Tag Archives: இசை

Notable Hindi Songs – 2007 – Film Music: Top 13

2008 முடிவதற்கு முன்பாகவே பதிந்து வைக்க முடிகிறது 🙂

எந்த வரிசையிலும் இல்லை; என்றாலும்

  • ‘ஹே கண்பத்’, நோ ஸ்மோக்கிங் போன்றவை அடிக்கடி கேட்கும் பட்டியலில் இருக்கின்றன.
  • சக்தே இந்தியா, சீனி கம், குரு ஏற்கனவே நிறைய தடவை கேட்டிருப்பீர்கள்!
  • வெல்கம் படத்தின் குத்துப் பாடல், சிவாஜியோடு முட்டிய ஜூம் பராபர் ஆகியவை கேட்டிருக்காவிட்டால், பாப் கல்ச்சர் அறிய காது கொடுக்கவும்.
  • ‘ஹம் தோ அய்ஸே ஹை பையா’ பாடல் பால் மணம் மாறா பாலகனாக இருந்தபோது வந்த ‘ஃபிர் பீ தில் ஹை ஹிந்துஸ்தானி’ போல் துள்ளலாக இருக்கிறது; ‘காசிசென்றுவந்தவுடன் பார்த்ததாலோ என்னவோ தனிப் பாசத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
  • படங்களை மொத்தமாக குறிப்பிட வேண்டும் (அல்லது) எந்தப் பாடலை சொல்வது என்னும் குழப்பத்தில் தீம் கோர்வைகளைத் தவிர்த்து, ஒரு படம் ஒருமுறைதான் இடம்பெறுமாறு அமைத்த பட்டியல் இது.
  • தமிழ்ப்படப் பாடல் பட்டியலுக்கு – Tamil Film Songs – Best of 2007 Movie Music « Snap Judgment
  1. சந்தா ரே (நிலாப் பாடல்) – ஏகலவ்யா
    • பாடியவர்: ஹம்ஸிகா ஐயர்
    • இசை: ஷாந்தனு மொய்த்ரா
    • பாடலாசிரியர்: ஸ்வானாந்த் கிர்கிரே
  2. சா ரஹா‘ராம் கோபால் வர்மா’வின் ஆக்
    • பாடியவர்: ஷ்வேதா பண்டிட், வினோத் ரதோட்
    • இசை: அமர் மொஹிலே, டிஜே அமித், கணேஷ் ஹெக்டே, நிதின் ரால்வாக்கர், பிரசன்னா சேகர்
    • பாடலாசிரியர்: ஜெய்தீப் சாஹ்னி
  3. ஹம்தோ அய்ஸே ஹேன் லகா சுனரி மே தாக்
    • இசை: ஷாந்தனு மொய்த்ரா
  4. ஜப் பீ சிகரெட் நோ ஸ்மோகிங்
    • பாடியவர்: அத்னான் சாமி
    • இசை: விஷால் பரத்வாஜ்
    • பாடலாசிரியர்: குல்சார்
  5. மௌலா மேரே லே லே மேரி ஜான் சக் தே இந்தியா
    • பாடியவர்: கிருஷ்ணா, சலிம் மெர்சன்ட்
    • இசை: சலீம் – சுலைமான்
    • பாடலாசிரியர்: ஜெய்தீப் சானி
  6. ஆஜா நாச்லே ஆஜா நாச்லே
    • பாடியவர்: சுனிதி சௌஹான்
    • இசை: சலிம் – சுலய்மான்
    • பாடலாசிரியர்: பியூஷ் மிஷ்ரா
  7. குர்தி மல்மல் திநிஷப்த்
    • பாடியவர்: அனுராதா போட்வால், கைலாஷ் கெர், ஸ்னேகா பந்த், சோனு நிகம், சுதேஷ் போஸ்லே
  8. கண்பத் ஷூட் அவுட் அட் லோகன்ட்வாலா
    • பாடியவர்: அன்ச்சல், மிகா
    • இசை: மிகா
    • பாடலாசிரியர்: மிகா
  9. சீனி கம் சீனி கம்
    • பாடியவர்: ஷ்ரேயா கோஸல்
    • இசை: இளையராஜா
    • பாடலாசிரியர்: சமீர்
  10. ஊன்ச்சா லம்பா வெல்கம்
    • பாடியவர்: ஆனந்த் ராஜ் ஆனந்த் & குழு
    • இசை: ஆனந்த் ராஜ் ஆனந்த்
    • பாடலாசிரியர்: ஆனந்த் ராஜ் ஆனந்த்
  11. மேரி ஜிந்தாரி கன்னா & அய்யர்
    • பாடியவர்: மதுஸ்ரீ, சுக்விந்தர் சிங்
    • இசை: தபுன் சூத்ரதார்
    • பாடலாசிரியர்: ராஜேஷ் ஜோரி
  12. ஜூம் பராபர் ஜூம் ஜூம் பராபர் ஜூம்
    • பாடியவர்: ஷங்கர் மகாதேவன், சுனிதி சவுஹான், ஜூபீன் கர்க்
    • இசை: சங்கர் – எசான் – லாய்
    • பாடலாசிரியர்: குல்சார்
  13. திருமணப் பாடல் காந்தி மை ஃபாதர்
    • பாடியவர்: பலர்
    • இசை: பியூஷ் கனோஜியா

