Category Archives: Uncategorized

Soma Valliappan 

Soma Valliappan Posted by Hello

Badri Seshadri 

Badri Seshadri Posted by Hello

Rajninikanth – P Vaasu’s Chandramukhi  

Rajninikanth – P Vaasu’s Chandramukhi
 Posted by Hello

(c) Vikadan – What Reliance Infocomm did to Long D…

(c) Vikadan – What Reliance Infocomm did to Long Distance Phone Connections from US/Canada to India? Posted by Hello

இலக்கிய எழுத்து

இணையத்தில் இலக்கியம் இருக்கிறது என்றும் இல்லை என்றும் எல்லோருக்கும் ஆளாளுக்கு எழுதுகிறோம். இல்லை என்போரிர்ன் வாதங்களைத் தகர்க்க, வலைப்பதிவுகளில் இலக்கியம் படைக்க ஆசையா? கீழ்க்கண்ட மூன்று வரிசைகளைப் பார்க்கவும்…

வரிசை 1 வரிசை 2 வரிசை 3
தட்டை ஊடகம் சாமானியன்
வரையறை இலக்கியம் பாமரன்
உணர்ச்சி தமிழ் ஊடுருவல்
கிளர்ச்சி தழும்பு மொழி
இலக்கு மொழிபெயர்ப்பு குரல்
தீவிரம் பெண்கள் கவிதை
நிதர்சனம் சமூகம் அறியாமை
குலைவு வரலாறு புலமை
குரல் நூல் மர்க்ஸியம்
மதச்சார்பின்மை படைப்பு அணுகுமுறை
தார்மிகம் பிம்பம் கட்டுரையாளர்

இவற்றை எப்படி வேண்டுமானாலும் கோர்த்து, ஒவ்வொரு வரிகளிலும் எங்காவது இடம்பிடிக்க வைக்கவும். காட்டாக முதல் வரிசையில் இருந்து ‘வரையறை’, இரண்டாவதில் இருந்து ‘பெண்கள்’, மூன்றாவதில் இருந்து ‘கவிதை’. நடுநடுவே ‘இல்’, எதிர்மறைவினைகளைத் தூவுதலும் அவசியம்.

க்வாலிடி இலக்கியம் ரெடி.

நினைத்ததை நடத்தும் ஆளுங்கட்சி

ஜனநாயகத்துக்கு அழகல்ல

நீரஜா சௌத்ரி : தமிழில்: ஆர்.நடராஜன்: பொது மக்கள் கருத்து என்பது பெரும்பாலும் சிறிய விஷயங்களைச் சுற்றித்தான் சுழல்கிறது. வெளியுறவுச் செயலரை எப்போது ராஜீவ் காந்தி பகிரங்கமாக பணி நீக்கம் செய்தாரோ அப்போதிருந்துதான் விஷயங்கள் தவறாகப் போகத் தொடங்கின. அது ஒரு சின்ன சம்பவம்தான் என்றாலும் அது அதிகார மமதை என்ற அற்ப குணத்தை வெளிப்படுத்தியதால் மக்கள் அதை எதிர்த்தனர். அதற்குப் பிறகுதான் போபர்ஸ் வந்தது.

சிபு சோரனை முதல்வர் பதவியில் அமர்த்திய ஜார்க்கண்ட் ஆளுநரின் நடவடிக்கை சின்ன விஷயமாகத் தோன்றினாலும், அது வெளிப்படுத்திய மனப்போக்கு மக்களின் ஆட்சேபத்துக்கு வழி கோலியது. ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பதற்கு அதிக இடங்களைக் கொண்ட தனிப் பெரும் கட்சியை (பாஜக) அல்லது தனிப் பெரும் கூட்டணியை (தேஜகூ) அழைக்க வேண்டும் என்ற கோட்பாட்டை சயீத் சிப்தே ராஸி பின்பற்றவில்லை. 81 உறுப்பினர் கொண்ட பேரவையில் தங்களுக்கு 41 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி 5 சுயேச்சை எம்எல்ஏக்களை பாஜக அவர் முன் அணிவகுத்துக் காட்டியதையும் அவர் புறக்கணித்துவிட்டார். யாரை விரும்புகிறாரோ அவரை பதவியில் அமர்த்த ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உண்டு என்றாலும் அது கடிவாளமற்ற அதிகாரம் அல்ல.

