Two Functions – Manushya Puthiran – 2006 – 11 Auth…

Two Functions – Manushya Puthiran – 2006 – 11 Authors – 20 Books by Uyirmai Book Release Thx to Desikann
 Posted by Picasa

Vilakku Award to Njaanakoothan – Madras Invitation…

Vilakku Award to Njaanakoothan – Madras Invitation Posted by Picasa

10 Authors – 10 Books by Uyirmai Book Release Thx …

10 Authors – 10 Books by Uyirmai Book Release Thx to Desikann Posted by Picasa

தொகுதிப் பங்கீடு: கழுகார் தகவல்

ஜூ.வியில் கழுகார் சொல்வதிலிருந்து சில பத்திகள்:

‘‘தி.மு.க. தலைமைதான் பெரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. புத்தாண்டு தினத்தன்று சென்னையில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்த வைகோ, ‘இந்த முறை கௌரவமான தொகுதிப் பங்கீட்டை எங்கள் கட்சி கோரும்’ என பொடி வைத்திருக்கிறார். இப்படி திடீரென்று அவர் சொன்னதற்கு பலமான ஒரு பின்னணி இருக்கிறதாம்…’’

‘‘முதலில் அதைச் சொல்லுமய்யா!’’ கழுகாரை உசுப்பேற்றினோம்.

‘‘அரசியல் அரிச்சுவடியைத் தலைகீழ் பாடமாகக் கற்றுத்தேர்ந்த சிலர் வைகோவின் காதில் முன் ஜாக்கிரதை சங்கை ஊதியிருக்கிறார்கள். அந்த ‘சங்கொலி’ கேட்டதும்தான் வைகோவின் போக்கில் மாறுதலாம். அதாவது, ‘தென் தமிழகம் மற்றும் மேற்கு மண்டலத்தில் மொத்தம் 120 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக ம.தி.மு.க. வலுப்பெற்றிருக்கிறது. அப்படி இருக்கும்போது, 15 ஸீட், 20 ஸீட் என்று நீங்கள் பேரத்தில் ஈடுபடுவது கட்சி வளர்ச்சிக்கு உதவாது. இப்போதிருக்கும் நிலையில், ஜெயலலிதாவிடம் நிச்சயம் பேரம் பேசி 40 ஸீட்டு களையாவது வாங்கி விட முடியும். அதில் 30 இடங்களில் வென்றாலே தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸக்கு அடுத்தபடியாக அரசியல் களத்தில் முக்கிய ஸ்தானத்தைக் கைப்பற்ற முடியும். இதை மனதில் வைத்து தி.மு.க. தலைமையிடம் ஸீட்டுகளைக் கேளுங்கள் என்று தூபம் போட்டிருக்கிறார்களாம்.

“கருணாநிதியால் இந்த அளவுக்குக் கருணை காட்ட முடியுமா?”

“நிச்சயமாகக் கருணாநிதி கொடுக்கமாட்டார். கைதான் விரிப்பார். அதனால் அ.தி.மு.க&வுடன் போவதுதான் பெஸ்ட் என்கிற ரீதியில் அந்த அரசியல் ஆலோசகர்கள் வைகோவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்களாம். அதன் எதிரொலிதான்… ஸீட் பங்கீடு பற்றி வைகோவை இப்போதே குரல்கொடுக்க வைத்ததாம்!”

“தைலாபுரம் சங்கதி என்னவோ?”

“அங்கு வைத்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், ‘தி.மு.க. கூட்டணி வெற்றிபெற பா.ம.க. பாடுபடும்’ என கூட்டணி தலைமைக்குத் தேன் தடவிவிட்டு, எங்கள் கட்சிதான் பெரிய கட்சி. எங்கள் ஆதரவில்லாமல் வெற்றியை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது’ என தன் பேச்சில் வேப்பெண்ணெயையும் தடவியிருக்கிறார். ஆக, கூட்டணி மத்தளத்தில் இரண்டு பக்கமும் இடி இறங்க ஆரம்பித்துவிட்டதால், கருணாநிதி சாதுர் யமாக காய் நகர்த்தினால்தான் விரிசல் இல்லாமல் கூட்டணி பிழைக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.”

