Category Archives: Tamil Blogs

வலைப்பதிவில் எத்தனை வகைகள் உண்டு?

‘நான் வலைப்பதிகிறேன்’ என்றவுடன் எழும் கேள்வி: ‘என்னவெல்லாம் பதிவீர்கள்?’

அதற்கு விடையளிக்கும் முயற்சி.

Monologue – அனுபவம் சார்ந்த ஆழ்ந்த சுய சிந்தனை: புனைவு போல் ஒழுக்கமான நடை வேண்டும். அடைப்புக்குறிக்குள் சொந்த கிறுக்கல் எல்லாம் எட்டிப் பார்க்காது. சுவாரசியம் குன்றாமல் பறக்கும். தன்மையில் வந்திருக்கும். நிஜம் போல் காட்சியளிக்கும். திடீர் திருப்பம் தரும் முடிவு இல்லாவிட்டாலும் பளிச்சென்று இறுதிப்பாகம் இருக்கும்.

இவற்றைக் காண்பது வாரிசாக இல்லாத அரசியல்வாதியாக இருந்தும் வெற்றியடைவதைப் போல கொஞ்சம் அரிய வகை.

இந்த நடையை பெரும்பாலும் செல்வராஜ் பதிவுகளிலும் ஜெயமோகன் எழுத்துகளிலும் கண்டிருக்கிறேன்.

Portrait – நிகழ்வுகளை கண் முன்னே நிற்க வைத்தல்: தேர்ந்த விவரிப்பு மூலம் புள்ளிவிவரம் கூட உருவம் பெறும். நம்பகத்தன்மை கோரிடும். சித்திரமாக விவரங்கள் பொதிந்திருந்தாலும் எளிதில் அணுகமுடியும் பாவம் கொண்டிருக்கும். உணர்ச்சிகளை விட சம்பவங்கள் கொண்டு ஈர்க்கும்.

எளிது போல் தோன்றினாலும் சன் நியூஸின் நேர்த்தியும் பொறுமையும் வேண்டும். பரபரப்புக்கு ஆசைப்படாத மனம் வாய்க்கும் நேரங்களில் முயற்சிப்பது உசிதம்.

பத்ரியை மனதில் வைத்து எழுதிய மாதிரி பட்டாலும் செல்வன், நாராயண் ஆகியோரை எடுத்துக்காட்டலாம்.

Phenomenology – நடந்ததை தத்துவார்த்தமாக தன்வயமாக்குதல்: சாட்சிபூதமாக இருக்கும். செய்திகளை, ஆக்கங்களை சொந்தக் கருத்துடன் முன்வைக்கும். உளவியல் சார்ந்த உலகளாவிய பார்வை கொடுக்கும். பழகிப்போகும் வரை அணுகுவதற்கு கரடுமுரடாகத் தடுக்கும்.

விகடன், குமுதம், விட்டலாச்சார்யாவை விட்டுவிட்டு காலச்சுவடு, புதிய *** என்று வாசித்தால் எழுத்துப்பயிற்சி கிடைக்கும். அகரமுதலி வைத்துக் கொண்டு எளிய வார்த்தைக்கு சப்ஸ்டியூட்டாக சங்கச்சொல் போடுவது சாலச் சிறந்தது.

டிஜே, அய்யனார், சுகுணா திவாகர் என்று நிறைய இலக்கியவாதிகளை சொல்லலாம்.

Synergy – உரையாடல், ஊக்கத்திரி: தனித்தனி கூண்டுகளாக இருக்கும் காய்களை அவியலாக்கும் ஜாம்பவான் சமர்த்தர். அனுமன்களை அடையாளம் காண வைக்கும் தூண்டில் வீசும் பதிவுகள் கிடைக்கும். தேங்கிக் கிடக்கும் இடத்தை சுறுசுறுப்பாக்கும் திட்டம் தீட்டும். தனி மரங்கள் நெடிந்துயர விரும்பும் தோப்பில் பல மரம் கண்ட தச்சராய் வெட்டி வீழ்த்தாமல், பறவையாய் பரஸ்பரம் அறிமுகம் கொடுக்கும்.

வேதாளங்கள் நிறைந்த உலகு என்பதால் மனந்தளராத விக்கிரமாதித்த மனப்பான்மை வேண்டும். பெண்களாய் இருந்தால் இயல்பாகவே அமைந்த மானகை/மேலாண்மை குணாதிசயங்கள் கைகொடுக்கும். வேற்றுமைகளை அடுக்குவதை விட ஒற்றுமைகளைக் கண்டறிந்து ‘அட’ போடத் தெரிந்திருக்க வேண்டும்.

சர்வேசன், செல்லாவை சொல்லலாம்.

Mongering – வாங்க, விற்க: சொந்த விருப்பங்கள் சார்ந்து இயங்கும். சில சமயம் சிலரால் வெறுப்பை உமிழ்வதுடன் கோர்த்துவிடப்பட்டாலும், அதிகம் மாறுபடாத வாதங்கள் தொடர்ச்சியாக கிடைக்கும். வாசகரை அச்சுறுத்தும். விதைக்க விரும்புவதை எப்பாடுபட்டேனும் விற்றே தீரும். பொருத்தமான ஒப்புமைகளுடன் சம்பந்தமில்லாத உருவகங்களும் நுழைந்திருக்கும்.

இவற்றை இலக்கியப்ப்பதிவுகளுடன் குழப்பிக்கொள்ள கூடாது. நியாய உணர்ச்சி இல்லாத லாஜிக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். கொண்ட கொள்கைக்காக எக்காரணம் கொண்டும் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு வாசனை உண்டு என்பதை மறக்கவேண்டும்.

