Category Archives: Quotes

எழுதாத கதைக்கு யார் ஆசிரியர்?

குறுங்கதை மொழிபெயர்ப்பு « அங்கிங்கெனாதபடி

கிட்டத்தட்ட சித்தார்த்தின் மொழியாக்கம் செய்யப்பட்ட கதையை ஒத்த சமீபத்திய வாசிப்பு ஒன்றின் சுருக்கம்…

அந்த எழுத்தாளனை யாருமே சீந்தவில்லை. எவருமே அவன் படைப்பை அச்சேற்றாமல் நிராகரிக்கிறார்கள். விலைமாதுவின் துணையை நாடுகிறான்.

அவளோ அவனின் கதையை புகழ்கிறாள். ‘இன்னும் எழுது’ என்பதுடன் நில்லாமல், அவனுடைய கோழிக் கிறுக்கல்களை தட்டச்சுகிறாள். கோர்வையாகக் கொண்டு வருகிறாள். இவனோ எப்போதும் போதையில் இருப்பதால், எழுதித் தள்ளுவதற்கே நேரம் போதாமல், டைப்ரைட்டிய பக்கங்களை வாசிக்காமல் மேலும் மேலும் எழுதுகிறான்.

புத்தகம் கிட்டத்தட்ட தயாரான நிலையில், பதிப்பாளர்களை சந்திக்க, தன் அண்ணன் வசிக்கும் நகரத்துக்கு செல்கிறான். கதையைப் படிக்கும் அண்ணன், தன் பெயரில் வெளிவருவதை விரும்புகிறான்.

தம்பிக்கு போதையேற்றி, மோசமான விபத்தை உருவாக்குகிறான். தம்பியை எசகுபிசகான நிலையில் புகைப்படமெடுத்து, மிரட்டி தன் பெயரை முதன்மை படைப்பாளியாக சேர்த்துவிட செய்கிறான்.

புத்தகம் வெளியாகிறது. புரட்டி பார்க்கும் தம்பிக்கு அதிர்ச்சி. தலைப்பு மட்டும்தான் தான் வைத்தது. உள்ளே இருப்பதெல்லாம், விலைமாதின் அனுபவங்கள். அவளுடைய பணக்கார வாடிக்கையாளர்கள், அவர்களின் விநோத நடவடிக்கைகள், என்று விரிகிறது.

விலைமாதுவே சொந்தப் பெயரில் வெளியிட முடியாத கதையை, தம்பியிடம் இருந்து அபகரித்து பெயர் போட்டுக் கொண்ட அண்ணனின் நிலையை ஒப்பிடும் கதை.

நிஜமாக எழுதியவருக்கு உண்மைப் பெயரை எடுத்துரைக்க முடியாது. நிஜமாக எழுதியதாக நினைத்தவருக்கும் படைப்புக்கும் தலைப்பு தவிர ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது. எழுதியாக சொல்லிக் கொள்பவரும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் கிடைத்த வாய்ப்பை பறித்துக் கொண்டவர்.

இந்தப் புத்தகத்தின் பெயர் தெரியாமல் கதை மட்டுமே என்னுடைய வாசக அனுபவத்தில் தங்கியது மீட்சி.

சுயசரிதை அல்ல

சன் டிவியின் திருவிளையாடலை விட இராமாயணம் சிறுவர்களைக் கவரும் விதமாக இருக்கிறது. மாதுரி தீட்சிட் & சல்மான் கான் மணம் செய்யும் ‘ஹம் ஆப் கே ஹை கௌன்’ போல் ஆற அமர கல்யாணத்தை சொல்லாததால் இருக்கலாம். தினமும் திருவிளையாடல் வந்து அலுப்பூட்டுவதாலும் இருக்கலாம்.

‘இராமருக்கு அப்புறம் சீதாவுடைய மகள்தான் அரசேறுவாள் என்பதாலா?’

‘அடுத்து என்ன நடக்கும்’ என்று பின் கதை சுருக்கமாக தங்கிலீஷில் இராமாயணத்தை விவரித்த போதுதான் மகளிடமிருந்து அந்தக் கேள்வி வந்தது. பரதனுக்கு முடிசூட்டுமாறு ஏன் கைகேயி உசுப்பேற்றப்பட்டாள் என்பதை பரம்பரை வாரிசுகளை கொண்டு விளக்கும்போது கேள்வி எழுப்பினாள். லவ குசா எல்லாம் தொடாமல், மையமாய் தலையை ஆட்டி வைத்தேன்.

