ஒருவரல்ல (as per your words). இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்யவேஏஏஏஏஏஏஏ இருக்கிறார்கள். சிலரது உடனே கிழிக்கப்படலாம். சிலரது கிழிய சில நாளெடுக்கலாம். சிலரது கிழிபடாமலே போகலாம்!!! இதில் சித்தாந்தங்களின் இரண்டு பக்கங்களிலும் தூண் போல இருப்பவர்கள்தான் முக்கியமான ஆட்கள் என்பது சுவாரசியமானது.
மதி கந்தசாமி

3. பலர் அவர்கள் பதிவை தவிர வேறு பதிவை படிக்கும் குணங்களே இல்லாதவர்கள். ஒரு சிலர் தவிர, பலரிடம் கேட்டால் நான் படிப்பேன் பின்னூட்டம் போட மாட்டேன் என்று மொக்கையா சொல்வார்கள்.

இன்னும் இதில் உள்ள சிலர் அவர்கள் பதிவில் ஒருவர் பின்னூட்டம் போட்டால் அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே வெளியிடுவர்கள், அப்படியே வெளியிட்டாலும் அதுகுறித்து கண்டுக்கொள்ள கூட மாட்டார்கள். அதாவது ஒரு பதிலும் கூற மாட்டார்கள். குறைந்த பட்சம் நன்றி தெரிவிக்கும் நாகரீகம் கூட இல்லாதவர்கள்.

என்னை ரொம்ப அழுத்தி கேட்டால் பெயர்களை சொல்லவும் தயங்க மாட்டேன்.
வவ்வால்

4. இன்னொரு நடுவர் பற்றிய பிரச்சனையா என்றால் சொல்லத் தெரியலை,
‘நச்’ போட்டி: மோகன்தாஸ்

சுட்டிசாரி

நடைபாதையில் செல்பவர் பாதசாரி.

கம்யூனிசம் பேசினால் இடதுசாரி.

விஜய்காந்த் வலதுசாரி.

என்பது போல் சுட்டி கொடுக்கும் வலைஞர்கள் சுட்டிசாரிகள். 

வலப்பக்க உரல்கள் என்றவுடன் நினைவிலாடுபவர் பத்ரி. இவர் இப்போது ரொம்ப சிக்கனமாகி விட்டார். இன்ட்ரெஸ்டிங்காக எதுவுமில்லை.

இன்றைய அளவில் அசுரன் பதிவுதான் ‘வலைப்பதிவில் சுட்டிகள்’ என்று தோன்றியவுடன் பயன் தருமாறு அமைந்திருக்கிறது. மார்க்ஸியம், கூகிள் ரீடர், தத்துவம், வரலாறு, தோழமை தளங்கள் என்று முழுமையான வீச்சு.

அதே மாதிரி மென் நூல்கள், பல்கலை சுட்டிகள் இன்ன பிற என்று பயனுள்ள தோரணம் கட்டுகிறார் கேயாரெஸ்.

இந்தப் பதிவு எழுதுவதற்கு காரணமாக இருந்தவர் கோவி கண்ணன். ‘அடிக்கடி நுழைவது‘ என்று அடைமொழியுடன் விளிப்பது கவனத்தை ஈர்த்தது.

அதே போல் நாமகரணங்களுடன் உண்மைத்தமிழனும் அறிமுகம் தருகிறார்.

முபாரக் ‘கைகாட்டி மரங்கள்‘ என்று கவிபட அழைக்கிறார்.வலைவீச்சு என்கிறார் சன்னாசி.

நண்பர்கள் என்று ப்ளாக்மெயிலில் இறங்கிவிடுகிறார் செல்வன்.

சிந்தனையாளர்கள் என்று பட்டம் தருபவர் தமிழ்மணி.

இடது, வலது பாகுபாடில்லாமல் மோகந்தாஸும், ‘முதுகு சொறிதல்‘ என்று துதியுடன் தாதாக்களுக்கு மாமூல் வைக்கிறார்.

என்னுடைய தாத்தா கால பதிவில் வைத்திருக்கும் வகைப்படுத்தல் தலைப்புக்காக விளக்கங்கள் கொடுத்து கண்டிப்புகள் பெற்று, உவகை அடைய வத்திருக்கின்றன.

பூக்கிரியை மட்டும் இனிஷியல் போட்டு மற்றவர்களை தனிமையில் தொடுக்கிறார் அய்யனார்.

இந்த மாதிரி காரணப்பெயர் இட்டிருந்த பிரகாஷ் சுருக்கெழுத்துக்கு மாறிவிட்டார். இன்னும் மாறாதவர் மூக்கு சுந்தர்.

தான் எழுதியதை ஒழுங்கமைத்து தொகுத்துத் தருகிறார் எம்.எஸ்வி  முத்து. அதே போல் முழுநேர சந்தைப்படுத்தலில் இறங்கிய இன்னொருவர் வெட்டிப்பயல்.

தேடுபவர்கள் விரும்புவதை கூகிலே அசருமாறு வைத்திருக்கிறார் பிகேபி.