எல்லாப் பதிவுகளும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்பதற்கேற்ப அனைவரிலும் ஓரிரு இடுகையாவது இப்படி இருக்கும்.

Proposal – வேண்டுகோள், விண்ணப்பம், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு: திட்டமிடல் தென்படும். அனுபவத்தில் கிடைத்த தொலைநோக்கு பார்வை இருக்கும். மக்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தில் அறுதியிட்டு செய்யக்கூடிய ஆலோசனை நிறைந்திருக்கும்.

இதற்கு உதாரணமாக தருமி, ரவிசங்கர் போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

Replies – பதில், பிறர் பதிவு சார்ந்து எழுச்சி பெற்ற கருத்து தொகுப்பு: புரிகிற மாதிரி நச்சென்று நாலு வார்த்தை மட்டுமே இருந்தாலும், அதிரடியாக இருக்கும். அதுவரை ‘கொக்குக்கு மீன் ஒன்றே மதி’ என்பது சேணம் கட்டிய குதிரைகள் தாறுமாறாக ஓட ஆரம்பிக்கும். மறுமொழிகள் தருவதற்கு கூச்சப்படார்.

‘வஸ்தாது தோஸ்துங்க புழங்குதே… ரப்சர் ஆயிடுமே’ என்றெல்லாம் அஞ்சாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். எனினும், எப்பொழுதும் எதிர்த்தே பேசிக் கொன்டிருந்தால் வவ்வால் பதிவர் என்று நாமகரணமிடப்படும் அபாயம் இருப்பதால், தெளிவாக அறிந்த விஷயங்களில், கன்ஸிஸ்டன்ட் கொள்கையில் உறுதியாக இருக்கத் தெரியவேண்டும்.

பின்னூட்டங்கள் பதிவாக சிலர் வைத்துக் கொண்டிருந்தாலும் உடனடியாக தோன்றுபவர்கள் கல்வெட்டு பலூன் மாமா, இகாரஸ் பிரகாஷ், ரோசா வசந்த்.

Log – பதிவு: அனைத்துப் பதிவர்களுக்கும் பதிவுகள்தான் என்றாலும், டைரி என்பதற்கு அணுக்கமாக இருக்கும். அயர்ச்சியுறும் அளவு விவரம் காணப்படும். கருத்துத்திணிப்பு, அறச்சீற்றம் எல்லாம் நிகழாமல் அன்றாட வாழ்வை விவரிக்கும். சுவை, லயிப்பு போன்றவற்றை விட நம்பகத்தன்மை, சொந்த விஷயம், நிஜம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும்.

ஸ்ரீராமதாஸ், மா சிவகுமார் என்று எண்ணி ஒரு கைக்குள் அடங்கும் அரிய சிலர் உண்டு.

இன்னும் இருக்கும். எங்கிருந்தாவது இந்த மாதிரி சுருட்டுவதற்கு, பட்டியல் அகப்பட்டவுடன் தொடரலாம்.

இந்த வருடத்தின் சிறந்த வலைப்பதிவு எது? (பரிந்துரைகள்)

தற்போதைக்கு சில பரிந்துரைகள் (விடுபட்டவை கூட்டப்படும்; தவறவிட்டதை பின்னூட்டத்தில் சுட்டலாம்)

  1. தமிழன்
  2. – அட்சய பாத்திரம்

  3. இன்று – Today
  4. – சரக்கு தீர்ந்து போச்சா?

  5. ஓசை செல்லாவின் ‘நச்’ ன்னு ஒரு வலைப்பூ
  6. – இளைஞர்களின் நாடித்துடிப்பு

  7. கூமுட்டை என்னா சொல்றாருன்னா…..
  8. – யூ ட்யூப் வரும் முன்னே; பின்னூட்டம் வராது பின்னே.

  9. தமிழில் பங்குவணிகம்
  10. – படித்தால் மட்டும் பணம் வருமா?

  11. தாளிக்கும் ஓசை
  12. – பார்த்தால் பசி எடுக்கும்

  13. எண்ணப் பரிமாணங்கள்
  14. – பெரிய விஷயம்

  15. புரட்டிப் போட்டப் படைப்புகள்
  16. – படித்துவிட்ட மேதை

  17. உண்மைத் தமிழன்
  18. – சுருக்கெழுத்து பயிலாதவர்

  19. தனிமையின் இசை
  20. – ஏதோ சொல்ல வருவதாக எண்ணவைப்பவர்

  21. இனியது கேட்கின்
  22. – எனக்கு சண்டையும் வேண்டாம்; சந்நிதியும் வேண்டாம்

  23. நாஞ்சில் மைந்தன்
  24. – No gas; Just hot!

  25. செப்புப்பட்டயம்
  26. – ரொம்ப காலமா எழுதியும் அலுக்கவைக்காதவர்

  27. உள்ள(த்)தை எழுதுகிறேன்.
  28. – அசராமல் ஆடினாலும் டெண்டுல்கர் ஆகாதவர்

  29. கபீரின் கனிமொழிகள்
  30. – மனசுக்கு ஹார்லிக்ஸ்

  31. கப்பி பய
  32. – விஷயம் இல்லாவிட்டால் எழுதாமல் இருப்பவர்

  33. வினையான தொகை
  34. – எல்லா சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தி வருபவர்

  35. மொழியும் நிலமும்
  36. – எல்லா சாமுத்ரிகா லட்சணமும் பொருந்தி வந்து ஐ.எஸ்.ஐ. சான்றிதழும் பெற்றவர்.