Adam at Home - cartoons & Comics

நன்றி: Adam@Home

மனைவியிடம் எத்தனையோ முறை சொல்லியாகி விட்டது. ஆண்கள் முகத்தைப் பார்ப்பதில்லை; முடியையும் பார்ப்பதில்லை என்று. அரக்கர்களின் உயிர்கள் எங்கோ ஏழு கடல் தாண்டி இருக்கும் புறாவின் கண்ணில் இருப்பதாக அம்புலிமாமா கதை சொல்லும். உண்மைதான். புருவத்தை நெறிமுறை செய்தபிறகோ, புதிய காதணியைக் கண்டு கொள்வதிலோ, சமையலில் வித்தியாசம் காட்டியதையோ கண்டுகொள்வதில்தான் தாம்பத்தியத்தின் நாடி இருக்கிறது.

மேற்கண்ட கார்ட்டூன் போல் துப்புகளை சேமித்து ‘கணவன்மாருக்கான டம்மீஸ்’ புத்தகம் தொகுத்தால் ஐ.பி.எல்., என்.பி.ஏ., ரசிகர்கள் வாழ்த்துவார்கள்.

தன்னைச் சுற்றி விரிந்து அலையடிக்கும் வாழ்க்கையிலிருந்து சில துளிகளை மட்டுமே அள்ள முடியக்கூடியவன் மனிதன். ஆகவே முடிவில்லாத மர்மங்களின் நடுவே அவன் வாழ்கிறான். அவனுக்கு கிடைக்கும் பிரபஞ்ச அனுபவம் என்பது அந்த மர்மங்களில் இடறி விழுவதேயாகும். அப்போது அவன் ஒரு அதிர்ச்சியையும் கணநேர மனவிரிவையும் அடைகிறான்.அந்தத் தரிசனத்தைக் கொண்டு அவன் ஒரு வாழ்க்கை நோக்கை உருவாக்கிக் கொள்கிறான். அது அவன் வரைக்கும் சரியானது. அந்த எல்லைக்கு அப்பால் அதற்குப் பொருள் ஏதும் இல்லை. மீண்டும் மீண்டும் மனிதன் இயற்கையின் பெருவிதிகளினால் சதுரங்கக் காயாக ஆடப்பட்டு அதைப் புரிந்துகொள்ள தன் தரிசனத்தால் ஓயாது முயன்றபடி வாழ்ந்து மெல்ல மெல்ல மறைகிறான். – ஜெயமோகன்: “சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்

திங்கள் அன்று இரண்டு சோக செய்திகள். முதலில் நண்பரிடமிருந்து சினிமாவில் மட்டுமே பார்க்கும் வியாதி வந்திருப்பதைத் தாங்கி வந்த மின்னஞ்சல். வலைப்பதியவே மனம் ஒப்பவில்லை. ட்விட்டர் மட்டும் செய்து வைத்தேன்.

மாலையில் வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்பவருக்கு ட்யூபில் வந்திருந்த கட்டி குறித்து அறிந்ததும் வாழ்வின் நிலையாமை எல்லாம் எட்டிப் பார்த்தது.

என்னால் ஆனது… அலுவலில் தரும் ஆயுள் காப்பீட்டுத் தொகையை அதிகரித்தேன்.

அலுவலில் சீனாவில் நடந்த நிலநடுக்கத்துக்கு நிதி சேகரித்தார்கள். எவ்வளவு தானம் கொடுக்கிறோமோ, அதை இரட்டிப்பாக்கினார்கள். 50,000+ பலி. தெரிந்தவருக்கு என்றால் மனம் பதை பதைக்கிறது. எங்கோ ஒருவர் என்பதால் எண்ணிக்கையாக போய்விட்டது.

பர்மா சூறாவளி நிவாரணம் குறித்து அலுவலில் மனிதவளத் துறையினரிடம் விசாரித்தேன். எழுபத்தெட்டாயிரமோ, 150,000-ஓ மறைந்த மியான்மர் வாசிகளுக்கு எதுவும் உண்டியல் குலுக்கவில்லையா என்று. நம் நிறுவனத்தில் இருந்து எவரும் வேலையும் செய்யவில்லை; தொண்டு நிறுவனங்களும் தெரியாது என்று தோள்குலுக்கிவிட்டார்கள்.