கோவாவைப் பின்தொடர்ந்து உடனே ஜார்க்கண்ட் நிகழ்ச்சிகள் நடந்தது இரண்டாவது காரணம். அங்கு பாரிக்கர் அரசைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கையை காங்கிரஸ் மேற்கொண்டது. ஆனால் அதற்கு போதிய எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இல்லாததால் அந்த நடவடிக்கை அரைகுறையாக முடிந்தது. கோவா சட்டப் பேரவையில் பாஜகவைச் சேர்ந்த பேரவைத் தலைவர் மோசமாக நடந்துகொண்டார். இதனால் ஆளுநர் பேரவையைக் கலைத்தார். ஆனால் திடீரென காங்கிரஸின் பிரதாப் சிங் ரானேவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க மனோகர் பாரிக்கருக்கு 2 நாள் மட்டுமே அவகாசம் தந்த அவர் ரானேவுக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்தார்.

1970-80 களின் காங்கிரஸை இது நினைவுபடுத்தியது. பெரிய கட்சி என்ற தோரணையில் செயல்படும் காங்கிரஸ் மீண்டும் உருவாகிறதோ என்ற அச்சத்தை இது காங்கிரஸின் பிராந்திய கூட்டணிக் கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு விரும்புவதை மற்ற மாநிலங்களின் ஆளுநர்களைச் செய்ய வைக்கும்போது, பிகாரிலும் ஏன் அதைச் செய்ய வைக்கக் கூடாது என்று வாதாடும் ஆவேச லாலு பிரசாத்தை காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அங்கு ஆட்சியமைக்க ராப்ரி தேவி உரிமை கோரியிருக்கிறார்.

படுதோல்வியில் முடிந்த இந்தச் சம்பவங்கள் அனைத்திலும் மிகவும் கவலைக்குரிய அம்சம், இவை வெளிப்படுத்தும் மனநிலைதான்.

கர்நாடக இசையும் பேனா மையில் காவியும்

நன்றி: Thinnai – Weekly Tamil Magazine


நேர்காணல் : வசந்த் — இகாரஸ் பிரகாஷ்: கர்நாடக இசை பற்றி விமர்சனம் எழுத, கர்நாடக இசை பற்றிய அடிப்படை அறிவு வேண்டும். இசை என்று மட்டுமல்ல. மற்ற எந்தத் துறைக்கும் இது பொருந்தும். ஆனால், சினிமாவில் இந்த இலக்கணம் கடைபிடிக்கப்படாது. கடந்த பத்தாண்டுகளில் தாங்கள் பார்த்த திரைப்படங்கள், தங்களுடைய புரிதல் நிலைகள் ஆகியவற்றை வைத்துத்தானே, திரைப்படங்களை மதிப்பீடு செய்கிறார்கள்? குறிப்பாக வெகுசன ஊடகங்களில். இவர்கள் போன்றவர்களால் தான் நல்ல திரைப்படங்களுக்கான இரசனை இன்னும் மேம்படாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். ரசிகர்கள், தங்களுடைய புரிதலைத் தாண்டி இன்னும் ஒருசில படிகள் மேலே ஏறி வரவேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள். பிற மொழிப்படம் என்றால் அது ஆலிவுட் படங்கள் மட்டுமல்ல. இத்தாலிய , ஈரானிய, ஐரோப்பிய திரைப்படங்கள் எத்தனையோ இருக்கின்றது. சமீபத்தில் நடந்த ஒரு சினிமா புத்தக வெளியீட்டு விழாவில், ஒரு இயக்குனர் மேடையில் பேசுகின்றார், “எங்களுக்கு எங்கஊர் குலதெய்வமே போதும், உலக சினிமாவெல்லாம் வேண்டாம் ” என்று.


குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன — நெருப்புநிலவன்: ஜெயமோகன் குமுதத்தில் தொடர் எழுதப் போகிறார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மு.கருணாநிதி அவர்கள் தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது, அவரை விமர்சிப்பதற்கு அந்தத் தொடரின் தலைப்பை வைத்துக் கார்ட்டூன் போட்டுச் சீண்டியது குமுதம். அரசியலில் முதிர்ச்சியும், விமர்சனங்களைத் தாங்கிக் கொள்வதில் பக்குவமும் பெற்ற கருணாநிதி அவர்கள் குமுதத்தில் எழுதி வந்தத் தொடரையே நிறுத்தி விட்டார். ஜெயலலிதா அவர்கள் குமுதத்தில் தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது அவரைப் பற்றியும் குமுதம் ஏதோ விமர்சிக்க, அவரும் அவர் தொண்டர்கள் வர்ணிக்கிற தாய்மையின் முதிர்ச்சியுடன் தொடரை நிறுத்திவிட்டு வேறு வார இதழில் எழுதினார்.