  37. குப்பை வலை
  38. – பூசி மெழுகி பினாயில் தெளித்து பாசி பிடிக்க செய்யாதவர்

  39. கென்
  40. – கவிப்பேரரசு; பா. விஜய்யாக மாறாதவர்

  41. BLOGESWARI
  42. – தமிழென்றால் ஆங்கிலம் உண்டல்லோ!

  43. மிதக்கும் வெளி
  44. – தூசி புகாத எழுத்தும் சிந்தனையும்

  45. Tamilgossips(All in one page)
  46. – என்னாத்த சொல்வேனுங்கோ?

  47. மங்கை
  48. – பெண்ணே கொஞ்சம் கோபப்படு

  49. சிறு முயற்சி
  50. – வாழ்க்கைத்தடம்

  51. வலைச்சரம்
  52. – வலைத்தடம்

  53. கையேடு
  54. – சுருங்கச் சொல்

  55. வாழ்க்கைப் பயணம்
  56. – ரொம்ப தூரம் கூட்டிண்டு போவார்

  57. Perspective of Raja Chockalingam
  58. – ஆவின் பாகெட் மணம் மாறா பால்மனம்

  59. ஞாயிறு தபால்
  60. – அனுபவம் பழசு; எழுத்து புதுசு

  61. மலர்வனம்
  62. – படித்ததில் பிடித்தது

1. சென்ற வருடத்துக்கான பதிவு (2006)

2. தமிழ்ப்பதிவுகளில் கவனிக்கத்தக்க முப்பது பட்டியல்: Tamil Blog 30 – Index « Snap Judgment

Observability: Addlepations

-/பெயரிலி.

  • கிள்ளிவிட்டு, கிள்ளுப்பட்டவனுக்கு நோ முண்ணாணூடாகத் தெறிக்கமுன்னாலேயே, கிள்ளியன் “ஐயோ ஐயோ” என்று கத்தினால், வந்து உதைப்பதுதான் கருத்துச்சுதந்திரமோ? அடித்தவனை விட்டுவிட்டு, அடிபட்டவனுக்கு அறிவுரை செய்வதே வலையிலே வழக்கமாகிவிட்டது சாமி.
  • பாதுகாப்பாக nightwatchman ஆட்டம் ஆடுவது கருத்துச்சுதந்திரமல்ல; கருத்துச்சுதந்திரமாகக் காட்டிக்கொள்வது.
  • வங்கி நிலுவை, வீட்டுத்தட்டுமுட்டுச்சாமான் விபரம், கடைசியாக உள்ளாடை தோய்த்த தினம் பற்றிய எல்லா விபரங்களும் திரட்டி திரட்டி எதிர்க்கட்சித்தலைவரிடம் கொடுக்கப்பட்டதாக ஆகிவிடுகின்றது.
  • இப்படியான செய்திகள் கருத்தளவிலே ஒருவரிலே தாக்கமேற்படுத்தும் நோக்குடன் வருவனவல்ல, அடிமனத்திலே தானாகவே மனிதரின் இயல்பான பய & பாதுகாப்பின்னை போன்ற உணர்வுகளைத் தாக்கிக் கருத்தினைப் பதியவைக்கும் நோக்கிலே வருவன.
  • பெரும்பாலான பதிவர்களுக்கு நல்ல ஜெர்ரி ஸ்பிரிங்கர் ஷோ இருந்தால் போதும். இரசித்துக்கொண்டே, பெண்ணியம், பேச்சுச்சுதந்திரம், தலித்தியம், திராவிடம், பார்ப்பனியம், தேசியம், தமிழியம் கூழ் குடித்துக்கொண்டு களி/ழித்துக்கொண்டிருப்பார்கள்.
  • எல்லாம் கடைசியிலே அரசியல்வாதிகளைத் திட்டுவதுபோல, கருத்துச்சுதந்திரம், பெண்ணியம், நாட்ஸியம், பாசிசம், கொட்ஸிலாஸியம், கொம்பேறிமூக்கனிஸம் என்பதாக ஒடுங்கி நொருங்கிப்போகின்றது.
  •  அவர்களிலே பெரும்பாலோனோருக்குக் கருத்து முக்கியமில்லை; தன் கருத்தினை எத்தனை பேர் கேட்கின்றார்கள் என்பதுதான் முக்கியம். தமிழ்மணம் போனால், தேன்கூடு, தேன்கூடு போனால், தமிழ்வெளி, தமிழ்வெளிக்கு மாற்று… இப்படியாகவே எத்தனை திரட்டிகளிலே பெயர்களைக் கொடுத்து எத்தனை பேர் உள்ளே வருகின்றார்கள் என்பதே முக்கியமாகின்றது.
  •  தீ என்றாலே சுடுகின்றது என்கிறீர்கள்; அடுத்த நிமிஷமே தீயே சுட்டால், சுகித்திரு என்று வேதாள வேதாந்தம் அடுத்தவனுக்கு இலவச சப்ளை வேறேயா?
  •  பெரிய மனுசனாவதற்கு முதலாவது செய்யவேண்டிய காரியமே வலையிலே எல்லோரோடும் விழுந்து விழுந்து பேசுவதோ அல்லது ஒருத்தரோடுமே பேசாமலே இருப்பதோதான்.
  • அடிக்குறவுங்களுக்கு அடிவாங்குகிறவனை முன்ன பின்ன தெரியுமா இல்லே சொல்லிக்குடுத்ததை வெச்சுத்தான் ஆளைப்பத்தின அபிப்பிராயமா என்று யோசிச்சு பாருங்களேம்பா? சரி அடிக்கத்தான் ஆயத்தமென்றாலும், அடிக்க முன்னாடி ரெண்டு பக்க நியாயத்தை கேட்டுட்டு அடிக்குறதுதான் நியாயமா, இல்லை அக்கா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு ஒருத்தனைப் பிடித்து சாத்துவது நியாயமா?
  •  நாங்கள்ன்னா நான் மட்டுந்தேன்

Blogger Meets – Chennai & New Jersey

சந்திப்புகள் குறித்து க்வார்ட்டருக்கு (மூன்று மாதங்களுக்கு) ஒன்றாக எழுதுவது வாய்ப்பாடு. (பாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்)

இந்த முறை சென்னை அடுத்த வாரம் நியு ஜெர்சி.