————————

இதையும் ‘சந்திப்பின்’ முந்தைய பதிவையும் சேர்த்துப் படிக்கும் போது தோன்றும் எண்ணங்கள்:

1. வைகோவால் அதிமுக கூட்டணிக்குப் போக முடியுமா? இப்படி ஒரு அரசியல் முடிவை மக்கள்
ஏற்றுக் கொளவார்களா? முக்கியமாக, இதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி வைகோ என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி கருணாநிதி என்ன நினைக்கிறார்?

2. குஷ்பு விவகாரத்தை ராமதாஸ் அண்ட் கோ கையாண்ட விதம் தொகுதிப் பங்கீடு பேரத்தை பாதிக்கிறதா? ‘நீங்க அந்த நடிகை விஷயத்தில நடந்துகிட்ட விதத்தினால மக்கள் ரொம்ப அதிருப்தி அடைஞ்சிருக்கிக்கிறதா கேள்விப்படறேனே…இவ்வளவு தொகுதில ஜெயிக்க முடியுமா உங்களால?’ 🙂

பார்வர்டு ப்ளாக்கும், கார்த்திக்கும்

தமிழகத்தில் பார்வார்டு ப்ளாக் என்கிற ஒரு கட்சி இருக்கிறதா இல்லையா என்பதே, “தேவர் ஜெயந்தி” கொண்டாடும்போது தான் தெரியும். முத்துராமலிங்க தேவரினை முன்னிறுத்தி பெரியதாக தமிழக அரசியலில் சாதிக்கவில்லையெனினும், தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் ஏதேனும் ஒரு திராவிட கட்சியினைப் பிடித்து தொங்கிக் கொண்டு ஒரிரண்டு தொகுதிகளைப் பெற்று கட்சியினை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். சரியாக நினைவிருப்பின், பழ.கருப்பையா கூட ஏதோ ஒருவிதத்தில் பார்வார்டு ப்ளாக்கொடு தொடர்புடையவர் என்று நினைக்கிறேன்.

இப்படியாக ஒரங்கட்டப் பட்டிருந்த கட்சிக்கு இப்போதைய புது வரவு நடிகர் கார்த்திக்.ஏற்கனவே “சரணாலயம்” என்கிற “சமுக அமைப்பினை” வைத்து சமூகப் பணிகள் செய்து வருவதாக சொல்லியிருந்தவர். இவர் போன எல்லா கூட்டங்களும் பெரும் குழப்பத்திலும், நெரிசலிலும் முடிந்தன. இந்நிலையில் பார்வார்டு பளாக்கின் மாநில கட்சிக் கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. கார்த்திக்கும் கூட்டத்திற்காக மதுரை சென்றிருந்தாலும், சில காரணங்களினால் கலந்துக் கொள்ளவில்லை. ஆனால் பேட்டியில் மட்டும் தமிழ்நாட்டில் மாநில செயலாளர் பதவி கிடைத்தால் பார்வார்டு பளாக்கில் சேர்ந்து போட்டியிடுவேன் என்றும்,இல்லையெனில் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

என்ன அடிப்படை தகுதிகளைக் கொண்டு பொது செயலாளர் பதவி கேட்கிறார் என்பது ஒருபுறமிருக்க, கார்த்திக்கின் ஆதரவாளர்கள் கொஞ்சம் அதிகமாகவே உசுப்பேற்றுகிறார்கள். ஆக, தமிழக அரசியலில் குட்டையை குழப்ப இன்னொரு அரசியல் கட்சி உதயமாகும் சாத்தியங்கள் தெரிகிறது

