Category Archives: Quotes

Anbazhagan says ‘Don’t keep Kalainjar TV’? Attacks Free Color TV scheme

வீட்டில்’டிவி’ வைத்திருப்பதை விட பாட்டன், பாட்டியை வைத்திருங்கள்

– அமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் (செய்தி: தினமலர்)

“நமது பண்பாடே ஆதரவு தருவது தான். சமூக சீர்திருத்தம் என்பது அனைவரையும் அரவணைப்பது.

என்னைக் கேட்டால், வீட்டில் ‘டிவி’ வைத்திருப்பதை விட பாட்டன், பாட்டியை வைத்திருந்தால் பிள்ளைகளுக்கு பற்று, பாசம், அரவணைப்பு கிடைக்கும்”.

Kalainjar Karunanidhi on HR &CE: Quotable Quotes: Dinamalar

தமிழக முதல்வர் கருணாநிதி: (Hindu Religious and Charitable Endowments Dept)

தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டில்,

  • ஆயிரத்து 493 கோவில்களுக்கு திருப்பணி முடித்து குடமுழுக்கு விழா நடந்துள்ளது.
  • 106 கோடி ரூபாய் செலவில்,
  • 253 கோவில்களில் திருப் பணி நடந்து வருகிறது.
  • 20 கோவில்களில் தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.

நாம் பகுத்தறிவுக் கொள்கையை கொண்டிருந்தாலும், ஆட்சிப் பொறுப் பில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாரபட்சமற்ற பொது நிலையை என்றும் மறந்ததில்லை.

“Lions for Lambs”

If you don’t STAND for something, you might FALL for anything.

திரைப்படம் குறித்த ஐ.எம்.டி.பி. வலையகம்.

Vikadan Bits: Selvaraghavan Interview & SMS Lollu

சோனியாவுடன் காதல் திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?’

‘குட்! நாங்க சேர்ந்து வாழ்ந்-துட்டு இருந்தோம். வீட்ல, பேசி கல்யாணம்னு ஒண்ணு பண்ணிவெச்சாங்க. என்ன… முன்னாடி நண்பர்களா இருந்தோம். கல்யாணத்துக்-கப்புறம் அதுக்குப் புதுசா ஒரு பொறுப்பு வந்து சேருது. முன்னாடி சந்திச்சா, சாப்பிட்டாச்சான்னு கேட்டுப்போம். இப்போ, ‘சாப்பிடுங்க’ன்னு ஒரு அழுத்தம் கிடைக்குது. நாங்க நல்ல லவ்வர்ஸ்… அதையும் தாண்டி எப்பவுமே நல்ல ஃப்ரெண்ட்ஸ்!’

செல்வராகவன்

எப்பவுமே ஒரு கலை-ஞனை அவனோட வயசு, அனுபவம், பக்கு வம்னு ஏதாவது ஒண்ணு அடுத்தடுத்து எடுத்–துட்டுப் போயிட்டே இருக்கும். காதலோட சந்தோஷ-மும் வலி-யும் வாழ்க்கையா இருந்தப்போ, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி’யும் பண்ண முடிஞ்சுது. சென்னை மாதிரி ஒரு நகரத்தின் இன்னொரு முகத்தைத் தேடினப்போ, ‘புதுப்பேட்டை’ கிடைச்சுது.

ஒரு குடும்பத்தின் சுக துக்கங்களில் விழுந்தபோது ‘ஆட வரிலு…’ன்னு தெலுங்குப் படம் பண்ணினேன். இப்போ எமோஷ னலான மேக்கிங்கா வேற ஏரியா வுக்குப் போற சினிமா என் கனவா இருக்கு. அதுதான் ‘ஆயிரத்தில் ஒருவன்’.