முதலில் ஜெர்சி சந்திப்பில் பிறரைக் கேட்க விரும்பும் கேள்விகள்:

1. நீங்கள் ஏன் வலையில் பதிகிறீர்கள்? எதற்காக நேரம் செலவழித்து பிறர் பதிவுகளில் பதில் போடுகிறீர்கள்?

2. உங்கள் பதிவினால் என்ன பயன்? யாருக்கு எப்படி உபயோகம் என்று தெரியுமா? எவருக்கும் லாபமில்லை என்னும் டிஸ்க்ளெய்மர் கொடுத்தால், என்றாவது உருப்படியாக்கும் எண்ணம் உண்டா என்று அறிய விருப்பம்?

3. ஒரு பதிவுக்கு எத்தனை நேரம் செலவழித்து இடுகிறீர்கள்? பதிவுகள் எவ்வாறு உருக்கொள்கிறது?

4. திரட்டிகளில் வெளியாகுவதால் பதிவுகளில் மனத்தடை (inhibitions) ஏற்படுகிறதா? எந்த வகை எண்ணங்கள், எழுத்துருவாக்கம் காணமல் இப்படி மறையும் அபாயம் உள்ளது? கொந்தி (mask) அணிவது இதற்கு வெளிப்படையான தளத்தை உருவாக்குமா?

5. நண்பர்கள் மனம் புண்படுமே என்று உங்கள் இடுகைகளை சுயதணிக்கை செய்ததுண்டா?

6. இவருடன் ஒத்துப் போனால் இமேஜ் பரிபாலனம் செய்ய முடியாதே என்று ஈகோவுக்குக் கட்டுப்பட்டு, பதிவுகளின் சுதந்திரம் தடைப்படுகிறதா?

7. பதிவுகளில் கதை/கவிதை மட்டுமே இட்டு வருவது, புகழ்பெற்ற பாடல்களான சங்க இலக்கியம்/குறளுக்கு பொருள் கொடுப்பது போன்றவை தேவையா? ஏன்?

8. குறிப்பெடுத்து, பலரோடு பகிர்வதின் நோக்கமாக எதைச் சொல்வீர்கள்? இத்தனை பேரைக் கொண்டு இயக்கமாக, சமூக சக்தியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

9. லாஜிக் இல்லாத வாதங்கள்; அரைகுறையாகச் சொல்லும் ஓட்டைத்  தகவல்; ட்விஸ்ட் ஆட்டம் போடும் சரித்திரம்; – கண்டால் பொங்கியெழுந்து கண்டிப்பீர்களா? பின்னூட்டமாகவா, பதிவாகவா?

10. #4-இன் உப-கேள்வி: பதிவைப் பாராட்டும்போது முகமிலியாக ‘நன்றி’ சொல்வது சரியா? விமர்சித்தால் ‘ப்ராண்ட் நேம்’ அவசியமா? கொந்தி கொண்டு மாற்றுக் கருத்தை முன்வைத்தால், உரியவாறு சென்றடைந்து, திரட்டி நிர்வாகிகளின் நற்பெயரையும் அடைய முடியுமா?
அடுத்ததாக சென்னை சந்திப்பு

  • நிறைய பேரை சந்திக்க முடிந்தது. பாலபாரதிக்கு நன்றி எத்தனை முறை சொன்னாலும் தகும்.
  • குறிப்பாக தங்கவேலு, வினையூக்கி, லக்கிலுக், முத்து (தமிழினி), ஜிரா, மோகன்தாஸ், வரவணையான், வீதபீப்பிள், மிதக்கும் வெளி, யோசிப்பவர் என்று எழுத்தில் மட்டும் பார்த்த பலரை நேரிலும் காண மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.
  • பெண் பதிவராக ஒருவர்தான் வந்திருந்தார்.
  • யாரும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரவில்லை.
  • மூன்று பேருக்கு மேல் இருந்தாலே உரையாடலாக இல்லாமல், உபன்யாசமாகும் அபாயம் உண்டு. நியூ ஜெர்சியிலும் லெக்சராகலாம்!?
  • சிறில்/தருமி போன்ற தெரிந்த குரல்களை ஒலிக்க விட்டதற்கு பதில், சென்னப்பட்டணம் சாராத பிறரைப் பகிரத் தூண்டியிருக்க வேண்டும். (ஜெர்சியிலும் அதிகம் எழுதாத பதிவாளர்களின் சிந்தனையை கேட்க அவா)
  • அனைவரையும் சிறு சிறு குழுக்களாக சந்தித்து இருந்தால், அவர்களின் எழுத்துக்கள் குறித்த எண்ணங்களையும், கொள்கை மேலான சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்திருக்க ஏதுவாகியிருக்கும். (தொடர்ச்சியான இராப்பத்துக்கும் செல்ல இயலாதவாறு அன்றே அமெரிக்கா திரும்பும் சூழல் 😦
  • சந்திப்புக்கு தொலைபேசுவது தவிர்க்கப்பட வேண்டும். ஸ்பீக்கரில் போடாமல், ஒவ்வொருவருடனும் தனித்தனியாகப் பேசுவது, தனிமடலில் உசாவுவது போல் அன்னியமாகப் பட்டது. பதிவுக்கு வராமல், விசாரணை தொனியில் செல்பேசியில் கதைப்பதை, பதிவர் உரையாடலின் பிற்பாடோ முற்பாடோ வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அமெரிக்காவில் ஜனாதிபதிக்குப் போட்டியிடும் அரசியல்வாதிகள் குட காபி-டேபிள் சந்திப்பு என்று நாமகரணமிட்டு, ஆறேழு பேரை மட்டும் வட்டமேஜையிட்டு விவாதித்துக் கொள்வார்கள். அந்த மாதிரி குறு நிகழ்வுகள் திட்டமிடலாம்.
  • தன் எழுத்தைப் போலவே பேச்சிலும் ம. சிவகுமார் ‘எழுதியதை அப்படியே வெளியிட முடியாததால், அடிக்கடி பதிவது இல்லை’ என்று வெளிப்படையாக சொல்லி யோசிக்கவும் விட்டார்.

