Category Archives: Rajini

‘Sivaji – The Boss’ Punch Dialogues

சிவாஜி பன்ச் டயலாக் என்று கிசுகிசுப்பவை

1. நல்லவன்னு சொல்ற அளவுக்கு நான் ரொம்ப கெட்டவனும் இல்ல..
ரொம்பக் கெட்டவன்னு சொல்றதுக்கு நான் ரொம்ப நல்லவனும் இல்ல!

2. தோக்கோஜி… நான்தான் சிவாஜி

3. நான் பார்க்கதான் சாஃப்ட்வேர்
எறங்குனா மவனே ஹார்ட்வேர்

4. நான் நெனச்சா அது நடந்த மாதிரி
நான் நடந்தா அது ஜெயிச்ச மாதிரி!

5. நான் 1 செண்டிமீட்டர் தூரத்துக்கு நல்லவன்!
ஏன்னா… 20 கிலோமீட்டர் நீளத்துல கெட்டவன்!!

6. உனக்கு ஆண்டவன் வெக்கறாண்டா டேட்டு;
அன்னிக்கு சிவாஜி வெக்கறான் பார் வேட்டு!

7. நான் நல்லவனுக்கு சாமி!
நயவஞ்சகனுக்கு சுனாமி!

8. விட்டுக்கொடுத்தவன் என்னைக்கும் கெட்டதில்ல…
கெட்டவன் என்னிக்கும் விட்டுக்கொடுத்ததில்லை

9. சொல்லி அடிக்கிறவன் வீரன்
சொல்லாம அடிக்கிறவன் கோழை
நான் சொல்லவும் மாட்டேன்; அடிக்கவும் மாட்டேன்!
ஆனா… கொன்னுடுவேன்.

10. நல்லவனுக்கு நான் தருமன்;
கெட்டவனுக்கு நான் எமதர்மண்டா!

Periyar Movie – Rajni Quote: Banner Ad

Rajni_fans_discussions_Udhyam_Periyar Banner_Quote.JPG

பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே!: ரஜினி ஏக்கம்

“பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே’ என்று “பெரியார்’ திரைப்படத் தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஜினிகாந்துக்காக “பெரியார்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து வியந்த ரஜினிகாந்த், படத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம்:

“பெரியார்’ படம் பார்த்து பிரமிப்பு அடைந்தேன். பெரியாருடைய கொள்கைகளை அறிந்திருக்கிறேன். ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இந்தப் படத்தின் மூலம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்த பிறகு பெரியார் மேல் எனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. சமூக நலனுக்காகப் போராடிய காலங்களில் அவருடன் நாம் இல்லையே என்ற ஏக்கம் படம் பார்க்கும்போது ஏற்பட்டது. இருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகிய முதல்வர் கருணாநிதி, கி.வீரமணி ஆகியோரோடு எனக்கு பழகுகின்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், பெரியாராகவே வாழ்ந்து காட்டிய நடிகர் சத்யராஜுக்கும், அருமையாக இயக்கிய ஞானராஜசேகரனுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.