Anjaathey – Bharathi Aathichoodi

அஞ்சாதே பாடல்:

1. அச்சம் தவிர்
62. நையப் புடை
76. மானம் போற்று
96. ரௌத்திரம் பழகு
2. ஆண்மை தவறேல்
43. தாழ்ந்து நடவேல்
30. சூரரைப் போற்று
45. தீயோர்க்கு அஞ்சேல்
…(¶#¶)…

11. ஓய்தல் ஒழி
61. நேர்ப்படப் பேசு
43. தாழ்ந்து நடவேல்
26. சாவதற்கு அஞ்சேல்

14. காலம் அழியேல்
16. கீழோர்க்கு அஞ்சேல்
74. போர்த்தொழில் பழகு
52. தோல்வியில் கலங்கேல்
…(¶#¶)…

69. புதியன விரும்பு
106. வீரியம் பெருக்கு
19. கெடுப்பது சோர்வு
51. தொன்மைக்கு அஞ்சேல்

107. வெடிப்புறப் பேசு
54. நன்று கருது
110.வௌவுதல் நீக்கு
53. தவத்தினை நிதம்புரி
…(¶#¶)…

13. கற்றது ஒழுகு
21. கைத்தொழில் போற்று
32. சேர்க்கை அழியேல்
72. பேய்களுக்கு அஞ்சேல்