Social Networking – Tamil Blogs, Thamizmanam, Poongaa

தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?விற்கு, பிரகாஷின் பின்னூட்டத்தைப் பின் தொடர்ந்து…

1. —தமிழிலே மட்டும் தான், இது போன்ற சேவைகளைத் தரும் திரட்டி உண்டு. blogger என்ற மெகா வலைப்பதிவுச் சேவையில் கூட பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி கிடையாது.—

ப்ளாகரில் இல்லாவிட்டால் என்ன? Commentful அல்லது co.mments என்று பல்வேறு இடங்களில் (ப்ளாகர் போலவே ஆங்கில இடைமுகம் கொண்டு) பின்னூட்ட திரட்டி இருக்கிறதே. புழங்குகிற இடத்தில் (தமிழிலே கதைப்பதால்)தானே கேள்வி கேட்கத் தோன்றும்?

இங்கே ஒரு காட்டு காட்டிக்கறேன் 🙂 (அதாவது எடுத்துக்காட்டு). செனகலில் வாழ்ந்தால் Wolof-இல் இருக்கும் திரட்டி குறித்து கவலைப்படுவார்கள். தமிழில் எழுதுவதால் தமிழ் திரட்டி குறித்த சந்தேகங்கள்.

தலைவர் ஸ்டைலில் ஒரு பாடல்: ம்யூசிக்

2. —தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகள் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.—

தமிழ்மணம்/தேன்கூடு இருப்பதால் மட்டுமே வலைப்பதிவில் பின்னூட்டங்கள் கரை புரண்டோடுகிறது என்பது ஜாதி மட்டுமே இட ஒதுக்கீடைத் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்வதைப் போல (அப்பாடா… க்ரீமி லேயரையும் உள்ளே இட்டாந்தாச்சு 😉 (ஜி.ரா.வின் ‘நீ கிரீமி லேயர். புரிஞ்சதா?’ ஒத்து ஊதிக்கறேன் )

பத்ரி, துளசி போன்ற பதிவர்களில் பின்னூட்டம் இட்டுத் தொடங்குவார்கள். இன்னும் விவகாரமானத் தலைப்புகளில் எழுது கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த வேண்டும். தமிழ் திரட்டிகளின் இலவச சேவை இந்த தகிடுதத்தங்களைப் பெருமளவில் தடுத்து, ஆக்கபூர்வமாக புதியவரை வழிநடத்துகிறது.

—உங்க பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும்—
—வலைப்பபதிவுகளுக்கு டிராஃபிக் வரவெக்கிறது எவ்ளோ சிரமமான காரியம்னு..—

தமிழ்மணம்/தேன்கூடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்கு ஒரே டெக்னிக்தானோ…?

3. —பத்தாயிரம் பதிவுகளாகப் பெருகி விட்டால், தமிழ்மணம் உயரெல்லை கட்டுப்பாடு விதித்தாலும் விதிக்காவிட்டாலும், பதிவு செய்யும் frequency அதிமாகும் என்பதால் உங்க பதிவு தோன்றிய சில விநாடிகளிலேயே தொபுக்கடீர் என்று கீழே இறங்கிவிடும்—

அப்ப சைடில் ‘அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்’-இல் மணிக்கொன்றாகப் போட்டு இடம் பிடிச்சுடலாம் 😉 நாற்பது எல்லை இல்லாவிட்டால், கீழே இறங்கும் போதெல்லாம், இன்னொன்று, ‘லிஃப்ட் கராதோ’தான்.

இதற்காகத்தான் QOTD : Scobleized – “semantic” Web பரிந்துரைக்கிறார்கள்: எழுதியதை அப்படியே புரிந்து கொள்வதற்கு பதிலாக, காலத்துக்குத் தக்கவாறு, வினாவிற்கேற்ற விடையாக, ஜெஜெ x கேகே அரசுக்கு ஏற்றவாறு பொருத்தமாக மாற்றுவது எப்படி? இணையத்தின் அடுத்த கட்டம்.