நாள்தோறும் தனிமடலிலும், பொதுவிலும் அண்ணா பல்கலை சார்ந்த பொறியியல் கல்லூரிகளின் தரப்பட்டியல் குறித்து விசாரிக்கிறார்கள்.

அமெரிக்காவில் கின்டர்கார்டன் படிப்பதற்கு எது #157வது சிறந்த பள்ளி என்பதற்கு கூட யுஎஸ் நியூஸ் & வோர்ல்ட் ரிப்பொர்ட், நியுஸ்வீக், டைம் என்று பல பத்திரிகைகள் வரிசைப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் ‘கனவுக்கன்னி 2007’ நடத்தும் சன் டிவியும் சரி. ‘அழகிரியா/ஸ்டாலினா/உதயநிதியா?’ என்று கருத்துக்கணிப்பு நடத்தும் தினகரனும் சரி… யாரும் பட்டியல் போடுவதில்லை.

  • தேர்ச்சி சதவீதம் என்ன?
  • வளாக வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது?
  • தங்கும் வசதிகள் எப்படி?
  • சோதனைச்சாலைகள், பயிற்சிக்களங்கள் எங்ஙனம் இருக்கிறது?
  • பலரும் அங்கேயே தங்கிப் படிக்கிறார்களா, மாநகரத்தில் இருந்து வந்து போகிறார்களா?
  • எத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது?
  • படித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள்? எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது?
  • எந்தப் படிப்புக்கு எந்தக் கல்லூரி உகந்தது?
  • அங்கே படிக்கும் மாணவர்களுடன் சந்திப்பு, நிறைகுறை பேட்டிகள்
  • ரேகிங், கடுமையான நடைமுறை, கண்டிப்புகள், வசதிகள் குறித்த அலசல்
  • நிர்வாகமே கடைசி வருட தொழிற்சாலை பயிற்சிக்கு உதவுகிறதா?
  • செலவு எவ்வளவு?

தேர்தல் காலத்தில் குமுதமும் விகடனும் முண்டியடித்து, ஒவ்வொரு ஊராக சென்று வாக்கெடுப்பு நடத்தி, லயோலா கல்லூரி கணிப்பில் இன்னார் வெற்றி; என்டிடிவி நடத்திய வோட்டுப்பதிவில் இந்தக் கூட்டணி முன்னணி என்று பறைசாற்றுவது போல் இந்த மார்க்கெடிங் ரிசர்ச்சும் செய்தால், பலருக்கு பயனாக இருக்கும். டிஆர்பி ரேட்டிங் பிராப்திரஸ்து என்று வாழ்த்துவார்கள்.

இந்தப் பதிவில் கூட தசாவதாரம் என்று முணுமுணுக்காவிட்டால், கூகிள் தெய்வம் சீந்தாது என்பது போல் திரைக்கடியில் தெரியும் ஸ்க்ராலில் ஷாரூக்கானை நாயாக்கிய செய்தியை இட்டு நிரப்பி, மாணவர்களுக்கும் தெளிவு பிறந்தால் மகிழ்ச்சி.

jack\'s found a new religion on craigslist

நன்றி: Finding religion – Life – The Phoenix

வாழ்தலின் பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹேவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்க முடியும். தனக்கென ஒரு விவரணை மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் அதன் இலக்கியத்திற்கும் பெரும் பயனை ஈட்டிக் கொடுத்தவர்.

போர்ஹேவைக் (Jorge Luis Borges) குறித்த பிரம்மராஜனும் சன்னாசியும் சொல்வது போன்ற வாழ்வின் விவரிப்பை பாவண்ணன் தொடர்ந்து நிறைவேற்றுகிறார். ‘If I only had a little humility, I’d be perfect.’ என்னும் டெட் டர்னர் போல் தன்னடக்கமின்றி சொல்லவேண்டுமானால், இப்படி மேற்கோள் காட்டி காட்டியே போர்ஹேயாகும் எண்ணம்தான் இந்த மாதிரி பதிவுகளின் தோற்றுவாய்.