தமிழக தேர்தல் அலசல்

இன்றைய தினமலரில் (ஜனவரி 5-2006) திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தது என்ற செய்த வந்துள்ளதை பார்த்திருப்பீர்கள்.
திமுக 138
காங்கிரஸ் 40
பா.ம.க. 25
மதிமுக 17
மார்க்சிஸ்ட் 6
சி.பி.ஐ. 6
இந்திய யூனியன் 1
ஆர்.எம். வீரப்பன் 1
என பங்கிடப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான செய்தியாக இருந்தாலும், இதை நம்பாமல் இருக்க முடியாது. இச் செய்தியினை ஏதோ ஒரு வட்டாரம் கசிய விட்டிருப்பதாகவே கருதலாம்.
கூட்டணியில் விரிசல் உண்டாக்க போலீஸ் சதி என்று அடிக்கடி குற்றம் சுமத்தும் கருணாநிதி இந்த செய்தியை மறுப்பாரா? அல்லது வாய் மூடி மவுனியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எப்படி இருந்தாலும், இந்த தொகுதி பங்கீடு என்பது தொடர்ச்சியாக போராடும் – வளர்ந்து வரும் – வளர்ந்த கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
இதை வரிசைப்படி பார்க்கலாம்.
1. கருணாநிதி தலைமையிலான திமுக கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசை எதிர்த்து எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளது? கடைசி கட்டத்தில்தான் கூட்டணி கட்சியினரின் ஆதரவோடு தற்போது போராட முனைந்துள்ளது. இதுவும் கூட கூட்டணி கட்சியினரின் நிர்ப்பந்தமாக இருக்கலாம்.
ஜெயலலிதா அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியபோது, “ஓட்டு போட்ட மக்களுக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷமே” என்று கிண்டலும், கேலியும் செய்து சும்மா இருந்தவர்தான் திமுக தலைவர் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
2. தற்போது திமுகவின் வளர்ச்சி என்ன நிலையில் உள்ளது? திமுக வளர்ந்து வருகிறதா? தேய்ந்து வருகிறதா? என்பதையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. திமுகவினர் கரைவேட்டிகளை மடித்து வைத்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதுதான் கீழ்மட்ட உண்மை. 18 வயது நிரம்பிய இளைஞர்கள் முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் யாராவது திமுகவில் சேர முன் வருகிறார்களா? இல்லை என்றே தெரிகிறது. இது அதிமுகவிலும்தான்.
இதைத்தான் இளைஞர்கள் யார் புதிய கட்சி என்று ஆரம்பித்தாலும் தங்களை அவர்களோடு இணைத்துக் கொண்டு தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த முனைகின்றனர். இது சமீப காலத்திய உதாரணம்.
3. காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால், அதில் வட்டத்திற்கு ஒரு பிளவும், பெரும் தலைவர்களும் மட்டுமே உள்ள கட்சி! ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி காமராஜர் ஆட்சி என்ற கனவு கண்டு கொண்டிருந்தாலும், தமிழக மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரசை தமிழகத்தில் நுழைவதையே விரும்பவில்லை என்பதைத்தான் அவர்களின் வாக்குவங்கி சரிவுகள் காட்டுகிறது. போதாதற்கு திண்டிவனம் இராமமூர்த்தி காங்கிரசுக்குள் ஜாதிய அரசியலை தீவிரமாக நடத்தி வருவதையும் நாம் அறிந்ததே! இந்தப் பின்னணியில் பார்த்தால் காங்கிரசும் தேய்ந்து, தேய்ந்து ஓடாய் போய்க்கொண்டிருக்கிறது என்பதை அறியலாம்.