இவ்வளவு உயர்ந்த நுட்பம் இல்லாவிட்டாலும், மறுமொழிகளுக்கும் செய்தியோடை இருக்கும் இந்தக் காலத்தில், அதை உபயோகித்து, முன்னோட்டங்கள் + பின்னூட்டியவர் பெயர் கொண்ட திரட்டி என்று மேம்படுத்தலாமே. மூன்றாண்டுக்கு முந்தைய நுட்பம், இன்றும் பொருத்தமா?

4. —feed reader, google reader போன்ற சேவைகள் இல்லாத நேரத்தில், —

இது எந்த காலகட்டம் ;)) Kinja, ப்ளாக்லைன்ஸ் போன்ற பல சேவைகள் அன்றும் இருந்துச்சே!

தமிழ்மணம் is a trendsetter. டக்கென்று பலரின் பதிவுகளையும் வகையாகத் தொகுத்து எளிதாகப் படிக்க வைத்தது.

—தனிப்பட்ட வலைப்பதிவாளர்களின் பாப்புலாரிட்டியை அதிகரிக்கும் நோக்கத்தில் அல்ல.—

ஆமாம்.

அட்வைஸ் (தமிழ் திரட்டிகளுக்கு) செய்யாமல் என் பதிவு நிறைவுறாது என்பதால் 😉

௧) ‘நோ ஸ்மோகிங்’ முத்திரை மாதிரி, இடுகை பூங்காவுக்கு சமர்ப்பிக்க பட்டதா/இல்லையா என்று குறிப்பால் உணர்த்த icon போடலாம்.

௨) ‘நட்சத்திரமா இருக்க விருப்பமா’ என்று பொட்டி கொடுத்து, சுய/வெளி பரிந்துரை கொடுக்க வைக்கலாம். (முன்பு எப்பொழுதோ எழுதியிருந்தவாறு, தமிழ்மணத்தின் பயனராக பதிந்திருப்பது அவசியம்.)

௩) வோர்ட்ப்ரெஸ்.காம் இரண்டு முறை எனக்கு மக்கர் செய்திருக்கிறது. ஒரு தடவை ‘நன்றியறிவித்தல்’ விடுமுறை சமயம். இரண்டு தடவையும் ‘என்னாச்சு?’ என்று மின்மடல் தட்டியவுடன், இரண்டு மணி நேரத்துக்குள் பதில் கொடுத்தார்கள். அவர்களும் தானம் கொடுக்கிறார்கள். மாட்டுக்கு பல் பிடித்து பார்க்கவும் சங்கோஜமின்றி அழைக்கிறார்கள்.

௪) Poonga – Web Design & Feedback ஆகியவற்றை பூங்காவில் வெளியிடுவதை விட, செயல்படுத்தலாம்.

௫) பூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – Contact-இல் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கலாம்.

௬) பூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – வறட்டி தட்டுவது எப்படி?? போன்ற இடுகைகளை நகைச்சுவை என்று வகைப்படுத்தாமல் சரியாக பொருத்தலாம்.

௭) ‘தமிழ்மணம் திரட்டும் வலைப்பதிவுகளிலிருந்து, வாரந்தோறும் சிறந்தவையென அடையாளம் காணப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு’ (பூங்கா அறிவிப்புகள் » Blog Archive » பூங்கா வலையிதழ் பற்றிய விரிவான அறிவிப்பு) போன்ற பொலிடிகலி இன்கரெக்ட் அறிவிப்புகளால்தான் பாதி சலசலப்பு உருவாகிறது.

கொசுறு: OpenYou: The Limits of Privacy on the Social Web: இத்தனையும் இருந்தும் ஆய பயன் என்ன என்பதை சுருங்க சொல்லும் டக்கர் மேட்டர். இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

தெருக்கோணல்களும் முகங்காட்டத் தெரியாதவர்களின் சேற்றடிப்புகளும்

Anonymous கருத்து:
இந்த செய்தியெல்லாம் தமிழ் நியூஸ் வலைப்பதிவிலோ, சற்றுமுன் செய்திகளிளோ ஏன் வருவதில்லை ?
Wed Apr 11, 03:04:00 PM 2007

Boston Bala said… எல்லாரும் கேள்வி கேட்கிறாங்க 😉
நானும் (விடை) கேட்டு வைக்கிறேன் 😛

அனானி ஸ்டைலில் ஒரு கேள்வி: Snap Judgment போன்ற பதிவுகளெல்லாம் தமிழ்மணத்திலோ பூங்காவிலோ ஏன் வருவதில்லை ?

Thu Apr 12, 10:04:00 AM 2007


Anonymous said… //அனானி ஸ்டைலில் ஒரு கேள்வி: Snap Judgment போன்ற பதிவுகளெல்லாம் தமிழ்மணத்திலோ பூங்காவிலோ ஏன் வருவதில்லை ? //

Snap Judgment பதிவை தமிழ்மணத்துல சேர்த்திடுங்க, வந்துடும். தமிழ்மணத்துல பல குப்பைங்கள் இருக்கு, பத்தோட பதினொன்னா இதுவும் இருக்கட்டும்

என்ன நாஞ் சொல்றது 🙂

அது சரி Snap Judgment எல்லாம் ஒரு வலைப்பதிவா 🙂

Thu Apr 12, 10:53:00 AM 2007 

 

 

-/பெயரிலி. said… ஐயோ! ஐயோ!! பெட்டி மாறிக் கடிதத்தைப் போடுகின்றீர்களே? 🙂

இரண்டு நாட்களுக்கு முன்னால், பூங்கா ஆசிரியரின் படமா என்று கேட்டும் ஒரு பின்னூட்டம் என் இன்னொரு இடுகைக்கு விழுந்தது.