எனவே, பிரபலமானவர்களை எழுத வைக்கும்போதெல்லாம், “நான் யாருக்கும் பயந்த ஆள் கிடையாது தெரியுமா” என்று உதார் விடுகிற முகமாகக் குமுதம் இத்தகையக் காரியங்களைச் செய்வதுண்டு. இப்படிச் செய்ய வேண்டிய ஈகோவின் உந்துதலோ வர்த்தக உத்திகளோ குமுதத்துக்கு இருக்கிறது என்று சொல்லலாம். இதைப் பத்திரிகைக்கேயுரிய தைரியம், சுதந்திரம் என்றெல்லாம் அவசரப்பட்டுப் பாராட்டி விடமுடியாது. குமுதத்தின் சமூக பிரக்ஞை கோடம்பாக்கத்துச் சுந்தரிகளின் முன்னழகுடனும், இடையழகுடனும், பின்னழகுடனும் நிறைவுற்று விடுவது ஆண்டாண்டு காலமாக அறியப்பட்ட ரகசியம்தானே.

ஜெயமோகனுக்குக் கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவம் ஜெயமோகனைப் பிடிக்காதவர்களுக்கு நிச்சயம் எரிச்சலூட்டும். ஜெயமோகனாவது சீண்டலைப் பொருட்படுத்தாமல், தொடரைக் குமுதத்தில் தொடர்ந்து எழுதுவார் என்று எதிர்பார்ப்போம். என்ன ஜெயமோகன் சம்பாதித்து வைத்திருக்கிற எதிரிகள் அவர் தொடரை எழுதமால் போனால், அவருக்கு முதிர்ச்சியில்லை என்று சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள். எழுதினாலோ, “அரசு அப்படிச் சொல்லியும் குமுதத்தில் வெட்கம் கெட்டு எழுதியதன் மூலம் தன் பேனாவில் கலந்திருப்பது காவி நிறம் என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டார்” என்று முற்போக்குக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவார்கள். எப்படியும் ஜெயமோகனுக்குத் திட்டுதான்.

ஒரு படைப்பாளி என்ன கொள்கை வைத்திருக்கிறார், எந்தக் கட்சி சார்பு கொண்டிருக்கிறார் என்பதையெல்லாம் படைப்பைப் படிக்கும்போது கவனத்தில் யாரும் கொள்வாரென்றால், அது படிப்பவரின் குறையே. ஓர் படைப்பாளியை அவர் சொல்கிற கருத்துகள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவா இல்லையா என்பதைவிட, படைப்பாளியின் ஒட்டுமொத்த ஆளுமை, வீச்சு, கலைத்திறன் என்று பிறவற்றின் அடிப்படையிலேயே மதிப்பிடுவது சரியான காரியமாக இருக்கும். அந்தக் காரணத்தினாலேயே, ஜெயகாந்தன் ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடையவராகவும், பின்னாளில் காங்கிரஸ் கட்சி சார்புடையவராகவும் ஆகியிருந்தபோதிலும், இலக்கிய விமர்சகர்கள் யாரும் அவர் பேனாவில் சிவப்பு மையோ, காவி-வெள்ளை-பச்சை கலந்த மையோ வழிவது பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. அரசியல் ஆர்வமுடைய – எல்லாவற்றிலும் தங்கள் கொள்கைகள் இல்லாவிட்டால் நிராகரித்துவிடுகிற – கத்துக்குட்டிகள் அப்படி ஏதும் கத்தியிருக்கலாம்.

me balaji 

me balaji Posted by Hello

Jay Jay & Attahaasam & Pepsi Heroine 

Jay Jay & Attahaasam & Pepsi Heroine Posted by Hello

தினந்தினம்

மகளிர் தினமா?

கல்வியா… செல்வமா… வீரமா… நாங்க இருக்கிறோம்!

தாங்கிப் பிடிக்கும் ஆண்களுக்கு தினந்தினம் ஆடவர் தினம்தானே?

புகைப்படங்கள்: (c) Vikatan.com & Getty Images