3. மதிமுக ஆரம்பத்தில் வீராதி வீரான் – சூராதி சூரன் என்று வாய்வீச்சு பேசினாலும், அம்மாவிடமும், அய்யாவிடமும், பா.ஜ.க.விடமும் சரணாகதி அடைந்து தனக்கென்று எந்தவிதமான கொள்கையும் இல்லை என்பதை நிரூபித்து விட்டவர். சமீப காலத்தில் மதிமுகவில் ஆரம்பகாலத்தில் இருந்த தொண்டர்களில் 70 சதவீதம் பேர் காணாமல் போய் விட்டனர் என்பதே கள வரலாறு நிரூபிக்கிறது. அவர்களது தொண்டர்களிடமும் மதிமுகவிற்கு கருணாநிதி துரோகம் இழைப்பார் என்ற காரணத்தினால் திமுக மீது எந்தவிதமான மரியாதையும் இல்லாமல் செத்த பிணத்திற்கு இருக்கும் ஆர்வமே அந்த தொண்டர்களுக்கு இருக்கிறது என்பது மதிமுக தலைமைக்கே புரியும்.
4. இராமதா° ஜாதியை பின்னணியாக கொண்டு தனக்கென்று ஒரு வாக்கு வங்கியை வைத்திருந்தாலும் கூட அவரும் ஆடித்தான் போயுள்ளார் என்பதை அவர்கள் ரசிகர் மன்றங்களுக்கு எதிரான அரசியல் நடத்தியதில் இருந்தே தெரிந்தது. இருப்பினும் தொடர்ச்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய – இயக்கம் நடத்தக்கூடிய கட்சியாக பா.ம.க. இருக்கிறது. (தொண்டர்கள் அல்ல) தலைவர்களை வைத்துக் கொண்டு மட்டுமே இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இவரது பலமே தாவுவதுதான். எனவே தாவாமல் பார்த்துக் கொள்ள சீட்டு என்ற கயிரை பா.ம.க.விற்கு எப்படியாவது மாட்டி விடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர்.
5. அடுத்து கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து அதிமுக அரசின் எதேச்சதிகார அரசியலுக்கு எதிராக வலுவான – தொண்டர்களின் அடித்தளத்தை கொண்டு குரலெழுப்பி வருகின்ற கட்சிகளாக இருக்கிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் புதிய இளைஞர்கள் நம்பிக்கையோடு இணைந்து வருவது இந்த கட்சிக்கு பெரும் பலம். ஏற்கனவே “கருணாநிதி இதயத்தில் இடம் உண்டு” என்ற டயலாக்கை மார்க்சிஸ்ட்டுகள் இன்னும் மறக்கவில்லை. மேலும், இந்தத் தொண்டர்கள் தான காசு வாங்காமல் கூட்டணிக்கு உழைக்கப் போகிறவர்களும். இதை கருணாநிதியே கூட ஒத்துக் கொள்வார். வலுவான தொண்டர் படையை வைத்திருக்கும் மார்க்சிஸ்ட்டுகளிடமும், கம்யூனிஸ்ட்டுகளிடமும் அவரது இதயத்தில் இடம் என்ற கொள்கையை பின்பற்றினால், ஆந்திர பாணி கூட்டணி முறையை கையாள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
6. அதிமுகவை பொறுத்தவரை பணத்தையே பலமாக நம்பி செயல்படுகிறது. சுய உதவிக்குழுக்கள், வெள்ள நிவாரணம், அதிரடி அறிவிப்புகள் மூலம் ஏதாவது செய்து வெற்றி பெறலாம் என்ற மாயையில் செயல்பட்டு வருகிறார் அம்மா. ஆனால், மக்களைப் பொறுத்தவரை அதிமுகவின் கடந்த கால அராஜக நடவடிக்கைகளை இன்னும் மறக்கவில்லை. அது, அரசு ஊழியர் – ஆசிரியர், மின்வாரிய தொழிலாளர், பஸ் ஊழியர் என பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். போததற்கு பத்திரிகைகள் மீது தாக்குதல்… ஜனநாயக அடக்குமுறை போன்றவற்றை அவர்கள் தெளிவாக அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக அரசை வீழ்த்துவதில் குறியாக உள்ளார்கள் என்பதை மக்கள் நன்றாக அறிந்திருந்தாலும், கருணாநிதிக்கு இந்த உணர்வு புரியுமா? என்ற கேள்வி எழுகிறது அவரது சாணக்கியத்தனத்தை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டணி ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எதிர் கட்சிகளுக்கு மட்டும் அல்ல! கருணாநிதிக்கும்தான். (அவருக்குத்தான் பெரும் பொறுப்பு இருக்கிறது. எனவே இழக்காமல் எதையும் பெற முடியாது என்பதை முதலில் அவர் உணர வேண்டும்.)