What helped him overcome the block that had prevented him, almost until he was forty, from moving from essays to narrative prose was to pretend that the book he wanted to write had already been written, written by someone else, by an unknown invented author, an author from another language, another culture, and then to describe, summarize or review that hypothetical book.Part of the legend that surrounds Borges is the anecdote that the first, extraordinary story that he wrote using this formula, ‘The Approach to Almotaism’, when it first appeared in the journal Sur, convinced readers that it was a genuine review of a book by an Indian author – Italo Calvino (Why Read the Classics)

பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள் – பாவண்ணன்: தமிழில் இறையடியான். காவ்யா பதிப்பகம்

அன்பை நிராகரிக்கத் தூண்டியது எது? புறக்கணிப்பின் வலியால் உள்ளூர மனம் நொந்திருந்தாலும் அவருடைய கோபத்திலிருந்து மீள்வதற்காக புனைந்துரைத்த ஒரு சின்னப் பொய்யால் பூபாலனைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்க பார்வதியைத் தூண்டிய உணர்வு எத்தகையது? நெருங்கிப் பழகியபிறகும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் ஏன் இப்படி நிராகரிக்கிறார்கள்? நெருக்கத்தின் அனுபவம் ஏன் நிராகரித்தலைத் தடுப்பதில்லை? இந்த உறவு ஏன் இப்படி புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது?
:::
ஆண்பெண் உறவு போலவே, இந்தியமண்ணில் சாதி அபிமானமும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு பெரும்புதிர். எல்லாச் சாதியினரிடையேயும் மாற்றுச் சாதியில் தனக்குப் பிடித்தமான இணையைத் தேடிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. சாதி என்னும் பேரமைப்பு அத்தகு நிகழ்ச்சிகளை தற்செயல்கள் என்றும் பிறழ்வுகள் என்றும் அடையாளமிட்டு சில காலம் தனித்துவைக்கிறது. பிறகு மெல்லமெல்ல தன் மையத்தைநோக்கி இழுத்துக்கொள்கிறது. சாதிக்கலப்பு என்பதை சாதிப் பேரமைப்பின் மையம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நிகழாதவரை அது அனுமதிக்கப்படாத ஒரு விதி. நிகழ்ந்தபிறகு, இணைத்துக்கொள்ளத்தக்க ஒரு விதிவிலக்கு. அவ்வளவுதான்.
::
மீண்டும் இந்த உறவும் வாழ்வும் ஏன் இப்படி புதிராக இருக்கிறது என்னும் வினா நம்மை அசைக்கிறது.

ஆத்திச்சூடி எழுதுவது எளிதா?

கேள்விக்கு விடை: ‘சுருட்டுக மக்கள் பணம்‘ என்னும் வெண்பா ஈற்றடி போல் எல்லா எழுத்துக்கும் எழுதுவது கஷ்டம்தான்!

கலைஞரின் ஆத்திச்சூடி

அண்ணா வழி நில்!
ஆற்றுக பொதுப்பணி!
இலக்கியம் புதுக்கிடு!
ஈனரை ஒதுக்கிடு!
உயிர் தமிழாம் உணர்ந்திடு!
ஊழலை நொறுக்கிடு!
எட்டப்பர் இகழ்ந்திடு!
ஏறுபோல் வீறு கொள்!
ஐயம் கலைந்து அறிவைப் பயிர்செய்!
ஒழுக்கம் போற்றிடு!
ஓம்புக மெலியோரை!
ஒளவைக் குலம் போற்று!

கழகம் வில்லாம், நின் அணியே கணையாம்!
சாதியை விடுத்து சமத்துவம் முழக்கு!
ஞாயிறு வாழ்த்தி நாளும் உழைத்திடு!
தனியுடைமை தகர்ந்திட தடந்தோள் தட்டு!
நாடு வாழ்ந்திட நலிவு தீர்த்திடு!
பகைவர்க்கு வளையேல்!
மாயைக்கு மயங்கேல்!
வாய்மையே போர்வாள்!
யானை போல் பயன்படு!
“ழ” கரமாய்ச் சிறப்புறு!