38. ஞாயிறு போற்று
75. மந்திரம் வலிமை
36. சௌரியம் தவறேல்
55. நாளெல்லாம் வினை செய்


பாக்கி ஆத்திச்சூடி
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
12. ஔடதம் குறை
15. கிளைபல தாங்கேல்
17. குன்றென நிமிர்ந்து நில்
18. கூடித் தொழில் செய்
20. கேட்டிலும் துணிந்து நில்
22. கொடுமையை எதிர்த்து நில்
23. கோல்கைக் கொண்டு வாழ்
24. கல்வியதை விடேல்
25. சரித்திரத் தேர்ச்சிகொள்
27. சிதையா நெஞ்சு கொள்
28. சீறுவோர்ச் சீறு
29. சுமையினுக்கு இளைத்திடேல்
31. செய்வது துணிந்து செய்
33. சைகையில் பொருளுணர்
34. சொல்வது தெளிந்து சொல்
35. சோதிடந்தனை இகழ்
37. ஞமலிபோல் வாழேல்
39. ஞிமிரென இன்புறு
40. ஞெகிழ்வது அருளின்
41. ஞேயம் காத்தல் செய்
42. தன்மை இழவேல்
44. திருவினை வென்று வாழ்
46. துன்பம் மறந்திடு
47. தூற்றுதல் ஒழி
48. தெய்வம் நீ என்று உணர்
49. தேசத்தைக் காத்தல் செய்
50. தையலை உயர்வு செய்
56. நினைப்பது முடியும்
57. நீதிநூல் பயில்
58. நுனியளவு செல்
59. நூலினைப் பகுந்துணர்
60. நெற்றி சுருக்கிடேல்
63. நொந்தது சாகும்
64. நோற்பது கைவிடேல்
65. பணத்தினை பெருக்கு
66. பாட்டினில் அன்பு செய்
67. பிணத்தினைப் போற்றேல்
68. பீழைக்கு இடம் கொடேல்
70. பூமி இழந்திடேல்
71. பெரிதினும் பெரிது கொள்
73. பொய்ம்மை இகழ்
77. மிடிமையில் அழிந்திடேல்
78. மீளுமாறு உணர்ந்து கொள்
79. முனையிலே முகத்து நில்
80. மூப்பினுக்கு இடங்கொடேல்
81. மெல்லத் தெரிந்து சொல்
82. மேழி போற்று
83. மொய்ம்புறத் தவம் செய்
84. மோனம் போற்று
85. மௌட்டியந்தனைக் கொல்
86. யவனர்போல் முயற்சிகொள்
87. யாவரையும் மதித்து வாழ்
88. யௌவனம் காத்தல் செய்
89. ரஸத்திலே தேர்ச்சி கொள்
90. ராஜஸம் பயில்
91. ரீதி தவறேல்
92. ருசிபல வென்றுணர்
93. ரூபம் செம்மை செய்
94. ரேகையில் கனிகொள்
95. ரோதனம் தவிர்
97. லவம்பல வெள்ளமாம்
98. லாவகம் பயிற்சி செய்
99. லீலை இவ்வுலகு
100. உறுத்தரை இகழ்
101. உலோக நூல் கற்றுணர்
102. லௌகிகம் ஆற்று
103. வருவதை மகிழ்ந்துண்
104. வானநூல் பயிற்சிகொள்ள
105. விதையினைத் தெரிந்திடு
108. வேதம் புதுமை செய்
109. வையத் தலைமைகொள்

நன்றி: Andhimazhai – பாரதியார் ஆத்திச்சூடி

ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள்

ஆணுக்கு மட்டுமே பிடித்த பாடல்கள் என்று ஏதாவது இருக்கிறதா? குத்துப்பாடல்களும் குலுக்கல்களும் பெண்களுக்கும் ரசிக்கிறதா? மெட்டு ரசிக்கப்படுகிறதா? காட்சியாக்கமா? மூன்று மணிக்கு ஃபோன் சிணுங்குவதை நிறுத்துபவர்கள் இருக்கட்டும்; சிற்றஞ்சிறுகாலே மூன்று மணி தாகசந்திக்கு யாரைக் கேட்க விருப்பம்?

ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள்

1. ‘அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க’ – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

2. ‘செவ்வந்தி பூமுடிச்ச சின்னக்கா’ கேட்க விரும்பினால் இன்னும் ரொமான்ஸ் மூடு போகவில்லை என்று அர்த்தம். அல்லது நண்பர் குழாம் தூங்கிப் போனதும் காரணமாக இருக்கலாம். இரண்டையும் சரி செய்தால் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’

3. ‘வஜ்ஜிரம் வவ்வாலு மீனுதானா!’ – செம்பருத்தி

4. ‘போட்டு வைத்த காதல் திட்டம் ஒகே கண்மணி’ – சிங்காரவேலன்

5. ‘கூடையில கருவாடு; கூந்தலிலே பூக்காடு’: ஒரு தலை ராகம்; ஒரிஜினல் டி ஆர் சிச்சுவேசனுக்கு ஏற்ப ‘அட பொன்னான மனசே பூவான மனசே’ என்று உருமாற்றலுக்கும் ஏற்றவர்.

