Category Archives: Uncategorized

ஓ… மாரியா… ஓ… மரியா…

MARIA SHARAPOVA

சபாடினியின் அலட்சியம்

ஸ்டெஃபி கிராஃப்பின் ஆளுமை

செரினாவின் துணிச்சல்

வீனஸின் திறமை

ஹின்ஜிஸ் புன்னகை

செலஸ் ‘ஹ்ஹூம்ம்ம்ம்’

க்ரிஸ் எவர்ட் நளினம்

நவ்ரதிலோவா முயற்சி

கோர்னிகாவாவின் அழகு

சொந்த மூளை….

அடுத்த விம்பிள்டன் நாயகி?

ஒரு நிமிட வலியா? ஓராயுள் வாழ்க்கையும் தண்டனையா?

உணர்ச்சிபூர்வமாக பார்த்தால் மரணதண்டனை சரியென்றே தோன்றுகிறது.

நாமக்கல் ராஜா: >>>இரும்பாலான தங்கள் இதயத்தை கழட்டி எடைக்கு போட்டுவிட்டவர்கள்.

அவனுக்கு மரணம் நிகழ்த்துவதால் இந்தியாவில் மாறுதல் எதுவும் வந்துவிடப்போவதில்லை. நாளைக்கே ஒரு அரசியல்வாதியின் கொள்ளுப்பேரனோ, சூழ்நிலைக்கு அடிமையாகும் இன்னொருவனோ, அடக்கப்பட்ட தலித் மீதோ, வேறொரு குழந்தையிடமோ வன்முறை பாய்ச்சிக்கொண்டுதான் இருக்கப் போகிறான். தனஞ்ஜெயை தூக்கிலிடுவதன் மூலம் நீதி நிலைபடுத்தப்பட்டு விட்டதாக நமக்கு சந்தோஷம். அதற்கு பதிலாக, பல ஆயுள் தண்டனை கொடுப்பது, தனிமைச்சிறையில் போடுவது, அவனுடைய ஆயுள் முடியும் வரை வேலை வாங்கி, அதில் கிடைக்கும் நிதியில் பெண்கள் அனைவருக்கும் ஸ்டன் கன் அல்லது பெப்பர் ஸ்ப்ரே கொடுப்பது என அவசர சட்டம் போட்டு, அந்த சட்டத்தை குறித்த விழிப்புணர்வை ‘தனஞ்செய் ஏன் திஹாரில் உள்ளார்’ என்ற விளம்பரங்கள் மூலம் பட்டி தொட்டிகளில் பரப்பலாம்.

Eelanathan: >>>ஒருமுறை சிங்கப்பூர் வந்து பாருங்கள்

சிங்கப்பூர் வளர்ந்த நாடு; இந்தியாவைப் போல் ‘வளரும்’ நாட்டுக்கு மரண தண்டனை தடூப்பூசியாக முடியாது. எயிட்ஸ் விழிப்புணர்வு கூட சென்றடையாத நாட்டில் ‘மரண தண்டனை’க்கு பயந்துபோய், தவறு செய்யும் இச்சை வரும்போது, தடுத்து நிறுத்திக் கொள்வார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். மேலும், சிங்கப்பூர் அளவில் சிறிய இடம். புது தில்லியில் இரவு ஒன்பது மணிக்கே கடைகள் மூட ஆரம்பித்துவிடுவார்கள். மவுண்ட் ரோட் போல நடுநாயகமான கன்னாட் ப்ளேஸ் போன்ற இடங்களில் பத்து மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இருக்காது. சென்னையில் நைட் ஷோ முடியும்வரையாவது நகரம் களையோடு இருக்கும். அமெரிக்காவில் பின்னிரவு இரண்டு மணிக்குக் கூட கார்களும், மக்களும் சாரி சாரியாகக் காணப்பட்டாலும் கொலை, பாலியல் வன்முறை நடந்துகொண்டேதான் இருக்கிறது. (அமெரிக்காவின் பல மாநிலங்களில் மரண தண்டனை இருக்கிறது.)

