Tag Archives: இனம்

ஜாதி: தேவையா? வேண்டாமா?

சில பதிவுகள்:

1. jeyamohan.in » Blog Archive » சாதி பேசலாமா?

2. jeyamohan.in » Blog Archive » சாதியுடன் புழங்குதல்…

3. jeyamohan.in » Blog Archive » சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

4. திணை இசை சமிக்ஞை: நவீன சமூகமும் இரட்டைநிலையும் – தமிழவன்

சாதி ஏன் வேண்டும்?

  1. தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு
  2. மக்கள் தொகை கணக்கெடுப்பில் வாக்கு வங்கி எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்வதற்கு
  3. சம்பளம், வேலை போன்ற குறியீடுகளைக் கொண்டு முன்னேறிய வர்க்கங்களை அடையாளம் காட்டுவதற்கு
  4. தொன்றுதொட்டு வரும் இனக் குறியீடுகளையும், குலவழக்கங்களையும் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு
  5. முன்னேறிய நாடான அமெரிக்காவிலேயே வெள்ளை நிறத்தல்லாதவர் மீதம் அண்டை நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரும் ஒடுக்கப்படும் நிலை; இங்கே இப்ப என்ன அவசரம்?
  6. வத்தக்குழம்பு, குழிப்பணியாரம் என்று உணவு ஸ்பெஷாலிடிகளுக்கு சரவண பவன்கள் மட்டும் என்று மாறாதிருப்பதற்கு
  7. ஐஐடி, என்.ஆர்.ஐ., ஆட்டோ ஓட்டுநர் என்று பிரிவுகள் மாறலாம்; சகோதரப் பற்று சாகாது
  8. சாதியை எல்லாம் எப்பொழுதும் ஒழிக்க முடியாது என்று சொல்வதற்கு

ஜாதி ஏன் தேவையில்லை?

  1. சமூகம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தப்பட வேண்டும் என்பதால்
  2. இன்றைய நாகரிக உலகு பொருளுடையார், இல்லார் என இரண்டே பிரிவினர் கொண்டதால்
  3. பார்ப்பான், பள்ளன், கள்ளன், செட்டி என்று எல்லாமே வசைச் சொல்லாகிப் போனதால்
  4. மண்டல் போல் அரசியல் கலவரம் ரசிக்காததால்
  5. லாலு, மாயாவதி, முலாயம் என விகித்தாசார லஞ்ச ஒதுக்கீடு மேல் கொண்ட வெறுப்பினால்
  6. அப்படியே விளிம்பு வர்ணம் பார்த்து கட்சி அமைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முதல் விடுதலை சிறுத்தைகள் வரை அனைவரும் இந்துத்துவா முதல் தீவிரவாதம் வரை அனைத்து ஒதுக்கப்பட வேண்டியோருக்கும் ஆதரவு நல்குவதால்
  7. க்ளாசிஃபைட் விளம்பரங்களில் கோத்திரம் பார்க்காததால் கொலை செய்யும் மணமுடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டுவதால்
  8. பிரிவினையை விரும்பாததால்

“A caste-ridden society is not properly secular. When a person’s beliefs become petrified in caste divisions, they affect the social structure of the state and prevent us from realising the idea of equality which we claim to place before all else.” – Jawaharlal Nehru

தமிழர்களுக்கு பிடிக்காத வார்த்தை? – மன்னிப்பு; பிடித்த வார்த்தை?

பாஸ்டன் பக்கம் பெனின் நாட்டு ராஜா வந்திருந்தார். வழக்கமான அரசுமுறை சந்திப்பு, கொடை ஒதுக்கீடு, இன்பச் சுற்றுலா எல்லாம் முடிந்தவுடன் இன்னொரு காரியம் செய்தார்.

அடிமைத் தொழிலில் ஈடுபட்ட தங்கள் முன்னோர்களுக்காக இந்தத் தலைமுறையினரிடம் ‘மன்னிப்பு’ கோரினார்.