நன்றி: கலைஞரின் புதிய ஆத்திச்சூடி « கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் | கலைஞரின் ஆத்திச்சூடி – முத்தமிழ்


1. அஞ்சாதே திரைப்படத்தில் இடம்பெற்ற பாரதியாரின் ஆத்திச்சூடி

2. சிறில் அலெக்சின் தேன் » e-த்திச் சூடி

3. ஞகரம் – என். சொக்கன்: “‘ஔவை வழியில், பாரதி நெறியில் சிற்பி வரைந்த ஆத்திச்சூடி'”

4. பார்வையாளனாக…: நவீன ஆத்திச்சூடி: “அகமது சுபைர்

5. Tamil | Literatue | Poem | Michael | Tamil: “இளைய ஆத்திச்சூடி! – தொ. சூசைமிக்கேல்

6. அசல்: ஒளவையார் – ஆத்திசூடி, Auvayar ‘s Athisoodi

7. கொசுறு: கொன்றைவேந்தன்


பாரதிதாசன் ஆத்திச்சூடி – Andhimazhai – Web Address of Tamils

1. அனைவரும் உறவினர்
2. ஆட்சியைப் பொதுமைசெய்
3. இசைமொழி மேலதே
4. ஈதல் இன்பம்
5. உடைமை பொதுவே
6. ஊன்றுளம் ஊறும்
7. எழுது புதிய நூல்
8. ஏடு பெருக்கு
9. ஐந்தொழிற்கு இறை நீ
10. ஒற்றுமை அமைதி
11. ஓவியம் பயில்
12. ஔவியம் பெருநோய்
13. கல்லார் நலிவர்
14. காற்றினைத் தூய்மைசெய்
15. கிழிப்பொறி பெருக்கு
16. கீழ்மகன் உயர்வெனும்
17. குள்ள நினைவுதீர்
18. கூன்நடை பயிலேல்
19. கெடு நினைவு அகற்று
20. கேட்டு விடையிறு
21. கைம்மை அகற்று
22. கொடுத்தோன் பறித்தோன்
23. கோனாட்சி வீழ்த்து
24. சதுர்பிறர்க்கு உழைத்தல்
25. சாதல் இறுதி
26. சிறார் நலம்தேடு
27. சீர்பெறல் செயலால்
28. சுவைஉணர் திறங்கொள்
29. சூழ்நிலை நோக்கு
30. செல்வம் நுண்ணறிவாம்
31. சேய்மை மாற்று
32. சைகையோடு ஆடல் சேர்
33. சொற்பெருக்கு ஆற்றல் கொள்
34. சோர்வு நீக்கு
35. தளையினைக் களைந்து வாழ்
36. தாழ்வு அடிமை நிலை
37. திருஎனல் உழுபயன்
38. தீங்கனி வகைவிளை
39. துன்பம் இன்பத்தின் வேர்
40. தூய நீராடு
41. தெருவெல்லாம் மரம் வளர்
42. தேன்எனப் பாடு
43. தைக்க இனிது உரை
44. தொன்மை மாற்று
45. தோல்வி ஊக்கம்தரும்
46. நடுங்கல் அறியாமை
47. நால்வகைப் பிறவிபொய்
48. நினைவினில் தெளிவுகொள்
49. நீணிலம் உன் இல்லம்
50. நுண்ணிதின் உண்மை தேர்
51. நூலும் புளுகும்
52. நெடுவான் உலவு
53. நேர்பயில் ஆழ்கடல்
54. நைந்தார்க்கு உதவிசெய்
55. நொடிதோÚம் புதுமைசேர்
56. நோய் தீயொழுக்கம்
57. பல்கலை நிறுவு
58. பார்ப்பு பொதுப்பகை
59. பிஞ்சு பழாது
60. பீடு தன்மானம்
61. புதுச்சுவை உணவுகாண்
62. பூப்பின் மணங்கொள்
63. பெண்ணோடு ஆண்நிகர்
64. பேயிலை மதலால்
65. பைந்தமிழ் முதல்மொழி
66. பொழுதென இரவுகாண்
67. போர்த்தொழில் பழகு
68. மறைஎனல் சூழ்ச்சி
69. மாறுவது இயற்கை
70. மிதியடியோடு நட
71. மீச்செலவு தவிர்
72. முகச்சரக்காய் வாழ்
73. மூப்பினுக்கு இடம்கொடேல்
74. மெய்கழிவு அயற்கின்னா
75. மேலை உன்பெயர் பொறி
76. மையம் பாய்தல் தீர்
77. மொடுமாற்றுப் பொது இன்னா
78. மோத்தலில் கூர்மை கொள்
79. வறுமை ஏமாப்பு
80. வாழாட்கு வாழ்வு சேர்
81. விடுதலை உயிக்குயிர்
82. வீடு எனல் சாதல்
83. வெறும் பேச்சு பேசேல்
84. வேளையோடு ஆர உண்
85. வையம் வாழ வாழ்


