Tag Archives: தமிழ்

யாரைக் கொல்கிறார்கள்? – சென்னையில் ஒரு மழைக்காலம்

Madrasil oru Malai Kalam - Gautham Menon, AR Rehman

Thirsha

Tamil Websites in Unicode – A List

அவ்வப்போது புதிய விஷயங்கள், கட்டுரைகள், ஆக்கங்களுடன் ஒருங்குறியில் வெளியாகும் வலையகங்களின் தொகுப்பு:

இணைய இதழ்:
வ.ந.கிரிதரன் – பதிவுகள்
வார்த்தை, எனி இந்தியன் – Thinnai
Tamiloviam / தமிழோவியம்
யாஹு குழுமம் – மரத்தடி.காம் (maraththadi.com)
நிலாச்சாரல்
முத்துக்கமலம்
மகளிர் பக்கம் – ஊடறு : பெண்குரல்
எழில்நிலா

இலக்கியம்:
அப்பால் தமிழ்
வார்ப்பு : கவிதை வாராந்தரி – Tamil Poetry Weekly

செய்தி:
சிஃபி – தமிழ்
யாஹு – Welcome to Yahoo! Tamil
தமிழ் – MSN India – Tamil Latest Tamil News, Business, Movies, Music, Cricket and more..
Thatstamil.com – தட்ஸ்தமிழ்.காம்
For the latest on Tamil cinema, general news, views and in-depth analysis in Tamil.- AOL Tamil
வெப் உலகம்.காம் :: வெப்துனியா
சென்னை ஆன்லைன் :: ஆறாம்திணை
adhikaalai.com

அச்சு இதழ்
கீற்று
தமிழக வாராந்தரி: விகடன்
இஸ்லாம், முஸ்லீம்: Welcome to Samarasam.com – Your Fortnightly Tamil Islamic Magazine from IFTchennai.org
தமிழக மாதாந்தரி: காலச்சுவடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – Tamil Nadu Thawheedh Jamaath
அமெரிக்க மாதாந்தரி: தென்றல்
வல்லினம் – காலாண்டிதழ்
மாதமிருமுறை: தென் செய்தி :: பழ நெடுமாறன்
உண்மை – கி வீரமணி
கனடா, ஈழம், இலங்கை: வைகறை

வரலாறு, ஆன்மிகம்:
DREAM LAND – You Have Reached The Right Place To Know About Islam & Tamil Muslims
Welcome to South Indian Social History Research Institute
Varalaaru – Monthly Magazine for Tamil History
Tamil Bible (Holy Bible in Tamil & English) – பரிசுத்த வேதாகமம்
இஸ்லாமிய இணையத்தளம்

வணிகம்:
சென்னை நூலகம்
கணியத்தமிழ்

ஆளுமை:
சுந்தர ராமசாமி
Pa. Raghavan : Home Page : பாரா-பேப்பர்
எஸ் ராமகிருஷ்ணன்
ஜெயமோகன்
சாரு நிவேதிதா
லேனா தமிழ்வாணன் :: மணிமேகலை பிரசுரம்

நாடு
அமீரகம்: செந்தமிழ் – தமிழ் அறிவியல் இதழ்
மலேசியா இன்று

அரசியல்:
வைகோ :: மதிமுக

நாளிதழ்:
தினமலர்
விடுதலை

இலங்கை, ஈழம்:
வீரகேசரி
தினக்குரல்
ஒரு பேப்பர்
சங்கதி
http://www.pathivu.com/
புதினம்
http://www.tamilwin.com/
http://www.sooriyan.com/
http://www.alaikal.com/news/
நெருடல்
முழக்கம்
தமிழீழம்

தகவல்:
Kalanjiam – Tamil Encylopedia

தொண்டு:
உதவி – உங்கள் உதவியுடன்….

சினிமா, திரைப்படம்:
Tamilcinema | Tamilmovie | Tamilsongs | Tamil Film
விடுப்பு

கணினி:
w3 Tamil
தமிழ்99: தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்

புத்தகம்:
காந்தளகம்: தமிழ்நூல்.காம்
எனி இந்தியன்: AnyIndian – An Internet Book Shop for Indian Books
வித்லோகா, நியு ஹொரைசான் மீடியா, கிழக்கு பதிப்பகம், காமதேனு: Kamadenu.com
நியூ புக்லான்டஸ், சென்னை: ::New Book Lands:: (சோதனை ஓட்டத்தில்)

இன்ன பிற:
இணையத்தில் தேனீ :: லியோமோகன்
தமிழ் அமுதம்

கடைசியாக் டிஸ்கியில் ஒன்று:
பொள்ளாச்சியிலிருந்து தமிழம் வலை: தமிழம்.நெட்

கலைஞர் கவிதை – பச்சைக்கிளி: தை இதழ் (தமிழ்வெளி)

இதழை வாசிக்க: தை இதழ் மூன்று

Kalainjar Mu Karunanidhi Tamil Kavidhai

நன்றி: கலைஞர் மு கருணாநிதி

ஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்

முதலில் வந்த பட்சிக்காக:

K.N. Rao‘s introduction to the book “Biorhythms of Natal Moon – Panchapakshi Shastram”

http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5080
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5081
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5082
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5083
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5084
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5085
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5086
http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5087

சூக்குமம் நமசிவய என்னும் ஐந்தெழுத்தில் உள்ளது.