சொகுசாக வந்தோமா…
கேடிலாக் பவனி கொண்டோமா…
என்று விமானம் ஏறி ஊர் போகாமல், ஊடகத்திற்காக காட்சி பொம்மையாக்காமல், உளமார்ந்த வருத்தங்களை நேரில் தெரிவித்திருக்கிறார்.

இந்த மாதிரி தமிழ்நாடு/இந்தியாவில் தாங்கள் செய்த தவறுகளுக்காக மேட்டுக்குடியினரின் பிரதிநிதிகளான சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் (இன்ன பிறர்?) தார்மீகப் பொறுப்பேற்று கிஞ்சித்தாவது சஞ்சலப்பட்டிருக்கிறார்களா?

செய்தி:

1. King of Benin to Visit UMass Boston – Arts: “His Majesty is also expected to make a historic public apology for the role played by the dynastic kings of Dahomey in the trans-Atlantic slave trade.”

2. Call from a king – The Boston Globe: “While King Kpoto-Zounme Hakpon III said homelessness and poverty are problems among the people in his West African country of 8 million, the main reason for his visit was to apologize for his ancestor’s role in the trans-Atlantic slave trade.”


அதிகாரபூர்வமாக, சுதந்திரமான இஸ்ரேல் பிறந்து அறுபது ஆண்டுகள் நிறைந்திருக்கிறது. அதற்கான கொண்டாட்டங்களுக்கு யூதர்களைக் கொன்று குவித்த முன்னாள் கொடுங்கோலனான ஜெர்மனி நாட்டு அதிபர் அழைக்கப்பட்டார்.

தன்னுடைய பெற்றோர் காலத்தில் செய்த குற்றத்திற்காக இன்னாள் தலைவர் மெர்க்கெல் மன்னிப்பு கோருகிறார்.

செய்தி:

1. Merkel: Germany will always stand with Israel: “The visit by the German chancellor and at least half of her cabinet to Israel was meant to mark the 60th anniversary of the Jewish state, which was born out of the ashes of World War II and the murder of 6 million Jews by the Nazis.

In a first-ever address by a German chancellor to the Israeli parliament, Ms. Merkel, “The Shoah fills us Germans with shame,” she continued, using the Hebrew word for the Holocaust. “I bow to the victims. I bow to all those who helped the survivors.””

2. Merkel: Germans ‘filled with shame’ over Holocaust – USATODAY.com


இன்றைய செய்தி: Muslim Killed For Marrying Hindu

இஸ்லாம் மதத்திற்கு இன்னொரு எண்ணிக்கை கூட்டும் விதமாகத்தான் அவர் செயல்பட்டிருக்கிறார். பிறக்கும் மக்களும் முஸ்லீமாகவே இருப்பார்கள். மனைவியும் மதம் மாறி விட்டார்.

சாதாரணமாக, இன்னொரு மதத்தை சேர்ந்த பெண் மதம் மாறி மணம் புரிந்தால்தான் வெகுண்டு எழுவார்கள். அதாவது, ஹிந்துப் பெண், கிறித்துப் பையனை கரம் பிடித்தால், இந்துக்களுக்கு ரத்தவெறி பிடிக்கும்.

இங்கு இரு சாராரிடம் இருந்து ‘மன்னிப்பு’ லேது.

1. PUCL : Message: “Mohammad Hanif Shah, 28, who had incurred the wrath of several people two years ago for marrying Hema Bhatnagar, a Hindu who took on the name Heena after marriage and converted to Islam, was shot dead near his residence at Mansore in Madhya Pradesh.”

2. » Muslim man killed for marrying a Hindu girl


தொடர்பில்லாத தசாவதாரம்: Kamal & Dasavatharam Issues – Shaivism, Vaishnavism, Hinduism, Religion, Tamil Cinema, History, Kings


கேள்வி நேரம்:

1. இராக்கிடம் அமெரிக்கா எப்பொழுது மன்னிப்பு கோரும்?

2. மனுநீதி பின்பற்றியவர்கள், தாழ்த்தப்பட்டவருக்கு இன்ன வேலை என்று அனுஷ்டிப்பவர்களிடம் இருந்து அபிஷியலாக உரிமை துறப்பு கோரினால், பாரதிய ஜனதாவிற்கு லாபமா?

