Tag Archives: இலக்கியம்

Bolshevescent by Peter Gizzi

You stand far from the crowd, adjacent to power.
You consider the edge as well as the frame.
You consider beauty, depth of field, lighting
to understand the field, the crowd.
Late into the day, the atmosphere explodes
and revolution, well, revolution is everything.
You begin to see for the first time
everything is just like the last thing
only its opposite and only for a moment.
When a revolution completes its orbit
the objects return only different
for having stayed the same throughout.
To continue is not what you imagined.
But what you imagined was to change
and so you have and so has the crowd.

from The Outernationale, © 2007 by Peter Gizzi, published by Wesleyan University Press.

நன்றி: Poets.org – Poetry, Poems, Bios & More – Bolshevescent

நான்கு சிறுகதை – வாசக அனுபவம்

‘இலக்கியச் சிந்தனை’யால் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகியுள்ள கதை: Marathadi : மீனாமுத்து: “யாத்தி”

அமெரிக்கா போன்ற சட்டதிட்டங்கள் ஓரளவு கடுமையாக, உடனடியாக நிறைவேற்றும் நாடுகளிலேயே, இந்தக் கொடுமை எளிமையாக, அன்றாடம் நடந்தேறுகிறது, ‘படித்தவர்கள் பண்பற்றவர்கள்’ என்பது போல் பல கேஸ்கள்; சமீபத்தில் கைராசியான நியு யார்க் மருத்துவ தம்பதியர்கள் கைதாகி, குற்றமும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

நிகழ்வை ஆர்ப்பாட்டமில்லாமல் எளிமையாகக் கண்முண் கொணருகிறார். அதிர்ச்சிக்காக மட்டும் இல்லாத நேர்த்தியான முடிவு. மிகவும் பிடித்திருந்தது.

மென்மையான எழுத்துக்களை தட்டச்சும்போது கூட என்னுடைய கீபோர்ட் சத்தமெழுப்பி, சிந்தையைக் கலைத்துப் பொடும். அது போல், சிறுகதையைப் படிக்கும்போது ஆச்சரியக்குறிகள் தொடர்வண்டியாக நடுவில் வந்து ஓசையெழுப்புகின்றன.


Thinnai: “ஒரு நாள் உணவை… – ரெ.கார்த்திகேசு”

குழந்தைகளை கம்பேர் செய்யக்கூடாது; சுஜாதாவையும் சுரதாவையும் ஒப்புமையாக்கி தராசு எல்லாம் கூடாது என்று எண்ணுபவன் நான். இருந்தாலும், முந்தைய கதையில் முழுநீள வாழ்க்கையே விவரித்திருக்க, இங்கு சம்பவம் விரிகிறது.

விவரணப்படம் போல் ஆகிவிடும் அபாயம் இருந்தாலும், அவ்வாறு போரடிக்காத சஸ்பென்ஸ் நோக்கிய விறுவிறுப்பு. மணமான இல்லறத்தில் நிகழ்வதை படம் பிடித்து ஓடவிடும் லாவகம்.

நான் என்ன நினைக்கிறேன் எனக் கேட்டுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 10-15 நிமிடம் பேசுவார்கள். சிலர் நம் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே பேசுவதால் அகலவும் முடிவதில்லை.

போன்ற களையான பிரதேசங்கள்.

தவறவிடக்கூடாத ஆக்கம்.


அ.முத்துலிங்கம் எழுதி விரைவில் வெளிவரப்போகும் சுயசரிதைத் தன்மையான நாவலின் ஓர் அத்தியாயம்தான் மேலே தந்திருப்பது.

என்று பீடிகையுடன் முடிகிறது: Thinnai – யுவராசா பட்டம் – அ.முத்துலிங்கம்

விமர்சிக்கலாம் என்று படிக்க ஆரம்பிக்கும் ஆணவம், தொலைந்து போக வைக்கும் சாமர்த்தியம். ‘நிஜம்தானோ!’ என்னும் பிரமிப்பு. ‘அச்சச்ச்சோ’ என்று தொடரும் பரிதவிப்புடன் பதற வைத்து எழுத்துக்குள் மூழ்க வைக்கிறார்.


நுனிப்புல்: ஐந்தும் ஆறும் – புனைவு என்பது உணர்ச்சிகளை சித்தரிப்பது; கேள்விகளை எழுப்புவது.