6. ‘எம்மாடி ஆத்தாடீ! உன்ன எனக்கு தரியாடீ?’ – எம்மா எம்மா எம்மம்மாஆ; தற்போதைய காளை ‘குட்டிப் பிசாசே’வும் சரியான ஆம்பிளையின் தேர்வு.

7. ‘தண்ணிதொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’ – சிந்துபைரவி

8. ‘காதல் என்பது பொதுவுடைமை; கஷ்டம் மட்டுந்தானே தனியுடைம’ – பாலைவன ரோஜாக்கள்

9. ‘ஆசை நூறு வகை’ (அசல்): அடுத்த வாரிசு

10. ‘கண்ணத் தொறக்கணும் சாமீ; கையப் புடிக்கணும் சாமீ!’ – முந்தானை முடிச்சு

தொடர்புள்ள பதிவுகளில் சில:

பெண்ணின் ஸ்டீரியோடைப் மனதைத் தொட்டுச் செல்லும் பாடல்களை guess செய்தால்…

1. ‘கவிதைகள் சொல்லவா? உன் பெயர் சொல்லவா? இரண்டுமே ஒன்றுதான்!’ – உள்ளம் கொள்ளை போகுதே

2. ‘தைப்பொங்கலும் வந்தது, பாலும் பொங்குது’ – மகாநதி

3. ‘காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்’ – தம்பிக்கு எந்த ஊரு

4. ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ – மௌன ராகம்

5. ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ – ஆசை

6. ‘வசீகரா’ – மின்னலே

7. ‘பச்சை நிறமே’ – அலைபாயுதே

8. ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்… ஒற்றை நாணயம்’ – ஆனந்தம்

9. ‘மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே’ – ரோஜாக்கூட்டம்

10. ‘குறுக்கு சிறுத்தவளே’ – முதல்வன்

சிறப்பு கொசுறு: ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ – ஆட்டோகிராப்

‘உற்சாகம்’ பாடல் கேட்டிருக்கீங்களா?

கேட்டிருந்தாலும் பரவாயில்லை.

இன்னொரு தடவை கேளுங்க. இந்த ஜீவி பிரகாசுக்கு கிடைக்கிற வாய்ப்புகளுக்கு பத்தில் ஒன்றாவது ரஞ்சித் பரோடுக்கு சென்றுவிட எல்லாம்வல்ல இறைவரைப் பிரார்த்திக்கிறேன்.

அந்தக்கால ரெட்டை அர்த்த பாடல்

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
தித்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத்திக்காய் காய்காய் ஆலங்காய் வெண்ணிலவே
தித்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கேக்காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏழைக்காய்
நீரும்காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
உருவம்காய் ஆனாலும் பருவங்காய் ஆகமோ
என்னை நீ காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

ஏலக்காய் வாசனைபோல் எங்கள் உள்ளம் வாழைக்காய்
யாதிக்காய் கேட்டதுபோல் தனிமை இன்பம் கனியாக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
வெள்ளரிக்காய் பிளந்தால்போல் வெண்ணிலவே நீ சிரித்தாயோ
கோதை என்னைக் காயாதே கோற்றவரங்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

முந்தைய பதிவு: Bale Paandiya – Movie Review

கருத்துப் படமும் கமல் பாட்டும்

தொடர்புள்ள தினமணி தலையங்கம்: Sri Lankan Navy plants mines along marine border with India: Defence system in Palk straits « என்ன கொடுமை இது!

Host unlimited photos at slide.com for FREE!

அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் உருகியதே
ஆடை உருகியதே
நீரும் சூடு ஏற

வழி ஒண்ணும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி…

தேகம் மறந்துடிச்சே நீச்சல் மறந்திடுச்சே கூச்சம் ஆகி போச்சே
வழி ஒண்ணும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி
குளிர்வது எனக்கடி ஏனடி…

முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு
அய்யோ முன்னூறும் தாங்காது தந்தாலும் தகராறு
இவள் வசம் புது ரசம்… இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி

ஓ… புதுரசம் அழைக்குது பழரசம் கொதிக்குது பாரடி
நானிங்கு நானில்லை நீ இன்றோ ஆளில்லை…
ஆடை காண வில்லை