அபுதுல் கலாமிடம்
2020-ல இந்தியா வல்லரசு ஆகும்னு சொன்னீங்களே… அது இந்த 20-20தானா சார்?

iRama Gopalan on Karunanidhi & Gandhi; CPI Pandiyan on Supreme Court & Bandh

1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாண்டியன் அறிக்கை: (தினமலர்)

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத் துக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருப்பது ஆச்சர்யமானது அல்ல. கேரளா மற்றும் மும்பை கோர்ட்டுகள் முழு அடைப்பிற்கு எதிராக ஏற்கனவே தீர்ப்புகள் வழங்கியுள்ளன. ஊர்வலங்கள் நடத்துவதற்கு கூட தடை விதிக்கப்பட் டுள்ளது. 200 ஆண்டுகாலம் போராடிப் பெற்ற உரிமைகளை ஒரு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பறிகொடுக்க இயலாது. மக்களின் பிரதிநிதிகளாக செயல்படும் அரசியல் இயக்கங்கள், மக்கள் நலன் காக்க நடத்தும் போராட்டங்களை மக் களால் தேர்ந்தெடுக்கப் பட்ட, பார்லிமென்ட் டால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் தடுப்பது முறையல்ல…

2. இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன்: (தினமலர்)

காந்திய வழியில் கருணாநிதி போராடுவதாக காங்கிரஸ் தலைவர் சான்றிதழ் கொடுத்துள்ளார். சாராயக் கடை திறந்தது, லாட்டரிச் சீட்டுக்களால் ஏழைகள் குடி கெடுத்தது, தேர்தல் நேரத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டது, ராமரை அவமதித்தது எல்லாம் காந்திய வழி என அந்தத் தலைவர் கூறுகிறார் போலும்.

நல்லாச் சொன்னாங்க நாலு வார்த்தை – உண்மை

1. அமைச்சர் மு.க. ஸ்டாலின், (திருமண நிகழ்வு ஒன்றில்)
வைதீகத் திருமணங்களை நடத்தி வைக்கும் அய்யர்களுக்கு இருந்த கிராக்கி மாறி தற்போது சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைக்க என்னைப் போன்ற தலைவர்களுக்கு அதிக கிராக்கி இருக்கிறது.

2. பூட்டாசிங் (தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர்)
தேர்தல் ஆணையத்திற்கு இருப்பதைப் போன்ற அதிகாரம் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்திற்கும் வேண்டும். அப்போதுதான் ஆணையம் எடுக்கும் முடிவுகள் மீது சுப்ரீம் கோர்டு தலையிட முடியாது. இட ஒதுக்கீடு சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரம் ஆணையத்திற்கு வேண்டும்.

3. கவிஞர். இன்குலாப்.
அவருடைய (தஸ்லீமா நஸ்ரீன்) கேள்விகளுக்கு நேர்மையான பதிலைத் தர முடியாதவர்கள் அவரை பத்வாகளிலும் (இஸ்லாமிய மத அடிப்படையிலான தீர்ப்புகள்) தாக்குதல்களாலும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். கருத்தை கருத்தாய் எதிர்கொள்ள வேண்டுமே தவிர தாக்குதல்களால் எதிர்கொள்வது பாசிசத்தின் வெளிப்பாடு.

4. அப்துல் நாசர் மதானி, (கேரள மக்கள் ஜனநாயக முன்னணி தலைவர்)
பாப்ரிமஸ்ஜித் பிரச்சினையிலும் எல்லை கடந்து பலபேர் மனம் புண்ணாகும் படி வார்த்தைகளை பிரயோகப்படுத்தியிருக்கேன், இனி அது மாதிரி கடுமையான வார்த்தைகளைப் பேச மாட்டேன். ஒன்பதரை ஆண்டு சிறை வாழ்க்கை என்னை அப்படி பக்குவப்படுத்தியிருக்கிறுது.

நன்றி: உண்மை

Ingmar Bergman = இயக்குநர் பாலச்சந்தர்

‘நகுலன்’ தேவாதி தேவன் என்று எல்லாரும் புகழ, தரைக்கு இறக்கினார் அ.மி. அது போல் இங்மேர் பெர்க்மேன் (Ingmar Bergman – ஐ எல்லாரும் புகழ, மறுபக்கம் காட்டுகிறது நியு யார்க் டைம்ஸ்.

Nearly all the obituaries I’ve read take for granted Mr. Bergman’s stature as one of the uncontestable major figures in cinema — for his serious themes (the loss of religious faith and the waning of relationships), for his expert direction of actors (many of whom, like Max von Sydow and Liv Ullmann, he introduced and made famous) and for the hard severity of his images. If you Google “Ingmar Bergman” and “great,” you get almost six million hits.

At least part of his initial appeal in the ’50s seems tied to the sexiness of his actresses and the more relaxed attitudes about nudity in Sweden; discovering the handsome look of a Bergman film also clearly meant encountering the beauty of Maj-Britt Nilsson and Harriet Andersson. … It was a seductive error, but an error nevertheless.