இவ்வாறே, மானுட இனத்தையும் பிறந்த நட்சேத்திரங்களை அடிப்படையாக வைத்து ஐந்து பிரிவுகளாகப்
பிரித்தனர். ஒவ்வொரு பிரிவையும் அடையாளம்காண ஒரு பறவையின் பெயரைக்கொடுத்தனர். அந்த
நட்சேத்திரத்தில் பிறந்தவனுக்குண்டான குணநலன்களைக் கணக்கில் கொண்டு, அதேவகை குணநலன்களையுடைய பறவையைத் தெரிவுசெய்தனர். அவைகள்:

  1. வல்லூறு,
  2. ஆந்தை,
  3. காகம்,
  4. கோழி,
  5. மயில்

பறவைகள் உருவகமே.

பறவை அரசாளும் என்றால் அப்பறவை அரசனாகவியலாது. இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும் இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும். ஆனால், செயல்கள் ஐந்துதான்.

வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் தொழில்கள் மாறும். அவையாவன:

  1. உண்ணும்,
  2. நடக்கும்,
  3. தூங்கும்,
  4. அரசாளும்,
  5. இறக்கும்.

இதை,

  1. ஊண்,
  2. நடை,
  3. நித்திரை,
  4. அரசு,
  5. மரித்தல்

என்பர்.

இப்பஞ்சபட்சி சாற்றிறத்தில்,

  • திதிப் பிரிவு,
  • அட்சரப் புணர்ச்சி,
  • பட்சிப் புணர்ச்சி,
  • அட்டயோனிப் பொருத்தம்,
  • எழுத்தலங்காரப் பொருத்தம்,
  • நாமயோனிப் பொருத்தம்,
  • வெற்றி தோல்விநிலை,
  • அருக்கனிலை,
  • பட்சியின் வலிமை,
  • படுபட்சிகள்(இறக்கும் பட்சிகள்),
  • பட்சிகளின் செயல்கள்,
  • பட்சி பாகம்

இவ்வாறு பலவற்றை இச்சாற்றிறம் இயம்புகிறது.

அகத்தியரின் பஞ்ச பட்சி சாற்றிறம்

காப்பு

1. உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து – வன்னி
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்
கதை காவியப் பொருலே காப்பு.

2. துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற்
செய்யமலர்ப் பாதஞ் சேவித்தேன் – வையத்
தைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன்
சிந்தை தனினிற்கவே செய்.

3. ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்
நின்றநிலை யாருடத்தில் நேருமே – நன்று
வழுவா துரைதாயும் வல்லவர்கள் சொன்ன
முழுவா கடத்தின் முறை.


முதலதிகாரம்.

1. மொழிக்கு முதலெழுத்தே முன்னுதிக்கு மாமதனைப்
பழித்தவலன் றன்னிலையும் பார்த்து – வழிபெறவே
பேரால் வருவனவும் பேதமறிந் துணர்ந்து
ஆராய்ந்து சொல்வ தறி.

2. அகரமே வல்லூறு ஆந்தை இகரமதாம்
உகரங் கருங்காக முன்னிப் – பகரில்
எகரமது கோழி யெஞ்ஞான்று மஞ்ஞை
ஒகார முயர் மெய்யாந் துரை.

3. ஊணடையரசு நித்திரை மரணம் உயிர்பகலிரவினிலுண்டு
நீணிலத்தரசு செய்துபின் சென்று நெறியுடனடந்து மேயுறங்கும்
பூணுறும்மர பக்க நற்பகலூண் பொன்றியுந் துயின்றரசாகிக்
சேணுறு நடையுண் டுறங்கியே சென்றுஞ் செத்தர சாளுநல்லிரவே.

ஐந்து பட்சிகளும் ஐந்து செய்கைகளை மாறிமாறிச் செய்கின்றன. அவைகளின் முறை:
பூர்வபக்கம்:
பகல்: ஊண், நடை, அரசு, நித்திரை, மரணம்.
இரவு: ஊண், அரசு, மரணம், நடை, நித்திரை.
அமரபக்கம்:
பகல்: ஊண், மரணம், நித்திரை, அரசு, நடை.
இரவு: ஊண், நித்திரை, நடை, மரணம், அரசு.

4. ஒன்றேகா லொன்ரறையீ ரொன்று முக்காலரையும்
நன்றாக விவ்வாறு நாழிகையுங் – குன்றாத
வளர்பிறைக்குந் தேய்பிறைக்கும் வாலாய மாஞ்சூட்ச
வளமுரைத்தார் முன்னோர் வகுத்து.
(இச் சாற்றிறம் அகத்தியர் காலத்திற்கு முன்னமேயே வளர்ந்து வாழ்ந்திருத்தல் வேண்டும்)

5. மறித்து மொருவகையால் வண்கடிகை யாறுந்
தெறித்ததொரு சூக்குமத்தைச் சேரக் – குறித்திடுங்கா
லுண்டு நடந்தாண் டுறங்கி யிறந்திடுமே
வண்டனைய கண்ணாய் மதி.

6. உண்பானுக் கொன்றேகா லொன்றரையிற் றானடக்க
கண்பார்த் தரசிரண்டிற் காண்போமே – பண்பாகத்
தூங்குவது முக்காலாய்த் துஞ்சுவது தானரையாய்ப்
பாங்குடைய பட்சி பலன்.