ஆணுக்கு ஆவேசம்… வந்தாலே சந்தோசம்
உன்பாடு உல்லாசம் எம்பாடு படு மோசம்
வெயிலுக்கு நிழல்கொடு… வெயிலுக்கு நிழல் கொடு
மயிலுக்கு உடை கொடு மாமனே

அய்யய்யோ…
இருக்குற வேட்டிய கொடுத்துட்டு தவிப்பது பாவமே
பஞ்சாங்கம் பாக்காதே என் அங்கம் தாங்காதே…
நீரில் ஈரம் இல்லை!

Thuglaq Thai Puthaandu - Tamil New Years Day: DMK, Kalainjar Karunanidhi

சித்திரையில் என்ன வரும்?

தொடர்புடைய தினமணி கட்டுரை: Tamil New Year: Thai Pongal or Chithirai First Day?: “சித்திரையில்தான் புத்தாண்டு – எஸ். ராமச்சந்திரன்”

பெண்
MK Young Youth Chithirai Karunanidhi அப்படியோர் ஆணழகன் என்னை ஆளவந்த பேரழகன்
செப்புக்கல்லு சீரழகன் சின்ன
செம்பவள வாயழகன்
இப்படியோர் தேரழகன் இல்ல
இன்னு சொல்லும் ஊரழகன்
அப்பறம்நான் என்ன சொல்ல
என்னை கட்டிக்கிட்டான் கட்டழகன்

பல்லவி

சித்திரையில் என்ன வரும்?
வெய்யில்
சிந்துவதால் வெக்கவரும்

நித்திரையில் என்ன வரும்?
கெட்ட
சொப்பனங்கள் முட்ட வரும்

கண்ணான கண்ணுக்குள்ளே
காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்?

தேசங்கள் அத்தனையும்
வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்

சரணம் : ஒன்று

பாவி பயலால
இப்ப நானும்
படும் பாடுயென்ன

ஆவி பொகபோல
தொட்டிடாம
அவன் போறதென்ன

கண்ணுக்கு காவலா
சொப்பனத்தப் போடுற
கன்னத்துக்கு பவுடரா
முத்தங்கள பூசுற

நூலப்போல சீல – பெத்த
தாயப்போல காள
யாருபோல காதல் ,சொல்ல
யாருமே இல்ல

சரணம் : இரண்டு

கேணி கயிறாக
ஒங்கபார்வ
என்ன மேலிழுக்க

கூனி முதுகாக
செல்லவார்த்த
வந்து கீழிழுக்க

மாவிளக்கு போலநீ
மனசையும் கொளுத்துற
நாவிடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற

யாரும் எறச்சிடாத – ஒரு
ஊத்துப்போல தேங்கி
ஆகிப்போச்சு வாரம்- இவ
கண்ணுமுழி தூங்கி

அசல்: யுகபாரதி: சித்திரையில் என்ன வரும்

காளை & Disaster Lyricism

ஆண்: குட்டிப் பிசாசே
குட்டிப் பிசாசே
உன் தொல்ல தாங்கலே

பெண்: சுட்டிப் பிசாசே
சுட்டிப் பிசாசே
உன்னால தூங்கலே

ஆண்: ட்வின் டவர் மேல ஏர்க்ராஃப்ட் போல
என் மேல மோதுனா என்னாவது?

பெண்: ஹ்ம்ம்
உன்மேல மோதி
உற்சாகம் கோடி
உண்டாகத்தானே
நான் மே மாசம் பெண்ணானது

தொடர்புடைய சேவியரின் பதிவு:

கட்டிக் கொண்டு கையாடச் சொன்னது காமச் சாமியோ
நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீதான் சுனாமியோ ?

போட்டிக்கு பிள்ளை பெறுதலா (அல்லது) சமகால முயற்சிகளா?