If the French New Wave addressed a new contemporary world, Mr. Bergman’s talent was mainly devoted to preserving and perpetuating an old one. … We remember the late Michelangelo Antonioni for his mysteriously vacant pockets of time, Andrei Tarkovsky for his elaborately choreographed long takes and Orson Welles for his canted angles and staccato editing. And we remember all three for their deep, multifaceted investments in the modern world — the same world Mr. Bergman seemed perpetually in retreat from.

சன்னாசி மட்டும்தான் அசோகமித்திரனுக்கு பதில் கொடுக்க முற்பட்டார். பெர்க்மனுக்கு பலர் கிளம்பியிருக்கிறார்கள். ‘தம்ஸ் அப்’ சொல்லும் ரோஜர் ஈபர்ட் இங்கு கவனிக்கிறார்..

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன – இந்திரா பார்த்தசாரதி

Kizhakku Book Wrapper - Indira Parthasarathyகல்லூரியின் வளாக நேர்காணலில் எல்லோருக்கும் வேலை கிடைத்துக் கொண்டிருந்த சமயம். பெங்களூர் நிறுவனம் கிடைத்தால் தேவலாம். மென்பொருள் எழுத வைத்தால் சிலாக்கியம். சம்பளம் நிறைய கொடுத்தால் பூரண திருப்தி. நூறு பேர் போட்டியிடும் பந்தயத்தில், முந்தி வந்து வேலை கிடைத்தாலும், கிடைக்கப்பெற்ற அனைவரும் அசுவாரசியமாய் இருப்பார்கள்.

‘ஒப்பந்தம் கேட்கிறான்’, ‘இனிமேல் வரப்போவதுதான் நல்ல நிறுவனம்’, ‘சம்பளம் கம்மி’… காரணங்கள் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தது.

முற்றுகைகளைத் தொடர்பவனுக்கு இந்த அதிருப்தி தீர்மானங்கள், விரக்தி கலந்த வெறுப்பை ஊட்டுபவை. அவனுக்குத் தேடல் எதுவும் இருக்காது. லட்சியம், குறிக்கோள், ஆதர்சம், சுயவிசாரம், வாழ்க்கைப் பயணம், கொள்கைப்பிடிப்பு எல்லாம் பறந்தோடும். தனக்காக இல்லாவிட்டாலும், பிறருக்காக, நிரூபிப்பதற்காக அனுதினமும் கர்மமே என்று படை எடுப்பான்.

இப்பொழுது வேலை தேடாவிட்டாலும், இத்தகைய சூழல் அமைந்தே உள்ளது. பொன் செய்யும் மருந்தாகிய போதுமென்ற மனத்துடன் சிலரும், கால்களைத் தரையில் ஊன்றிக் கொண்டு அனுமனாக விசுவரூபம் எடுத்து சூரியன்களைத் தொடும் உச்சிக்கு விரைபவர்களும் கிடைக்கிறார்கள்.

‘பொம்மரில்லு’ நித்யாவாக கதாநாயகி. ‘விடுகதை’ பிரகாஷ்ராஜாக நாயகன். ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திலகம். ‘சொப்ரானோஸ்’ முடிவு. இப்படித்தான் டக்கென்று கதைச் சுருக்கம் போடலாம்.

பதில்கள் கிடையாது. வழிகாட்டல்கள் கிடைக்காது. வாழ்க்கைப் புரிதல்கள் சொல்லித்தரப் பட மாட்டாது.

ஆனால், மனிதர்களுக்கு இடையே உள்ள உறவை உணரலாம். எப்படி அது வளர்கிறது, எங்கே தேய்கிறது, எப்பொழுது அறுபடுகிறது என்று பார்க்கலாம். பாசத்தில் மாறுதல்கள் விளைவிக்கும் சக்திகளையும் காலப்போக்கில் எங்கெல்லாம் இறக்கை முளைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். தன்னை அர்த்தப்படுத்துவதாக நினைத்து சுய வெளிப்பாடுகளைப் போர்த்தி உலகத்தின் அவசரத்தையும் கலகத்தின் போக்கையும் அனுசரிப்பதை அறியலாம்.Inthira Paarthasarathy

‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’ குறித்த லக்ஷ்மியின் பகிர்வை பார்க்கவும். படித்ததில் பிடித்ததை இங்கு பார்க்கவும்.

