Pa Chidambaram’s Petrol Medicine – Maalan

Dinamani.com – Editorial Page :: மாலன்

கசப்பது மருந்தா? உண்மையா?

இந்திய அரசியல் கட்சிகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய அநேக தருணங்களில் அண்மையில் அறிவிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலை உயர்வுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. பல கட்சிகளின் – அநேகமாக எல்லாக் கட்சிகளின் – பொய் முகத்தை மட்டுமல்ல, அரசு யார் பக்கம் நிற்கிறது என்பதையும் ஒருசேரப் பகிரங்கப்படுத்திய நிகழ்வு அது. அந்த நாடகத்தில் இப்போது மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு “டாக்டர்’ பாத்திரம்.

“பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாவிட்டால் லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைந்து விடும்… எனவே கசப்பு மருந்தை மக்கள் கனிவோடு ஏற்க வேண்டும்” என்று “டாக்டர்’ சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

அவர் பேச்சைப் படிக்கிற எவருக்கும் ஏதோ நம் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கெனவே நொடித்துப் போய் நஷ்டத்தில் நடந்து கொண்டிருப்பதைப் போலவும், அவற்றின் மீது இந்தச் சுமையும் ஏறினால் அவை நொறுங்கிப் போய்விடும் என்பது போலவும் தோன்றும். ஆனால் உண்மை என்ன?

இந்த ஆண்டு (மார்ச் 31 அன்று முடிவடைந்த 2005-06 நிதி ஆண்டு) இந்தியன் ஆயில் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு அறிவித்துள்ள

  • ஈவுத் தொகை (டிவிடெண்ட்) 125 சதவீதம்.
  • ஈட்டிய லாபம் ரூ. 4,915 கோடி.
  • விற்பனை மதிப்பு ரூ. 1,83,204 கோடி
  • கடந்த ஆண்டை விட 21.6 சதவீதம் அதிகம்.

    லாபம், மத்திய அரசு கடனாக வழங்கிய 6,571 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்திய பிறகு, லாபத்தின் மீதான வரிகளைக் கழித்துக் கொண்டதற்குப் பிறகு கையில் மிஞ்சும் நிகர லாபம்.

    இந்தத் தகவல்கள் எல்லாம் இந்தியன் ஆயில் நிறுவனமே, பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்படுவதற்குப் பத்து நாள்களுக்கு முன் (மே 26ம் தேதி) அறிவித்தவை. இவற்றை இப்போதும் அதன் இணைய தளத்தில் காணலாம்.

    ஏதோ இந்த ஆண்டு மட்டும் அது லாபம் ஈட்டிவிடவில்லை. கடந்த ஐந்தாண்டுக் கணக்கை எடுத்துக் கொண்டால் ஒவ்வோர் ஆண்டும் அது லாபம் ஈட்டி வருகிறது. அந்த லாபம் அளவில் அதிகரித்தும் வருகிறது.

  • 2000 – 01ல் அது ஈட்டிய லாபம் ரூ. 2,720 கோடி.
  • கடந்த ஆண்டு அது ஈட்டிய லாபம் ரூ. 4,915 கோடி.
  • 2000 – 01ல் அதன் வசம் இருந்த அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ. 17,510 கோடி.
  • கடந்த நான்காண்டுகளில் ரூ. 6,000 கோடி அதிகரித்திருக்கிறது.
  • கடன் சுமார் ரூ. 3,000 கோடி குறைந்திருக்கிறது.

    கடன்களைத் திருப்பிச் செலுத்தக்கூடிய ஆற்றல் அதிகரித்து இருக்கிறது (Debt Service ratio குறைந்திருக்கிறது). இப்போது அதன் வசம் உள்ள “ரிசர்வ்’ ரூ. 28,134 கோடி.

    உலகின் பெரிய 500 நிறுவனங்களில் (Fortune 500) 170-ம் இடத்தில் உள்ள நிறுவனம் இந்தியன் ஆயில். உலகில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் 18-வது பெரிய நிறுவனம். ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனம்.

    இவ்வளவு ஆரோக்கியமான நிறுவனத்தால், ரூ. 28 ஆயிரம் கோடிக்கு மேல் கையிருப்பு (ரிசர்வ்) உள்ள, 125 சதவீதம் டிவிடெண்ட் அறிவிக்கிற, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிற நிறுவனத்தால் இந்த விலை உயர்வை எதிர்கொள்ள முடியாது! இந்த உயர்வு இல்லாவிட்டால் அது நசிந்துவிடும்! எனவே இந்த நிறுவனத்தை விடப் பலமடங்கு நிதி ஆதாரம் குன்றிய மக்கள், மாதச் சம்பளம் வாங்குகிற மக்கள், ஆட்டோ ஓட்டுகிற தொழிலாளர்கள், இந்த விலை உயர்வையும், இதனால் ஏற்படக்கூடிய பல்வேறு விதமான விலை உயர்வுகளையும் ஏற்க வேண்டும் என்கிறார் அமைச்சர்!