7. வினவின் முதற்றி தியாறும் பதினொன்று நத்தை
மேலிரண்டேழ் பன்னிரண்டும் விளங்கும் பத்திரையா
மினியதொரு மூன்றெட்டும் பதிமூன்றுஞ் சயையா
மிருத்தை யென்பா னாந்கிலுட நவமி பதினான்கை
புனைகுழலாய்ப் பஞ்சமியும் பத்துமுவரத் தரமும்
பூரணை மென் மறியலவன் கோன் மகரஞ் சரமாந்
தனிவிடை தேள் குடஞ்சிங்கம் நிலைராசி சாகுந்
தனுமிதுனங் கன்னியுமீ னுபய மெனத்தகுமே.

8. ஊர்கோணத்தைக் கதிர்செவ்வாய் அகரமோங் கும்பத்திரையாம்
தேர்கோளருணன் மதி இகரஞ் சயையும்பொன்னும் உகரமதாம்
வேர்கோளிருத்தைப் புகர் எகரம் வெய்யசனிபூரணை ஒகரம்
ஏர்கோளிடையாய் பகற்கடிகை யிவ்வாறிவையூண் சொன்னோமே.

9. சொன்னவகரம் வல்லூறூண் துய்ய இகரமாந்தையிணூண்
முன்னை உகரங் கொடியூணா மொழியிலெகரங் கோழியிணூண்
பன்னுமெகர மஞ்ஞையிணூண் பண்டையடையவே பறவைகளொண்
றுண்ணுமிரண்டு நடைமுடி மூன்றுறக்க நான்குசாவைந்தே.

10.சாய்ந்த அகரங்ககரமுடன் சகரந்தகரந் தந்நகரம்
வாய்ந்தபகர மகரமுடன் வகரமிவை யெட்டெழுத்தாகும்
ஆய்ந்தபருந்து முதல் யோனியிரு நான்கினுக்குமடைவாக
வேய்ந்த பொருத்தம் வெற்றியுடனிதனாற் பறவையியம்பிடுமே.

பகுதி 4

31. வல்லூறு முண்ண மாமயிலுந் தானரசாய்ப்
பொல்லாத கொழியது போயிறக்க – நல்லாய்க்கேள்
காரண்டந் தானடக்கக் கண்டுயிலு மேயாந்தை
சீரண்ட மாலுண்டு சேர்.

32. ஆந்தை யமுதுண்ணும் வல்லூறரசு செயுஞ்
சாந்த மயிலதுவுஞ் செத்துவிழும் – ஏந்திழையீர்
கோழியது நடக்குங் கொம்பார்ந்த காகமது
வீழும் விழிதுயின்று மேல்.

33. திங்கட் சனிமயிலாஞ் சேயருக்கன் கோழியதாம்
பொங்கு புதன்காகம் போசனமா – மங்கையே
அந்தணனுக் காந்தை யணிபுகர்க்கும் வல்லூறு
சந்தமும் பிற் பகற்கே சாற்று.

34. கூறிடுந் திங்களாந்தை குலவுசேய் வல்லூறு
மீறிய வருக்கன் காகம் வெள்ளியும் – புதனுமஞ்ஞை
யேறியசனி வியாழங் கோழியா மியம்புங்காலை
யாறுபத்தாகுங் கன்ன லதிற் சாகும மரபக்கம்.

35. உண்டுடனே செத்து முறங்கிய ரசாண்டும்
விண்டு நடக்கும் விழிமடவீ – ரன்றிரவில்
உண்டு முறங்கு முடனே நடத்திறக்குங்
கண்டரசனாகு மெனக் காண்.

36. வரியார் மயிலுண்ண மாலாகு மாந்தை
திரியாதோ தேசமெலாஞ் சென்று – பெரிய
வாரணமே மண்ணாள வல்லூறு தானுறங்கக்
காரணத்தாற் காக்கை சாங் காண்.

37. கண்டாந்தை யுண்ணக் கருங்கோழி தானடக்க
வண்டாயுண் வல்லூறு மன்னவனாய் – விண்ட
விழிமூடுமே காகம் வீணாக மஞ்ஞை
பழிதேட வேயிறக்கும் பார்.

38. சொற்கோழி யுண்ணத் தொடர்ந்தேகும் வல்லூறு
நற்காக நன்றாக நாடாளும் – பொற்காவின்
மண்ணின் மயிலுறங்க மாலாந்தையே மரணம்
எண் ணுமறிவா லெடு.

39. வந்த பிற் பக்கத்தில் வல்லூறு முண்ணவே
முந்து கருங்காக முடனேகும் – அந்தமயி
லாளுமே பூமியது வாந்தையே கண்டுயிலு
மாளுமே கோழியதே வந்து.

40. தண்காக முண்ணத் தனிமயிலுந் தானடக்க
மண்காவ லாந்தையது வந்தாளப் – பெண்கொடியே
கோழியுறங்கக் குல வலியானே சாக
வாழி புதனுக் கெனவே வை.

பகுதி 5

41.மந்தன் சோமன் கோழியிணூண் மானேவெள்ளி மயிலுண்ணும்
புந்தியாந்தைப் போசனமாம் பொன்னிற்காக மிரையருந்தும்
சிந்தைமகிழச் சேயிரவி தினத்தேவல்லூ றமுதுசெயும்
அந்தித்தோன்றும் பிற்பக்கத்தடைவே சொன்னோமறி நன்றே.

42.வாரணம் பொன்னேகாரி மயில்புகர் புதனேமிக்கச்
சீரணிகாகம் வெய்யோன் சிறந்தமாமுனி யாந்திங்கள்
பேரணிவலியன் செவ்வாய்ப் பிற்பக்கத் திரவிற்றங்கும்
ஏரணி குழலாயென்று மிடமறிந்தியம் புவாயே.