எல்லோரும் பிரதியுபகாரம் செய்வது போல் திரட்டிகளை கை காட்டுகிறார் பெட்டை.

இணைப்புகளில் வித்தியாசமானவற்றை வைத்திருப்பதன் மூலம் கவர்கிறார் கல்வெட்டு.

வோர்ட்ப்ரெஸ்.காமின் சாத்தியக்கூறுகளை புலப்படுத்துகிறார் சேவியர்.

தான் எழுதிய நுட்பங்களை முன்னிறுத்துகிறார் ஜெகத்.

பட்டறையை இன்றும் மறக்காதவர் விக்கி. சற்றுமுன் போட்டியை அகலாமல் வைத்திருப்பவர் ஆசிப்.

விளம்பரங்களுக்கு நடுவில் வலைப்பந்தல் வைத்திருக்கிறார் சர்வேசன்.

கிட்டத்தட்ட ‘சைடுபார் முன்னேற்ற கழகம்‘ தொடங்க ஐ.எஸ்.ஓ சான்றிதழ் தரப்பட்டியல்களுடன் கூடியதாக ஹரன்பிரசன்னாவயும் இட்லி-வடையையும் சொல்லலாம்.

மின்மடல் வேண்டுபவர்கள், அஞ்சலில் பிரதியெடுக்க விரும்புபவர்கள் போன்றவர்களுக்கு ஏதுவாக நோ நான்சென்ஸ் சுட்டி சாரி ஜமாலன்.

கடைசியாக, எட்டப்பனாக எட்டாத சுட்டிகளை தட்ட வைக்கும் நோக்கில் இயங்கும் வலைச்சரம்எனது பதிவு இடம்பெற்றிருக்கிறதா‘ என்று ஆர்வத்துடன் நோக்கவைக்கிறது.

என்ன வேணா பட்டை போடுங்க…

பாட்டை மட்டும் போட்டு படுத்தாதீங்க! என்று சரணமடைவதுதான் என் பல்லவி.

2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

மசாலா பத்து

  1. போக்கிரி – தூள். மகேஷ் பாபு மலை என்றாலும், மடுவாகாத விஜய்.
  2. அழகிய தமிழ்மகன் – ரஜினிக்குப் பிறகு மசாலை ஊச வைக்காத நம்பிக்கை நட்சத்திரம் விஜய் முதல் முறையாக இரு வேடத்தில் தோன்றினார்.
  3. தாமிரபரணி – கடகட காட்சி நகர்த்தல். நேர்த்தியான விஷால். சன் டிவி சீரியலின் சாமுத்ரிகா நாயகி. சந்திரமுகி அல்லாத பிரபு.
  4. கண்ணாமூச்சி ஏனடா – பெண்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுக்க இன்னும் முன்வருகிறார்களே! பார்க்கலாம்… பாராட்டலாம்.
  5. பருத்திவீரன் – ஜாலியான கதையில் கடைசி அரை மணி ரணகளம்.
  6. நான் அவனில்லை – ஸ்னேகா திருஷ்டிப் பொட்டாக இருந்தாலும் ஜீவன் பிழைக்கவைக்கிறார்.
  7. அம்முவாகிய நான் – பார்த்திபனுக்கு என்றும் பாயசம், செக்ஸ் அன்றும் விற்றது; இன்றும் சதை சக்கை போடுகிறது.
  8. கிரீடம் – இளைய தளபதிக்கு மட்டும்தானா ரீமேக்?
  9. பில்லா – மீண்டும் வறட்சி; இன்னொரு ரீமேக்.
  10. பச்சைக்கிளி முத்துச்சரம் – மொழிமாற்றம் என்ற முறையில் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வித்தியாச பத்து

  1. உன்னாலே உன்னாலே – வசனத்தில் பன்ச்; துள்ளலில் தங்கச்சி கஜோலுக்கு அக்கா; ‘ஜெய’த்திற்கு பின் மீண்டும் சதா நடிப்பு.
  2. எவனோ ஒருவன – சாது மிரண்டால்; கல்கி புருஷன்.
  3. ஒன்பது ரூபாய் நோட்டு – சிவாஜி கணேசனுக்கு போட்டியாக நடிப்பும் சோகமும்.
  4. ஓரம்போ – சென்னை ஆட்டோக்களும் ஆட்டோ சார்ந்த பிரதேசங்களும்.
  5. கற்றது தமிழ் – ஆசைப்படுவதை படிப்பதை விட ஆசைப்பட்டது கிடைக்குமாறு படிக்க சொன்ன படம்
  6. கல்லூரி விஸ்வாமித்திரர் வாயால் பிரும்மரிஷி பட்டம்
  7. லீ – படம் நல்லா இருக்காமே?
  8. சென்னை 600028 – படம் நன்றாக இருக்கிறது
  9. சத்தம் போடாதே – வசந்த்
  10. பொல்லாதவன் – பார்க்கவேண்டும்