    அமைச்சர் தனது பேச்சில் தெரிவித்திருக்கும் இன்னொரு விஷயம், இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு பேரல் 23 டாலராக இருந்த கச்சா எண்ணையின் விலை இப்போது 69 டாலராக, உயர்ந்து விட்டது என்பதாகும்.

    மத்திய அரசு அதன் தீர்வைகளை இறக்குமதி செய்யப்படும் விலையின் அடிப்படையில்தான், இத்தனை சதவீதம் எனக் கணக்கிட்டு வசூலிக்கிறது. ஒரு பொருள் இந்தியாவில் வந்திறங்கும் போது அதன் விலை 100 ரூபாய்; தீர்வை 30 சதவீதம் என்று வைத்துக் கொண்டால் அப்போது அரசுக்குக் கிடைப்பது 30 ரூபாய். அதே பொருள் விலை உயர்ந்து 300 ரூபாய் ஆகும் போது, அரசுக்குக் கிடைக்கும் தீர்வை 90 ரூபாய். கூடுதலாகக் கிடைக்கும் இந்தத் தொகையைப் பெற அரசுக்குக் கூடுதல் செலவு ஏதும் இல்லை. அதே அதிகாரிகள், அதே அமைப்பு, அவர்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம். கூடுதல் செலவு இல்லாத நிலையில் கிடைக்கும் இந்த வருவாய் உபரி வருவாய். இன்னும் சொல்லப்போனால் எதிர்பாராமல் கிடைக்கும் வருவாய்.

    இதைக் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் நலிவைச் சமாளிக்க முடியும். வேறு சில விதங்களிலும் அரசு இந்த “நலிவை’ எதிர்கொள்ள முடியும்.

    மத்திய அரசு தனது இறக்குமதித் தீர்வைகளைக் குறைத்துக் கொண்டும், நான்கு சக்கர வாகனங்கள் மீதான தீர்வையை அதிகரித்தும், அவற்றின் விலையில் ஒரு சதவீதத்தை “செஸ்’ ஆக (இப்போது கல்வி செஸ் வசூலிக்கப்படுவது போல) வசூலித்தும், எண்ணெய் நிறுவனங்களின் லாபம், கையிருப்பு (ரிசர்வ்) இவற்றின் மூலமும் இந்த விலை உயர்வை எதிர்கொள்ள முடியாதா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. நலிவு ஏற்பட்டுவிடும் என்று அச்சுறுத்தும் அரசும் அமைச்சர்களும், விலை உயர்வு இல்லை என்ற நிலையில் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்ற கணக்கை வெளியிட முன் வருவார்களா?

    கசப்பது மருந்தா? உண்மையா?
    கசக்கும் மருந்துகள் உண்டு என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை சில காய்ச்சல்கள் ஏற்படும்போது, இனிப்புக்கூடக் கசக்கும் என்பதும்! நமது அரசு இப்போது தாராளமயமாக்கல் பொருளாதாரம் என்ற ஒரு விஷக் காய்ச்சலில் விழுந்து கிடக்கிறது. அதற்குப் பொதுத்துறை நிறுவனங்கள் என்றாலே கசக்க ஆரம்பித்திருக்கிறது.

    பொதுத்துறை நிறுவனங்களின் நலன்களைக் காக்க மக்கள் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கோருகிறார். அவை நம் (மக்களின்) நிறுவனங்கள். எனவே அவற்றைக் காக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுமானால் மக்கள் நிச்சயம் “தியாகம்’ செய்ய முன் வருவார்கள். மக்களின் தேசப்பற்று இன்றுள்ள எந்த அமைச்சரின் நாட்டுப்பற்றுக்கும் குறைவானதல்ல.

    ஆனால் இன்று மக்களுக்கு மருந்து கொடுக்கும் அமைச்சர்கள் பொதுத்துறை நிறுவனங்களைப் பேண முற்படுகிறார்களா? அல்லது அவற்றை காவு கொடுக்க முற்படுகிறார்களா? நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலை நம் நவரத்தின நிறுவனங்களுக்கு ஒருபோதும் ஏற்படாது என்று அமைச்சர்களால் உறுதி அளிக்க முடியுமா?

  • Vijaykanth party launches team to catch bad officers!

    Vijaykanth party launches team to catch bad officers!:

    கேப்டனின் ‘ரமணா ஸ்டைல்’ ஊழல் தடுப்பு படை

    தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஊழல் தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல் குறித்து இங்கு புகார் கொடுக்கலாம் எனவும், அப்படிப்பட்ட அதிகாரிகளை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் அறிவித்துள்ளார்.

    இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். இதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். இந்தப் பிரச்சினையில் நான் மிகவும் தீவிரமாக உள்ளேன். பிரச்சினைக்கு தீர்வு வரும் அன்றுதான் எனது பிறந்த நாளை கொண்டாடுவது என்றும் முடிவு செய்துள்ளேன்.

    என்றார் விஜயகாந்த்.

    கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது வழக்கம்போல் சினிமா பாணியில் கோபமடைந்த விஜயகாந்த்,

    திட்டம் இல்லாமலா கட்சியை ஆரம்பித்திருப்பேன்? அதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அதைப் பற்றி எல்லாம் உங்களிடம் விவாதிக்க முடியாது என்றார்.”