43.சேவல் புசிக்கத் திரியுமே யாந்தையது
மாவிற் புவியாளு மாமயிலுங் – கூவி
யுறங்குமே காக்கையுடனி றக்குமே வலியன்
கறங்கு மேகக் கலையாய் காண்.

44.அல்லின் மயிலுண்ண வார்ந்து நடக்குங்காகம்
வல்லம் புவியாளும் வாரணமு – மில்லுறங்கு
மாந்தையது சாகுமன்ன நடைக் கன்னன்மொழி
யேந்திழையா யென்னே இடர்.

45.வகுத்த மினியுண்ண மஞ்ஞையது நடக்கச்
செகத்திற் கொடியரசு செய்யவே – நகைத்துத்
தூங்குமே வல்லூறு துஞ்சுமே செஞ்சேவல்
மாங்குயிலே யென்னா மதி.

46.செப்பக் காரண்டந்தான் றின்னநடக்கும் வலியான்
தப்பிலாக்கோழி தரையாளும் – ஒப்பிலா
மாலாந்தை கண்டுயிலும் வாழ்மயிலுஞ் சாவாகும்
சேலார்விழி மடவீர் செப்பு.

47.வல்லூறினிதுண்ண வார்கோழியே நடக்க
நல்லாந்தை வந்திருந்து நாடாளப் – பொல்லாத்
தூக்கமுறு மயிலாஞ் சொல்ல விழுங்காகத்
தாக்கமலைப் பொடியாந் தான்.

48.போசனமாகில் பதிவாழும் போனார்மீள்வார் போங்கவலை
காசினிவாழுமீ மழைபொழியுங் களவுமில்லைக் கதிர்விளையும்
பேசிற்கன்னிப் பேறாகும் பிணியுந்தீரும் பெண்பெறுவள்
வாசிசெழும் பொன்வாணிபமாம் மன்னரைவெல்வாய் மாங்குயிலே.

49.யாத்திரையாகில்லை நிலைகுலையு மொன்னார் வெல்வரிருநீதிபோங்
காத்திரமில்லாக் கதிர்விளையுங் கன்னியர்வாழ்க்கை நன்றாகா
மாத்திரள்செல்லும் பொருள் கூடாவேட்கை தவழ்ந்துமணங்கூடா
சூத்திரஞ் சொன்னபடியாலே சொன்னார்பெரியோர் சுரிகுழலே.

50.அரசேசெய்யிற் புவிப்பேராம் அரசராலே பலனெய்து
முரசுமதிரும் வரிசையுடன்மூண்ட கருமந்தான் விலகும்
பரிசும்பெரியோர் திறலிடுவர் பழையபிணி போம்பயமில்லை
புரைபோங் களவுந்தான் காணும்போக்குமில்லை புரிகுழலே.

பகுதி 6

51. தூங்குமாகில் நோய்மாறா தூரம்போனார் தாம்மீளார்
ஆங்கேகரும நன்றாகா வரிவைவாழ்க்கைத் தாழ்வாகுந்
தீங்கேயல்லால் மழைபொழியாச் செந்நெல்விளையாச் செய்குறியீர்
ஓங்கிமணமுந் தாராதே யுண்மையாக வுரைத்தோமே.

52. துஞ்சுமாகிற் சாவுசொலுந் துலையாப்பிணியுந் தானெய்தும்
நெஞ்சினினைந்த பொருள்கூடா நிதியுங்காணார் நிலைகுலைவார்
வஞ்சநோயுமிக வுண்டாமனையாள் வெறுக்கிலு றவாகாள்
கஞ்சமலரார் குழலாளே கருத்தாயுரைத்த படியறியே.

53. கெடுதிய்முட நேகாணார் கிளையுடன் வாழ்வுபேறாம்
கடுகிய பிணியுந்தீருங் கலக்கமோ சற்றுமில்லை
அடைமழை பெருகவுண்டா மகமேற நிற்குந்தன்மை
முடுகிய பயணமில்லை மொழிந்தபின் நுண்ணுங்காலை.

54. வெற்றியுஞ்சுகமு முண்டாம் வியாதியும் மாற்றும்பின்பு
பற்றியகருமந் தானும் பயமில்லையக முந்தாழார்
உற்றதோர் கெடுதி காணாருறு மழையுண்டுதூரத்
துற்றவர் வரவுங்கூடச் சொல்லும் பின்னடக்கத்தோன்றில.

55. ஜெயமொடு சுகமுமுண்டு சிறந்ததோர் பயணந்தன்னில்
புயலிடுமழையு மற்பம் புவிதனிற் கலக்கமில்லை
இயம்பினாற் பெறலாம்வெற்றி யிலாபமும் நீடுமாகும்
பயம்விளையாது நாளும் அரசதாம் பறவையாகில்.

56. உன்னிடிற் பிணியுமல்லா லொருபிணி யதிகமாகும்
மண்ணில்மழையே யில்லை வையத்தில் கெடுதிகாணும்
துன்னிய நெஞ்சிற்றோடந் தோன்றிடுங் கருமஞ்செய்யும்
பன்னியே யுதிக்கும் பட்சிபயனுட னுறங்குமாகில்.