கேள்வி: தற்போது சென்னையில் நடைபெறும் ‘சென்னையில் திருவையாறு‘ என்ற கருநாடக இசை நிகழ்ச்சி – நமது `சென்னை சங்கமம் என்ற தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியை கண்டு மிரண்டு பார்ப்பனர் கூட்டம் தங்களை முன்னிறுத்தும் முயற்சியா?

-க. சுந்தரவடிவேல், கும்பகோணம்
Host unlimited photos at slide.com for FREE!

கி வீரமணி பதில்: ஆம். அதில் என்ன சந்தேகம்? அது சென்னையில் திருவையாறு அல்ல கனிமொழி அவர்கள் முன்னின்று நடத்தும் ‘சங்கமம்‘ என்ற தமிழர் கலை, பண்பாட்டு விழாவுக்கு எதிரான திரு அய்யர் ஆறு!

குறிப்பு: சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டும் அல்லாமல் நம் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்ட வரும் நிகழ்வே ‘சென்னையில் திருவையாறு’ என்னும் மாபெரும் சங்கீத நிகழ்ச்சி.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

Rumi And Advaita By Dr.Auswaf Ahsan:

“The house without a window is a hell;
To make window is the essence of true religion.
Don’t thrust your axe on every thicket;
Come, use your axe to cut open a window.

– Jalaluddin Rumi

Perceiving a writer while reading his/her text shows maturity of the reader whereas gazing his/her religion/ethnicity prior to reading the text is blatant bias.

Tamil Film Songs – Best of 2007 Movie Music

உதவிய பதிவு: றேடியோஸ்பதி: : “உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?”

அரிதாக கேட்க கிடைத்த பத்து

1. நன்னாரே :: குரு
பாடியவர்: ஷ்ரேயா கோஸல், உதய் மஜும்தார்
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: ஐஷ்வர்யாவுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நடனம். ரெஹ்மானுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; ஹிட் பாடல் கொடுப்பது. மணி ரத்னத்துக்கு இவற்றை கறக்கவும் இணைக்கவும் தெரியும்.

2. சின்னஞ்சிறு சீனா கற்கண்டே :: முருகா
பாடியவர்: சங்கீதா, வினீத் ஸ்ரீனிவாசன்
இசை: கார்த்திக் ராஜா

நினைவில் நின்றது: அபஸ்வர ரீ-மிக்ஸ்களின் நடுவே நெருடாத மறு பதிப்பு

3. டென்ஷன் மச்சான் :: வம்புச்சண்ட
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
இசை: டி இமான்

நினைவில் நின்றது: ஜாலி (படம் வந்துவிட்டதா?)

4. போனா வருவீரோ :: வீராப்பு
பாடியவர்: ஜே
இசை: டி இமான்

நினைவில் நின்றது: சுந்தர் சி.க்கு என்று பொருத்தமான ஜோடிகளும் ஆடாமலே அசத்தும் பாடல்களும் அமைந்து விடுகின்றன.

5. பேச பேராசை :: நாளைய பொழுதும் உன்னோடு
பாடியவர்: பவதாரிணி, கார்த்திக்
இசை: ஸ்ரீகாந்த் தேவா

நினைவில் நின்றது: இந்த ஆண்டின் நம்பிக்கை நட்சத்திரம், நாயகியாக நடித்திருக்கும் படம்

6. கந்தா கடம்பா :: மலைக்கோட்டை
பாடியவர்: நவீன்
இசை: மணிஷர்மா

நினைவில் நின்றது: ‘ரன்’ படத்தின் ‘தேரடி வீதியில் தேவதை வந்தா’ ரகத்தில் இன்னொரு பாடல்

7. சின்னச் சின்ன மழைத்துளி :: ஆக்ரா
பாடியவர்: சுருதி வந்தனா
இசை: சி எஸ் பாலு

நினைவில் நின்றது: எங்கேயோ கெட்ட மெட்டு

8. பாதை தெரிகிறது :: திருத்தம்
பாடியவர்: டிப்பு
இசை: பிரவீன் மணி

நினைவில் நின்றது: ஏற்கனவே கேட்டது போல் இருந்தாலும் இனிமையான மெட்டு + எளிமையான பொருத்தமான கவிதை வரிகள்