ட்விட்டரில் கவர்ந்தவை

ட்விட்டரில் நான் தொடரும் சிலரின் கால நீரோட்டத்தில் என்னைக் கவர்ந்த சமீபத்திய சில வாசகங்கள், தருணங்கள்…

  • ரவி: While a history of millenium can be written in one wikipedia page, it’s irony v read / watch daily news for hours 😦
  • சங்கர் கணேஷ்: “To the world, you might be one person. But, to one person you might be the world” @iheartquotes
  • போட்டோமாட்: well we’re 20ish full-time and only 2.5 years old. what’s the breaking point – # of people? money raised? market success?
  • நாராயண்: கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி. உள்ளே இருக்கறவன் எப்படா வெளிய போவோம்னு இருப்பான். வெளிய இருப்பவன் எப்படா உள்ள போவோம்னு இருப்பான்.
  • கிருபா: SavitaBhabhi.com is easily the desibaba of the toon world.
  • பிரிஜ் சிங்: Playing with Scribd apis. Grand plan = email your doc, let your friends view/comment (NOT OPEN) on those docs.
  • அருட்பெருங்கோ: நேத்து ‘க்ராந்தி’ தெலுங்கு படம் பார்த்தேன். முடியல! 😦 இதுக்கு ‘பருகு’ வே ரெண்டாவது தடவை பாத்திருக்கலாம்!
  • ஆர்கே: “The difference between life and the movies is that a script has to make sense, and life doesn’t.” – Joseph L Mankiewicz
  • ரவிகிரண் ராவ்: If the cafeteria food stays this bad, I will seriously consider quitting my job.
  • பவளராஜா: ‘பிரியாணி’ய பத்தி தொல்காப்பியத்துல குறிப்பு இருக்குதாம்.. ஊண்சோறு’ன்னு.. நிசமா??
  • பாட்ரிக்ஸ்: Perpetrator of a race attack in College Station last month caught. White male. Why mention the race of the culpirt? More later.
  • விஜய்: Serial Bomb blast in Jaipur.வழக்கம் போல் ஒரு ‘உச்’.அதற்கு என்ன செய்யமுடியும்? என் மேம்போக்கான கொடிய மனமே!நீ இல்லாமலே நான் பிறந்திருக்கலாம்.
  • sidin: I don’t care if sound hoity toity. I want Suchi NOW!
    (தொடர்ச்சி) Ahem. I meant I want Sushi now.
  • விக்கி: Read Es.Ra’sஉறுபசி while returning frm native.Characters r stereotypic, storyline not much impresive.But can read it once 4 xcelnt narration
  • அக்கிராஜு: Why can we never OWN a domain name? Why is it always leased for a particular amount of time?
  • சாய் ராம்: செய்ய வேண்டியவை லிஸ்ட் அடுத்த ஜென்மத்திற்கும் நீளும் போலிருக்கிறது. பேசாமல் எல்லாவற்றையும் அழித்து விட்டால்?
  • காயத்ரி: I have new found respect for my mother. Standing in the kitchen in this weather is no joke! yabbba..
  • அப்பண்டை: Work fascinates me – I can look at it for hours!
  • ஜான்: Thanks for the birthday wishes, everyone! My age is nicely divisible by 2, 3, 4, 6, 8, and 12! Going to be a squared number next year.
  • சிறில் அலெக்ஸ்: The Special Effect I meant is different. It’s said crab meat is poor man’s Viagara. Hope you didn’t have such incidents 🙂 (in reply to bsubra)
  • நித்யாஸ்: Reading Hari Kunzru’s book ‘Transmission”. Interesting novel about a computer geek from India.
  • பிரகாஷ்: dosai +milagapodi+white chutney+ghee = short cut route to heaven
  • பரத்: Shocked to hear that my friend’s roomie died in a car accident yesterday in Pennsylvania.He got engaged recently.totally 6 indians died.
  • அனிதா போரா: observation: girls in singapore are way too thin. i have yet to figure out the magic recipe for this wide spread phenomenon.
  • மோகன்தாஸ்: இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேன். நானும் அக்காவும் தான் வீட்டில், அக்கா நான் எழுவதுக்கு முன் ஆபிஸ் போய்டுவாங்க. அப்ப யாராயிருக்கும்???
  • சாகேத் வைத்யா: Saying that Java is nice because it works on all OS’s is like saying that anal sex is nice because it works on all genders (bash.org)
  • ஸ்ரீநிதி ஹண்டே: Bought mangoes at 49 a kilo-reminds me of childhood days when we used to eat dozens of them 4 free grown in our own garden
  • பிரபு ஃபெராரி: Chat is impersonal. Voice call is not. Thanks Chenthil 🙂
  • நான்: What is the difference between a blogger and a bond? A bond matures and makes money. (adapted from Chuck Leavell)
  • சந்திரசூடன்: yup. writing them all down. used to be blog. now twitter
  • லேஸிகீக்: the twitter politics just sucks
  • ஜேக்: new hobby: sneaking up on people in twitter, did you forget it’s all indexed? thx @tweetscan
  • எலிசபெத் சக்: one the one hand, anthropologist robin dunbar says the human brain can handle about 150 friendships. on the other hand, twitter.
  • ஸ்டீவ் ரூபல்: Even better. Using Friendfeed you can create your own custom Twitter search engine – like Google Coop – of just your pals.