57. காவினிற் பயமுமுண்டு கலகமாங் கருமமெல்லாம்
தீவினைபடு மற்றன்றிச் செய்யுநல் வினைகளாகாச்
சாவினில் விழுந்த பட்சி தனித்து வந்துதிப்பதாலே
பூவினிற்சிறந்த மாதே புகன்றனர் பள்ளினூலே.

58. ஓதுகிலோ மாபட்சி யன்றுண்ணு மொன்றுயிர்போம்
ஏதுமிலா வொன்றையிலேகுமே – நீதிபுனை
நன்றி யுடநொன்றறையி நாடறியத் தானுறங்கும்
ஒன்று முதலாள் வதுலகு.

59. போசனத்தில் மூத்தோனும் போய்நடக்கி லிளையோனும்
ஆசனத்தி னெடியோனு மாயவனை – மாசற்றுத்
தூங்குமவன் குள்ளன் றுஞ்சிடுமே யாமாகில்
அங்கி ருவரோ ராண்டறி.

60. உண்கின்றான்பால நுயர்நடை யானே குமரன்
பண்பாமரசனே பாராள்வான் நண்பு பெறு
முற்றுந்துயில் கிழவன் மோனமுடிந்தோன் சாவோன்
பற்றுந் தவத்தின் பலன்.

பகுதி 7
61. ஊணினிலுயர்ந்தோன் வெல்வனுயர் நடைக்குள்ளன் வெல்வன்
காணுறு வெகுரோமத்தன் கடுகராச்சியத்தில் வெல்வன்
தானருந் தூக்கந்தன்னி ளிருவருள் வலுத்தோன் வெல்வன்
வேணுமோர் மரணந்தன்னுளிருவருள் வலுத்தோன் வெல்வன்.

62. ஊணில் நடைவலிது நடையி லரசுறுதி
நாணியுறங்கிடவு நன்றாகப் – பேணி
விலகுகுழலாளே யிறப்பும் பொல்லாதென்
றுலகு புகழவுரை.

63. உண்பா னடப்பானை வெல்வ னடப்பானுந்
தன்பாலரசனையுந் தானழிப்பான் – மன்காத்
திருப்பான் றுயில்வானை வெல்லத் துயில்வோன்
மரிம்மானை வெல்வன் மதி.

64. நல்லூணாகிற் கிழவன்வெல்வ நடையேயாகிலிளவல் வெல்வான்
செல்லத்தூக்கமாமரசிற் சிறந்தோன் மிகவும் வென்றிடுவான்
எல்லாமரசேயாமாகி லிளையோன் வெல்வா னென்நாளும்
பொல்லாச் சாவேயாமாகிற் போனாரிருவர் மீளாரே.

65. உரைத்திடு மிருவர்பேரு மொரு பக்ஷ¢யுண்ணுமாகில்
நரைத்திடுமவனே வெல்வனடையினி னெடியோன் வெல்வன்
கருத்தரசிளை யோன்வெல்வன் கருங்குட்டன் துயிலில்வெல்வன்
மரித்திடச் சரியாமென்றே மாதவருரைத்தார் மாதே.

66. உண்பான டப்பானை யோட்டு மிருவர்களும்
பண்பாம் பதியைப் பரிந்தோட்டும் – பெண்பாவாய்
துஞ்சினோர்க் கஞ்சுந் துயில்வோனை யாவருமே
யஞ்சலென் றழைத்திடு வாராம்.

67. வல்லூறு பொன்னிறமாம் வாழாந்தை வெள்ளியதாம்
செல்லாருங் காகஞ் சிவப்ப்பாகு – நல்லாய்கேள்
கோழியுறு பச்சை குளிர்ந்தமயில் கறுப்பாம்
நாழி மணக்க நவில்.

68. ஆந்தை சிவப்பாம் அணிகாகம் பொன்னிறமாம்
வாய்த்த பச்சை வண்ணமயிலாகும் – ஏந்திழையீர்
வெள்ளையாங்கோழி விளங்கு வரிகறுப்பு
வல்லூறாக் கொண்டு மதி.

69. வல்லூறு பார்ப்பான் வளராந்தை தான்வணிகன்
செல்லாருங் காகஞ் செகத்தரசன் – நல்லாய்க்கேள்
கோழியாம் வேளாளன் கூறுமயில் சண்டாளன்
ஆழியா நூலாய்ந் தறி.

70. பொன்மறையோனும் வலியான் பேராந்தை வேந்தனும்
துன்னுமொழிகாகந் துலை வணிகன் – மன்னும்
உழுகுலத்தோன் கோழியே யோதுங்காண் மஞ்ஞை
இழிகுலத்தோ னென்றே யிசை.

பகுதி 9

81. வல்லூறு பாலை வளராந்தை வண்குறிஞ்சி
நல்லாருங்காக நடுமருதம் – மெல்லியரே
வாரணமே முல்லை வளருமயி னெய்தல்
ஆரணத்தோர் சொல்லா லறி.

82. வல்லூறு வண்மை வளர்காக நீர்க்காலாம்
நல்ல திறலாந்தையது நாற்காலாம் – சொல்லக்
குறுங்கோழி கொம்பாங் குலவு மயில் பட்சி
பெறுங்கா ணிவையாய்ந்து பேசு.

83. வல்லூறு பொன்னாம் வளராந்தை வெள்ளியதாம்
நெல்லார்ய்ங்காக நிறஞ் செம்பாம் – பொல்லாத
கோழியது வெண்கலமாங் கோலமயிலி ரும்பாம்
வாழி மடவார் வகை.