தமிழோவியமும் உங்கள் கருத்தை பிரதிபலிக்கிறது. செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாற்பது, ஐம்பதாண்டுகள் சிறை வாழ்வு கொடுக்கும் ஆயுள் தண்டனை சட்டம் வரும்வரை மரண தண்டனை சரியே என்று தோன்றலாம்.



go2tamil.com – கொலைக்குக் கொலைதான் தீர்வா?: “1989இல் இந்திராகாந்தியின் கொலைஞனைத் தூக்கில் ஏற்றியபின், இன்றுவரையில் (இந்தியாவில்) எவருமே தூக்கிலிடப்படவில்லை. நிலப்பரப்பைப் பொறுத்த மட்டில், மிகச்சிறிய நாடான சிங்கப்பூரில்தான் அதிகம் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 4 மில்லியன் ஜனத்தொகையைக் கொண்ட இந்தச் சிறிய நாட்டில் வருடாவருடம் 70 பேர் மரண தண்டனை பெற்று வருகிறார்களாம். போதை வஸ்து கடத்தும் குற்றவாளிகளே தண்டனை பெறுபவர்களில் அதிகமானவர்களாக இருக்கின்றார்கள்.

மரண பயம் ஏற்படுத்தினால் குற்றங்கள் தொடராது என்பது ஒரு சாராரின் விவாதமாக இருக்கின்றது. உயிரை எடுக்க வேண்டாம். சிறையில் தள்ளி, தனிமையில் விட்டு, கடூழியம் செய்து தன் தவற்றிற்காக ஆயுள் முழுவதும் வருந்த வைப்பதுதான் சரியான தண்டனை என்று இன்னொரு சாரார் வாதாடுகின்றார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பழிவாங்கும் குணந்தான் நம்மிடம் மேலோங்கி நிற்கின்றது. மன்னிப்பது விரும்பப்படாத ஒன்றாகி வருகின்றது. பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்ற பழிவாங்கும் உணர்வே நம்மைப் பிடித்தாட்டுகின்றது.”



வக்கீல் பிரபுவிற்கு பதிலாக, என்னுடைய முந்தைய மரத்தடி பதிவு

MARIA SHARAPOVA  

MARIA SHARAPOVA
 Posted by Hello

விருப்பப் பட்டியல் – திண்ணை.காம்

திண்ணை:

  1. யூனிகோட் எழுத்துரு கொண்டிருக்க வேண்டும்.

  2. மரத்தடி.காம் போல் எழுத்தாளர் பட்டியலிட்டு, ஒருவரின் அனைத்து படைப்புகளையும் எளிதில் படிக்கும் வசதி வேண்டும்.

  3. ஒவ்வொரு வெள்ளியன்றும், அந்த வாரம் வெளிவந்த புதிய பகுதிகளின் பட்டியலை, என்னைப் போல் விரும்புவோருக்கு, மின்மடல் மூலம் அறிவிக்க வேண்டும்.

  4. திண்ணை.காமில் வெளிவரும் பகுதிகளில் சிலவற்றையாவது, மாதாந்தரியாக பதிப்பித்து, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் விற்க வேண்டும்.

  5. கடிதங்களுக்கு தலைப்பு (subject) கொடுக்க வேண்டும்.

  6. மத்தளராயர் எழுதும் வாரபலன், ஜெயமோகன் எழுதும் புத்தக வாசிப்புகள் போன்றவற்றில், தலைப்புகளை பெரிதாகப் போட்டு, உபதலைப்புகளுக்கு ஒரு போடவேண்டும்.

  7. திண்ணை களஞ்சியம் well-organizedஆக, எளிதில் தேடி கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

இணையப் பொறுக்கன்

  1. எழுத்து விளையாட்டு: சே… 142-தான் கிடைத்தது! 😦 😦 அவ்வளவு மெதுவாகவா தட்டுகிறேன்!

  2. நவீன மொழி இயக்கம்: தமிழுக்கு இடம் இல்லை; ஹிந்தி கூட பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறது.


  3. இசை விமர்சகர்களின் வார்ப்பு: சுப்புடுக்களைத் திருப்திபடுத்தும்படி இசையமைத்தல் எப்படி?

  4. வலைப்பதிவுகளில் வலம் வரும் புத்தகங்கள்: புத்தகப் பட்டியல்கள் தவிர சுவாரசியமான வேறு சில விஷயங்களும் இருக்கிறது. கூகிளில் எந்த வார்த்தைகள் அதிகம் ‘ஹிட்’ கொடுக்கிறது என்று அலசலாம்.

    நான் பார்த்தது:

    # ஜெ.ஜெ (88)

    # கலைஞர் (86)

  5. எந்த புத்தகம் படிக்கலாம்? இன்பமா, துன்பமா? நகைச்சுவையா, நோ நானசென்ஸா? எதிர்பாராத திருப்பங்கள் வேண்டுமா? வன்முறை இருக்கட்டுமா? என்ற கேள்விகளுக்கு பதில் சொன்னால், படிப்பதற்குப் பரிந்துரைகள் கிடைக்கும்.