தமிழக அரசியல் கட்சிகளின் இணைய தளங்கள்

தலைவர்களின் சூறாவளி சுற்றுப்பயணங்களின் போது பறக்கும் யெஸ்.யூ.விக்கள்,மா.செக்களிடமும் வா.செக்களிடமும் புழக்கத்திலிருக்கும் நோக்கியா கம்யூனிகேட்டர்,பில்கேட்சின் தமிழ் தாகத்தைக் தணிக்க புத்தகங்கள் தருதல்,அன்றாட செய்திகளை சார்பு நிலையில் தர உதவும் சாட்டிலைட் தொலைக்காட்சிகள் என்று லேட்ட்ஸ்ட் அறிவியல் நுட்பங்களைத் தங்களது கட்சிப் பயன்பாட்டில் உபயோகப்படுத்தி வருவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல தமிழகத்து அரசியல் கட்சிகள். கட்சி நிதியைக் க்ரெடிட் கார்ட் மூலம் வாங்குவதால் ஏற்படும் சட்ட சிக்கல்களைக் அறிந்ததனாலோ என்னவோ அந்தத் தொழில் நுட்பம் உபயோகிக்கப் படுவதில்லை என்று நினைக்கிறேன்.

ரங்கனாதன் தெருவில் டீக்கடை வைத்திருப்பவர் முதற்கொண்டு அனைவரும் தங்களுக்கென ஒரு எக்ஸ்க்ளூசிவ் இணைய தளம் வைத்திருக்கும் காலம் அல்லவா இது.நம் கழகக் கண்மணிகள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன?

தமிழகத்தின் முன்னேற்றக் கழகங்களுக்கு சொந்தமாக இணையதளங்கள் இருக்கின்றன என்பது தற்செயலாகக் கூகிளிட்ட போது தான் தெரிந்தது.தமிழகக் கட்சிகளில் இணையதளம் வைத்திருப்பவை :- தி.மு.க.,அ.இ.அதிமுக,ம.தி.மு.க மட்டுமே.(தேசியக் கட்சிகளான காங்கிரஸ்(ஐ),பா.ஜா.க,கம்யூனிஸ்ட்கள் போன்றவற்றை நான் இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை).ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால்,தமிழகத்தின் மூன்றாவது பெரிய/முக்கியக் கட்சியாகத் தன்னை முன்னிறுத்தும் பா.ம.க.வுக்கென ஒரு தளம் கூடக் கிடையாது.(Not even geocities).

இந்தத் தளங்களின் கன்டென்டில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை யாராவது படித்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

அதிமுகவின் இணைய தளத்திலும் சரி,திமுகவின் இணைய தளத்திலும் சரி கட்சி நிர்வாகிகள் பற்றி எந்தத் தகவலும் இல்லை.ஆனால் மதிமுக தனது தளத்தில் பொதுச்செயலர்கள்,மாவட்டச்செயலர்கள்,எம்பிக்கள் போன்றோரது தகவல்களோடு,அவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக கான்டேக்ட் எண்களும் தரப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்களுக்கு:
http://www.aiadmkindia.org/
http://www.mdmk.org.in
http://www.thedmk.org

உல்டாமொழி

நோ அஃபென்ஸ்; ஒன்லி நான்சென்ஸ்

பெயரும் பதிவின் முகவரியும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கியவுடன், தமிழ் வலைப்பதிவாளர்களில் சிலர், தாங்கள் எடுத்துக் கொண்ட புத்தாண்டு உறுதி மொழிகளை என்னுடன் ரகசியமாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