விட்டுப்போனவை

பயமுறுத்தியவை

  1. மிருகம் – சலனம் செய்யவேண்டுமென்றால் ஆவணப்படமாவது எடுக்கத் தெரிந்திருக்கவேண்டும்
  2. வீராசாமி – உடலுக்கும் உருவத்துக்கும் ஏற்ற பாத்திரம் எடுக்கத் தெரியவேண்டும்
  3. ஆழ்வார் – இயக்குநரை தேர்தெடுக்கத் தெரியவேண்டும்
  4. குற்றப்பத்திரிகை – தணிக்கை அரசியல் தெரிந்திருக்கவேண்டும்
  5. தீ நகர் – கரண் பொருத்தமாக செய்கிறாரே என்னும்போது கொம்புசீவுபவர்களை அடக்கத் தெரியவேண்டும்
  6. தீபாவளி – ஜெயம் ரவிக்கு தெரிந்ததெல்லாம் மறுசுழற்சி; எதற்கு சொந்த முயற்சி?
  7. மாயக்கண்ணாடி – சேரன், எஸ்,ஜே. சூர்யாவுக்கு எல்லாம் இயக்குநர் சரக்கு தீர்ந்தாச்சா?

உதவிய பதிவுகள்:
சண்டே சினிமா :: ஃப்ளாஷ் பேக் 2007 – மனோஜ்கிருஷ்ணா

Tamil Cinema 2007 – Top Films, Movies, Flashback, Stars: Dinamalar

Tamil Film Songs – Best of 2007 Movie Music

உதவிய பதிவு: றேடியோஸ்பதி: : “உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?”

அரிதாக கேட்க கிடைத்த பத்து

1. நன்னாரே :: குரு
பாடியவர்: ஷ்ரேயா கோஸல், உதய் மஜும்தார்
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: ஐஷ்வர்யாவுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நடனம். ரெஹ்மானுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; ஹிட் பாடல் கொடுப்பது. மணி ரத்னத்துக்கு இவற்றை கறக்கவும் இணைக்கவும் தெரியும்.

2. சின்னஞ்சிறு சீனா கற்கண்டே :: முருகா
பாடியவர்: சங்கீதா, வினீத் ஸ்ரீனிவாசன்
இசை: கார்த்திக் ராஜா

நினைவில் நின்றது: அபஸ்வர ரீ-மிக்ஸ்களின் நடுவே நெருடாத மறு பதிப்பு

3. டென்ஷன் மச்சான் :: வம்புச்சண்ட
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
இசை: டி இமான்

நினைவில் நின்றது: ஜாலி (படம் வந்துவிட்டதா?)

4. போனா வருவீரோ :: வீராப்பு
பாடியவர்: ஜே
இசை: டி இமான்

நினைவில் நின்றது: சுந்தர் சி.க்கு என்று பொருத்தமான ஜோடிகளும் ஆடாமலே அசத்தும் பாடல்களும் அமைந்து விடுகின்றன.

5. பேச பேராசை :: நாளைய பொழுதும் உன்னோடு
பாடியவர்: பவதாரிணி, கார்த்திக்
இசை: ஸ்ரீகாந்த் தேவா

நினைவில் நின்றது: இந்த ஆண்டின் நம்பிக்கை நட்சத்திரம், நாயகியாக நடித்திருக்கும் படம்

6. கந்தா கடம்பா :: மலைக்கோட்டை
பாடியவர்: நவீன்
இசை: மணிஷர்மா

நினைவில் நின்றது: ‘ரன்’ படத்தின் ‘தேரடி வீதியில் தேவதை வந்தா’ ரகத்தில் இன்னொரு பாடல்

7. சின்னச் சின்ன மழைத்துளி :: ஆக்ரா
பாடியவர்: சுருதி வந்தனா
இசை: சி எஸ் பாலு

நினைவில் நின்றது: எங்கேயோ கெட்ட மெட்டு

8. பாதை தெரிகிறது :: திருத்தம்
பாடியவர்: டிப்பு
இசை: பிரவீன் மணி

நினைவில் நின்றது: ஏற்கனவே கேட்டது போல் இருந்தாலும் இனிமையான மெட்டு + எளிமையான பொருத்தமான கவிதை வரிகள்

9. பொறந்தது பசும்பொன்னு :: திருமகன்
பாடியவர்: தேவா & டிப்பு
இசை: தேவா

நினைவில் நின்றது: 2011 முதல் மந்திரி என்று பிரஸ்தாபிக்காத தமிழ் நடிகரின் ஹீரோயிஸப் பாடல்

10. நூத்துக்கு நூறு :: தொலைபேசி
பாடியவர்: எஸ்.பி.பி.
இசை: சாந்தகுமார்

நினைவில் நின்றது: வைரமுத்துவை நினைவூட்டும் பிரயோகங்கள்.


அதிகம் கேட்கவைக்கப்பட்ட பத்து

1. பறவையின் கூட்டில் :: கற்றது தமிழ் (தமிழ் எம்.ஏ)
பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜாநினைவில் நின்றது: திரையில் இயல்பான பயணம் + என்றும் இளையராஜா

2. டோல் டோல்தான் அடிக்கிறான்
பாடியவர்: சுசித்ரா, ரஞ்சித்
இசை: மணி ஷர்மா

நினைவில் நின்றது: நடனம் & இசை – Made for each other

3. மதுரைக்குப் போகாதடி :: அழகிய தமிழ்மகன்
பாடியவர்: அர்ச்சித், பென்னி, தர்சனா
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: ஆரம்ப துக்கடா; பா விஜய்; தாவணி அசின் ஷ்ரேயா; விஜய் ஆட்டம்… எதை விடுப்பது!