84. வல்லூறு வருகின்றான் மாமறையோன் தூரவந்தான்
நெல்லிக் கருங்காக நிற்கின்றான் – மெல்லியரே
கோழியே மீண்டான் குலவு மயிலுமரை
நாழிகையிலே வருவா னாடு.

85. மன்னவன் வல்லூறாகின் மனிதர்கைப் புகுந்ததென்க
வெண்ணிய வாந்தையாகி லொண்டொடியெடுத்தாளென்க
உண்ணிடுங்காகமாகி லொருவனே கொண்டா னென்க
வண்ணமார்கோழி யாணும் பூமியின்மயில்தான் பெண்ணே.

86. வல்லூறுகாக மயின் மூன்று மாணாகும்
நல்லதிரவுகோ லுஞ்சொன்னோம் – பொல்லாத
ஆந்தை பொற்கோழி பெண்ணாகுமிதேதோழி
செர்ந்தறிந்து சொல்லுந் திறம்.

87. உரைகிழக்கு வல்லூறு உயிராந்தை தெற்காம்
விரையங் கருங்காக மேற்காம் – புரைதீரக்
கொத்தியிரை விழுங்குங் கோழி வடக்காகு
மத்திபத்தி னிற்கு மயில்.

88. பச்சைமயில் மேற்காம் பாரில் வடக்காந்தையா
மிக்ககிழக்காகும் வல்லூறு – மெச்சு நல்ல
தெற்காகும் காகமது தேனார்விழி மடவாய்
பொற்கோழி மத்திபமாம் போற்று.

89. மத்திபத்தில் வல்லூறு வாழாந்தை தெற்காகும்
உற்றநிதி கிழக்கேயொண் காகம் – சற்றிடமே
தெற்காகுங் கோழி சிறந்தமயின் மேற்காகும்
எக்காலுஞ் சாற்றுதற்கா மீடு.

90. காணு மகாரப் பேரானுடைய கண்டமுதல்
காணுஞ் சிரசாந்தை கைகாகம் – பேணிக்
கோழியுடம்பு மயில் முன்பின்னாகும் வலியான்
தாழுமிரு சரணந்தான் இஉஎஒஅ

Njaani – DMK Movie Production Company & Pondycherry Churches

கற்பிதங்கள் என்றால் என்ன? மூட நம்பிக்கைதான்.

ஜெயலலிதா ரொம்ப பிரில்லியண்ட்டானவர். அசாத்திய அறிவுக் கூர்மையுடையவர் என்பது ஒரு கற்பிதம். இதை கேள்வி கேட்காமல் நிறையப் பேர் ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவு பெரிய புத்திசாலி, பிரில்லியண்ட் நபர் எப்படி தன் முழு அரசியலையும் வாழ்க்கையையும் ஏதோ ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த சசிகலா குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு இருக்கிறார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது.

கருணாநிதி பற்றியும் இது போன்ற கற்பிதங்கள் உள்ளன. அவர் ஒரு பகுத்தறிவாளர், ஜனநாயகவாதி என்பதெல்லாம் அப்படிப்பட்ட கற்பிதம்தான்.

இந்த வார குட்டு

கிறிஸ்துவ மதத்துக்குள் தலித் கிறிஸ்துவர்களுக்கும் வன்னிய கிறிஸ்துவர்களுக்கும் இடையே ஆலய வழிபாட்டில் ஜாதி வேறுபாடுகள் காட்டப்படுவதை நீக்காமல் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் நடக்கக் காரணமாக இருந்து வரும் புதுச்சேரி மறைமாவட்டப் பேராய நிர்வாகிகளுக்கு

இந்த வார கேள்வி

தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு என்ற சலுகைக்காக படத்துக்கு தமிழ்ப் பெயர் வைத்துவிட்டு, தயாரிப்பு நிறுவனத்துக்கு மட்டும் ஆங்கிலப் பெயர் வைத்துக் கொள்ளும் சினிமா உலகத் தந்திரத்தை ‘முத்தமிழ் அறிஞரின்’ பேரன் உதயநிதியும் (ரெட்ஜெயண்ட் மூவீஸ்) பின்பற்றுவது முறையா ?

முழுவதும் வாசிக்க: தமிழ்2000: ஓ பக்கங்கள் – 7

ரஜினிக்கொரு ஹீரோயின் வேணுமடா (பாய்ஸ் பாட்டு மெட்டில் படிக்கவும்)

meera-nandhakumar5.jpg

புகைப்படங்கள்: தட்ஸ்தமிழ்

பெயர்ச்சொல் மொழிபெயர்ப்பு: அமெரிக்காவும் தமிழாக்கங்களும்: தினமலர்

தினமலர் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து நண்பர்களுடன் நடந்த விவாதம்:

நண்பர் #1:
அமெரிக்க தேர்தலில் ரோட் ஐலண்ட் மாகாணத்தில் ஹிலரி வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தியை தினமலர் தமிழ்ச் சுத்திகரிப்புச் செய்து ரோட் ஐலண்ட் என்ற மாநிலத்தின் பெயரை மீண்டும் மீண்டும் ரோட் தீவு, ரோட் தீவு என்று எழுதுகிறது.

