கல்வியா? செல்வமா? வீரமா? என்பது போல், செலவு அதிகமாகுமா? நேரம் குறைவாக்க வேண்டுமா? தரம் உயர வேண்டுமா? எனக் கேட்கும் முக்கோணம்
இலவசமாக போடப்படும் பதிவுகளா? சிறு பத்திரிகை எழுத்துகளா? இலவச வண்ணத் தொலைக்காட்சி மனப்பான்மையா?
கல்வியா? செல்வமா? வீரமா? என்பது போல், செலவு அதிகமாகுமா? நேரம் குறைவாக்க வேண்டுமா? தரம் உயர வேண்டுமா? எனக் கேட்கும் முக்கோணம்
இலவசமாக போடப்படும் பதிவுகளா? சிறு பத்திரிகை எழுத்துகளா? இலவச வண்ணத் தொலைக்காட்சி மனப்பான்மையா?
நேற்று பெருமாளுடன் தொடங்கியதால் இன்று ருத்ரனில் துவங்கலாம். ரஜினி பாட்டு போட்டால் கமல் பாடலும் தொடரும் ‘ஒலியும் ஒளியும்’ கால பாரம்பரியம். வெள்ளீஸ்வரர் கோவிலிலும் ‘வைகாசிப் பெருவிழா’ ஆரம்பிக்க இருக்கிறது. ஸ்ரீனிவாசர் ஷங்கர் படம் மாதிரி. வண்ணப் புகைப்படங்களுடன் பிரும்மாண்டம். இருபக்க பச்சைத்தாளில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் மாதிரி அமரிக்கையான தயாரிப்புடன் வள்ளீசுவரர்.
கோவில் படிக்கட்டில் அழுக்கான bitch படுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பைரவர் கழுத்தைச் சுற்றி ருத்திராட்சம் அணிந்திருந்தார்.
கபாலி கோவில் பிரதோஷத்திற்கு ரஜினி பட ஓப்பனிங் போல் கூட்டம் அலைமோதும். இருபது வருடம் முன்பு பார்த்த சிலர் இன்றும் வந்திருந்தார்கள். கோவில்களில் கூட்டம் அதிகரிக்கவும் இல்லை; எல்லா வயது வகையிலும் குறையவும் இல்லை.
நந்திதேவரைப் பார்க்க பெண்மணிகள் தாராளமாக முண்டியடித்து இடிக்கிறார்கள். இனி சல்லிக்கட்டுக்கு ‘மகளிர் மட்டும்’ சிறப்பு போட்டி நடத்தலாம். விருமாண்டித் தோற்றுப் போவார்.
உடற்பயிற்சிக்கும் உண்ணாமுலைக்கும் சம்பந்தம் இருப்பது எத்தனை அட்சரம் உண்மையோ, மகிழ்ச்சிக்கும் மலர்மிசை ஏகுவதற்கும் தொடர்பு இருக்கும்.
வரப்போவதை அறிந்து அறிவுறுத்த சோதிடமும் எண் கணிதமும் கைரேகையும் மூலஸ்தானமும் உதவுமா? சந்தோஷம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் அலசி ட்ரையரில் போடுகின்றன.
1. What Makes Us Happy? – The Atlantic (June 2009): “Is there a formula—some mix of love, work, and psychological adaptation—for a good life?”
2. What You Don’t Know Makes You Nervous – Happy Days Blog – NYTimes.com: “Happy Days is a discussion about the search for contentment in its many forms — economic, emotional, physical, spiritual — and the stories of those striving to come to terms with the lives they lead.”
‘டெக்கான் சார்ஜர்ஸ்’ கில்லி அடித்து நொறுக்குவார் என்பதை ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ செவாக் முன்பே அறிந்திருந்தால் யாதொரு வருத்தமும் ரசிகருக்கு இல்லை என்கிறது பிந்தைய கட்டுரை.
Wiiஇல் பௌலிங் போடும்போது ஒரு பால் ஸ்ட்ரைக் செய்தாலே, அடுத்த தடவை கை நடுங்கும். பந்துக்கு பந்து ஆறும், நான்குமாக விளாசி, இடைவேளைக்கு ஒரு பந்து பாக்கி இருக்கும் சமயத்தில், லட்டுவாக தூக்கி அடித்து ஆட்டமிழந்தார் கில்க்ரிஸ்ட்.