4. எல்லோரையும் ஏத்திப்போக :: இராமேஸ்வரம்
பாடியவர்: ரேஷ்மி, சூரியா, ஹரிசரண், மாணிக்க விநாயகம்
இசை: நிரு

நினைவில் நின்றது: காட்சியாக்கம்

5. கடி கடி கொசுக்கடி :: வியாபாரி
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம், மனோ
இசை: தேவா

நினைவில் நின்றது: எஸ்.பி.பி. போன்ற மனோ; எஸ் ஜே சூர்யா மசாலாவுடன் அனுராதா ஸ்ரீராம்; Explicit ஆக இல்லாத இரட்டை அர்த்த வரிகள்.

6. யார் யாரோ :: ஒன்பது ரூபாய் நோட்டு
பாடியவர்: பரத்வாஜ்
இசை: பரத்வாஜ்

நினைவில் நின்றது: வைரமுத்து; தொட்டுக்க தங்கர் பச்சன் & சத்யராஜ்.

7. அழகான பாதகத்தி :: கருப்பசாமி குத்தகைதாரர்
பாடியவர்: சங்கீதா, கார்த்திக்
இசை: தினா

நினைவில் நின்றது: கரணுக்கு ஹிட் பாட்டு தருவது பெரிய விஷயம்!

8. அதிரடீ – சிவாஜி
பாடியவர்: ஏ. ஆர். ரெஹ்மான், சயனோரா
இசை: ஏ. ஆர். ரெஹ்மான்

நினைவில் நின்றது: கேட்டால் எட்டடி; பார்த்தால் பதினாறடி; ரஜினி என்றால் முப்பத்திரண்டடி! ஷங்கரும் என்பதால் 70 எம் எம் அடி!!!

9. ஜல்ஸா பண்ணுங்கடா :: சென்னை 600028
பாடியவர்: ஹரிசரண், கார்த்திக், ரஞ்சித், டிப்பு, கானா பழனி, கானா உலகநாதன், கருணாஸ், ப்ரேம்ஜி அமரன், சபேஷ்
இசை: ப்ரேம்ஜி அமரன்

நினைவில் நின்றது: கங்கை அமரன் இது போல் சமகால இலக்கியம் நிறைய படைக்கவேண்டும்.

10. அய்யய்யோ… என் உசுருக்குள்ள :: பருத்தி வீரன்
பாடியவர்: ஷ்ரேயா கோஸால், கிருஷ்ணராஜ், மாணிக்க வினாயகம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: ஆரம்ப துக்கடா முதலே அமர்க்களம்தான்.


தொடர்ந்து அதிகம் கேட்கவிரும்பும் பத்து

1. காற்றின் மொழியே :: மொழி
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர்நினைவில் நின்றது: பாடல் அருமை; காட்சியாக்கம் அழகு.

2. எல்லாப்புகழும் (முன்னால் முன்னால் வாடா) :: அழகிய தமிழ்மகன்
பாடியவர்: ஏ ஆர் ரெஹ்மான்
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: முக்காபலாவில் இருந்து ‘ம’ வரிசையில் துவங்கும் வெற்றிப்பாடல் ஜோடியான வாலி + ஏ ஆர் ஆர்; திரை வடிவமைப்பு மெகா சொதப்பல் 😦

3. மின்னல்கள் கூத்தாடும் :: பொல்லாதவன்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்

நினைவில் நின்றது: பாடலாசிரியர் யார் என்று பார்க்க வைத்த நா முத்துக்குமார்

4. யாரோ யாருக்குள் இங்கு யாரோ:: சென்னை 600028
பாடியவர்: எஸ்.பி.பி., கே எஸ் சித்ரா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: ஏனோதானோ வாலியை கண்டுகொள்ளாத திரைக்காதலர்களின் மெய்ப்பாடு.

5. அறியாத வயசு :: பருத்தி வீரன்
பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: எவ்வளவோ இளையராஜா கேட்டிருக்கோம்… இதுவும் ஃபேவரிட் ஆக்கிட மாட்டோமா!