9. பொறந்தது பசும்பொன்னு :: திருமகன்
பாடியவர்: தேவா & டிப்பு
இசை: தேவா

நினைவில் நின்றது: 2011 முதல் மந்திரி என்று பிரஸ்தாபிக்காத தமிழ் நடிகரின் ஹீரோயிஸப் பாடல்

10. நூத்துக்கு நூறு :: தொலைபேசி
பாடியவர்: எஸ்.பி.பி.
இசை: சாந்தகுமார்

நினைவில் நின்றது: வைரமுத்துவை நினைவூட்டும் பிரயோகங்கள்.


அதிகம் கேட்கவைக்கப்பட்ட பத்து

1. பறவையின் கூட்டில் :: கற்றது தமிழ் (தமிழ் எம்.ஏ)
பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜாநினைவில் நின்றது: திரையில் இயல்பான பயணம் + என்றும் இளையராஜா

2. டோல் டோல்தான் அடிக்கிறான்
பாடியவர்: சுசித்ரா, ரஞ்சித்
இசை: மணி ஷர்மா

நினைவில் நின்றது: நடனம் & இசை – Made for each other

3. மதுரைக்குப் போகாதடி :: அழகிய தமிழ்மகன்
பாடியவர்: அர்ச்சித், பென்னி, தர்சனா
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: ஆரம்ப துக்கடா; பா விஜய்; தாவணி அசின் ஷ்ரேயா; விஜய் ஆட்டம்… எதை விடுப்பது!

4. எல்லோரையும் ஏத்திப்போக :: இராமேஸ்வரம்
பாடியவர்: ரேஷ்மி, சூரியா, ஹரிசரண், மாணிக்க விநாயகம்
இசை: நிரு

நினைவில் நின்றது: காட்சியாக்கம்

5. கடி கடி கொசுக்கடி :: வியாபாரி
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம், மனோ
இசை: தேவா

நினைவில் நின்றது: எஸ்.பி.பி. போன்ற மனோ; எஸ் ஜே சூர்யா மசாலாவுடன் அனுராதா ஸ்ரீராம்; Explicit ஆக இல்லாத இரட்டை அர்த்த வரிகள்.

6. யார் யாரோ :: ஒன்பது ரூபாய் நோட்டு
பாடியவர்: பரத்வாஜ்
இசை: பரத்வாஜ்

நினைவில் நின்றது: வைரமுத்து; தொட்டுக்க தங்கர் பச்சன் & சத்யராஜ்.

7. அழகான பாதகத்தி :: கருப்பசாமி குத்தகைதாரர்
பாடியவர்: சங்கீதா, கார்த்திக்
இசை: தினா

நினைவில் நின்றது: கரணுக்கு ஹிட் பாட்டு தருவது பெரிய விஷயம்!

8. அதிரடீ – சிவாஜி
பாடியவர்: ஏ. ஆர். ரெஹ்மான், சயனோரா
இசை: ஏ. ஆர். ரெஹ்மான்

நினைவில் நின்றது: கேட்டால் எட்டடி; பார்த்தால் பதினாறடி; ரஜினி என்றால் முப்பத்திரண்டடி! ஷங்கரும் என்பதால் 70 எம் எம் அடி!!!

9. ஜல்ஸா பண்ணுங்கடா :: சென்னை 600028
பாடியவர்: ஹரிசரண், கார்த்திக், ரஞ்சித், டிப்பு, கானா பழனி, கானா உலகநாதன், கருணாஸ், ப்ரேம்ஜி அமரன், சபேஷ்
இசை: ப்ரேம்ஜி அமரன்

நினைவில் நின்றது: கங்கை அமரன் இது போல் சமகால இலக்கியம் நிறைய படைக்கவேண்டும்.