    Journeys

    இரயில் பயணங்களில்

    நான் ஸ்டேஷனை அடையும்போது இரயில் கிளம்ப நாலு நிமிடங்கள் தான் இருக்கும். அன்றோ, பதினான்கு மணித்துளிகள் பாக்கி வைத்திருந்தேன். மேகமூட்டம் உள்ள இரவில் ஓரிரு நட்சத்திரங்கள் மட்டும் மேகங்களுக்கு நடுவில் மின்னுவது போல், காத்திருப்போர் அமர்ந்திருக்கும் இருக்கைகளில், எனக்கொரு இடம் கண்டுபிடித்தேன். கையில் அன்றைய செய்தித்தாள். பராக்கு பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

    பிச்சைக்காரத் தோற்றம். தலையில் சடை முடிச்சுகள். முதுகில் துர்நாற்றம் வீசும் பொதிமூட்டை. கிட்ட நெருங்கியவுடனே பலரும், தான் அமர்ந்திருந்த இருக்கையை காலி செய்து தூரப் போயினர்.

    ‘I wanna make a call. Can you spare me some change?’

    கேட்ட தொனிக்கு பயந்தே கையில் கிடைத்ததை இட்டேன். இடாதவர்களை வாய்க்கு வந்தவாறு ஏசினான். சில்லறை தேறியவுடன், முக்கில் இருக்கும் தொலைபேசியை அழுத்தி, பைசாக்களை தானியங்கியில் இட்டு ‘ஹலோ’ ஆரம்பித்தான்.

    எதிர்முனையில் கூட அந்த வீச்சமும், மட்ட சரக்கு கமழும் பேச்சும் எட்டியிருக்கலாம். துண்டித்து விட்டார்கள். இரண்டு, மூன்று முறை ரிசீவரை அழுத்தியும், மற்ற சாகசங்கள் செய்தும், பேசாத பேச்சுக்கு, காசைக் கறந்து விட்டிருந்தனர். வஞ்சிக்கப்பட்ட கோபம் முகத்தில் தெரிந்தது.

    தொலைபேசி நிறுவனத்தின் ‘சேவை மைய’த்திற்கான இலவச எண் 800-ஐ அடுத்து அழைத்தான். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை முறையிட்டு, பைசாவைத் திரும்பத் தருமாறு வேண்டினான். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் முறையீடு மையம் எங்கிருக்கிறதோ?

    இந்தியாவிலா? அல்லது அமெரிக்காவின் ஒதுக்குப்புறமான கிராமத்திலா? அல்லது நிஜமுகங்களைத் தவிர்த்து கணினி மட்டுமே பேசும் மையமோ… தெரியவில்லை. கொடுத்த காசைத் திருப்பித் தரும் பழக்கம் தமக்கு இல்லாததை சொல்லியிருப்பார்கள். அவர்களின் பிறப்பு குறித்து ஐயமுற்று, அம்மா, அப்பாவையும் சேர்த்து வைது கொண்டிருந்தான்.

    கேட்கக் கூசும் சொற்களைத் தவிர்க்க நினைத்த பலரும் இடத்தை காலி செய்து, வேறு இடங்களுக்கு நகர்ந்தனர்.

    அப்பொழுதுதான் அந்த வாலிபன் அவனை நெருங்கினான். முதுகில் பெரிய பை. அமெரிக்கா முழுக்க பேக்-பாக் கட்டிக் கொண்டே சுற்றுப் பயணம் செய்பவன் போல் இருந்தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் இருபது வயதுதான் இருக்கும். திடகாத்திரமான தேகம்.

    “மிஸ்டர்… நீங்கள் பேசும் மொழி பொது இடங்களில் பேசத் தகாதது!”

    கண்டிப்பான தொனி இருந்தாலும் கனிவான நம்பிக்கை தரும் முகத்துடன் கண் பார்த்து பேசினான். கோட் அணிந்தவர்களும், திரண்ட புஜபலம் உடையவர்களும் கூட ‘உனக்கேன் தேவையற்ற வேலை? விருது பட்டி சனியனை விலை கொடுத்து வாங்கலாமா?’ என்று புருவம் உயர்த்தி ஏளன முறுவலித்தார்கள்.

    இரத்த நாளங்கள் வெடித்து விட்டது போன்ற கண்களுடன், “டேய்… (அர்ச்சனைகள்) உனக்கு என்ன தெரியும் (மேலும் அர்ச்சனைகள்) எனக்கு என்ன நடந்தது என்று…” குழற்கிறார் நிலைதடுமாறுகிறவர்.

    ‘எது நடந்தாலும், இப்படி துர்வார்த்தைகளை பயன்படுத்தாமல், பண்போடு நடக்கலாமே?’

    ‘எனக்கு இருக்கும் கோபத்துக்கு, உன்னை நொறுக்கிடுவேன்!’