3. முன்னாளில் (அதாவது ஏழாம் நூற்றாண்டு வரை) சுபிட்சமாக இருந்த சமணர்களிடமும் பௌத்தர்களிடமும் சைவ/வைணவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமா, அல்லது தமிழீழத்தில் செய்வதோடு பேலனஸ் ஆகி கூட்டிக் கழித்து விட வேண்டுமா?

4. அன்று நாஜிகள் வதைத்ததற்காக வருந்தும் மெர்கல், இன்று இரான் மீது பொருளாதார நெருக்கடி கொண்டர்ந்து, வருத்தி, பிராயசித்தம் தேடி — நாளைய தலைமுறை ஜெர்மனி ராஜாக்கள் மன்னிப்பு கேட்க வழிகோலுகிறாரா?

தானம் – இனம் – குழு – சார்பு

“It’s really unfair to expect people to choose. It’s like asking to be loyal to one parent or the other.”
SHAFIA ZALOOM, who is Asian and white, on being asked to pick a racial identity

வாசிக்க: Who Are We? New Dialogue on Mixed Race – New York Times


Race and the Social Contract – New York Times: “Europeans support a big welfare state because they believe the money will probably go to other white Europeans. In America, support for social spending among respondents to General Social Survey polls increased in tandem with the share of welfare recipients in the area who were in their own racial group…. all-white congregations become less charitably active as the share of black residents in the local community grows.”

சுட்ட மொழி – இகாரஸ் பிரகாஷ் on சுஜாதா

சுஜாதா மீது விமர்சனம் வைக்ககூடாது என்பதில்லை. அவருடைய தனிமனித பலவீனங்கள் சார்புகள் அவருடைய எழுத்தில் பிரதிபலித்தது என்பது உண்மைதான். சுற்றி இருக்கிறவர்கள் ரத்தம் சிந்திக்கொண்டிருந்த போது, அவர் தன் மூட்டு வலியைப் பற்றி லட்சக்கணக்கான வாசகர்களிடம் பிரஸ்தாபம் செய்து கொண்டிருந்தார் என்பது உண்மைதான். ஆனால், அந்த பலவீனங்கள் அவருடைய சில பல அச்சீவ்மெண்ட்டுகளை நிராகரிக்கக் கூடிய அளவுக்கு முக்கியமான காரணியாக இருந்ததா என்பது, ஆராயச்சிக்குரிய விஷயம்.
ஐகாரஸ் பிரகாஷ்

Malaysia, Affirmative Action, Ethnicity, Religion & Election Results

பிபிசி செய்தி: பினாங் மாநிலத்தில் இந்திய இனத்தவருக்கு சாதகமான முடிவு

மலேசியா வாழ் இந்திய இனத்தவர்களை விட மலாய் இனத்தவர்களுக்கு, பெருஞ்சலுகைகள் வழங்கும் மத்திய அரசின் சர்ச்சைக்குரிய கொள்கைகளை தாங்கள் இனி மேலும் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று மலேசியாவின் பினாங் மாநிலம் அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் பிரதமர் அப்துல்லாஹ் படாவிக்கும், அவரது ஆளும் கூட்டணிக்கும், பலத்த இழப்புகளை ஏற்படுத்திய எதிர்க்கட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ள 4 மாநிலங்களில், பினாங்கும் ஒன்று.

வேலை வாய்ப்புகளிலும், கல்வியிலும், மலாய் இனத்தவருக்கு சாதகமான கொள்கைகளை மலேசியா கடந்த 40 வருடங்களாக கடைப்பிடித்து வருகிறது. மலேசியா இனப்பாகுபாட்டைக் கடைப்பிடிப்பதாக மலேசியா வாழ் இந்திய வம்சாவளியினர் கண்டித்திருக்கிறார்கள்.