  6. மேலும் மேலும் நுண்ணிய தேடல்: ப்ரெஞ்ச் நிறுவனம், ஆப்பிரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக மனிதர்களிடம் செய்யப்படும் சோதனைகளைக, முப்பத்தேழு வயது ஜப்பானிய விவசாயி கண்டுபிடித்த வழக்கை, அமெரிக்க ஜூரிகள் கண்துடைப்பாக விசாரிக்கும் கதை வேண்டுமா? இங்கே சென்றுத் தேடிப் பார்க்கவும். இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்த புத்தகங்கள் வேண்டும் என்று நான் தேடிப் பார்த்ததில் ‘Line of Control – Tom Clancy’s Op-Center 8’ முதலிடத்தைப் பிடித்தார்.

  7. உங்க ஊரில் என்ன படிக்கிறார்கள்? அமெரிக்காவின் அனைத்து நூலகங்களிலும், பெரிய புத்தகக் கடைகளிலும், ஒவ்வொரு மாதமும் படிக்கவேண்டிய புத்தகம் ‘இவை’ என்று பட்டியல் போட்டு கொடுப்பார்கள். அனைவரும் ஒரே சமயத்தில் ‘விஷ்ணுபுரம்’ படித்து சென்று, இன்று போல் ஒரு பௌர்ணமி இரவில் விவாதிப்பதற்கு சௌகரியமாக இருக்கும்!?

  8. வானிலை ஆய்வு மையம்: ஒரு புயலின் பாதை.

நன்றி: நியு யார்க் டைம்ஸ்

Bar Chart of various Languages 

Bar Chart of various Languages Posted by Hello

How many Hindi speakers in US? 

How many Hindi speakers in US? Posted by Hello

நீ வருவாய் என (பாடல் வரிகள்)

அந்தரங்க நீர்க்குளத்தே

பூத்திருந்த தாமரைகள்

அந்தியிலே மொட்டாகி

சிந்தையிலே கோலமிட்டதோ

காதலிலே நீர்வேட்டை

காற்றினிலே மாளிகைகள்

வானகத்து வீதியினிலே

வலம்போகும் கற்பனைகள்

நான் அவரை பார்த்துவிட்டேன்

அத்தனையும் கனவுகளே

நீ வருவாய் என

நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என

நான் அறியேன்

கண்கள் உறங்கவில்லை

இமைகள் தழுவவில்லை

கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை

அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை

வாராயோ….



அடி தேவி

உன்தன் தோளில்

ஒரு பூவானால் இன்று

இறவெங்கே உறவெங்கே

உன்னைக் காண்பேனே என்றும்

அமுத நதியினில் தினமும் என்னை நனையவிட்டு

இதழை மறைத்துக் கொண்ட இளமை அழகுசிட்டு

தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ?

ஒரு மேடை

ஒரு தோகை

அது ஆடாதோ கண்ணே

குழல்மேகம்

தரும் ராகம்

அது நாடாதோ என்னை

சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு

விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு

எனது மடியினில் புதிய கவிதையை சொல்ல வாராயோ?

பாடல் கேட்க: தினம் ஒரு பாடல்

A Beautiful Mind

மயிலாப்பூரில் நடந்து செல்லும்போது நான் என்ன மனநிலையில் இருக்கிறேனோ அதற்கு ஏற்ற சூழ்நிலை எனக்கு கிடைக்கும். கோவில் சென்று நாளாகிவிட்டதே என்று யோசித்தால், சுலோகங்களை முணுமுணுத்துக் கொண்டே செல்பவரை பார்க்கலாம். கோவில் சென்று கும்பிட்டால்தான் சாமி அருள்வாரா; என் வேலையை செய்யும்போதே அவனை நினைக்கலாம் என்று எண்ணச்செய்யும். ஒரு நாள் போட்டியின் மதிய இடைவேளை வெய்யிலில் சாமான் வாங்க கடைக்கு ஓடிச் செல்லும் வழியில், அவசர கிரிக்கெட் மாட்சுக்கு டீம் போடுபவர்களைப் பார்க்கலாம். ‘வெண்ணிலாஸ்’ அங்காடி வாசலில் என் நேர்மினமையை நிதானப்படுத்தும் விதத்தில் அமைதியாக நான் கொண்டு சென்ற நல்லி சில்க்ஸ் துணிப்பைக்கு டோ க்கன் தருபவர் செயல்படுவார். தம்பதியராக வீட்டிலிருந்து கல்யாணத்துக்குக் கிளம்பியவர்களில், கணவன் பத்தடி முன்னேறி வேகமாக நடந்து செல்ல, ஓட்டமும் நடையுமாக மனைவி, அவரை வேகவேகமாக தொலைத்துவிடாமல் கூடவே செல்வது, திருமண வாழ்க்கையில் கொஞ்சம் அச்சத்தையும், கூடவே ஒத்துசெல்லும் மனோபாவத்தையும் சிந்திக்கவைக்கும். என் கூட ஹிந்தி படிக்கும், டி.எஸ்.வி கோவில் தெரு திரும்பியபின் வரும் எட்டாவது வீட்டில் இருக்கும் பத்மா தென்பட்டால் கிடைக்கும் சிரிப்பு, அன்றைக்கு எல்லாமே நல்லவிதமாய் நடக்கப்போவதாக அறிவிக்கும். குடிக்காமலேயே, இந்தியக்கொடியின் ஆரஞ்சுக் கண்களுடன் இருக்கும் பயமுறுத்தும் பால்காரன், எருமை மாட்டைத் தொழுவத்தில் குளிப்பாட்டுதல்; செருப்பில்லாமல் நாய் கூட வெளியில் செல்லமுடியாத அக்னி நட்சத்திர மதியத்தில் கையில் பழைய வேட்டி போட்டு மூடிய தாம்பாளத்தில் சாத்துமுறை