6. டிங்கி டிங்கி டோரிடோ :: நினைத்தாலே
பாடியவர்: பவித்ரா, வினயா
இசை: விஜய் ஆண்டனி

நினைவில் நின்றது: ஹீரோயின் தனிப்பாடல் & துள்ளல்

7. முதல் நாள் இன்று எதுவோ ஒன்று & உன்னாலே உன்னாலே :: உன்னாலே உன்னாலே
பாடியவர்: மஹாலஷ்மி, கேகே, ஷாலினி & கார்த்திக், கிருஷ், ஹரிணி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

நினைவில் நின்றது: அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரி இருக்கும் படத்தில் கொஞ்சம் வித்தியாசப்படும் பாடல்

8. தமிழ்ச்செல்வி தமிழ் செல்வி :: கூடல் நகர்
பாடியவர்: சாதனா சர்கம், ஹரிஹரன்
இசை: சபேஷ் – முரளி

நினைவில் நின்றது: சாதனா சர்கமின் ஓரளவு சுத்த உச்சரிப்பு

9. உலக அழகி நான் தான் :: பிறப்பு
பாடியவர்: ஜனனி பரத்வாஜ்
இசை: பரத்வாஜ்

நினைவில் நின்றது: கார்த்திகாவின் எண்ணெய் தேய்த்த தனியாவர்த்தனங்கள் (தொடர்பான பதிவு: வினையூக்கி: ரசித்த ஆறு + ஆறு விசயங்கள்)

10. தோரணம் ஆயிரம்:: அம்முவாகிய நான்
பாடியவர்: தீபிகா, கீதா, ஸ்ரீவித்யா
இசை: சபேஷ்-முரளி

நினைவில் நின்றது: காதலியுடனான சில்மிஷங்களைத் தவிர வேறு எதையாவதையும் நினைக்கிற மாதிரி படத்தில் ஏதாவது படமாக்கியிருக்கலாம்.


சென்ற வருடம்:
Tamil Cinema – 2006 Top Movies List « Snap Judgment
Tamil Film Songs – 2006 Best « Snap Judgment

தெரிந்தே விட்டது: பில்லா; தெரியாமல் விட்டது எவ்வளவோ!

Dinamani – Tamil Books: Mini Reviews

1. சித்தர் பாடல்கள் தொகுதி 1&2 மூலமும் உரையும் – அறிவொளி (SIDDHAR PADALGAL VOL 1 & 2 MOOLAMUM URAIYUM)

சிவவாக்கியர் முதல் அகப்பேய் சித்தர் வரை உள்ள அனைத்து சித்தர்களின் பாடல்களுக்கும் மூலபாடல்களுடன் தெளிவுரை மற்றும் விளக்கவுரையுடன் அமைந்துள்ளது,
2. அன்னா கரீனினா

லியோ டால்ஸ்டாயின் படைப்புகளில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறத அன்னா கரீனினா எனும் நாவல், இதனை பேராசியர் நா,தர்மாராஜன் மிகவும் எளிமையாக மொழிபெயர்த்துள்ளார்,

3. குருவும் சீடனும் (ஞானத் தேடலின் கதை) Rs.100.00
நித்ய சைதன்ய யதி; தமிழில்: ப.சாந்தி

பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 192

4. கள்ளர் சரித்திரம் Rs.65.00
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 128

5. விசும்பு (அறிவியல் புனைகதைகள்) Rs.85.00
ஜெயமோகன்
பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 150

6. கு.அழகிரி சாமி கதைகள் Rs.275.00
சாகித்திய அக்காதெமி
பதிப்பாளர்: சாகித்திய அக்காதெமி

7. மகாவம்சம் Rs.100.00
ஆர்.பி. சாரதி
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 240

8. இரா. முருகன் கதைகள் Rs.350.00
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 848
9. ஜமா இஸ்லாமியா Rs.60.00
பா. ராகவன்
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 140

10. அன்புடையீர், நாங்கள் அபாயகரமானவர்கள் Rs.60.00
பா.ராகவன்
பதிப்பாளர்: கிழக்கு
பக்கங்கள்: 127

11. நேநோ Rs.100.00
சாரு நிவேதிதா
பக்கங்கள்: 212

12. மஞ்சள் வெயில் Rs.65.00
யூமா.வாசுகி
பதிப்பாளர்: அகல் பதிப்பகம்
பக்கங்கள்: 133

13. சிறை அனுபவம் Rs.30.00
கி.சடகோபன்
பதிப்பாளர்: அகல் பதிப்பகம்
பக்கங்கள்: 72

14. கானல் நதி Rs.200.00
யுவன் சந்திரசேகர்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 374

15. கலகம் காதல் இசை Rs.70.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 120

16. விழித்திருப்பவனின் இரவு Rs.110.00
எஸ்.ராமகிருஷ்ணான்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 192

17. உறுபசி Rs.75.00
எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 135

18. ஒற்றையிலையென Rs.40.00
லீனா மணிமேகலை
பதிப்பாளர்: கனவுப் பட்டறை

19. ஆதியில் சொற்கள் இருந்தன Rs.30.00
அ.வெண்ணிலா
பதிப்பாளர்: மதி நிலையம்

20. தப்புத் தாளங்கள் Rs.90.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 152

21. ராஸ லீலா Rs.400.00
சாரு நிவேதிதா

பதிப்பாளர்: உயிர்மை – பக்கங்கள்: 658

22. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் Rs.100.00
சாரு நிவேதிதா
பதிப்பாளர்: கனவுப் பட்டறை
பக்கங்கள்: 200
23. அரவான் Rs.90.00
எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: உயிர்மை
பக்கங்கள்: 168

24. தமிழவனின் ”வார்ஸாவில் ஒரு கடவுள்”