கொஞ்சமாய் பேக்கிரவுண்ட், நடப்புகள், அலசல்:

1. இங்கே ஆரம்பிக்கவும்: TBCD பார்வை : ‘மலேசிய விவகாரமும், தமிழர்களின் பலவீனமும் !’- உன்மை என்ன…?: பின்னூட்டத்தில் எழுந்த கேள்விகளுக்கு விடையும் கிடைக்கும்:

மலேசிய அரசு சிறுபான்மைகளுக்கான உரிமை சட்டத்தை அமல் படுத்துகிறதா? தமிழர்களைவிட அதிகமாக உள்ள சீனர்கள் நிலை என்ன? மலேசிய அரசு தன்னனை இஸ்லாமியக் குடியரசாக அறிவித்துக் கொண்டு உள்ளதா?

2. அடுத்ததாக: மலேசிய தமிழர்கள் மலேசிய அரசிடம் வைத்த கோரிக்கைகள் என்ன..?

3. மேலும் மேலும் பின்னணி: THe WoRLD oF .:: MyFriend: “மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும்”


இனி சில தமிழ்ப்பதிவுகள்:

1. இந்தியர்களின் குரலை நசுக்கியவர் சாமிவேலு – மகாதீர் – மறுமொழியில்: “சாமிவேலு இந்தளவிற்கு வளர்வதற்கும் நம் சமூகத்தை நாசம் செய்வதற்கும் துணை நின்றவர்களில் மகாதிரும் ஒருவர். இன்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்! ஏன், 90களில் சீன அமைச்சர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஆறாக உயர்ந்த போது கூட இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கையை இரண்டாகவோ மூன்றாகவோ அதிகரிக்கவில்லை?”

2. ஜடாயு ஐயா கக்கும் விசவாயுமறுமொழியில்: “மனோகரனுக்கு முஸ்லீம் மலாய் மக்களே பெருமளவு ஆதரவு காட்டியிருப்பதாக பார்வையாளர்கள் கணிக்கிறார்கள். தேர்தல் முடிவுகளில்,தமிழர்கள் ஸ்விங் ஆன காரணங்களில் முக்கியமான ஒன்று கோவில்கள் இடிப்பும்,இந்தியர்கள் ஒதுக்கப்பட்டதும்.”

3. இந்தியர்களுக்கு அனைத்து நிலைகளிலும் பிரதிநிதித்துவம் வேண்டும் – 128 அரசு சார்பற்ற இந்திய அமைப்புகளின் கோரிக்கைமறுமொழியில்

  • இஸா சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்பட்டோரை உடனே விடுவிக்க ஆவன செய்யுங்கள்.
  • இஸா சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுடன் போராடுங்கள்.
  • மாநில ஆட்சி மன்றத்தில் அனைத்து இனங்களுக்கும் சமவாய்ப்பைக் கொடுங்கள்.
  • மக்களின் குறைகளை செவி கொடுத்துக் கேளுங்கள். தீர்வு காணுங்கள்.
  • 1957-க்குப் பின்னர் பிறந்த அனைவரும் பூமிபுத்ரா அந்தஸ்தைப் பெறச்செய்யுங்கள்.
  • நாட்டு வளம் அனவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
  • இனப்பாகுபாட்டை ஒழியுங்கள். இன ஏளனம் செய்வதை தடுக்க ஆவன செய்யுங்கள்.
  • விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள், முடிந்தால் விலை குறைப்பை அமல்படுத்துங்கள்.
  • நாட்டு வளம் விரயமாக்கப்படுவதை கட்டுப்படுத்துங்கள்.
  • மாநில அரசின் கடுப்பாட்டில் உள்ள “டோல்” நிலையங்களை மூடுங்கள்.

4. டிபிசிடி: மலேசியத்தமிழர்களின் மக்கள் சக்தி உணர்ச்சியும், மலேசியத் தேர்தலும்: “மலேசியாவில் கடந்த 50 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில், பரிசான நேசுனல் என்ற (Barisan Nasional – BN, the National Front) தேதிய முன்னணிக் கூட்டணியே ஆண்டு வந்திருக்கிறது. கிளாந்தான் என்னும் மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களிலும், இந்தக் கூட்டணியே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.