நம் தமிழ் பத்திரிகைகளின் பொது அறிவு என்னை அவ்வப் பொழுது புல்லரிக்க வைத்து விடுகிறது. அதென்ன ரோட் தீவு? சாலைத் தீவு என்று முழுக்க மாற்றி விட வேண்டியதுதானே? படிக்கிறவன் என்ன நினைப்பான், அமெரிக்காவின் வட கிழக்கு மூலைக்குக் கீழே இருக்கும் கோஸ்டல் நிலப் பிரதேசத்தை, ஒரு தீவு என்று நினைத்துக் கொள்ள மாட்டானா?

தினமலர் கனடாவில் உள்ள விர்ஜின் ஐலண்ட் பிரதேசத்தை எப்படி எழுதும்? கன்னித் தீவு என்றா?

இதே பாணியில் போனால் தினமலர்

  • மேரிலாண்ட்டை மேரி நிலம் என்றும்,
  • விர்ஜினியாவை கன்னியா என்றும்
  • கனெக்டிக்கட்டை சேர்த்து வெட்டு என்றும்
  • மிசிசிப்பியை செல்வி சிப்பி என்றும்,
  • பாஸ்டனை தலைவர் பேட்டை என்றும் ,
  • டெக்சாஸை டெக்கின் பிருஷ்டம் என்றும்,
  • நியுயார்க்கை புதிய வளைவு

என்றும் எழுதத் தொடங்குமோ என்று ஒரே அச்சமாக இருக்கிறது.


நண்பர் #2:
Luckily, Dinamalar doesn’t cover anything that goes on in the town “Dickinson, North Dakota”


நண்பர் #1:

தினமலருக்கு நாளைப் பின்னே உபயோகப் படுமே என்று ஏதோ என்னாலான உதவி

“ஆண்குறி உள்ளே மகன், வடக்கு வாத்துக் கோட்டை”

நல்ல வேளையாக அமெரிக்க துணை ஜனாதிபதியின் பெயரின் முதல் பாகத்தைத் தமிழுக்கும்
ரெண்டாவது பாகத்தை அப்படியேயும் எழுதாமல் இருந்தார்கள், இரட்டைக்
கிளவியாகியிருக்கும்.


நண்பர் #3:

ஆல்பனி ‘எல்லாமே பனி’ ஆகி விடுமோ ?

மிஎதொ – என்ன தெரியுமா?

மிகவும் எளிய தொகுத்தளிப்பான் (really simple syndication)

Go black on Feb 4th – Black Ribbon to raise the awareness of the plight of Sri Lankan Tamils

Sri Lanka - Eezham: Awareness, History, Black Badges, LTTE, Atrocity

வலைப்பதிவில் எத்தனை வகைகள் உண்டு?

‘நான் வலைப்பதிகிறேன்’ என்றவுடன் எழும் கேள்வி: ‘என்னவெல்லாம் பதிவீர்கள்?’

அதற்கு விடையளிக்கும் முயற்சி.

Monologue – அனுபவம் சார்ந்த ஆழ்ந்த சுய சிந்தனை: புனைவு போல் ஒழுக்கமான நடை வேண்டும். அடைப்புக்குறிக்குள் சொந்த கிறுக்கல் எல்லாம் எட்டிப் பார்க்காது. சுவாரசியம் குன்றாமல் பறக்கும். தன்மையில் வந்திருக்கும். நிஜம் போல் காட்சியளிக்கும். திடீர் திருப்பம் தரும் முடிவு இல்லாவிட்டாலும் பளிச்சென்று இறுதிப்பாகம் இருக்கும்.

இவற்றைக் காண்பது வாரிசாக இல்லாத அரசியல்வாதியாக இருந்தும் வெற்றியடைவதைப் போல கொஞ்சம் அரிய வகை.

இந்த நடையை பெரும்பாலும் செல்வராஜ் பதிவுகளிலும் ஜெயமோகன் எழுத்துகளிலும் கண்டிருக்கிறேன்.

Portrait – நிகழ்வுகளை கண் முன்னே நிற்க வைத்தல்: தேர்ந்த விவரிப்பு மூலம் புள்ளிவிவரம் கூட உருவம் பெறும். நம்பகத்தன்மை கோரிடும். சித்திரமாக விவரங்கள் பொதிந்திருந்தாலும் எளிதில் அணுகமுடியும் பாவம் கொண்டிருக்கும். உணர்ச்சிகளை விட சம்பவங்கள் கொண்டு ஈர்க்கும்.

எளிது போல் தோன்றினாலும் சன் நியூஸின் நேர்த்தியும் பொறுமையும் வேண்டும். பரபரப்புக்கு ஆசைப்படாத மனம் வாய்க்கும் நேரங்களில் முயற்சிப்பது உசிதம்.

பத்ரியை மனதில் வைத்து எழுதிய மாதிரி பட்டாலும் செல்வன், நாராயண் ஆகியோரை எடுத்துக்காட்டலாம்.

Phenomenology – நடந்ததை தத்துவார்த்தமாக தன்வயமாக்குதல்: சாட்சிபூதமாக இருக்கும். செய்திகளை, ஆக்கங்களை சொந்தக் கருத்துடன் முன்வைக்கும். உளவியல் சார்ந்த உலகளாவிய பார்வை கொடுக்கும். பழகிப்போகும் வரை அணுகுவதற்கு கரடுமுரடாகத் தடுக்கும்.

விகடன், குமுதம், விட்டலாச்சார்யாவை விட்டுவிட்டு காலச்சுவடு, புதிய *** என்று வாசித்தால் எழுத்துப்பயிற்சி கிடைக்கும். அகரமுதலி வைத்துக் கொண்டு எளிய வார்த்தைக்கு சப்ஸ்டியூட்டாக சங்கச்சொல் போடுவது சாலச் சிறந்தது.