    பாதிக்கப்பட்ட வயோதிகனுக்கு மிக அருகில் நெருங்கி, ‘வாங்க… வெளியில் போய் நமது சண்டையை வைத்துக் கொள்ளலாம்’

    நேரடியாக சண்டைக் காட்சியைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு மிகுந்தது. நிச்சயம் இளைஞன் தான் ஜெயிப்பான். உடற்பயிற்சியில் கட்டுமஸ்தான் வளைவுகள். ‘மென்ஸ் ஹெல்த்’ போன்ற புத்தகங்களில் அட்டைப்படங்களில் வருவது போன்ற நாயக பாவம். வீடற்ற முதியவரோ, போதை உட்கொண்ட களைப்புடன் பசி மயக்கத்தில் பூஞ்சையாய் இருந்தார்.

    ரயிலுக்கு இன்னும் எட்டு நிமிடங்கள் இருந்தது. ட்ரெயின் கிளம்புவதற்கு ஒரு நிமிடம் வரை இவர்கள் இருவரின் குஸ்தியை வேடிக்கை பார்க்கலாம். நிலைமை எல்லை மீறினால், 911 மூலம் காவல் துறையைக் கூப்பிட்டு, எனக்கு ட்ரெயின் பிடிக்கும் அவசரத்தை சொல்லி, சாட்சி கூட சொல்லாமல் சமூக சேவகனாகி தப்பித்தும் விடலாம்.

    ஆசையுடன் பின் தொடர்ந்தேன்.

    ஸ்டேசன் வாயிலில், அந்த back-pack இளைஞன், சடாரென்று முதியவன் தோளில் கை போட்டான்.

    ‘உனக்கு யாரைக் கூப்பிடணும்? இந்தா என் செல் ·போன்’

    ‘அவங்க ·போனை எடுக்க மாட்டேங்கிறாங்க! எனக்கு காசு வேணும்’

    ‘எதுக்கு உனக்கு காசு வேணும்? டிக்கெட்டுக்கு பணம் வேண்டுமா? எங்கே போகணும்? நானே எடுத்துத் தரேன்.’

    ‘பசிக்குது… சாப்பிடணும்’

    அங்கே இருந்த உணவகத்தில் சாண்ட்விச் வாங்கித் தருகிறான். மழை பெய்யாத கோடை நாளில் எறும்பு வெளிவந்து தன் துணுக்கான உணவைக் கண்டது போல் அவனும் கண்கள் மிளிர சாப்பிட ஆரம்பித்தான்.

    எனக்கு ட்ரெயினுக்கு நேரமாவது உரைத்தது. அவசரமாக மீதத்தைப் பார்க்க முடியாமல் கிளம்பி விட்டேன்.

    என்னுடைய வண்டிக்கு சிக்னல் போட்டு கிளப்பும்போது, ஓடிவந்து ஏறிக் கொள்கிறான் அதே இளைஞன். நிஜ நாயகர்களிடம் கையெழுத்து வாங்க மனம் ஏனோ அலைமோதுவதில்லை.

    நன்றி: தமிழோவியம்


    | |

    Mind Matters

    மனம் போன போக்கில் எழுத வேண்டும். இலக்கு எதுவும் கூடாது. பாஸிவ் வாய்ஸை தவிர்க்க வேண்டும். அம்மாவிற்கு எழுதும் கடிதம் போல் இயல்பு கிடைத்தால் நல்லது. கஷ்டப்பட்டு உவமை போடக் கூடாது. எதிர்மறை வாக்கியங்களை விட்டு விடு.

    ம்யூனிச் படத்தின் ஹீரோவைப் பார்த்தால் ஹல்க்தான் நிழலாடுகிறது. ஐ.எம்.டி.பி பக்கத்தின் சுட்டி கொடுக்கலாம். படிப்பவர்களுக்கே அங்கு போக வேண்டும் என்று தெரியாதா? கேள்விகளைக் கொண்டு கட்டுரையைத் தொடுப்பது அலுப்பாக இருக்கும்.

    இந்து மதத்தில் பாவ மன்னிப்பு கிடையாது. யூதர்களுக்குக் கூட இல்லை. ‘ஏஞ்சல்ஸ் இன் அமெரிக்கா’ உபயம். சின்ன வயதில் இருந்தே குற்றவுணர்வை வைத்து மிரட்டுகிறார்கள். தப்பு செய்தோமோ; தோப்புக் கரணம் போட்டோமோ என்று விட முடிவதில்லை. ஜூரியை வைத்து தீர்ப்பு எழுதுவதற்கும் நீதிபதியை நடுவணாகக் கொண்டதற்கும் இதற்கும் முடிச்சுப் போட வேண்டும். கூகிள் தேடலில் மேட்டர் சிக்கும்.

    திரைப்படமாக பட்டியலிட ஆசை. ஆனால், பார்த்துவிட்டேன் என்பதைத் தவிர படப் பட்டியலில் வேறு உபயோகம் ஏதும் இல்லை. இன்னொரு முறை டிவிடி-யை வாடகை எடுப்பது குறையலாம். புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் படப்பட்டியல் இடுவதற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. Been there… done that என்று உலகிற்கு ஓதுவது.