அன்வர் இப்ராகிம் தலைமையில் கெடிலான் (Parti Keadilan Rakyat – PKR, People’s Justice Party) என்ற கட்சி இம்முறை பரிசான் நேசனலின் ஆதிக்கத்தை அசைக்கும் நோக்கோடு, மற்றைய எதிர்க் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இருமுனை களமாக மாற்ற முயன்று வருகின்றனர்.”

5. டிபிசிடி: மலேசியத் தமிழர்கள் தடுத்து நிறுத்திய ஒரு தேசிய முன்னனியின் ரோல்லர் கோஸ்ட்டர்: “இந்தத் தேர்தலில், பெரும்பான்மை பெறாவிட்டால், மலேசியாவின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் பங்கம் வருமென்று பிராச்சாரம் செய்து வந்தது தேசிய முன்னணி. அரசாங்க இயந்திரம் தேர்தல் வேலைகளுக்கு முடுக்கி விடப்பட்டியிருந்தது. தொகுதிகள் வெற்றி வாய்ப்புக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது.

“ஓம் சக்தி” என்ற ம.இ.க வின் தேர்தல் மந்திரத்திற்கு எதிர்ப்பாக “மக்கள் சக்தி” என்று முழங்கிய தமிழர்கள், தங்களது எதிர்ப்பை சனநாயக முறைப்படி காட்டியிருக்கிறார்கள்.”


6. மலேசிய நிலவரம் ஒரு கருப்பு பார்வை: “ஏப்ரலுக்கு மேல் கெ-அடிலான் கட்சியின் ஆலோசகரும் முன்னைய துணைப் பிரதமருமான அன்வர் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் அவசரம் அவசரமாக இந்த தேர்தலை நடத்துகிறது மலேசிய அரசு.

கல்வி, வேலை வாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்(பூமி புத்ரா) என்ற பெயரில் மலாய்க் காரர்களுக்குத்தான் முன்னுரிமை. காவல், ராணுவம், அரசாங்க நிறுவனங்கள், குடிநுழைவுத்துறை, மின்சாரம், வங்கி என அத்தனை அரசு வேலைகளும் மலாய்க்காரர்களுக்குத்தான். சீனர்கள் அரசையோ அரசு வேலையையோ நம்புவது இல்லை. கையில் வைத்திருக்கும் காசினைக் கொண்டு சொந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். தமிழர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர் வேலையைத்தான் நம்பி இருக்கின்றனர்.

பாரிசன் தேசியக் கூட்டணிக்குக் கடும் போட்டியாக எதிர்க்கட்சித் தரப்பில் ஜனநாயக நடவடிக்கைக் கட்சி (National Justice Party – PKR), பார்டி இஸ்லாம் மலேசியா (Parti Islam se-Malaysia, or PAS), பார்ட்டி கெ-அடிலான் ரக்யத், Chinese Democratic Action Party (DAP) ஆகிய கட்சிகள் உள்ளன.

ஆளும் கூட்டணிக்கு ஐக்கிய மலாய் தேசிய இயக்கம் (United Malays National Organization), மலேசிய சீன சங்கம் (Chinese Gerakan party), மலேசிய இந்திய காங்கிரஸ் (Malaysian Indian Congress) ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த மூன்று முக்கிய கட்சிகளின் ஆதரவுடன்தான் மலேசியா சுதந்திரம் பெற்றது முதல் பாரிசன் தேசியக் கூட்டணி ஆட்சி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகள் உதயக்குமார், கங்காதரன், வழக்கறிஞர் மனோகரன், வசந்தகுமார் மற்றும் கணபதி ராவ் ஆகியோர் வெளியே வர முடியாத படிக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மலேசிய தொலைக்காட்சி நடிகை சுஜாதா கொலைக்கு, மஇக தலைவர் சாமிவேலுவின் மகன் வேல்பாரியே காரணம் என்று பலரும் நம்புகின்றனர். தவிர மைக்கா ஹோல்டிங்சில் பணம் போட்ட இந்தியர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் வாயில் வெண்ணெயை தடவி விட்டார் சாமிவேலு.