‘நந்தா’ திரைப்படத்தில் பல காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், அந்த துவக்க காட்சியில் நடக்கும் பிரதோஷ உபன்யாசம் மறக்க முடியாதது. எள்ளல்தன்மையுடன் தொடரும் திரைக்கதையில் வீட்டில் நடப்பதைக் காட்டி லெக்சர் மகிமையை சிந்திக்கவைப்பார்கள். திருக்குறள் என்னதான் கலக்கலாக இருந்தாலும், அதைப் போல் போதனை இலக்கியம் எனக்கு அசூயையே தருகிறது.

ஒரு வேளை.. ‘பெண்ணெழுத்தின் நாடித்துடிப்பு பெண்ணிற்குத்தான் புரியும்’ என்னும் மங்கையர் மலர் கால ஃபீலிங்குடன் மனைவியிடம் கொடுக்க, அவரோ லாஜிக்கலாக கேள்விகளை எழுப்பும் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டார். ‘எலக்கியம்னா அனுபவிக்கனும்; நோ க்வெஸ்டின்ஸ்’ என்று மகளுக்கு ஈசாப் நீதிக்கதைகளை வாசிப்பதுடன் அனுபவம் முடிந்தது.

Writer Sujatha

Thiruppur Krishnan:

“வேண்டாம் வரதட்சிணை” என்ற ஈற்றடிக்குத்தான் நேரிசை வெண்பா எழுதி அனுப்பியிருந்தார் அந்தப் பிரபல எழுத்தாளர். அவரது இலக்கியப் புலமை பற்றி அறிவேன். அவரின் இலக்கணப் புலமையை அப்போதுதான் அறிந்து கொண்டேன். பின்னாளில் அம்பலம் இணைய இதழில் அவரிடமே பயிற்சி பெறும் வாய்ப்பும் பெற்றேன். அவர் – என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா. அவர் எழுதிய வெண்பா:

பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி – மத்தபடி
‘பாண்டு’வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!


InterviewsTFM Page Magazine – Screen-Turners: Chap 3.1 – Something about Sujatha (Naaz)

தீராநதி – குமுதம்.காம்: “சுஜாதா நேர்காணல்”

Miscellany:

அவருக்கு பிடித்த 10 படங்கள் « Snap Judgment

கல்கி வளர்த்த சிரிப்பலைகள் « Appusami.com

site:www.thinnai.com சுஜாதா – Google Search

Excerpts from his Works:
சுஜாதா « Snap Judgment: என் இனிய இயந்திரா

கண்ணம்மா: சுஜாதாவின் சிறு சிறுகதைகள்: (Six Word Stories)

Sujatha Turns 70 – Katrathum Petrathum: Anandha Vikadan « Tamil Archives

Experiences:

அறுபது அமெரிக்க நாட்கள் (17) « தமிழன் எக்ஸ்பிரஸ் :: டிசம்பர் 25-31, 1996

Bloggers with Sujatha

கில்லி – Gilli » Blog Archive » Meeting writer Sujatha

தேசிகன் பக்கம்: “எழுபத்தொன்று – சுஜாதா”

தேசிகன் பக்கம்: “ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா”

ஒரு அரட்டையும் ஒரு பதிவும் « Snap Judgment

Family & Life:

பிச்சைப்பாத்திரம்: எழுத்தாளர் (திருமதி & திரு) சுஜாதாவின் நேர்காணல்

Movie Reviews:

தேசிகன் பக்கம்: வேட்டையாடு விளையாடு விழா பற்றி சுஜாதா

Controversy, Issues, Critiques:

கில்லி – Gilli » Blog Archive » Sujatha’s Short Story & Bloggers’ Reaction

பெருசுகளின் பெருங்காப்பியங்கள: புறநானூறு : சுஜாதாவின் பிழைகள்

கில்லி – Gilli » Blog Archive » Azhagiya Periyavan, Sujatha & Dalit Ilakkiyam

Book reviews:

PK Sivakumar – கற்றதும் பெற்றதும் – வாசக அனுபவம்

Thinnai: “மனம் என்னும் பறவை (எனக்குப் பிடித்த கதைகள் – 40-சுஜாதாவின் ‘முரண் ‘) – பாவண்ணன்”

Thinnai – ஜெயமோகன்: “தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா: உயிர்மை பதிப்பகம்”

Thinnai: “சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் – ஜெயமோகன்”

Homepages:

:: WriterSujatha.com:: Home Page

:: Ambalam :: Tamil Ezine

Sujatha – Wikipedia, the free encyclopedia

சுஜாதா (எழுத்தாளர்) – தமிழ் விக்கி


கணிப்பொறி “கேண்டீன்” இரண்டிலும் அடிக்கடி ஒரேபிரச்சனைதான். சர்வர் ப்ராப்ளம்.
-சுஜாதா, அம்பலம்இந்தியா டுடே 30-8-2000 :: சுஜாதா பதில்கள்

கேள்வி: ‘கவிதைகளைத் திருடி எழுதினார் கண்ணதாசன்’ என்று ஒரு கவிஞர் கூறியுள்ளாரே?