    மிடில்-ஏஜ் க்ரைஸிஸ் என்றால் என்ன? கம்பி வளையத்தை எலி விடாமல் துரத்தி ஓடிக் கொண்டே இருக்கும். எலியாகத் தன்னையும், வளையமாக வேலையையும், கற்பிப்பது. நின்று விட்டால் ஆராய்ச்சியாளருக்கும் போரடிக்கும். மிகையுந்துரத்த வெம்பிணியுந்துரத்த அலுக்காமல் எதையாவது விரட்டும் மனம் இருக்கும் வரை நடு வயதுப் போராட்டங்களைத் தவிர்க்கலாம்.

    அழகாக இருப்பவர்களையும் சொந்தக்காரர்களையும் தான் அமெரிக்கா விருப்பத்துடன் உற்றுப் பார்க்கிறது. கொசுவைக் கொன்றால் வருத்தமாக இல்லை. எலியை கார் மிதித்தால், காருக்கு சேதம் ஆகாதவரை லாபம். அணில் செத்துப் போனால் அன்று முழுக்க குற்ற உணர்ச்சி. Nicole Vaidisova-வைத்தான் விம்பிள்டனில் முன்னிறுத்துகிறார்கள். ஷரபோவா நேற்றைய மலர். மீடியாவுக்கு நாளொரு மாயை. எதுகை மோனை இல்லாவிட்டால் இயற்கையாக இருக்கும்.

    லாப்ஸ்டரைக் கூட கனிவுடன் கொலை செய்ய வேண்டும் என்கிறார்கள். தனி வீட்டில் வாழாத ஈர்க்கிறாலை சாப்பிட மாட்டார்களாம். அகரமுதலி தேடாமல் ஈர்க்கிறால் என்றால் லாப்ஸ்டர் நண்டு என்று தெரிய வேண்டும்.

    Takoyaki உண்ணுவதற்குக் கூட மஞ்சள் நீர் தெளித்து ‘அட்டபாதரே! எண்காலி!! சாக்குக்கணவாய்!!! பேய்க்கணவாய!!!! வெட்டிக் கொள்ளலாமா?’ என்று திருவிளையாடற் புராண விளிச்சொற்களுடன் வினவச் சொல்வார்கள்.

    கவனம் சிதறக் கூடாது என்பதை விட சிந்தை மொய்ம்பு தேவை.

    Kalki’s Take on Eezham Conflict

    Thalayangam

    ஈழத் துயரம்!

    அனுராதபுரம் கண்ணிவெடி கொடூரத்துக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்கிறார்கள் விடுதலைப் புலிகள். சின்ன குழந்தைகூட இதை நம்பாது! புலிகள் தலைவர் பிரபாகரன், தமது வன்முறைப் போக்கை உறுத்தலின்றி ஒப்புக் கொண்டவர். பத்திரிகையாளர் கூட்டம் கூட்டியே பிரகடனப்படுத்தியவர்.

    இந்நிலையில், இலங்கை அரசுக்கு, புலிகள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழி என்ன இருக்க முடியும்? ஒரு பாவமும் அறியாத பொது மக்கள் பலியாகிறபோது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மேலும் வேதனையான விஷயம், இலங்கை ராணுவமும் ஈழத் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைப்பதாக வெளிவரும் செய்திகள்! எனினும், இப்பழிவாங்கும் உணர்வு, புலிகளின் முதல் தூண்டுதலாலும் மூடப் பிடிவாதத்தினாலும் விளைவதுதான் என்பதை மறுக்க முடியாது.

    எத்தனையோ முறை பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதிலும், புலிகள் தங்கள் வறட்டுப் பிடிவாத நிலையிலிருந்து இறங்கத் தயாராயில்லை. பேச்சு வார்த்தைகள் முறிந்து போயின. அல்லது தோல்வியுற்றன.

    பேச்சுவார்த்தை காலகட்டத்தை ஒரு சாதகமான இடைவெளியாகப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் தாங்கள் இழந்த இடத்தை மீட்டார்கள்; அல்லது புதிய தாக்குதல்களை நடத்த தங்களை மேலும் ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள்.

    இலங்கையில் அமைதி திரும்ப பாடுபட்ட நார்வே அமைதிக் குழுவே வெறுத்துப் போய்விடும் அளவுக்கு, புலிகளின் இந்த நாடகம் தொடர்ந்து, சமீபத்திய அனுராதபுர கொடூர நிகழ்வில் ஓர் உச்சகட்டத்தைத் தொட்டிருக்கிறது.

    ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களின் துயர் பெருகிக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் தமிழக மீனவர்கள் பாதுகாப்பின்றித் தவிக்கிறார்கள். இன்னொரு புறத்தில், இலங்கை அகதிகள் வரவு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் வேறு பல சிக்கல்கள் விளையும்.