‘ஏதோ நடக்கிறது! இதமாய் இருக்கிறது!!’ என்று விட்டுவிடலாம். மேட்ச் ஃபிக்ஸிங் என்பது அந்தக் காலம். பெட் பாக்ஸிங் என்பது இந்தக் காலம்.
தமிழகப் பாதை தனிமனிதக் கவலை என்றால், தமிழ்வலை வழி தனி வழி. சென்னையெங்கும் ‘தமிழக அரசியல்’ பத்திரிகையின் சுவரொட்டி அல்லோலகல்லப்படுகிறது. இணையத்தில் வழக்கம்போல் குண்டுச்சட்டி கழுதையாக நக்கீரன் அடிபடுகிறது.
2. சிதைவுகள்…: நக்கீரன்: ஊடகத்துறையின் பொறுக்கித்தனம்?
3. புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்?: பி.இரயாகரன்
கடந்த மூன்று உரல்களைத் தேடும்போது கிடைத்த Ivan Sivan ட்விட்:
TV Artists Union President passed away. http://bit.ly/vo1ud
– 12:06 PM May 19
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், ஆன்மிகம், இறவன், கடவுள், கருத்து, கிரிக்கெட், குளம், கோவில், சந்தோஷம், சினிமா, சென்னை, ட்விட், ட்விட்டர், தமிழ்நாடு, தமிழ்ப்பதிவு, திருவிழா, நம்பிக்கை, நாய், நிகழ்வு, பிரபாகரன், புலி, பெருமாள், மகிழ்ச்சி, மதராஸ், வலை, விசாகம், விசிட், வைகாசி, Chennai, Films, LTTE, Prabakaran, Prabhakaran, Temples, Tigers, TN
1. மதுரைக்கு காலை நேர ரயில். மாட்டியவர்கள் எல்லோரிடமும் குலம், கோத்திரம் தவிர பாக்கி குறுக்கு விசாரணை நடந்தேறின. ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தில் விகே ராமசாமியுடன் பேசிக்கொண்டே மோகன் சமாளிப்பது போல் அலுவல் தொலைபேசி, நேர்காணல் தொலைபேசி இரண்டையும் கொடுத்துக் கொண்டே வாய் கொடுத்தவர் ‘BPO’ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இரண்டாண்டு அனுபவத்தில் புதிய இடத்திற்கான முயற்சியில் மேலாளர் ஆக விண்ணப்பித்திருக்கிறார். வீடு வாங்கியாச்சு. எம்.பி.ஏ.வும் கூடிய சீக்கிரமே சேர்ந்துவிடுவார்.
2. இவர் SAP குந்துரத்தர். சம்பாதிப்பதே தொழிலில் முதலீடு செய்யத்தான். மாடர்ன் மேட்ரிமனியல் நடத்துகிறார். முதற்பக்கத்தில் தமிழ் கலாச்சாரத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்தாலே, மாபெரும் வெற்றியைப் பெறப் போகும் வலையகம் என்பது உறுதியாகும்.
3. விதவிதமான ஹோட்டல்களைக் கொண்டு வருவது இவரது கனவு. தற்போதைய வேலையில் போதிய அளவு சேமித்ததும், நண்பர்களுடன் பெங்களுருவுக்கு ஓர் உணவகம் (மூன்று நட்சத்திர பாணியில் கையேந்தி பவன் + சாலோயோர செட்டப் கொண்ட உயர்தர அமைப்பு), சென்னைக்கு சாலட் பஃபே (வித விதமான காய்கறி + ஆர்கானிக் + நேச்சுரல் முன்னிறுத்தப்படும் உணவு) என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடாமல், கணக்கு போட்டு, திட்டத்தை தெளிவாக வைத்திருக்கிறார்.