பிரசாதம் ஏந்தி வெறுங்காலில் மெல்ல நடந்துவரும் ஸ்ரீனிவாசர் கோவில் அர்ச்சகர், வேறு எந்தத் தெருவிலோ செங்கல் இறக்கப் போகும் லாரி, தன் ப்ளாட்ஃபாரத்தில் ஏறி இடித்து விடலாமோ என்ற அச்சத்தில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் குடும்பத்தலைவர் என்று எல்லாருமே என்னையும் பார்த்திருப்பார்கள்.

நெடிசலான தேகத்துடன் விறுவிறுவென அவர் நடந்துபோய்க் கொண்டிருப்பார். அவர் ஏதாவதொரு கடையில் நின்று எதையாவது வாங்குவதையோ; பத்து மணிக்கு வந்திருக்க வேண்டிய பல்லவனுக்காக பதினொன்றரை வரை திட்டிக்கொண்டே காத்திருக்கும் பயணியாகவோ; தெருமுக்கில் தட்டுப்படும் திரைச்சீலை இடப்படாத விநாயகருக்காகவோ, கருமாரிக்காகவோ, காலணியைக் கழற்றி அதன் நுனியில் அரை நொடி நின்றுகொண்டு கன்னத்தில் போட்டுக் கொள்வதையோ; தெருவின் நடுவே களம் அமைத்து சுவற்று ஸ்டம்புக்குக் குறிவைத்து பந்துவீசும் சிறுவன் எறிந்து முடிவதற்காகக் காத்திருந்தோ நான் பார்த்ததேயில்லை. என்னைப் போலவே அவரும் தனக்குள் எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டேயிருப்பார். அதை சத்தமாக முணுமுணுக்கவும் செய்வதுதான் அவரை நகைப்புக்குள்ளாக்கியிருந்தது. கூடவே, அவர் மனைவியும், அதே வேகத்தில் விடுவிடுவென்று, அவரைவிட கொஞ்சம் சத்தமாகப் பேசிச்செல்வது பலகாலம் வரை பைத்தியங்களைக் கண்டு அஞ்சும் சிறுவர்கள் லிஸ்டில் என்னையும் வைத்திருந்தது. கணவன் பேசுவதை மனைவியும், மனைவி பேச்சை கணவனும் காதில் போட்டுக் கொள்ளாமல், தொடர்ந்து தன்பாட்டுக்கு இன்னொருவரிடம் பேசிக்கொண்டேதான் இருந்தார்கள்.

கொஞ்ச நாள் கழித்து தரமணியில் பயிற்சி எடுக்க செல்லும் வாய்ப்பில் அவர்களைப் பற்றிய புதிய கோணம் கிடைத்தது. அங்கிருக்கும் வி.எச்.எஸ்.க்கு வரும் மனநலம் குன்றியவர்கள், பஸ்ஸில் இருந்து இறங்குவதைப் பார்க்கும்போது, எனக்குக் கிடைத்திருக்கும் அற்புதமான வாழ்க்கையை எண்ணி, பெற்றோருக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்லவைக்கும்.