பதில்: மணிமேகலையில் திருக்குறள் வருகிறது. ஆழ்வார் பாடல்களிலும் வருகிறது. மற்ற இலக்கியங்களில் வரும் வரிகளைப் பின்வரும் இலக்கியக்கர்தாக்கள் பயன்படுத்துவது இயல்பானதே. ஷேக்ஸ்பியர் தட்டின வரலாறுகளும் வரிகளும் எண்ணற்றவை. ஷேக்ஸ்பியரிடமிருந்து தட்டினதும் அவ்வண்ணமே. இத்தகைய குற்றச்சாட்டுகள் நிற்காது. சாதனைகள் தான் நிற்கும்.


ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா
ஆர். விஜி, அரகண்டநல்லூர்

இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்..?

பெட்ரோலும், கூட்டுக் குடும்பங்களும், கல்யாணமும், பிள்ளைப் பேறும், தாய்ப்பாசமும், விமான, பஸ் பயணமும், செலுலாய்டு சினிமாவும், டெலிபோனும் பெரும்பாலான வியாதிகளும், கடவுள் பக்தியும், கதை, கவிதைகளும், ரூபாய் நோட்டும் என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது அழிந்து போக. தற்கொலை மட்டும் பாக்கியிருக்கும்.

த. சத்தியநாராயணன், அயன்புரம்.
உலகின் முதல் டெர்ரரிஸ்ட் யார்?

சதாம் என்கிறது அமெரிக்கா. ஒஸாமா என்றும் சொல்லி வந்தார்கள். ‘அமெரிக்காதான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட்’ என்கிறார் நொவம் சாம்ஸ்கி. மகாபாரதத்தில் துரியோதனன் மகன் ஒருவன் டெர்ரரிஸ்ட்டாக இருந்திருக்கிறான். இந்திரன்தான் உலகின் முதல் டெர்ரரிஸ்ட் என்று இந்து புராணங்களை ஆராய்ச்சி செய்த ஒருவர் எழுதியிருக்கிறார். முதல் டெர்ரரிஸ்ட் சரித்திரத்தில் முதன் முதல் ஒடுக்கப்பட்ட குழுவினரில்தான் பிறந்திருக்க வேண்டும்.


வாக் போகையிலே… – மெரீனா ”என்ன சார், ஈவினிங் வாக்கா?””ஆமா..”

”ஏன், இப்பல்லாம் நீங்க ஒண்ணுமே எழுதறதில்லே?”

”நிறைய எழுதியாச்சே..”

”நிறைய பேசியாச்சேன்னு, யாராவது பேசாம இருக்காங்களா?” உதிர்த்த பொன்மொழியை அவரே ரசித்துக்கொண்டார்!

”எப்பவாவது எழுதக் கூடாதா?”

”எதை எழுதுவது?”

”எதையாவது…”

”எதையாவது எழுதினா யாரு போடுவாங்க..?”

”யாராவது..”

”யாரு படிப்பாங்க?”

”படிக்கிறவங்க படிச்சுட்டுப் போறாங்க…”

”நீங்க படிப்பீங்களா?”

”ஐயையோ! என்னை நம்பி எழுதாதீங்க… எனக்கு எதைப் படிக்கவும் நேரமில்லே.. போறபோக்குலே பத்திரிகை போஸ்டர்களைப் படிக்கிறதோட சரி..” புறப்பட்டேன்.

”சும்மா இருக்காதீங்க.. என்னை மாதிரி தினம் டைரியாவது எழுதுங்க. எழுதற பழக்கம் விட்டுப் போயிடக்கூடாது!”

கருத்துப் படமும் கமல் பாட்டும்

தொடர்புள்ள தினமணி தலையங்கம்: Sri Lankan Navy plants mines along marine border with India: Defence system in Palk straits « என்ன கொடுமை இது!

Host unlimited photos at slide.com for FREE!

அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் உருகியதே
ஆடை உருகியதே
நீரும் சூடு ஏற

வழி ஒண்ணும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…

தேகம் மறந்துடிச்சே நீச்சல் மறந்திடுச்சே கூச்சம் ஆகி போச்சே
வழி ஒண்ணும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி
குளிர்வது எனக்கடி ஏனடி…

முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு
அய்யோ முன்னூறும் தாங்காது தந்தாலும் தகராறு
இவள் வசம் புது ரசம்… இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி

ஓ… புதுரசம் அழைக்குது பழரசம் கொதிக்குது பாரடி
நானிங்கு நானில்லை நீ இன்றோ ஆளில்லை…
ஆடை காண வில்லை

ஆணுக்கு ஆவேசம்… வந்தாலே சந்தோசம்
உன்பாடு உல்லாசம் எம்பாடு படு மோசம்
வெயிலுக்கு நிழல்கொடு… வெயிலுக்கு நிழல் கொடு
மயிலுக்கு உடை கொடு மாமனே

அய்யய்யோ…
இருக்குற வேட்டிய கொடுத்துட்டு தவிப்பது பாவமே
பஞ்சாங்கம் பாக்காதே என் அங்கம் தாங்காதே…
நீரில் ஈரம் இல்லை!

Thuglaq Thai Puthaandu - Tamil New Years Day: DMK, Kalainjar Karunanidhi

ஆயுதம் – மனோஜ்: சிறுகதை குறித்த எண்ணங்கள்

டைம்ஸ் ஆப் இந்தியாவின் இலக்கியச் சிறப்பிதழான “இன்று” தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதையைப் படிக்க மணிகண்டன் பதிவுக்கு செல்லவும்.

படித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணங்கள்:

1. கதை நன்றாக இருக்கிறது. நெடுநாள் தாக்கம் எல்லாம் எதுவும் கிடைக்கிற மாதிரி இம்பாக்ட் இல்லாத ஆக்கம்.

2. ட்ராஃபிக் திரைப்படம் போன்ற சிதறலான சம்பவங்களைக் கோர்க்கும் கதை என்று படிக்க ஆரம்பித்தவுடன் தோன்றியது. ஆனால், நிகழ்வுகளில் இருக்கும் ஒற்றுமைகளை, போதனையாக சொல்லிச் செல்கிறது.

3. செர்பியா, ஆப்பிரிக்கா செய்திகளைக் கட்டுரை வடிவில் தரும்போது கூட வாசகனுக்கு உந்துதல் தந்து மேற்சென்று ஏதாவது செய்யத் துடிக்க வைக்க முடியும். இந்தக் கதையில் அதெல்லாம் மிஸ்ஸிங். (படிக்க: Before the War: “Remembering an everyday life in Bosnia: November / December 2007 by Courtney Angela Brkic, from Dissent”).

4.

இரைந்தே கேட்டான். ‘ஹேவ் யு எவர் ஃபக்ட்..’. பிறகு இன்னும் குனிந்து, கை குவித்து சைகையோடு கேட்டான். “இதுவரைக்கும் யாரையாச்சும் பண்ணியிருக்கியா….”.

ஆங்கிலத்தில் எழுதும்போது தெள்ளத்தெளிவாக விழுகிற வார்த்தைகள், தமிழில் வரும்போது சைவமாக மாறுகிறது. இந்த இடம் தவிர பிற இடங்களில் மொழிபெயர்த்தே தரும் மனோஜ், இங்கு மட்டும் ஆங்கிலத்திற்கு தாவுகிறார். செர்பியாவில் ஆங்கிலம் பேசமாட்டார்கள் போன்ற இடறல்களை விக்கிப்பிடியாவில் தேடினாலே தவிர்த்திருக்கலாம்.

5. கற்பனைக்கதை எழுதும் கலையின் நோக்கம் பொழுதுபோக்கி மகிழ்ச்சியளிப்பது, செய்தியை மனதில் நிறுத்துவது, மாற்று கண்ணோட்டங்களை ஊடாட விடுவது, உணர்ச்சிகளைப் பகிர்வது என்றால் படித்தால் போரடிக்காத வகையில் செய்தி ஆசிரியரின் குற்றவுணர்வை முன்வைக்கும் சிம்பிளான மதிப்பீடுகள் ஜட்ஜ்மென்ட்டாக முடிவது வாசகனுக்கு சோகமான அனுபவம்.

Bheema – Audio Lyrics

Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!
Host unlimited photos at slide.com for FREE!