4. ‘தோழா… தோழா… தோள்கொடு தோழா’ என்று பாடிய பாண்டவர் பூமி நாயகியை ‘சிவசக்தி‘ ஆக்கிய பாரா மாட்டினார். ஒரு குழாயைத் திறந்தால் எக்ஸ்பிரெசோ காபி, அடுத்த பொத்தானைத் தட்டினால் சாக்லேட் மில்க், இன்னொன்றைத் தொட்டால் கோக் என்பது போல் அடுத்த கரண் படத்திற்கு எப்படி வசன வேலை நடக்கிறது, குமுதத்தில் ஆயில் ரேகை எவ்வாறு விரிவடையப் போகிறது, சிவசக்தி எவ்வாறு சீரியல் விரும்பிகளை ஈர்க்கப் போகிறது என்று ஊற்றாக கிளை மாறினாலும் எல்லாவற்றுக்கும் சூட்சுமமான புத்திசாலித்தனமாகிய மின்சாரத்தை ஷாக் அடிக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
5. அடுத்து மாட்டியவர் ‘கிழக்கு‘ பத்ரி. ‘என்.எச்.எம் ரைட்டர் இலவசமாகக் கொடுப்பது ஏன்?’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது?’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா?’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா?’ போன்ற என் கேள்விகளுக்கு புத்தியில் பச்சை குத்துவது போன்ற விளக்கங்களுடன் நம்பிக்கையுடன் பதிலளித்தார்.
6. மதுரை தருமி, மலேசியா டிபிசிடி, வலைச்சரம் சீனா, உண்மைத்திராவிடர் ஜாலிஜம்பருடன் மதுரை சந்திப்பு அமர்க்களமாக நடந்தேறியது. ‘எந்த புதிய பதிவுகள் தங்களைக் கவர்கின்றன?’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை?’, போன்ற சங்கடமான நேரடி வினாக்களுடனும் அமெரிக்காவும் இந்தியாவும், தமிழில் பதிவெழுத வந்த கதை என்று நெருக்கமான சந்திப்புக்கு உரிய சுவாரசியங்களுடன் மகிழ்வாகப் பறந்தது.
7. மிக்சர், காராசேவு, முறுக்குடன் ஆஜர் ஆன டுபுக்கு சந்திப்பில் நீண்ட காலமாக சந்திக்க நினைத்த செந்தில், அவ்யுக்தாவுடன், ‘எத்தனை சுண்டல் வாங்குவது?’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது?’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா?’ என்பன மிக தீவிரமாக கொசுக்கடிகளுடன் காந்தி சிலைக்கடியில் எட்டு பேரால் அலசப்பட்டது.
8. வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், அதிஷா, முரளிகண்ணன், மக்கள் சட்டம், ப்ருனோ, கென் என்று பார்க்காத பல முகங்களை பாலபாரதியும் லக்கிலுக்கும் அறிகம் செய்துவைத்தார்கள். ‘டுபுக்கு சந்திப்பு மெகா மொக்கையா, இந்த சந்திப்பு அதனை மிஞ்சுமா?’ என்று விவாதித்தோம். மழைக்குக் கூட காவல் நிலையம் ஒதுங்கியது கிடையாது என்னும் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் அனைவரும் ‘உள்ளே’ இருந்தார்கள். ‘மேகம் கொட்டட்டும்; செல்பேசி நனையட்டும்; கூட்டம் உண்டு’ என்று (அசல்) பாபா தம் போட்டு காற்றை அனுப்பி, மேகங்களைக் கலைக்கும் கூட்டம்; இருக்கைகளை கால்சட்டை கொண்டு காயவைக்கும் கூட்டம்; சுகுணா திவாகர்+ஆழியூரான் சிறப்புக் கூட்டம் என்று உள்ளரங்குகளுடன் களைகட்டியது.
9. கிளம்பும் அன்று சென்னைக் கச்சேரி தேவ் & இளா சங்கமித்தனர். பலூன் தவறவிட்ட சிறுமி ஒன்றுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விழுந்ததை, எடுத்துக் கொடுக்க, அவளோ ‘கிம்மி எ ப்ரேக்’ பார்வை ஒன்றை வீசியதை விசாவதாரத்திற்குப் புகைப்படம் எடுத்தது போன்ற பல முக்கியமான தருணங்கள் நிறைந்த சந்திப்பு இது.