நன்றி: விடாது கருப்பு


7. மலேசியாவில் மத சுதந்திரம்: Religion in Malaysia | Lina Joy’s despair | Economist.com: A legal blow to religious freedom

8. இஸ்லாமிய ஷரியத் சட்டமா? ஜனநாயகமா? BBC NEWS | Asia-Pacific | Malaysian voters wooed with Islam: “Voting and religion – Islamic credentials play a major role in the election campaign”

9. இட ஒதுக்கீடு கொள்கை ஏன் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடாது? Pro-Malay Malaise – WSJ.com: Affirmative action policies are holding the country back.


செய்திகள்:

1. Malaysia’s Maturing Democracy – WSJ.com: Even Malays reject the status quo and vote for change.

2. Malaysia’s Governing Coalition Suffers a Setback – New York Times

3. Malaysia Opposition Takes Aim At Affirmative Action – New York Times

4. மலேஷியத் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை மீண்டும் கைப்பற்றினாலும் தேசிய முன்னணிக்கு பின்னடைவு

5. மலேசியாவில் மீண்டும் தமிழர்கள் போராட்டம்

6. மலேசியாவில் இந்திய வம்சாவளி அரசியல்வாதி படுகொலை

7. Facing Malaysia’s Racial Issues – பத்தித் தொகுப்பு


நடுவில் என்னுடைய ரெண்டணா:

  • என்ன நடந்தது? முன்னாடி ஒரேயொரு மாநிலத்தில் மட்டும் ஆளுங்கட்சியாக இருந்த எதிரணியினர், ஒற்றுமையாகப் போராடியதன் விளைவாக ஐந்து மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். பாக்கி எட்டு மாநிலங்களிலும் ஐம்பதாண்டுகளாக ஆண்ட ‘தேசிய முன்னணி’யே மீண்டும் தொடர்கிறது. சென்ற சட்டசபையில் வெறும் பதினெட்டு இடங்களைப் பிடித்திருந்த எதிரணி, பாஜக-வும் விபி சிங்கின் ஜனதா தளமும் கை கோர்த்தது போல் போட்டியிட்டதில் 82 இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். ‘ஜன் மோர்ச்சா’ போட்டியிட்டது போல் மத வாத இந்துத்வா சக்திகளுடன் நேரடியாக சங்காத்தம் வைத்துக் கொள்ளவில்லை; ஆனால், மலேசியாவை இஸ்லாமிய நாடாக்க விழையும் Parti Islam se-Malaysia, or PAS கட்சியுடன் திரைமறை தொகுதி உடன்பாடு உண்டு.
  • ஆளுங்கட்சிக்கு தோல்வியா? அப்படித் தோன்றவில்லை. மீசையில் துளியூண்டு மண் ஒட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தேர்தலிலும் போட்டியிட முடியவில்லை. ஆளுங்கட்சிக்குத்தான் பெரும்பான்மையும் கிடைத்திருக்கிறது. இஸ்லாமிய சட்டத்தை அமலாக்க விரும்பும் எதிர்க்கட்சிக்கும், ஹின்ட்க்ராஃப்க்கும் ஏழாம் பொருத்தம்; அப்படியிருந்தும் தேர்தலுக்காக பல்லைக் கடித்துக் கொண்டு, கழுத்தறுக்காமல் இருந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி கூட்டணியைப் பார்த்தால் சீட்டுக்கட்டு மாளிகை போல் படுகிறது.
  • தேர்தலில் போட்டியிட இயலாமல் செய்யப்பட்ட அன்வர் உத்தமரா? பெயரளவில் சுத்தம் என பொருள்படும் பெர்சி (Bersih) கூட்டமைப்பை உருவாக்கினாலும், ஊழல் குற்றச்சாட்டில் உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார். மஹாதிருக்கு சரியான விகிதாச்சாரம் கொடுக்காத பிரச்சினையா அல்லது நிஜமாகவே தவறு செய்தவரா என்பது தெரியவில்லை. எப்படியாகினும், தன்னுடைய மகள், மனைவி, ஒன்று விட்ட மச்சினன், ரென்டு விட்ட மைத்துனி என்று பினாமியாக நிற்க வைத்து ஜெயிக்க வைக்கவும் தெரிந்த ஐ.எஸ்.ஓ.9000 அரசியல்வாதி.
  • ஏன் திடீர் தேர்தல்? பெட்ரோல் விலை எகிறுவதால், பால் முதல் பாதாம் பருப்பு வரை எல்லாவற்றிலும் விலையேற்றம். தேர்தலுக்கு முந்தாநாள் வரை மானியம் கொடுத்து, எண்ணெய் பீப்பாயை தள்ளுபடியில் வழங்கிய அரசாங்கத்தால், இனியும் தாக்குப்பிடிக்க இயலாத நிலை.
    1. அடுத்த, நிதி நிலை பொக்கீட்டில் (பட்ஜெட்) ஆயில் கொள்முதலுக்கான விலைவாசி அதிகரித்ததால் ‘ஏற்றப்படுகிறது’ என்று அறிவிப்பதற்கு முன் எலெக்சன் முடிந்து விட்டது.
    2. அரசு ஊழியர்களுக்கு கொடுத்த போனசும் (முப்பத்தைந்து சதவீதமாம்!) அவர்கள் மனதில் இன்னும் பசுமையாக நிறைந்திருக்கும்போதே தேர்தல் நடந்தேறி இருக்கிறது.
    3. அமெரிக்கப் பொருளாதாரம் பணவீக்கம் நிறைந்து பணப்புழக்கம் குறைந்து recession ஆக ஓடிக்கொன்டிருக்கிறது. இதனால், மலேசிய நாட்டின் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் விலைவு இனிமேல்தான் தெரிய ஆரம்பிக்கும்; அதற்கு முன் ‘மலேசியா ஒளிர்கிறது’ என்று போர்டு போட்டு தேர்தல்.