பாபாலாஜி, இதே கேள்வியை தமிழ்மணம், பூங்கா என்பவற்றின் முகவரிகளுக்கே அனுப்பிவைக்கலாமே? அவர்கள் பதிலைத் தரக்கூடும்.

Thu Apr 12, 11:10:00 AM 2007

-/பெயரிலி. said… மேலேயுள்ள முகவரியிலியின் சலசலப்பூட்டும் கருத்தினை அனுமதிப்பதா இல்லையா என்று மணிநேர எண்ணத்தின் பின்னால், அனுமதித்திருக்கின்றேன். இனி இது போன்ற கருத்துகள் தலைப்பிற்குப் பொருந்தாதென்பதாலே அனுமதிக்கப்படாது.

Thu Apr 12, 11:44:00 AM 2007

 

தொக்கி நிற்கும் கேள்வி

—இனி இது போன்ற கருத்துகள் தலைப்பிற்குப் பொருந்தாதென்பதாலே அனுமதிக்கப்படாது.—

சண்டைய வேற இடத்தில் வச்சுக்குங்க என்பதும் சரிதான் 🙂
முதல் பின்னூட்டத்தையே ரிஜெக்டிருக்கலாமே 😉

China – Oka Doubttu

சீனா-வா?

சைனா-வா?

சைனீஸ் சாப்பிடுவோம். ஆனால், சீன ஜனாதிபதி வந்தார் என்று தமிழ்த்தாள் வாசிப்போம்.

பக்கத்து சீட்டுகாரியிடம் நாளைக்கு விசாரிக்கணும்.

இதே மாதிரி

  • துருக்கி, டர்க்கி;
  • ஆஸ்திரேலியா, அவுஸ்திரேலியா
  • ருசியா,ரஷியா
  • செருமேனி,ஜெர்மனி
  • எகிப்து, ஈஜிப்ட்
  • பாலஸ்தீனம்,பாலெஸ்டைன்

உள்ளூர்காரங்க பாஷையா? நாவுக்கேற்ற மொழியா?

News Stories of Interest

கருத்தைக் கவர்ந்த செய்திகள்:

  1. பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்கு

    குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவருக்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.

  2. புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?

    சோனியாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுத்தார்களே! அந்தப் படத் துணுக்காக இருக்கப் போகிறது?

  3. அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

    ‘மிஸ்… என்னை அடிச்சுட்டான் மிஸ்’ என்னும் சச்சரவுகளையே டீச்சர் விலக்கி விட்டுக் கொண்டிருந்தால், எப்பொழுது அனைத்து மக்களுக்கும் உடல்நலன் என்னும் ‘பாடம்’ எல்லாம் கவனிக்க முடியும்?

  4. 6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்

    படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45.

  5. உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்

    சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    மற்ற 75 விழுக்காடு இடங்களில் வழமை போல் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் தலைவர்.

  6. ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும்

    செப்டம்பரில் கல்யாணம் நடந்தது. வேகமான தயாரிப்பு.

  7. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

    மாற்றி மாற்றி அறிக்கை, போராட்டம் அரங்கேறுகிறது. சொற் சிலம்பம் முடியும்போது, அணை கட்டி திறப்பு விழாவுக்கு மத்திய பா.ம.க., வைகோவும் உள்ளூர் ஆளுங்கட்சியும் செல்லலாம்.

  8. கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை

    ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.

    “ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது.

  9. வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

    “மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன” என்று கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு ஹேமமாலினி “அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்” என பதிலளித்திருந்தார்.

Google Page rank – Tamil News

அமெரிக்கா வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அலுவலில் இருந்து அழைப்பு. அப்பொழுதெல்லாம் வேலைக்கு சேருவதற்கு, நல்ல நிறுவனமாக இருந்தால் கணிப்பொறியாளர்களுக்குப் போதாது. ஹ்யூமன் ரிஸோர்சஸில் க்ளோசப் விளம்பரம் கொடுக்கத் தகுந்த பல்வரிசையுடன், பாரதிராஜா கண்ணில் பட்டால் ‘ர’ வரிசை நாயகியாகும் அபாயம் வாய்ந்த மேலாளர் வாய்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட நிறுவனத்தில்தான் நானும் இருந்தேன். ‘அமெரிக்கா போகப் போறோம், வெட்டிப்பயல் கதைகளில் வருவது போல் காதல் மலர்ந்திருக்குமோ!?’ என்னும் பயிர்ப்பு கலந்த துள்ளும் மனத்துடன் சென்றேன்.

நேர்காணல் அன்று பளீரிட்ட அதே பற்பசை சிரிப்பு. போகியன்று வீட்டுக்கு வெள்ளையடிப்பதை, நாள்தோறும் ‘வைட்டனர்’ போடுவதை அறியாத வயது. அமெரிக்கா குறித்து துப்புகள் கொடுக்க ஆரம்பித்தாள்.

அவற்றில் இன்றும் கடைபிடிக்க, கால் கட்டைவிரலை கார்பெட்டில் சுழித்து நாணிக் கோணுவது: ‘சுயதம்பட்டம்‘.

தற்பெருமை கூடாது என்று வளர்ந்த அறிவு. இளைய தளபதி வேறு ‘அடங்காம ஆடினே தலை இருக்காது’ என்று மிரட்டி வைத்திருந்தார். கைக்கெட்டும் கனவு (கன்னியா இல்லையா என்றறியேன் பராபரமே) HR ‘கொட்டு முரசே’ என்றது. பஸ்மாசுரனாக மோகினியிடம் அக அழகை முன்வைக்கலாம் என்னும் எண்ண விமானத்தை, சடன் ப்ரேக் இட்டு, அமெரிக்க விமானக்குதிரையை முடுக்கிவிட்டேன்.