1. திருமணம் என்றாலே பரஸ்பர தியாகங்கள் என்றுதான் அர்த்தம்.

2. ‘Now or Never… இதுதான் என் வாழ்க்கைத் தத்துவம்.’

3. ‘நான் கோபப்படப் போறதில்லை. கோபப்படறதுக்குக் கூட, கொஞ்சம் தரமான குற்றச்சாட்டா இருக்கணும். நீங்க சொல்றது அதுக்குக்கூட யோக்கியதை இல்லை.’

4. கதாசிரியரையும் அந்த நெருப்பில் தூக்கிப் போடலாமென்று தோன்றிற்று, அமிர்தத்துக்கு. கதையிலே வரும் ‘வில்லன்‘ படுபாவியல்ல; கதாசிரியர்தான்.

5. ‘வங்காளத்திலே புதுசு புதுசாindira parthasarathi ‘தியேட்டர் குரூப்’ ஏற்படறதுன்னா புதுசு புதுசா ஏதாவது செஞ்சு காட்டணும்ங்கிற நமைச்சல்னாலே… ஆனா நம்மவங்க புதுசு புதுசா ‘தியேட்டர் குரூப்’ ஏற்படுத்தறது, பழைய குழுவிலே தனக்கு சான்ஸ் கிடைக்கலேங்கிற காரணந்தான்…’

6. வரிசை வரிசையாக ஆஸ்பத்திரிக் கட்டிடங்கள்… உள்ளே எவ்வளவு முனகல்களோ, வேதனைகளோ, வெளியே நின்று பார்த்தால் யாருக்குத் தெரியும்?

7. நிகழ்ச்சி என்பது நினைவுக்குச் செய்யும் கொடுமை. கனவு கனவாயிருப்பதில் எவ்வளவு சுகம்! நேரே பார்ப்பதை விட, வண்ணக் கண்ணாடியில் பார்க்கும்போது, பொருட்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!

8. ‘ஒரு கொள்கையிலே புகுந்துக்கிறது, ஒரு பந்தத்திலே மாட்டிக்கிட்டு முழிக்கிற மாதிரி…’

9. அவ்வாறு நினைவுறுத்துவதினால் நித்யா என்கிற இனிய கனவு, கடந்து போன இளமைப் பருவத்தின் நினைவுச் சின்னமாய், சிந்தனையில் மொக்கவிழ்ந்து மணம் வீசுகின்றது என்பதினாலா…?indira parthasaradhy

10. ‘கல்யாணம் செய்துண்டா இமேஜ் ஏது? இப்படித் துரத்திண்டு போறதுதான் உங்களுக்குத் திருப்தியைத் தர்றதோ என்னவோ?’

11. பாலுறவு என்பது ஆணோ பெண்ணோ ஒருவர் மீது ஒருவர் தீர்க்கும் வஞ்சினமோ?

12. ‘இவ்வளவு சீக்கிரம் ஒருத்தராலே சென்டிமெண்ட்டலாக முடியும்னா, அவர்கிட்ட அடிப்படையிலே ஏதோ கோளாறுன்னு அர்த்தம்’

13. ‘உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள பொருத்தமில்லாத தன்மையை ஓர் லட்சிய வேகத்தோட புரிஞ்சிண்டு நான் அனுதாபப்பட்டது வாஸ்தவம்தான். ஆனால், உங்க மாதிரி இருக்கிறவங்களுக்கு, அதாவது தைரியமில்லாம ஒரு சோகக் காவியத்தின் கதாநாயகன் மாதிரி, ஒடிஞ்சு போன இறக்கைகளை ராக்கெட்னு நினைச்சுண்டு பறக்கப் பார்க்கிற, அரை வேக்காட்டுக் கலைஞர்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கிற தெம்பு கிடையாது. சந்தர்ப்பம் கிடைச்சால் அதை அந்தச் சமயத்திலே பயன்படுத்திக்கணும்னு நினைக்கிற சுயநலந்தான் உங்களுக்கு…’

14. மந்தையிலிருந்து விலகிச் செல்ல முயன்ற புரட்சி ஆடு, பொறியில் அகப்பட்ட எலி, விடுதலையைக் கண்டு பயப்படுகின்றது. சமூகம் என்பது தவிர்க்க முடியாத சிறை! ஒன்று ஞானியாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பைத்தியமாக இருக்க வேண்டும். ‘தன்வயமான தர்மம்’ என்பது அப்பொழுதுதான் சாத்தியம்.