Posted in Personal
குறிச்சொல்லிடப்பட்டது சந்திப்பு, சென்னை, தமிழ்ப்பதிவு, நண்பர், பதிவர், மதுரை, மொக்கை, வலைப்பதிவர், Bloggers, Chennai, Madurai, Meet, Tamil Blogs
அல்செய்மர் ஆள்வதற்கு முன் நினைவில் நின்ற முகமூடிப் பதிவர் பட்டியல்:
1. முகமூடி, அனானி, பெயரிலி என்றவுடன் நினைவுக்கு வருபவர். யாஹு குழுமங்களில் உலாவிய டிஸ்கி பாவிக்கவும். நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காமல் சுதந்திரமாக விமர்சித்தவர். இன்றும் ஏங்குவது: பதிவுக்கு பல்விதமாக செய்தி, வலைப்பூ, சிரிப்பான், இலக்கிய விமர்சனம், அமெரிக்க ஊடகம் தொட்டுக்காட்டியவர்.
2. சன்னாசி: ஆரம்பித்த புதிதில் இவரும் முந்தையவரைப் போலவே சாட்டையடி சுழற்சி சொல்லாட்சி கொண்டு சினிமா குறித்தும் கலை குறித்தும் வெளிப்படுத்திய வேகத்தில் ‘அவர்தான் இவரோ’ என்று எண்ணியது உண்டு. இன்றும் ஏங்குவது: ‘இது தேறாத கேசு’ என்று தட்டிக் கழிக்காமல் வாதம் பொறுமையாக வாதம் செய்யும் லாவகம்.
3. முகமூடி: பேசாப்பொருளை விவாத களத்தில் வைத்தவர். சுற்றி வளைத்துப் பேசுவதில் ஏற்கனவே சொல்லப்பட்டவர்களுக்கு சளைக்காதவர். இவரின் பதில் வாதங்கள் வாயடைத்துப் போக வைப்பவை.
4. குசும்பன்: புதிய குசும்பன் அல்ல. சில சமயம் அதிரடி; பல சமயம் ஊமைக்குசும்பு; அவ்வப்போது நக்கல், ஊசி குத்தல் நகைச்சுவை. அவரே பொறிப்புரை தந்தால் மட்டுமே புரியக்கூடிய பதிவும் உண்டு. இன்றும் ஏங்குவது: வண்ண வண்ணமாக வார்த்தைகளுக்குள் பூசியிருக்கும் வடிவு.
5. குழலி: பாட்டாளி மக்கள் கட்சியும் அன்புமணியும் இராமாதாசும் இணையத்திற்கு கொள்கை பரப்பு செயலாளர் நியமித்து விட்டார்கள் என்றே எண்ண வைத்தவர். இவர் வரும்வரை கடுமையான விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்ட பா.ம.க., குழலிக்குப் பின் நட்சத்திர அந்தஸ்து பெற்றது.
6. லக்கிலுக்: முந்தையவர் பா.ம.க. குறித்த எதிர்மறை எண்ணங்களை வாதத்தில் எதிர்கொண்டார் என்றால், இவர் திமுக, கலைஞர் குறித்த நேர்மறை இடுகைகளை முன்னிறுத்தினார். நாளடைவில் சகலகலா வல்லவனாலும் துவக்க மீட்டிங் கவரேஜும் நியாயப்படுத்தல்களும் ப்ராண்ட் நேமை நிலைநாட்டியது.
7. இலவசகொத்தனார்: முன்னவரைப் போலவே ஆரம்பத்திலேயே பலநாள் பதிவுகள் இட்ட மெச்சூரிட்டியும் சுவாரசியமான இடுகையின் சூட்சுமமும் அறிந்தவராய் வந்தார். தமிழ்மணத்தின் மறுமொழிப் பெட்டியைஹைஜாக் செய்தவர். இவரின் பின்னூட்ட எண்ணிக்கை கின்ன்ஸ், லிம்கா சாதனை.
8. சர்வேசன்: வெறும் கருத்துக்கணிப்பு என்று ஆரம்பித்தாலும் கருத்துகளை அவ்வப்போது பதிவாக இடுபவர். கதைப் போட்டி, புகைப்பட போட்டி, பதிவர் போட்டி என்று தொடர்ச்சியாக பல நல்ல மாற்றங்களை உருவாக்கியவர். இன்னும் முகமிலியாக உலா வருவது குறிப்பிடத்தக்க அதிசயம்.