இவர்களை இன்னும் ஒழுங்காகப் புரிந்துகொள்ள ‘எ பியுடிஃபுல் மைண்ட்’ உதவுகிறது. நிஜ வாழ்வில் நடக்கும் காதல் கதையில் கொஞ்சம் த்ரில்லர் தொட்டுக்கொண்டு விவரிக்கிறார்கள். சாதிக்க விரும்பும் நாஷ், எவ்வாறு மனைவியைக் கண்டுபிடிக்கிறார், ஸ்கிஸோஃப்ரேனியாவுடன் எவ்வாறு போராடுகிறார், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை எவ்வாறு வெல்கிறார் என்பதை படம்பிடித்துள்ளார்கள். ஓவர்-ஆக்ட் கொடுக்காத ரஸ்ஸல் க்ரோ மற்றும் சிறந்த துணை-நடிகை விருது பெற்ற ஜெனிஃபர் கானலி. இருவருக்கும் பக்கபலமாக அனைவருமே வாழ்க்கை வரலாற்றை சுவைபடுத்தியுள்ளார்கள்.

ஏற்கனவே படத்தை பார்த்திருந்தாலும் டிவிடியில் இன்னொருமுறை பார்க்கலாம். இரண்டு குறுந்தகடுகள். எக்ஸ்ட்ராக்கள் நிரம்பிய #2வில் வழக்கம்போல் படத்தில் இடம்பெறாத காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அவை ஏன் நீக்கப்பட்டன என்பதை இயக்குநர் ஆர்வத்துடன் விவரிப்பது, சிறந்த நாவல் மற்றும் திரைப்படங்களில் செய்யவ்ண்டிய self-editing-ஐ வலியுறுத்துகிறது.

அது தவிர இன்னும் இரண்டு பகுதிகள் தவறவே விடக்கூடாதவை:

1. மேக்கப் நுட்பங்கள்: வயதான ‘இந்தியன்’ தோற்றத்திற்காக எட்டு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் முகமூடிகளுக்கு (facial mask) பதிலாக சிலிகானில் முகத்தில் சில பகுதிகளை மட்டும் ஒட்டிக்கொள்ளும் புதிய தொழில்நுட்பம். இதன் மூலம், எச்சில் முழுங்கும்போது தொண்டைக்குழியில் ஏற்படும் நுண்ணியங்கள், முகம் திருப்பும்போது ஏற்படும் இயற்கையான அசைவுகள், பேசும்போது ஏற்படும் முகபாவ சுருக்கங்கள் என எல்லாமே தெளிவாக வெளிப்படுகிறது.

2. ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்: பத்து பேரை வைத்துக்கொண்டு நோபல் பரிசு பெறும் விழாவில் லட்சக்கணக்கானோரை உண்டாக்கியது நம்ம ஊரில் ஷங்கர் செய்த மாயாஜாலம்தான். ஆனால், புறாக்கள் பறந்துபோகாமல், அவற்றை வளையவரும் கற்பனைச் சிறுமி; பச்சிளங்குழந்தையை தண்ணித்தொட்டிக்குள் போட்டுவிட்டு தன்னுடைய உலகுக்கு சஞ்சரித்துப் போகும் காட்சி; ரஸ்ஸல் க்ரோவிடம் அதிக கால்ஷீட் கேட்காமல் பனி பெய்யும் நாளில் எடுக்கப்பட்ட படபிடிப்பை, இலையுதிர் காலமாக மாற்றிய வித்தை என படத்தில் எங்கே கம்ப்யூட்டர் பூந்து விளையாடுகிறது என்பதை அவர்கள் சொன்னால்தான் அறிந்து கொள்ளலாம்.

நிஜ நாஷுடன் சந்திப்பு, இசையமைப்பளருடன் பேட்டி, கதாசிரியர் Akiva Goldsman திரைக்கதை உருவாக்கிய கதை ஆகியவையும் பரவசபடுத்தும்.

மீண்டும் பார்க்கவேண்டிய உண்மைக்கதை.

தேர்வு எழுத வருகிறீர்களா?

WSPQ Results: Your Political Philosophy: Libertarian – “Libertarians are self-governors in both personal and economic matters. They believe government’s only purpose is to protect people from coercion and violence. They value individual responsibility, and tolerate economic and social diversity.”



Tickle: IQ and Personality Tests – Tickle.com: The Classic IQ Test: “Your IQ score is 133.

This number is based on a scientific formula that compares how many questions you answered correctly on the Classic IQ Test relative to others.

Your Intellectual Type is Word Warrior. This means you have exceptional verbal skills. You can easily make sense of complex issues and take an unusually creative approach to solving problems. Your strengths also make you a visionary. Even without trying you’re able to come up with lots of new and creative ideas.”

Just for fun you can take once. Little bit similar to the ones we would have seen in CSR for the BSRB & Railways!