    ஐரோப்பிய யூனியன் நாடுகள், விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவ்வியக்கத்துக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா வாழ் இலங்கைத் தமிழர்களிடமிருந்து கிட்டிய, அல்லது பலவந்தமாக வசூலிக்கப்பட்ட பொருளாதார உதவி (வரி?!) பெறப்படுவது கடினமாகியிருக்கிறது. இயலாமை, புலிகளின் கோபத்தைத் தூண்டி மேலும் வன்முறையில் ஈடுபடச் செய்யும். அதே நேரத்தில், பொருளாதார நெருக்கடியினால் அவர்கள் நிலை பலவீனப்படவும் செய்யும்.

    இத்தருணத்தை, இலங்கை அரசும் ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்ட இந்தியா போன்ற தோழமை நாடுகளும் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு அமைதித் தீர்வுக்கு ஆக்கபூர்வமாக முயற்சி செய்வது நல்லது.

    ஆனால், தமிழகத்து அரசியல் கட்சிகள் சில, முதல்வர் கருணாநிதி தலைமையில் ஒன்றுகூடி, தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுபோல் மத்திய அரசு இலங்கைப் பிரச்னையில் உட்புகுந்து செயலாற்ற முடியாது.

    இலங்கை மக்களின் துயரைப் போக்குங்கள் என்று இலங்கை அரசுக்கு மற்றொரு தீர்மானம் மூலம் அறிவுறுத்துவதால் மட்டுமே பிரச்னை எவ்வாறு தீரும்? பிரச்னையின் முளையும் வேரும் விடுதலைப் புலிகள்தான் என்னும்போது, இந்திய அரசு செய்யக் கூடியது என்ன? ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கத் தலைவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தையா நடத்த முடியும்? அது இயலாத காரியம்.

    ஆனால் தமிழகத்தில் ஈழத் தமிழர் நலனுக்காக குரல் கொடுத்துவரும் கட்சிகளும் அதன் தலைவர்கள் பலரும் புலிகள் இயக்கத்தின் அனுதாபிகள் என்று அறியப்பட்டவர்கள். இந்தத் தலைவர்கள் விடுதலைப் புலிகளுக்கு அறிவுறுத்தி, அவர்களை இலங்கை அரசுடன் முறையான பேச்சு வார்த்தைக்கு அழைப்பதுடன், தனி தமிழ் ஈழ பிடிவாதத்தைக் கைவிடும்படியும் வலியுறுத்த வேண்டும். கண்ணீரில் மிதக்கும் ஈழத் தமிழர்களின் துயர் தீர்க்க இவர்கள் தான் பாடுபட வேண்டும். மத்திய அரசும் இவர்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும். பிரச்னையின் ஆணிவேரைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, மேம்போக்காக தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றுவதில் ஒரு பிரயோஜனமுமில்லை.

    Ghana vs Brazil

    Photobucket - Video and Image Hosting

    Photobucket - Video and Image Hosting ஜெயிக்குமா???

    உலகக்கோப்பை கால்பந்து 2006 » இன்றைய போட்டியின் முன்னோட்டம் – பிரேசில் vs கானா: “பிரேசில் வெல்வது என்பது கானா அணிக்கு இயலாத காரியமாக எனக்கு படுகிறது. கானா இந்த போட்டியில் வெல்வதற்கு எதாவது அதிசயம் நடக்கவேண்டும். ஆகையால் இதுவரை சிறப்பாக விளையாடிய கானா அணிக்கு Bye Bye சொல்லும் நேரம் வந்துவிட்டது.”

    பிபிசி-யின் கானா கையேடு

  • கானா – பிரேசில் :: பிபிசி முன்னோட்டம்

  • Guardian Unlimited :: கழனி நண்டு கானா

  • ஆப்பிரிக்க கண்டத்தின் பதினொன்று – New York Times

  • கோணல் பக்கங்கள்சாரு நிவேதிதா

    | |

  • Jaya attacks Nakkeran of spreading false stories

    Jaya attacks Nakkeran of spreading false stories

    உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதிக்கு சென்னை அருகே மகாபலிபுரத்தில் ரகசியமாக சிகிச்சை மேற்கொள்ள தான் உதவியதாகவும், அதற்கு உபகாரமாக அவர் ரூ. 50 கோடி பணம் கொடுத்ததாகவும், அதில் சில கோடி ரூபாய் கள்ள நோட்டு எனவும் அந்த கள்ள நோட்டுக்களை அதிமுக ஆட்சியில் வெள்ள நிவாரண நிதியுடன் கலந்து விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறுத்துள்ளார்.

    இதுதொடரபாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

    25.6.2006 அன்று வெளியான நக்கீரன் இதழில் கள்ள நோட்டுக் கணக்கு என்ற தலைப்பில் மிகப் பொய்யான செய்தி வெளியாகியுள்ளது.


    Webulagam : CBI to file chargesheet against Jayalalithaa on gift case!

    தனது பிறந்தநாளிற்கு அன்பளிப்பாக ரூபாய் 2 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராக மத்திய புலனாய்வுக் கழகம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளது!

    ஜெயலலிதா தற்பொழுது தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளதால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அனுமதியளிக்குமாறு சட்டப் பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய புலனாய்வுக் கழகத்தின் காவல் கண்காணிப்பாளர் கூறியதாக யு.என்.ஐ. செய்தி தெரிவிக்கிறது.

    ஜெயலலிதாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான அடிப்படைகளை விளக்கும் 180 பக்க புலனாய்வு அறிக்கையையும் பேரவைத் தலைவரின் பார்வைக்கு கடந்த 23 ஆம் தேதி ம.பு.க. அளித்துள்ளது.

    சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அவர்கள் உறுப்பினர்களாக உள்ள அவைத் தலைவரிடம் இருந்து ஒப்புதல் பெறவேண்டும் என்று நரசிம்ம ராவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக சட்டப் பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்துள்ள ம.பு.க. காவல் கண்காணிப்பாளர், சென்னையில் உள்ள ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் ஜூலை முதல் வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    தனது பிறந்தநாளிற்காக ஜெயலலிதா 89 வங்கி வரைவோலைகளை பெற்றுள்ளார் என்றும், அதுமட்டுமின்றி, ரூ.15 லட்சத்திற்கு ரொக்கமாக அன்பளிப்பு பெற்றுள்ளார் என்றும், ஆனால் அதற்கான கணக்கை வருமான வரித்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று கூறி வருமான வரித்துறையின் தலைமை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயலலிதாவிற்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 1996 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு பிறகு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு மாற்றப்பட்டது. அயல்நாடுகளில் இருந்தும் வங்கி வரைவோலைகளாக அன்பளிப்பு பெறப்பட்டுள்ளதால் அது தொடர்பாக லண்டனிலும், அமெரிக்காவிலும் ம.பு.க. அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். தற்பொழுது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக உள்ள டி. முகர்ஜிதான் ம.பு.க. சார்பாக அயல்நாடு சென்று விசாரணை நடத்தியவர்.

    முதலமைச்சராக உள்ள ஒருவர் ரொக்கமாகவும், வங்கி வரைவோலையாகவும் அன்பளிப்புகளை பெறுவது ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 11-ன் கீழ் குற்றம் என்று கூறி ம.பு.க. வழக்கு பதிவு செய்துள்ளது.

    Sambar Pipeline to be Launched

    குறிப்பு: இது முழுக்க முழுக்க கற்பனை என்றாலும், நிஜத்தில் நிகழ்ந்தால் நான் பொறுப்பல்ல!

    சென்னையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் சாம்பார், ரசத்தை அனுப்பும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி ஏன் ஆரம்பிக்கவில்லை என்று ஜெயலலிதா இன்று கேள்வி எழுப்பினார்.

    “நியாயவிலைக் கடை மூலம் ரேஷன் பொருட்களில் குறைந்த விலையில் அரிசி மட்டுமே தற்போது கிடைக்கிறது. சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற பிற மளிகை சாமான்களுக்கு மானியம் வழங்கினாலும் ஏழை மக்களின் வருவாய்க்கு ஏற்றவாறு விற்கப்படுவதில்லை.

    அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் வென்றால், லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் சென்னையிலிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மொத்த சமையலையும் அனுப்ப வகை செய்யும்” என்றார் செல்வி ஜெயலலிதா.

    சத்துணவுக்கு ஆகும் போக்குவரத்து செலவு, வழியில் டியூசிஎஸ் பொருட்கள் கணிசமாக ஊழலாவதால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றைத் தவிர்க்க சென்னையிலிருந்து 11 மாவட்டங்கள் வழியாக மதுரைக்கு குழாய் அமைக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

    இந்தத் திட்டத்தைக் கேள்விப்பட்ட முதல்வர் கருணாநிதி, ‘குழாயைத் திருகினால் கோழி‘ என்னும் திட்டம் தன்வசம் இருப்பதாக உட்னடியாக அறிவித்தார்.

    அவர் கூறுகையில், இருபது ரூபாய்க்கு கொள்முதலாகும் ப்ராய்லர் கோழிகள், வாடிக்கையாளரிடம் ஐம்பது/அறுபது ரூபாயாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தோல் நீக்கப்பட்ட கோழிகள், குழாய்கள் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த அறிவிப்பைக் கேள்விப்பட்ட மனேகா காந்தி, கோழிகளுக்கு ஆதரவாக குழாயடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

    இவை அனைத்தையும் கேட்டு மகிழ்ச்சியடைந்த மாண்புமிகு ஜனாதிபதி அப்துல் கலாம், ரோஹிணி விண்கலத்திலேயே கொஞ்சம் ‘வத்தக்குழம்பு’ ஈஷிக்கொண்டு உலகை வலம் வந்ததைப் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். ‘தொலைநோக்குப் பார்வையுடன் நிலவுக்கும் சாம்பார் கால் வைக்க வேண்டும்’ என்று பள்ளிச் சிறுவர்களிடம் இனிமேல் வலியுறுத்தப் போவதாக சொன்னார்.