  1. வாயில் புரளாததை புரளத் தயங்காதவர்: நந்தவனத்திற்குள் நுழைய மாட்டேன்.
  2. குளவிக்கொட்டில்: தேனீக்கள் கொட்டும் இடம் என்று பெயர் வராமல் காப்பாற்ற வேண்டும்.
  3. தமிழ் இண்டெர்நெட் உலக உமாபாரதி: இலக்கியவாதி என்னும் பட்டம் பெற வேண்டும்.
  4. ஆட்டோ ஆஸிட்: கையேடுக் குறிப்புகளைத் தொகுத்து ‘சுதந்திரஇந்தியா’வின் மூலம் வெளியிட வேண்டும்.
  5. ஏட்டு வெங்காயம்: எழுத்தாளர் சுஜாதாவின் விமர்சனத்தைப் பெற்றே தீருவது.
  6. மந்தையில் விலகாத கழுதை: அடியாட்களிடமிருந்தும் சுள்ளான்களின் ‘யேய்ய்ய்’ அலறல்களிடமிருந்தும் தப்பித்துக் கொண்டே இருப்பது.
  7. வாய்க்கால் வண்டார்: மார்டின் லூதர் கிங்குக்கும் மாநில கட்சிகளுக்கும் முடிச்சு போட வேண்டும்.
  8. @மந்தி.காம்: நண்பரை வம்பில் மாட்டாமல் தம்பட்டம் தொடர வேண்டும்.
  9. கேரக்டர் மாத்திரம்: தொடர்ந்து தேநீர் சந்திப்புகளுக்கும் குழாயடி குழாப்புட்டு பேச்சுகளுக்கும் விடாமல் செல்ல வேண்டும்.
  10. ஆண்டி: தோண்டியில் குடிநீர் கொடுப்பதற்கு முன்பே எவனும் தள்ளிவிட்டு உடைக்கக் கூடாது.
  11. கஷாயம்: தமிழன் எக்ஸ்பிரசில் புதிதாக ஸ்னேஹா குறித்த தொடர் வர வேண்டும்.

நோ அஃபென்ஸ்; ஒன்லி நான்சென்ஸ்


|

சிவகாசி

வாடா வாடா
வாடா வாடா தோழா
நாம வாழ்ந்து பார்ப்போம்
வாழ்ந்து பார்ப்போம் வாடா

நீயும் நானும்
நீயும் நானும் ஒண்ணா

உன்னோட உயர்வுக்கு
உன்னோட வேர்வை
என்னோட உயர்வுக்கு
என்னோட வியர்வை

யாரோட உயர்வையும்
யாராலயும்
தடுக்க முடியாதுடா
கெடுக்க முடியாதுடா


அப்பன் சொத்தை
பாட்டன் சொத்தை
தூக்கிப் போடுடா
சொந்தக் காலில்
நீயும் கொஞ்சம்
வாழ்ந்து பாருடா

உன்னப் பத்தி
என்னப் பத்தி
என்ன பேச்சுடா
ஒத்த மூச்சு
நின்னுபுட்டா
எல்லாம் போச்சுடா

ஆயுள்ரேகை தேயும் வரை
உழைப்போமடா
உழைச்சு நாம ஆயுளத்தான்
வளர்ப்போமடா

வாழும்வரை மத்தவன
மதிப்போமடா
மதிச்சுப்புட்டா வாழ்ந்தபின்னும்
இருப்போமடா

இன்னிக்கென்ன கெழம
நாளைக்கென்ன கெழம
நாள் பார்த்து நாள் பார்த்து
தூங்காதடா

போனா திரும்பாதுடா
வாழ்க்கை பெரும்பாடுடா


வந்தவனும் போனவனும்
கோடி பேருடா
சுட்டபின்னும் வாழ்ந்தவன் யாரு
தேடிப் பாருடா

வானம் மேல பூமி கீழ
இடையில் நாமடா
இதில் யாரு மேல
யாரு கீழ
என்ன கேள்விடா

கனவில் வாழ்க்கை
வாழாதடா
வாழ்க்கை கனவா
போகுமடா

வேதாந்தம் சித்தாந்தம்
பேசாதடா
பேசிப்புட்டா வாழுங்காலம்
பத்தாதடா

சாமி போட்ட கணக்கு
நெத்தி மேல இருக்கு
நீயாக கணக்கத்தான்
போடாதடா

போனா திரும்பாதடா
வாழ்க்கை பெரும்பாடுடா


| |

வோர்ட் முத்து நாள்காட்டி