காதல், ஊடல், சல்லாபம்…

‘இந்தச் சமாதிகளெல்லாம் யாருக்காக இருக்கும்?’ என்று கேட்டாள் நித்யா.

‘இதென்ன கேள்வி? மொகலாய மன்னன் அந்தப்புரத்திலிருந்த அவனோட அறுநூத்திச் சொச்சம் ராணிகளுக்காக இருக்கும்.’

‘உங்க குரல்லே லேசாப் பொறாமை தெரியறது…’

கடைசியாக… இ.பா வார்த்தையில் நாவலைக் குறித்து சொல்ல வேண்டுமானால்:

‘இது நல்லாயிருக்கு’

‘என்ன இப்படி சாதாரணமாச் சொல்றே’

‘எளிமையா சொன்னாத்தான் நன்னாச் சொல்லறதா அர்த்தம். பாக்கியெல்லாம் வெறும் சொல் விரயம்தான்.’

தொடர்புள்ள முந்தைய பதிவுகள்:
1. குருதிப்புனல் (நாவல்)

2. இந்திரா பார்த்தசாரதி: ஆறாம்திணை

3. Thinnai: தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல்’ – பாவண்ணன்

4. முரண்பாடுகள் – தமிழ் சிஃபி சமாச்சார் பத்திகளின் தொகுப்பு :: எதிர்வினை

Tom Tancredo for President of USA

1. Tancredo Takes a Tough Stance – The Caucus – Politics – New York Times Blog: “Tancredo said that the United States should reserve the right to bomb Islam’s two holiest sites, Mecca and Medina, in retaliation for a major terrorist attack on American soil. “If it is up to me, we are going to explain that an attack on this homeland of that nature would be followed by an attack on the holy sites in Mecca and Medina,” Mr. Tancredo told Iowa voters last week.”

2. Tom Tancredo’s final solution. – By Timothy Noah – Slate Magazine: “Meet the biggest fool running for president.”

3. Raymond J. Learsy: The Madness of Congressman Tancredo’s Fulminations Threatening Mecca and Medina – Politics on The Huffington Post

Quotes – Jeyamohan on Historical Archives (Book Reader)

1. Thinnai: சில வரலாற்று நூல்கள் 1மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்) :: ஜெயமோகன் [The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989]

2. Thinnai: சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ் :: ஜெயமோகன் [Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ]

ஆங்கிலேயர் எழுதிய ஆவணக்குறிப்புகள் மற்றும் வரலாற்று நூல்கள் பொதுவாக கீழ்க்கண்ட சிறப்புகள் உடையவை.
1. தெளிவான செறிவான நடை
2. ஏராளமான தகவல்கள்
3. தகவல்களை பகுக்கவும் தொகுக்கவும் அறிவியல்நோக்கு சார்ந்த ஒரு அடிப்படைத்தளம்
4. பிரச்சார நோக்கம் இல்லாத பதிவுத்தன்மை.
5. பலதுறை அறிதல்களை தொகுக்கும் இயல்பு

அவை அனைத்துக்குமே கீழ்க்கண்ட குறைகளும் உண்டு
1. ஆதிக்க இனத்தின் நோக்கில் இந்தியாவை பார்ப்பதனால் உருவாகும் இயல்பான அலட்சியமும் புரிதல் குறைகளும்
2. மதக்காழ்ப்பும் மதக்காழ்ப்புள்ள பாதிரிமாரின் நூல்களை சார்ந்திருக்கும் தன்மையும்
3. இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டின் பல்லினப் பலமொழி பலமதப் பண்பாட்டை எளிதில் பொதுமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி.

கட்டப்பொம்மு நாயக்கனும் பூலித்தேவனும் நடத்திய கலகங்களின் விரிவான சித்திரம் அளிக்கப்படுகிறது. கட்டப்பொம்மு நாயக்கரின் கலகம் நாம் நன்கறிந்த சிவாஜிகணேசனின் திரைப்படம் காட்டும் சித்திரத்துக்கு பலவகையிலும் வேறுபட்டு இந்நூலில் காட்சியளிக்கிறது. கட்டபொம்மு நாயக்கருக்கு தேசியம் சார்ந்த புரிதலோ ஒரு நாட்டை அமைக்கும் நோக்கமோ இருந்ததாக தெரியவில்லை.

