Tag Archives: சசிகுமார்

சசிகுமாரின் ‘குட்டிப் புலி’

குட்டிப் புலி படம் பார்த்தேன். அந்தப் படத்தின் சாமுத்ரிகா லட்சணத்தைக் கண்டு ஆச்சரியப்படலாம். வெற்றிகரமான மசாலா சினிமாவிற்கு பதின்மூன்று விஷயங்கள் இருக்கவேண்டும்.

1. ரெண்டு நிமிஷத்துக்குள்ளாற கதைய சொல்லிறணும்: போக்கிரிப் பயலுக்கு கலியாணமாவ மாட்டேங்குது. அப்பாவப் போல பையனும் வெட்டு குத்துனு சாகக்கூடாதுனு அம்மா நினைக்கிறா. இதெல்லாம் நடந்துச்சா?

2. திரையில் நம்மையே பாக்குற மாதிரி ஹீரோவோ (ஹீரோயினோ) இருக்கணும்: படிக்காத ஹீரோ; பக்கத்து வீட்டுப் பைங்கிளி தானாகவே வந்து காதல் செய்யுற ஹீரோ; கைநிறைய காசு கொடுத்து செலவழிக்கச் சொல்லுற அம்மா இருக்கும் ஹீரோ.

3. செண்டிமெண்ட் நிறைந்த கதை: அம்மா பாசம் இருக்கா: செக்… அடி வாங்குறானா: √ அனாதையைக் காப்பாத்துறானா: √ நியாயத்தைத் தட்டிக் கேட்குறானா: √

4. படம் முழுக்க தடக் தடக் அபாயம்: சினிமாவின் முதல் காட்சியிலேயே அந்த எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கப் போகும் அபாய அணுகுண்டு டிக் டிக் கேட்க ஆரம்பிக்க வேண்டும். திரைக்கதையின் துவக்கத்திலேயே பார்வையாளன் சீட் நுனிக்கு வர வேண்டும். இங்கே ஹீரோவும் கொலை செய்வானா, ஜெயிலுக்குப் போவானா என்பது தோன்றுகிறது. சசிகுமாரும் இளைய தளபதி விஜய் அல்ல. செத்துக் கூடப் போய்விடலாம் என பயப்பட வைக்கிறது.

5. கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ரசனை: ஷங்கருக்கு இது பிரும்மாண்டமாகப் படலாம். தெலுங்கர்களுக்கு இது மூன்று நான்கு நாயகிகளாகத் தோன்றலாம். ரஜினிக்கு ஸ்டைலாக இருக்கலாம். சசிகுமாருக்கு எண்பதுகளின் நாஸ்டால்ஜியா. இளையராஜா பாடல்கள்; தாவணி போட்ட ஸ்ரீதேவி நாயகி.

படம் ஹிட் ஆவதற்கான பாக்கி எட்டு சூட்சுமம் கூட சொல்லலாம்… ஆனால், சசிகுமார் இதெல்லாம் பார்த்து பார்த்து படம் செய்வார் என்பது திரைக்கதையின் அரசியல், இரண்டு பொண்டாட்டி நியாயம், பார்ப்பனர்களை இழிவுபடுத்தல் என்றெல்லாம் ஆராய்வதற்கு ஒப்புமானம்.