25. ஜீ.முருகனின் ” மரம்”

26. புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ” கன்யாவனங்கள்” (மலையாள நாவலின் தமிழாக்கம்)

27. சி.வி. பாலகிருஷ்ணணின் ”திசை” (மலையாள நாவலின் தமிழாக்கம்)

28. எஸ். செந்திகுமாரின் ” ஜீ. செளந்தர ராஜனின் கதை”

29. வா.மு.கோமுவின் ”கள்ளி”

30 எஸ். ராமகிருஷ்ணனின் ” யாமம்”


நிழல்கள்: புத்தகக் காட்சி – என் க�கயறு – தகழி சிவசங்கரன் பிள்ளை, தமிழில் சி.ஏ.பாலன் – சாகித்ய அகாடமி
மார்த்தாண்ட வர்மா – சாகித்ய அகாடமி
இருபது கன்னடச் சிறுகதைகள் – சாகித்ய அகாடமி
காந்தியம் – அம்பேத்கர் – விடியல்
இந்துயிஸத்தின் தத்துவம் – அம்பேத்கர் – விடியல்
கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும் -ஆ.சிவசுப்ரமணியன் – வம்சி
சிறுவர் சினிமா – விஸ்வாமித்திரன் – வம்சி
பாதையில்லாப் பயணம் – ப்ரமிள் – வம்சி
நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம் – காலச்சுவடு
அக்ரஹாரத்தில் பெரியார் – பி.ஏ.கிருஷ்ணன் – காலச்சுவடுப்
புணலும் மணலும் – ஆ.மாதவன் – காலச்சுவடு
புத்தம் வீடு – ஹெப்சிகா ஜேசுதாஸன் – காலச்சுவடு
ஜி.நாகராஜன் ஆக்கங்கள் – காலச்சுவடு
நடந்தாய் வாழி காவேரி – தி.ஜா & சிட்டி – காலச்சுவடு
பேசும்படம் – செழியன் – காலச்சுவடு
இரானிய சினிமா – திருநாவுக்கரசு – நிழல்
உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன் – விஜயா பதிப்பகம்
யாமம் – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
சுஜாதாவின் குறுநாவல்கள் – உயிர்மை
சொல்லில் அடங்காத இசை – ஷாஜி – உயிர்மை
நான் வித்யா – கிழக்கு
யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் – கிழக்கு
இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் – கிழக்கு
மாயினி – எஸ்.பொன்னுத்துரை – மித்ர வெளியீடு
சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன் – தமிழினி
கமண்டல நதி – ஜெயமோகன் – தமிழினி
காந்தி இறுதி 200 நாள்கள் – பாரதி புத்தகாலயம்
விடுதலைப் போரில் பகத்சிங் – பாரதி புத்தகாலயம்
கங்கணம் – பெருமாள்முருகன் – அடையாளம்
புஸ்பராஜா படைப்புகள் – அடையாளம்
முட்டம் – சிறில் அலெக்ஸ் – ஆழி
உலக சினிமா – செழியன் – ஆனந்தவிகடன்
சோழர்கள் – நீலகண்ட சாஸ்திரி – என்.சி.பி.எச்.
பண்டைய இந்தியா (பண்பாடும் நாகரிகமும்) – டிடி கோசாம்பி – என்.சி.பி.எச்.
பாரதிபுரம் – யூ.ஆர்.அனந்த மூர்த்தி – அம்ருதா
உயிர்த்தலம் – ஆபிதீன் – எனி இந்தியன்
வாஸந்தி கட்டுரைகள் – எனி இந்தியன்
வெளி இதழ்த் தொகுப்பு – எனி இந்தியன்
நதியின் கரையில் – பாவண்ணன் – எனி இந்தியன்
ஈழத்து தலித் சிறுகதைகள் – எதிர் வெளியீடு
அரவாணிகள் பற்றிய புத்தகம் ஒன்று – தோழமை வெளியீடு


1. நான்,வித்யா – வித்யா – கிழக்கு பதிப்பகம்
2.எஸ்.புல்லட் – அய்யப்ப மாதவன் – தமிழினி
3.குட்டிக்கதைகள் – கண்ணதாசன் – வானதி
4.60 அமெரிக்க நாட்கள் – சுஜாதா – உயிர்மை
5. ஹைக்கூ ஒரு புதிய அனுபவம் – சுஜாதா – உயிர்மை
6.குற்றவுணர்வின் மொழி – பாம்பாட்டிச்சித்தன் – அன்னம்
7.சிவப்புத் தலைக்குட்டையணிந்த பாப்ளர் மரக்கன்று – யுமா.வாசுகி – அகல்
பதிப்பகம்
8.ரத்த உறவு – யுமா.வாசுகி -தமிழினி பதிப்பகம்
9.ஒரு இரவில் 21 சென் டிமீட்டர் மழை பெய்த்தது – முகுந்த் நாகராஜன் – உயிர்மை
10.விடிந்தும் விடியா பொழுது – தேவதேவன் – தமிழினி
11.கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள் – மீரா -அகரம் வெளியீடு (பத்தாவது முறையாக
வாங்குகிறேன்!!!!!)
12.மேகதூதம் – காளிதாசன் – சாந்தி பிரசுரம்
13.உறக்கமற்ற மழைத்துளி – கல்யாண்ஜி -வ.வு.சி நூலகம்
14.வனப்பேச்சி – தமிழச்சி தங்கபாண்டியன் – உயிர்மை
15.ஒளியறியாக் காட்டுக்குள் – தேன்மொழி தாஸ் – காலச்சுவடு
16.மஞ்சள் வெயில் – யுமா.வாசுகி – அகல்
17.வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு – யுமா.வாசுகி -தமிழினி*குறும்படம்:
*
யாதும் ஊரே யாவரும் கேளீர் – கவிஞர். தேவதேவன் பற்றி பிரான்ஸிஸ் கிருபா இயக்கிய
குறும்படம்.*