டிஜே, அய்யனார், சுகுணா திவாகர் என்று நிறைய இலக்கியவாதிகளை சொல்லலாம்.

Synergy – உரையாடல், ஊக்கத்திரி: தனித்தனி கூண்டுகளாக இருக்கும் காய்களை அவியலாக்கும் ஜாம்பவான் சமர்த்தர். அனுமன்களை அடையாளம் காண வைக்கும் தூண்டில் வீசும் பதிவுகள் கிடைக்கும். தேங்கிக் கிடக்கும் இடத்தை சுறுசுறுப்பாக்கும் திட்டம் தீட்டும். தனி மரங்கள் நெடிந்துயர விரும்பும் தோப்பில் பல மரம் கண்ட தச்சராய் வெட்டி வீழ்த்தாமல், பறவையாய் பரஸ்பரம் அறிமுகம் கொடுக்கும்.

வேதாளங்கள் நிறைந்த உலகு என்பதால் மனந்தளராத விக்கிரமாதித்த மனப்பான்மை வேண்டும். பெண்களாய் இருந்தால் இயல்பாகவே அமைந்த மானகை/மேலாண்மை குணாதிசயங்கள் கைகொடுக்கும். வேற்றுமைகளை அடுக்குவதை விட ஒற்றுமைகளைக் கண்டறிந்து ‘அட’ போடத் தெரிந்திருக்க வேண்டும்.

சர்வேசன், செல்லாவை சொல்லலாம்.

Mongering – வாங்க, விற்க: சொந்த விருப்பங்கள் சார்ந்து இயங்கும். சில சமயம் சிலரால் வெறுப்பை உமிழ்வதுடன் கோர்த்துவிடப்பட்டாலும், அதிகம் மாறுபடாத வாதங்கள் தொடர்ச்சியாக கிடைக்கும். வாசகரை அச்சுறுத்தும். விதைக்க விரும்புவதை எப்பாடுபட்டேனும் விற்றே தீரும். பொருத்தமான ஒப்புமைகளுடன் சம்பந்தமில்லாத உருவகங்களும் நுழைந்திருக்கும்.

இவற்றை இலக்கியப்ப்பதிவுகளுடன் குழப்பிக்கொள்ள கூடாது. நியாய உணர்ச்சி இல்லாத லாஜிக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். கொண்ட கொள்கைக்காக எக்காரணம் கொண்டும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு வாசனை உண்டு என்பதை மறக்கவேண்டும்.

எல்லாப் பதிவுகளும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பதற்கேற்ப அனைவரிலும் ஓரிரு இடுகையாவது இப்படி இருக்கும்.

Proposal – வேண்டுகோள், விண்ணப்பம், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு: திட்டமிடல் தென்படும். அனுபவத்தில் கிடைத்த தொலைநோக்கு பார்வை இருக்கும். மக்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் அறுதியிட்டு செய்யக்கூடிய ஆலோசனை நிறைந்திருக்கும்.

இதற்கு உதாரணமாக தருமி, ரவிசங்கர் போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

Replies – பதில், பிறர் பதிவு சார்ந்து எழுச்சி பெற்ற கருத்து தொகுப்பு: புரிகிற மாதிரி நச்சென்று நாலு வார்த்தை மட்டுமே இருந்தாலும், அதிரடியாக இருக்கும். அதுவரை ‘கொக்குக்கு மீன் ஒன்றே மதி’ என்பது சேணம் கட்டிய குதிரைகள் தாறுமாறாக ஓட ஆரம்பிக்கும். மறுமொழிகள் தருவதற்கு கூச்சப்படார்.

‘வஸ்தாது தோஸ்துங்க புழங்குதே… ரப்சர் ஆயிடுமே’ என்றெல்லாம் அஞ்சாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். எனினும், எப்பொழுதும் எதிர்த்தே பேசிக் கொன்டிருந்தால் வவ்வால் பதிவர் என்று நாமகரணமிடப்படும் அபாயம் இருப்பதால், தெளிவாக அறிந்த விஷயங்களில், கன்ஸிஸ்டன்ட் கொள்கையில் உறுதியாக இருக்கத் தெரியவேண்டும்.

பின்னூட்டங்கள் பதிவாக சிலர் வைத்துக் கொண்டிருந்தாலும் உடனடியாக தோன்றுபவர்கள் கல்வெட்டு பலூன் மாமா, இகாரஸ் பிரகாஷ், ரோசா வசந்த்.

Log – பதிவு: அனைத்துப் பதிவர்களுக்கும் பதிவுகள்தான் என்றாலும், டைரி என்பதற்கு அணுக்கமாக இருக்கும். அயர்ச்சியுறும் அளவு விவரம் காணப்படும். கருத்துத்திணிப்பு, அறச்சீற்றம் எல்லாம் நிகழாமல் அன்றாட வாழ்வை விவரிக்கும். சுவை, லயிப்பு போன்றவற்றை விட நம்பகத்தன்மை, சொந்த விஷயம், நிஜம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்.

ஸ்ரீராமதாஸ், மா சிவகுமார் என்று எண்ணி ஒரு கைக்குள் அடங்கும் அரிய சிலர் உண்டு.

இன்னும் இருக்கும். எங்கிருந்தாவது இந்த மாதிரி சுருட்டுவதற்கு, பட்டியல் அகப்பட்டவுடன் தொடரலாம்.