    நிஜ நிகழ்வுகள்: Webulagam : IOC’s southern oil pipeline dedicated to Nation! | Chennai-Madurai Petrol pipeline dedicated to nation


    | |

    Wake-up Annoyances

    காலங்காத்தால இம்சை பண்ணாதே

    எதற்காக காலையில் எழுந்து கொள்கிறேன். தமிழ்மண நட்சத்திர வாரம் மலையேறியது. அதிகாலையில் சேவலை எழுப்பி தினம் கூவென்று சொல்கிறேன் என்று பாட்டு பாடும் காதல் கல்யாண அகவையும் கிடையாது.

    அதற்காக சில அதிர் கடிகாரங்கள்:

    1. பறக்கும்! அலாரம் பறக்கும்: சுத்தி சுத்தி பறப்பதை தாவிப் பிடித்தவுடன் நீங்கள் எழுந்து கொண்டு விட்டீர்கள் என்று தன்னை நிறுத்திக் கொள்ளும். ‘றெக்கை கட்டி பறக்குதடீ அண்ணாமலை சைக்கிள்’ பாடலுடன் பறக்க விட ஆரம்பித்து, ‘சுத்தி சுத்தி அடிப்பேன்’ என்று முடிப்பது இதன் ஸ்பெஷாலிடி.

    2. நானொரு பின்னு… அலாரம் பின்னு: நாளுக்கொரு ஆணியாக நீட்டிக் கொள்ள, முப்பது ஆணிக்கோவைகளில் ஏதாவதொன்று தினமும் நெம்பி நிற்க, நின்றதைக் கண்டுபிடித்து, தினப் போராட்டத்தைத் துவங்க அழைக்கிறது.

    3. கூடையில் முட்டை; கடிகாரத்தில் கோட்டை: எத்தனை முட்டை இட்டிருக்கிறது என்று தேடிப் பிடித்து, அனைத்தையும் அடுக்கும் வரை கொக்கரக்கோ தொடரும்.

    4. டாவின்சி கோட் பிரியர்: புதிர்களை விடுவிப்பதை விருப்பமானவர்களுக்கான அதிர் விழிப்பான். தூக்கக் கலக்கத்துடன் அசின் படத்தை சரியாகப் பொருத்தும்வரை அலாரம் அடிக்கும்.

    5. கண்ணாமூச்சி ரே ரே: தரையில் உருண்டோடி மறைந்து கொள்ளும். அதிர்வுகளை நிறுத்துவதற்கு எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது என்று கண்டிபிடிக்க வேண்டும். ‘சிச்சிச்சிச்சீ… என்ன பழக்கம் இது’ போன்ற வேண்டிய பாடல்களை ஒலிக்க விடலாம் என்பது சிறப்பம்சம்.

    நன்றி: Uber-Review » Blog Archive » Top Ten Most Annoying Alarm Clocks


    | |

    Thanks to Thamizhmanam

    மீண்டும் பலருக்கு என்னுடைய வலைப்பதிவை சென்றடைய வைத்த தமிழ்மணத்திற்கு நன்றி.

    அடிகளின் (அதாங்க ஹிட்ஸ்) இந்த வார கணக்கு-வழக்கு:

    நட்சத்திர வாரப் பதிவுகள்: மின் நூல்

    பேட்டி

  • தமிழோவியம் மீனா
  • கில்லி ஐகாரஸ் பிரகாஷ்
  • திசைகள் அருணா ஸ்ரீனிவாசன்
  • பெயரிலி இரமணீதரன்
  • எழுத்தாளர் என் சொக்கன்

    இலக்கியம்

  • லா ச ராமாமிர்தம்
  • ‘சிட்டி’ பெ. கோ. சுந்தரராஜன் :: நரசய்யா

    நையாண்டி

  • சூடா இருக்கீங்களா?
  • அருந்ததி ராய்
  • ஆஷும் அஸ்தியும்

    நட்சத்திர மனிதர்

  • சுப்பிரமணிய சாமி
  • ஷேக் சின்ன மௌலானா
  • சிட்டி

    புத்தகம்

  • கேள்விகளின் நாயகர்
  • கறுக்கும் மறுதாணி ::கனிமொழி
  • தலித்திய விமர்சனக் கட்டுரைகள்: ராஜ் கௌதமன்
  • குமுதம் ரிப்போர்ட்டர் :: மாயவலை – அல் ஜர்காவி : பா ராகவன்
  • சுவடுகள் :: திருப்பூர் கிருஷ்ணன்

    திரை

  • காயத்ரி ஜோஷி
  • ஜெயா சீல்

    அனுபவம்

  • அனைவருக்கும் என் வணக்கம்
  • மணத்திற்குப் பின் சுயமைதுனம்
  • கனடா மாண்ட்ரியால் & க்யூபெக் சிட்டி
  • தமிழ்மண விற்பனை – அலசல்
  • கீதம் சங்கீதம் வேதம்

    வலையகம்

  • ஈ-தமிழ்
  • ஸ்னாப் ஜட்ஜ்
  • தி ஹிந்து
  • சேவை அமைப்புகளும் ஆறு உதிர்மொழிகளும்
  • ஒரு விளையாட்டு; இன்னொரு சோதனை; கலவை
  • மா சிவகுமார் வலைப்பதிவு

    நன்றி: தமிழ்மணம்.காம்


    | |