ட்விட்டரியம்

ஒருவர் சகட்டுமேனிக்கு இடுகைகளை அளித்துக் கொண்டேயிருந்தால் அவர்களை டயரீயா என்பதை நினைவூட்டும் “ட்விட்டெரியா” என்று அழைக்கின்றனர். – நுண் வலைப்பதிவுகள் :: எம்.எஸ்.என்

அதே போல் சோஷலிசம், காந்தியம், மார்க்சியம், அழகியல், கம்யூனிசம், உளவியல் என்னும் இயம், இயல் போன்ற பின்னொட்டிட்டு, ட்விட்டரியம் தோன்றுகிறது.

நீங்கள் ட்விட்ட்ரியவாதியா என்றறிய, கீழே உள்ளதில் உடன்படும் கருத்துக்களை குறியிடவும்:

  1. [ ] If i sign up, i may get hooked on and wont be able to control it (Especially with iPhone/data plan at hand)
  2. [ ] Life is pretty routine… so after some time will get repetitive answers to “What are you doing?”
  3. [ ] Not in my information diet plan
  4. [ ] Current modes (email + phone) of keeping in touch with friends works out pretty well
  5. [ ] I am known for writing very brief messages. Wanted write longer messages. Twitter make me not get out of brief messages habit.

1 – × போட்டிருந்தால் வியாதியாகும் அறிகுறி

2 – × : நீங்கள் வலைப்பதிவுக்கு லாயக்கில்லை

3 – × : பழனி மலையில் ஏறியிருக்கீங்க. கொஞ்சம் தலாய் லாமாவாகும் வழியைப் பாருங்க

4 – × : நீங்கள் வலைப்பதிய அவசியமில்லை

5 – × : கூடிய சீக்கிரம் புத்தக பேரம் பிராப்திரஸ்து.

தொடர்புள்ள முந்தைய இடுகை: நான் ஏன் எழுதுகிறேன் – தலை பத்து

ட்விட்டர்த்துவம்

இப்போதைக்கு ட்விட்டர் போதை பாடாய் படுத்துகிறது.

ட்விட்டரில் என்ன எழுதலாம்?

எடுத்துக்காட்டு…

பட்டமும் மேல பறக்கும்; பருந்தும் பறக்கும்; பலூனும் மேல மேல பறக்கும்;

பட்டம் பறக்கறதுக்கு தரையில் டீல் போடணும்!
பருந்து பறக்கறது வயித்துக்கு தீனி தேடணும்!!
பலூன் பறந்து ஆகாசத்துக்கு வழி போடும்!!!

பட்டம் மாதிரி திட்டம் போடு;
பருந்து மாதிரி தேடலோடு இரு;
பலூன் மாதிரி எல்லாத்தையும் லேசா எடுத்துக்கோ;
ராக்கெட் மாதிரி பறப்பே!

The Perfect Insult for Every Occasion: Lady Snark’s Guide to Common Discourtesy

…the only way you can “crush annoying persons” is by being a model of anti-etiquette.
:::
Kemp culled weird words and phrases (e.g., omphaloskepsis, crangle, pupaphobia, joot balls, feculent) from books…
Find your vituperative voice

Her Perfect Insult offers step-by-step instructions for doling out sophisticatedly and obscurely worded wounding slights to everyone from “Persons Who Erroneously Believe Themselves to Be Better Than You” to your own family.