பிற பாளையக்காரர்களைப்போல அவரும் மற்ற பாளையபப்ட்டுகளில் மக்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷார் அவரை கட்டுப்படுத்தி கடுமையான கிஸ்தி போடுகிறார்கள். பொதுவாக பாளையக்காரர்களுக்கு போடப்பட்ட கிஸ்திக்கு எதிராக கடுமையான அதிருப்தி இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெ·ப்.ஜாக்ஸனிடம் வாதாடியபின் இறங்கிச்ச்செல்லும் வழியில் கட்டப்பொம்மு நாயக்கர் அவரை தடுக்க முயன்ற ஆங்கில ஊழியர் கிளேர்க்கை கொன்று தப்பிச்செல்கிறார்.

கட்டபொம்மு நாயக்கருக்கு அவரைச் சுற்றியிருந்த மறவர், வன்னியர் பாளையக்காரர்கள் அனைவருமே எதிராக இருக்கிறார்கள். ஊத்துமலை ஜமீந்தாரும், சிவகிரி ஜமீந்தாரும் சுப்ரமணியபிள்ளை தலைமையில் தங்கள் நாடுகளில் கொள்ளையடிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்களுக்கு எதிராக போராட வெள்ளையரை தங்கள் உதவிக்கு அழைக்கிறார்கள். இவர்களின் உதவிகொண்டு கட்டப்பொம்மு நாயக்கர் ஒடுக்கப்படுகிறார். இதன் விரிவான தகவல்கள் இந்நூலில் அளிக்கப்படுகின்றன.


3. Thinnai: சில வரலாற்று நூல்கள் – 3 மதுரை நாயக்கர் வரலாறு : (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) :: ஜெயமோகன் [பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018]

  • விஜயநகரத்தின் மிகச்சிறந்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இன்று கர்நாடகத்தில் ராஜராஜசோழன் போல ஒரு தொன்மமாக கருதப்படும் பெருமன்னர். [நான் கிருஷ்ண தேவராயன் என்ற பேரில் ரா.கி.ரங்கராஜன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்]
  • அவர் தன் தளபதி நாகம நாயக்கனை மதுரையை கைப்பற்றி கப்பம் பெற்றுவர அனுப்பினார். நாகமன் மதுரையைக் கைப்பற்றி தன்னை மதுரை மன்னனாக பிரகடனம் செய்து கொண்டார். ஆகவே நாகமனை வென்றுவர நாகமனின் மகன் விஸ்வநாத நாயக்கனின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் ராயர். மகன் தந்தையை வென்று சிறைப்பிடித்து கொண்டுசென்று ராயர் முன் நிறுத்தினான்.இந்த துரோகத்தை ஏன் செய்தாய் என்று ராயர் நாகமனிடம் கேட்டபோது என் மகனுக்கு ஒரு நாட்டைக் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று நாகமன் சொன்னதாகவும் விஸ்வநாத நாயக்கனிடம் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று ராயர் கேட்டபோது அவன் தன் தந்தையின் உயிரை கேட்டதாகவும் ராயர் விஸ்வநாதனை மதுரையின் சுதந்திர மன்னனாக பிரகடனம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறு மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக 1529ல் விஸ்வநாத நாயக்கன் முடிசூடினார் [இதை அகிலன் வெற்றித்திருநகர்‘ என்ற நாவலாக எழுதியிருக்கிறார்]
  • இன்று தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் மங்கம்மாள் போட்டவை. அவற்றை ஒட்டி உருவான புது ஊர்களே இன்றைய முக்கிய நகரங்களான சாத்தூர் சிவகாசி கோயில்பட்டி முதலியவை. இவற்றை இன்றும் கிராம மக்கள் மங்கம்மாள் சாலை என்றே சொல்கிறார்கள்– இப்போது போடப்படும் நாற்கரச் சாலையைக்கூட! மங்கம்மாள் கட்டிய பல வழிப்போக்கர் சத்திரங்கள் இன்றும் சாலையோரம் உள்ளன. [நா பார்த்தசாரதி ராணிமங்கம்மாள் என்ற நாவலை எழுதியிருக்கிறார்]

4. Thinnai: சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன் :: ஜெயமோகன் [Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974]