கடகம்: சென்னை புத்தக கண்காட்சி 2008:
கட்டுரைத் தொகுப்பு

1. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை
– நாஞ்சில் நாடன் ; தமிழினி பதிப்பகம் 2.கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.
(பல்வேறு இலக்கியவாதிகள் தங்களைக் கவர்ந்த நூல் பற்றி எழுதிய கட்டுரைகள் )
-அ முத்துலிங்கம்; உயிர்மை பதிப்பகம்3. டாக்டர் உ.வே.சா. அவர்களின் உரைநடை நூல்கள்
டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் சென்னை-90; ஜெயராம் அச்சகம் கவிதை தொகுப்பு
1. ஒரு இரவில் 21 செண்ட்டி மீட்டர் மழை பெய்தது
முகுந்த் நாகராஜன்; உயிர்மை பதிப்பகம்2. ஒரு கிராமத்து நதி
சிற்பி; விஜயா பதிப்பகம்3. பாம்புக்காட்டில் ஒரு தாழை
லதா; காலச்சுவடு பதிப்பகம்

நாடகம்

1. என் தாத்தாவுக்கொரு குதிரை இருந்தது
செழியன்; உயிர்மை பதிப்பகம்

நாவல் /புதினம்

1.பாலிதீன் பைகள்
இரா நடராசன்

2. லங்காட் நதிக்கரை
அ. ரெங்கசாமி; தமிழினி

3. வாசந்தியின் சிறை
பம்பாய் கலவரங்களின் பின்னணியில் எழுதப்பட்டது

4. தகப்பன் கொடி
அழகிய பெரியவன்

5. பாழி
கோணங்கி

6. கோபல்ல கிராமம்
கி.ராஜநாராயணன்; காலச்சுவடு பதிப்பகம்

மொழிபெயர்ப்பு நூல்கள்

1. ஆட்டுக்குட்டிகள் அளித்த தண்டனை
(சிறுகதை தொகுப்பு)

வாழ்க்கை சரிதம்

1.என் சரித்திரம்
டாக்டர் உ.வே.சா

2. நளினி ஜமீலா
காலச்சுவடு பதிப்பகம்

சிறுகதை தொகுப்பு

1. பின் சீட்
ஜெயந்தி சங்கர்
மதி நிலையம்

2. ஒரு கப் காப்பி
இந்திரா பார்த்தசாரதி

3. மெளனியின் ‘அழியாச்சுடர்’

பயணம்

1. கடலோடி
நரசய்யா


1. நதியின் கரையில் – பாவண்ணன் -எனிஇந்தியன்
2. உள்ளுணர்வின் தடத்தில் – ஜெயமோகன் – தமிழினி
3. எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
4. மகாவம்சம் – ஆர்.பி. சாரதி – கிழக்கு
5. தமிழ் மொழி வரலாறு – தெ.பொ.மீ.களஞ்சியம் ச.செயப்பிரகாசம் – காவ்யா
6. நள்ளிரவில் சுதந்திரம் – Dominique Lapierre and Larry Collins , தமிழில் : வி.என்.ராகவன் – மயிலை பாலு’ – அலைகள் வெளியீட்டகம்
7. இந்தியப் போர் (பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட நூல்) – சுபாஷ் சந்திரபோஸ் – அலைகள் வெளியீட்டகம்
8. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
9. சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் – சு.பொ.அகத்தியலிங்கம் – பாரதி புத்தகாலயம்


தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal1.வெள்ளிப் பாதசரம்
எழுத்தாளர் : இலங்கையர்கோன்
பக்கம் : 232
விலை : 125.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
2.வேடந்தாங்கல் – கவிதைத் தொகுப்பு
எழுத்தாளர் : முனைவர் அ.இளங்கோவன்
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர3.சூரியப் பொருளாதாரம் – கட்டுரைத் தொகுப்பு
எழுத்தாளர் : முனைவர் அ.இளங்கோவன்
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர4.உனையே மயல் கொண்டு
எழுத்தாளர் : டாக்டர் என்.எஸ்.நடேசன்
பக்கம் : 152
விலை : 80.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
5.காவேரி கதைகள் – 1
எழுத்தாளர் : காவேரி
பக்கம் : 312
விலை : 250.00 In Rs
வெளியீடு : மித்ர6.காவேரி கதைகள் – 2
7.பெருவெளிப் பெண்
எழுத்தாளர் : ச.விசயலட்சுமி
பக்கம் :
விலை :
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
8.பின்நவீனத்துவச் சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்
எழுத்தாளர் : யாழினி முனுசாமி
பக்கம் : 112
விலை : 70.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
9.உதிரும் இலையும் உதிராப் பதிவுகளும்
தொகுப்பாசிரியர் : ஜெ.கங்காதரன்
பக்கம் : 96
விலை : 60.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
10.எண்ணக் கோலங்கள்
எழுத்தாளர் : எஸ்.சந்திரபோஸ்
பக்கம் : 232
விலை : 125.00 In Rs
வெளியீடு : மித்ர
* * * * * * * * * * * * * *
11.பின்னிரவுப் பெருமழைஉணர்ச்சிக்குவியலான கவிதைகளின் தொகுப்பு.எழுத்தாளர் : மு.ரிலுவான்கான்
பக்கம் : 96
விலை : 60.00 In Rs
வெளியீடு : மித்ரதமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal: “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
விலை : 75.00 In Rs
பக்கங்கள் : 150
எழுத்தாளர் : பா.ஜீவசுந்தரி
பதிப்பகம் : மாற்று

* * * * *
கிறுக்கி
விலை : 75.00
பக்கங்கள் : 160
பதிப்பாசிரியர் : கோ.பழனி
பதிப்பகம் : மாற்று

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal:”1084 ன் அம்மா”
வங்கமொழியில் மகாஸ்வேதா தேவி எழுதிய Mother Of 1084 என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் சு.கிருஷ்ணமூர்த்தி.
விலை : 75.00
பக்கங்கள் : 152
பதிப்பகம் : பரிசல்

கோபுரத் தற்கொலைகள் – ஆ.சிவசுப்பிரமணியன்
விலை : 50.00
பக்கங்கள் : 104
பதிப்பகம் : பரிசல்

தமிழ்ப் புத்தக தகவல் திரட்டு – Web Portal:
“முடிந்து போன அமெரிக்கக் கற்பனைகள்”
விலை : 80.00 In Rs
பக்கங்கள் : 168
எழுத்தாளர் : பா.செயப்பிரகாசம்
பதிப்பகம் : தோழமைஅரவாணிகள்
விலை : 175.00 In Rs
பக்கங்கள் : 368
தொகுப்பாசிரியர் : மகாராசன்
பதிப்பகம் : தோழமை

பாரதி – ஒரு சமூகவியல் பார்வை
விலை : 75.00 In Rs
பக்கங்கள் : 160
தொகுப்பாசிரியர்கள் : பெ.மணியரசன், அ.மார்க்ஸ்
பதிப்பகம் : தோழமை

மரணம் – என் தேசத்தின் உயிர்

விலை : 45.00 In Rs
பக்கங்கள் : 72
எழுத்தாளர் : இனியன்
பதிப்பகம் : தோழமை

காற்றின் பக்கங்கள்
விலை : 120.00 In Rs
பக்கங்கள் : 224
கட்டுரையாளர் : மணா
பதிப்பகம் : தோழமை

மக்களை வழிநடத்தும் தலைமை உருவாகும்
பழ.நெடுமாறன் நேர்காணல்
விலை : 50.00 In Rs
பக்கங்கள் : 96
நேர்காணல் : மணா
பதிப்பகம் : தோழமை

வசந்த காலத்திலே….. ஜார்ஜி குலியா
(Georgij Dmitrijevič Gulia)
விலை : 100.00 In Rs
பக்கங்கள் : 120
தமிழில் : தி.க.சி
பதிப்பகம் : தோழமை
* * * * *

ஒரு கோப்பை தண்ணீர் த்துதவமும் காதலற்ற முத்தங்களும்
பெண் விடுதலை குறித்த மார்க்சியப் பார்வைகள்
விலை : 100.00 In Rs
பக்கங்கள் : 160
தொகுப்பாசிரியர் : மகாராசன்
பதிப்பகம் : தோழமை


Book Selections by Boston Globe – 2007 « Snap JudgmentHost unlimited photos at slide.com for FREE!


Tamil Books – Reviews, Listing from Dinamalar « Tamil Newsdinamani_books_intro_reviews_tamil_publishers.jpgdinamani_books_new_literature_tamil_authors_quick_reviews.JPGDinamani Books List Publishers Quick Reviews Tamil Ilakkiyamnew_tamil_books_dinamani_thursday_issue_quick_reviews.jpgDinamani Books Thursday Critic Tamil Literature LibraryDinamani Books Reviews Tamil Literature Readersdinamani books review Listing Tamil Literaturedinamani_books_reviews_critiques_quick_library.jpgdinamani_books2.jpgdinamani_books_listing1.jpgHost unlimited photos at slide.com for FREE!Host unlimited photos at slide.com for FREE!Host unlimited photos at slide.com for FREE!Books – 1

Dinamani Book reviews 2