Share capital per head of Population in Malaysia

  • சீனர்களுக்குக் கூட இனப்பாகுபாடாமே? மலையாளிகளைப் போல் சாமர்த்தியசாலிகள் எவரும் இல்லை என்பது என்னுடைய பெங்களூர் எண்ணம். அமெரிக்கா வந்தபிறகு தராசுக்கு (பாரிசன் நேசனலுக்கு இதுதான் தேர்தல் சின்னம்) அந்தப் பக்கம் வைக்க சீனர்கள் வந்து சேர்ந்தார்கள். ஆளுங்கட்சியின் ஸ்திரத்தன்மையும் மதவாதத்தை பெருமளவில் ஊக்குவிக்காத நிலையும் மேற்கத்திய கொள்கைகளை பின்பற்றி தாராளவாதத்தை முன்னிறுத்துவதும், செல்வந்தர்களான (read capitalists) சீனர்களின் நெஞ்சை நிறைத்தே இருக்கிறது. மலாய் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை குறைத்தால் நல்லதுதான்; அதற்காக பெரும்பான்மை மக்களுடன் விரோதம் பாராட்டக் கூடாது என்று நாணல் போல் வளைகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்:

1. ஜடாயு எண்ணங்கள்: “மலேசியாவிலிருந்து ஒரு சந்தோஷ செய்தி!”

2. இன்றைய தலையங்கங்கள் – மார்ச் 11

3. My Nose: “கிழட்டு அனுபவங்கள்(10) – மலேசியா ராஜசேகரன்”


மலேசிய வலையகங்கள்:

1. மலேசியா இன்று :: Malaysia Indru

2. “ஓலைச்சுவடி”

3. VanakkamMalaysia.com

4. Malaysia Nanban5. The Star Online

6. The New Straits Times Online

7. hindraf.org | Hindu Rights Action Force; makkal sakthi here, makkal sakthi now!

8. Malaysia Votes (wordpress mirror)


தொடர்புள்ள வலையகங்கள்:

1. Economist.com | Country Briefings: Malaysia

2. Malaysia News – Breaking World Malaysia News – The New York Times