10. அய்யய்யோ… என் உசுருக்குள்ள :: பருத்தி வீரன்
பாடியவர்: ஷ்ரேயா கோஸால், கிருஷ்ணராஜ், மாணிக்க வினாயகம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: ஆரம்ப துக்கடா முதலே அமர்க்களம்தான்.


தொடர்ந்து அதிகம் கேட்கவிரும்பும் பத்து

1. காற்றின் மொழியே :: மொழி
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர்நினைவில் நின்றது: பாடல் அருமை; காட்சியாக்கம் அழகு.

2. எல்லாப்புகழும் (முன்னால் முன்னால் வாடா) :: அழகிய தமிழ்மகன்
பாடியவர்: ஏ ஆர் ரெஹ்மான்
இசை: ஏ ஆர் ரெஹ்மான்

நினைவில் நின்றது: முக்காபலாவில் இருந்து ‘ம’ வரிசையில் துவங்கும் வெற்றிப்பாடல் ஜோடியான வாலி + ஏ ஆர் ஆர்; திரை வடிவமைப்பு மெகா சொதப்பல் 😦

3. மின்னல்கள் கூத்தாடும் :: பொல்லாதவன்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ, கார்த்திக்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்

நினைவில் நின்றது: பாடலாசிரியர் யார் என்று பார்க்க வைத்த நா முத்துக்குமார்

4. யாரோ யாருக்குள் இங்கு யாரோ:: சென்னை 600028
பாடியவர்: எஸ்.பி.பி., கே எஸ் சித்ரா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: ஏனோதானோ வாலியை கண்டுகொள்ளாத திரைக்காதலர்களின் மெய்ப்பாடு.

5. அறியாத வயசு :: பருத்தி வீரன்
பாடியவர்: இளையராஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

நினைவில் நின்றது: எவ்வளவோ இளையராஜா கேட்டிருக்கோம்… இதுவும் ஃபேவரிட் ஆக்கிட மாட்டோமா!

6. டிங்கி டிங்கி டோரிடோ :: நினைத்தாலே
பாடியவர்: பவித்ரா, வினயா
இசை: விஜய் ஆண்டனி

நினைவில் நின்றது: ஹீரோயின் தனிப்பாடல் & துள்ளல்

7. முதல் நாள் இன்று எதுவோ ஒன்று & உன்னாலே உன்னாலே :: உன்னாலே உன்னாலே
பாடியவர்: மஹாலஷ்மி, கேகே, ஷாலினி & கார்த்திக், கிருஷ், ஹரிணி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

நினைவில் நின்றது: அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரி இருக்கும் படத்தில் கொஞ்சம் வித்தியாசப்படும் பாடல்

8. தமிழ்ச்செல்வி தமிழ் செல்வி :: கூடல் நகர்
பாடியவர்: சாதனா சர்கம், ஹரிஹரன்
இசை: சபேஷ் – முரளி

நினைவில் நின்றது: சாதனா சர்கமின் ஓரளவு சுத்த உச்சரிப்பு

9. உலக அழகி நான் தான் :: பிறப்பு
பாடியவர்: ஜனனி பரத்வாஜ்
இசை: பரத்வாஜ்

நினைவில் நின்றது: கார்த்திகாவின் எண்ணெய் தேய்த்த தனியாவர்த்தனங்கள் (தொடர்பான பதிவு: வினையூக்கி: ரசித்த ஆறு + ஆறு விசயங்கள்)

10. தோரணம் ஆயிரம்:: அம்முவாகிய நான்
பாடியவர்: தீபிகா, கீதா, ஸ்ரீவித்யா
இசை: சபேஷ்-முரளி

நினைவில் நின்றது: காதலியுடனான சில்மிஷங்களைத் தவிர வேறு எதையாவதையும் நினைக்கிற மாதிரி படத்தில் ஏதாவது படமாக்கியிருக்கலாம்.


சென்ற வருடம்:
Tamil Cinema – 2006 Top Movies List « Snap Judgment
Tamil Film Songs – 2006 Best « Snap Judgment

தெரிந்தே விட்டது: பில்லா; தெரியாமல் விட்டது எவ்வளவோ!