ஆட்டோ ரிக்ஷாவில் குறைந்தபட்சமாக இருபது ரூபாய் கேட்பது போல், அமெரிக்காவில் அனைவருமே தங்கள் performance appraisal-களில் 20% லாபத்தைக் கூட்டியதற்கு உதவியதாக உட்டாலக்கடி போடுகிறார்கள். அனைவரின் மதிப்பு கூட்டு சதவிகிதத்தைக் கணக்கிட்டால், கம்பெனிக்கு 200 கோடி% லாபம் அதிகரித்திருக்க வேண்டும்.

வலை வந்தபிறகும் இந்த அன்புத்தொல்லையை சகபதிவர்கள் செவ்வனே நிறைவேற்றினார்கள். ‘நான் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறிது நேரம் விழித்திருக்கவும்.‘ என்று வருமுன் காப்போன் மின்மடல் வரும். கொஞ்ச நாள் கழித்து ‘நான் பதிவு போட்டு விட்டேன். படிக்கவும்.‘ என்று மாற்று செய்தியோடை அறிவிப்பு வரும். இன்னும் கொஞ்ச மாதம் கழித்து ‘நான் பதிவு எழுதினேனே! படித்து முடித்து ஒழுங்கு மரியாதையாக மறுமொழி போடவும்.‘ என்று செல்லக் கொஞ்சல் வந்து சேரும்.

சுயம் பேசுவதை நிலைநிறுத்த இத்தனை முஸ்தீபு எதற்கு?

சுட்ட செய்திகளைத் தொகுத்து வைக்கும் Tamil News பதிவிற்கு கூகிள் பக்க மதிப்பில் 6/10 கிடைத்திருக்கிறது.

நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம் போன்ற ஆதிகால அசல் தாதாக்களும், தேன்கூடு, தமிழ்மணம் போன்ற இக்கால கல்லடி கணை வாங்கும் வலைமாந்தர்களும் கூட 5/10 என்று கூகிளாண்டவரால் அருள்பாலிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், ஆறு போட்டது பெருமைக்குரியது.

சொர்ணமால்யா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களைத் தேடித்தான் பலரும் வருகிறார்கள். சாத்தான் கேட்டது போல்

Prashanth – Grahalakshmi : Counseling to avoid Divorce – A quick end to the Cine Star’s marriage life « Tamil News: இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி இந்த வலைப்பதிவை நடத்திவருகிறீர்கள். இந்த மாதிரி முக்கியமான செய்திகளைத் தவிர்த்து அதில் கிடைக்கும் நேரத்தில் இந்த வலைப்பதிவில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கலாமே

தோன்றினாலும், நாளொன்றுக்கு நமீதா ரசிகர் மன்றத்தையும் நீலிமா நாயுடுவையும் வைத்துதான் 1,500 வாடிக்கையாளர்கள் கிடைக்கிறது. எத்தனை பேர் ‘படம்’ பார்க்க வருகிறார்கள், எத்தனை பேர் ஞானம் பெற வருகிறார் என்பதெல்லாம் புள்ளிவிவரங்களில் அறியமுடிவதில்லை.

ஏதோ கூடிய சீக்கிரம் சேமநல நிதியை நம்பாத மாதிரி, இணைய வங்கியில் ஓவர்ஃப்லோ ஆகுமாறு, லஷ்மி வந்து சேர்ந்தால் சரி.


உங்களின் பக்க மதிப்பை அறிய இங்கு செல்லவும்: Google Page Rank Checker – FREE PageRank Calculator

கூகிள் வலைமதிப்பு நுட்பம் குறித்து அறிய: PageRank – Wikipedia

உங்களை நீங்களே முன்னிறுத்திக் கொள்வதாக இருந்தால் கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்கலாம்:

1. உங்களை நீங்களே எள்ளல் செய்து நிதர்சனத்தை ஒப்புக் கொள்ளவும். Shameless self-promotion என்று மறுப்புக் கூற்று இடலாம். தினமணி, மாலைமலர், பிபிசி தளங்களின் முதுகில் சவாரி செய்து திருட்டுத்தனமாக பெற்றது என்று ஒப்புக் கொள்ளவும்.

2. நண்பர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில், ஒவ்வொருவரையும் தனிப்பட விளிக்கவும். பொத்தாம் பொதுவாக கூட்டாஞ்சோறு To: அடித்தால், பயனில்லை.

3. மற்றவர்களைக் கவர, அவர்களின் சுட்டி கொடுத்தாலே போதுமானது. ‘உன்னைப் பற்றி கூட, நடுவில் ரெண்டு வார்த்தை சொல்லியிருக்கேன்‘ என்று சொன்னாலே, பலரும் விழுந்தடித்து வந்து படித்துவிடுவார்கள்.


கடைசியாக Tamil News குறித்த சில புள்ளிவிவரங்கள்:

இதுவரை மொத்த பார்வையாளர்கள்: 122,064

ஒரே நாளில் மிக அதிகமாக வந்தவர்கள்: 1,810

நகலெடுத்து, சுராதாவில் எழுத்துரு மாற்றி பதிந்த செய்திகளின் எண்ணிக்கை: 750

அவற்றின் தொடர்ச்சியாக வந்த மறுமொழிகள் (பெரும்பாலானவை என்னுடையது): 233

இடுகுறிச் சொற்கள் (Tags): 5,316


| |