9. தருமி: இயல்பாய் எதார்த்தமாய் உள்ளே வந்து தக்க சமயத்தில் வெளிப்படுத்தி முகமிலி இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய் வைத்துக் கொள்ளலாம்.
10. ஞானபீடம்: அவ்வப்போது வருவார்; கொஞ்ச நாள் கழித்து நெடு விடுமுறை எடுப்பார். தமிழ்மணம் சார்ந்த அரசியல்நெடிப்பதிவுகள் பாட்டு, குத்துடன் நிறைய இருக்கும்.
11. அப்பிடிப்போடு: அரசியல் கிடைக்கும். அதிகம் படித்ததில்லை. தற்போது காணவில்லை.
12. யோசிங்க: எனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்று. To the point. அம்புட்டுதான். வினாவாக இருக்கட்டும்/சிந்தனையாக தோன்றட்டும்… ஷார்ட்டா முடிப்பார்.
13. இட்லி – வடை: இவ்வளவு காலமாகத் தாக்குப்பிடிப்பது மலைக்க வைக்கும் ரகசியம். இவரா, அவரா, மரத்தடியில் இருக்கிறாரா, சென்னையா, வயதானாவரா, நுட்பம் அறிந்தவரா, இலக்கியவாதியா, இருவரா என்றெல்லாம் தெளிவாகக் குழப்புபவர்.
14. ரோசாவசந்த்: சொந்தப் பதிவில் எழுதுவதில்லை. என்ன பெயரில் எங்கிருக்கிறாரோ!
15. அனாதை ஆனந்தன்: ரோசா என்றவுடன் ஏனோ நினைவுக்கு வருபவர். இன்றும் அவ்வப்போது தெளிவாக, முக்கியமான கருத்துகளுடன் மாற்று சிந்தனை என்றால் எப்படி/என்ன/ஏன் என்று உணர்த்துபவர்.
16. பொறுக்கி: அனாதை போலவே வித்தியாசமான விஷயங்களை நேரடி மொழியில் பதிபவர். அனுபவத்தையும் வாசிப்பையும் அவசரமில்லாமல் நேர்மையாகப் பகிர்வதில் தனித்து தெரிபவர்.
17. விசிதா: வாடிக்கை மறந்ததும் ஏனோ? இந்த மாதிரி பதிவர்கள் அமுத விருந்தை நிறுத்தியதும் ஏனோ?
18. டிஜே தமிழன்: பதிவுகள் மையத்தில் முதலில் படித்தது. இன்றளவும் சுடும் விவாதப் பொருளையும் இலக்கியத்தையும் தவறவிடக்கூடாத முறையில் கொடுக்கிறார்.
19. நேசகுமார்: முதன்முதலாக கொலை மிரட்டல் பெற்றவர்.
20. வவ்வால்: நவீன திருவிளையாடலில் சுவாரசியம் குறையாமல் இருக்க வைப்பவர். ‘இவர் யார்?’ என்பது புரிந்து கொள்ள முடியாத ரகசியம்.
இன்னும் நிறைய பேர் இருப்பார்கள்… விடாது கருப்பு, இரவுக்கழுகு, பெடியன்’கள், இளவஞ்சி, பச்சோந்தி – வண்ணக்குழப்பம், கல்வெட்டு, கொழுவி, ஈழநாதன், ஜொள்ளுப்பாண்டி, சனியன்…
இன்றைக்கு சட்டென்று தோன்றியவர்கள் இவர்கள் மட்டும்தான்
சாகரனும் கூடத்தான்.
குறிச்சொல்லிடப்பட்டது Anon, Anonymous, அனானி, தமிழ்ப்பதிவு, பதிவுகள், பெயரிலி, முகமூடி, வலைப்பதிவுகள், Masks, Tamil Blogs
Posted in Coincidence, Fun, Similarity
குறிச்சொல்லிடப்பட்டது அட, உருவம், ஒரே மாதிரி, ஒற்றுமை, சும்மா, ஜாலி, தமிழ்ப்பதிவு, நான் அவனில்லை