புத்தகம் குறித்து அறிய: Official Website of Lady Arabella Snark

க்விஸ் இன்ன பிற: Slang City


தொடர்பில்லாத இடுகை:
வேதசகாயகுமாரின் கதை உண்மையில் சுந்தர ராமசாமி, பிரமிள்,நகுலன் வகையறா நடுவே நாய்களை உருவகமாக்கி நடந்து வந்த ஒரு நெடுங்கால வசையிலக்கிய மரபின் நீட்சி. அதில் சுந்தர ராமசாமி ,நகுலன், பிரமிள் எழுதிய பல கவிதை மற்றும் கட்டுரைகளின் நுண்ணிய உள்ளர்த்தங்கள் உண்டு. வேதசகாயகுமார் அந்த வசையிலக்கியங்கள் வெளியான கொல்லிப்பாவை முதலிய இதழ்கள் வழியாக வளர்ந்தவர். அவ்விலக்கிய மரபில் நம்பிக்கை உடையவர்.
:::
வசையிலக்கியம் இல்லாத மொழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கில வசையிலக்கிய மரபில் பேரிலக்கியங்கள் உண்டு. தமிழில் பிரமிளும் நகுலனும் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியும் எழுதியிருக்கிறார். அவை பூடகமானவை. அதேபோலவே வேதசகாய குமாரின் கதையும் பூடகமானதே.

கம்பர் தெரு காணாமப் போச்சு – இணையம், சவுத் பார்க்

முதலில் கலை: Over Logging

No one in South Park has internet and there’s no telling when, or even if, it will come back. Desperation sets in as the fear of the unknown spreads rapidly across the country. When Randy hears there still may be some internet out in California, he packs up his family and heads west in search of a signal

(எச்சரிக்கை: வயது வந்தோருக்கு மட்டும் உகந்தது)

நகைச்சுவை நாடகத்தைப் பார்க்க: South Park's new episode parodies our Internet dependence: “the Internet is a giant Linksys router in the desert – Episode Player”

இது நிஜம்/செய்தி:
AT&T: Internet to hit full capacity by 2010 | Tech News on ZDNet: "U.S. telecommunications giant AT&T has claimed that, without investment, the Internet's current network architecture will reach the limits of its capacity by 2010."

பின்குறிப்பு: ‘கம்பர் தெரு காணாமல் போச்சு’ என்னும் வசனம் இடம் பெற்ற திரைப்படம் எது?

‘புலிகள் பெயர் சொல்லி பல வழிகளில் பொருளீட்டும் காகிதப் புலிகள்’ – கலைஞர்

கேள்வி:- தமிழர்க்கும், தமிழ்நாட்டுக்கும் தாங்கள் துரோகம் செய்து விட்டதாக பழ. நெடுமாறன் சொல்லுகிறாரே?

கலைஞர்:- நெடுமாறன் போன்றவர்களுக்கு ஜெயலலிதாவின் பொடா பாணி அரசி யல்தான் துரோகமற்றதாகத் தெரியும்!

அண்ணாவுக்கும் – அடுத்து காமராஜருக்கும் – பின்னர் குமரி அனந்தனுக்கும் – பிறகு மூப்பனார் அவர்களுக்கும் துரோகம் செய்தது யார்? என்று கேட்டால் உண்மையான துரோகத்தின் மொத்த உருவத்தை அடையாளம் காணலாம். பாவம்; புலிகள் பெயர் சொல்லி பல வழிகளில் பொருளீட்டும் காகிதப் புலிகள்!

தொடர்புள்ள செய்தி & கட்டுரை: Pazha Nedumaran on POTA Detainees – Supporting the LTTE; Freedom of Expression « தினமணி: “நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள்”

தாயுள்ளம் – Mr. Mom

“I don’t think mothers are only female. I think mothering is a quality, a character trait. Mothering is about responsibility. There are plenty of men who are great, great mothers.” – Sally Field, making very little sense in Ladies’ Home Journal.

நன்றி: Pavarotti faked finale – The Boston Globe

தொடர்புள்ள பதிவு: எண்ணங்கள்: தாயுள்ளம்